ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
தமிழினப் படுகொலைதாரியும், போர்க் குற்றவாளியுமான மகிந்த இராஜபக்ச சுதந்திரமாக நடமாடுவதைத் தடுப்போம் என தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, எமது சுதந்திர விடுதலைக்காக ஐ.நாவின் தீர்மானங்களுக்கமைய சுயமாக போராடிய ஓர் இனம் நாம். உலக மனிதாபிமான விழுமியங்களுக்கு மதிப்பளித்து ஓர் சமாதான வழிமுறையில் எமக்கான தீர்வைக் கண்டுவிடலாம் என்று திடமாக நம்பி சர்வதேசங்களுடன் கைகோர்த்து நடந்தவர்கள் நாம். நமது தேசியத் தலைவரது தீர்க்கதரிசனமான செயற்பாடுகளோடு இதுவரை காலமும் உயிர்ப்புடன் இணைந்திருந்தவர்கள் நாம். ஆனால் இலங்கையின் அரச பயங்கரவாதமும், சர்வதேச பயங்கரவாதமும் கைகோர்த்து எம் தமிழ் உறவுகளை முள்ளிவாய்க்…
-
- 0 replies
- 615 views
-
-
எமது மக்கள் அனைவரினையும் யூன் மாதம் 6ஆம் நாள் காலை 9:00 மணிக்கு லண்டன் மான்சன் கவுசுக்கு முன்னால் அணிதிரளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம். மனிதகுலத்திற்கு எதிரான திட்டமிட்ட பாரிய தமிழினவழிப்பை மேற்கொண்ட போர்க்குற்றவாளியான சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுநலவாய நாடுகளின் வர்த்தகமன்றக் கூட்டத்தில் எதிர்வரும் 06 ஆம் திகதி புதன்கிழமை காலை 10:00 மணி தொடக்கம் 10:30 மணிக்கிடையில் உரையாற்றவுள்ளார். மாபெரும் போர்க்குற்றவாளி மகிந்தவின் உரை லண்டனில் உள்ள மான்சன் கவுசில்(Mansion House, London, EC4N 8BH (Tube: Bank) நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, மகிந்தவுக்கான மதியவிருந்து பொதுநலவாய நாடுகளின் செயலகம் அமைந்திருக்கும் லண்டன் மால்பொறோக் கவுசில்(Marlborough House, Pall Mall, London…
-
- 0 replies
- 864 views
-
-
வெளிநாடுகளுக்கு தப்பியோடிய விடுதலைப் புலிகளாலும் மேற்குலக நாட்டவர்களினாலும் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். இவர்களின் நிழல்கள் தேசிய அரசியலுக்குள் ஊடுருவி பிரிவினைவாதத்திற்கு நாட்டை நகர்த்தி செல்கின்றனர் எனவும் வீரவங்ச தெரிவித்துள்ளார். நாட்டின் மையப் பகுதியை நோக்கி பிரிவினைவாத சக்திகளால் பிரயோகிக்கப்படும் சவால்களை ௭திர்கொள்ள பொதுமக்களின் ஆதரவு அரசிற்கு அத்தியாவசியமானதாகும். எனவே பேதமின்றி அரசுக்கு ஆதரவு வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும். ஆகஸ்ட் மாதத்திற்குள் ரூபாவின் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடையச் செய்ய சர்வதேச புலிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு முகம் கொடுக்கும் வகையில் மத்திய வங்கி உசார் நிலையில்…
-
- 1 reply
- 761 views
-
-
(கே.சஞ்சயன்) ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிப்பதற்கு, கடந்தவாரம் ஐ.நா பொதுச்சபை அங்கீகாரம் அளித்துள்ளது. இவரது பதவியை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அனுமதி கோரியதை அடுத்து, இந்த அனுமதி கொடுக்கப்பட்டது. அதுவும் ஏகமனதான அங்கீகாரம் கிடைத்தது. 193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா பொதுச்சபையில் நவநீதம்பிள்ளையின் பதவி நீடிப்புக்கு எந்த நாடுமே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது தான் ஆச்சரியமான விடயம். நவநீதம்பிள்ளையை கடுமையாக எதிர்த்த நாடுகளில் ஒன்று இலங்கை. அவர் பாரபட்சமான முறையில் நடந்து கொள்வதாகவும், ஐ.நா சாசனங்களை மீறிச் செயற்படுவதாகவும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் க…
-
- 0 replies
- 1k views
-
-
