ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143420 topics in this forum
-
[size=4]இலங்கைக்கு பாரியளவில் நிதியளிக்கும் நாடுகளில் ஒன்றான சீனா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் இராணுவ மயமாக்கல் தொடர்பான பிரச்சினையை தீர்க்க வேண்டும் என இலங்கைக்கான சீன தூதுவரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழுவிற்கும் சீன தூதுவர் வூ ஜியங்கோவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது, வட மாகாணம் இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டில் இன்று காணப்படுகின்றமை தொடர்பில் இலங்கை இராணுவத்திற்கு பாரியளவில் நிதியுதவியளிக்கும் சீனாவிடம் முறைப்பாடு செய்யப்பட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின…
-
- 9 replies
- 1k views
-
-
[size=4]நிலநடுக்கத்தின் பாதிப்புகளில் இருந்து சிறிலங்கா இனிமேலும் நீண்டகாலத்துக்குத் தப்பிக் கொள்ள முடியாது என்று நிலநடுக்கத் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கக் கூடிய கட்டடங்களை வடிவமைப்பதற்கான வழிகாட்டு உபகுழுவின் தலைவர் சகபந்து தெரிவித்துள்ளார். கொழும்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய போதே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார். “சிறிலங்காவின் தென்மேற்கு கரைக்கு அப்பால் 500 - 700 கி.மீ தொலைவில், இந்தோ - அவுஸ்ரேலிய புவித்தட்டில், பிளவு ஏற்பட்டுள்ளதாக அண்மைய புவியியல் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், புதிய புதிய தட்டு ஒன்று உருவாகி வருகிறது. இதன்காரணமாக, எதிர்காலத்தில் நிலநடுக்கத்தினால்…
-
- 0 replies
- 831 views
-
-
சென்னை:"இலங்கை தமிழர்களை, வெறுப்பேற்றும் வகையில், சிங்கள அரசு செயல்படுகிறது. இந்திய அரசும் இதை, கண்டுகொள்ளாமல் உள்ளது' என, தி.மு.க., தலைவர், கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவின் உதவிகளைப் பெறும், இலங்கை அரசு, சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆதரவையும் பெற்று வருகிறது. தமிழர்களை கொன்று குவித்த இடங்களில், போர் நினைவுச் சின்னம் மற்றும் அருங்காட்சியகத்தை அமைத்து, தமிழர்களை வெறுப்பேற்றும் வகையில் சிங்கள அரசு செயல்படுகிறது. இந்தியாவில், இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என, தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுக்கின்றன. ஆனால், தமிழகத்தில் தான், இலங்கை வீரர்கள் பயிற்சி பெறுவார்கள். தமிழக கட்சிகள் என்ன செய்யும் ப…
-
- 5 replies
- 1.2k views
-
-
பயங்கரவாதத்திற்கு காரணம் பிரபாகரன் மாத்திரமல்ல 24 அக்டோபர் 2012 பயங்கரவாதம் காரணமாக நாடு 30 வருடங்களை இழந்து விட்டதாகவும் அதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மாத்திரமல்ல எனவும் அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். சகல இனங்களும் ஐக்கியமாக வாழும் நடைமுறை ஒன்றை நாடு என்ற வகையில் இலங்கை சிந்திக்கவில்லை. இந்த நிலைமையை உருவாக்கி பச்சை, நீலம் அல்லது சிகப்பு ஆகிய தரப்பினர் இந்த பிரச்சினையின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காரணகர்த்தாக்கள் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். தெஹிவளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/84626/languag…
-
- 1 reply
- 590 views
-
-
