Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ”காணாமல் போனோரின் விவரங்களை அரசு உடன் வெளியிட வேண்டும்’ என்று கோரி இன்று காலை வவுனியாவில் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்தில் தமிழ்க் கட்சிகள் எவையும் கலந்து கொள்வதில்லை என்று முடி வெடுத்துள்ளன. நேற்றுமுன்தினம் மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் முக்கியஸ்தர்களுக் கிடையிலான கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. காணாமல் போனோரைத் தேடியறியும் குழு இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆயினும், போரின்போது படைவீரர்களும் காணாமல் போயினர் என்பதை நிலை நிறுத்தவே அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் இறுதிப் போரில் தமிழ் மக்களுக்கு…

    • 4 replies
    • 723 views
  2. [size=4]தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் அனைத்துலக நாடுகள் இலங்கையை தனிமைப்படுத்தும் நிலை ஏற்படலாமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அபிவிருத்தியை காண்பித்து அரசியல் உரிமைகளை அரசாங்கம் மறுத்து வருவதாக காணாமல்போனோருக்கான அனைத்துலக தினத்தை முன்னிட்டு திருகோணமலை நகரில் இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றியபோது சம்பந்தன் குறிப்பிட்டார். அனைத்துலக நாடுகள் கடும் அழுத்தங்களை பிரயோகித்து வந்தாலும், அரசு அனைத்தையும் புறக்கணித்து வருவதாகவும், யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு கிழக்கு மாகாணத்தில் பலர் காணாமல்போயுள்ளதாகவும் அவர் கூறினார். காணாமல்போன தமிழ் இளைஞர்கள் குறித்து அரசாங்கம் இதுவரை உரிய பதில் வழங்கவில்…

    • 2 replies
    • 664 views
  3. [size=4]தமிழீழம் என்ற தனிநாட்டை இலங்கைக்குள் உருவாக்குவதற்கும், நாட்டைப் பிரிப்பதற்கும் தாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என ஐக்கிய தேசியக் கட்சி நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.[/size] [size=4]அத்துடன், நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் செயற்படுபவர்களையும் தாம் கடுமையாக எதிர்க்கின்றோம் எனவும் அது தெரிவித்தது. எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஐ.தே.க. பொதுச் செயலாளரும், எம்.பியுமான திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.[/size] [size=4]தமிழகத்தில் நடைபெற்ற “டெசோ’ மாநாட்டில் இலங்கையிலிருந்து கலந்துகொண்ட நவசமசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிர…

    • 2 replies
    • 871 views
  4. காலி சிறைச்சாலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் மீது வன்முறைகள் - கோமா நிலையில் இளைஞர் வைத்தியசாலையில் : 27 ஆகஸ்ட் 2012 வவுனியா சிறைச்சாலையினை தொடர்ந்து காலி சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது கடந்த வாரம் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன. தமிழ் அரசியல் கைதிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைத்தாக்குதலில் கோமா நிலையில் மயக்கமுற்ற இளைஞரொருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்தே உண்மைகள் வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணம் கண்டி வீதி கொடிகாமம் பகுதியை சேர்ந்தவரான சுந்தரம் சதீஸ்குமார் (வயது34) என்பவரே இவ்வாறு கோமா மயக்க நிலையில் காலி களுவாப்பிட்டிய அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திரும…

    • 14 replies
    • 2.1k views
  5. செந்தூரன் உள்ளிட்ட சித்திரவதை முகாம் வாசிகளை விடுதலை செய்யக் கோரி தொடர் உண்ணாநிலை போராட்டத்தை மதிமுக நாளை முதல் தாயகத்தில் துவக்குகிறது.அனைத்து அமைப்புகளும் பங்கெடுப்பதாக அறிவிப்பு. http://thaaitamil.com/?p=30088

