ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய வழக்கு மீது சென்னை உயர்நீதிமன்றில் கடந்த புதன்கிழமை விசாரணை இடம்பெற்றது.விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசின் தடையை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்த மதிமுக பொதுச்செயலர் வைகோ, இந்த வழக்கு விசாரணையில் பங்கேற்றார். மே 14, 2010 திகதியிடப்பட்ட கட்டளையின் படி புலிகள் அமைப்பை இந்திய அரசாங்கம் தடைசெய்திருந்தது. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணை ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் சென் தலைமையில் இடம்பெற்றது. வைகோ மற்றும் ஏனைய சில அரசியற் தலைவர்களால் புலிகளால் மீதான தடையை நீக்குமாறு விடப்பட்ட வேண்டுகோளை நவம்பர் 2010 இல் விசாரணைக் குழு ஏற்க மறுத்திருந்தது. ’புலிகள் அமைப்பில் எஞ்சியுள்ள உறுப்பினர்கள…
-
- 0 replies
- 863 views
-
-
சுமார் 60அகதிகளுடன் அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்ட படகு ஒன்று காணாமல் போயுள்ளதாகவும் அப்படகை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் மீட்பு பணிக்குழு ஈடுபட்டிருப்பதாகவும் இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவின் தெற்கு தீவான சும்பாவா என்ற இடத்திற்கு அருகிலேயே இப்படகு காணாமல் போய் உள்ளது. அவுஸ்திரேலிய கடல்பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து இப்படகில் சென்ற அகதிகள் தொடர்பான துயரமான சமிக்கை இன்று பிற்பகல் கிடைத்தாக இந்தோனேசிய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். அவுரேலியாவுக்கு செல்லும் வழியிலேயே இப்படகு காணாமல் போயிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 661 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட திருமுறிகண்டிப் பகுதியில் உள்ள மக்களின் காணிகள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன மக்கள் கூறுகின்றனர்.இந்தப் பகுதியைச் சேர்ந்தா சுமார் 119 குடும்பங்கள் இதுவரை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதில் 46 குடும்பங்கள் மெனிக்பாம் நலன்புரி நிலையங்களில் உள்ளன. இந்தக் குடும்பங்களின் காணிகளே இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஏ9 வீதியின் முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்துக்கு முன்புறத்தில் அமைந்துள்ள திருமுறிகண்டிக்குளம், அதன் கீழ் உள்ள 80 ஏக்கர் வயல் காணி, திருமுறிகண்டித் தபாலகம், பொது மயானம், இரண்டு இந்து ஆலயங்கள், சுகாதார நிலையக் கட்டடம், கிரா…
-
- 0 replies
- 364 views
-
-
தமிழீழம் வேண்டுமா? என்று வாக்கெடுப்பு நடத்த தயாராகும் ஐ.நா! தமிழீழம் என்கிற தனிநாடு வேண்டுமா? வேண்டாமா? என்கிற வாக்கெடுப்பை இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சொந்த இடமாக கொண்டிருக்கக் கூடிய தமிழர்கள் மத்தியில் நடத்த ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது என தெரிய வருகின்றது. உள்நாட்டில் மட்டும் அன்றி வெளிநாடுகளில் வாழ்பவர்களும் இவ்வாக்கெடுப்பில் பங்கேற்கக் கூடிய வகையில் ஏற்பாடுகள் அமையப் பெற்று இருக்கும் என்றும் புலம்பெயர் தமிழர்களுக்கு இதில் காத்திரமான பங்கு இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது. கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு தொமோர் ஆகியவற்றை தனிநாடாக பிரகடனப்படுத்துகின்றமைக்கு கடந்த வருடங்களில் ஐக்கிய நாடுகள் சபையால் வாக்கெடுப்புக்கள் நடத்த…
-
- 48 replies
- 3.3k views
-
-
கடற்கரும்புலி மேஜர்கள் முத்துமணி, அறிவுக்குமரன் வீரவணக்க நாள் (ஏப்ரல் 11) மேஜர் முத்துமணி, குமாரசாமி சிவகாவேரி, காரைநகர் யாழ்ப்பாணம் (10.06.1975 – 11.04.1999). 11.04.1999 அன்று மன்னார் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் வீரமரணம் – 11.04.2000 ஆண்குரல்:- “அம்மா…. எங்களுடைய தாயகமண்ணின் மீட்சிக்காக…. என்னால் செய்யக்கூடிய தியாகம் எதுவோ…. அதைத்தான் நான் செய்யப்போகிறன்.. அதை மனமகிழ்வோடும் பூரண சந்தோஷத்தோடும் செய்கின்றேன். உங்களுக்கு இது ஜீரணிக்க முடியாத வேதனையாய்த்தான் இருக்கும். எனவே எங்களின் சாவுக்காக கண்ணீர் வடித்து கவலையடைவதைவிட நீங்கள் அதை ஏற்றுக்கொள்வதே எனக்கு நீங்கள் செய்யும் இறுதிக்கடனாய் …
