ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
நாட்டில் இன்று இடம்பெறும் சம்பவங்கள் குறித்து இலங்கையர் என்ற ரீதியில் வெக்கமடைகின்றேன். ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் குறித்து கவலைப்படுகின்றேன் என முன்னாள் பிரதமரும் சிரேஷ்ட அமைச்சருமான இரட்ணசிறி விக்கிரமநாயக்க களுத்துறை இங்கிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கூறினார். அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்: இருப்பவர்கள் திடீரென காணாமற் போய்விடுகின்றனர். அவர்களுக்கு என்ன நடக்கின்றது. யார் இதைச் செய்கின்றார்கள்? என்பது தெரியவில்லை. ஆனால் வெறுமனே இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்து விட முடியாது. யார் இதைச் செய்கின்றார்கள். எப்படி நடக்கின்றது என்பது பற்றி தேடிப்பார்க்க வேண்டிய பொறுப்பு எமக்குண்டு. பாதையில் போய்க் கொ…
-
- 0 replies
- 435 views
-
-
திருகோணமலை குச்சவெளியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு சிறப்பு புலனாய்வுப் பிரிவினரால் விசாணைக்கு உட்படுத்தப்பட்ட இளைஞர்களில் ஐவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து மேலும் தெரியவருவதாவது, விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் குச்சவெளிக்கிராமத்தினைச் சேர்ந்த இளைஞர்களும் யுவதிகளுமாக 11பேர் கடந்த 21ஆம் திகதி கொழும்பு சிறப்பு புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களில் ஐவர் கடந்த இரவு திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு அங்கிருந்து புலனாய்வுப் பிரிவினரால் கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களை கைது செய்து வெலிக்கந்தைக்கு கொண்டு செல்வதாக கைது ச…
-
- 0 replies
- 556 views
-
-
இந்திய நாடாளுமன்ற குழு எதிர்க்கட்சித் தலைவர் பாரதிய ஜனதாவைச் சார்ந்த சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கைச் சென்று, தமிழர் வாழும் பகுதிகளையும் சில அகதிகள் முகாம்களையும் பார்வையிட்டு, ராஜபக்சேவை சந்தித்துவிட்டு திரும்பியுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கட்சிகள் இதில் இடம் பெறவில்லை. இலங்கை அரசின் போர்க் குற்றங்களைக் கடுமையாக விமர்சித்து வரும் இந்திய கம்யூனி°ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரதிநிதிகள், இக்குழுவில் இராசபக்சேவைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு சேர்க்கப்படவில்லை என்று தெரிகிறது. ஈழத்தில் இறுதி கட்ட இனப் படுகொலையின்போது போரை நிறுத்தி, தமிழினத்தைக் காப்பாற்றுங்கள் என்று தமிழகமே திரண்டு நின்று குரல் கொடுத்தபோது, அதை காத…
-
- 0 replies
- 334 views
-
-
முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளைத் தடுக்க அரசாங்கம் தவறியுள்ளதால் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தம்புள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், இந்தத் தாக்குதலுக்கு வழங்கப்பட்ட ஆதரவு, பௌத்த பிக்குகள் இதற்கெதிராக தூண்டப்பட்டமை ஆகியவற்றுக்கு எதிராக ஜனாதிபதி இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது முஸ்லிம் சமுகம் தற்போது அதிருப்திகொண்டுள்ளது. தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதல் ஜனாதிபதியின் பூரண ஆதரவுடன், இமானுவேல் சுமங்கள தேரர், மதுபான வர்த்தகர் லக்ஸ்மன் பெரேரா எம்.பி ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை…
-
- 12 replies
- 1k views
-
-
பேப்பர் எடுங்கடா... விடுதலைப் பேப்பர் எடுங்கடா.... வரதரின் மீள் வருகை. இந்தியக் கைக்கூலி வரதாரஜப் பெருமாள் மஹிந்தரிடமும் கூலியைப் பெற்றுக்கொண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில்குதிக்க திட்டமிட்டுள்ளார். ஐ.ம.சு.மு. அரசின் பங்காளிக்கட்சியாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் குதிக்கவே முன்னாள் முதலமைச்சர் வரதரா ஜப் பெருமாள் அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்கிறார் எனத் தெரியவருகின்றது. . இது தொடர்பில் அவரும், அவரது இயக்கப் பிரமுகர்களும் பல்வேறுபட்ட பேச்சுகளில் மிக இரகசியமாக ஈடுபட்டு வருகின்றனர் என மிக நம்பகமான தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. . கடந்தவாரம் இலங்கையிலிருந்து சென்னைக்குச் சென்ற கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவருடன் இது தொடர்பில் பேச்சு நடத்தியிருப…
