ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் தர்மராஜ், வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவீந்திரன், இலங்கை அரசை போல் விடுதலை புலிகளும் போர் குற்றத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இதனால் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கூடாது என்று மத்திய அரசின் நிலைபாட்டை முன் வைத்தார். நேதாஜி, பகத்சிங் உள்ளிட்டோர் சுதந்திர போராட்டத்திற்காக வன்முறையில் ஈடுபட்டது தீவிரவாதம் ஆகுமா என வைகோ தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்…
-
- 2 replies
- 679 views
-
-
பாரதிய ஜனதா கட்சி தலைவர் லால் கிருஷ்ணா அத்வானிக்கும் இலங்கை எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் புதுடில்லியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (11) புதன்கிழமை இடம்பெற்ற இச்சந்திப்பில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றம் தொடர்பில் எதிர்கட்சிக்கும் இந்திய அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க முன்னதாக வலியுறுத்தியிருந்தார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, "சந்திப்பு சிறந்த முறையில் அமைந்திருந்தது. இனப்பிரச்சினைக்கு இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்ட…
-
- 0 replies
- 455 views
-
-
பல்வேறு துன்பங்களுக்கு மத்தியிலும் தமிழ், சிங்களப் புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என ஆவலுடன் காத்திருக்கும் மக்களின் கனவுகளை மகிந்த அரசு குழிதோண்டிப் புதைத்துள்ளது எனக் குற்றஞ்சாட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க பால்பொங்கி புத்தாண்டை வரவேற்க வேண்டிய தருணத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படுகின்றது என்ற அபாய சமிக்ஞை எப்போது வருமென அல்லோலகல்லோலப்பட்டே மக்கள் புத்தாண்டில் அடுப்பு மூட்டவேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையில் சுதந்திரமாக வாழும் உரிமையை இழந்து தவிக்கும் மக்களை சர்வதேச நாணய நிதியத்திடம் தாரைவார்த்துக் கொடுப்பதற்கு மகிந்த அரசு தயாராகி வருகின்றது எனவும், அரசின் அராஜகங்களைக் கட்டுப்படுத…
-
- 0 replies
- 602 views
-
-
சிறிலங்காவுடனான கடல் எல்லை மற்றும் கிழக்கு கடற்பரப்பின் மீது கண்காணிப்புகளை தீவிரப்படுத்துவதற்காக, புதிய ஆளில்லா உளவு விமான அணியொன்றை இந்தியா - சிறிலங்காவுக்கு மிக நெருக்கமாக - உச்சிப்புளியில் நிறுவியுள்ளது. இராமநாதபுரத்தில் உள்ள உச்சிப்புளியில் இயங்கும் ‘ஐஎன்எஸ் பருந்து‘ என்று அழைக்கப்படும் இந்தியக் கடற்படையின் விமானதளத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றை அடுத்து இந்தப் புதிய அணி செயற்படத் தொடங்கியுள்ளது. இந்தியக் கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளபதி வைஸ் அட்மிரல் அனில் சோப்ரா இந்த ஆளில்லா உளவு விமான அணியை ஆரம்பித்து வைத்தார். INAS 344 என்று அழைக்கப்படும் இந்த அணி, இந்தியக் கடற்படையின் மூன்றாவது ஆளில்லா உளவு விமான அணியாகும். …
-
- 2 replies
- 905 views
-
-
குமார் குணரட்ணம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுகிறார் முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் பிரேம்குமார்குமார் குணரட்ணம் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் இன்று காலை 7.10 மணிக்கு புறப்படவுள்ள யூ.எல்.882 விமானத்தின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுவார் என முன்னிலை சோஷலிசக் கட்சி சார்பு இணையத்தளமான லங்காவிவ்ஸ் தெரிவித்துள்ளது. முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் பிரேம்குமார்குமார் குணரட்ணமும் (42) அக்கட்சியின் மகளிர் பிரிவைச் சேர்ந்த திமுது ஆட்டிகலவும் கடந்த சனிக்கிழமை காலை காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டது. தனது பிரஜையான நோயல் முதலிகே (குமார் குணரட்ணம்) கடத்தப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பதை தெ…
-
- 5 replies
- 939 views
-
-