-
- 9 replies
- 1k views
- 1 follower
-
-
எத்தகைய தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயார்!- ராஜபக்சவின் முன்னாள் நண்பர் நிமல்கா பேட்டி [ வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2012, 01:07.24 AM GMT ] [ விகடன் ] என்னுடைய நண்பர் மகிந்த ராஜபக்ச இப்படித் தலைகீழாக மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் ஒரு நபராக மாறுவார் என்று நான் நினைக்கவே இல்லை. என்று இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வாவினால் எச்சரிக்கப்பட்ட மனித உரிமை ஆர்வலர் நிமல்கா பெர்னாண்டோ ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.. இலங்கையை அமெரிக்காவிடம் காட்டிக்கொடுக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கைக்குள் நுழைந்தால், காலை உடைப்பேன்’ என்று இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வாவினால் எச்சரிக்கப்பட்டவர் மனித உரிமை ஆர்வலர் நிமல்கா பெர்னாண்டோ. ஐ.நா. பேரவை…
-
- 1 reply
- 920 views
-
-
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தற்போதை இலங்கை ஜனாதிபதி மகிந்தாவை பதவியிலிருந்து அகற்றினால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் அவருக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணையின் மூலம் சர்வதேச நீதி மன்றம் அவருக்குரிய தண்டனையை வழங்குவது இலகுவாக இருக்கும். இதை நாம் செய்வதற்கு ஜனாதிபதி; மகிந்தா ராஜபக்சாவை பதிவியிலிருந்து அகற்றுவதற்கு தேவையான பலமான அரசியல் கட்சிக்கு ஆதரவு வழங்கவேண்டும். ஜனாதிபதி மகிந்தாவை ஆட்சியிலிருந்து அகற்றுவது என்பது தமிழ் மக்களுக்கு மிகவும் அவசியமானதும் தார்மீகக் கடமைகளில் ஒன்றாகவும் இருக்கும் என்றே நாம் கருதுகின்றோம். எனவே அதற்குரிய வேலைத்திட்டங்களில் இலங்கைக்கு உள்ளேயும் வெளிநாடுகளிலும் தமிழ் மக்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்." …
-
- 7 replies
- 1k views
-
-
''பிரபாகரனுக்குப் பின்னால் உள்ள படத்தைப் பாருங்கள்..! வைகோ சொன்னவுடன் தமிழீழ வரைபடத்தை உற்றுக் கவனித்த நீதிபதிகள்! [ வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2012, 02:35.48 AM GMT ] விடுதலைப் புலிகளின் வக்கீலாகவே மாறிவிட்டார் வைகோ. இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டு இருப்பது சரியா... தவறா என்று சட்டரீதியாக நடக்கும் போராட்டங்களில் சென்னைக்கும் டெல்லிக்குமாக அலைகிறார் வைகோ. கடந்த 9-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கறுப்புக் கோட்டை மாட்டிக்கொண்டு கோர்ட் படி ஏறிய வைகோ, சுமார் ஒன்றரை மணி நேரம் தனது வாதங்களை எடுத்துவைத்தார். 'நீதிமன்றத்தையே பொதுக்கூட்ட மேடையாக்கிவிட்டார் வைகோ’ என்று வழக்கறிஞர்கள் சொல்லும் அளவுக்கு இ…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழீழம் மட்டக்களப்பு பெரியகல்லாறு உதயபுரம், தமிழ் வித்தியாலயத்தில் 32 வருடங்களின் பின்னர் சதாதேவன் தர்மிதா என்ற மாணவி ஒன்பது பாடங்களிலும் ஏ. தரச்சித்தி பெற்றுள்ளதாக அதிபர் சி.பேரின்பராசா தெரிவித்தார். பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட இப்பாடசாலையில் இருந்து கல்விப் பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு கடந்த வருடம் தோற்றிய 28 பேரில் 20 பேர் உயர்தரத்துக்குத் தகுதி பெற்றுள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார். அத்துடன் கடந்த வருடங்களை விடவும் இந்த வருடம் சிறந்த பெறுபேறு தமது பாடசாலைக்குக் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை யாழ் மாவட்டம் தற்போது கல்வியில் பிந்தங்கிய நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஈழதேசம்