புதன்கிழமை, 24, அக்டோபர் 2012 (11:38 IST) ஈழத் தமிழர்களை மூன்றாம்தர குடிமக்களாக்க இலங்கை சதி! ராமதாஸ் அறிக்கை! பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான அரசியல் அதிகாரமும், தன்னாட்சி உரிமையும் வழங்கப்படவேண்டும் என்று அனைத்து உலக நாடுகளும் வலியுறுத்திவரும் நிலையில், ஈழத்தமிழர்களுக்கு இப்போதிருக்கும் ஒரிரு உரிமைகளையும் பறிப்பதற்கான சதித் திட்டத்தை இலங்கை அரசு தீட்டியிருக்கிறது. இலங்கை இனச் சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக 1987ஆம் ஆண்டில் அப்போதைய இந்தியப் பிரதமர் இராஜீவ்காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்தனவும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதனடிப்படையில் இல…
-
- 0 replies
- 547 views
-
-
கே.பியா? டக்ளஸா? அரசுக்குள் இழுபறி. சிறீலங்கா | ADMIN | OCTOBER 24, 2012 AT 09:44 வடமாகாணத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் அரசுக்குள் பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக மிகவும் நம்பகரமாக அறியமுடிகின்றது. குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பியை வடமாகாணத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கவேண்டுமென அரசின் முக்கியமான சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேசமயம், ஈ.பி.டி.பி. தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை முதலமைச்சர் வேட்பாளராக ஆளுங்கட்சி நியமிக்க வேண்டுமென மற்றுமொரு சாரார் வலியுறுத்திவருகின்றனர். இந்த இருவரும் மாகாணசபைத் தேர்தலைக் குறிவைத்து காய்களை நகர்த்திவருவதால் ஆளுங்கட்சிக்குள் இது விடயத்தில் கட…
-
- 0 replies
- 522 views
-
-
பிரான்சு ஸ்த்ரஸ்பௌர்க நகரில் ஐரோப்பிய கவுன்சிலில் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஜனநாயகதிற்கான மகாநாட்டில் பிரான்சு தமிழீழ மக்கள், ஐரோப்பிய தமிழர் ஒன்றியமும் பங்கு பற்றியது. இந்த முதல் மகாநாட்டில் ஐக்கியநாடுகள் சபையின் காரியதரிசி திரு Ban Ki Moon திறந்து வைக்க இந்த மகாநாட்டில் ஐரோப்பிய கவுன்சிலின் காரியதரசி Thorbjørn Jagland, பிரான்சு ஐரோப்பிய பாராளுமன்ற மந்திரி திரு Bernard Cazeneuve, ஸ்த்ரஸ்பௌர்க நகர நகரபிதா, கனடிய நாட்டின் முன்னைய பிரதமர் Kim Camphell என்று பன் நாட்டு பிரமுகர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர். இந்த மாகநாட்டை திறந்து வைத்த திரு Ban Ki Moon ஜனநாயக கட்டமைப்புகளின் முக்கியதுவத்தையும் சென்ற வருடம் ஆரம்பித்து அராபிய நாடுகளின் மக்களின் ஜனநாயக போராட்டத்தை…
-
- 3 replies
- 641 views
-
-
[size=4]திருகோணமலை, சம்பூரில் சிறிலங்காவுடன் இணைந்து கூட்டுமுயற்சியாக அமைக்கத் திட்டமிட்டுள்ள அனல்மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தாமதமடைவதால், சிறிலங்கா பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. 2011 செப்ரெம்பரில் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து, 2016 ஜுலையில் நிறைவு செய்வதற்கு சிறிலங்கா மின்சாரசபை திட்டமிட்டிருந்தது. இது தொடர்பாக இந்தியாவின் தேசிய அனல்மின் கூட்டுத்தாபனத்துடன் சிறிலங்கா கடந்த ஆண்டு உடன்பாட்டில் கையெழுத்திட்டது. எனினும், இந்த மின் நிலையத்தில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பான உடன்பாட்டில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதன்காரணமாக ஏற்பட்டுள…
-
- 1 reply
- 792 views
-
-
