Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் முன்னெடுத்துள்ள விசாரணைக்கு ஐந்து நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்தியா , நேபாளம் , பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய தெற்காசிய நாடுகளே இந்த விசாரணைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது ஐ.நா விசாரணைக் குழு தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான விசாவை வழங்க இந்தியா மறுத்துள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹானாம ஹேவா தெரிவித்துள்ளார். நாடொன்றை தனிமையாக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணக்கு குறித்த நாடுகள் ஒத்துழைப்பு வழங்க மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு எதிரான விசாரணைகளுக்காக 13 பேர் கொண்ட குழுவையும் மூவர்…

    • 1 reply
    • 546 views
  2. எமது சொந்தங்கள், குழந்தைகள், என்போன்ற பாலச்சந்திரன் அண்ணன் உட்பட உறவுகளைக் கொன்றழித்த கொலைகாரன் ராஜபக்ச கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியைத் தொடக்கி வைக்க லண்டன் வருகிறான். உலகத் தமிழ் உறவுகள் அனைவரும் ஒற்றுமையாக போராட்டம் நடத்தி அவனை விரட்ட வேண்டும். நமது தாகம் தமிழீழத் தாயகம் என லாரன்ஸ் சந்தோஷியா என்ற தமிழின உணர்வாளரின் மகன் தனது உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். http://www.pathivu.com/news/32597/57//d,article_full.aspx

    • 0 replies
    • 423 views
  3. "தற்போதைய காலங்களில் அரச பாடசாலைகளினுள் மாணவர்களிடமிருந்து பணம் அறவிடப்படுதல், பெற்றோரிடம் பலவகையான வேலைகளை சுமத்துதல் போன்ற அரச கல்வி முறைமையினை அதாவது இலவச சுதந்திர கல்வித் திட்டத்தினை பாதிக்கின்ற பல செயற்பாடுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. வறிய மாணவர்கள் கல்வி கற்பதற்கு இன்று பாடசாலைகளில் இடம் இல்லாமல் போகும் நிலை தோன்றியுள்ளது. கல்வியானது சகலரதும் உரிமையாகும். அது விற்பனைப் பண்டமல்ல. ஆகையால் நாம் ஒன்றிணைத்து போராட வேண்டும் " என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பொது மக்களிடம் தெரிவிக்கின்றது. மேலும் பாடசாலைகளில் பணம் அறவிடப்படுவது பற்றி தகவல்கள் இருப்பின் அவற்றை வழங்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது. http://w…

    • 0 replies
    • 252 views
  4. பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலை கண்டித்து நேற்று சனிக்கிழமை மெல்போர்னில் ஆயிரக்கணக்கில் மக்கள் ஒன்று திரண்டு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் அங்கு நடக்கும் படுகொலைகளை கண்டித்து பேரணி நடை பெற்றது. இதில் மெல்போர்ன் வாழ் தமிழீழ மக்களும் கலந்து கொண்டனர். http://www.pathivu.com/news/32572/57//d,article_full.aspx

  5. இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்பட்ட 700க்கும் மேற்பட்ட சிறியளவான நீர்ப்பாசன குளங்களில் தற்போது 30 வீதமான குளங்கள் மட்டுமே அதிகாரபூர்வ பதிவேடுகளில் காணப்படுவதாக மாவட்ட கமத்தொழிற் தினைக்களம் கூறுகின்றது. சில பிரதேசங்களில் குளங்கள் மண் போட்டு நிரப்பப்பட்டு மக்கள் குடியிருப்புகளும் அரச கட்டடங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், தற்போதைய அதிகாரபூர்வ பதிவேடுகளின் படி இந்த எண்ணிக்கை 233 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மாவட்ட கமத்தொழில் சேவைகள் உதவி ஆணையாளரின் தகவல்களின் படி, 1976-ம் ஆண்டுக்கு முன்னர் 786 சிறிய நீர்ப்பாசன குளங்கள் பதிவேடுகளில் இருந்துள்ளன. பதிவேடுகளில் தற்போது காணாமல்போயுள்ள குளங்களில் 100-க்கும் மேற்பட்டவை மண்…