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறையிலிருந்து விடுதலையானதையடுத்து, தனது "அனோமா பொன்சேகா மன்றத்தில்" இணைந்துகொள்ள பெரும் எண்ணிக்கையானோர் ஆர்வம் காட்டுவதாக அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி அனோமா பொன்சேகா மன்றத்தை அனேமா பொன்சேகா ஸ்தாபித்தார். இவ்வமைப்பு பின்தங்கிய மக்களுக்கு உதவுவதற்கான அமைப்பாகும்.இந்த மன்றத்தில் அங்கத்தவர்களாக இணைவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாக அவர் கூறினார். இம்மன்றத்தில் இணைய விரும்புவதாக கூறும் பலரின் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அடுத்த மாதம் புதிய அங்கத்தவர்களை சேர்க்கவுள்ளோம். இதில் பெரும் எண்ணிக்கையானோர் இணைவர் என எதிர்பார்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார். அனோமா பொன்…
-
- 0 replies
- 611 views
-
-
-
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அவற்றில் சம்பந்தப்பட்ட ஐந்து தமிழ் அரசியல் கைதிகளை நீதிமன்றக் காவலில் இருந்து பூஸா தடுப்பு முகாமுக்கு மாற்றுமாறு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய அவரால் வழங்கப்பட்ட கடிதத்திற்கு அமையவே நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கைதிகள் சார்பில் ஆஜராகி வாதாடி வருகின்ற சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 1982 ஆம் ஆண்டு திருத்த விதிகளுக்கம…
-
- 1 reply
- 368 views
-
-
தமிழர்கள் வந்தேறுகுடிகள்தான் என்பதை நிரூபிப்பதற்கு விவாதம் தேவையில்லை. வரலாற்றுச் சான்றுகள் உள்ளன எனக் கூறி கலாநிதி விக்கிரமபாகு கரு ணாரட்னவின் சவாலை ஏற்கமறுத்துவிட்டார் எல்லாவ மேதானந்த தேரர். தமிழர்கள் எந்த உலகிலிருந்து வந்திருந்தாலும் பரவாயில்லை. அவர்கள் சிங்களவர்களுடன் ஒத்துத்தான் வாழவேண்டும் என்றும் தேரர் கூறுகின்றார். வடக்கு, தமிழர்களுக்கு மட்டும் உரிய பிரதேசம் அல்ல. யார் வேண்டுமானாலும் எங்கும் வாழலாம் எனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னர் பி.பி. பாதுகாப்புச் செயலரின் கூற்றை வரவேற்று அதற்குப் பக்கவாத்தியம் வாசிக்கும் வகையில், “வந்தேறு குடிகளான தமிழர்கள் வடக்குக்கு உரிமை கோருவதா” எனக் கடும் போக்கிலான கருத்துகளை முன்வைத்தார் ஜாதிக ஹெல உ…
-
- 1 reply
- 607 views
-
-
சிறீலங்காவின் சிங்கள பௌத்த துறவி ஒருவருக்கு பிரித்தானியாவில் 7 வருடச் சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை நேற்று வெள்ளிக்கிழமை ஐஸ்வேத் க்ரௌவ்ன் நீதிமன்றம் வழங்கியது. டல்வேட்டன் வீதியில் உள்ள குரொய்டொன் என்ற இடத்தில் வசித்து வந்த பிரித்தானியாவின் பிரதம சங்கநாயக்க தேரரும்இ தேமஸ் பௌத்த விஹாரை சிறீலங்காவின் கம்பஹா பரிவேனாதிபதியுமான ஸ்ரீ கல்யாணி சமாகி தர்ம மஹா சங்கத்தின் தலைவருமான பஹலாகம சோமரத்ன தேரருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டது. 1985ஆம் ஆண்டு 16 வயதாக இருந்த சிறுமி ஒருவரை தகாத முறையில் தாக்கிய குற்றச்சாட்டுக்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் குற்றவாளியாக இனங்காணப்பட்ட இவரை சிறுவர்கள் சம்பந்தப்பட்ட பணிகளில் இருந்து ஆயுட்கா…
-
- 1 reply
- 538 views
-
-
சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவின் லண்டன் பயணத்திற்கு எதிரான இரண்டாவது மக்கள் போராட்டம் (01-06-2012) லண்டனில் இடம்பெற்றது.பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், மத்திய லண்டனிலுள்ள பொதுநலவாய நாடுகளில் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். தமிழின அழிப்பை மேற்கொண்டு, போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவை பிரித்தானிய மகாராணியின் வைர விழாவிற்கு அழைத்திருப்பது, தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயற்பாடு எனவும், போர்க்குற்ற நபர் பிரித்தானிய மண்ணில் காலடி வைக்க தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கூறினர். …