இன்று இந்த காணொளியைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. விவாதத்தை நடாத்தும் நடுவரின் இன உணர்வும் ஆக்ரோஷமும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை காங்கிரஸ் சார்பாக வாதாடும் தாஸ் என்பவன் பேசும் விதத்தைப் பார்க்கும்போது சிங்கள பேரினவாத அரசு சொல்வதைக் காட்டிலும் மிகவும் துவேஷமாக பேசிக்கொண்டிருக்கிறான். தமிழர்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தும் இவன் கொழும்பில் தமிழர்களும் சிங்களவர்களும் மிகவும் அந்நியோந்நியமாக சகோதரர்கள் போல வாழ்கிறார்கள். தமிழக கட்சிகள் செய்யும் போராட்டங்களால் தமிழர்கள் மேல் சிங்களவர்கள் கோபப்படுகிறார்கள். அதனால் அவர்கள் தாக்குகிறார்கள். அதேபோல் தமிழக மீனவர் கொல்லப்படுவது சரிதான். ஏனென்றால் சர்வதேச எல்லையைத் தாண்டுவதால் கொல்லப்படுவது சரிதான்...இப்படி அவன் சொல்லும் கேவ…
-
- 2 replies
- 416 views
-
-
"13' ஒழிப்பதில் தவறே இல்லை; கோத்தாவின் கருத்துக்கு அரசு பச்சைக் கொடி "வடக்கு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு 13 ஆம் திருத்தச்சட்டம் தடையாகவிருந்தால் அதைத் திருத்துவதோ அல்லது இல்லாமல் செய்வதோ தப்பில்லை. அவ்வாறு செய்யவேண்டிய நிலை ஏற்படும்போது சர்வ ஜன வாக்கெடுப்பை நடத்தவும் அரசு தயார். 13ஆம் திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அதைத் திருத்துமாறு அல்லது இல்லாமல் செய்யுமாறு வடக்கு மக்களே கோரிக்கை விடுப்பர். மக்களுக்கு அதி காரங்களைக் கொடுப்பதற்காக 13 ஆம் திருத்தச்சட்டத்தை ஒழித்து 19ஆம் திருத்தச்சட்டத்தைக் கொண்டுவருவதற்கும் நாம் பின்வாங்கமாட்டோம்.'' இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நேற்று தமிழ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாற…
-
- 10 replies
- 949 views
-
-
[size=3] பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபத் பதவி ஏற்று 60 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக 60000 கனேடிய மக்களுக்கு Diamond Jubilee விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.[/size][size=3] இதில் ஒன்ராறியோவைச் சேர்ந்த 14 பேருக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை வைர விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.[/size][size=3] இந்த விருதுகளை கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்துக்கான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் Brad Duguid வழங்கிக் கௌரவித்தார்.[/size][size=3] இதில் சிறப்புக்குரிய விடயம் என்னவென்றால், ஒன்ராறியோ மாகாணத்தில் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் ரொறன்ரோவில் வசிக்கும் ஈழத் தமிழர்களாவர்.[/size][size=3] மொன்ரி முத்துலிங்கம், மனோ கனகமணி, லோகன் ராசையா ஆகியோரே அந்த விருது பெற்ற க…
-
- 1 reply
- 697 views
-
-
தமிழன் அடையாளமான ஒரு கலைஞனை மாவீரர் பெயரால் அவமானப் படுத்த அனுமதிக்க வேண்டாம் – வ.ஐ.ச.ஜெயபாலன் இளைய ராசாவின் இசை நிகழ்ச்சியை கனேடிய தமிழர்கள் ஆதரிக்க வேண்டும். இசைஞானி இளையராசாவை நான் இதுவரை சந்திததில்லை. ஆனாலும் அவர் தமிழரின் கலை அடையாளங்களில் ஒருவர் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. வள்ளுவர் ஒரு தலித் என்கிறார்கள். தெரியாது. ஆனால் எங்கள் தமிழ் இசைஞானி இளையராசா சாதிக் கொடுமைகளைத் எதிர்நோக்கி தமிழ் இசையைக் கற்று தமிழிசைக்கு உலகில் பெருமை சேர்த்தவர். உயர் குடியின் கையில் இருந்த தமிழ் இசையை விடுவித்தவர்களுக்கு இசைஞானி இளையராசா தளபதி போன்றாவர். இளையராசா தமிழ் இசையை உலக அரங்கில் மேம்படுத்தி தமிழர்களின் அடையாளமானவர் இசைஞானி இளையராசாவும் ஒரு கலாச்சார போராளிதான். அவ…
-
- 83 replies
- 7.2k views
-
-
