Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கு இடையிலான கடல் பாதுகாப்பு தொடர்பான மாநாடு காலியில் இடம்பெற்று வருகின்றது. இந்த மாநாட்டில் கப்பல் நடமாட்டங்கள், சுனாமி எச்சரிக்கை, கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், கூட்டு கடற்படைப் பயிற்சிகள் போன்றவை தொடர்பில் ஆராயப்படுகின்றன. இந்தநிலையில் கூட்டத்தின் இறுதியில்,கடலில் சட்டவிரோத அத்துமீறல்களை தடுக்க முத்தரப்பு பொறிமுறை ஒன்றும் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய கடல் பாதுகாப்பு பணிப்பாளர் கே.ஆர்.நூட்டியால், இலங்கையின் சார்பில் கடற்படை பணிப்பாளர் ஜயந்த பெரேரா, மற்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் லியாஸ் ஹுசைன் ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர். http://www.seithy.co...&language=…

  2. தமிழகத்திலுள்ள இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்களை மீள இலங்கைக்கு அழைத்து வருவது பற்றியும், அவர்களுக்கான வீடமைப்பு மற்றும் ஏனைய வசதிகள் குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு ௭ம்.பிக்கள் குழுவொன்று அடுத்த மாதம் தமிழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இத்தகவலை தெரிவித்தார்.இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பியவர்கள் இங்கு தாம் சந்திக்கும் அவல நிலையை இந்தியாவிலுள்ள தமது உறவுகளுக்கும் தெரிவிப்பதால் இந்தியாவிலுள்ள இந்தியர்கள் இலங்கை திரும்பத் தயங்குகின்றனர். ௭னவே தமிழக அரசும் இந்திய மத்திய அரசும் இணைந்து இலங்கை திரும்புவோருக்கு இ…

  3. புலிகளின் தலைவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது என்கிறது அரசாங்க புலனாய்வுப் பிரிவு 20 அக்டோபர் 2012 சர்வதேச புலம்பெயர் விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் ஒருவர், பயங்கரவாத விசாரணை பிரிவினரால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என அரசாங்க புலனாய்வுப் பிரிவை கோடிட்டு கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் 1997 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்துள்ளதுடன், 2000 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றுள்ளார் என கண்டுபிடித்துள்ள அரச புலனாய்வுத் துறை அவர்குறித்து பல கதைகளை தெரிவித்துள்ளது இங்கிலாந்தில் 12 வருடங்கள் வசித்து வந்த இவர்…

    • 5 replies
    • 1.4k views
  4. அரசியல் தீர்வு பிரச்சினை உள்விவகாரம் அதில் நாம் தலையிட மாட்டோம் - சீனா October 19, 2012 10:08 am இலங்கையில் இனப்பிரச்சினையில் ஒரு அரசியல் தீர்வை எட்ட முயலுமாறு , இலங்கை அரசுக்கு சீனாவும் அழுத்தம் தரவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கோரியிருக்கிறார்கள். சமீபத்தில் இலங்கைக்கான புதிய சீனத்தூதரை சந்தித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, வடக்கில் நடைபெற்று வரும் இராணுவ கட்டமைப்புத் திட்டங்கள் பல சீன உதவியுடன் நடைபெற்றுவருவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறுவதை, தூதருக்கு சுட்டிக்காட்டி, இலங்கையில் போர் முடிந்த வட மாகாணத்தில் இன்னும் சகஜ நிலை உருவாகவில்லை, மக்கள் காணிகள் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி பறிக்கப்பட்டிருக்கின்றன, அங்கு…

  5. [size=2][size=4]கொழும்பு, கறுவாத்தோட்டத்தில் அமையப்பெற்ற 120 வருடங்கள் பழமைவாய்ந்த குதிரைப் பந்தயத்திடல் பார்வையாளர்கூடம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, கொழும்பு மாநகரசபை மேயர் எம்.ஜே.எம்.முஸம்மில் ஆகியோரினால் இக்கட்டடம் இன்று சனிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது. குதிரைப் பந்தயத்தில் ஈடுபடுகின்ற வீரர்களின் ஓய்வறைகளாகவும், விசாரணை அறைகளாகவும் இருந்த பகுதிகள் தற்சமயம் மக்டொனல், லக்சல போன்ற பிரபல நிறுவனங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றமை சிறப்பானதாகும். இலங்கை புற்றரை பராமரிப்பு கழகத்தின் கீழிருந்த …

