ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
24 JUL, 2024 | 02:08 PM முல்லைத்தீவு, கல்விளான் பகுதியில் இன்று (24) புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்விளான் பகுதி விவசாய அமைப்பின் செயலாளரே இவ்வாறு காயமடைந்துள்ளார். இவர் வயலுக்குச் சென்றிருந்த போது இனந்தெரியாத நபர்கள் சிலரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்தவர் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகக் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். முல்லைத்தீவு, கல்விளான் பகுதியில் மணல் கடத்தல்காரர்களுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருவதால் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 24 JUL, 2024 | 02:37 PM வவுனியா ஶ்ரீ இராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலத்தின் அதிபரை மாற்றுமாறு கோரி பெற்றோர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று புதன்கிழமை (24) பாடசாலையின் காலை பிரார்த்தனை முடிவடைந்த பின்னர் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது, எமது பாடசாலை கல்விநிலையில் வீழ்ச்சி நிலையினை கண்டுள்ளது. பாடசாலையில் நடைபெறும் வேலைத்திட்டங்கள் தொடர்பான கணக்கறிக்கைகள் எவையும் சமர்பிக்கப்படவில்லை. அங்கு நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக பெற்றோர்களிற்கு அறிவித்து கலந்துரையாடும் நடவடிக்கையினையும் அவர் முன்ன…
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
தமிழ் மக்களிற்கான சுயாட்சி தீர்விற்காக மக்கள் போராட்ட முன்னணி போராடும் - - தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரித்தல் அவர்களுக்கான சுயாட்சி என்பவை தான் எமது நிலைப்பாடு.. -ரஜீவ்காந் Published By: RAJEEBAN 24 JUL, 2024 | 05:33 PM சுயாட்சியுடன் கூடிய , ஒற்றைய ஆட்சியை நிராகரிக்கின்ற, அலகுகளை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியோடு, மக்கள் போராட்ட முன்னணி இந்த அரசியல் களத்தில் குதித்திருக்கின்றது என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் சுயாட்சிக்காக தொடர்ந்தும் போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளார். அரகலய போராட்ட குழுவான மக்கள் போராட்ட முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இதனை த…
-
- 1 reply
- 422 views
- 1 follower
-
-
இலங்கை மாணவர்களுக்காக அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் அன்பளிப்பு செய்த மடிக்கணனிகளுக்கு சுங்கத்துறையால் ரூபா 2.2 மில்லியன் வரி விதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake)தெரிவித்துள்ளார். நன்கொடையாக வழங்கப்படும் மடிக்கணனிகளுக்கு இது போன்ற வரி விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று அவர்கூறினார். முன்னர் ஒருபோதும் செலுத்தியதில்லை “நாங்கள் சுங்க வரியாக ரூ 2,286,000 செலுத்தியுள்ளோம் அதற்கு 18% வரி காரணமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். நன்கொடையாக வழங்கப்படும் மடிக்கணனிகளுக்கு இதற்கு முன்னர் நாம் வரி செலுத்தியதில்லை'' என்றார். 200க்கும் மேற்பட்ட மடிக்கணனிகள் இலங்கை மாணவர்களுக்கு 200க்கு…
-
- 0 replies
- 123 views
- 1 follower
-
-
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை, 1700 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி ரத்து! பெருந்தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி;இரத்து செய்யப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக அதிகரித்துக் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது இதனையடுத்து பெருந்தோட்ட;நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடியதன் அடிப்படையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் தடையுத்தரவைப்;பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் ;இரத்து செய்யப்படுவதாக அறிவித்து தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தரவினால் …
-
- 0 replies
- 293 views
-
-
தேர்தலுக்குத் தேவையான நிதியினை விடுவிக்குமாறு நிதி அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை! ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நிதியினை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியினை தாமதமின்றி விடுவிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது தேர்தல் செலவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித…
-
- 0 replies