சூரிய வெளிச்சம் நிலத்தில் விளமுடியாத அளவுக்கு அடர்த்தியாக இருந்த யாழ் மற்றும் வன்னிப் பனங்காடுகள் இன்று வெறுமையாகி விட்டன. போரின் கொடுமையால் அழிந்த பனை, தென்னையை விட இராணுவத்தினரின் திட்டமிட்ட அழிப்புத் தான் மிகக் கொடியது. பனையும் தென்னையும் போரின் அவலங்களைச் சுமக்கின்றன. தமிழீழத்தில் அழிக்கப்பட்ட பனைகள் எண்ணிக்கை 5,500,000 என்று மதிப்பிடப்படுகிறது. பனை தென்னை தமிழ் மக்களின் வாழ்வாதாரங்கள். யாழ்ப்பாணக் கல்லூரிப் பேராசிரியராகப் பணி புரிந்த றொபேட் ஹோமஸ் என்பவர் எழுதிய ஆய்வு நூலில் பனையும் தென்னையும் தமிழர்களின் தந்தையும் தாயும் போன்றவை என்று எழுதியுள்ளார். இவை ஈழமக்களுக்கு உணவு முதற்கொண்டு வயல் நிலத்திற்கு பசளையும், வீடுகட்ட மரமும் கூரை மேய்ச்சலுக்கு ஓலையும் தருகின்றன…
-
- 1 reply
- 1.1k views
-
-
'விடுதலைப் புலிகளுக்கும், இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே வேறுபாடு உள்ளது என்பதை, இலங்கை அரசில் பொறுப்பில் உள்ளவர்கள், முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதி ராஜபக்ஷே, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்வுப் பணிகளுக்காக, தற்போது செய்வதை விட, இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும்'' என, இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தனிப்பட்ட விடயமாக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து, டில்லியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பு, ஒழிக்கப்பட்டது, மிகுந்த மகிழ்ச்…
-
- 4 replies
- 806 views
-
-
கொழும்பு மற்றும் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் முழுக்க நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. அப்பாத்மென்கள் கட்டில்கள்,கதிரைகள் ஆடியதாக நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்...சில இடங்களில் அலை பேசியும் வேலை செய்யவில்லை...தமிழ் நாட்டில் கூடங்குளம்,கல்பாக்கம் அணு உலைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது...கொழும்பு மற்றும் சென்னையில் பல இடங்களில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்து கூட்டமாக வெளியே வந்து நிற்பதா சொல்கிறார்கள்..இலங்கை நேரம் இன்று நண்பகல் 2.15 மணியளவிலேயே இந்த சிறியளவிலான பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது...பயப்படும் படியாக் எதுவும் இல்லை என்றும் இலேசான நிலா நடுக்கம் என்றும் அறியப்படுகிறது... அந்தமான் , நிக்கோபார் தீவுகள…
-
- 51 replies
- 5k views
-
-
தமிழர்கள் பகுதியில் சிங்களவர் குடியேற்றம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இந்தியாவின் மதுவரையில் தெரிவித்துள்ளார். 'இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலை' என்ற தலைப்பில் மதுரை வழக்குரைஞர் சங்கத்தில் புதன்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அகிம்சை வழியிலும், ஆயுதம் ஏந்திய வழியிலும் இலங்கையில் தமிழர்கள் நடத்திய போராட்டத்தில் 3 லட்சம் மக்களும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ந்த கடைசிக் கட்ட போரில் மட்டும் 1.40 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். போர் முடிந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தமிழ் மக்கள் இன்னும் முள்வேலிச் சிறைகளு…
-
- 0 replies
- 674 views
-
-
யாழ்ப்பாணத்தில் குற்றங்களின் அதிகரிப்பு இயல்பு நிலை திரும்பியதற்கான அறிகுறி; இப்படி விளக்கமளிக்கிறார் முன்னாள் சட்டமா அதிபர் யாழ்ப்பாணத்தில் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றமையானது அங்கு இயல்பு நிலை திரும்பி இருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது என்று கூறியிருக்கிறார் முன்னாள் சட்ட மா அதிபரும் அமைச்சரவை ஆலோசகருமான மொஹான் பீரிஸ். "லக்பிம' ஆங்கில ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். கடந்த 29 வருடங்களாக யாழ்ப்பாணம் படையினரின் இறுக்கமான கட்டுப்பாட்டில் இருந்ததால் அங்கு மக்களால் குற்றங்களைச் செய்ய முடியவில்லை என்றும் இப்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால…
-
- 5 replies
- 1.2k views
-
-
