ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
சுவிட்சார்ந்தில் இருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் சிறீலங்காவில் கைது செய்யப்பட்ட இருவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று சுவிட்சர்லாந்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சிறீலங்காவுக்கு 26 பேர் நாடுகடத்தப்படவிருந்த தீர்மானம் கைவிடப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் குறித்த இருவரும் நாடுகடத்தப்பட்டனர். நாடுகடத்தப்பட்டவர்கள் சிறீலங்காவில் வைது கைது செய்யப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்புகள் குற்றம் சுமத்தி இருந்தன. எனினும் அவர்கள் இருவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டதாக, சுவிட்சர்லாந்தின் குடிவரவுத்துறை திணைக்களத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. htt…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேலதிக ஆசனம் ஒன்று மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை, இந்தியாவின் தி ரைம்ஸ் ஒப் இந்தியா நாளிதழ் வரவேற்றுள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த இரண்டு மேலதிக ஆசனங்களில் ஒன்றை முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கும், மற்றுமொரு ஆசனத்தை வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடையில் சுழற்சிமுறையில் பகிரவும் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு முஸ்லிம் பிரதிநிதி ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டமை தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான உறவினை வலுப்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=94174&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 294 views
-
-
தமிழ் மக்களின் தேர்தல் தீர்ப்பை மதித்து காணி, பொலிஸ் அதிகாரம் வழங்க வேண்டும் 04 அக்டோபர் 2013 தமிழ் மக்களின் தேர்தல் தீர்ப்பை மதித்து காணி, பொலிஸ் அதிகாரம் வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இலங்கையில் வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று, இலங்கையின் அரசு நடந்து கொள்ளும் என எதிர்பார்த்ததற்கு மாறாக, மாகாண கவுன்சில்கள் பொலிஸ், நிலம் சம்பந்தப்பட்ட துறைகளில் அதிகாரம் செலுத்த இயலாது என்றும், அவை மத்திய அரசின் நேரடிப்பொறுப்பில் கொண்டுவரப்படும் என அறிவித்திருப்பது, தேர்தல் முடிவுகளை முற்றாக நிராகரிக்கும் செயலாகும். பதின்மூன்றாவது சட்டத்திருத்த…
-
- 0 replies
- 509 views
-
-
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத படகுகள் மூலம் ஆட்களை அனுப்பி வைப்பவர்கள் எனக் கருதப்படும் மூவர் கைது 04 அக்டோபர் 2013 அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத படகுகள் மூலம் கடல் மார்க்கமாக ஆட்களை அனுப்பி வைப்பவர்கள் எனக் கருதப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு சென்ற குற்றத்தடுப்புப் பிரிவினர்; நேற்று வியாழக்கிழமை மாலை இவர்களை கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர். உள்ளூர் முகவர்களாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் திருகோணமலை, கோபாலபுரத்தைச் சேர்ந்த ஒருவரும் மட்டக்களப்பு எருவில் மற்றும் பெரியபோரதீவைச் சேர்ந்த இருவரும் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்துச் செல்லவுள்ளதாகவும் பொலிஸார…
-
- 0 replies
- 245 views
-
-
கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி ஆளும் கட்சிக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் - குணதாச அமரசேகர 04 அக்டோபர் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு தலைவலியை ஏற்படுத்தும் என தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு செத்சிறிபாயவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாணசபையில் 13ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை மூலம் கூட்டமைப்பிற்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான உறவு அம்பலமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக…
