ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
பெரும் பட்டாளமாக உள்ள சிங்களத்தின் முப்படை உறுப்பினர்கள் தெற்கில் ஒரு சிங்களப் பெண்ணை திருமணம் செய்தால் அவர் இராணுவ சீருடையில் மணமகனாக அமரும் காட்சிகள் பொதுவாகவே காணக்கிடைக்காத ஒன்று. ஆனால் இங்கு, மாப்பிள்ளைத் தோழனான ஒரு 'குறுணி'க்குக் கூட இராணுவ சீருடை வழங்கப்பட்டமை நிச்சயமாக ஒரு செய்திக்குரியது. செய்தி ஆய்வு : தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=20332
-
- 0 replies
- 504 views
-
-
ஒட்டமாவடி முஸ்லிம் பாடசாலை மைதானத்தில் திடீரென முளைத்த புத்தர் மட்டக்களப்பு, ஒட்டமாவடி பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பாடசாலையொன்றின் விளையாட்டு மைதானத்தின் நடுவில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பிரதேச முஸ்லிம்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. முழுமையாக முஸ்லிம்கள் மட்டும் வாழும் இப்பிரதேசத்திலுள்ள பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்திலே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வேளையில் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் நடுவில் மேசையொன்றில் புத்தர் சிலை வைக்கப்பட்டு, நிழலுக்கு குடையொன்றும் நடப்பட்டுள்ளதை மறுநாள் காலையில் தாங்கள் கண்டதாகக் கூறும் பாடசாலை நிர்வாகம் வாழைச்சேனை பொலிஸில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளதாகவ…
-
- 4 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவை அடுத்து பிரித்தானியாவும், சிறிலங்காவுக்குப் பயணம் செய்யும் தமது நாட்டவர்களுக்கு பயண எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வோர், வன்முறைகள் மற்றும் ஆட்கடத்தல்களுக்குப் பொறுப்பான ஒழுங்கமைக்கப்பட்ட, ஆயுதக்குழுக்கள் சிறிலங்காவில் செயற்படுவதை மனத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்களுக்கு எதிரான வன்முறைகள் அரிதாகவே இடம்பெறுகின்ற போதிலும், அங்கு சிறார்கள் உள்ளிட்டவர்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. எனவே குறிப்பாக பெண்கள், தனியாகவோ சிறிய குழுவாகவோ பயணம் செய்யும் போது கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற…
-
- 2 replies
- 1.5k views
-
-
இவர்களை நேரடியாக தேர்தலில் போட்டியிட வைப்பதா? அல்லது பிரசாரப் பணிகள், தேர்தல் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதா? என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகிறது. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/archives/20153
-
- 4 replies
- 842 views
-
-
13ஆவது திருத்தத்தை பாதுகாப்பதற்கு அழுத்தம் கொடுப்போம், அதிகாரத்தை பகிர்வதற்காக கைகோர்ப்போம் என்ற தொனிப்பொருளில் கீழ் எதிர்க்ட்சிகளின் எதிர்ப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மகஜரில் கையொப்பமிடும் போராட்டம் இன்று புதன்கிழமை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் இடம்பெற்றறு. இதில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட பலர் கலந்துகொண்டனர். (படங்கள்: பிரதீப் தில்ருக்ஷன) http://tamil.dailymirror.lk/--main/73551-13-.html
-
- 0 replies
- 339 views
-
-
என்னிடம் மத வேறுபாடுகளோ சதி வோறுபாடுகளோ ஒரு போதும் கிடையாது. முஸ்லிம்கள் எப்போதும் எனது நண்பர்கள். சிலையை வைப்பதற்கு நான் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. இந்த புத்தர் சிலையை நான் தான் வைத்தேன் என வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி வண.நாவானே அபயவன்ஸ அலங்கார தேரர் தெரிவித்தார். வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலய மைதானத்தில் திங்கட்கிழமை திடீரென தோன்றிய புத்தர் சிலை தொடர்பாக கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்! புத்த ஜயந்தி விகாரைக்குரிய காணியில் சிலை வைப்பதற்கு நான் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. இந்த புத்தர் சிலையை நான் தான் வைத்தேன். 1960ம் ஆண்டு மார்ச் மாதம் 06ம் திகதி வி.ஜே…
-
- 1 reply
- 543 views
-
-
சென்னை: காமன்வெல்த் நாடுகளில் சிங்கள அரசு மீதான குற்றங்களை மறைக்கவும், முன்னோட்ட ஏமாற்று வேலையாக, 13ஆம் சட்டத் திருத்தத்தைப் பற்றி, ஒரு விவாதத்தை முன்வைக்கும் மோசடி வேலையில், இந்தியா - இலங்கை அரசுகள் ஈடுபட்டுள்ளன மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரலாற்றில் நடைபெற்ற கொடூரமான மனிதப் பேரழிவுகளுள் ஒன்றான ஈழத்தமிழர் இனப்படுகொலையை நடத்திய சிங்கள அரசின் போர்முகங்களில் ஒருவனான பசில் ராஜபக்சேவை புதுடெல்லிக்கு வரவழைத்து, ஜூலை 4 ஆம் தேதி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள். இல்லாத ஊருக்கு, போகாத வழியைக் காட்டுவது போல, ஈழத்தமிழரின் தேசிய இனப்பிரச்னை…