-
- 1 reply
- 836 views
-
-
இலங்கைத் தமிழ் தலைவர்கள் தனி ஈழத்தை கோரவில்லை என இந்திய மாக்சிச கம்யூனிஸட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரீ.கே. ரங்கராஜன் தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென்றே தமிழ்;த் தலைவர்கள் விரும்புகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட இலங்கையின் சகல அரசியல் தலைவர்களும் ஐக்கிய இலங்கை என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஈழம் பற்றி பேசவில்லை எனவும், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டம் வழங்கப்பட வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார் என ரங்கராஜன் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்…
-
- 10 replies
- 1.2k views
-
-
பௌத்த விகாரையின் பிரதம சங்க நாயக்கர் - இர்ஷாத் றஹ்மத்துல தம்புள்ள ரன்கிரி பிரதேசத்தில் சர்ச்சைக்குட்படுத்தப்பட்டுள்ள ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாலை சூழ பாதுகாப்பு நிமித்தம் விசேட அதிரடிப் படைகளினால் பாதுகாப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன்,அப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலீஸ்,இரானுவம்,விசேட அதிரடிப் படையினர் என குவிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதே வேளை இன்று காலை பௌத்த விகாரையின் பிரதம சங்க நாயக்கர் மூலம் சகல சிங்கள கிரமாங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்தியாதெனில் தம்புள்ள நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் சிங்ளவர்கள் எவரும் பொருட் கொள்வனவு செய்யக் கூடாது என்று ,இதே வேளை நேற்று மாலை முஸ்லிம்கள் செறி…
-
- 8 replies
- 1.3k views
-
-
புலிகள் யாழ். குடாநாட்டின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலம். சாவகச்சேரி, கைதடி அரியாலை என்று அவர்கள் கைப்பற்றி யாழ் நகர்ப்பகுதியிலிருந்து வெறும் 3 மைல் தொலைவில் நின்றிருந்த நேரம். அந்த நேரம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை வரைபடத்தில் பார்த்தால், இந்தா யாழ்ப்பாணம் இன்னும் ரெண்டு நாளில விழுந்திடும் என்ற நிலைதான். அதைவிட யாழின் எந்த மூலைக்கும் தமது எறிகணைகளைச் செலுத்தக்கூடிய நிலைக்கு புலிகள் வந்துவிட்டிருந்தார்கள். இந்த நிலையில் யாழ் இராணுவத்தை எப்படிக் காப்பாற்றுவது என்றுதான் எல்லோருக்கும் கவலை. நாங்களும் எப்படா யாழ். கைப்பற்றப்படும் எண்டு பாத்துக்கொண்டு இருந்தம். ஆனா அப்பிடி இப்பிடியெண்டு இழுபட்டு கடசியா புலிகளின் அணிகள் மீதே தாக்…
-
- 0 replies
- 582 views
-
-
தம்புள்ளைப் பள்ளிவாசல் பிக்குகளால் சேதமாக்கப்பட்ட விவகாரத்தையடுத்து சிறுபான்மையின மக்கள் மத்தியில் எழுந்துள்ள கொதிப்பு தணியும் முன்னரே கிழக்கில் திருகோணமலையில் 60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தையும் அகற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்தப் பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கையானது தமிழ் மக்களின் கலாசார, சமய விடயங்களில் கைவைக்கும் விடயமாக மாறியுள்ளதுடன் இந்து மதத்தையும் பாதிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை பொதுவைத்தியசாலை வள…
-
- 0 replies
- 549 views
-
-
கல்முனை பிரதேசத்தில் 15 அடி நீளமுள்ள முதலை ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வன பரிபாலன சபை அதிகாரிகளினால் பிடிக்கப்பட்டுள்ளது. கல்முனை, பாண்டிருப்பு தாளாவட்டான் சந்தியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்தே இம் முதலை பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கிணற்றில் முதலையைக் கண்ட பொதுமக்கள் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததையடுத்து தொடர்ந்து பொலிஸாரின் உதவியுடன் வனப் பரிபாலன சபை அதிகாரிகள் முதலையை பிடித்து லொறியில் ஏற்றிச்சென்றனர். மேற்படி கிணறு உடைக்கப்பட்டு இம்முதலை பிடிக்கப்பட்டுள்ளது. http://thaaitamil.com/?p=16798
