ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
(இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை கொண்டு எதிர் தரப்பினர் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். எக்காரணிகளுக்காகவும் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முடியாது.ஜனாதிபதியுடன் ஒன்றினைந்தே அரச நிர்வாகத்தை முன்னெடுப்போம் என வீடமைப்பு நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் வர்த்தமானியில் வெளியாகியுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் ஒரு சில குறைப்பாடுகளை கொண்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். தவறுகளை திருத்திக் கொள்வதற்காகவே வெளியிடப்பட்ட வர்த்தமானி மீள்பரிசீரனை செய்யப்பட்டுள்ளது. தவறுகளுடன் நிர்வாகத்தை முன்னெடுத்தால் அது அரசாங்கத்துக்கு…
-
- 0 replies
- 350 views
-
-
Please Vote for ceasefire in Srilanka. Please dial "0014162604005" and press "1" . This vote been taken by "Canadian Army" media. please act soon
-
- 9 replies
- 2.2k views
-
-
இனந்தெரியாத நபர்களால் சுடப்பட்டு காயமடைந்த நிலையில் உள்ள சண்டேலீடர் ஊடகவியலாளர் பரஸ் சௌகத் அலிக்கு பாதுகாப்பு அளிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார். சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், “இது ஊடகவியலாளரைப் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி. எனவே, அவர் உடனடியாகப் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினால் நான் கலக்கமடைந்துள்ளேன். ஏனென்றால், அவர் ஒரு ஊடகவிலாயளர். அவர் பொறுப்புக்கூறல், நீதித்துறை விவகாரங்களில் சிறிலங்கா அரசாங்கத்தை விமர்சிக்கும் செய்தித்தாள் ஒன்றில் பணியாற்றுபவர். இந்த விவகாரங்கள் என்னால் கவனிக்கப்படுபவை. …
-
- 0 replies
- 439 views
-
-
அம்பாறையில் துப்பாக்கி, கத்திகள் மீட்பு Editorial / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 01:19 http://static2.tamilmirror.lk/assets/uploads/image_0c624b0305.jpg பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைளின் போது, துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்கப்பட்டுள்ளன. சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லிரைச்சல் கிழக்கு சலாம் பள்ளி பகுதியில் கைவிடப்பட்ட காணியொன்றில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினருக்கு, நேற்று (22) தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. …
-
- 0 replies
- 446 views
-
-
ஜெனீவா தீர்மானம் நாட்டுக்கு எதிரானதல்ல, அரசுக்கு எதிரானதே: லக்ஷ்மன் கிரியெல்ல 20/02/2013 at 5:26 pm | no comments எதிர்வரும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டின் போது முன்வைக்கப்படவுள்ள யோசனை இலங்கை அரசாங்கத்துக்கே எதிரானது என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார். இந்த யோசனை நாட்டுக்கு எதிரானது என்று அரசாங்கம் பிரசாரம் செய்கிறது. ஆனால் இது உண்மையில் நாட்டுக்கு எதிரானது அன்று அரசாங்கத்துக்கு எதிராகவே முன்வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கவே இவ்வாறான யோசனை ஒன்றை கொண்டு வரும் அளவுக்கு தமது செயற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். http://ta…
-
- 0 replies
- 421 views
-
-
