ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143441 topics in this forum
-
இலங்கைக்கு ஹலால் ஒரு புற்று நோயாகும். உலமா சபை ஹலால் ஊடாக சாதாரண முஸ்லிம்களின் உரிமைகளை மீறிச்செயற்படுவது மாத்திரமின்றி அடிப்படைவாத பயங்கரவாதத்தையும் பரப்புகின்றது. எனவே இதனை இல்லாதொழிக்க வேண்டியது கட்டாயமென்று பொதுபல சேனா வலியுறுத்தியுள்ளது. மக்கா சென்று நாடு திரும்பும் முஸ்லிம்கள் சவூதியினால் அடிப்படைவாதத்தையும் இலங்கையில் பரப்புகின்றனர். முழு உடம்பையும் கறுப்பு போர்வையில் மூடிக்கொண்டு செல்ல இலங்கை ஒன்றுமே பாலைவனம் அல்ல என்றும் அவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுகையில், உலமா சபை ஹலால் சான்றிதழ் மூலம் நாட்டில் பயங்கரவாதத…
-
- 2 replies
- 518 views
-
-
By M.D.Lucias 2013-02-21 16:43:10 லங்கா ஈ நியூஸ் இணையத் தளத்தின் செய்தியாளரும் கேலிச் சித்திரம் வரைபவரும் பத்தியெழுத்தாளருமான பிரகீத் எக்நெலிகொட காணாமற்போய் ஆயிரத்து 124 நாட்கள் நிறைவடைந்திருப்பதை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு கடிதம் ஒன்றை பிரகீத் எக்நெலிகொட மனைவி சந்தியா எழுதியுள்ளார். இக்கடிதத்தை கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா. தூதரகத்தில், பிரகீத் எக்நெலிகொடவின் மனைவி சந்தியா ஒப்படைத்தார். அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, படப்பிடிப்பு: ஜே. சுஜீவகுமார் 'எனது கணவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி காணாமல் போயிருந்தார். சரத் பொன்சேகா மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் போட்டியிட்ட ஜனாதிபதித் தே…
-
- 2 replies
- 262 views
-
-
அனைத்துலக சட்டமீறல்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரியும், சிறிலங்காவின் மனிதஉரிமை மீறல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மன்னார் ஆயர் மற்றும் வடக்கு,கிழக்கை சேர்ந்த 132 கிறிஸ்தவ குருமார் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்று, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. “அரசியல்தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனவர்கள் குறித்த விவகாரங்களைக் கையாளும் ஆணையாளரை நியமித்தல், சிறிலங்கா இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவித்தல், ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள், இறந்தவர்கள், காணாமற்போனவர்களை நினைவுகூருதல் என்பன உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கியமான பரிந்துரைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதுடன், மீறப்படுகி…
-
- 12 replies
- 895 views
-
-
இந்தியா பிரபல்யமான நாடு இலங்கையோ சிறியத்தீவு இந்த இருநாடுகளுக்கும் இடையில் தீ மூட்டுவதற்கு சிலர் முயற்சிகின்றனர் என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாரளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட ஊடகவியலாளர்கள எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். முன்னதாக கேள்விகளை எழுப்பிய ஊடகவியலாளர்கள், இந்திய மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகவும் அவர்களின் மீன் பிடி உபகரணங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமன்…
-
- 1 reply
- 562 views
-
-
"உலகத் தமிழர்கள் இலங்கை மீது போர்ப் பிரகடனம் செய்ய வேண்டும்" ==================== ஒன்றரைக் கோடி சிங்களவர்களைக் கொண்ட இலங்கை பத்துக்கோடி தமிழர்களைப் பின்புலமாகக் கொண்ட ஈழத் தமிழர்கள் மீது நடாத்திய இன அழிப்பு யுத்தத்தின் ஆதாரங்களாக இதுவரை எத்தனையோ பதிவுகளும், ஒளிப்படங்களும், புகைப்படங்களும் வெளிவந்திருந்த போதும், அவை அனைத்தும் யுத்த களம் சார்ந்த காட்சிகளாகவே பலராலும் நோக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சனல் 4 தொலைக்காட்சியும், இன்டிப்பென்டன்ற் பத்திரிகையும் வெளியிட்ட இரு புகைப்படங்களும், ஏற்கனவே வெளிவந்திருந்த ஒரு புகைப்படமும் சிங்கள தேசத்தின் உச்சக் கொடுரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. உலகமெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் கொதித்துப் …