-
- 0 replies
- 511 views
-
-
இந்த நாட்டிலே நாலா புறத்திலும் வாழுகின்ற முஸ்லிம்களின் மனதிலே இன்று மிகப்பெரிய ஒரு பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை அதாவது இரண்டு நாட்களுக்கு முன்பு தம்புள்ளையில் நடந்த சம்பவம் எங்கள் எல்லோரையும் ஆழ்ந்த கவலையை அதே நேரம் ஆத்திரம் அப்பப்போ ஆவேசம் என்ற நிலைமைக்கு தள்ளியிருக்கிறது என நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவ+ப் ஹக்கீம் தெரித்தார். காத்தான்குடியில் நேற்று மாலை இடம்பெற்ற கதீப், முஅத்தின் கௌரவிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர். 'நேற்று(சனிக்கிழமை) முழு நாளும் காலையிலே மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா தலைமையில் நா…
-
- 16 replies
- 1.7k views
-
-
2011 : சிறிலங்கன் எயர்லைன்ஸ் 19.1 பில்லியன்கள் ரூபாய் நட்டம் சிங்கள மத்தியவங்கியின் உத்தியோகபூர்வ அறிக்கையின் படி: 2011 மொத்த வியாபாரம்: 78.9 B Rs ; இது 16.3 வீதம் 2010 உடன் ஒப்பிடும்பொழுது அதிகரிப்பு 2011 மொத்த செலவு : 98.0 B Rs ; இது 32.2 வீதம் 2010 உடன் ஒப்பிடும்பொழுது அதிகரிப்பு நிகர நட்டம்: 19.1 B Rs ----------------------- மிகின் நட்டம் : 455 M Rs http://www.lankabusinessonline.com/fullstory.php?nid=949803814
-
- 6 replies
- 987 views
-
-
கொன்சவேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பற்றிக் பிறவுண், என்.டி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முனைவர் கிறெக் இசுகொட் மற்றும் லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி யூடி செரகோ ஆகியோரின் ஆதரவுடன் இக்காணொளி ஒட்டாவா பாராளுமன்ற வளாகத்தில் காண்பிக்கப்பட உள்ளது. தமிழ்க் கனடியர்களின் சார்பில் கனடியப் பாராளுமன்ற உறுப்பினருக்கும் செனற் சபை உறுப்பினருக்கும் என தனிப்பட்ட முறையில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்விற் கலந்து கொள்ளுமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினருக்கும் செனற் சபை உறுப்பினருக்கும் கனடியத் தமிழர் பேரவை தனிப்பட்ட அழைப்புகளை அனுப்பியுள்ளது. தங்கள் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரைத் தொடர்பு கொண்டு இக் காணொளியைக் காண அழைப…
-
- 4 replies
- 693 views
-
-
தம்புள்ளை நகரில் உள்ள ரஜமஹா விகாரையின் புனிதப் பிரதேசம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை வரும் 6 மாதங்களுக்குள் நிறைவேற்றி முடிக்க வேண்டுமென்று தம்புள்ளையில் இன்று திங்கட்கிழமை நடந்த கூட்டமொன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. புத்த சாசன அமைச்சின் ஏற்பாட்டில் அமைச்சின் செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் தம்புள்ளை ரஜமஹா விகாரையின் தலைமை மதகுரு இனாமலுவே சுமங்கள தேரர் ஆகியோர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் 6 மாதங்களுக்குள் புனித பிரதேசம் என்று கூறப்படும் பகுதியிலுள்ள சகல சட்ட விரோதமான கட்டடங்களும் அகற்றப்படும் என்று தீர்மானிக்கப்பட்டதாக இனாமலுவே சுமங்கள தேரர் …
-
- 4 replies
- 926 views
-
-
இன்று மாலை 5.30 மணியளவில் கோப்பாய் தெற்கு வீரகாளி அம்மன் கோவிலில் நடந்த தீ மிதிப்பு பார்ப்பவர்களைப் பதற வைத்து பக்தி மயமாக நடைபெற்றது. சிறுவர்கள், இளைஞர், யுவதிகள் , முதியவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் பக்திமயமாக பங்குபற்றிய தீ மிதிப்புக் காட்சி இதோ thx http://newjaffna.com/
-
- 12 replies
- 1.7k views
-
-
தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதலுக்கு அரபு நாடுகள் பலத்த கண்டனத்தையும், கடும் விசனத்தையும் வெளிப்படுத்தியுள்ளன. அத்துடன், குறித்த அரபு நாடுகள் இலங்கையிலுள்ள தமது நாட்டுத் தூதுவர்களிடம் பள்ளி வாசல் தாக்குதல் தொடர்பிலான முழு விவரங்களையும் திரட்டி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளன. இதன்படி இலங்கையிலுள்ள அரபு நாடுகளின் தூதுவர்கள், முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் முக்கிய முஸ்லிம் அரசியல் பிரமுகர்களிடம் தொடர்பு கொண்டு விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளன. முஸ்லிம் அமைச்சர்களுடனும், முஸ்லிம் அரசியல் பிரமுகர்களுடனும் இது தொடர்பில் அரபு நாடுகளின் தூதுவர்கள் தனித்தனி சந்திப்புகளை மேற் கொண்டு விவரங்களைப் பெற்றுவருகின்றனர் எனவும் தெரியவருகின்றது. இதேவேளை, தம்புள்ளை ஹைரியா ஜ…