ஈழத்தில் நடைபெறும் இனப் படுகொலைகளுக்கு எதிராக தன்னெழுச்சி பெற்றிருக்கும் மாணவர் கூட்டமைப்பு, படைப்பாளிகள், கலைஞர்கள், மனித உரிமைப் போராளிகள், பெண்கள் அமைப்பினர், பத்திரிகையாளர்கள், திருநங்கைகள், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் இணைந்து ஈழத்தமிழர் தோழமைக் குரல் என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். 01.02.2009ல் நடந்த முதல் கூட்டத்தில், டெல்லி பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் (12.02.09) பாராளுமன்றத்துக்கு முன் பேரணி, மறியல் மற்றும் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த முடிவு செய்தார்கள். அதன்படி ஈழத்தமிழர் தோழமைக்குரல் அமைப்பினர் இன்று டெல்லி புறப்பட்டு விட்டனர். ஈழத்தமிழர் தோழமைக் குரல் அமைப்பாளர்கள் லீனா மணி…
-
- 1 reply
- 592 views
-
-
எந்தவொரு பள்ளிவாயலும் தாக்கப்படவில்லை என அரச தரப்பு மீண்டும் பாராளுமன்றத்தில் பேசும் போது அதனை மறுக்காமல் மௌனமாயிருந்த முஸ்லிம் கட்சித்தலைமைகளின் கோழைத்தனமான நடவடிக்கை கண்டிப்புக்குரியதென உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது, நாட்டில் எத்தனை பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டுள்ளன என்ற விபரங்களை எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் முன்வைத்த போது அவை தமிழ் ஊடகங்களில் வெளிவந்த செய்திகளே தவிர உண்மையானவை அல்ல என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாகூறியிருப்பதன் மூலம் தமிழ் ஊடகங்களையும் அவமதித்திருப்பதாகவே தெரிகிறது. பள்ளிவாயல்கள் …
-
- 0 replies
- 434 views
-
-
மிரட்டும் ராஜபக்சே தூதுவருக்கு நக்கீரன் சவால் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டு, கொத்துக் கொத்தாகப் பறிக்கப்படுகின்றன ஈழத்தமிழர்களின் உயிர்கள். இலங்கை அரசால் பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்கு நம்பி வந்த ஒருசில தமிழர்களும் தாக்குதலுக்குள்ளாகிறார்கள். அங்குள்ள மருத்துவமனைகளிலும் தாக்குதல் நடைபெறுவதை சர்வதேச செஞ்சிலுவை சங்கமே அம்பலப்படுத்தியுள்ளது. ராணுவக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பகுதியில் மருத்துவமனைகள்-தொண்டு நிறுவனங்களின் முகாம்கள் இருந்தாலும் அதனையும் தாக்குவோம் எனக் கொக்கரிக்கிறார் இலங்கை ராணுவத்தின் செயலாளரும் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்சே. அமெரிக்கா- இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர்கள், இந்தியா, நார்வே, ஜப்பான், ஐரோப்…
-
- 12 replies
- 2.6k views
-
-
India offers Sri Lanka evacuation India has said it ready to help in the evacuation of tens of thousands of civilians caught up in the fighting in Sri Lanka. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7896505.stm இதை சாக்காக வைத்து இந்தியா இறங்கப்போகிறதா? அல்லது உலகிற்க்கும் தமிழக மக்களுக்கும் தமிழ் மக்கள் மேல் தனக்கு கரிசனை உண்டு என்று காட்ட முனைகிறதா?
-
- 7 replies
- 1.8k views
-
-
ஊர்காவற்துறைப் பகுதியில் குண்டு வெடிப்பு : 6 படையினர் காயம் By General 2013-03-03 14:52:07 ஊர்காவற்துறைப் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவமொன்றில் படையினர் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்து ஆறு பேரும் யாழ். போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/local.php?vid=3294
-
- 2 replies
- 341 views
-
-
இந்தியா இலங்கைக்கு வழங்கும் உதவியில் வடக்கு கிழக்கில் பௌத்தமத வழிபாட்டிடங்கள் அமைக்கக் கூடாது: மோடிக்கு விக்னேஸ்வரன் கடிதம் 28 Views இந்தியா இலங்கைக்கு வழங்க உத்தேசித்துள்ள 15 பில்லியன் பண உதவியில் வடக்கு கிழக்கில் பௌத்தமத வழிபாட்டிடங்கள் அமைக்கப்படக் கூடாது என்ற உத்தரவாதத்தைப் பெற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மாண்புமிகு ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் அறிவது, அண்மையில் எமது நாட்டின் பிரதமரிடம் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீங்கள் கேட்டுக் கொண்டம…
-
- 0 replies
- 388 views
-
-
