ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
அடுத்த 4 மாதங்களுக்கு... தேவையான அரிசியை, இறக்குமதி செய்யுமாறு அறிவிப்பு! எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மாத்திரமே அரிசி கையிருப்பு உள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம், கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இதன்காரணமாக அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு விவசாய அமைச்சு, வர்த்தக அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் 3 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக விவசாய பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் நுகர்விற்கு தேவையான அரிசியின் அளவு மாதாந்தம் 2 இலட்சம் மெட்ரிக் தொன் என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1286121
-
- 0 replies
- 89 views
-
-
28 FEB, 2025 | 03:21 PM மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை கண்டறிந்து ஊக்குவிப்பதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையின் மின்சாரத் தேவையைக் குறைப்பதும் மின்சாரத்திற்கான அடிப்படைச் செலவைக் குறைப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும் என்றும், அடுத்த ஐந்து வருடங்களுக்குள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியை அதிகரித்து அனைத்து இலங்கையர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்குவதே எமது நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். வலுசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் திட்டமான "பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030" அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (27) கொழும்பு சினமன…
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
Published By: VISHNU 18 DEC, 2023 | 08:34 PM (நா.தனுஜா) நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அரச மற்றும் ஊழல் எதிர்ப்பு மறுசீரமைப்புக்கள் இன்றியமையாதவையாகும். இம்மறுசீரமைப்புக்களுக்கு உரியவாறான முக்கியத்துவம் வழங்கப்படாவிடின், அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கை மீண்டும் கடன்நெருக்கடியில் சிக்கிக்கொள்ளக்கூடிய அபாயம் காணப்படுவதாக 6 அமைப்புக்களை உள்ளடக்கிய 'பொருளாதார மீட்சிக்கான ஊழல் எதிர்ப்பு சீர்திருத்த சிவில் சமூகக் கூட்டமைப்பு' எச்சரித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஊழல் எதிர்ப்புசார் மறுசீரமைப்புக்களில் நிலவும் முன்னேற்றமின்மை குறித்து ட்ரான்ஸ்பே…
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் அவருடைய குழுவினரும் வட மாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸூடன் கலந்துரையாடியுள்ளனர். இன்று நண்பகல் ஆளுனர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது வடக்கில் மேம்படுத்தப்படவேண்டிய ஏற்றுமதித்துறை, சுற்றுலாத்துறை, விருந்தோம்பல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான கற்கைநெறிகள். தாதியர்களுக்கான சர்வதேச தரத்திலான கற்கைநெறி, என்பன தொடர்பில் பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டன. அடுத்த 5 வருடத்திற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆர்வத்தை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆவலுடன் வெளிப்படுத்தினார். குறிப்பிட்ட துறைகளில் முன்னெடுக்கக்கூடிய திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து சாத்தியப்படக் கூடியவற்றை விரைந்து செ…
-
- 0 replies
- 371 views
-
-
Published By: DIGITAL DESK 3 01 JUN, 2024 | 04:00 PM அடுத்த 50ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கும் இடமாக பொதுநூலகம் விளங்கும் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுவரும் ஆசியாவின் பிரமாண்ட நூலகத்திற்காக நூல்களை சேகரிக்கும் வகையில் புத்தக திருவிழா என்னும் நிகழ்வின் ஊடாக புத்தகங்களை சேகரிக்கும் பணிகள் இன்று சனிக்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன. இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் முயற்சியினால் மட்டக்களப்பில் இந்த பிரமாண்ட நூலகம் அமைக்கப்பட்டுவரும் நிலையில் அதன் நிர்மாண பணிகள் பூர்த்தியாக்கப்பட்டு விரைவில் திறப்பு விழா காண…
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை மகாநாட்டில் சிறிலங்கா அரசின் போர்க்குற்ற விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என மனித உரிமைப் பேரவை பேச்சாளரான ரவினா ஷம்டாசினி தெரிவித்துள்ளார். . இருப்பினும் இந்த அமர்வின் போது மனித உரிமைகள் விவகாரம் குறித்த விவாதங்களில் போது சிறிலங்காவின் விடயங்களைத் தொட்டுச் செல்ல முடியுமெனவும் அவர் கூறியுள்ளார். . இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் அல்லது பாதுகாப்புச் சபையின் இசைவுக்கு ஏற்ப மட்டுமே சிறிலங்கா அரசின் போர்க் குற்றம் தொடர்பில் விசாரணைகளை நடத்த முடியும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.Eelanatham UN Secretary General Ba…
-
- 2 replies
- 746 views
-
-
அடுத்த அமைச்சர் யார் என ஆராய ரெலோ உயர் பீடம் மீண்டும்கூடுகிறது தமது கட்சிக்குக் கிடைக்கும் அமைச்சுப் பதவியை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் புளொட்டைத் தொடர்ந்து ரெலோவிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதற்காக அந்தக் கட்சியின் உயர் மட்டக் குழு எதிர்வரும் 12ஆம் திகதி கூடி ஆராயவுள்ளது. வடக்கு மாகாண அமைச்சரவையை முழுமையாக மாற்றப் போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருக்கிறார். ரெலோ அமைப்பு தமது கட்சி சார்பாக அமைச்சரவையில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பா.டெனீஸ்வரனை நீக்குமாறு கோரியிருந்தது. அத்தோடு அந்த…