-
- 1 reply
- 788 views
-
-
13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்தியாவின் பேச்சைக் கேட்கக் கூடாது என்றும், தேசிய பிரச்சினையை சிறிலங்கர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். “இதுதொடர்பாக நாம் இந்தியாவின் பேச்சைக் கேட்கக் கூடாது. இதற்கு, இந்தியாவுடன் கொண்டுள்ள உறவுகளை இழப்பது என்று அர்த்தமில்லை. ஆனால், பிரச்சினை இருந்தால், சிறிலங்கர்களால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும். இந்தியாவினால் அல்ல. தேசியப் பிரச்சினைக்கு உள்ளகத் தீர்வு ஒன்றே காணப்பட வேண்டும். 13வது திருத்தச்சட்டம் தொடர்பான விவாதங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பாதிக்காது. இந்தியா எமது நண்பன். தொடர்ந்தும் நல்ல உறவுகளை நாம் கொண்டிருக்க வேண்டும்.…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கைக்கு விஜயம் செய்யும் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு பிரித்தானியா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் திட்டமிட்ட ஆயுதக் குழுக்கள் கடத்தல்கள் கப்பம் கோரல்களில் ஈடுபட்டு வருவதாகவும் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பிரஜைகள் மீதான வன்முறைகள் அடிக்கடி இடம்பெறுவதில்லை என்ற போதிலும், சிறுவர் பாலியல் துஸ்பிரோக சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தனியாகச் செல்லும் வெளிநாட்டுப் பெண்கள எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரஜைகளை இலக்கு வைத்து வன்முறைகள் இடம்பெறுவதில்லை என்ற போதிலும் இலங்…
-
- 0 replies
- 657 views
-
-
இந்த நாடு இங்கு வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற மூன்று இனங்களுக்கும் சொந்தமானது. இந்த அடிப்படையை மாற்றி, இந்நாட்டை சிங்கள பௌத்தருக்கு மாத்திரம் சொந்தமான நாடு என மாற்றி அமைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை, வெளியே இருந்து வந்தவர்கள் என்று கூறிவிட்டு, முழு நாட்டுக்கும் நீங்கள் ஏகபோக உரிமை கோருகின்றீர்கள். இது தவறானது. வௌ;வேறு காலகட்டங்களில், வௌ;வேறு பிரிவுகளாக வெளியிலிருந்து வந்த வரலாறு நம் எல்லோருக்கும் ஆங்காங்கே வரலாற்றில் இருக்கின்றது. ஆகவே வெளியேற வேண்டுமென்றால் நாம் எல்லோருமே வெளியேற வேண்டும். வேடர்களுக்கு நாட்டை கையளித்துவிட்டு நாம் எல்லோரும் வெளியேற வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மாத்திரம் வெளியில் இருந்…
-
- 0 replies
- 533 views
-
-
அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஜுலியா கிலார்ட்டின் பதவி பறிபோக நாமல் ராஜபக்சவும் ஒருவகையில் காரணம் என்று சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; ஜனாதிபதியின் மூத்த மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அண்மையில் உத்தியோகபூர்வமான முறையில் அவுஸ்திரேலியா முன்னாள் பிரதமர் ஜுலியா கிலார்ட்டை சந்தித்து உரையாடியிருந்தார். அதன் பின் குறுகிய காலத்துக்குள் ஜுலியா கிலார்ட் தனது பிரதமர் பதவியைப் பறிகொடுக்க நேர்ந்தது. இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்ச உத்தியோகபூர்வமான முறையில் லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியைச் சந்தித்திருந்தார். அந்தச் சந்திப்பின் பின் சிறிது காலத…
-
- 0 replies
- 365 views
-
-
13 ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பதற்கான சட்டமூலத்தை ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக ரணவக்க தெரிவித்தார். மஹரகமவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாகாண சபை முறைமையை இரத்துச் செய்யும் தேசிய ஒருங்கிணைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிப்பதற்கான சட்டமூலத்தை ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்கான பலத்தை நாம் பாராளுமன்றத்தில் வழங்கத் தயாராகவுள்ளோம். 13 ஆவது திருத்தச் சட்டம் என்பது நா…
-
- 0 replies