-
- 2 replies
- 629 views
-
-
சகோதரச் சண்டைக்கு யார் காரணம்? - பழ.நெடுமாறன் ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம், அதை மெய்யாக்கிவிட முடியும் என்பதைத் தனது தாரக மந்தி ரமாகக் கொண்டுஇருப்பவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் அவர் கூறுவதற்குக் காரணமே, மக்களின் மறதி மீது அவருக்கு இருக்கக் கூடிய அளவுகடந்த நம்பிக்கைதான்! ஐ.நா. மனித உரிமை ஆணையம் நிறைவேற்றி யுள்ள தீர்மானத்தைப் பற்றி பேசுகையில், பழைய புழுத்துப்போன பொய்யைத் திரும்பவும் கூறி இருக்கிறார் கருணாநிதி. 'ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை நான் மனம் திறந்து பேச வேண்டுமேயானால், சகோதர யுத்தம்தான் தமிழீழம் உருவாவதைத் தடுத்துவிட்டது என்பது என்னுடைய கருத்து. யார் பெரியவர், இதை சாதிக்கிற முயற்சி…
-
- 0 replies
- 880 views
-
-
-
- 0 replies
- 615 views
-
-
இந்திய சர்வகட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை விஜயம் தற்போதைய காலகட்டத்தில் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என அந்நாட்டு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். புலம்பெயர் மக்களின் ஒரு பிரிவினர் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகளில் பரப்பி வரும் பிரசாரத்தை இந்திய பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் விஜயத்தின் மூலம் முறியடிக்க முடியும் என்றும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்தின் பக்கமே இருப்பார்கள் என்றும் சமரசிங்க தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்தியா எதிராக வாக்களித்தமைக்காக அதனுடனான உறவு எந்தவகையிலும் பாதிக்காதெனவும், அதனை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய…
-
- 2 replies
- 916 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் மீண்டும் வருவார், அவர் மீண்டு வருவார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழ்நாடு மதுரையில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். தமிழ்நாடு மதுரை சட்டத்தரணிகள் சங்கம், தமிழ் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நேற்று (11.04.2012) நடத்திய கருத்தரங்கில் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உரையாற்றினார். இந்த கருத்தரங்கில் பேசிய சிறிதரனிடம் அக்கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக கூறுகிறார்கள் அது உண்மையா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறி…
-
- 1 reply
- 2.7k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை எக்காரணம் கொண்டும் பதிவு செய்ய முடியாது என்று தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்திருக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய முடியாது என்று தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் வவுனியாவில் கருத்துத் தெரிவித்த போது மாவை சேனாதிராசா கேள்வி தெரிவித்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாமே என்று வவுனியாவைச் சேர்ந்த தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அதற்குப் பதிலளித்த ம…
-
- 9 replies
- 1.8k views
-
-
சென்னை தாம்பரத்தில் நேற்று மாலை 6 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கைவிளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்புரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி தனது உரையில் அமெரிக்காவின் ஐநா தீர்மானம் பற்றியும், இராசீவ் காந்தி ஒப்பந்தத்தால் அழிவை நோக்கியுள்ள கூடங்குளம் நிலை பற்றியும், தனித்தமிழ்நாடு எண்ணத்தை தமிழக மக்களின் மனதில் எண்ண வைக்க்கும் இந்திய அரசின் நிலை பற்றியும் தெளிவாக கூறியுள்ளார். கொளத்தூர் மணி உரையினை கீழ்க்காணும் காணொளியில் காணவும்: http://youtu.be/7Rkxc48mqBM http://www.eeladhesa...chten&Itemid=50