  6. மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான சுந்தரம் சதீஸ் நேற்று கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு திடீரென மாற்றப்பட்டார். வழக்கு விசாரணை ஒன்றுக்காக காலி நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சதீஸ் வழக்குத் தவணையின் பின்னர் சுயநினைவற்ற நிலையில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே அவர் நேற்று கொழும்பு தேசிய வைத்திய சாலையின் 50 ஆவது விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். அரசியல் கைதியான சதீஸின் மனைவி தனது கணவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவுடன் மன…

  7. [size=4]வணக்கத்துக்குரிய பிரான்சிஸ் ஜோசப் அடிகளார். இன்று உலகின் எங்கோ ஒரு மூலையிலாவது இவரைப்பற்றி பேசிக்கொண்டோ சிந்தித்துக்கொண்டோ இருக்கும் தமிழர்கள் இருக்கிறார்கள். மிகப் பெரியளவில் பேசப்பட்டுக் கவனயீர்ப்பைப் பெற்றிருக்க வேண்டிய அடிகளாரின் விடயம் பத்தோடு பதினொன்றாக சிறிதளவே பேசப்பட்டு வந்துள்ளது.[/size] [size=4]ஆனால் பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரைத் தெரியாமல் வன்னியில் யாரும் இருந்ததில்லை. அவ்வளவு தூரத்துக்கு வன்னியின் சமூக மேம்பாட்டுக்காக அயராது உழைத்திருந்தார் அடிகளார்.[/size] [size=4]யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றபின்னர் முழுநேரமாக தமிழ்ச்சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக உழைக்கத் தொடங்கினார். இந்நிலையில் தமிழர்…

  8. August 30th, 2012 அன்று வெளியிடப்பட்டது எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 21வது கூட்டத் தொடரில், இலங்கைத்தீவில் காணாமல் போயுள்ளவர்களின் நிலை குறித்து, பிரத்தியேக கவனம் செலுத்த வேண்டுமென, காணாமல் போனோருக்கான ஐ.நாவின் ஆய்வுக்குழுவிடம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் கள ஆய்வினை மேற்கொள்வதற்கு, ஐநாவின் ஆய்வறிஞர் குழுவினருக்கான, உள்நுழைவு அனுமதியினை, சிறிலங்கா அரசாங்கம் மறுத்துவரும் நிலையில், ஐநா ஆய்வுக் குழுவினரிடம் இக்கோரிக்கையினை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்வைத்துள்ளது. இலங்கையில் காணாமல்போயுள்ளவர்கள் தொடர்பில், 12 460 முறைப்பாடுகள், காணாமல் போனோருக்கான ஐ.நாவின் ஆய்வுக்குழுவினரிடம் உ…

  9. [size=4] ஊட்டி வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படும் இலங்கை ராணுவ அதிகாரிகள் 2 பேரும், திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று பிரதமர் அலுவலக மத்திய இணையமைச்சர் வி.நாராயண சாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், இவ்விஷயத்தில் தமிழகத்தின் உணர்வுகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணியிடம் தெரிவித்துள்ளதாகவும், இன்னும் 2 நாளில் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அந்தோணி கூறியதாகவும் தெரிவித்தார்.[/size] [size=4]http://news.vikatan.com/?nid=10153#cmt241[/size]

  10. [size=4]ஏறாவூர் பிரதேசத்தில் இரண்டு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் இன்று காலை இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதலில் இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டு ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் பிரதேசத்திலுள்ள ஐயங்கேனி கிராமத்தில் அரசியல் கட்சியொன்றின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு தேடி பெண் ஆதரவாளர்கள் வீடு வீடாக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மற்றுமொரு அரசியல் கட்சியின் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் இப்பெண்களை தாக்கியுள்ளனர். இதையடுத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வர…