- 255 views
-
-
வரலாற்றில் மிக இருண்ட யுகம் – இலங்கை அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்கிறார் கனேடிய பிரதமர். பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் என கனடா தொடர்ந்தும் கோருவதாகக் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலையின் 41வது ஆண்டை நினைவுகூரும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 41 ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் தமிழ் பொது மக்களின் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து தாக்குதல்கள் ஆரம்பமாகின. ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டதுடன், பல தமிழர்கள் காயமடைந்தனர். பலர் நாட்டிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். கறுப்பு ஜூ…
-
- 0 replies
- 331 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி யார் என்பதை இந்த நாட்டு முஸ்லிம் சமூகமே தீர்மானிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவிவித்துள்ளார். கல்முனையில் நடந்த நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார். “வடக்கில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் பொழுது தெற்கில் 03 வேட்பாளர்கள் பக்கம் சிங்கள மக்கள் பிரிந்திருக்கும் பொழுது இந்த நாட்டு முஸ்லிம்கள்தான் அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிப்பர். இதனை எந்த அரசியல் ஆய்வாளரும் மறுக்க மாட்டார்கள். எந்த ஊடகவியலாளரும் மறுக்க மாட்டார்கள். எங்கள் முன்னாள் தலைவர் அஷ்ரப் செய்தது போன்று அந்த வேட்பாளர்களிடம் எழுத்து மூலம் பேரம் பேசும் விடயங்களை ஆவணப்படுத்த வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவிவித்துள்ளார். …
-
- 3 replies
- 446 views
-
-
Published By: VISHNU 24 JUL, 2024 | 01:08 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நீதிமன்ற விசாரணைக்கு சென்று சிறைக்கு திரும்பும் ஆண் மற்றும் பெண் கைதிகள் நிர்வாணமாக சோதனைக்குட்படுத்தப்படுகிறார்கள் என எதிரணியின் உறுப்பினர் ரோஹன பண்டார குறிப்பிட்ட கருத்துக்கு நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். பாதிக்கப்பட்ட கைதி மற்றும் முறையற்ற வகையில் செயற்பட்ட அதிகாரியின் பெயர் விபரங்களை தாருங்கள் என அமைச்சர் கோரிய போது விபரங்களை வழங்க முடியாது என ரோஹன பண்டார குறிப்பிட்டார். அவ்வாறாயின் நீங்கள் பொய்யுரைக்கின்றீர்கள், கீழ்த்தரமாக நடந்துக் கொள்ள வேண்டாம் என நீதியமைச்சர் கடுமையாக சாட…
-
- 0 replies
- 322 views
- 1 follower
-
-
பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் செயற்படுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று மீள பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கர்தினால் மெல்கம் ரஞ்சித் உள்ளிட்ட 8 தரப்பினரால் 9 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. https://thinakkural.lk/article/306697
-
- 5 replies
- 926 views
- 1 follower
-
-
மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை முறையே 25 அடிப்படை புள்ளிகளால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (23) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதங்கள் முறையே 8.25 சதவீதம் மற்றும் 9.25 சதவீதமாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/306701
-
- 1 reply
- 280 views
- 1 follower
-
-
23 JUL, 2024 | 03:09 PM (நா.தனுஜா) சில அரசியல் கட்சிகள் எதிர்வரும் தேர்தலின் பின்னர் தாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான மீள்பேச்சுவார்த்தைகள் மூலம் ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மாற்றியமைக்கப்போவதாக கூறுகின்றன. ஆட்சிபீடம் ஏறும் அரசாங்கம் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முற்படுகையில், முன்னைய அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மாற்றியமைக்கக்கூடும். தேர்தலின் பின்னர் தமக்கான நிவாரணங்கள் குறித்த மக்களின் எதிர்பார்ப்பும் உயர்வாகக் காணப்படும். இருப்பினும் நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை அடுத்து இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் தென்பட ஆரம்பித்துள…
-
- 0 replies
- 416 views
- 1 follower
-
-
