ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
வவுனியாநெடுங்கேணி பிரதேச வைத்தியசாøலில் கடமைபுரிந்த ஒரேயொரு தாதி உத்தியோகத்தரும் இடமாற்றப்பட்டுள்ளார். இவ் வைத்தியசாலையில் இது வரைகாலமும் ஒரு வைத்தியரும், ஒரு தாதி உத்தியோகத்தரும் தான் சேவையாற்றி வந்தனர். இதனால் இவ் வைத்தியசாலைக்கு பெரும் ஆளணிப்பற்றாக்குறை நிலவி வந்தது. இதனைப் பலமுறை நிவர்த்தி செய்து தருமாறு கோரியும் எவ்வித நடவடிக்கைகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் இங்கு கடமைபுரியும் தாதி உத்தியோகத்தர் 2013.06.10 அதாவது நேற்று முதல் செட்டிக்குளம் வைத்திசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். இதனால் இவ் வைத்தியசாலைச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்ததுடன் வைத்திசாலையில் ஏற்படம் ஆளணிப்பற்றாக்குறைய…
-
- 0 replies
- 385 views
-
-
சிறுமியைக் கடத்திச் சென்று வல்லையில் வீசிய கும்பல்; பட்டப்பகலில் நேற்றுப் பரபரப்பு யாழ். நகர பாடசாலை மாணவியான 15 வயதுச் சிறுமி ஒருவரை நல்லூரடியில் வைத்து ஓட்டோவில் கடத்திய கும்பல், நகைகளைக் கொள்ளையடித்து விட்டு, அவரை வல்லை வெளியில் வீசி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இந்தப் பரபரப்பான சம்பவம் நேற்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது. நல்லூர் பண்டாரிக்குளத்தடியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் சிவகௌரி (வயது15) என்ற மாணவியே இவ்வாறு கடத்தப்பட்டு காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து மாணவி தெரிவித்ததாவது: எனது வீட்டுக்கு அருகிலுள்ள கடை ஒன்றில் கற்பூரம் வாங்குவதற்கு சென்றே…
-
- 3 replies
- 674 views
-
-
இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் விசேடப் பிரதிநிதிகளை நாட்டிற்குள் அனுமதிக்குமாறு அமெரிக்கா விடுத்திருந்த கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது. http://tamilworldtoday.com/?p=15672
-
- 2 replies
- 570 views
-
-
இலங்கையின் சுதந்திரத்திற்கு தமிழ் பெரியோர்களும் போராடிய சரித்திரத்தை இந்த அரச புரிந்து செயல்படவேண்டும். ஒரு இனத்தை அழித்து இன்னோர் இனம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என முரளி ரகுநாதன் தெரிவித்துள்ளார். http://tamilworldtoday.com/archives/15683
-
- 0 replies
- 458 views
-
-
வளிமண்டலவியல் திணைக்களத்தின் கவனயீனமான செயற்பாடுகளினால் இயற்கை சீற்றத்தினால் காவுகொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=15700
-
- 0 replies
- 251 views
-
-
கே. பியையோ (குமரன் பத்மநாதன்) தமிழினியையோ எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் நிறுத்துவதில்லை என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இவர்கள் இருவரும் வடமாகாண சபைத் தேர்தலில் இலங்கை அரசு தரப்பு வேட்பாளர்களாக நிறுத்தப்படலாம் என வெளிவந்த செய்திகள் தொடர்பிலேயே ஆளும் தரப்பு இவ்வாறானதொரு தீர்மானத்துக்கு வந்துள்ளது. இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தான் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார் என்றும் சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது . http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&…
-
- 0 replies
- 443 views
-
-
13ஆவது அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டாம் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. http://tamilworldtoday.com/?p=15638
-
- 0 replies
- 445 views
-
-
இந்தியா வழங்கும் வீட்டுத்திட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பில் நிரந்தரமாக இருக்கும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கும் வீடுகள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://tamilworldtoday.com/archives/15651
-
- 0 replies
- 369 views
-
-