    • 5 replies
    • 698 views
  6. "முஸ்லிம் மக்களின் விருப்பத்துக்கு மாறாக முஸ்லிம் தலைமை இந்த அரசுடன் சேர்ந்து ஆட்சி நடத்துகின்றது; மக்களை நடுத்தெருவில் கைவிட்டுவிட்டு அரசுடன் சேர்ந்து சுகபோகங்களை அனுபவிக்கின்றது. இது வெட்கக்கேடானது. கிழக்கு மாகாணத்தில் தமிழ் - முஸ்லிம்கள் சேர்ந்து ஆட்சியமைக்க கிடைத்த சந்தர்ப்பத்தை முஸ்லிம் தலைமை புறந்தள்ளியது. எனவே, தமது தலைமைக்கு முஸ்லிம் மக்கள் பதிலடி கொடுத்தே தீருவார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து தமது உரிமைக்காக முஸ்லிம் மக்கள் போராடும் காலம் வெகுதொலைவில் இல்லை." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி…

    • 1 reply
    • 1.1k views
  7. காரைநகர் ஊரி கிராமத்துக்கு பவுஸர்கள் மூலம் குடிதண்ணீர் வழங்கும் திட்டம் வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் இன்று ஞாயிற்றுக்கிழமை (20.07.2014) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கடற்படைச் சிப்பாய் ஒருவரால் ஊரிக் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் அண்மையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் யாவரும் அறிந்ததே. இந்தச் சம்பவத்தையடுத்து வடமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்பகுதிக்கு நேரில் சென்றிருந்தனர். இதன்போது பிரதேசவாசிகள் தாங்கள் குடிதண்ணீருக்காகப் படுகின்ற அவலத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார்கள். வழமையாகவே குடிதண்ணீருக்கான பற்றாக்குறைவு நிலவும் க…

  8. - வடிவேல் சக்திவேல் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மட். பன்சேனை பாரி வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் இராசலிங்கம் கஜந்தி என்னும் மாணவி கடந்த மாதம் 17 ஆம் திகதி வந்தறுமூலையில் நடைபெற்ற மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி 100 மீற்றர் நீளம் பாய்தலில் 1ஆம் இடத்தினையும் 200 மீற்றரில் 2ஆம் இடத்தினையும் பெற்று தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிக்கு தெரிவாகி பாடசாலைக்கும் இப் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இம்மாணவிக்கு சுவிஸ் நாட்டில் வசிக்கும் பாண்டிருப்பைச் சேர்ந்த விஜயகுமாரன் ஜீவா துவிச்சக்கரவண்டி பாதணி மற்றும் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கியதோடு இப்பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 5இல் கல்வி பயிலும் 170 மாணவர்களுக்கு குடிநீர்ப் போத்…

    • 0 replies
    • 359 views
  9. சிங்கள மக்களுடன் சேர்ந்தே தமிழ் மக்கள் தமது பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் - இரா.சம்பந்தன் பெரும்பான்மை சிங்கள மக்களை எதிர்க்க வேண்டிய அவசியம் எமக்கில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34 ஆவது சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், சிங்கள பெரும்பான்மை மக்களை நாங்கள் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை சிங்கள மக்களுடன் சேர்ந்தே தமிழ் மக்கள் தமது பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். விட்டுக்கொடுத்து போக வேண்டியதற்கு விட்டுக்கொடுத்தும் விட்டுக்கொடுக்க முடியாததற்கு வ…

    • 0 replies
    • 374 views
  10. நாய் குரைத்தமைக்கும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று யாழ். நகரத்தில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது: அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டவர் ஒருவர் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளாராகக் கடமையாற்றி வருகின்றார். இவர் யாழ். நாவலர் வீதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு வசித்து வருகிறார். தான் வசிக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் வளர்க்கும் நாய் தொடர்ந்து குரைப்பது தமக்கு அசெளகர்யத்தை ஏற்படுத்துவதாக நேற்று வெள்ளிக்கிழமை அவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் இரு தரப்பினரையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது…