-
- 4 replies
- 599 views
-
-
போர்க் குற்றங்களுக்கான புதிய சான்றுகள் - சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்குமா? [ வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2013, 08:47 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காப் படைகளின் கண்மூடித்தனமான தாக்குதலில் தமிழ்ப் பெண்கள் மற்றும் சிறார்கள் படுகொலை செய்யப்பட்டமை, மற்றும் ஏனைய திட்டமிட்ட படுகொலைகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் படுகொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்கப் போதியதாக இல்லையா. இந்நிலையில், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான புதிய சான்றுகளைக் கொண்டாவது சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்குமா? சிறிலங்காவில் இடம்பெற்ற …
-
- 2 replies
- 431 views
-
-
பாலச்சந்திரன் கொலையும் தவணை முறை உணர்ச்சியும் : கலாதரன் இன்று எமக்குத் தேவை அடிப்படைவாத அடையாளங்களா அன்றி ராஜபக்ச பாசிசத்தையும், பேரினவாதிகளையும் பலவீனப்படுத்தும் உடனடி நோக்கமா என்ற கேள்விக்குப் பதில் கிடைத்தால் நண்பர்களை சுலபமாக அடையாளம் கண்டுவிடலாம். பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சரணடைந்த பின்னரே கொல்லப்பட்டது குறித்த காட்சிகளின் பின்னர், ஜெயலலிதா, கருணாநிதி, சீமான், வை.கோபாலசாமி, ராமதாசு போன்ற அதே முகங்கள் மறுபடி களத்தில் குதித்து நாளை மரணித்துப் போகும் சீசன் வியாபாரத்திற்கு வந்துவிட்டார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒன்றுமே ஆகிவிடாத உண்ர்ச்சி வயப்படுத்தலுக்கு இவர்கள் அனைவரையும் உள்ளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரச பாசிஸ்ட் ராஜபக்சவ…
-
- 7 replies
- 1k views
-
-
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். யதாதர்த்தமானதும், தேசிய ரீதியானதுமான பொறிமுறைமை ஒன்றின் மூலம் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் குறித்த முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட வேணடுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பிரித்தானியாவின் சனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சி குறித்து பான் கீ மூன் அறிந்து கொண்டுள்ளதாக, அவரது பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், குறித்த வீடியோ காட்சி தொடர்பில் எவ்வித கருத்துக்களும் தற்போதைக்கு வெளியிடப்ப போவதில்லை என அவர் குறப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கை யுத்தம் தொடர்பில் இறுதியாக ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்ட அறிக்…
-
- 5 replies
- 607 views
-
-
அம்பாறை மாவட்டம் சேனாநாயக்க சமுத்திர சரணாலாய பகுதியில் அதிர்வு பிப் 22, 2013 அதிர்வுகளின் போது ஏற்படுகின்ற ஒலி அலைகளை அடையாளம் கண்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவிக்கின்றது. சேனாநாயக்க சமுத்திர சரணாலாய பகுதியிலிருந்து இந்த ஒலி அலைகள் எழுவதாக பணியகத்தின் தலைவர் என். பீ். விஜயானந்த குறிப்பிட்டார். வடினாகலயை அண்மித்த பகுதிகளில் நில அதிர்வுகளின் போது ஏற்படுகின்ற ஒலி அலைகள் அதற்குரிய மானிகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் இயற்கையான நில அதிர்வுகளின்போது எற்படுகின்ற ஒலி அலைகளை மானிகளில் அளவிட முடியாது எனவும் அவர் கூறினார். இதன் காரணமாக இந்த நில அதிர்வுகள் மனித செயற்பாடுகளின் பிரதிபலனாக இருக்கலாம் என்ற சந்தேக…
-
- 1 reply
- 544 views
-
-
ஜெனீவா அமர்வுகள் குறித்த அரசாங்கத்தின் திட்டங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்கவுகள் குறித்த உள்நாட்டு வெளிநாட்டு சவால்களை எதிர்நோக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். சகலவிதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=76500&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 235 views
