ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143450 topics in this forum
-
12 வயது பாலகன் பாலச்சந்திரனை படுகொலை உலகயே அதிரச் செய்துள்ளது. குறிப்பாக மாணவர்களை வெகுவாகப்பாதித்துள்ளது. லயோலா கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இலங்கையில் நடைபெற்றது திட்டமிட்ட தமிழினப்படுகொலை, என்பதை ஐ.நா அவை அங்கீகரிக்க வேண்டும். இவ்வினப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட்டு இனக்கொலையாளிகளை தண்டிக்க வேண்டும். ஈழத் தமிழர்கள் தங்கள் அரசியில் உரிமைகளை தாங்களே தீர்மானிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் முன்மொழிந்து தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேறிய, இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை இந்திய அரசு நிறைவேற்றிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை வலியுறுத்தி மாணவர்கள் பட்டினிப்ப…
-
- 1 reply
- 503 views
-
-
மாணவர்களின் இந்த போராட்டம் புனிதமானதுதான் அதற்க்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று சொல்லலாம் ஆனால் அவர்களுடைய போராட்டத்தை அரசியல் வழியாக எடுத்து சென்று விரிவுபடுத்தலாம் அல்லவா, இதை செய்யாமல் உண்ணாவிரத மேடைக்கு வருவதாலும் போராட்டகாரர்களுடன் அமர்ந்து பேசுவதாலும் யாருக்கு என்ன கிடைக்க போகிறது என்ற கேள்வியை நமக்குள் எழுப்பி பார்க்க வேண்டும்.., மூன்று நாட்களாக தொடரும் அவர்களது உண்ணாவிரத போராட்டம் மற்ற ஊர் மாணவர்களிடம் இன்னும் கொண்டு செல்லாதது ஏன் ?? செய்தி ஊடகங்கள் எடுத்து செல்லவில்லை என குற்றம் சொல்லி அரசியல் வாதிகள் தப்பலாம் ஆனால் facebook twitter மூலம் ஆட்சி மாற்றமே எற்படுத்திய வரலாறு இவ்வுலகில் உண்டு என்பதை அவர்கள் மறக்க கூடாது.., போராட்டம் நடக்குமிடத்திற்கு சென்று ஆத…
-
- 0 replies
- 631 views
-
-
யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளைச் சேர்நத பகுதிகளில் பொலிஸ் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில் 163பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரத்ன தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவுகளில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 163 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன. இதன்படி குடிபோதையில் கலகம் விளைவித்த 2 பேரும், அடித்துக்காயப்படுத்தியமை தொடர்பில் 40 பேரும், பணமோசடி தொடர்பில் ஒருவரும் , சந்தேகத்தின் பேரில் 24 பேரும் , காசோலை மோசடி தொடர்பில் ஒருவரும், வீதி விபத்தில் ஒருவரும், பொது இடங்…
-
- 0 replies
- 352 views
-
-
ஜனாதிபதி மஹிந்தவை கொலை செய்ய தமிழ்நாட்டில் சதித்திட்டம்! [saturday, 2013-03-09 21:45:06] தமிழ்நாட்டில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கொலை செய்யும் சதித் திட்டம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வைத்து இந்த சதித் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மதுரை சட்டத்தரணி சங்கத் தலைவர் ரமேஸ் குமார் என்பவரினால் இந்த சதித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியை கொலை செய்வதற்கு ஒரு பில்லியன் ரூபா வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாண தமிழ் ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்ததாக இராணுவப் புலனாய்வுப் பிரிவு தெரிவித…
-
- 4 replies
- 846 views
-
-
வள்ளத்தில் சென்று கடலில் மூள்காமல் எப்படிப் பாதுகாப்பாக அவுஸ்திரேலியா சென்று குடியுரிமை பெறுவது என்ற இரகசியம் முரளிக்குத் தெரிந்திருக்கிறது. தகவல் வேண்டியவர்கள் அவருடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்.