-
- 2 replies
- 688 views
-
-
வன்னிப்பெருநிலப்பரப்பில் பரந்தன் - முல்லைத்தீவு முதன்மை வீதியில் அமைந்திருந்த சிறிலங்காப் படையினரின் முகாம்கள் நேற்று முன்தினம் முதல் அகற்றப்பட்டு வேறிடம் மாற்றப்பட்டு வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. படையினரின் முதன்மையான முகாம்களே மேற்படி அகற்றப்பட்டு வருவதாகவும், இதனால் மக்களிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாம்களை அகற்றிவிட்டு, பாரிய முகாம் ஏதேனும் அமைக்கும் திட்டத்தை படையினர் கொண்டள்ளனரா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முரசுமோட்டை சந்தியை அண்மித்திருந்த முகாம், தருமபுரம் சந்தியில் அமையப்பெற்றிருந்த முகாம், சுண்டிக்குளம் சந்தியை அண்மித்த முகாம், விஸ்வமடு ரெட்பானா முகாம், ஆகிய முகாம்களே அக…
-
- 2 replies
- 641 views
-
-
இந்திய தூதராலயதிற்கு முன் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க வேண்டும், இந்தப் படுகொலையை செய்யும் சிறி லங்கா ராணுவம் கைது செய்யப்பட்டு சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும், தமிழர்களின் நலன்கள் ஏனையே இனங்களின் நலன்கள் போல் பாதுகாக்கப்படவேண்டியவை என்ற வேண்டுகோளுடன் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை ஒன்றுகூடலை ஏற்பாடு செய்து இருந்தது. ஜெனிவா அமர்விற்கு பின் அமெரிக்க அரசிற்கு பலர் நன்றி சொல்லிகொண்டிருக்கும் நிலையில், தமிழர்களுக்கு தமது பாரம்பரிய நிலங்களில் உலகத்தில் உள்ள ஏனைய இனங்கள் போல் விடுதலை அடைந்த இனமாக வாழும் உரிமை வேண்டும், 64 வருடங்களாக தமிழருக்கு எதிராக நடாத்தப்படும் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும், இந்த படுகொலைக்கு நீதி வேண்டும் என்று பெப்ரவர…
-
- 3 replies
- 726 views
-
-
சிறிலங்காவுடனான வர்த்தக செயற்பாடுகள் தொடர்பில் இந்தியா முதன்மை நிலை வகிக்கின்றது. இந்த நிலையை இந்தியா ஒருபோதும் இழந்துவிடக் கூடாது. இவ்வாறு சிறிலங்காவிற்கு பயணம் செய்த The Hindu Business Line செய்தியாளர் எம்.ரமேஷ் எழுதியுள்ளார். அதனை புதினப்பலகைக்கா மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. கடந்த வாரம் சிறிலங்காவுக்கு சென்றிருந்த போது, இந்த எழுத்தாளர் சிறிலங்காவைச் சேர்ந்த இராஜதந்திரி ஒருவரை தொடர்பு கொண்டு உரையாடலை மேற்கொண்டிருந்தார். கேள்வி: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலைமையில் சிறிலங்காவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்திருந்ததை சிறிலங்கர்கள் எவ்வாறு நோக்குகின்றனர்? பதில்: இந்தியா தம்மை ஏ…
-
- 1 reply
- 555 views
-
-
சில கடும்போக்குடையவர்களே நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதனை தடுத்து வருவதாக மூத்த அரசியல் தலைவர் அமரர் சீ.எஸ். செல்வநாயகத்தின் புதல்வர் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார். பெரும்பான்மையான மக்கள் ஜனநாயக ரீதியில் நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டுமென விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரஹாசன் தெல்லிப்பழையில் அமைந்துள்ள தமது பூர்வீக வீட்டில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளார். 1983களில் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltam...IN/article.aspx
-
- 18 replies
- 1.8k views
-
-
கடத்தல் சம்பவங்களுக்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திரச சமரசிங்க தெரிவித்துள்ளார். சில தரப்பினர் குற்றம் சுமத்துவதனைப் போன்று இலங்கையில் இரகசிய காவல்துறையினர் கடத்தல்களில் ஈடுபடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காவல்துறையினரும், அதனுடன் தொடர்புடைய தரப்பினரும் குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரேம்குமார் குணரட்னத்தை காவல்துறையினர் கைது செய்யவும் இல்லை அவரை விடுதலை செய்யவும் இல்லை என திசர சமரசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் கடத்திச் செல்லப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.globa…