-
- 0 replies
- 407 views
-
-
அண்மையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் - எவருக்குமே நிகழக் கூடாது.(எண்பது வயதினை அண்மித்த ஒரு பெண் இதய நோயாளியின் கண்ணீர்க் கதை). இலங்கையின் தலை நகரிலே இதய நோயாளிகளுக்கு விசேட சத்திர சிகிச்சையளிப்பதில் பிரபலம் வாய்ந்த காலி வீதியில் அமைந்துள்ள ஒரு தனியார் வைத்தியசாலை - இங்கே இதயத்தில் ஒரு வால்வு பொருத்துவதன் பொருட்டு அனுமதிக்கப்பட்டு, வெற்றிகரமாக அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுத்? துரதிஷ்டவசமாக உயிர் இழந்த பரிதாபத்துக்குரிய பெண்மணியின் கதை இது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97250/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 572 views
-
-
அமைச்சரவை கையிறுழுத்தல் தொடர்கிறது – 2 அமைச்சர்கள் தமிழரசுக் கட்சிக்கு ஏனைய 2 அமைச்சுப் பொறுப்புகளும் தவிசாளர் பொறுப்பும் 3 கட்சிகள் தமக்கிடையே பகிரவேண்டும் என்பதில் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் உறுதியாக உள்ளதாக தெரிய வருகிறது. இன்று கொழும்பில் கூடிய கூட்டம் நீண்ட இழுபறிகளின் பின் முடிவுற்று நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இறுதி முடிவு கொழும்பில் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேவேளை ஜனாதிபதியின் முன் சத்தியப்பிரமாணம் எடுத்தல் என்பதில் கூட்டமைப்பின் தலைமை விருப்பம் கொண்டுள்ளதாகவும் அது குறித்து 1 மணி நேரத்திற்கும் மேலாக விவாதம் தொடர்ந்ததாகவும் தெரிய வருகிறது. இந்த சத்தியப்பிரமான விடயத்தில் கிளிநொச்சி முல்லைத் தீவு மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் …
-
- 26 replies
- 2.2k views
-
-
இலங்கை வரலாற்றில் இதுவரைக்கும் ஆண்ட எந்தவொரு அரசாங்கமும் மஹிந்த அரசாங்கம் போன்று படுமோசமாக இனவாதத்தை தூண்டவில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்தார். மேலும், மஹிந்த அரசின் ஊழல் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. எனவே இந்த மோசடிமிக்க அரசை கவிழ்க்க வேண்டிய காலம் வந்துள்ள நிலையில் எதிர்க்கட்சி இன்று பலவீனமாக காணப்படுகின்றது. எதிர்க்கட்சி பலமானதாக செயலுருவமுற்று இவ்வினவாத அரசை கவிழ்க்க அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் என்றார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில், 1915 ஆம் ஆண்டு கண்டியில் இடம்பெற்ற சிங்கள -முஸ்ல…
-
- 20 replies
- 998 views
-
-
வெளிநாடுகளுக்கு பயணிக்க விரும்புவோருக்கு உதவுவதில் மிக மோசமானதாக கருதப்படும் 10 நாட்டுகளின் கடவுச்சீட்டுகளில் இலங்கை கடவுச்சீட்டும் ஒன்றென வகைப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயண விதிகளின்போது ஆப்கானிஸ்த்தான், சோமாலியா, ஈரான், பாகிஸ்த்தான், எறிட்ரியா, பலஸ்தீனம், நேபால், சூடான், கொசொவோ மற்றும் லெபனான் ஆகிய நாட்டு மக்கள் எதிர்கொள்வது போன்ற வரையறைகளை இலங்கையர்கள் எதிர்கொள்வதாக 2013 ஹேன்லி அன்ட் பாட்னர்ஸ் விஸா வரையறைகள் அமைப்பு அறிவித்துள்ளது. நாடுகளின் பிரஜைகள் வேறு நாடுகளுக்கு பயணிப்பதற்கான சுதந்திரத்தின் அடிப்படையில் இந்த அமைப்பு தயாரித்த சுட்டி 219 நாடுகளை வரிசைப் படுத்தியுள்ளது. பின்லாந்து, சுவீடன், ஐக்கிய இராச்சியங்கள் என்பன 173புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பெற இலங்க…
-
- 1 reply
- 562 views
-
-
பிரபாகரனிற்கு பயந்த தெற்கு ஆட்சியாளர்கள் இப்போதும் அவரது வதிவிடங்களிற்கும் அஞ்சும் பரிதாபம் தொடர்கின்றது. முன்னதாக வல்வெட்டித்துறையிலுள்ள அவரது பிறந்த வீடு குடாநாட்டிற்கு செல்பவர்களது சுற்றுலா மையங்களுள் ஒன்றாகியிருந்த நிலையில் அது இரவோடிரவாக இடித்து தள்ளப்பட்டது. கனரக வாகனங்கள் சகிதம் வீட்டின் இடிபாடுகளை கூட படையினர் தடையமில்லாத வகையில் அகற்றியிருந்தனர். ஏற்கனவே விமானக்குண்டு வீச்சிலும் பின்னர் படையினராலும் சேதமாக்கப்பட்டிருந்த வீடே பின்னர் சூறையாடப்பட்டு தடையமேயின்றி இடித்தழிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முல்லைத்தீவின் புதிக்குடியிருப்பு பகுதியில் பிரபாகரன் இறுதியாக வசித்து வந்த வதிவிடத்தை இன்று இலங்கைப்படையினர் குண்டுவைத்து தகர்த்துள்ளனர். முன்னதாக சுற்றாடலில் குட…