  6. [size=2][size=4]கிழக்கின் முதலாவது 5 நட்சத்திர அந்தஸ்துடைய ஹோட்டலொன்றை பாசிக்குடாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை திறந்து வைத்தார். பாசிக்குடா பகுதியில் 150 ஏக்கர் விசாலத்தில் அமையவுள்ள 14 ஹோட்டல்களின் முதற்கட்டமாக 48 அறைகளைக்கொண்ட முதலாவது 5 நட்சத்திர ஹோட்டல் இன்று திறந்த வைக்கப்பட்டது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் இந்த ஹோட்டல்கள் நிர்வகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடத்தில் 854,000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளனர். இவ்வருடத்தில் இந்த எண்ணிக்கை 950,000ஐ எட்டுமென நம்பப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.[/size][/size] [size=2][size=4]http://www.tamilmirr...3----5----.html[/size][/size]

  7. சீனாவும் இலங்கையும் இணைந்து செயற்கை கோள் தயாரிப்பு. சிறீலங்கா | ADMIN | OCTOBER 18, 2012 AT 10:50 சீனாவும் இலங்கையும் இணைந்து தயாரித்துள்ள செயற்கை கோள் எதிர்வரும் 22ம் திகதி நவம்பரில் விண்ணில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.இலங்கையின் சுப்ரீம் செட் என்ற தனியார் நிறுவனம் இந்த செயற்கை கோளை தயாரித்துள்ளது. இதனை விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக, இந்த நிறுவனத்தின் தலைவர் எஸ்.மணிவானன் தெரிவித்துள்ளார். http://thaaitamil.com/?p=35737

  8. விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த 12 பேரை இலங்கைக்கு நாடு கடத்த கனடா ஏற்பாடு! கனடாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்ட 12 தமிழர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட உலகத் தமிழர் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களான 12 பேர் தொடர்பிலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கனேடிய பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்தப் 12 பேரையும் இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை மேற்கொண்டு வருகிறது. இவர்கள் அ…

  9. ராஜபக்ச சோல்கயிம் கும்பல்களின் விசுவாசமான நண்பர்கள் : கோசலன் நாற்பது வருட ஆயுதப் போராட்டம் மனிதப் பேரழிவோடு துடைத்தெறியப்பட்டு நான்கே வருடங்களுக்குள் மாற்று அரசியல் என்பதை உத்வேகத்தோடு எதிர்பார்க முடியாது என்பது உண்மை தான். மக்கள் பற்றும் சமூக உணர்வும் கொண்ட மனிதர்களின் அணிசேர்க்கையும் அரசியல் தலைமையும் கரு நிலையில் கூட இன்னும் தோற்றம் பெறவில்லை என்ற யதார்த்தத்தின் மறுபக்கத்தில் சந்தர்ப்பவாதிகளும் வியாபாரிகளும் நிர்வாணமாக மக்கள் முன் தம்மை இனம்காட்டிக்கொள்கிறார்கள். ஒரு புறத்தில் ‘ஜனநாயகம் படைக்கிறோம்’ என்று குறைந்தது இரண்டு தசாப்த்தங்களில் ஆங்காங்கு தோன்றிய புலி எதிர்ப்புக் கும்பல்கள். பிரபாகரன் சரணடைந்தாரா, சண்டை போட்டாரா, பொட்டம்மான் பிடிபட்டாரா, செத…

  10. காணாமல் போனோரைக் கண்டறியும் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டு மணி நேர சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று எதிர் வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக இடம்பெறவுள்ளது. இதன்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்படவிருப்பதாகவும் மேற்படி குழு அறிவித்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் ௭க்நெலிகொட கடத்தப்பட்டு வரும் 22ஆம் திகதியுடன் 1000 நாட்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு ௭க்நெலிகொட சார்பாகவும் ஏனைய காணாமல்போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் சார்பாகவுமே இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக காணாமற்போனோரைக் கண்டறியும் குழு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் கூற…

  11. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலே சுமார் 875 ஏக்கர் நிலப்பரப்பு இன்று வரை இராணுவத்தினரின் பிடியில் உள்ளதுடன், பல வர்த்தக நிலையக் கட்டடங்களும் படையினரின் பயன்பாட்டிலேயே உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் கமநலச் சேவை நிலையத்தின் முன்பாகவுள்ள பொன்னம்பலம் வைத்தியசாலை இயங்கிய காணியும், அதனைச் சூழவுள்ள பத்துக் குடும்பங்களின் காணிகளும், புதுக்குடியிருப்புச் சந்திப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் உள்ளடங்கலாக சுமார் பதினைந்து ஏக்கர் காணிகள் மற்றும் வர்த்தக நிலையங்கள், பொதுமக்களின் வாழ்விடங்கள் என்பவற்றை இலங்கை ராணுவத்தின் 682 ஆவது படைப்பிரிவு பயன்படுத்தி வருகின்றது. இதேவேளை புதுக்குடியிருப்பு கைவேலிப் …