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை மற்றும் ஈரான் ஆகிய நாட்டு சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி பரஸ்பரம் பயணம் செய்ய இந்த இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரசுமுறை பயணமாக இலங்கை சென்றுள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் 30, 31ம் தேதிகளில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெறும் 16வது அணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஈரான் அதிபர் மஹ்மூத் அஹமது நிஜாடின் விடுத்த அழைப்பு கடிதத்தை அவர் கொடுத்தார். இலங்கை மற்றும் ஈரான் சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி பரஸ்பரம் பயணம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இதற்கு ஏற்கனவே இரு நாடுகளும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந…
-
- 2 replies
- 656 views
-
-
பிரித்தானியாவில் அரசியல் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்கள் சிறீலங்காவின் தேசிய புலனாய்வுத் தகவல் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை படைபுலனாய்வாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் 36 பேர் இன்று காலை பிரித்தானியாவில் இருந்து கொழும்பை சென்றடைந்துள்ளார்கள். அவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் இடம்பெற்று பின்னர் புலனாய்வு விசாரணக்குகொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://thaaitamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-36-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கை இறுதிப் போரின் போது ஐ.நா சபையின் கண்களில் மண்ணைத் தூவி பல காரியங்கள் நடந்துள்ளன. போர்க் குற்றத்தைவிட பாரிய சர்வதேச ஏமாற்று கபட நாடகம் ஒன்று நடந்துள்ளது. இதை ஐ.நா அம்பலப்படுத்துமா என்ற கேள்வியை சனல 4 தொடர்ந்து கேட்டு வந்தது. இந்த நிலையில் ஐ.நாவின் புதிய குழு அமைப்பு சிறிய நம்பிக்கை தருகிறது. இது குறித்த செய்தி …. இலங்கையின் இறுதிப் போரின்போது இடம்பெற்ற மனித உயிரிழப்புக்கள் மற்றும் இதர பாதிப்புக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புடைய தொண்டர் நிறுவனங்கள் ஆக்கபூர்வமாக செயற்பட்டுள்ளனவா என்பதை கண்டறி வதற்கு மூன்று பேர்கொண்ட ஐ.நா. நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழு நான்கு மாத காலத்…
-
- 4 replies
- 1.8k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உமைகளுக்கான உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையோ அவரது குழுவினரோ இலங்கை வருவதால் அரசுக்கு எவ்விதமான ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் நாட்டின் உள்ளக நிர்வாகங்களில் தலையிடவோ அழுத்தங்களை பிரயோகிப்பதாகவோ அவர்களின் விஜயம் அமையக் கூடாது. என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கையின் உள்ளார்ந்த நிர்வாகக் கட்டமைப்புக்கு சர்வதேசத்தின் ஆலோசனைகள் தேவையில்லை. வடக்கு கிழக்கில் முகாம்களை நிர்மாணித்தல், அரசியல் தீர்வை ஏற்படுத்தல் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளை ஆராய்வது போன்ற விடயங்கள் உள்நாட்டு விவகாரங்களாகும். இதில் சர்வதேச நாடுகள் தலையிட்டு நாட்டின் நீதிமன்ற பொறிமுறையினை இழிவுபடுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் அரசாங்கம் குறிப்பிட்ட…
-
- 2 replies
- 693 views
-
-
யாழ் போக்குவரத்து பஸ்களில் நடப்பது என்ன? யாழ்ப்பாணத்தோடு ஒட்டிப் பிறந்த பிரச்சினையாக பஸ் போக்குவரத்து தொடர்ந்து வருகிறது. தனியார் பஸ், இ.போ.ச. பஸ் என்பன பெயர்களில் தான் வித்தியாசமே தவிர பொது மக்களை சோதனைக்குள்ளாக்கு வதில் இவ் இரண்டு சேவைகளுமே போட்டி போட்டுக் கொண்டு செயற் படுகின்றன. யாழ்ப்பாணத்தோடு ஒட்டிப் பிறந்த பிரச்சினையாக பஸ் போக்குவரத்து தொடர்ந்து வருகிறது. தனியார் பஸ், இ.போ.ச. பஸ் என்பன பெயர்களில் தான் வித்தியாசமே தவிர பொது மக்களை சோதனைக்குள்ளாக்குவதில் இவ் இரண்டு சேவைகளுமே போட்டி போட்டுக்கொண்டு செயற்படுகின்றன. போக்குவரத்து பிரச்சினை பற்றி எத்தனையோ முறை ஊடகங்கள் கூக்குரல் இட்டபோதும் அவற்றை கிஞ்சித்தேனும் கணக்கில் எடுக்கவில்லை இந்தப் போக்குவரத்துச் ச…