-
- 6 replies
- 691 views
-
-
நட்டத்தில் இயங்கும் சிறிலங்காவின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் எயர்லைன்ஸ், ஐரோப்பாவுக்கான தனது சேவைகளையும் விமானத்தில் வழங்கப்படும் பயணிகளுக்கான வசதிகளையும் குறைப்பதாக அறிவித்துள்ளது. செலவுகளைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பயணிகளுக்கான உணவு வசதிகளை குறைக்கவுள்ளதாக சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். “ஆசனப்பதிவுகள் குறைந்து போனதால், லண்டன் உள்ளிட்ட ஐரோப்பாவுக்கான பல பயணத் திட்டங்களை நாம் நிறுத்தியுள்ளோம். முன்னர் வாரத்தில் 12 சேவைகளை நடத்தி வந்தோம் தற்போது அது 7 சேவைகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அளவும் குறைக்கப்பட்ட…
-
- 9 replies
- 846 views
-
-
இந்திய பிரதிநிதிகளின் வருகைக்கு அரசு இடமளிக்கக் கூடாது: குணதாச _ வீரகேசரி தேசிய நாளேடு இந்திய அரசியல் பிரதி நிதிகள் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்வதை கடுமையாக எதிர்ப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அறிவித்துள்ளது. எமது உள்நாட்டுப் பிரச்சினைகளைக் கண்காணிப்பதற்கு எமக்கு எதிராக இந்தியாவிற்கு இடமளிக்க முடியாதென்றும் அவ்வியக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர மேலும் கருத்துத் தெரிவிக்கை…
-
- 2 replies
- 551 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீண்டும் வருவார், அவர் மீண்டு வருவார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழ்நாடு மதுரையில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். தமிழ்நாடு மதுரை சட்டத்தரணிகள் சங்கம், தமிழ் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நேற்று (11.04.2012) நடத்திய கருத்தரங்கில் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உரையாற்றினார். இந்த கருத்தரங்கில் பேசிய சிறிதரனிடம் அக்கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக கூறுகிறார்கள் அது உண்மையா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நாடா…
-
- 0 replies
- 1.2k views
-
-
திருகோணமலையில் கடந்த சில நாட்களிற்கு முன்னர் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 10 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடிவடிக்கையின் போது அண்மையில் தமிழகத்தில் இருந்து திரும்பிய பத்துப் பேரை கைதுசெய்து கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களது உறவினர்கள் அண்மையில் உள்ள இராணுவ முகாம்களிலும் காவல்நிலையங்களிலும் சென்று கைதுசெய்யப்பட்ட தமது உறவினர்களது நிலை குறித்து விசாரித்துள்ளனர். உறவினர்களது கேள்விக்கு தமது முகாம்களில் இருந்து எவ்வித சுற்றிவளைப்பும் நடாத்தப்படவில்லை எனவும் நீங்கள் குறிப்பிடுபவர்கள் யாரும் இங்கு இல்லை எனவ…
-
- 1 reply
- 692 views
-
-
யாழ். குடாநாட்டை நோக்கி நடைபாதை சிங்கள வியாபாரிகள் பெருந்தொகையில் வந்துள்ளனர். இவர்களுக்கு யாழ். மாநகரசபை ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாக உள்ளுர் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சிங்கள வியாபாரிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த சிங்கள வியாபாரிகள் யாழ்.முற்றவெளிப் பகுதியில் தமக்குரிய வியாபாரத்துக்கென இடங்களை ஒதுக்கி சிறிய கொட்டகைகளை அமைத்து வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உள்ளுர் வியாபாரிகளின் வியாபார நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக உள்ளூர் வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். சிங்கள வியாபாரிகள் யாழ். மாநகரசபையிடம் அனுமதி பெற்றார்களா அல்லது தன்னிச்சையாக கொட்டில்களை அமைத்து வியாபாரத்தை ஆரம்பித்துள்ளார்…
-
- 3 replies
- 762 views
-