  11. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லியுடன், சீனப் படைத்துறையை சேர்ந்த ஜெனரல் தரத்துக்கு நிகரான பதவிகளை வகிக்கும் 11 உயர்அதிகாரிகளும் கொழும்பு வந்துள்ளனர். ஒரே நேரத்தில் வெளிநாடு ஒன்றின் அதிகளவிலான அதிஉயர் மட்டப் படைஅதிகாரிகள் சிறிலங்காவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்திருப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. சீனப் பாதுகாப்பு அமைச்சருடன் சீனாவின் அதிஉயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் 23 பேர் கொழும்பு வந்துள்ளனர். சிற்பபு விமானத்தில் நேற்றுக்காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சீனப் பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழுவினரை வரவேற்க சிறிலங்கா கூட்டுப்படைகளின் த…

  12. [size=5]அரசாங்கத்துக்கு வாக்களித்து பாவங்களையும் சாபங்களையும் நாட்டு மக்கள் பெறக்கூடாது: ரணில்[/size] By General 2012-08-30 09:15:19 மஹிந்த சிந்தனை ௭ன்ற நரகததிலிருந்து நாட்டை பாதுகாக்க எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் பொது மக்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். அரசாங்கத்திற்கு வாக்களித்து பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை மற்றும் ஊழல் மோசடிகள் போன்ற குற்றச்செயல்களின் பாவங்களையும் சாபங்களையும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளக் கூடாது என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டின் கல்வி மற்றும் சமுர்த்தி உதவிகள் என்பவற்றை சீரழிக்கும் புதிய கொள்கைகளை அரசு கையாண்டு வருகின்றது. தேசிய வருமானத்தில் 6 வீதத்தை இலவசக் கல்விக்காக ஒதுக்க வேண்டும…

  13. [size=4]முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரன் கொலை வழக்கில் பிரதான சந்தேகநபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. கிறிஸ்தோபர் வலன்ரின் என்ற பிரதான சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்தே, அவருக்கு மரணதண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ச தீர்ப்பளித்தார். ஐதேக ஆட்சிக்காலத்தில் இந்து சமய விவகார அமைச்சராக இருந்த தி.மகேஸ்வரன் கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் வைத்து கடந்த 2008 ஜனவரி முதலாம் நாள் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேகநபரான வலன்ரினை, மகேஸ்வரனின் மெய்க்காவலர்களால் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.[/s…

  14. மிருகபலி பூஜை ஜனாதிபதியின் தலையீட்டால் நிறுத்தம்; ஆலய நிர்வாகம் அறிவிப்பு முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்பாள்கோயிலில் நடைபெறவிருந்த வருடாந்த மிருகபலி பூஜை ஜனாதிபதியின் தலையீட்டையடுத்து அடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவிருந்த பலி பூஜையினை நடத்தக் கூடாது என பல அரசியற் கட்சிகள் வலியுறுத்தி இருந்தனர். ஆனாலும் இப் பலி பூஜையினை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டால் மட்டுமே தாம் இதனை நிறுத்துவதாக ஆலய நிர்வாகம் முன்னர் அறிவித்திருந்தது. அதனடிப்படி மிருக பலியை நிறுத்துமாறு வலியுறுத்திய கட்சிகள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தமது கோரிக்கையினை அனுப்பியிருந்தனர். அதன்படி குறித்த மிருகப…

  15. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதனால் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குறைந்தது 75 அல்லது 80 சதவீதமான தமிழ் மக்கள் வாக்களித்தால் மட்டு. மாவட்டத்தில் 8 ஆசனங்களைக் கூட்டமைப்பு கைப்பற்றும். அம்பாறையில் 3 ஆசனங்களையும் திருமலையில் 5 ஆசனங்களையும் கைப்பற்றி கூட்டமைப்பு ஆட்சியமைக்கும் சந்தர்ப்பமும் உண்டு ௭ன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட ௭ம்.பி.யுமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பேச்சியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூ…