-
- 2 replies
- 1.7k views
-
-
-
தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரியின் தகாத நடத்தையில் அதிருப்தி தெரிவித்து ஆஸ்பத்திரி பெண் ஊழியர்களும் பொதுமக்களும் இணைந்து பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளருக்கு வியாழக்கிழமை மகஜரொன்றைக் கையளித்துள்ளனர். பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இந்த வைத்திய அதிகாரி ஆஸ்பத்திரி பெண் தாதியர்களுடனும் பெண் ஊழியர்களுடனும் தவறாக நடந்துகொள்ள முற்படுவதாக நீண்ட நாளாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. தற்போது இவர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வரும் இளம் பெண்களிடமும் இதுபோல் தவறாக நடந்துகொள்ள முற்படுவதுடன் அங்கச் சேஷ்டைகளிலும் ஈடுபடுவதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், இந்த டாக்டர் ஆஸ்பத்திரி பொறுப்பதிகாரி என்பதால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் நேற…
-
- 0 replies
- 489 views
-
-
யுத்தம் முடிவடைந்த மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதி வழங்கப்படாதது மக்களின் பலத்த எதிர்ப்பை மீறி சிறிலங்கா படையினர் பௌத்த விகாரை ஒன்றை அமைத்துள்ளனர். யுத்தம் முடிவடைந்த மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னரே வட்டுவாகல் பிரதேசத்திற்கு செல்வதற்கான வீதி திறக்கப்பட்டது. இதற்கு முன்னர் சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர். எனினும் தற்போது, வீதி திறக்கப்பட்டுள்ள போதிலும் போக்குவரத்துக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீள்குடியேற்றத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. வட்டுவாகல் பாலம் அமைந்துள்ள பகுதியில் உள்ள மைதானத்தில் இந்த விகார…
-
- 0 replies
- 475 views
-
-
இலங்கையின் இறுதிப் போரின்போது இடம்பெற்ற மனித உயிரிழப்புக்கள் மற்றும் இதர பாதிப்புக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புடைய தொண்டர் நிறுவனங்கள் ஆக்கபூர்வமாக செயற்பட்டுள்ளனவா என்பதை கண்டறிவதற்கு மூன்று பேர்கொண்ட ஐ.நா. நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழு நான்கு மாத காலத்துக்குள் தனது அறிக்கையை ஐ.நா. சபையிடம் கையளிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சுயாதீன ஐ.நா. ஆலோசகர்களில் ஒருவரான சாள்ஸ் பெற்றி இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கும் அதேசமயம் ஐ.நாவின் உயர்மட்ட அதிகாரிகளான பென் மெட்ஜ் கொடும்னி, லினா சின்ஹா ஆகியோர் இதன் இதர உறுப்பினர்களாவர். இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது ஆயிரக்கணக்கான மக…
-
- 4 replies
- 842 views
-
-
இலங்கைத் தீவு தமிழர் தேசம் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவேன். வரலாறு தெரிந்தால் முது கெலும்பிருந்தால் எல்லாவல மேதானந்த தேரர் என்னுடன் பகிரங்கமான விவாதமொன்றுக்கு வரவேண்டும். இவ்வாறு கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன சவால் விடுத்துள்ளார்.சிங்களவர்கள்தான் வந்தேறுகுடிகள் என்பதையும், வடக்கு தமிழர்களின் பூர்வீகம் என்ற யதார்த்தபூர்வமான உண்மையையும் தேரருக்குக் கற்பிப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார். வந்தேறுகுடிகளான தமிழ்மக்கள் எப்படி வடக்கிற்கு உரிமை கோருவது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் காரசாரமான முறையில் கருத்துத் தெரிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்த…