இலங்கையில் அண்மைக்காலமாக பல சினிமா திரையரங்குகள் மூடப்பட்டுவருவதாக சினிமா துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர். 300 திரையரங்குகள் வரையில் காணப்பட்ட இலங்கையில் தற்போது சுமார் 180 திரையரங்குகள் மட்டுமே செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். திரையரங்குகள் இவ்வாறு மூடப்பட்டு வந்தால், இலங்கை சினிமாத்துறை எவ்வாறு வளர்ச்சிகாண முடியும் என்றும் துறைசார் வல்லுநர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். கொழும்பில் அசோகா, செல்லமஹால், எம்பையர், க்றவுண், ஜசீமா உள்ளிட்ட திரையரங்குகளும், தெமட்டகொட மானில், வத்தளை நில்மினி, ஜிந்துபிட்டி முருகன் உள்ளிட்ட பல திரையரங்குகளும் மூடப்பட்டுவிட்டன. இதேபோல், மட்டக்களப்பு ஈஸ்வரன், திருகோணமலை லக்ஸ்மி மற்றும் சிறிகிருஸ்ணா, மன்னார் குமரன், …
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐக்கிய நாடுகள் சபை பலாத்காரமாக எமது பிரச்சினையில் தலையிட முனைந்தால் ஐ.நா. அங்கத்துவத்திலிருந்து வெளியேறி "இலங்கை' சுயாதீனமான நாடாக செயற்படும் தீர்மானத்தை எடுக்க வேண்டும். சுயாதீனமான நாடுகளை ஆக்கிரமித்து மனிதப் படுகொலைகளை மேற்கொள்ளும் அமெரிக்காவுக்கு எமது நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதற்கு அதிகாரமில்லை என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவிக்கின்றது. இலங்கைப் பிரச்சிபிரச்சினை தொடர்பில் அமெரிக்க செனட் சபையில் ஆராயப்பட்டதுடன் ஐ.நா. போரை நிறுத்துமாறு வலியுறுத்தி வருவது தொடர்பில் ஹெல உறுமயவின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்துகையிலேயே அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: நாடில்லாது நாட…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு உதவிய கொட்டகலை மேரியம்மா காலமானார்- மலையகத் தியாகியெனப் புகழாரம் November 1, 2020 கொழும்பில் 1991ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுத் தாக்குதலைத் திட்டமிட்ட வரதன் என்பவருக்கு அடைக்கலம் கொடுத்திருந்த ஜேக்கப் மேரியம்மா (மேரி அக்கா) நேற்றுச் சனிக்கிழமை நுவரெலியா கொட்டகலையில் தனது 81ஆவது வயதில் காலமானார். 1994ஆம் ஆண்டு மலையக மக்கள் முன்னணி என்ற தொழிற் சங்கத்தை ஆரம்பித்தவரும் அதன் தலைவருமான முன்னாள் அமைச்சர் அமரர் பெரியசாமி சந்திரசேகரன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவதற்கும் இதுவே காரணமாக இருந்தது. வரதன் என்பவரைக் கொழும்புக்கு அழைத்து வந்து ஜேக்கப் மேரியம்மாவின் கொட்டகலையில் கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் உள்ள வீட்டில் தங்கவைத்தார் …
-
- 15 replies
- 1.1k views
-
-
சிறீலங்கா அரசாங்கம் களியாட்டச் செலவுக்காக ஒன்டரைக் கோடி ரூபா நிதி ஒதுக்கம் மார் 14, 2013 வடகிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு வேளை உணவுக்கு திண்டாடும் நிலையில், சிறீலங்கா அரசாங்கம் களியாட்டச் செலவுக்காக ஒன்டரைக் கோடி ரூபா நிதியை செலவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு விமானமொன்றை விண்ணுக்கு அனுப்பி நூற்றாண்டானதை முன்னிட்டு சிவில் விமான சேவைகள் அமைச்சு நேற்று முன்தினம் நடாத்திய நூற்றாண்டு விழா நிகழ்வுக்காக ஒருகோடி ஐம்பது இலட்சம் ரூபா செலவாகியதாக உள்ளிடத்து வரவு செலவு அறிக்கைகள் மூலம்உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறீலங்காவில் உள்ள பொருளாதாரப் போராட்டத்திற்கு மத்தியில் விமானத்தை வானுக்கு ஏற்றி ஒரு நூற்றாண்டு பூர்த்தி…
-
- 0 replies
- 357 views
-
-