  12. “ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் இலங்கை குறித்தான அமெரிக்காவின் கொள்கைகளில் எவ்வித மாற்றங்களும் நிகழாது” என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். “எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் மிட்ரோம்னி வெற்றி பெற்று ஆட்சிமாற்றம் நிகழ்ந்தால் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுமா? குறிப்பாக, இலங்கை போன்ற நாடுகள் குறித்தான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் நெகிழ்வுத் தன்மை ஏற்படுமா என்றும் ஊடகமொன்று கேள்விகளை எழுப்பியிருந்தது. இதற்குப் பதிலளிக்கும்போதே, பாரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படாது. கடந்த காலங்களை எடுத்துப்பார்…

  13. வடக்கு கிழக்கிலிருந்து படையினரை அகற்றிக்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.வடக்கு கிழக்கிலிருந்து படையினரை அகற்றிக்கொள்ளுமாறு சிலர் கோரி வருகின்றனர். ஐக்கிய இலங்கை என்ற ரீதியில் நாடு முழுவதிலும் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டு மூன்றாண்டு கடந்துள்ள நிலையிலும் தேசிய பாதுகாப்பு தொடர்பான அர்ப்பணிப்பில் குறைவில்லை. போர் நிறைவடைந்தாலும் படைவீரர்களுக்கான சலுகைகள் குறையவில்லை.சில தசாப்தங்களாக வரவு செலவுத்திட்டத்தின் பெரும்பகுதி தேசிய பாதுகாப்பிற்காக ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. வரவு செலவுத் திட்டத்தில் வருடாந்தம் 230 பில்லியன் ரூபா தேசிய பாதுகாப்பிற்காக ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. அதில் 203 பி…

  14. “அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள் தரணி ஆண்ட தமிழருக்குதை(சுறவம்) முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு” பாவேந்தர் பாரதிதாசன்: “தையே முதற்றிங்கள்; தைம்முதல் ஆண்டு முதல் பத்தன்று நூறன்று; பன்னூறன்று பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வில் புத்தாண்டு தைம்முதல்நாள் பொங்கல் நன்னாள்” “நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே” “அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள் தரணி ஆண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு” தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை அல்ல தை முதல் நாளே! சித்திரை முதல் நாள் ஆண்டுப் பிறப்பென்பதும், பிரபவ முதல் அட்சய வரையிலான…

  15. [size=3][size=4]இலங்கையில் இருந்து தமிழர்கள் தப்பிச் செல்வதற்கு போர்ச்சூழ்நிலை இன்னும் மாறாமையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]தமிழர்கள் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கிறார்கள் என்பது அவுஸ்ரேலியா ' டீக்கின் பல்கலைக்கழகத்தில்" கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலிய பேராசிரியர் டேமியன் கிங்ஸ்பெரி உரையாற்றினார். ஏற்கனவே தமிழ் மற்றும் சிங்கள பிரதேசங்களாக பிரிக்கப்பட்டிருந்த இலங்கையை பிரித்தானிய குடியிருப்பு ஆட்சி மத்திய நிர்வாக மாற்றியமைத்தது. 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதும், சிங்கள அரசியல்வாதிகள் சிங்கள அரசியல் திட்டத்தை, மொழியை அடிப்படையாக கொண்டு…

  16. வட அயர்லாந்து போராளி ஒருவர் இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த விதம் தொடர்பாக தனது கடுமையான ஆட்சேபனையை கொலம்பிய பேச்சுவார்த்தையின்போது வெளியிட்டார். இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை கபடதனமாக அளித்தது போல கொலம்பிய சுதந்திர விடுதலைப் போராட்ட அமைப்பை கொலம்பிய அரசு அளிக்க முற்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கொலம்பிய அரசு கொலம்பியாவில் நடைபெறும் யுத்தம் மற்றைய நாட்டு யுத்தங்களுடன் ஒப்பிடும்போது முற்றிலும் வேறுபட்டது என மழுப்பலாக பதிலளித்தார். இலங்கை தமிழரின் போராட்ட வரலாற்றில் மிகவும் பரீட்சயமானதும் தமிழர்களுடன் நெருங்கிய உறவை பேணிவரும் ஐ.ஆர்.ஏ அமைப்பின் முக்கிய தளபதியே தமிழருக்காக தமிழரின் மீது திணிக்கபட்ட யுத்தத்தினை கொலம்பிய பேச்சுவார்த்தையில் …

  17. யாழ் கோட்டைக்கு பின்புறம் அமைக்கப்படும் கடற்பூங்கா (படங்கள்) சிறீலங்கா | ADMIN | OCTOBER 19, 2012 AT 22:08 யாழ் கோட்டைக்கு பின்புறமக ஸ்ரீலங்கா இராணுவம் மீனவர்களின் வாழ்வாதரங்களை அளிக்க இராணுவ காவலரன்கள் அமைத்து கடற்பூங்கா ஒற்றை உருவாக்கி வருகிறார்கள். http://thaaitamil.com/?p=36009