-
- 1 reply
- 646 views
-
-
மகிந்த, ரணில் திடீர் சந்திப்பு! - எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பெரும் சந்தேகம்!! சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் அலரிமாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை திடீர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் சிறிலங்கா சபாநாயகர் சாமல் ராஜபக்ச, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ஜெனிவா…
-
- 2 replies
- 1k views
-
-
அதிகரித்துவரும் 13வது திருத்தச் சட்டத்தின் மீதான கரிசனை! யதீந்திரா ஜெனிவா தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில், பிறிதொரு விடயமும் மெதுவாக மேலெழுந்திருக்கிறது. ஜெனிவா பற்றிய விவாதங்களுக்கு நடுவே இது தெரிவதால், பெரியளவில் எவரது கவனத்தையும் பெற்றிருக்கவில்லை. அந்த விடயம் - இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச் சட்டம் தொடர்பானதாகும். ஜெனிவா பற்றிய விவாதங்களுக்கு நடுவே இது ஏன் குறிப்பாக வெளித்தெரிகிறது. இதற்கும் அமெரிக்கா ஜெனிவாவில் கொண்டுவரவுள்ள பிரேரணைக்கும் உள்ள தொடர்பு என்ன? சில தினங்களுக்கு முன்னர் இது அமெரிக்க நாடாளுமன்றத்திலும் ஒலித்திருக்கிறது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பி…
-
- 4 replies
- 2.4k views
-
-
ராஜபக்சே ,சோனியா ,மன்மோகன் சிங் ஆகியோருக்கு மலேசியாவில் இறுதிச்சடங்கு [படங்கள்] இன்று மலேசியாவில் தமிழ் மக்கள் நுதனமான போராட்டத்தில் ஈடுபட்டனர் .இலங்கை தமிழினத்தை திட்டமிட்டு படுகொலை செய்தத மகிந்த ராஜபக்ச ,சோனியா காந்தி ,மன்மோகன் சிங் , பான்கிமூன் ஆகியவர்களின் உருவப் பொம்மைகளை தீயிலிட்டு அவர்கள இறந்ததாக சடங்குகள் செய்து கடற்கரையில் அவர்களின் அஸ்தியை கடலில் கரைத்து இறுதி சடங்கை செய்துள்ளனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13268:malesiya-news&catid=37:india&Itemid=103 படங்களை அழுத்தி பெரிதாக பார்க்கவும்.
-
- 0 replies
- 910 views
-
-
இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை கோரியும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும், லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டுவரும் காலவரையற்ற உண்ணாவிரதம் 3-ஆவது நாளாக தொடர்கிறது. இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும், சர்வதேச விசாரணை கோரியும் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த காலவரையற்ற உண்ணாவிரதம் 3-ஆவது நாளாக இன்றும் நீடிக்கிறது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அவர்களை, பழ நெடுமாறன் ,வைகோ , சீமான் , கோவை ராமகிருஷ்ணன் , மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதர…
-
- 4 replies
- 927 views
-
-
[இலண்டன் (London)] – தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்ரீரீஈ) என சந்தேகிக்கப்பட்ட உறுப்பினர்களையும் அதன் ஆதரவாளர்களையும் துன்புறுத்துவதற்கு இலங்கையின் ஆயுதப் படைகள் பாலியல் வல்லுறவையும் ஏனைய பாலியல் வன்முறைகளையும் பிரயோகித்து வந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு (Human Rights Watch)இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. read More இலங்கை: தமிழ் கைதிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாதல் சிறையில், அரசியல் நோக்குடனான பாலியல் துன்புறுத்தல்கள் போர்க் காலம் முதல் தொடர்கின்றன. February 26, 2013 “இலங்கையின் பாதுகாப்புப் படைகள் கூறவியலாத எண்ணிக்கை அளவுக்கு சிறையில் தமிழ் ஆண்களையும் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி சித்திரவதைக்கு உட்படுத்…
-
- 0 replies
- 405 views
-
-
அமெரிக்கா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை குற்றச்சாட்டு 09 மார்ச் 2013 அமெரிக்க பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பல நாடுகள் எதிர்பை வெளியிடுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் 16 பொதுமக்களை அமெரிக்க படைவீரர் ஒருவர் கொலை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை கண்டு அஞ்சப் போவதில்லை என …
-
- 4 replies
- 709 views
-
-
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உள்ளூர் பத்திரிகை ஒன்றின் அலுவலக செய்தியாளர் எஸ்.ஸ்ராலின் என்பவர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கொக்குவில் உள்ள தனது வீட்டுக்கு மதிய உணவுக்காக சென்று அலுவலகம் நோக்கி துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த போது, மோட்டர் சைக்கிளில் வந்த நபர்கள் இவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த செய்தியாளரை வீதியில் சென்றவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். …
-
- 3 replies
- 436 views
-
-
'தீர்மானத்திலுள்ள வார்த்தைகளே இந்தியாவின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும்' புதன்கிழமை, 06 மார்ச் 2013 23:33 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கின்ற தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக உள்ளடக்கப்படுகின்ற வார்த்தைகளே இந்தியாவின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவிருக்கின்ற தீர்மானத்தை ஆதரிக்குமாறு தமிழக கட்சிகள் மற்றும் அமைப்புகள் கோரிக்கை விடுத்துவருக்கின்ற நிலையிலேயே இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60167-2013-03-06-18-04-59.html Wordi…