-
- 2 replies
- 646 views
-
-
காணொளி: பீ.பீ.சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இலங்கை தொடர்பான பெட்டகம்... http://www.youtube.com/watch?feature=player_embedded&v=9CQTk8zKGDA http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9463:2013-10-03-14-25-42&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 425 views
-
-
நேபாளின் தலைநகர் காத்மண்டுவில் நடந்துவரும் தெற்காசிய ஆவணப்படக்கண்காட்சியில் திரையிடப்படவிருந்த இலங்கையைப் பற்றிய 3 குறும்படங்கள் கண்காட்சியிலிருந்து கடைசி நேரத்தில் நீக்கப்பட்டுள்ளன. கண்ணன் அருணாச்சலத்தின் புரோக்கன், தி ஸ்டோரி ஆப் ஒன் ஆகிய இரண்டு படங்களும், இலங்கை படையினர் போர் குற்றங்களைச் செய்த்தாக குற்றம் சாட்டும் கல்லம் மெக்ரேவின் நோ பயர் சோனும் விழாவில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. இலங்கை அரசின் அழுத்தம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விழாவின் ஏற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். "எங்களுக்குத் தெரிந்தவரை 3 ஆவணப் படங்களைத் திரையிடக் கூடாது என்று இலங்கை அரசு, நேபாள அரசுக்கு தனது தூதரகம் மூலம் அழுத்தம் கொடுத்துள்ளது. இதையடுத்து நேபாள அரசு இந்த கடித்த…
-
- 0 replies
- 309 views
-
-
காமன்வெல்த் மாநாட்டை எதிர்ப்பவர்கள் தமிழர்களே இல்லை! - சுதர்சன நாச்சியப்பன் சீற்றம். [Thursday, 2013-10-03 06:50:41] காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க, தமிழக அரசியல் தலைவர்கள் ஒருமித்த கருத்து தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்காதவர்கள், தமிழர்களே அல்ல என, மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.மதுரையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இலங்கை வடக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில், தமிழர் ஆதரவு பெற்ற விக்னேஷ்வரன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். "ஈழத்தமிழர்களின் தற்போதைய நிலைமையை, காமன்வெல்த் மாநாட்டில் எடுத்துக்கூறுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்பதன் மூலம், இதை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'…
-
- 0 replies
- 372 views
-
-
மத்திய மாகாண முதலமைச்சராக பிரதமர் ஜயரத்னவுடைய மகன் நியமிக்கப்படாமல் சரத் ஏக்கநாயக்கா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக கண்டி தலதா வீதியை வழிமறித்த ஜயரத்னவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். இதன்போது பெருமளவிலான ஜயரத்ன ஆதரவாளர்கள் அரசிற்கு எதிரான கோசங்களை எழுப்பியதாகவும் இதற்கான பலனை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் எனக் கூச்சலிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் இரண்டாவது உயர் பதவியான பிரதமர் பதவியை வகிக்கும் ஜயரத்ன மகிந்த குழுவிற்கு எதிரான மேற்கொண்ட வெளிப்படையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கொழும்பு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
- 0 replies
- 465 views
-
-
பிள்ளையை மருத்துவப் படிப்பிற்கு அனுப்ப கேடிக்கணக்கில் பணம்வாங்கினார்:- மாநகர முதல்வர் யோகேஸ்வரி 03 அக்டோபர் 2013 யாழ்.மாநகர முதல்வரின் ஊழல்களை ஊடகங்களுக்கு சொல்லப் போவதில்லை – "சிக்கலான காலத்தில் நாங்கள் வேலை செய்தோம் நாட்டை விட்டு தப்பியோடி தாயகம் திரும்பியவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் மையமாக EPDP மாறியுள்ளது:" யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் தனது பிள்ளையினை இந்தியாவிற்கு மருத்துவம் கற்க அனுப்புவதற்கென கோடிக்கணக்கில் வாங்கிய பணம் பற்றி எனக்கு தெரியும். மாறி மாறி கட்சித்தலைமையிடம் நல்ல பேர் வாங்க பலரையும் சிக்க வைத்துவிட்டு தப்பித்துவிடுவதும் பலரும் அறிந்ததொன்றென தெரிவித்தார் விஜயகாந்த். முதலில் நிசாந்தன் பின்னர் மங்களநேசன் தற்போது நானெ…