-
-
சனல்-4 திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல்: அரசு வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2013 00:45 -அழகன் கனகராஜ் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்படம் தாங்கிய ஒளிநாடாவை முழுமையாக நிராகரிப்பதாக தெரிவித்த அரசாங்கம் இது திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலாகும் என்றும் தெரிவித்துள்ளது. ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாரளருமான கெஹெலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், இலங்கையின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையிலேயே இந்த சனல்-4 நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சப…
-
- 0 replies
- 407 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருடைய மகன் பாலச்சந்திரன் அவர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமைக்கான ஆதாரங்களை பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இப்படங்கள் பாலச்சந்திரன் மோதல் நடைபெற்றபோது இடையில் சிக்கி இறக்கவில்லை என்பதனையும் மாறாக சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னரே சுட்டுக் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதனை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது. பன்னிரண்டு வயதுப் பாலகனான பாலச்சந்திரன் போராளியல்ல அவர் ஒரு பொது மகன் என்பது உலகம் அறிந்த விடயம். கைதியாக உள்ள ஓரு போராளியைக் கொல்வதே சர்வதேச சட்டத்தின் கீழ் ஓரு மோசமான குற்றமாக இருக்கும் நிலையில், தாம் கைது செய்து வைத்திர…
-
- 0 replies
- 306 views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொல்லப்படுவதற்கு முன்பாக இராணுவப் பதுங்குகுழி போன்று காட்சியளிக்கும் ஓர் இடத்தில் பிஸ்கட் சாப்பிடும் படத்தை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம், இலங்கை அரசைத் தண்டிக்கத் தவறிய ஐ.நாவுக்கு தற்போது அதற்கான சந்தர்ப்பம் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது என்றும் இதை ஐ.நா. சரியாகப்பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. பாலச்சந்திரன் குறித்த போர்க்குற்ற ஆதாரம் மட்டுமன்றி இன்னும் அதிர வைக்கும் பல ஆதாரங்கள் தம்மிடம் இருக்கின்றன என்றும் சனல் 4 அதிரடியாக அறிவித்துள்ளது. சனல் 4 ஆவணப்பட இயக்குனர் கல்லும் மெக்ரே, தமிழக தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரிட்டனிலிருந்து வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசை…
-
- 0 replies
- 280 views
-
-
இதற்குப் பின்னால் மாயக்கரமொன்று இருப்பதையே காட்டுகிறது… குருடர்கள் தவிர்ந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும், ஒன்றாக இணைத்து பேச வைக்கும் வல்லமை புகைப்படத்திற்கு உண்டு. ஒரு மனிதன் பேசுவதைவிட அவனுடைய உடல் மொழியின் மூலமாக அவன் உள்ளத்தை அறிந்து கொள்ளலாம் என்கிறார்கள் உடலியல் மொழி ஆய்வாளர். புகைப்படங்களை ஆதாரமாக வைத்து நடந்துள்ள சம்பவங்களை கண்டறிவது ஒரு கலையாக இருக்கிறது, கிறிஸ்துவின் கடைசி இராப்போசனம் என்ற ஓவியம்தான் இயேசுநாதர் வாழ்வின் கடைசி நேரத்தின் வரலாறாக இருக்கிறது. செல்வன் பாலச்சந்திரனின் மரணத்திற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், சுடப்பட்ட பின் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கிறீத்துவின் கடைசி இராப்போசனம் போல பாலச்சந்திரனுடைய கடைசி நேரங்களை நமக்கு தெளிவாக …
-
- 4 replies
- 765 views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொல்லப்படுவதற்கு முன்பாக இராணுவப் பதுங்குகுழி போன்று காட்சியளிக்கும் ஓர் இடத்தில் பிஸ்கட் சாப்பிடும் படத்தை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம், இலங்கை அரசைத் தண்டிக்கத் தவறிய ஐ.நாவுக்கு தற்போது அதற்கான சந்தர்ப்பம் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது என்றும் இதை ஐ.நா. சரியாகப்பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. பாலச்சந்திரன் குறித்த போர்க்குற்ற ஆதாரம் மட்டுமன்றி இன்னும் அதிர வைக்கும் பல ஆதாரங்கள் தம்மிடம் இருக்கின்றன என்றும் சனல் 4 அதிரடியாக அறிவித்துள்ளது. சனல் 4 ஆவணப்பட இயக்குனர் கல்லும் மெக்ரே, தமிழக தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரிட்டனிலிருந்து வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்துள்ளார். இலங்…