  18. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் தேசிய செயற்திட்டத்தை செயற்படுத்தினால் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பெறக்கூடிய ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ள முடியும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. உயர்ஸ்தானிகரிடம் கேளுங்கள் என்ற வேலைத் திட்டத்தின் 12வது பகுதியில் தேசிய செயற்திட்டம் குறித்த பிரித்தானியாவின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பப்பட்டது. இக்கேள்விக்கு பதிலளித்துள்ள இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரெங்கின் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தேசிய செயற்திட்டம் ஒரு சிறந்த ஏற்பாடு எனவும் பொது மக்கள் மற்றும் பொலிஸாருக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் வலுப்படுத்தவும் அத…

  19. யாழில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரியான முறையில் சட்டத்தை அனுசரித்து, கடைப்பிடித்து நீதியாக நடந்து கொள்வதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளது. ஆனால் அந்த ஆர்ப்பாட்டங்களில் எல்லாம் பொதுமக்களுக்கு இடையூறுகள் பல ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் ஆர்ப்பாட்டங்களின் போது வீதியோரமாக நின்று ஜனநாயக முறைப்படி போராட்டத்தை நடத்துகின்றனர். உண்மையில் அவர்கள் நடத்துகின்ற ஆர்ப்பாட்டங்கள் சட்டத்த…

  20. [size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பிக்கு எதிராக சாட்சியங்கள் எதுவும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. முறைப்பாடுகளோ அல்லது சாட்சியங்களோ இன்றி குமரன் பத்மநாதனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்hளார். குமரன் பத்மநாதனுக்கு எதிராக வழக்குத் தொடரப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரச சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே …

  21. இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இராஜதந்திர தகவல்களை ஏற்றுக்கொள்வதில் அக்கறையின்றி இருந்ததாக எரிக் சொல்ஹெய்ம் குற்றம் சுமத்தியுள்ளார். எரிக் சொல்ஹெய்மின் இந்த கருத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு தரப்பினரும் நோர்வேயின் தரப்பின் தகவல்களுக்கு உரிய மதிப்பளிக்கவில்லை என்று எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.இந்த தகவல் 2007 ஆம் ஆண்டு ஜலை 24 ஆம் திகதியன்று, அமெரிக்கத் தூதரகத்தினால் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,அமெரிக்காவில் காங்கிரஸ்காரர்களை போல, சிங்கள வாக்குகளை குறிவைத்து செயற்படுகிறார்.தாம் கடைசியாக ராஜபக்சவை சந்தித்தபோது அவர் தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க எவ்வித திட்ட…

  22. [size=4]கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள தேசிய செயற்றிட்டம், இலங்கையின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு உதவும் என்பதுடன், அத்திட்டத்தை செயற்படுத்தினால் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து ஒத்துழைப்புகளை பெற முடியும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. உயர்ஸ்தானிகரிடம் கேளுங்கள் என்ற திட்டத்தில் தேசிய செயற்றிட்டம் குறித்து பிரித்தானியாவின் நிலைப்பாடு என்ன என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கின் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்றிட்டத்தில் பிரயோசனமான பரிந்துரைகள் இருக்கி…

    • 0 replies
    • 637 views
  23. [size=4]தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வது தொடர்பிலான கூட்டம் ஒன்று எதிர்வரும் நாட்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]இது தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு, கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டு வினவியது.[/size] [size=4]இந்த செய்தியை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.[/size] [size=4]எனினும் அதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், பெரு…

    • 0 replies
    • 543 views
  24. கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைய வேண்டும்! முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் ஊடாகவே தீர்வு காண முடியம் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்தி நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் ஊடாக தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு இதில் இணைய வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது. முஸ்லிம் காங்கிரிஸின் தலைவர் அமைச்சர் ரௌப் ஹக்கீம் நேற்று நோர்வே தூதுவரை சந்தித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்று ம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்குவது தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாற…

  25. கேப்பாபிலவைச் சேர்ந்த 110 குடும்பங்களும் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ள சூரியபுரம் காட்டுப்பகுதியிலேயே நிரந்தர மாகத் தங்க வைக்கப்படுவர். சூரியபுரம் காட்டுப் பகுதி அரச காணி என்பதால், அதனை அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ந.வேதநாயகன் தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போர் நடவடிக்கைகள் காரணமாக முல்லைத்தீவு மக்கள் இடம்பெயர்ந்து வவுனியா மனிக்பாம் நலன்புரிநிலையத்தில்தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்த முகாமிலிருந்த மக்கள் படிப்படியாக அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு வந்தனர். இறுதியாக கடந்த செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி மனிக்பாம் முகாம் மூடப்பட்டதால் அங்கு எஞ்சியிருந்த மக்கள் வலுக்கட்டாயமாக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.