வினையை விதைக்காதே-வினையை அறுக்காதே:ராஜபக்சேவுக்கு வைகோ எச்சரிக்கை இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தார். தமிழகம், புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் செலுத்த உண்டியலில் நிதி செலுத்தினர். சென்னையில் ஜெயலலிதா உண்ணாவிரத மேடைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்து அங்கே வைக்கப்பட்டிருந்த உண்டியலில் 5லட்சம் நிதி செலுத்தினார். பின்னர் அவர் பேசியபோது, ‘’ராஜபக்சே! எந்த தைரியத்தில் நீ எம்மக்களை கொன்று குவிக்கிறாய். இந்தியா உதவி செய்கிறது என்பதற்காக, இந்தியா பக்க பலமாக இருக்கிறது என்பதற்காக நீ மமதையில் ஆடுகிறாய். உனக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
அண்மையில் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட வடக்கு தமிழ் பெண்கள் இன்று முதல் இராணுவச் சிப்பாய்களாக கடமையாற்றவுள்ளனர். 95 தமிழ் யுவதிகள் இவ்வாறு இராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நான்கு மாதங்கள் இராணுவப் பயிற்சியை பூர்த்தி செய்த குறித்த வடக்கு தமிழ் யுவதிகள் கிளிநொச்சியில் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பயிற்சியை பூர்த்தி செய்த குறித்த பெண் வீராங்கணைகளின் கலைந்து செல்லும் நிகழ்வு இன்று கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரிகேடியர் ரத்னசிங்கம் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=3587
-
- 0 replies
- 672 views
- 1 follower
-
-
யதார்த்தத்தினை உணர மறுக்கும் சிங்களதேசம் [ புதன்கிழமை, 18 மார்ச் 2009, 12:06.54 PM GMT +05:30 ] யுத்தபூமியாக பரிணமித்து நிற்கும் இலங்கையின் இன்றைய மோசமான நிலைமை அதன் அனைத்துத் துறைகளிலும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. இதன் பாதிப்புக்களை நேரடியாக அனுபவிக்கப் போகின்றவர்கள் அந்நாட்டின் சிங்கள மக்களேயன்றி அதனைத் தோற்றுவித்த அரசியல்வாதிகளோ, பேரினவாதிகளோ அல்ல. தற்போதைய மகிந்த அரசின் இனவாத போர்வெறிப் பிரச்சாரத்துக்குள் அப்படியே அமிழ்ந்து போயிருக்கிறது சிங்களதேசம். அதன் மாயைக்குள் இருந்து விடுபடுவதற்கு அதற்கு வழிதெரியவில்லை. சிங்கள மக்களும் சரி அதன் ஊடகங்களும் சரி தொடர்ந்தும் அதற்கு உடந்தையாகவே இருந்து வருகின்றனர். அந்தளவிற்கு இனவாதவெறி சிங்கள மக்கள் மத்தியில் திட்டமி…
-
- 0 replies
- 1.2k views
-
-
மாணவர்களுக்கு பொருளியல் பாடம் கற்பித்த அமைச்சர் பந்துல ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்துக்கு இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தனது பழைய தொழிலை ஞாபகப்படுத்தி இன்று அங்கு பாடம் நடத்தியுள்ளார். முன்னாள் தனியார் வகுப்பு ஆசிரியரான அவர் இன்றைய தினம் அங்கு இரு மணிநேரம் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு பொருளியல் பாடம் கற்பித்துள்ளார். ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயலத்தில் உயர்தரத்தில் கல்விபயிலும் ஒவ்வொரு மாணவனும் மாணவியும் பல்கலைக்கழம் செல்ல வேண்டும் என்பதே தனது எதிர்ப்பார்ப்பென்றும் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தான் வந்து பாடம் நடத்த தயாராக உள்ளதாகவும் இதன் போது அமைச்சர் பந்துல தெரிவித்துள்ளார் . http://www.virakesari.lk/a…
-
- 0 replies
- 551 views
-
-
http://www.tamilmirror.lk/187227/-ப-வண-ணன-ரவ-ர-ஜ-எம-ப-ய-க-க-ன-ற-ர-
-
- 0 replies
- 371 views
-
-
தமிழில் ஒரு பேச்சு வழக்கு இருக்கிறது. பேச்சுப் பல்லக்கு தம்பி கால் நடை என்பதுதான் அது. வாய்ச் சவடால் அடித்துப் பேசிவிட்டுக காரியத்தில் கோட்டை விடுவது என்பதே அதன் அர்த்தம். உலகத் தமிழ் மக்களின் தலைவன், முத்தமிழ் அறிஞர், முதுபெரும் அரசியல் சாணக்கியன் எனப் பல அடைமொழிகளோடு போற்றப் பட்டவர,; தமிழகத்தில் ஐந்தாவது முறையாக முதல்வர் பதவி வகித்து வரும் டாக்டர் கலைஞர் கருணாநிதி. இத்தனை புகழாரங்களும் உண்மைதான் என இதுவரை காலமும் நம்பி இருக்கும் ஈழத் தமிழர் உட்பட தமிழக மற்றும் உலக