இலங்கை தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் வேலை வழங்குவதற்கு போலந்து கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. போலந்துக்கு விஜயம் செய்த பின்னர் தனது “எக்ஸ்” தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார். இலங்கையர்கள் போலந்திற்குள் நுழைவதற்கான விசா வசதிகளை தளர்த்துவது குறித்தும் இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தனது கோரிக்கைகள் தொடர்பில் போலந்து வெளிவிவகார அமைச்சரின் பதில்களுக்கு நன்றி தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/…
-
- 2 replies
- 523 views
- 1 follower
-
-
23 JUL, 2024 | 09:10 PM (எம்.மனோசித்ரா) வங்கிகளில் தங்க ஆபரணங்களை அடகு வைத்த நபர்களுக்கு சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடியில் அனைத்து பிரிவுகளும் நேரடியாக அல்லது மறைமுகமாக பாதகமான தாக்கத்துக்கு உள்ளானார்கள். அதன் விளைவாக தங்க நகைகளை அடகு வைத்தல் வேகமாக அதிகரித்துள்ளது. 2019 ஆண்டில் 210 பில்லியன் ரூபா அளவிலிருந்த அடகு முற்பண நிலுவைத் தொகை 2024 ஆண்டு மார்ச் மாதமளவில் 571 பில்லியன் வரை அதிகரித்து 172 வீத அதிகரிப்பை காட்டியுள்ளது. குறித்த நிலையை கருத்திற் கொண்டு உரிமம் பெற்ற வங்கிகள் மூலம் அடகு முற்பணம் பெற்றுள்ள குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு நிவா…
-
-
- 2 replies
- 401 views
- 1 follower
-
-
நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொதுமக்களின் அமைதியை பேணும் நோக்கில், முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியாகியுள்ளது. அதற்கமைய இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையின் சகல உறுப்பினர்களும் நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர். நேற்று(22) முதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/306679
-
- 0 replies
- 147 views
- 1 follower
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) என்னை படுகொலை செய்வதற்கு இராஜாங்க அமைச்சர் ஒருவர் சதி செய்வதாக இணையத்தள செய்தி சேவை ஒன்றில் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தி குறித்து பாதுகாப்பு தரப்பினர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர் மனித படுகொலையுடன் தொடர்புடையவர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (23) சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, என்னை படுகொலை செய்வதற்கு இராஜாங்க அமைச்சர் ஒருவர் சதி …
-
-
- 7 replies
- 616 views
- 1 follower
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸாக்கள் பலவந்தமான முறையில் தகனம் செய்யப்பட்டமைக்கு அரசாங்கம் என்ற ரீதியில் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறோம். அத்துடன் 41 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கறுப்பு ஜூலை சம்பவத்துக்கும் தமிழ் மக்களிடம் நாட்டின் பிரஜை என்ற ரீதியில் மன்னிப்பு கோருகிறேன் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (23) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் ஊட…
-
-
- 14 replies
- 738 views
-
-
23 JUL, 2024 | 04:35 PM வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று செவ்வாய்க்கிழமை (23) முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கலைத்தூது மண்டபத்திற்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் ஆனாது வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும் நாட்களில் சுழற்சி முறையில் முன்னெடுக்கவுள்ளதாக உறவுகள் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/189194
-
- 0 replies
- 324 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 23 JUL, 2024 | 02:27 PM அரகலய நாட்களின் போது கோட்டாபய ராஜபக்ச மாலைதீவிற்கு தப்பிச்செல்வதற்கு இலங்கை விமானப்படையின் விமானமும் நிதியும் பயன்படுத்தப்பட்டமை தகவல்அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. 2022 ஜூலை13ம் திகதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை விமானப்படை விமானம் மூலமே மாலைதீவிற்கு தப்பிச்சென்றுள்ளார். அரகலய போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களும் பொதுமக்களும் ஜனாதிபதி மாளிகையை 2022 ஜூலை 9ம் திகதி ஆக்கிரமித்ததை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் கோட்டாபய மாலைதீவிற்கு தப்பிச்சென்றார். இலங்கை விமானப்படையின் விமானத்தை பயன்படுத்தியே அவர் மாலைதீவிற்கு சென்றார், திறைசேரி பாதுகாப்…
-
- 0 replies
- 366 views
- 1 follower
-
-