தெற்கிலிருந்து வளர்ப்பு யானைகள் முல்லைத் தீவு ஒட்டுசுட்டான் உட்பட்ட பிரேதசங்களில் கொண்டுவந்து விடப்பட்டுள்ளன. இதனால் இப்பிரதேச மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இதனை நீக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலைமை உருவாகும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாவர விலங்கினப் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “ஒட்டுசுட்டான் உள்ளிட்ட பிரதேச மக்கள் யானையால் பெரும் அவலங்களை அனுபவிக்கின்றனர். காட்டு யானைகளால் ம…
-
- 0 replies
- 385 views
-
-
பிரித்தானியாவிலிருந்து தாம் நாடு கடத்தப்படுவதை எதிர்த்து இலங்கையைச் சேர்ந்த 60 புகலிடக்கோரிக்கையாளர்கள் அங்குள்ள நீதிமன்றம் ஒன்றில் அவசர தடையுத்தரவு கோரி மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட இறுதிநேரத்திலேயே மனுத்தாக்கல் செய்துள்ளனர். மனுவை தாக்கல் செய்தவர்கள் தம்மை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது எனக்கோரி மனுவைத்தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு குறைந்தது 15 பேர்வரையில் மனுத்தாக்கல் செய்ததாகவும் இந்த மனுவின் அடிப்படையில் இன்று பிரித்தானியாவிலிருந்து விசேட விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்துவரப்படவிருந்த அறுபது பேரில் இருவரை பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் விமானத்தில் இருந்து வெளியேற அனுமதிவழங்கியுள்ளனர். http://www.virakesari.lk/art…
-
- 0 replies
- 603 views
-
-
[size=2][size=4]கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் இந்திய நீதிமன்றத்தினால் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளி. அவரை சுதந்திரமாக செயற்படுவதற்கு இடம் வழங்கியமையானது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கட்சியின் பொது செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 'எந்த அடிப்படையில் குமரன் பத்மநாதனுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சர்வத…
-
- 2 replies
- 639 views
-
-
[size=2][size=4](கெலும் பண்டார – யொஹான் பெரேரா)[/size][/size] நகர அபிவிருத்தி அதிகார சபை செயற்படுத்தும் நகர அபிவிருத்தி திட்டங்களுக்கு இடங்கொடுப்பதற்காக வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் கொழும்பு நகர எல்லைக்குள் செயற்படுத்த திட்டமிட்டிருந்த பல வீடமைப்பு செயற்றிட்டங்கள் வேறு இடங்களுக்கு கொண்டுசெல்லப்படும் என நாடாளுமன்றத்தில் நேற்று அறிவிக்கப்பட்டது. [size=2][size=4]கொழும்பு நகர எல்லைக்குள் பல இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ ஆகியோரால் பல அடிக்கற்கள் நாட்டப்பட்டுள்ளன. ஆனால் வேலை எதுவும் நடைபெறவில்லையென ஐக்கியதேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்க கேள்வி நேரத்தின் போது கூறினார். நகர அ…
-
- 0 replies
- 619 views
-
-
[size=2][size=4]சாதாரண கிணறுகள் அல்லது குழாய் கிணறுகளை தோண்டுவோர் ஆண்டுக்கான அனுமதிக் கட்டணமாக நீர்வளசபைக்கு 7,500 ரூபாவிலிருந்து 15,000 ரூபாவரை செலுத்தவேண்டிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு அமைச்சரவை பத்திரம் ஒன்று விரைவில் சமர்ப்பிக்கப்படும் என நீர்வளசபையின் தலைவர் பந்துல முனசிங்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நீர்வளசபை சட்டத்திற்கு திருத்தங்கள் பல கொண்டுவரப்படவுள்ளன. இதன்படி 12 அடிக்கு கூடிய விட்டமுள்ள கிணறு தோண்டுவதற்கு முன் அனுமதி பெறவேண்டியிருக்கும். குடிநீரை போத்தலில் அடைக்கும் நிறுவனங்கள் அவை பயன்படுத்தும் நீரின் அளவுக்கு ஏற்ப நீர்வளசபைக்கு காப்புரிமை பணம் செலுத்தவேண்டும். குழாய் கிணறு அமைக்கும் நிறுவனங்கள் பதிவுக் …
-
- 7 replies