-
- 3 replies
- 869 views
-
-
தோழர் சனார்த்தனம் மறைவு, ஈழத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெரிய இழப்பு அறிஞர் அண்ணா அவர்களால் ஈர்க்கப்பட்ட மாணவர் பட்டாளம், இந்தி எதிர்ப்புப் போர்க்களம் கண்டு வெற்றிவாகை சூடி, வீர வரலாறு படைத்த தளபதிகளின் வரிசையில், மாணவர் தலைவராய் விளங்கியவர் தோழர் இரா. சனார்த்தனம். அனைத்துக் கல்லூரி மாணவர்களின் சார்பில் ஜனநாயகப் பாதுகாப்பு மாநாடு நடத்தினார். அன்றைய தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். ஈழத்தின் தந்தை செல்வா அவர்களோடு நெருங்கிப் பழகியதுடன், அன்னாரைத் தமிழகத்துக்கு அழைத்து வந்து ஈழத் தமிழர்களுக்காகப் பல கூட்டங்களை நடத்தினார். உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பை நடத்தி வந்தார். தன் வாழ்நாள் முழுவதும் ஈழத்…
-
- 25 replies
- 1.2k views
-
-
எவன் என்று நினைத்தாய் எதைக்கண்டு சிரித்தாய் விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் புதுரூபம்
-
- 0 replies
- 718 views
-
-
இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன ஒரு உண்மையான மற்றும் விரிவான தேசிய செயல்முறை மூலம் இடம்பெற வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐநா அலுவலகத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐநா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்டின் நெசர்க்கி இவ்வாறு கூறியுள்ளார். பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் குறித்து வெளியான வீடியோ, படங்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் இங்கு கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மார்டின் நெசர்க்கி, ´நாங்கள் அந்த வீடியோ, படங்களை பார்த்தோம். அது தொடர்பான அறிக்கையும் எமக்கு கிடைத்துள்ளது. ஆனால் அது குறித்து இப்போதைக்கு கருத்து கூற முடியாது´ என்றார். அங்கு அவர் மேலும் இலங்க…
-
- 0 replies
- 535 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில் பங்கேற்கும் குழுவில் இருந்து, மனிதஉரிமை விவகாரங்களுக்கான சிறிலங்கா அதிபரின் சிறப்புத் தூதுவரான, அமைச்சர் மகிந்த சமரசிங்க கழற்றி விடப்பட்டுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக ஜெனிவா கூட்டத்தொடர்களில் சிறிலங்கா குழுவுக்குத் தலைமை தாங்கி வந்த, அமைச்சர் மகிந்த சமரசிங்க, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரிலேயே, இம்முறை ஜெனிவா செல்லும் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனிவாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க தலைமையில், வெளிவிவகார அமைச்சு, சட்டமாஅதிபர் திணைக்களம் ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட குழுவே இம்முறை ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்கவுள்ளது. தாம் ஜெனிவா கூட்டத்தி…
-
- 4 replies
- 3.8k views
-
-
-அழகன் கனகராஜ் அரச மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவர்களுக்கு முழுமையாக தடைச்செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. அதன் பிரகாம் காணி கட்டளைச்சட்டத்தில் இன்னும் சில ஒழுங்கு விதிகள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளன என்று அமைச்சரவைப்பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரச மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவருக்கு முழுமையாக விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருகின்றன. இராஜதந…
-
- 1 reply
- 456 views
-
-