- 182 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு திடீரென தமது பழைய முடிவுகளை மாற்றினாலும் ஆச்சரிய படுவதற்கில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.. மேலும் அவர் தெரிவிக்கையில் 13 வது திருத்த சட்டம் அது இருக்கும் நிலையிலோ தற்போது உள்ள நிலையில் பலவீனப்பட்டாலும் அது பெயருக்காவது இருந்தாக வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்தியாவின் சிந்தனையும் செயற்பாடுகளும் அமைகின்றன இந்திய இலங்கை ஒப்பந்தம் உயிரோடு இருப்பதற்கு 13 வது திருத்தம் தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது 13 வது திருத்தத்தை நீக்கினால் அல்லது தமிழர்கள் 13 வது திருத்த சட்டத்தை வேண்டாம் என கூறுமிடத்து இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு கேள்விக்குறியான நிலைமையே உருவாகும் . இந்தியாவுடைய நலன்கள்…
-
- 0 replies
- 206 views
-
-
முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த துமிந்த சில்வா தன்னைத்தானே சுட்டுக்கொண்டார் என பொலிஸ் விஷேட அதிரடிப்படையை சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் சாட்சியமளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=20157
-
- 2 replies
- 518 views
-
-
யாழ்.மத்திய பேருந்து நிலைய சூழலில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி விக்கிரமாராய்ச்சி தெரிவித்துள்ளார். யாழ்.நகரப் பகுதிக்கு வரும் பயணிகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும் துர்நாற்றம் வீசும் விதமாக பல இடங்களில் பலர் சிறுநீர் கழித்துவிட்டு செல்கின்றனர். இது தொடர்பான முறைப்பாடுகள் யாழ். பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பொலிஸ் பிரிவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதனால் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் கைது செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை இம்மாதம் முதல் எடுக்கப்படவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி விக்கிமாராய்ச்சி மே…
-
- 15 replies
- 774 views
-
-
ஜனநாயக தேசிய கட்சி வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும் முப்படைகளின் முன்னாள் பிரதானியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=20162
-
- 1 reply
- 334 views
-
-
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடிக்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே நடப்பட்டுள்ள பேரீச்சம் பழ மரங்களை பார்வையிட்டதுடன் மரமொன்றில் ஏறி பேரீச்சம் பழங்களையும் பறித்துள்ளார். இதன்போது, காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வடக்கிலும் இது போன்ற பேரீச்சம் பழங்களை தனது அமைச்சினால் நடுவதற்கு ஆலோசனைகளை வழங்குமாறு காத்தான்குடி பிரதேச செயலாளரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது கேட்டுக்கொண்டார். பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே பேரீச்ச மரங்கள் கடந்த மூன்ற…
-
- 8 replies
- 755 views
-
-
நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அழைக்கப்படுகிறார் நவிப்பிள்ளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை கட்டுப்பாடுகளுடனேயே நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் விஜயம் மேற்கொள்ளும் இவர் இலங்கையில் இருக்கும் காலங்களில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை அவர் சந்திக்கக் கூடாது என்றும் அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளும் நவிப்பிள்ளை முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் செல்வார் எனவும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில்,…
-
- 1 reply
- 689 views
-
-
வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை கூட்டமைப்பின் கட்சிகளே முடிவெடுக்கவேண்டும்: சுரேஸ் வடக்கு மாகாண சபைத்தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை நிறுத்துவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.கிளை தீர்மானித்துள்ளமை ஆக்கபூர்வமான செயற்பாடாக அமையாது எனத் தெரிவித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபைக்கான முதலமைச்சர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து கட்சிகளும் இணைந்தே முடிவு எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாண சபைக்கான கூட…
-
- 3 replies
- 352 views
-
-