தமிழ் பேசும் மக்கள் மீண்டும் தலையெடுக்க கல்வியே ஒரேயொரு ஆயுதம்! - கூட்டமைப்பின் எம்.பி சரவணபவன் தெரிவிப்பு!! 'ஆட்சியாளர்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் மீண்டும் தலையெடுப்பதற்கு கல்வியே ஒரேயொரு ஆயுதம். எனவே, கல்வியில் அரசியல் வேண்டாம். கட்சித் தலைவர்கள் கட்சிகளின் எல்லையைத் தாண்டி எமது மக்களின் நலன் கருதி கல்வியில் அக்கறை காட்ட வேண்டும்.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் சிறுபான்மை இனத்தவர்கள் அல்லர். அவர்கள் இந்நாட்டின் தேசிய இனத்தவர்கள். இதை அனைவரும் தெளிவாகப் புரிந்து கொண்டு சிறுபான்மை இனத்தவர்கள் என்று கூறக்கூடாது. தமிழர்களின் கதை முடிந்து…
-
- 3 replies
- 839 views
-
-
ஏப்ரல் 06,2012 அன்று கடத்தப்பட்ட ரத்நாயக்க முதியான்சலாகே தயாலால் என அழைக்கப்படும் பிறேமகுமார் குணரட்ணத்தை ஏப்ரல் 09 அன்று நாடுகடத்தியமையானது, சிறிலங்கா அரசாங்கத்தின் 'கடத்தல் செயற்பாடுகள்' தொடர்பான பல இரகசியங்கள் வெளிவரக் காரணமாக அமைந்துள்ளது. குணரட்ணத்தின் கடத்தல் சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு முற்போக்கு சோசலிசக் கட்சி, மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் என்பன கோரிக்கை விடுத்துள்ளன. இவ்வாறான கடத்தல் சம்பவம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச அறிவித்திருந்தார். திரு.குணரட்ணம் மற்றும் திருமதி.திமுது அற்றிகல ஆகிய இருவரையும் கைது செய்வதற்கான எந்தவொரு காரணமும் சிறிலங்கா அர…
-
- 2 replies
- 1k views
-
-
உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு... ஜெனீவாவில் கூடிய ஐ.நா. மனித உரிமை ஆணையம் இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றியுள்ள கண்டனத் தீர்மானம் கண்டு அதிபர் ராஜபட்சயும் அவரது அமைச்சர்களும் மிகக்கடுமையான கோபமும் ஆத்திரமும் அடைந்துள்ளனர். இதைக் காணும்போது பழந்தமிழ்ப் பாடல் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது. குரங்கு ஒன்று தென்னை மரத்தில் ஏறியது, கள்ளிறக்குவதற்காக அதில் கட்டப்பட்டிருந்த கலயத்தில் இருந்த கள்ளைக் குடிப்பதற்காகத் தனது தலையை உள்ளே நுழைத்து ஓரளவு குடித்த நிலையில் உள்ளேயிருந்த தேள் ஒன்று அதைக் கொட்டிவிட்டது. அதுவே ஆயிரம் சேட்டை செய்யும் குரங்கு. கள்ளைக் குடித்ததால் ஏறிய போதை ஒருபுறம், தேள்கடியினால் ஏறிய விஷம் ஒருபுறம், அவற்றைப் பொறுக்க முடியாத அந்தக் குரங்கு ஆடிய …
-
- 3 replies
- 1.1k views
-
-
தன்மானமுள்ள தமிழரின் அடையாளங்களை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது! - ஐ.தே.கவின் எம்.பி யோகராஜன் தெரிவிப்பு!! 'அகிம்சாவாதி காந்தியையும், சாரணியத்தின் தந்தை பேடன் பவுலையும் எதிரிகளாகவும், தமிழர்களின் ஆதரவாளர்களாகவும் கருதியவர்களின் அறிவற்ற செயலின் பேரினவாத செயல்பாடே சிலை உடைப்புகளாகும். சிலைகளை உடைத்தாலும் தலையே போனாலும் தன்மானமுள்ள தமிழர்களின் அடையாளங்களையும் முகவரிகளையும் எந்த ஒரு கொம்பனாலும் அழிக்க முடியாது. அதற்கு உதாரணமாக உடைக்கப்பட்ட சிலைகளை மீண்டும் உருவாக்குவதற்கு இலங்கையர்களிடம் இருந்து மட்டுமல்ல சர்வதேச சமூகங்களிடம் இருந்தும் உதவிகள் வந்து குவிய வேண்டும். அதைப் பார்த்து சோரம்போகும் இனவாதிகளும், அவர்களுக்கு துணை போகும் தமிழினத் துரோகிகளும் வெட்கித் தலைகுனிய …
-
- 4 replies
- 1.3k views
-
-
கொழும்பு செல்கிறார் தயான் ஜயதிலக! - மகிந்தவைச் சந்தித்து பேச முடிவு!! பிரான்ஸூக்கான சிறிலங்காவின் தூதுவர் தயான் ஜயதிலக அடுத்தவாரம் கொழும்புக்கு செல்லவுள்ளார். பிரான்ஸூக்கான சிறிலங்காவின் தூதுவர் பதவியில் இருந்து தயான் ஜயதிலக நீக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையிலேயே அவரின் கொழும்பு விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா மீதான தீர்மானம் குறித்து தயான் ஜயதிலக வெளியிட்ட கருத்துத் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் அதிருப்தி வெளியிட்ட…
-
- 7 replies
- 1.1k views
-
-
