ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இந்தியா ஆதரவுடன் நிறைவேறிய தகவல் பரவியதும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இலங்கையின் திமிரை ஓரளவு அடக்குவதற்கான இந்த தீர்மானம் வெற்றியடைந்ததால் ஈழத்திலும் தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோடியது. குறிப்பாக கிளிநொச்சி, அக்கராயன் பகுதிகளிலுள்ள தமிழ் இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்து இந்த வெற்றியை குதூகலமாக கொண்டாடினார்கள். கிளிநொச்சி நகரில் வெடிச்சத்தம் 10 நிமிடங்களுக்கும் மேல் தொடர்ச்சியாக நீடித்தது. ராணுவ நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் இந்த வெற்றியைக் கொண்டாடியதால், சிங்கள ராணுவ வீரர்கள் கடும் ஆத்திரம் அடை…
-
- 2 replies
- 1.7k views
-
-
ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் தீமானத்தை இந்தியா ஆதரிக்குமா என்ற கேள்வி மூன்று வாரங்களுக்கு முன்னர் எழுப்பப்பட்டபோது, சட்டத்தரணியான தமிழ்ப் பிரமுகர் ஒருவர் சொன்ன பதில் ஆச்சரியமாக இருந்தது. அவர் சொன்னார்: 'இந்தியா ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை. அப்படியே விட்டுவிடவேண்டும். இந்தியா மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கக்கூடாது.' அவரது இந்தப் பதில் ஆச்சரியமானதாக இருந்ததால், ஏன் என்ற கேள்வியை எழுப்பினோம். அவர் தெளிவாகச் சொன்னார். 'பிரேரணை இப்போதே நீர்த்துப் போன நிலையில்தான் இருக்கின்றது. இந்தியாவை ஆதரிக்குமாறு அதிகளவு அழுத்தம் கொடுத்தால் அதற்கான நிபந்தனையாக பிரேரணையை இன்னும் நீர்த்துப்போகச் செய்வதற்கு இந்திய…
-
- 2 replies
- 614 views
-
-
ஜெனிவா : ஐ.நா சபையின் மனித உரிமைகள் குழுவில் இலங்கையில் நடைபெற்ற போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த தீர்மானம் வெற்றி பெற்றது அறிந்ததே. இச்சூழலில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தவர்களை இலங்கை மிரட்டியதாக ஐ.நா சபையின் மனித உரிமை தலைவர் நவி பிள்ளை புகார் கூறியுள்ளார். எப்படியாவது அமெரிக்கா கொண்டு வந்த இத்தீர்மானம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று இலங்கை பம்பரமாக வேலை செய்தும் தீர்மானம் வெற்றி பெற்றது. இலங்கையில் நடைபெற்ற போரில் இலங்கைக்கு பெரிதும் உதவியதாக சொல்லப்படும் இந்தியா தமிழக கட்சிகளின் அழுத்தத்தால் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததும் தீர்மானம் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது. இச்சூழலில் ஒட்டெடுப்புக்கு முன…
-
- 12 replies
- 2.4k views
-
-
உலகத் தமிழர்களின் உள்ளத்துக்கு சின்னதாய் ஆறுதல் அளிக்கும் செய்தி, ஜெனீவாவில் இருந்து கிடைத்துள்ளது. உலகம் காணாத கொடுமையைச் செய்த இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பில் வெற்றி பெற்று இருப்பதுதான் இந்த ஆறுதலுக்குக் காரணம். இதைத் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளக் காரணம் இந்தியா எடுத்த நிலைப்பாடு. ''இலங்கை அரசாங்கம் அமைத்த விசாரணை ஆணையத்தின் முடிவின்படி நடவடிக்கைகள் அமைய வேண்டும்'' என்று சொல்கிறது அமெரிக்காவின் தீர்மானம். பல மாதங்களுக்கு முன்னால் ஐ.நா. அமைத்த மூவர் குழுவின் அறிக்கைப்படி நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதுதான் சரியான நிலைப்பாடாக இருக்கும். இருந்தாலும் இதையாவது அமெரிக்கா கொண்டு வரு…
-
- 2 replies
- 825 views
-
-
பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் இறுதிக் காலகட்டத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சக்திகள் அதனை முற்று முழுதாக குழப்பி சதி செய்வதற்கு எவ்வாறு தமது தந்துரோபாய வழிகளை மேற்கொண்டனரோ அது போன்றே இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் நிகழ்ச்சி நிரல் அமையப் பெற்றிருந்தது என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அரச ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்தார். குறிப்பாக இந் நாட்டின் இலவசமாக வழங்கப்படும் கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றை அனுபவித்து விட்டு அற்ப சொற்ப டொலர்களுக்காக தமது தாய் நாட்டை காட்டிக் கொடுக்கும் கும்பல்களானது சர்வதேச எதிர்ப்பு சக்திகளையும் விடவும் பலம்வாய்ந்ததாக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். தற்போது அவுஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்றுவரு…