ஒன்றரைக் கோடி சிங்களவர்களைக் கொண்ட சிறிலங்கா பத்துக்கோடி தமிழர்களைப் பின்புலமாகக் கொண்ட ஈழத் தமிழர்கள்மீது நடாத்திய இன அழிப்பு யுத்தத்தின் ஆதாரங்களாக இதுவரை எத்தனையோ பதிவுகளும், ஒளிப்படங்களும், புகைப்படங்களும் வெளிவந்திருந்த போதும், அவை அனைத்தும் யுத்த களம்சார்ந்த காட்சிகளாகவே பலராலும் நோக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சனல் 4 தொலைக்காட்சியும், இன்டிப்பெண்டன்ற் பத்திரிகையும் வெளியிட்ட இரு புகைப்படங்களும், ஏற்கனவே வெளிவந்திருந்த ஒரு புகைப்படமும் சிங்கள தேசத்தின் உச்சக் கொடுரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. உலகமெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் கொதித்துப்போயுள்ளர்கள். 12 வயதுப் பாலகனான பாலச்சந்திரனது படுகொலையும், அது நடாத்தப்பட்ட விதமும் மனி…
-
- 1 reply
- 354 views
-
-
ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக மற்றொரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றும் முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், சிறிலங்கா இந்தக் கூட்டத்தொடருக்கு முக்கியத்துவமளிப்பதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்துலக நெருக்கடிகளில் இருந்து தப்பிக்கவோ, பரப்புரைகளை முறியடிக்கவோ முடியாது என்று உணர்ந்த நிலையில், வெறும் 10 அதிகாரிகளைக் கொண்ட குழுவை மட்டும் ஜெனிவாவுக்கு அனுப்ப சிறிலங்கா முடிவு செய்துள்ளது. அதுவும், ஜெனிவாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவே இம்முறை சிறிலங்கா குழுவுக்குத் தலைமையேற்கவுள்ளார். கடந்த ஆண்டு சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிக்க, அமைச்சர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானோரை ஜெனிவாவுக…
-
- 9 replies
- 1.3k views
-
-
இந்திய நாடாளுமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக, அதிமுக எம்.பிக்கள் கோஷம் எழுப்பியுள்ளனர். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை கூடியதும் இரு அவைகளும் அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அதன்போது தமிழகத்தைச் சேர்ந்த திமுக, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷம் எழுப்பத் துவக்கினர். பிரபாகரனின் இளைய மகன பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், இலங்கை அரசுக்கு எதிர்ப்பும் தெரிவித்தும் அவர்கள் கோஷம் எழுப்பினர். திமுக, அதிமுக எம்.பிக்களை அமைச…
-
- 2 replies
- 1.3k views
-
-
பிரிட்டன் குடியுரிமை பெற்ற யாழ்ப்பாண நபரை காணவில்லை; யாழ்.பொலிஸில் முறைப்பாடு பிரிட்டன் குடியுரிமை பெற்ற யாழ்ப்பாணத்து நபர் கொழும்பில் காணாமல் போயுள்ளார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதரகத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. காரைநகரைச் சேர்ந்தவரும் யாழ்.ஈச்சமோட்டைப் பகுதியில் வசித்தவருமான ஆறுமுகம் யோகேஸ்வரன் (வயது37) என்பவரே காணாமல் போனவராவார். லண்டனில் குடியேறி அந்நாட்டு குடியுரிமை பெற்றிருந்த இவர் தனது மனைவி மற்றும் உறவினர்களைப் பார்ப்பதற்காக அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அதன் பின்னர் மீண்டும் லண்டனுக்குச் செல்வதற்காக கொழும்பு சென்றார். இந்த நிலையில் கடந்த 10 ஆம் திகதியிலிருந்து அவரது தொடர்பு எதுவும் கிட…
-
- 1 reply
- 653 views
-
-
இந்திய நாடாளுமன்றத்தின் வரவுசெலவுத் திட்டக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், சிறிலங்கா விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்ப தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், இடதுசாரிக் கட்சிகளும் முடிவு செய்துள்ளன. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கோரி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில், திமுக, அதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, "ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் அல்லது சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆ…
-
- 2 replies
- 462 views
-