23 JUL, 2024 | 01:44 PM ஒரு நாட்டின் குடிமக்களின் மனித வள மூலதன வளர்ச்சியை மேம்படுத்தக் கூடிய சிறந்த திட்டம் கிராமத்திலும் நகரத்திலும் அமைந்து காணப்படும் பாடசாலைகளை வலுப்படுத்துவதாகும். பிள்ளைகளுக்கு தரமான தரத்திலான சர்வதேச கல்வியை வழங்குவதன் மூலம் ஸ்மார்ட் குடிமக்களை உருவாக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஸ்மார்ட் குடிமக்களைக் கொண்ட ஒரு நாட்டில், மனித மூலதனத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டு பணியாளர்கள் எமது நாட்டிற்காக பெரும் தியாகங்களைச் செய்து, அந்நியசெலாவணியை ஈட்டித் தருகின்றனர். Health care given எனும் தொழிற்துறையின் கீழ…
-
- 0 replies
- 137 views
- 1 follower
-
-
இந்நாட்டு சனத்தொகையில் 20.3% வீதமானவர்களுக்கு அடிப்படை குடிநீர் வசதிகள் இல்லை என தெரியவந்துள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வின்படி, இது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் உள்ள 16.1% வீதமான மக்களுக்கான குடிநீரின் பிரதான ஆதாரம் பாதுகாப்பற்ற கிணறுதான் என்பதும் தெரியவந்துள்ளது. இலங்கை மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொடர்பாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வின்படி, உள்நாட்டு சனத்தொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் வளாகங்களில் பாதுகாப்பான குடிநீர் சேவையைப் பெற முடியும் என தெரியவந்துள்ளது. நகர்ப்புற மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்களும், கிராமப்புற …
-
- 0 replies
- 367 views
- 1 follower
-
-
கறுப்பு ஜூலை என்பது ஈழத்தமிழர்களின் காயாத இரத்தம் – இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவு. 83 கலவரத்தின் அத்திவாரம் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன..?? கறுப்பு ஜூலை இனக்கலவரம் இடம்பெற்று இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஈழத் தமிழர் வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி என்பது பாரிய திருப்பத்தை எற்படுத்திய நாள். தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிட்ட நாள் என்றே கூறவேண்டும். நாட்டில் மீண்டும் கறுப்பு ஜூலை சம்பவம் தோற்றம் பெறாமல் இருப்பதற்கான கட்டமைப்பை, அரசாங்கம் உருவாகியுள்ளதா என்பதே தற்போதைய காலகட்டத்தில் முதலாவது கேள்வியாக எமது கண்முன்னே எழுந்து நிற்கின்றது. 1983ஆம் ஆண்டு 23ஆம் திகதியை கறுப்பு …
-
- 4 replies
- 412 views
- 1 follower
-
-
வட்டியில்லாக் கடன்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை! விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறிப்பாக, தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் ஊடாக வட்டியில்லாக் கடன்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கு இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவை பங்களிப்பை வழங்குகின்றன. மேலும் எதிர்காலத்தில் மக்கள் வங்கியுடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 650 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டாம் கட்டமாக 10 மில்லியன் ரூபா …
-
- 2 replies
- 297 views
-
-
யுக்திய : 24 மணித்தியாலங்களில் 732 சந்தேக நபர்கள் கைது ! நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ், 732 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 719 ஆண்களும் 13 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 17 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 127 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் அனைவரும், போதைப்பொருள் குற்றம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து, 178 கிராம் 303 மில்லிகிராம் ஹெரோயின், 327 கிராம் 281 மில்லிகிராம் ஐஸ், 1,907 கிராம் 588 மில்லி…
-
- 0 replies
- 248 views
-
-
164 இலங்கையர்களுக்கு எதிராகச் சிவப்பு பிடிவிறாந்து! நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட பின்னர், தப்பிச்சென்று வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்ற 164 இலங்கையர்களுக்கு எதிராக சிவப்பு பிடிவிறாந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொலிஸாரிடம் இவ்வாறு சிவப்பு பிடிவிறாந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவிதுள்ளனர். பாதாள உலகக் குழுவின் செயற்பாடுகள், போதைப் பொருள் வர்த்தகம், போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக இவ்வாறு சிவப்பு பிடிவிறாந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வரும் நோக்கில் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு கோரப்…
-
- 0 replies
- 135 views
-