-
- 4 replies
- 1.1k views
-
-
முஸ்லீம் குழுக்களுக்கிடையில் மோதல்- 10பேர் காயம்,14வாகனங்கள் சேதம்! Published on March 23, 2012-10:49 pm · பொலனறுவை வெலிக்கந்தை கடுவன்வெல என்ற முஸ்லீம் கிராமத்தில் நடந்த சமய நிகழ்ச்சி ஒன்றின் போது இடம்பெற்ற மோதல்களில் 10பேர் காயமடைந்துள்ளனர். 14 வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. ஆம்பாறை கல்முனையிலிருந்து வந்த குழவினருக்கும், உள்ளுர்வாசிகளுக்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக வெலிக்கந்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் வெலிக்கந்தை வைத்தியசாலையில் அவசர சிகிச்சையை மேற்கொண்ட பின்னர் கல்முனைக்கு திரும்பி விட்டனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 7வான், 6முச்சக்கரவண்டிகள், ஒரு மி…
-
- 3 replies
- 1.2k views
-
-
மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான யோசனை மீதான வாக்கெடுப்பு முன்னர், இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியதால், இலங்கைக்கு ஆதரவான வாக்குகள் வழங்கப்படுவதில், இந்தியாவின் இந்த தீர்மானம் நேரடியான பாதிப்புகளை ஏற்படுத்தியதாக பிரான்ஸூக்கான இலங்கை தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த நிலைப்பாடு மிகவும் முக்கியமான ஒன்றாக இதன் போது, செயற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் இந்த தீர்மானம் காரணமாக இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க இருந்த நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை. அத்துடன் ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்திருந்த நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களித்தன. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அப்ப…
-
- 4 replies
- 1k views
-
-
இந்தியாவை மிரட்டும் சீனாவின் போர் ஒத்திகை இந்திய எல்லையை ஒட்டியுள்ள திபெத் மலைப்பிரதேசத்தில் சீன விமானப் படையினர் குண்டுகளை வீசி போர் ஒத்திகை நடத்தி வருகிறார்கள். இந்த ஒத்திகையில் சீனாவின் ஜெ-10 ரக குண்டு வீச்சு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. திபெத்தில் 3,500 அடி உயரமுள்ள பீடபூமியில் இந்த ஒத்திகை நடைபெறுவதாகவும், இது போன்ற ஒத்திகை நடைபெறுவது இதுவே முதல் தடவை என்று அதிகாரிகள் தெரிவித்ததாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இரவு பகலாக நடைபெற்ற இந்த ஒத்திகையின் போது லேசர் துணையுடன் கூடிய குண்டுகளை குறிப்பிட்ட இலக்கில் வீசி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த ரக போர் விமானங்கள் உயரமான மலைப்பகுதியில்(ஆக்சிஷன் …
-
- 17 replies
- 2.4k views
-
-
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளாக ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. இந்தியாவுடன் இதுவரை காலமும் பேணி வந்த நட்புறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2006ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். சுதந்திரத்திற்கு பின்னரான சகல அரசாங்கங்களும் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சியின் கைக்கூலிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்தின் உள்ளடக்கம் தொடர்பில் அறிந்து கொள்ளாமலேயே ஆர்ப்பாட்டங்கள…
-
- 3 replies
- 1.2k views
-
-
மஹிந்தவும், கோத்தபாயவுமே இந்த நாட்டை அமெரிக்காவுக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளனர் - சிறிதுங்க ஜயசூரிய "நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை மஹிந்த அரசு உடன் அமுல்படுத்தித் தமிழர்களின் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இல்லையேல், இனிவரும் காலங்கள் மஹிந்த அரசுக்கு அக்கினிப் பரீட்சையாகவே அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை." இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய. இலங்கைக்கு எதிரான அமெரிக்கா பிரேரணை நேற்று ஜெனிவாவில் வெற்றிகரமாக நிறைவேறியது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:"இலங்கை அரசு அதாவது மஹிந்த அரசு செய்வோம் …