கொழும்பில் புலிகளின் குண்டுகள்: தேடும் பணி தொடங்கியது போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளால் கொண்டு வரப்பட்ட தலா 500 கிலோ எடை கொண்ட இரண்டு குண்டுகளும், பெருமளவு ஆயுதங்களும் இன்னமும் கொழும்பு நகரப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பாதுகாப்புத் தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்தே இந்த ஆயுதங்கள் பற்றிய விபரம் தெரியவந்துள்ளது. இதையடுத்து குண்டுகளையும், ஆயுதங்களையும் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சிறிலங்கா பொலிஸாரும்,விசேட நடவடிக்கை பிரிவினரும் இறங்கியுள்ளனர். போர் நடந்த காலத்தில், கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட ஆய…
-
- 0 replies
- 439 views
-
-
கடன் பொறிக்குள் சிக்கியுள்ள இலங்கை ஆக்கம்: இதயச்சந்திரன் 2005 இல் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் , யுத்த வெற்றியை வைத்து எத்தனை காலத்திற்கு ஆட்சியை நடாத்தும் என்கிற கேள்வி பல முனைகளிலும் இருந்து எழுப்பப்படுகிறது. புதிது புதிதாக முறிகளை (bond) விற்பதும், வெளிநாட்டு நிதிச் சந்தையில் கடன் வாங்குவதுமாக இலங்கை திறைசேரியின் பொருளியல் வாழ்வு கழிகிறது. மகிந்த ராஜபக்சவின் எட்டு ஆண்டுகால ஆட்சிக்காலத்தில், உள்நாட்டு வெளிநாட்டு கடன்கள், அபிவிருத்தி என்கிற சந்தோசம் தரும் வார்த்தையால் திரையிடப்பட்டுள்ளன. கடந்த திங்களன்று திறைசேரி வெளியிட்ட ஆண்டறிக்கையில், கடன் பற்றியதான பல புள்ளிவிபரங்கள் இருக்கின்றன. 2012 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி வரையான வெளிநாட்டுக்கடன் $20.3 பில்லியன…
-
- 0 replies
- 463 views
-
-
மாநாயக்க தேரரின் கருத்து மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக இலங்கையில் கருதப்படுவதால் அரசாங்கத்தின் திட்டத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=15458
-
- 15 replies
- 1.1k views
-
-
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியவரை நம்பிய பல நூறு பேர் ஏமாற்றமடைந்துள்ளனர். வேலை கிடைக்கும். வெளிநாட்டிற்குச் செல்லலாம். விசா கிடைக்கும் என்ற ஆவலோடு வந்த வட இலங்கையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வவுனியா நகர வீதிகளில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றனர். புருணை நாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தரலாம் எனக் கூறிய வேலை வாய்ப்பு முகவர் ஒருவரை நம்பிஇ மூன்று மாதங்களுக்கு முன்னர்இ ஐம்பதினாயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைக் கட்டியதாக அவர்கள் தெரிவித்தனர். 'திங்களன்று விசா தருவதாகக் கூறி நேர் முகப் பரீட்சைக்கு வருமாறு வவுனியா ஈரப்பெரியகுளத்தில் உள்ள விருந்தினர் விடுதியொன்றிற்கு வருமாறு எங்களை அழைத்திருந்தார்கள். காலையிலேயே அங்கு சென்று காத்திருந்தோம். வருவதாகக்…
-
- 4 replies
- 661 views
-
-
குடிபோதையில் முச்சக்கர வண்டியோட்டிச் சென்ற குடும்பஸ்தரொருவர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம் நேற்று இரவு புங்குடுதீவு ஊரதீவுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் புங்குடுதீவு ௫ ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை பரமேஸ்வரன் என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பஸ்தர் சம்பவ தினமான நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு மன்னாரிலிருந்து புங்குடுதீவில் உள்ள தனது அக்காவின் வீட்டிற்கு வந்துள்ளார். குடிபோதையுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார். இதனால் வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி வீதியோரத்திலுள்ள வீட்டு மதிலுடன் மோதிக்…
-
- 1 reply
- 427 views
-
-
பிரித்தானியாவில் Cardiff எனும் இடத்தில் நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் துடுப்பாட்டம் நடைபெற்றது இப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பட்டத்தில் குறிப்பிட்ட சில இளையோர்களே கலங்கு கொண்டு தங்கள் எதிர்ப்பினைத் தெரிவிதனர். கடந்த முறை நடைபெற்ற இது மாதிரி போராட்டங்களில் பல தமிழர்கள் கலந்துகொண்டு எதிர்ப்பினைத் தெரிவித்த பொழுது அங்கு வந்த இலங்கை அணிக்கு ஆதரவானவர்கள் பயத்துடன் எதுவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மைதானத்திற்கு சென்றனர் ஆனால் இம்முறை குறைந்த அளவு எண்ணிக்கை இளையோர்களே கலந்து கொண்டமையால் அங்கு வந்த இலங்கை அணி ஆதரவாளர்கள் எதிர்ப்பும் போராட்டம் செய்த எம் இளையோர்களின் முகத்திற்கு முன்வந்து ராயபக்சா…