தான் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று நாட்களில் கை, கால்களில் விலங்கிடப்பட்டு உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக பிரேம்குமார் குணரத்ணம் தெரிவித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னிலை சோஷலிஸக் கட்சியின் உறுப்பினரும் அவுஸ்திரேலிய பிரஜையுமான பிரேம்குமார் குணரத்ணம், இன்று (11) அவுஸ்திரேலிய சிட்னியில் உள்ள தனது வீட்டில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், "அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாது போயிருந்தால் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு எனது சகோதரர் கொலை செய்யப்பட்டதுபோல் ஊடகவியலாளர்கள் கொல…
-
- 21 replies
- 5.9k views
-
-
மாலைத்தீவிலும் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது [ புதன்கிழமை, 11 ஏப்ரல் 2012, 12:22.58 பி.ப GMT ] இந்தோனேஷிய நிலநடுக்கத்தின் எதிரொலியாக மாலைதீவிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகி உள்ளது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடலோரத்தில் வசிப்பவர்களும், சுற்றுலா பயணிகளும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். GMT நேரப்படி 17.11 மணியளவில் மாலைத்தீவை சுனாமி தாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Earthquakes Today + Latest Earthquake News Worldwide M 5.7, North Indian Ocean http://newsblogged.c...6349aa0…
-
- 2 replies
- 1.3k views
-
-
அதிகரித்துவரும் தற்கொலைகளும் அவை ஏற்படுத்தும் தாக்கங்களும் - ஒரு உளவியல் பார்வை ஆக்கம்: நதிபரன் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தமிழர் பிரதேசங்களில் தற்கொலைகளின் எண்ணிக்கையானது என்றுமில்லாதவாறு அதிகரித்து இருப்பதானது தமிழ்ச் சமூகத்தின்மீது விழுந்திருக்கும் அடுத்த பேரிடியாகும். யுத்தம் இடம்பெற்றபோது ஏற்பட்ட துன்பங்களை விட யுத்தத்திற்குப் பின்னரான காலத்திலேயே அதன் வலிகளை, ரணங்களை உணரக்கூடியதாக அனுபவிக்கக்கூடியதான நிலை இருக்கும் என்ற யதார்த்தத்தின்படி யுத்தத்திற்குப் பின்னர் சடுதியாக தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமன்றி சமூக ஆதரவு என்பது தற்போது இல்லாமற் போனமையினாலும் உள ரீதியாகப் பாதிப்படைந்தவர்கள் தமது பிரச்சினைகளை வெளியே…
-
- 0 replies
- 586 views
-
-
தமிழர் பலியானபோது பட்டாசு கொளுத்திய இனவாதிகள் இன்று துன்பப்படுகின்றனர்! 26 அமைப்புக்கள் இன்று நாடளாவிய ரீதியில் கடத்தல், காணாமல்போதல் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன. யுத்த காலத்தில் தமிழர்கள் பலியானபோது பட்டாசு கொளுத்தி ஆர்ப்பரித்த சிங்கள இனவாதிகள் இன்று அல்லல்படுகின்றனர். அவர்களின் மரணமே அரசாங்கத்தின் இறுதிப் பயணமாகும் என்று 26 அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவித்தனர். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தொழிற்ங்க முக்கியஸ்தர்கள், இடதுசாரி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊடக அமைப்புகளின் அங்கத்தவர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பொதுநலன்சார் அமைப்புக்களை சோ்ந்தோர் நேற்று மருதானையில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்…
-
- 3 replies
- 875 views
-
-
கடத்தப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் பிரேம்குமார் குணரத்னத்தை கொலை செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் நந்தசேன கோதாபய ராஜபக்ஷ நான்கு மாதங்களுக்கு முன்னர் உத்தரவு பிறப்பித்ததாக பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் Lanka News Web இணையத்திற்குத் தெரிவித்தார்.மக்கள் எழுச்சி இயக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளர்கள் அனைவரையும் அவர்களது செயற்பாடுகளையும் உன்னிப்பாக அவதானிக்குமாறும் பாதுகாப்புச் செயலாளரது கொலைக் கும்பலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் உத்தரவிட்டுள்ளார். முன்னிலை சோசலிசக் கட்சியை ஸ்தாபித்து அதன் தலைவராக பிரேம்குமார் குணரத்னம் நியமிக்கப்படுவதற்கு முன்னர் தமது உத்தரவை நிறைவேற்றுமாறு பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளரின் இந்த உத்தர…
-
- 1 reply
- 870 views
-
-