-
- 3 replies
- 1.6k views
-
-
தென்பகுதி மக்களே நல்லது நடந்துள்ளது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-23 10:17:58| யாழ்ப்பாணம்] இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேறியுள்ளது. இவ்வாறு நிறைவேறிய தீர்மானம் எத்தரப்புக்கு வெற்றியென்று யாரேனும் கேட்பார்களாயின் அது அறியாமையின் பாற்பட்டதாகும். ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நேற்றுவாக்கெடுப்பில் நிறைவேறி உள்ளது என்ற செய்தியால், சிங்கள மக்கள் கவலை கொள்வதோ அல்லது அரசாங்கம் வேதனைப்படுவதோ அர்த்தமற்றவை. உண்மையில் தீர்மானம் நிறைவேறியதையிட்டு இலங்கை மக்கள் அனைவரும் ஆனந்த மடையவேண்டும். ஏனெனில் இலங்கையில் நீண்டகாலமாக நிலவிவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வதேசம் ஒரு ம…
-
- 15 replies
- 1.6k views
-
-
பிரபாகரன் போராட்டம் சரியானதே! தமிழீழம் மலர வேண்டும் என்பதே எனது வாழ்நாள் லட்சியம்!-கருணாநிதி! தனி ஈழத்துக்கான பிரபாகரன் போராட்டம் தவறானது என்று கூறும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. அவர் போராட்டம் சரியானதே. தமிழர்களுக்கென்று இலங்கையில் ஒரு தாயகம் வேண்டும். தமிழ் ஈழம் மலர வேண்டும். அதுதான் எனது வாழ்நாள் லட்சியம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து கருத்து தெரிவித்த கருணாநிதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைத் தமிழர்களுடைய வாழ்வின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையெல்லா…
-
- 15 replies
- 1.5k views
-
-
ஜெனீவா எதிரொலி: எமது கொள்கையில் மாற்றம் இல்லை, சிங்கள தேசம் இன்று ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அடுத்து சில சிங்கள அரச அதிகாரிகள் வெளியிட்ட உடனடி கருத்தில் தமது கொள்கையில் உடனடியாக எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என அறிவித்தனர். Sri Lanka Unfazed by U.N. Rights Resolution As expected, Sri Lankan leaders rejected the resolution. Minister Mahinda Samarasinghe, head of the Sri Lankan delegation in Geneva, termed it as misconceived, unwarranted and ill timed. "Shouldn’t we be given more time and space?" "As far as Sri Lanka is concerned, our policy in respect of all matters will continue to be guided by the vital intere…
-
- 23 replies
- 2.6k views
-
-
இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த அல்லது பரபரப்பாகக் காட்டப்பட்டிருந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் மேற்படி தீர்மானம் உத்தேச பிரேரணையாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டபோது, அதில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்தாமை தொடர்பில் எமது அதிருப்தியினை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். ஆனால் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் ஏற்கனவே பிரேரிக்கப்பட்டதனை விடவும் மிகவும் நலிதாக்கப்பட்டே நிறைவேற்றப்பட்டுள்ளது. நாம் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையானது குற்றம் சாட்டப்பட்டவரே நீதிபதிய…
-
- 3 replies
- 477 views
-
-
அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றத்துக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்பு ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றை ஊக்குவிக்கும் பிரேரணை' நிறைவேற்றப்பட்டதை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது. இப்பிரேரணையாது இன வேறுபாடின்றி இலங்கையர் அனைவருக்கும் நன்மையளிக்குமென நாம் நம்புகிறோம்' என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் பிரேரணையும் மனித உரிமை பேரவையின் தீர்மானமும், அரசாங்கமானது தற்போதைய நிலையிலிருந்து விலகி மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான காத்திரமான முடிவு…
-
- 5 replies
- 1.1k views
-
-
எமக்கு ஆதரவு தந்த கூடன்குளம் மக்களுக்கு ஆதரவு தந்து புலத்தில் உள்ள தமிழர்கள் அமைப்புக்களும் போராட்டங்களை நடாத்த வேண்டும் அறிக்கைகளை வெளியிட வேண்டும்.