நாடுகிளல் வாழும் தமிழரில் பெரும்பாலானோர் இன்று கூட அப்பாவித்தனமாக நம்பிக்கையுடன் காணப் படுகிறார்கள். தமிழக அரசியல்வாதிகளைக் கோமாளிகள் என இலங்கை இராணுவத் தளபதி கூறிய போது கொதித்து எழாத தமிழர் யாரும்…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத நகர்வுகளுக்கு வாய்ப்புகள் இருக்கும் என பாகிஸ்தான் மற்றும் இந்திய பாதுகாப்பு தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஊடுருவலும் பயங்கரவாத நகர்வுகளும் இந்து சமுத்திர பரப்பில் இருப்பதாகவும் பாகிஸ்தான் மற்றும் இந்திய பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தந்திருக்கும் பாகிஸ்தானிய கடற்படை தளபதி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத நகர்வுகளை கட்டுப்படுத்த இந்தியா - பாகிஸ்தானுடன் இணைந்து செயற்படுவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் ஆசிய நாடுகளுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் பாரிய அச்சுறு…
-
- 0 replies
- 231 views
-
-
கிளிநொச்சியில் ஆளுநா் தலைமையில் காணிப்பிணக்குகள் ஆராய்வு : வட மாகாண ஆளுநா் றெஜினோல்ட் குரே தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மக்களின் காணிப் பிணக்குகள் ஆராயும் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இன்று 09-12-2016 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் காலை ஒன்பது முப்பது மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் கரைச்சி, கண்டாவளை, பளை,பூநகரி பிரதேச செயலக பிாிவுகளில் இருந்து அழைக்கப்பட்டிருந்த மக்கள் தங்களின் காணிப் பிணக்குகளை ஆளுநரிடம் முறையிட்டுள்ளனா். நீண்ட காலமாக தீர்க்கப்படாது இருந்து வந்த காணிப் பிணக்குகள் தொடா்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மக்கள் தங்களின் காணிப் பிணக்குகள் தொடா்பில் ஆளுநரிடம் முறைபாடுகளை பதிவு செய்தனா். தற…
-
- 0 replies
- 215 views
-
-
https://static2.tamilmirror.lk/assets/uploads/image_0a050bbde3.jpg சுப்ரமணியம் பாஸ்கரன் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, முல்லைத்தீவு, திருமுறிகண்டி ஆள் நடமாட்டம் அற்று வெறிச்சோடிக் காணப்படுகின்றது. இதனால், திருமுறிகண்டி பிள்ளையாளர் கோவில் சூழலில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்கள் தொழில்களை இழந்துள்ளதாகவும் தமது அன்றாட உணவுக்கே பெரும் கஷ்டத்தை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர். ஏ-9 வீதியின் திருமுறிகண்டி கோவில் சூழலில் சுமார் 75க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் பல்வேறு வகையான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் ஏற்பட்ட கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பயணிகள் வருகை குறைவடைந்து போக்குவரத்துகளும் மட்டுப்படுத…
-
- 2 replies
- 635 views
-
-
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் நிதியுதவிக்கு எதிராக வழக்கு -கொலம்பியா நீதிமன்றத்தில் தாக்கல் வீரகேசரி நாளேடு 4/1/2009 8:41:02 AM - தமிழர்கள் படுகொலைகளுக்கு எதிரான அமெரிக்க குழு, அமெரிக்க திறைசேரி செயலாளர் திமுதி கெய்த்னர், சர்வதேச நாணய நிதியத்தின் அமெரிக்க நிறைவேற்று அதிகாரி மெக் லன்டாசாகர் ஆகியோருக்கு எதிராக கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை நேற்று முன்தினம் தாக்கல் செய்துள்ளது. இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் 1.9 பில்லியன் டொலர்கள் வழங்கப்படுவதை ஆட்சேபித்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தாக்கலின் பிரதிகள் அமெரிக்க இராஜாங்க திணைக்களம், திறைசேரி போன்றவற்றுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தமிழர்கள் படுகொலைக்கு எதி…
-
- 0 replies
- 496 views
-