-
- 21 replies
- 1.3k views
-
-
துமிந்த சில்வா விரைவில் அரசியலில் களமிறங்குவார்? 10 மார்ச் 2013 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விரைவில் அரசியலில் களமிறங்குவார் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 8ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முன்னான் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப்பட்டதுடன், துமிந்த சில்வா படுகாயமடைந்திருந்தார். பாரத கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக துமிந்த சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.படுகாயமடைந்த துமிந்த சில்வா கடந்த வாரம் வரையில் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாட…
-
- 1 reply
- 401 views
-
-
இலங்கை நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து தொடர்ந்தும் கேள்வி எழுப்பப்படும் - பிரித்தானியா 10 மார்ச் 2013 இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்கள் தொடர்பில் தொடர்ந்தும் கேள்வி எழுப்பப்படும் பிரித்தானியா தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைத்தல் மற்றும் அரசியல் தீர்வுத் திட்டம் போன்ற விடயங்கள் குறித்து தொடர்ந்தும் பிரித்தானியா வலியுறுத்தும் என குறிப்பிட்டுள்ளது. யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கம் மற்றும் புனரமைப்பு நடவடிக்ககைள் குறித்து இலங்கை அரசாங்கம் கனிசமானளவு சவால்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளது. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் எவ்வாறான பிரதிநிதித்துவத்தை செய்வ…
-
- 0 replies
- 448 views
-
-
மட்டக்களப்பில் 'எச்சரிக்கை' துண்டு பிரசுரம் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013 11:04 மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் எச்சரிக்கை எனும் தலைப்பிட்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அந்த துண்டு பிரசுரங்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவே விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த துண்டுப்பிரசுரங்களுக்கு திராவிட சேனை எனும் அமைப்பு உரிமை கோரியுள்ளது. மட்டக்களப்பு நகர் மற்றும் ஏறாவூர் உள்ளிட்ட பல பிரதேசங்களின் இந்த துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.குறித்த துண்டுபிரசுரத்தில், "இஸ்லாமிய நாடுகளின் ஆதரவுடன் இலங்கை முஸ்லிம் அரசியல் வாதிகளின் வழிநடத்தலுடன் இலங்கையை எதிர்காலத்தில் இஸ்லாமிய நாடாக மாற்றும் திட்டத்தின் முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தை கிழக்கிஸ்தா…
-
- 0 replies
- 736 views
-
-
அமெரிக்காவின் தீர்மானம் குறித்து ஆராய்வதற்கு விசேட குழு நியமனம் 10 மார்ச் 2013 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உத்தேச தீர்மானம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. நகல் தீர்மானம் ஆராயப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். தீர்மானம் தொடர்பில் ஆராய்ந்து குறித்த குழு பரிந்துரைகளை முன்வைக்கும் எனவும், அதன் அடிப்படையில் அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் உத்தேச தீர்மானத்தில், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், மனித …
-
- 0 replies
- 467 views
-
-
சைபர் தாக்குதல் - தடுக்கும் பயிற்சியில் சிறீலங்கா சிறீலங்கா மீதான கணனி சைபர் தாக்குதல் குறித்து தெளிவுபடுத்த விசேட கருத்தரங்குகள் நடத்தப்போவதாக சிறீலங்கா அரச தரப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவகத்தின் கீழ் இயங்கி வரும் கணனி அவசரப் பிரிவு இந்த கருத்தரங்குகளை ஒழுங்கு செய்துள்ளது. முதல் கட்டமாக சிறீலங்கா அரசாங்க இணைய தளங்களை நடாத்துவோருக்கு விசேட தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட உள்ளன. சைபர் தாக்குதல்களிலிருந்து எவ்வாறு இணைய தளங்களை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து இதன்போது விளக்கமளிக்கப்பட உள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் இந்த கருத்தரங்கு நடாத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இணைய தளங்களை எவ்வாறு பராமரித்தல்இ நுழைவுச் சொ…
-
- 0 replies
- 421 views
-
-
மனித உரிமைகள் விவகாரம் வெளிவிவகார அமைச்சின் கீழ்? ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013 01:55 மனித உரிமைகள் விவகாரத்தை வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. மனித உரிமைகளுக்கென தனியான அமைச்சு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த விடயதானங்கள் ஒரு அமைச்சின் கீழ் கொண்டுவரப்படாத நிலையில் அந்த விடயதானங்களுக்கு பொறுப்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க செயற்பட்டார். இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் முகம் கொடுத்துகொண்டிருகின்ற சவால்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு உடனுக்கு உடன் உத்தியோகபூர்வமாக பதிலளிக்கும் வகையிலே மனித உரிமை விவகாரம் வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வருவ…