-
- 9 replies
- 803 views
-
-
பதிவு மேற்கொள்வதாக தெரிவித்து வீட்டினுள் புகுந்த படைச் சிப்பாய் மாணவியிடம் தகாதமுறையில் நடக்க முற்பட்டதையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதாக செய்தியார் தெரிவிக்கின்றார். நேற்று (24-04-2012) காலை 10.30 மணியளவில் வவுனியா வடக்கு நெருங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வேலாங்குளம் கிராமத்திலுள்ள வீடுகளில் பதிவுகளை மேற்கொள்வதாக தெரிவித்து வீடு வீடாகச் சென்ற சிறீலங்காப் படைச் சிப்பாய் ஒருவர் தனிமையில் இருந்த மாணவியிடம் முறைகேடாக நடக்க முற்பட்டுள்ளார். தந்தையும் தாயும் வேலைக்குச் சென்ற நிலையில், கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை எழுதி விட்டு வீட்டில் இருந்த 16 அகவையுடைய மாணவியிடம் வேலாங்குளம் படைமுகாமைச் சேர்ந்த சிப்பாயே இவ்வாறு தவறாக நடக்க முற்பட்டுள்ளா…
-
- 0 replies
- 1.3k views
-
-
தென்னிலங்கை மீனவர்கள் சிறீலங்கா இராணுவத்தினரின் அனுமதியுடன் அத்துமீறி மீன்பிடிப்பதாக முல்லைத்தீவு-நாயாற்றுப் பகுதி மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அத்துடன் கடந்த காலங்களில் சிறீலங்கா இராணுவத்தினரின் அழுத்தத்தினால் குறிப்பிட்டளவு மீனவர்களுக்கு அனுமதி வழங்கியிருந்தபோதும், அதனைச் சாட்டாகக் கொண்டு ஏராளமான மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் தொடர்ந்தும் உள்நுழைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கடந்த மாதத்தின் முற்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினரால் மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்ட டெனிஸ் மற்றும், படையினரின் அழுத்தத்தையடுத்து நாயாற்றுப் பகுதியில் சுமார் 30வரையான மீனவர்கள் தற்காலிகமாக வந்து தங்கி நின்று ஆழ்…
-
- 0 replies
- 474 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது - சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி ஆக்கம்: தியாகராஜா நிரோஷ் “இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுகள் தடைப்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையில் அரசாங்கம் எடுக்கக்கூடிய முடிவுகளுக்குப் பின்னால் நாம் செல்ல வேண்டும் என்பதைவிட நாம் சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற நிலை கூட்டமைப்பிற்கு வந்துள்ளது” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெவித்தார். வீரகேசேயின் வார வெளியீட்டுக்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை வருகை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நகர்வுகள் தொடர்பாக அவரளித்த பேட்டியிலேயே இவ்வாறு தெவித்தார். கேள்வி: இன்…
-
- 0 replies
- 998 views
-
-
விடுதலைப் புலிகள் மரபுகளுக்கு அப்பால் காதலைப் பாடியுள்ள ஒரு கவிதை நம்மைத் திகைக்க வைக்கிறது. சங்கப்பாடல் முதல் கவிச்சக்கரவர்த்தி கம்பர் ஈறாக எவருமே நினைத்துப் பார்க்க முடியாத இடத்தை அக் கவிதை தொட்டுள்ளது. அதுதான் இந்த நூலின் ஹைலைட்ஸ். நாமகள் என்ற பெண் போராளி அந்தப் பாடலைப் பாடியுள்ளார். இதோ வரிகள் : எப்போதாவது தெருவில் அவசர இயக்கத்தில் கண்டுவிட நேர்கையில் சந்திப்பை வரவேற்பதாய் அவன் கண்கள் ஒரு முறை விரியும் மறுகணம் ஆழ்ந்து மூடிக்கொள்ளும் அவனுக்கு தெரியும் எனக்கு அது போதுமென்று.. விடுதலைப் புலிகளின் கடும் ஒழுக்கக் கட்டுப்பாடு நிறைந்த வாழ்க்கைக்குள் காதல் எப்படி வெற்றி பெற்றிருக்கிறது பாருங்கள்.. காற்றும் போக முடியாத இடத்திற்குள் சட்டடென நுழ…
-
- 1 reply
- 716 views
-
-