-
- 9 replies
- 1.1k views
-
-
When victims of mass abuse are ignored they are twice victimized: first by their oppressors, secondly by the world's indifference. That's why few failures in the field of human rights are more discouraging than the old double standard of favouring one set of victims over another. Just ask the ethnic Tamil's of Sri Lanka. In the past three years they've absorbed brutality, military defeat and world indifference all at once, as other of the world's injustices took centre stage. In the spring of 2009, at the end of that country's long civil war, as many as 40,000 Tamil civilians were allegedly slaughtered by the Sri Lankan military as the insurrection by the Tamil Tige…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஐ.நா.வின் பங்களிப்பை இலங்கை ஏற்க வேண்டிய முன்நகர்வு நவநீதம்பிள்ளை சூசகமாகத் தெரிவிப்பு மனித உரிமைகள், பதிலளிக்கும் கடப்பாடு போன்ற விவகாரங்களுக்குத் தீர்வு காணும் தனது உள்நாட்டுப் பொறிமுறைகளில் ஐ.நா.வின் பங்களிப்பை விரைவில் இலங்கை ஏற்றுக்கொள்ள வைக்கக்கூடிய முன்நகர்வாக மனித உரிமைகள் தொடர்பான கடப்பாடுகள், உறுதிப்பாடுகளை நாடுகளும் சம்பந்தப்பட்டோரும் அமுல்படுத்தும். அவர்களின் முயற்சிகளுக்கு உரிய வேளையில் தரமான தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கான சர்வதேச முயற்சிகள் ஒன்று கூடிவருவதாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று முன்தினம் புதன்கிழமை "சிறப்பான நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதலும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத…
-
- 0 replies
- 1.3k views
-
-
நீர்மோரில் மேலும் தண்ணீரை ஊற்றிவிட்டார்கள் : விஜயகாந்த் ஆவேசம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள தீர்மானம் நீர் மோர் என்றும் அதில் இந்தியா தலையிட்டது நீர்மோரில் மேலும் தண்ணீரை ஊற்றியது போலாகிவிட்டது என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ’’ஆள் கடத்தல், ஆட்களை காணாமல் செய்வது, ஆட்களை கொலை செய்வது போன்ற காரியங்களில் ஒரு அரசே ஈடுபட்டால் அது மனித உரிமை மீறல்களாகும். ஒரு போரில் சரண் அடைய வந்தவர்களை சுட்டுக் கொல்வதோ, போரில்லாத பகுதி என்று அறிவித்து அங்கு மக்களை சேர்த்து அவர்கள் மீது குண்டு போடுவதோ, மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டு இடங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதோ போர…
-
- 7 replies
- 1.3k views
-
-
இலங்கையில் மனித உரிமைப் பாதுகாவலர்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்குபற்றுவதற்காக இலங்கையிலிருந்து ஜெனீவா சென்ற மனித உரிமை ஆர்வலர்கள் மீது கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதிக்கு அநாமேதய மிரட்டல் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் தொலைக்காட்சிகள், இலத்திரனியல் ஊடகங்கள், செய்தித் தாள்கள் உள்ளிட்ட பலவற்றில் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக கருத்துக்…
-
- 2 replies
- 471 views
-
-