பம்பலப்பிட்டியில் திடீர் நிலநடுக்கம்! _ வீரகேசரி இணையம் 4/11/2012 2:29:09 PM பம்பலப்பிட்டி, டுப்ளிகேஷன் வீதியில் திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டதாகச் சற்று முன்னர் எமது இணையத் தளத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது. சேத விபரங்கள் குறித்துத் தெரிவிக்கப்படவில்லையாயினும் தொடர்மாடிகளில் குடியிருந்தோர் அங்கிருந்து வெளியேறியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தகவல்கள் தொடரும். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37549
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ். இணுவில் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் இன்று (11) புதன்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். இணுவிலில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் இந்த மாணவி பேத்தியாருடன் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் அவரின் உடலில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் சுன்னாகம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தர்மலிங்கம் தமயந்தி (வயது 16) என்ற பாடசாலை மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமாக இந்த மரணம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு ஆரம்பித்துள்ளனர். http://www.eeladhesa...ll…
-
- 1 reply
- 887 views
-
-
ஏற்றுக்கொள்ளப்பட்ட மேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்தாமல், வெறுமனே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க ஒத்துழைப்பு வழங்கவில்லை என அரசாங்கம் குற்றம் சுமத்த முடியாது. அந்தக் குற்றச்சாட்டு நியாயமற்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் இர.சம்பந்தன் தெரிவித்தார். அரசியல் தீர்வு குறித்த இருதரப்பு பேச்சுக்கான சாதகமான சூழலை அரசாங்கம் இன்னமும் உருவாக்கவில்லை எனவும் அவர் கூறினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் 2011 ஆம் ஆண்டு பங்குனி மாதம் கையளிக்கப்பட்ட தமிழ் மக்களின் அரசியல் அபிலாiஷகளை தொடர்பான தீர்வு யோசனைகளுக்குரிய பதிலை அரசாங்கம் இன்னமும் வழங்கவில்லை. இந்த நிலையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எவ்வாறு அங்கம் வகிக்க முடியும் என…
-
- 3 replies
- 757 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தினால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மும்மொழி கொள்கைத் திட்டத்தின் ஊடாக, வட தமிழீழத்தில் தமிழ் மாணவர்களுக்கு, சிங்கள மொழியினைக் கட்டாயப்பாடமாக்க, சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக இறங்கியுள்ளதாக அறியமுடிகின்றது. தமிழர் தாயகத்தினை ஆக்கிரத்து நிற்கின்ற சிங்கள ஆட்சியாளர்கள், தமிழர் நிலங்களில் பௌத்தமயமாக்கலை, இராணுவமயமாக்கலை ,தீவிரப்படு;த்தி வரும் நிலையில், தற்போது சிங்களமயமாக்கலையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன்முதற்கட்டமாக வடமாகாணத்திலுள்ள 12 கல்வி வலயங்களில் மும்மொழி பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன என சிறிலங்கா அரச தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் கல்வி அமைச்சின் பூரண ஒத்துழைப்புடன் வடமாகாண கல்வி அமைச்சின் ஊடாக இந்…
-
- 7 replies
- 1.3k views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவளிக்க இந்தியா மறுத்ததன் பின்னணியில், இருநாடுகளுக்கும் இடையில் ஏதாவது தீவிரமாக நடந்திருக்க வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். காணொளியை பார்க்க... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=4315:2012-04-11-02-16-27&catid=1:latest-news&Itemid=18 புதுடெல்லியில் சிஎன்என் - ஐபிஎன் தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் சுகாசினி ஹைதருக்கு வழங்கிய தனிப்பட்ட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தச் செவ்வியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது- சுகாசினி- ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வா…
-
- 3 replies
- 731 views
-