புலிகளின் முன்நாள் மூத்த தளபதிகள் ராம் - நகுலன் வட மாகாணசபைத் தேர்தலில் களமிறக்கப்படுகின்றனர்? 01 ஜூலை 2013 வடக்கு தேர்தல் களத்தில் முன்னாள் போராளிகளை நிறுத்தும் மஹிந்த அரசாங்கத்தின் நடவடிக்கையின் அடுத்த கட்டமாக மூத்த தளபதிகள் ராம் மற்றும் நகுலன் ஆகிய இருவரும் களமிறங்கவுள்ளனர். அதற்கு ஏதுவாக இதுவரை சத்தமின்றி எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது பற்றிய தகவல்கள் கூட இல்லாதிருந்த இவர்கள் இருவரும் இன்றிரவு பொலநறுவை சேனைக்குடியிருப்பு புனர்வாழ்வு முகாமிற்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டு உள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வந்துள்ளது. அவர்களிற்கு சுமார் ஒரு மாத கால புனர்வாழ்வினை அளிக்கவே கொண்டுவந்து சேர்க்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அ…
-
- 2 replies
- 476 views
-
-
வடமாகாண சபைத் தோ்தலுக்கும் ஆணி அடிப்பாரா மகிந்த சகல அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு? 02 ஜூலை 2013 வடமாகாண சபைத் தோ்தலை நடத்தாமல் சகல அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு ஒன்றை நிறுவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அலோசிப்பதாக கொழும்பு தகவ்கள் கூறுகின்றன. தோ்தலை நடத்தினால் தமிழ்த்தேசிய கூ்ட்டமைப்பு வெற்றி பெறும் என்பதனால் அரசாங்கம் இவடவாறு ஆலோசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இடைக்கால அரசு ஒன்றை நிறுவிட்டு 13ஆவது திருத்தச்சட்டத்திலும் திருத்தங்களை செய்த பின்னர் வடமாகாண சபைத் தோ்தலை நடத்துவது நல்லதென அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளும் ஜனாதிபதியஜடம் கூறியுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் குறிப்பிட்டன. இடைக்கால அரசியல் தமிழத்தேசிய கூட்டமைப்பும் உள்வாங்கப்படும் என…
-
- 2 replies
- 549 views
-
-
பாகிஸ்தான், இஸ்ரேல், பிரித்தானிய சிறப்புப்படை அதிகாரிகள் சிறிலங்காவுக்கு வந்து கொடுத்த பயிற்சி மற்றும் வகுத்துக் கொடுத்த தந்திரோபாயத்தினால் தான், 1987ல் வடமராட்சியில் சிறிலங்கா படைகளால் 'ஒப்பரேசன் லிபரேசன்' நடவடிக்கையில் வெற்றி பெற முடிந்தது. இவ்வாறு சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். “ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கை மூலம் பருத்தித்துறையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர், இந்தியா தலையீடு செய்திருக்கா விட்டால், சிறிலங்கா இராணுவத்தினால் யாழ்ப்பாண நகரத்தில் இருந்தும் விடுதலைப் புலிகளை அகற்றியிருக்க முடியும். துரதிஸ்டவசமாக நட்புநாடு ஒன்றுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தியா விடுதலைப்…
-
- 7 replies
- 942 views
-
-
கப்டன் மில்லர் நெல்லியடியில் சிங்கள படைக்கு தாக்குதல் நடத்தி கரும்புலிகள் தசாப்தத்தை உருவாக்கினார் தேசியத்தலைவர் அவர்கள் கரும்புலிகளின் தொடக்கத்துடன் கொழும்பிற்கு நடுக்கத்தை கொடுத்த வரலாற்று நாள்தான் கரும்புலிகள் நாள் யூலை-5 என்று வைகோ அவர்கள் கரும்புலிகள் தொடர்பான தனது பகிர்வில் தெரிவித்துள்ளார். கரும்புலிகளின் உன்னத தியாகத்தை உலகத்திற்கு பறைசாற்றிய நாள் யூலை-5 எத்தனையே படைஅணிகளை உலகத்தில் விடுதலை இயக்கம்கள் கட்டி எழுப்பிஇருக்கின்றன வீரம் செறிந்த போர்களை நடத்தியிருக்கின்றன மரணத்திற்கு அழைப்பு கொடுத்து சிரித்துக்கொண்டு சென்று வாழ்க்கையின் வசந்தங்கள் எதையும் தேடாது தாயக விடுதலைக்காக தங்களை அழித்துக்கொண்டார்கள் அவர்கள்தான் தலைவர் அவர்கள் உருவாக்கிய கரும்புலிகள். கொரில்லா …
-
- 2 replies
- 441 views
-
-
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் இடங்களை ஆக்கிரமித்து இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வரும் தல்செவன ஹோட்டலுக்கு வர்த்தக முகாமைத்துவம், வியாபார உத்திகள் மற்றும் தரமான பெயர்சூட்டலுக்கான சர்வதேச விருது கிடைத்துள்ளது. பிரான்சின் தலைநகர் பாரிசில் நேற்று நடைபெற்ற 17வது “International Star for Leadership in Quality Award” விருது வழங்கும் விழாவின் போதே இராணுவத்தின் தல்செவன ஹோட்டலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியாக 118 நாடுகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டன. பாரிசின் அரங்கில் Paris Etoile (Concorde La Fayette), Palais de Congress de Paris நடைபெற்ற இறுதிச் சுற்றில் விருதுக்குத் தகுதியான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. விருதுக்குப் பொருத்தமான நிறுவனங்களைத் தேர்ந்த…
-
- 3 replies
- 665 views
-
-
மதுபோதையில் இருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர், 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவுகளை, கழிவறைக் கதவு என நினைத்து திறக்க முயன்றதாக லண்டனில் இருந்து வெளியாகும் டெய்லி மெயில் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=19961
-
- 13 replies
- 1.8k views
-