-
- 5 replies
- 949 views
-
-
இலங்கை பெளத்த சிங்கள ராஜ்ய நாடாக இருப்பதனால் இங்கு முஸ்லிம்களுக்கென்றொரு பல்கலைக்கழகம் சவூதி அரேபியாவின் உதவியுடன் உருவாகுவதை பொதுபலசேனா ஒரு போதும் அங்கீகரிக்கப் போவதில்லை. இந்நாட்டில் சிங்களம் தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற போதும் தனியாக ஒரு இனத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் எந்தவொரு நிறுவனத்தையும் எமது அமைப்பு ஏற்றுக் கொள்ளாது என்று பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்தார். பொதுபல சேனாவின் கிழக்கின் முதலாவது மாவட்ட மாநாடு நேற்று அம்பாறை நகரில் அம்பாறை பிரிவேனாவின் தலைவர் கிரிந்திவெல சோமரத்ன தேரர் தலைமையில் நடைபெற்றது. இம் மநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில…
-
- 2 replies
- 555 views
-
-
அவுஸ்திரேலியாவிலுள்ள ஏரியொன்றின் நீர் கடந்த 7,500 வருடங்களாக காலநிலை மாற்றத்தாலோ வேறு தாக்கங்களாலோ மாற் றமடையாத நிலையில் உள்ளதாக விஞ்ஞானிகள் ஆய்வுகளின் மூலம் அண் மையில் கண்டறிந்துள்ளனர். இந்த ஏரியிலுள்ள பளிங்கு போல் தெளிவாக உள்ளதுடன் மிகத் தூய்மையானதாகவும் உள்ளது. இந்த ஏரியை கடவுளின் குளியல்தொட்டி என மேற்படி ஆய்வை மேற் கொண்ட அடிலெய்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வர்ணித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு 50 கிலோமீற்றர் தொலைவில் இந்த ஏரி உள்ளது.இந்த ஏரியின் நீர் சுமார் 35 நாட்களுக்கு ஒரு தடவை அருகிலுள்ள பள்ளத்தாக்கிற்கு வடிந்து சென்று ஊற் றுக்களால் மீண்டும் நிரப்பப்படுவதாகவும் இத்தகைய ஏரிகள் மிக அபூர்வமானவை எனவும் எனத் தெரிவிக்கப்படுகிறது. கோடை காலத்தில் நீல நிறமா…
-
- 13 replies
- 3.1k views
-
-
சீனாவினால் இலங்கை இராணுவத்துக்கு இராணுவ தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் சீனாவுக்கான விஜயத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கொண்டிருந்த போது இதற்கான ஒப்பந்தம், சீன அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டதாக பீஜின் போஸ்ட் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. இரு நாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சுகளுக்கிடையில் உள்ள புரிந்துணர்வின் அடிப்படையில், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்க சீனா முன்வந்துள்ளதாக வெளிவிவகாரச் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார். அத்துடன், இலங்கையின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான நிதி உதவிகளை வழங்க சீனா முன்வந்துள்ளது.இதற்கான கைச்சாத்துக்…
-
- 9 replies
- 794 views
-
-
எதிர்வரும் சனிக்கிழமை கிளிநொச்சிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ 9 வீதி புனரமைப்பு நிறைவடைந்து விட்டது. எனவே ஏ9 வீதியை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தொழிலாளர்கள் ஏ-9 வீதியை புனரமைத்தனர். புனரமைக்கப்பட்ட வீதியை தற்பொழுது படையினர் பூஞ்செடிகள் மற்றும் புற்கள் நாட்டி அழகுபடுத்தி வருகின்றனர். இதனை ஒட்டியே ஜனாதிபதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன்போது கிளிநொச்சியில் மேலும் சில இடங்களையும் அவர் சென்று பார்வையிட உள்ளார் எனவும் தெரியவருகிறது ஏ-9 வீதி யுத்தத்தினால் தொடர்ந்து போர்க்களமாக இருந்த தெரு. சந்திரிக்கா அரசு இந…
-
- 2 replies
- 732 views
-
-
படகில் பயணித்த 55 புகலிடக் கோரிக்கையாளர்களும் உயிரிழந்திருக்க்க் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=15355
-
- 2 replies
- 600 views
-
-