-
- 1 reply
- 945 views
-
-
மத்திய மாகாண அமைச்சரவையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களும் வடமேல் மாகாண சபையின் முதலமைச்சராக தயாசிறி ஜயசேகரவும் மத்திய மாகாண சபையின் முதலமைச்சராக சரத் ஏக்கநாயக்கவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள் - ஜனாதிபதி ஊடக பிரிவு) வடமேல் மாகாண அமைச்சரவையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க... வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர http://tamil.dailymirror.lk/--main/84518-2013-10-03-09-31-04.html
-
- 3 replies
- 627 views
-
-
ஆனைக்கோட்டையில் சிங்கள போலீசாருக்கு வாள் வெட்டு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிசார் இருவர் இரவு 8 மணியளவில் ஆனைக்கோட்டைப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில ஈடபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பொலிசார் மறிக்க முற்பட்ட வேளையில் பொலிசாருக்கும் குறிப்பிட்ட நபர்களுக்கும் இடையே இடம்பெற்ற இழுபறியைத் தொடர்ந்து குறித்த நபர்கள் பொலிசாரை வாளால் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சந்தியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் மீது தாக்குதலை மேற்கொண்ட இனந்தெரியாதநபர்கள் பொலிஸார் ஒருவரை வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் காயங்களுடன் யாழ். போதனா வை…
-
- 0 replies
- 507 views
-
-
சிறந்த தலைவருக்கு ரோல்மாடல் பிரபாகரன் தான் - நடிகர் பிரகாஷ்ராஜ் [Thursday, 2013-10-03 07:55:36] 'என் மகன் உயிரோடு இருந்திருந்தால், விடுதலைப்புலி பிரபாகரனை அவனுக்கு ரோல்மாடலாகக் காட்டியிருப்பேன்' என கூறியிருக்கிறீர்கள்.. பிரபாகரன் மீதான விமர்சனங்களை தாண்டியும் அவரை அவ்வளவு பிடிக்குமா?'' பிரபாகரன் மேல் எனக்கு எந்த விமர்சனமும் இல்லை என சொல்லமாட்டேன். அதே நேரம், விமர்சனம் இல்லாமல் யாருமே இருக்க முடியாது. கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் செய்த காந்திமீதுகூட விமர்சனங்களை அடுக்கின ஆட்கள் தான் நாம். ஆனால், விமர்சனங்களையும் தாண்டி கருத்து வேறுபாடுகளையும் கடந்து, யார் மக்களுக்கு உண்மையா இருந்திருக்கிறார்களோ, அவர்கள்தான் தலைவர்கள். தன் போராட்…
-
- 0 replies
- 614 views
-
-
Published on September 28, 2013-10:04 pm · No Comments வடமாகாணசபை தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு மாகாணசபையை ஏற்றுக்கொண்டது தவறு என புலம்பெயர் தமிழர்கள் சிலரும் தமிழகத்தில் உள்ள சிலரும் கண்டனக்கணைகளை தொடுத்து வருகின்றனர். மாகாணசபை தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிஷ்கரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தலுக்கு முன்னர் கோரி வந்தனர். தமிழீழ கோரிக்கையை கைவிட்டு விட்டோம் என்று சொல்ல இந்த அயோக்கியர்கள் யார் என கவிஞர் காசி ஆனந்தன் ஆவேசமாக பேசிய காணொளி ஒன்றும் இணையத்தளங்களில் பார்க்க முடிந்தது. தனிநாட்டு தமிழீழ கோரிக்கையை கைவிடுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்று புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களும் தமிழ்நாட்டில்…
-
- 49 replies
- 3.8k views
-
-
இந்தியாவின் நிலைப்பாடு, சிறிலங்கா அதிபருக்கு நன்றாகவே தெரியும் – மன்மோகன்சிங் [ வியாழக்கிழமை, 03 ஒக்ரோபர் 2013, 00:56 GMT ] [ தா.அருணாசலம் ] இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நன்றாகவே தெரியும் என்று தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங். நியுயோரக்கில் இருந்து புதுடெல்லி திரும்பும் போது, விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்திக்காதது குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “வடக்கு மாகாணசபைக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்குவதில் இந்தியா கரிசனை கொண்டுள்ளது. இந்த விடயத்தில் இந்தியாவின் கருத்து என்னவென்பது நன்றாகத் தெரியும். 13வது திர…