    • 8 replies
    • 1.7k views
  11. -எம்.எஸ்.எம்.நூர்தீன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60 சதவீதமானோருக்கு நீரிழிவு நோய் உள்ளது. இதற்கு காரணம் இரசாயனப் பதார்த்தங்களிலான உணவுகளை உட்கொள்வதேயென மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார். உள்ளுர் கைத்தறிப் பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட கைப்பணிப் பொருட்களின் கண்காட்சி மட்டக்களப்பு அமிர்தகழி மாமங்கேஸ்வரர் கோவில் முன்றலில் நேற்று சனிக்கிழமை (19) ஆரம்பமானது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'மட்டக்களப்பு மாவட்டத்தில் 6ப்0 சதவீதமானோருக்கு நீரிழிவு நோய் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இதற்கு காணரம் இரசாயனப் பதார்த்தங்களிலான உணவுகளை உட்கொள்வதேயாகும். எமது பழைய காலத்து உணவு பழக்கவழக்கம் எ…

    • 0 replies
    • 401 views
  12. -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள கால்நடை வளர்ப்பாளர்கள், பால் விற்பனை மூலம் கடந்த ஜுன் மாதம் 50 இலட்சம் ரூபா வருமானத்தினை ஈட்டியுள்ளதாக கண்டாவளைப் பிரதேச கால்நடை வைத்தியதிகாரி இன்று ஞாயிற்றுக்கிழமை (20) தெரிவித்தார். கண்டாவளைப் பிரதேசத்தில் பிரதான வாழ்வாதார நடவடிக்கையாக விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், இணையாக கால்நடைப் பண்ணை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன், பகுதி நேரமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவர்களும் காணப்படுகின்றனர். அந்தவகையில், கால்நடைகளிலிருந்து பெறப்படும் பாலை விற்பனை செய்வதன் மூலம் மேற்குறித்த தொகை வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், கண்டாவளைப…

    • 0 replies
    • 442 views
  13. கீழே உள்ள பதிவு facebook இல் "கடி நொடி" என்னும் குழுவால் பதியப்பட்டது..... கீழே விவாதிப்பது சரியா பிழையா ???? ஏலேலோ அஜ்லசா ஏலேலோ அஜ்லசா என்ற வார்த்தை தமிழ் இனத்திற்கு கேட்கும் பொழுது, அது கடல் தொழிலாளிகள் தன் கழைப்பையும் மீறி குடும்பத்தின் சூழ் நிலையை கருத்தில் கொண்டு கட்டுமரத்தை தள்ளும் போது பாடும் பாடல். கனடியத் தமிழர் காங்கிரஸ்சின் (CTC) உல்லாசக் கப்பல் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி TORONTOவில் இருந்து வெளிக்கிடப் போகின்றது, எல்லோரும் முற்பதிவுகள் செய்யுங்கள் என்று கனடியத் தமிழர் காங்கிரஸ் கூவிக் கூவி பற்றுச் சீட்டுக்களை விற்பனை செய்கின்றார்கள். கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) கப்பலில் உல்லாசப் பயணம் செய்து பணம் சேகரிப்பதை கடிநொடியாகிய நாம் எந்தக் காலத்திலும் வரவே…

    • 0 replies
    • 587 views
  14. யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழுவினால், ஜெனீவா, பாங்கொக் மற்றும் நியூயோர்க் ஆகிய 3 நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என்று ஐ.நா தகவல்கள் தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இம்மூன்று நாடுகளிலிருந்து விசாரணைகளை நடத்தும் மேற்படி விசாரணைக் குழுவிடம்ஈ இலங்கையில் வாழும் தமிழர்கள், தொலைபேசி, ஸ்கைப், வீடியோ கொன்ஃபரன்ஸ் ஊடாக சாட்சியமளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யுத்த காலத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளாலும் இலங்கை இராணுவத்தினராலும் மனித உரிமைகள் மற்றும் போர்ச் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக எழுந்துள்ள…

  15. அளுத்கம, கொடல்ல தம்மிக்காராம விகாரையில் இருந்த 19 வயதான பௌத்த பிக்கு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நேற்று (19) இரவு 11.30 மணியளவில் விகாரையில் உள்ள அறை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. பேருவல, வலபன பரமரனீயாராம விகாரையில் இருந்த குறித்த பிக்கு நேற்று மாலை தம்மிக்காராம விகாரைக்கு சென்றுள்ளார். தம்மிக்காராம விகாரையில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக இவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாழ்க்கை தனக்கு வெறுத்து விட்டது எனவும் தனது பெற்றோரை கவனிக்குமாறும் தற்கொலை செய்து கொண்ட பிக்கு கடிதம் எழுதி வைத்துள்ளார். அக் கடிதம் பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது. (அத தெரண - தமிழ்) http://tamil.adaderana.lk/news.php?nid=59369