- 1.2k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உள்ளிட்டோர் நேரில் அழைத்துப் பேசியிருப்பது சிங்கள அமைப்புகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ற சிங்கள அமைப்பின் தலைவர் குணதாச சமசரசேகர கூறியுள்ளதாவது: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ராஜ மரியாதையுடன் அழைத்துப் பேசுகிறது. இலங்கையில் ஈழத்தை அமைப்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டுச்சதியில் இறங்கியுள்ளன. இலங்கை விவகாரத்தில் தேர்ச்சிபெற்ற நிருபமாராவ் அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டதன் நோக்கமும் இதுதான். இலங்கையைக் கூறுபோடுவதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் செயற்படுகின்றன…
-
- 0 replies
- 686 views
-
-
சிறிலங்கா அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான போரின் போது மேற் கொள்ளப்பட்ட ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பாக, ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அறிக்கையை ஐ.நா மறைத்துவிட்டதாக இன்னர்சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இலங்கையில் இறுதிக் கட்டப் போரில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய எகிப்தைச் சேர்ந்த தொராயா ஒபெய்ட் என்ற உயர் அதிகாரியை நியமித்து, கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் பணி ஆணை வழங்கிய ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நான்கு மாதங்களில் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தார். எனினும், தொராயா, தனிப்பட்ட காரணங்களுக்காக அந்தப் பணியை செய்ய முடியாதுள்ளதாக அறிவித்ததை அடுத்து, சார்ள்ஸ் பெற்றி என்ற அதிகாரி குறித்த பணிக்கு நியமிக்கப்பட்டா…
-
- 0 replies
- 595 views
-
-
ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை குறித்த அறிக்கையை ஐநா மறைக்கிறதா?!-இன்னர் சிற்றி பிரஸ் சிறீலங்கா | ADMIN | OCTOBER 23, 2012 AT 09:05 சிறிலங்காவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போரின் போது ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பாக, ஆராய நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணைக் குழுவின் அறிக்கை, ஐ.நாவினால் மறைக்கப்பட்டு விட்டதாக இன்னர்சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. சிறிலங்காவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போரில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய எகிப்தைச் சேர்ந்த தொராயா ஒபெய்ட் என்ற உயர் அதிகாரியை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்திருந்தார். கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் இவருக்கு பணி ஆணை வழங்கிய ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நான்கு மாதங்களில் விசாரணை…
-
- 1 reply
- 478 views
-
-
ஈழத்தில் இனக்கொலை ; இதயத்தில் இரத்தம் ஒளிப்படக் குறுவட்டு – வைகோ வெளியீடு. சிறீலங்கா | ADMIN | OCTOBER 23, 2012 AT 16:46 ஈழத்தில் இனக்கொலை ; இதயத்தில் இரத்தம் ஒளிப்படக் குறுவட்டு, புத்தகம் இந்தி மொழிப்பதிப்பு வெளியீடு நவம்பர் 26 டெல்லி இடம்: இந்திய இஸ்லாமிக் கல்சுரல் சென்டர், 87-88, லோதி ரோடு, நியூடெல்லி – 110 003 தலைமை: அ.கணேசமூர்த்தி எம்.பி., வரவேற்புரை: டாக்டர் சி.கிருஷ்ணன் வெளியிடுபவர்: நீதிபதி இராஜேந்திர சச்சார் (டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி) முதல் படியைப் பெறுபவர்: எழுத்தாளர் குல்தீப் நய்யார் வாழ்த்துரை : யஷ்வந்த் சின்கா எம்.பி. டிசம்பர் 3 கொல்கத்தாவில் வங்கமொழிப் பதிப்பு வெளியீடு. டிசம்பர் 30 பாட்னா (இந்தி மொழிப் பதிப்பு) …