தமிழக மக்களும், தமிழ்நாடு அரசும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த பின்னரும் திருட்டுத்தனமாக தமிழ்நாட்டில் சிங்கள இராணுவத்தினருக்கு மத்திய அரசு பயிற்சி கொடுப்பது மன்னிக்க முடியாத துரோகமாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு நாளும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அன்றாட தொடர் நிகழ்ச்சியாகிவிட்டது. இத்தகைய சூழலில் இலங்கை இராணுவத்தின் விங் கொமாண்டர் பண்டார தச நாயகவுக்கும், மேஜர் ஹரிசந்திராவுக்கும் கடந்த மே மாதம் 27 ஆம் திகதியில் இருந்து குன்னூர் வெலிங்டனில் இந்திய இராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழக மக்களும் - தமிழ்நாடு அரசும் க…
-
- 6 replies
- 534 views
-
-
வடக்கில் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன - பாஜக வடக்கில் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றமையை நாம் ஊர்ஜிப்படுத்திக் கொண்டுள்ளோம். இவ்விடயம் தொடர்பில் மத்திய அரசை தெளிவுபடுத்துவதுடன் எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோரிடம் எடுத்துரைப்போம் என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாரதீய ஜனதாக் கட்சியின் பேச்சாளரும் பிரதி தலைவருமான ரவிசங்கர் பிரசாத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கூறுகையில், இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாரதீய ஜனதாக்…
-
- 5 replies
- 654 views
-
-
நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் மூத்த அரசியல்வாதியும் அரசியல் பட்டறிவுள்ள இரா.சம்பந்தன் கருத்துக்களை முன்வைப்பது அவசியமாகும் என தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=15484
-
- 3 replies
- 420 views
-
-
சுதந்திரபுரப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவுநாள்! 10.06.1998 அன்று வன்னியில் முல்லைத்தீவு கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரபுரம் என்ற கிராமத்தின்மீது சிங்களப்படையால் தாக்குதல் நடத்தப்பட்டு அப்பாவி பொதுமக்களை கொத்துக்கொத்தாக அழித்தது. அதுவரை அக்கிராமம் எவ்வித தாக்குதலுக்கும் ஆளாகவில்லையென்றுதான் நினைக்கிறேன். யுத்த முனையிலிருந்து நன்கு பின்னுக்குத் தள்ளியிருந்த அழகிய அமைதியான கிராமம். அன்று காலை சிங்கள வான்படைக்குச் சொந்தமான இரு கிபிர் விமானங்கள் அக்கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தின்மீது குண்டுகள் போட்டன. அவை தாண்டவமாடி முடிந்து போனதும் அம்பகாமத்தில் நிலைகொண்டிருந்த ஜெயசிக்குறு படையினர் ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தின்மேல் தொடர்ச்சியான எறிகணைத் த…
-
- 10 replies
- 590 views
-
-
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர்களில் 14 பேரின் சடலங்கள் இன்று காலி, அம்பலாந்தொட- அவுன்கல கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட மீனவர்களின் சடலங்கள் பலபிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை இதுவரை காலநிலையின் சீற்றத்தால் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் இதில் 38 மீனவர்கள் அடங்குகின்றனர். இந்நிலையில் மேலும் 30க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக நம்பப்படுவதோடு காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இம்மீட்புப் பணியில் விமானப்படையினரும் ஈடுபட்டுவருகின்றனர். http://www.virakesari.lk/article/local.php?vid=5164
-
- 0 replies
- 375 views
-
-
வடக்கின் அபிவிருத்தி பணிகளுக்கு தற்போது பங்களிப்பு செய்து வரும் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. என்ற குமரன் பத்மநாதன் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என நம்ப தகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவித்தன. அவருடன் தேர்தலில் போட்டியிடுவார் எனக் கூறப்பட்ட புலிகளின் முன்னாள் மகளீர் துறை பொறுப்பாளர் தமிழினி உள்ளிட்ட மூன்று முன்னாள் புலி உறுப்பினர்களை தேர்தலில் களமிறக்க எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற பின்னர், தமிழினி வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவார் என முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன. எனினும் கே.பி. தமிழினி ஆகியோர் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என பாதுகாப்பு புலனாய்வு பிரிவினர் தகவல்களை கண்டறிந்துள…
-
- 0 replies
- 457 views
-