-
- 13 replies
- 2.2k views
-
-
தாயக விடுதலைவேட்கை கொண்ட மனிதர்கள், மகாத்மாக்கள் சிந்திய இரத்தம் இன்னமும் காயவில்லை. சுதந்திர எண்ணத்தோடு அவர்கள் நடந்து சென்ற பாதையில் காலடித்தடங்கள் இன்னமும் அழியாமல் இருக்கின்றது. துப்பாக்கிச் சன்னங்கள், வெடிகுண்டுகள் உடல் கிழித்தபோது வான்முட்ட அவர்கள் போட்ட கூச்சல் இன்னமும் காதோடு நிற்கின்றது. போர் சென்று வரச்சொன்னவர்கள் அவர்களின் கல்லறைகளை கூட தொலைத்துவிட்டு நிற்கின்றோம். ஒரு நிமிடம் வெயிலில் நின்று பழகாதவர்கள், துப்பாக்கியின் கனமறியாதவர்கள், சொகுசு பங்களாவில் வாழ்ந்தவர்கள் இன்று எங்கள் மகாத்மாக்களைப் பற்றிப் பேசுகிறார்கள். ஊமயாய், குருடராய், செவிடராய் இருந்துவிட்டு வருகின்றோம். என்னே மனிதர்கள் நாங்கள்? வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களா கடந்த 30வருடம் போராடினார்…
-
- 12 replies
- 1.5k views
-
-
திரு.சுமந்திரனின் கருத்தும் திரு.பொன் பாலராஜனின் கருத்தும்
-
- 0 replies
- 963 views
-
-
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் சிறுவன் ஒருவனை காத்தான்குடிக்கு கடத்திச் சென்று மதம் மாற்றியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 13 வயதுடைய குறித்த சிறுவன் சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வைத்து அவனது தாயாரினால் அடையாளம் காணப்பட்டு பொலிசாரின் உதவியுடன் மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே இக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இச் சிறுவனை காத்தான்குடிக்கு கடத்திச் சென்று இஸ்லாமிய மதத்துக்கு மாற்றியது மட்டுமன்றி மனிதாபிமானமற்ற வகையில் நடத்தியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.இச் சம்பவம் தொடர்பில் மூவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சிறுவனை காத்தான்குடிக்கு அழைத்துச் சென்று தனது …
-
- 1 reply
- 1.4k views
-
-
பிடிஎப் font to unicode தமிழுக்கு சுராத தளம் மூலம் மாற்றியதால் கீழ்க்காணும் கட்டுரையில் எழுத்துப்பிழைகள் வந்துள்ளன. தெளிவாக படிக்க இணைக்கப்பட்டுள்ள pdf file காணவும். இனத்துரோக வரலாற்றின் தொடர்ச்சி - நாம் தமிழர் 1 இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் வேதகாலம் தொடங்கி, கணினி காலம் வரை பெரும்பான்மை மக்கள் மீது மாற்ற முடியாத, அகற்ற முடியாத ஆதிக்கசக்திகளாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களுக்கு, அவர்களின் ஆதிக்கம் நிலைத்துநிற்க, பார்ப்பனர் அல்லாத இனத் துரோகிகள்தான் பெரிதும் பயன்பட்டிருக்கிறார்கள். வரலாறு முழுதும் அதற்கான சான்றுகளைப் பார்க்கலாம். அந்த துரோகத்தின் தொடர்ச்சிதான் இந்த நாம் தமிழர் ஆவணம். 31.05.12 பெரியார் முழக்கம் ஏட்டில் அந்த நாம் தமிழ…
-
- 0 replies
- 1.6k views
-
-
வெள்ளிக்கிரகத்தின் சூரிய கடப்பு! உங்களாலும் பார்க்க முடியும் சூரியனை வெள்ளிக் கிரகம் கடந்து செல்லும் நிகழ்வு எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வினை இலங்கை மக்கள் 6ஆம் திகதி காலை 7 மணியளவில் அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. சூரிய வட்டத்தின் ஊடாக வெள்ளிக்கிரகம் நகர்ந்து செல்வதை வெள்ளிக்கிரகத்தின் சூரிய கடப்பு என தெரிவிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் வெள்ளிக்கிரகம் ஒரு சிறிய புள்ளி போல சூரியனின் முன்பாக ஊர்ந்து செல்வது போல காணலாம். புதன் மற்றும் வெள்ளிக்கிரகங்களின் சுற்றுப்பாதைகள் பூமியின் சுற்றுப்பாதையின் உட்புறமாக அமைந்துள்ளன. எனவே இந்த இரண்டு கிரகங்கள் மட்டுமே சூரியனுக்கும், பூமிக்கும் இடையே வர இயலும். வெள்ளியின் சூரிய …
-
- 0 replies
- 491 views
-