-
- 1 reply
- 393 views
-
-
பேச்சுவார்த்தை தோல்வியால் ஆயுதம் கையில் எடுத்தோம் - பாதுகாப்பு செயலர் March 9, 2013 09:07 pm சமாதான பேச்சுவார்த்தை மூலம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதனால் வலுவாக நின்று இராணுவத்தினர் யுத்தத்தின் மூலம் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். காலி - பிலான மெத்செவன பௌத்த மத்திய நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 30 வருட யுத்தம் முடிவுக்கு வந்து நாடு தற்போது அபிவிருத்தியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பாதுகாப்பு செயலாளர் இங்கு கூறினார். http://www.adaderana.lk/tamil/news.php?nid=36094 இது ஐ.நா. மனித …
-
- 2 replies
- 560 views
-
-
ஹலால் சான்றிதழ் இடைநிறுத்தம்? ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013 01:43 ஹலால் சான்றிதழ் வழங்குவதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.சகல தரப்பினரின் இனக்கப்பாட்டுடனேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அந்த உயர்மட்ட வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.இது சம்பந்தமான தரப்பினருடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ பேச்சுவார்த்தைகள் நடத்தியதன் பின்னரே இவ்வாறான தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.மதத்தலைவர்கள், இலங்கை வர்த்தக சபை பிரதிநிதிகள், முஸ்லிம் வியாபாரிகள் மற்றும் ஜம்இயத்துலமா முக்கியஸ்தர்கள் பங்குபற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.ஹலால் சான்றிதழ் விநியோகிக்கும் ந…
-
- 1 reply
- 361 views
-
-
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஈழத் தமிழருக்கு எதிராக செயற்படும் தமிழக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கட்சியினரால் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இன்று மதியம்' திருச்சி ரயில் நிலையம் அருகே ஒன்று திரண்ட காங்கிரஸ் கட்சியினர், சுப்பிரமணியன சுவாமிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தமிழருக்குத் துரோகம் செய்யும் சுப்பிரமணிய சுவாமியை தமிழ்நாட்டுக்குள்ளேயே அனுமதிக்கக் கூடாது எனவும் இந்தியாவில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல்கள் எழும் நிலையில் துரோகம் செய்து வரும் அவரை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் எனவும் அதன்போது காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் சுப்பிரமணியன் சுவாமியின் உருவப் படத்தை 'துரோகி ஒழிக' என்ற முழக்கங்…
-
- 6 replies
- 1k views
-
-
ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம்: கைவிடக்கோரினார் கருணாநிதி - மாணவர்கள் கொந்தளிப்பு 09 மார்ச் 2013 இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 9 பேர் 2வது நாளாக இன்றும் உண்ணாவிரதம் இருக்கின்றனர். போலீஸ் கெடுபிடியை அடுத்து கோயம்பேட்டில் உண்ணாவிரதத்தை மாணவர்கள் இன்று தொடர்கின்றனர். இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை மற்றும் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டு வரும் சாகும் வரை உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியிருக்கிறார். கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தாய்த்தமிழகமே ஒன்றாகத் திரண்டுள்ளது என்பதை நிரூபிக்கும…
-
- 10 replies
- 657 views
-
-
ஜெனீவாவில் தொடங்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபைமனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை எதிரான தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்கிறது. இலங்கையின் போர் குற்றங்களுக்கு எதிராகவும், போருக்கு பின் மேற்கொண்டுள்ள நிவாரண நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்றதை கண்டித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, அந்த குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மறுத்தது. இந்நிலையில் போருக்கு பின் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஐ.நா. குழு ஆய்வு மேற்கொண்டதில் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதன் மூலம் இலங்கை மனித உரிமை மீறலில் ஈட…
-
- 9 replies
- 1k views
-
-
( ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐநா மனித உரிமைகள் குழுவின் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள தீர்மானத்தின் வரைவு - http://www.srilankabrief.org/2013/02/first-draft-of-us-resolution-promoting.html?m=1 என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டிருக்கும் ஆங்கில வரைவின் தமிழாக்கம் ) ஐ.நா மனித உரிமைக் குழு ஐ.நா பேரவையின் அறிக்கையின் வழிகாட்டுதலின்படியும்,சர்வதேச மனித உரிமைகள் குறித்த அதன் பிரேரணைக்கு ஏற்பவும், அது தொடர்பிலான இன்னபிற சர்வதேச ஒப்பந்தங்களுக்கேற்பவும், இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பேற்றலுக்கான ஐநா மனித உரிமைகள் குழுவின் தீர்மானம் 19/2 ஐ நினைவுகூர்ந்து , தனது குடிமக்களின் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதும் உத்தரவாத…
-
- 20 replies
- 2.3k views
-