ஐ.நா. மனித உரிமை அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த அவுஸ்திரேலேயே கிரீன்ஸ் செனட்டர் லீ ரியானோன், சிறீலங்காவை போர்க்குற்றங்களுக்கு பதிலளிக்கச் செய்திட சர்வதேச சமூகம் மேற்கொண்ட நீண்ட நாள் எதிர்ப்பார்க்கப்பட்ட முதல் நடவடிக்கை இது என்றார். மேலும் அவர் கூறுகையில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் சர்வதேச சமூகம் சிறீலங்காவின் கண்ணாமூச்சி விளையாட்டுக்கு உட்பட விரும்ப வில்லை என்பதைக் காட்டியிருக்கிறது என்றார். மேலும் 2009-ல் சிறீலங்காவிற்கு ஆதரித்து வாக்களித்த நைஜீரியா, கேமரூன், இந்தியா போன்ற நாடுகளும் இப்போது அந்நாட்டுக்கு எதிராக வாக்களித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றார். உள்நாட்டுப் போரின் போது தமிழர்கள் மீது கொடுஞ்செயல்கள் நடைபெற்றதற்கு…
-
- 0 replies
- 677 views
-
-
Sri Lanka's state-controlled media has described journalists as "traitors" following the UN human rights council's call for an investigation into the country's alleged abuses during its war against Tamil separatists. In an attack on Sri Lankan journalists, both at home and in exile, state television accused them of "betraying the motherland." Although the broadcaster did not name the journalists who had participated in the human rights council sessions, it screened "thinly disguised photographs of them" and said it would reveal their names soon. Journalists in the capital, Colombo, told the Committee for the Protection of Journalists (CPJ) they were concerned …
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை தொடர்பான தீர்மானத்தை நீர்க்கச் செய்தது இந்திய அரசு இப்போதுதான் இலங்கை குறித்த ஐ.நா மனித உரிமை அவையின் தீர்மானத்தையும், அறிக்கையையும் படித்தேன். நீங்களும் படித்திருப்பீர்கள். இந்தத் தீர்மான நகல் கிடைத்தவுடன் என்ன நடக்கப் போகிறது என நான் எழுதினேனோ (amarx.org/?p=407) அது 100 சதம் அப்படியே நடந்துள்ளது. இந்திய முயற்சியில் தீர்மானம் நீர்க்கடிக்கப்பட்டுள்ளது. நான் கூறியிருந்தவாறே மூன்றாவது பத்தியில் இருந்த முக்கிய நிபந்தனை வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளது. இலங்கை அரசுடன் கலந்தாலோசித்து, இலங்கை அரசின் ஒப்புதலுடன் மட்டுமே விசாரணை ஆணையம் குறித்த தொழில் நுட்ப உதவிகளை ஐ.நா அளிக்க முடியும் எனத் தீர்மானம் மாற்றப்பட்டுள்ளது.. ஆக, ராஜபக்சே குடும்பத்தினரால் தேர்வு செய்யப…
-
- 0 replies
- 842 views
-
-
3. Encourages the Office of the United Nations High Commissioner for Human Rights and relevant special procedures mandate holders to provide, in consultation with, and with the concurrence of, and the Government of Sri Lanka to accept,, advice and technical assistance on implementing the above-mentioned steps;, and requests the Office of the High Commissioner to present a report on the provision of such assistance to the Human Rights Council at its twenty-second session.
-
- 23 replies
- 2.3k views
-
-
ஐ.நா. தீர்மான விவகாரம்... தமிழகத்தை கடுமையாக விமர்சிக்கும் ஆங்கில மீடியாக்கள்! வெள்ளிக்கிழமை, மார்ச் 23, 2012, 14:59 [iST] A A A Newsletter Its Free! உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் Ads by Google Autoverzekering afsluiten www.independer.nl/autoverzekering Sluit nu binnen 5 minuten de goedkoopste autoverzekering af! Ads by Google Download Google Chrome Snel & Eenvoudig Zoeken met De Webbrowser van Google! www.google.com/Chrome சென்னை: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்து, பின்னர் இந்தியாவின் தலையீட்டால் நீர்த்துப் போகச் செய்யப்…
-
- 1 reply
- 1.2k views
-