  16. முன்னைநாதரின் இரதோற்சவம் சிலாபம் ஸ்ரீ முன்னேஸ்வரர் ஆலய வருடாந்த இரதோற்சவம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. சர்வ அலங்கார நாயகனாக சோடச அலங்காரங்களுடன் தேரில் ஆரோகணித்த உற்சவ மூர்த்தியைக் காண பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்திருந்தனர். இன்று அதிகாலை மூல மூர்த்திக்கு விசேட பூஜை,அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூஜைகளும் இரதோற்சவமும் இடம்பெற்றன http://www.virakesari.lk/article/local.php?vid=365

  17. சிறுமி வல்லுறவு; படைவீரர் கைது 13 வயது சிறுமி ஒருவரை பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவத்தில் தொடர்புடைய இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது :– பதின் மூன்று வயதுடைய மாணவி ஒருவரை பல சந்தர்ப்பங்களில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரைக் கைது செய்த கல்கிரியாகம பொலிஸார் அவரை கெக்கிராவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை ௭டுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் இருந்து கிடைத்த முறைப்பாட்டை அடு த்தே குறித்த சந்தேக நபர் …

  18. [size=4]சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி தொடர்ந்து ஆறாவது மாதமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சிறிலங்கா தேயிலைச் சபை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, ஜுலை மாத தேயிலை ஏற்றுமதி 4.2 வீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஜுலை மாத தேயிலை ஏற்றுமதி 25.17 மில்லியன் கிலோவாக இருந்தது. இந்த ஆண்டு ஜுலை மாதம் தேயிலை ஏற்றுமதி 24.11 மில்லியன் கிலோவாக குறைவடைந்துள்ளது. 2011ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி 3.9 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. 2011இன் முதல் ஏழு மாதங்களிலும். 195.83 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டின் முதல் ஏழு …

    • 7 replies
    • 469 views
  19. அவசரமாக இந்ததியா விரைகிறார் மஹிந்த மன்மோகன் சோனியாவுடன் செப்.20 இல் முக்கிய பேச்சு அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை மரியாதை நிமித்தம் மாத்திரமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷ சந்திப்பார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமானதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான விஜயமொன்றை மேற்கொண்டு செப்ரெம்பர் 20ஆம் திகதி இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உட்பட்ட முக்கியஸ்தர்களை ஜனாதிபதி மஹிந்த சந்தித்து பேச்சுகளை நடத்தவுள்ளார். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுத்துவருகிறது என இந்தியா இராஜதந்திர மட்டத்தில் எதிர்ப்புகள் வலுவடைந்துவரும் ஒரு சூழ் நிலையில் ஜனாதிபதியின் இ…

  20. 'வெளியேறு வெளியேறு தமிழர்களை கொன்ற சிங்களர்கள் வெளியேறு'-விண்ணை முட்டும் முழக்கத்தோடு உலக புகழ் பெற்ற ஏற்காடு மான்போர்ட் பள்ளியை முற்றுகையிட்டனர் தமிழுணர்வாளர்கள். சேலம் ஏற்காட்டில் உள்ளது மான்போர்ட் பள்ளி. நடிகர் விக்ரம், அன்புமணி ராமதாஸ் போன்றோர் பயின்ற பிரபல பள்ளி. இங்கு சிங்கள கிரிக்கெட் வீரர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி தரப்பட்டது. நம்ம தமிழினத்தையே அழித்த சிங்களவர்களுக்கு இங்கு தமிழ்நாட்டிலேயே பயிற்சியா என புயலென வெகுண்டேழுந்தனர் தமிழுணர்வாளர்கள். கொளத்தூர் மணியின் திராவிடர் விடுதலை கழகம்,விடுதலை சிறுத்தைகள்,தமிழக வழக்குரைஞர் மாணவர் கூட்டமைப்பு ,நாம் தமிழர் கட்சி,உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் பள்ளி முன் திரண்டனர். 'உள்ளே பயிற்சி நடக்கிறத…