-
- 1 reply
- 421 views
-
-
[size=4]சிங்களர்கள் போரின் நினைவுச் சின்னத்தை எழுப்பியிருப்பதாக வரும் தகவல், தமிழர் நெஞ்சில் ரணத்தை ஏற்படுத்தும் என்று கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.[/size] [size=4]தாய்த் தமிழகத்தின் தவிப்பு! என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள கடித அறிக்கை :[/size] [size=4]இலங்கையிலே தமிழர்கள் பல ஆண்டுகளாகப் படுகின்ற எல்லையில்லாத - எண்ணற்ற துயரங்கள் குறித்து, நம்மைப் பற்றி யார் குறை சொன்ன போதிலும், மற்றவர்களின் பாராட்டுக்காக நாம் காத்திருக்காமல், “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற வகையில், 1956ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலே இருந்தாலும், இல்லாவிட்டாலும், தொடர்ந்து நம்மால் முடிந்த அளவிற்கு [/size][size=4]குரல் கொடுத்து வருகிறோம் என்பதை உண்மையை நேசிப்பவர்கள் உணர்ந்…
-
- 0 replies
- 531 views
-
-
[size=2][size=4](எம்.சி.அன்சார்)[/size][/size] 'தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபையில் ஆதரவு வழங்காமையினை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எமது கட்சிபற்றியும் அதன் தலைமையை பற்றியும் தாறுமாறாக ஒவ்வொரு நாளும் விமர்சித்து வருகின்றனர். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் தலைமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒரு போதும் முரண்பட்டது கிடையாது. அவர்களை விமர்சித்ததும் கிடையாது' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். [size=2][size=4]'கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியினை அரசாங்கத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் சேதம் இல்லாத விட்டுக்கொடுப்பினை செய்துள்ளதுடன், அதனைத் தொடர்ந்து வந்த திவிநெகும…
-
- 1 reply
- 629 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்களவர்களை கொண்ட வெலிஓயா என்ற புதிய பிரதேச செயலகப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. வடமாகாண த்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் எல்லையாக இருந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மணலாறு என்ற தமிழ் பிரதேசத்திலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றி விட்டு கடந்த பல வருடங்களாக இந்த சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தனி பிரதேச செயலகப்பிரிவாக பிரகடனப்படுத்தப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்துவதற்கு வசதியாக அனுராதபுரமாவட்ட நிர்வாகத்தில் இணைக்கப்பட்டிருந்த மணலாறு என்ற வெலிஓயா பகுதி தற்போது முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்த…
-
- 0 replies
- 643 views
-
-
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 60 அகதிகளை, பிரித்தானியா வரும் செவ்வாய்க்கிழமை சிறிலங்காவுக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிராக வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் ஹீத்ரோவுக்கு அருகில் உள்ள ஹார்மொன்ஸ்வோர்த், கோல்புறூக் தடுப்பு முகாம்களுக்கு முன்பாக எதிர்ப்புப் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படும் அகதிகள் அங்கு கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படக் கூடிய, கொல்லப்படக் கூடிய ஆபத்துக் கூட உள்ளதால், அதனைத் தடுத்து நிறுத்த முன்வருமாறு பிரித்தானிய அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது. http://thaaitamil.com/?p=36021
-
- 2 replies
- 761 views
-