  16. வட மாகாண சபை எம் கையில் கிடைத்திருந்தால்..? டக்லஸ் தேர்தல் காலங்களில் மக்களை உசுப்பேற்றி, வாக்குகளை அபகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால், மக்களுக்கான அபிவிருத்திச் செயற்திட்டங்களை எதிர்ப்பு அரசியலின் ஊடாக ஒருபோதும் முன்னெடுக்க முடியாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் இன்றைய தினம் (19) இடம்பெற்ற வடமாகாண ஆங்கில ஆசிரிய மாணவர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, மாகாணசபை என்பது எனது நீண்டகாலக் கனவாக இருந்த போதிலும், அது எமது கைகளுக்குக் கிடைக்காமல் போனவை துரதிஷ்டவசமாகும். வடமாகாணசபை எமது கைகளுக்குக் கிடைக்கப் பெற்றிருப்பின், மூ…

    • 4 replies
    • 758 views
  17. -எம்.எம்.எம். ரம்ஸீன் 'பிரபாகரனால் செய்ய முடியாமல் போன, பௌத்தர்களைத் தனிமைப்படுத்தும் செயலை அரசாங்கம் செய்ய ஆரம்பித்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் கம்பளை தொகுதி ஆதரவாளர்களின் கூட்டம் சனிக்கிழமை(19) கம்பளை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'இந்நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தபோது சகல இனங்களும் ஐக்கியமாக இருந்தன. அன்று பௌத்தர்களும் இந்துக்களும் முஸ்லிம்களும் கிருஸ்த்தவர்களும் கைகோர்த்து நின்று சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டனர். ஆனால் இன்றைய மஹிந்த அரசாங்கம் இனங்கள் மத்தியில் பிளவுகளை ஏற…

    • 1 reply
    • 386 views
  18. ஐக்கிய தேசியக் கட்சியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இலவசக் கல்வித்திட்டம் இன்று மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான ஆட்சியில் திட்டமிடப்பட்ட முறையில் அழித்தொழிக்கப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தல்துவை தெஹியோவிற்ற ருவான்வெல மற்றும் கோணகல்தெனிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் அப்பகுதிகளில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; 1977ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் சுமார் 40 சதவீத மாணவர்களிடம் தேவையான புத்தகங்கள் இருக்கவில்லை. இதை அவதானித்த ஐ.தே.க. அரசாங்கம் பாடசாலைகளுக்கு இலவசப் புத்தகம் இலவச சீருடை இலவச உணவுத்திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தியது. ஏழைப் பெற்றோர் கல்விக்காக ச…

  19. முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்களை மோதவிடுவதற்கு சிலர் சதி! - அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றச்சாட்டு. [sunday 2014-07-20 09:00] முல்லைத்தீவு மாவட்டத்தைச் சாராத எந்தவொரு முஸ்லிம் குடும்பங்களையும் அந்த மாவட்டத்தில் மீள்குடியேற்றப் போவதில்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார் முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் காணியில்லாதோருக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அதிகாரிகளைப் பணித்துள்ளார். அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை மோதவிடும் சதிகளை ஒருசிலர் மேற்கொள்கின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்ப…

  20. கனடா - அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல். [sunday 2014-07-20 09:00] உலகளாவிய ரீதியில் நீதிவேண்டி உரிமை வேண்டித் தமிழர் நடாத்தும் கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல் கனடா அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் (Albert Campbell Square � Scarborough Civic Center) யூலை 20.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் Professor Daniel Ferenste...in (President, International Association of Genocide Scholars) அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். கனடியத் தமிழர் தேசிய அவையின் ஒருங்கிணைப்பில் நடாத்தப்படும் கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல் வழ…