    • 0 replies
    • 510 views
  21. முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து போரினால் இடம்பெயர்ந்த சுமார் 852 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர் இன்னும் மீளக் குடியமர்த்தப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இன்னமும் மீளக்குடிய மர்த்தப்படாமல் மெனிக் பாம் நலன்புரி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கரைதுறைப்பற்றில் அம்பலவன் பொக்கணை யில் 127 குடும்பங்களைச் சேர்ந்த 459 பேரும், முள்ளிவாய்க்கால் மேற்கில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 125 பேரும், கேப்பாப்புலவில் 164 குடும்பங்களைச் சேர்ந்த 568 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் மந்துவில் பகுதியில் 241 குடும்பகளைச் சேர்ந்த 796 பேரும், ஆனந்தபுரம் பகுதியில் 107 குடும்பங்களைச…

    • 0 replies
    • 400 views
  22. சீனப் பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்து விட்டே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்றுமாலை ஈரான் புறப்பட்டுச் சென்றார்.அணிசேரா நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்றுமாலை தெஹ்ரான் புறப்பட்டுச் சென்றார். சீனப் பாதுகாப்பு அமைச்சர் நேற்று பிற்பகல் கொழும்பு வந்ததுமே அவரை அலரி மாளிகையில் சிறிலங்கா அதிபர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் சீன பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட 13 முக்கிய சீனப் படை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தச் சந்திப்பின்போது, அனைத்துலக அளவில் சிறிலங்கா பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட போது துணை நின்ற சீனாவுக்கு சிறிலங்கா அதிபர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்தப் பயணம் சீனாவுடனான உறவு ம…

    • 0 replies
    • 588 views
  23. காணாமல் போனவர்களுக்காய் ஒரு குரல்.... வன்னியில் இருந்து ஒரு குமுறல் 30 ஆகஸ்ட் 2012 காணாமல் போனோர் தினமாய் இன்று அநுஸ்ட்டிக்க அனைத்துத் தரப்பு மக்களும் திரண்டுள்ளனர். இனி வரும் காலங்களில் கைதாகுதல், காணாமல் போகுதல் என்ற சூழல் அருகி வரும் விதமாய் நடவடிக்கை ஒன்றை அரசு ஏற்படுத்தவேண்டும். காணாமல் போதல் என்பது ஒவ்வொரு உறவுகளிற்கும் உள்ளூர வலியை, உளவியல் தாக்கத்தை உண்டாக்கும். உண்மையைப் பேசினால் . உரக்கக் குரல் கொடுத்தல் உடனே அந்த நபர் காணாமல் போவது இன்றைய நாளில் எம் தேசத்தில் சர்வசாதாரணம். எத்தனை ஆண்டுகள் தம் உறவுகளை தொலைத்து விட்டு கண்ணீருடன் அலையும் மனிதர்கள் எத்தனை பேர் . இழப்பிலாதவர்களால் இழந்தவர்களின் வலியை உணர்ந்து கொள்ள முடியாது, என்றாலும் அவர்களிடத்து…

  24. இலங்கை தமிழர்கள் அழிவிற்கு யார் காரணம்? கருணாநிதி கேள்வி சென்னை:"இலங்கைத் தமிழர்கள் அழிவிற்கு, யார் காரணம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். அவரது அறிக்கை:அ.தி.மு.க., செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், தாங்கள் மக்களுக்காக என்ன செய்யப் போகிறோம் என்று சொல்வதற்கு மாறாக, தி.மு.க.,வையும், என்னையும் திட்டுவது தான் நோக்கம் என்ற அடிப்படையில், வார்த்தைகளைக் கொட்டியுள்ளனர்.இலங்கைத் தமிழர்களுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், என் மீதான தாக்குதல் தான் முழுமையாக உள்ளது. கடந்த, 2009ம் ஆண்டில், இலங்கையில் இனக்கலவரம் உச்ச கட்டத்தில் இருந்த போது, மத்திய அரசை நான் வலியுறுத்தவில்லையென்றும், அப்பாவி இலங்கைத் தமிழர்கள் அழிவிற்கு, நான் தான் கா…

    • 0 replies
    • 330 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.