-
- 1 reply
- 863 views
-
-
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாலைய மாணவனான பரமானந்தம் தனுராஜ் 194 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளார். யாழ். ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலையை சேர்ந்த மாணவன் ஒருவன் யாழ் மாவட்டத்தில் முதலாவதாக வந்து இதுவே முதல் தடவையாகும். குறித்த பாடசாலையில் இம்முறை நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 23 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். http://www.virakesari.lk/article/local.php?vid=7455
-
- 19 replies
- 988 views
-
-
தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும்! - உலகுக்கு உணர்த்தவே கிழக்கில் தீர்மானம் என்கிறார் ஹசனலி 'அரசமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தைப் பலப்படுத்துவது தொடர்பான பிரேரணை கிழக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டதனூடாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கு நாம் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம்' என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசனலி தெரிவித்துள்ளார். 'சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ அரசு வழிவிட வேண்டும். இனியும் எம்மைத் தனது காலடியில் அரசு விழச் சொன்னால் கிழக்கில் மட்டுமல்ல, நாடளாவிய ரீதியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்…
-
- 1 reply
- 780 views
-
-
கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை - ஐ.நா பிரதி பொதுச்செயலரிடம் புலம்பினார் பீரிஸ் [ வியாழக்கிழமை, 03 ஒக்ரோபர் 2013, 00:38 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை தொடர்பாக, ஐ.நா பிரதிப் பொதுச்செயலர் ஜான் எலிசன் மற்றும் ஐ.நாவின் அரசியல் விவகார ஜெப்ரி பெல்மனட் ஆகியோரிடம், விசனத்தை வெளியிட்டுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். நியுயோர்க்கில் நடக்கும், ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்துக்குச் சென்ற சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், ஐ.நா பிரதிப் பொதுச்செயலர் ஜான் எலிசன் மற்றும் ஐ.நாவின் அரசியல் விவகார உதவிச் செயலர் ஜெப்ரி பெல்மனட் ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது. அவர், வடக்கு மாகாணசபை த…
-
- 0 replies
- 563 views
-
-
வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் வடக்கு மக்கள் முன்னிலையில் வட மாகாணசபை முதலமைச்சர் உள்ளிட்டோர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், அரச சார்பற்ற நிறுனப் பிரதானிகள் மற்றும் வடக்கு மக்கள் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். யாழ்ப்பாணம் கைதடியில் கோலாகலமான நிகழ்வு ஒன்று நடத்தப்பட உள்ளதாகவும் இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து பதவிப் பிரமாணம் செய்து கொள்ளப்பட உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், ஜனாதிபதி அல்லது வடக்கு ஆளுனர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது தொடர்பி…
-
- 6 replies
- 748 views
-
-
வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டியது அவசியம்: சம்பந்தன் வட புலத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டுமெனும் தனது நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. கடந்த மாதம் 21 ஆம் திகதி வடமாகாண சபைக்கென முதன் முதலாக நடத்தப்பட்டிருந்த தேர்தலில் அமோக வெற்றியைத் தனதாக்கிக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இது குறித்து தெரிவித்துள்ளதாவது, வட புலத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரின் பிரசன்னமானது சிவில் செயற்பாடுகளுக்கு உதவாத நிலையிலும் வரவேற்கப்படாத நிலையிலுமே உள்ளது. எனவே இராணுவப்…
-
- 2 replies
- 425 views
-