  21. காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணைப் பரப்பு சிறிலங்கா அதிபரால் விரிவாக்கப்பட்டுள்ள, சிறிலங்காவின் பிந்திய நிலவரங்கள் குறித்து, கண்காணித்து வருவதாக, ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பேச்சாளர் ருபேர்ட் கொல்வில், கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றிடம் இதுபற்றிக் கூறுகையில், “எல்லாத் தரப்பினராலும் இழைக்கப்பட்ட அனைத்துலக மனித உரிமை மற்றும் மானிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்தும் விசாரிப்பதற்கு உள்நாட்டு பொறிமுறை ஒன்று உருவாக்கப்படுவதை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் ஊக்குவிக்கிறது. இத்தகைய அமைப்புகள், நம்பகமான, சுதந்திரமான, நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில், அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்…

  22. வரும் 23ம் நாள் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஆரம்பமாகும், கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்பாரா என்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் இரகசியத்தைப் பேணி வருகிறது. கொமன்வெல்த் அமைப்பின் தலைவர் என்ற வகையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், பிரித்தானிய மகாராணியும், இந்த நிகழ்வை ஆரம்பித்து வைப்பர் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், சிறிலங்காவில் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கக் கூடாது என்று புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பிரித்தானியாவில் சிறிலங்கா அதிபரின் பயணங்கள், புலம் பெயர் தமிழர்…

  23. காணாமற் போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின், நம்பகத்தன்மை மற்றும், சுதந்திரம் தொடர்பான அனைத்துலக தர நியமங்களை உறுதி செய்வதற்கு, ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்குழுவால், உதவ முடியும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் ஒருவர், “அர்த்தமுள்ள நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை மீறல்கள், இருதரப்பாலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் உள்ளிட்ட மோதல்களால் ஏற்பட்ட இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை உறுதிப்படுத்தும் சிறிலங்காவின் உள்நாட்டு செயல்முறைக்கு அமெரிக்கா நீண்டகாலமாகவே ஆதரவு தெரிவித்து வருகிறது. சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் கு…

  24. பாடசாலைத் தோட்டத்தில் பயிரிடப்பட்ட பச்சைமிளகாயால் இரு ஆசிரியைகள் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் கடந்த தி்ங்கட்கிழமை வலிகாமம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் தோட்டம் ஒன்று மாணவா்களால் செய்யப்பட்டு வருகின்றது. இத் தோட்டத்திற்கு பொறுப்பாக ஒரு ஆசிரியா் நியமிக்கப்பட்டிருந்தார். அங்கு பயிரிடப்படும் விளை பொருட்களை பாடசாலையின் அபிவிருத்திக்காக அப் பாடசாலை ஆசிரியா்களுக்கு சந்தை விலையிலும் பார்க்க குறைவான விலையில் விற்கப்படுவதாகவும் தெரியவருகின்றது. குறித்த பாடசாலையில் குடை மிளகாய் என்னும் மிளகாய் பயிரிடப்பட்டிருந்ததாகவும் அவை சில சாடிகளில் வைக்கப்பட்டு அலங்காரத்திற்காக சில வகுப்பிற்கு முன் வைக்கப்டிருந்ததாகவும் தெரியவருகின்றது. மிளகாய்த் தட்டுப்பா…

  25. பி.பி.ஸி. தமிழ் சேவை இந்தியாவுக்கு இடம்பெயரவுள்ளது என்று ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு வரையான செலவினங்களைக் குறைக்கும் திட்டத்தின் படியே, இந்த இடமாற்றம் நடக்கவுள்ளது. இதுதொடர்பாக, கருத்து வெளியிட்ட பி.பி.ஸி. உலகசேவை பேச்சாளர் ஒருவர், பி.பி.ஸி. தமிழ் சேவை நேயர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றனர். ஹிந்தி சேவை வெற்றிகரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்ச் சேவையையும், இந்தியாவுக்கு இடமாற்றம் செய்வதன் மூலம் நேயர்களுக்கு அதிக வசதிகளை வழங்க முடியும். இந்தியாவில் உள்ள தமிழ் நேயர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு தமிழோசை முக்கிய கவனம் செலுத்தவுள்ளது. அதேவேளை, இலங்கை தமிழர்களுக்கும், புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் நேயர்களுக்காகவும், தமிழ்ச்சேவை தொடர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.