மன்னார் பஸார் பகுதியில் உள்ள ஒரு சில முச்சக்கர வண்டி சாரதிகள் மீள் குடியேற்ற பகுதிகளில் இருந்து மாலை நேரங்களில் மன்னாருக்கு வரும் இளம் பெண்களை தமது முச்சக்கர வண்டியில் ஏற்றி பாலியல் சேட்டைகளில் ஈடுபடுவதாகவும் இதற்கு மன்னார் சிறீலங்கா காவல்துறையினரும் உடந்தையாக உள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது தெரிவிக்கின்றார். மன்னார் பஸார் பகுதியில் சுமார் 200 இற்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட்டு வருகின்ற போதும் ஒரு சிலர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமையினால் அனைவருக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் செயலாக காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மன்னார் நகருக்கு தற்போது நாட்டின…
-
- 0 replies
- 865 views
-
-
இலங்கை அரசின் இரட்டை வேடமே சர்வதேச அழுத்தங்களுக்கு காரணம் - ஜேவிபி இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு புதுவருடம் கொண்டாடிவிட்டுச் செல்ல இலங்கை வரவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பிரச்சினை என்பது விளையாட்டு அல்ல என கொழும்பில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டினார். யுத்தம் முடிந்த பின் முகாம்களில் உள்ள மக்களை பார்வையிட தமக்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனவும் பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதியும் தமக்கு அனுமதி அளிக்கவில்லை எனவும் ஆனால் இந்திய குழுவினருக்கு அங்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டதாகவும் விஜித ஹேரத் குறிப்பி…
-
- 0 replies
- 545 views
-
-
(22-04-12) பிர்த்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடுகல் வணக்க நிகழ்வும் அன்னை பூபதியின் வணக்க நிகழ்வும் இரண்டு இடங்களில் (harrow,leicester) நடைபெற்றது harrow பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் ஈகைச்சுடரினை ஜனாமாஸ்ரர் ஏற்றிவைக்க தேசியக் கொடியினை ராஜமனோகரன் அவர்கள் ஏற்றினார் மலர் மாலையை முத்தண்ணா அவர்கள் அணித்து மக்களின் வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின நிகழ்வுகளில் பேச்சுக்களை ராஜமனோகரன், harrow councillor திரு சுரேஸ்கிருஷ்ணா, திருமதி சுரேஸ்கிருஷ்ணா, முத்தண்ணா மற்றும் சிவந்தன் நிகழ்த்தினர் தொடர்ந்து கவிதைகளை ஜனாமாஸ்ரர், தயா நிகழ்த்தினர் அத்துடன் பல கலை நிழ்வுகளுடன் நிகழ்வு நிறைவு பெற்றது leicester பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் ஈகைச்சுடரினை திரு பரமேஸ்வரன் ஏற்றி…
-
- 0 replies
- 448 views
-
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமைக்கான நோக்கங்கள் இதுவரையில் பூர்த்தி செய்யப்படவில்லை என அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினர் ஹனீபா மதானி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு, ஹனீபா கடிதம் அனுப்பி வைத்துள்ளார். கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் தொடர்ந்தும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தில் இணைந்து கொண்ட போதிலும் முஸ்லிம் மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களோ அல்லது அபிவிருத்தி திட்டங்களில் பங்களிப்போ வழங்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 2011ம் ஆண்டு முதல் அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், வாக்களித்த மக்களுக்கு நன்மைகளை வழங்கத் தவற…
-
- 6 replies
- 810 views
-
-
இலங்கை தமிழர்களின் தனித் தமிழ் ஈழக் கோரிக்கையை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று ஓங்கிக் குரல் எழுப்பும் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர், தன் கருத்தை ஈழத் தமிழர்களின் கருத்தாக அங்கு போய் விட்டு வந்து கூறுவது கடைதெடுத்த அரசியல் மோசடி என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இந்த அறிக்கையில், தமிழ் ஈழத்துக்காக சாத்வீக வழியில் போராடிய தந்தை செல்வாவின் போராட்டங்களை ஆயுத வன்முறையின் மூலம் சிங்கள அரசு தொடர்ந்து ஒடுக்கியதன் எதிர்விளைவாகவே தமிழர்களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் தொடங்கியது. தமிழ் மக்களின் முழுமையாக ஆதரவுடன் நடந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத்தான் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய வல்லாதிக்கங்களின் துணைய…
-
- 1 reply
- 623 views
-