-
- 2 replies
- 382 views
-
-
அடுத்த அயலுறவுத்துறை அமைச்சர் மங்களவா? நவீனா? அரசுக்குள் இழுபறி அயலுறவு அமைச்சுப் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்க விலகியதையடுத்து அந்த அமைச்சுக்கு மங்கள சமரவீர மற்றும் நவீன் திசாநயக்க ஆகியோரில் யாரை நியமிப் பது என்பது தொடர்பில் கூட்டு அரசுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று அறியமுடி கிறது. அயலுறவுத் துறை அமைச்சராக திலக் மாரப்பன மற்றும் நவீன் திசாநயக்க இரு வரின் பெயர்களும் முன்மொழியப்பட் டுள்ளன. திலக் மாரப்பன, கூட்டு அரசில் சட்டம் ஒழுங்கு அமைச்சராக பதவி வகித்திருந்த நிலையில் அவன்காட் சர்ச்சை காரணமாக அந்தப் பதவியிலிருந்து அவர் விலகியிருந்தார். …
-
- 0 replies
- 172 views
-
-
அடுத்த அரச தலைவர் தேர்தலிலும் மைத்திரியே சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் இந்த நாட்டில் ஆட்சி புரிந்த அத்தனை அரச தலைவர்களுக்கும் முன்னுதாரணமாக எமது தற்போதைய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன திகழ்கின்றார். தனது அதிகாரத்தையே குறைக்க வேண்டும் என விரும்புகிறவர் அவர். அடுத்த அரச தலைவர் தேர்தலிலும் சுதந்திரக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடப் பொருத்தமானவர் அவரே’’ என்கிறார் ஐ.ம.சு. முன்னணி யின் பொதுச் செயலாளர் – அமைச்சர் மகிந்த அமரவீர. எதிர்வரும் ஓகஸ்ட் அல்லது ஒக்டோபர் மாதமளவில் மைத்திரி அணியில் இருந்து மகிந்த அணிக்கு 18பேர் செல்லவுள்ளனர் என்று கூறப்படுவது உண்மையா? பதில…
-
- 0 replies
- 162 views
-
-
அடுத்த அரசாங்க குழு லலித் வீரதுங்க தலைமையில் ஜெனிவா செல்கிறது! [saturday, 2014-03-15 10:02:09] ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையின் 25வது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக எதிர்வரும் 23ஆம் திகதி ஜெனீவா புறப்படவுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவித்தன. இக்குழு, மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய உறுப்புரிமை நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிப்பர். ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்ட உத்தேச வரைபின் கேள்வி நேரம் இம்மாதம் …
-
- 0 replies
- 436 views
-
-
அடுத்த அரசிலேயே புதிய அரசியலமைப்பு தற்போதைய அரசியலமைப்பின் மூலம் தேசிய பிரச்சினையை தீர்க்க முடியும் என்கிறார் எஸ்.பி. (ஆர்.யசி ) புதிய அரசியலமைப்பை உருவாக்கி தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண இப்போதைய சூழல் பொருத்தமற்றது. சர்வஜன வாக்கெடுப்பு இன்றி புதிய அரசியல் அமைப்பை கொண்டுவர மக்கள் அதிகாரம் வழங்கவில்லை. எனவே, அடுத்த ஆட்சியில் தேசிய அரசாங்கமாகவோ அல்லது தனி கட்சியாகவோ மக்கள் ஆதரவுடன் புதிய அரசியலமைப்பை கொண்டுவருவோம் என அமைச் சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். நிகழ்கால அரசியல் அமைப்பின் மூலமாக தேசிய பிரச்சினைகளை இலகுவாக கையாள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். சமூக வலுவ…
-
- 0 replies
- 203 views
-
-
எதிர்காலத்தில் அமையவுள்ள அரசில் அமைச்சர்களின் எண்ணிக்கை நிச்சயம் இப்போது உள்ளதைவிடக் குறைக்கப்படும் என சிறிலங்கா அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 327 views
-
-
தேர்தலின் பின்னர் அமையவிருக்கும் புதிய ஆட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் அவர் மூலமாக நாம் முழுமையான அரசியல் தீர்வைப் பெறவேண்டும். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலம் மிக்க கட்சியாக 22 உறுப்பினர்ளைப் பெறவேண்டும். இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டும். இதுவே தெளிவான இலக்கு. ஒவ்வொரு தமிழ் மகனும் இந்தத் தெளிவைப் பெற வேண்டும். புத்திஜீவிகள் தெளிவுபடுத்தவும் வேண்டும். இவ்வாறு மாவடிமுன்மாரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் உரையாற்றிய இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர் பா. அரியநேந்திரன் கூறினார். http://virakesari.lk/articles/2015/07/19/அடுத்த-ஆட்சியில்-தீர்வைப்-பெறுவதற்கு-கூட்டமைப்பைப்-பலப்படு…
-
- 4 replies
- 531 views
-
-
11 Nov, 2025 | 02:52 PM ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) ஏழைகளுக்கு வரி விதித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் தான் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும், நாட்டு மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 சதவீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாற…
-
- 0 replies
- 106 views
- 1 follower
-
-
2009ம் ஆண்டின் இறுதிவரை யுத்தம் தொடருமென இராணுவ தளபதி பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளி வடபகுதி பாதுகாப்பு நிலைமை தொடர்பாக மஹிந்த மற்றும் முப்படைகளின் உயர் அதிகாரிகள் கலந்த கொண்ட விஷேட பாதுகாப்புச் சபை கூட்டத்திலேயே பொன்சேகா மஹிந்தவிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார். தெரிவு செய்யபட்ட 1500 வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கபட்டு வருவதாகவும் அவர்கள் விரைவில் களமுனைக்கு அனுப்பபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். தனது பதவிக் காலத்தில் சுமார் 3000 புலிகள் எதிர்வரும் ஆகஸ்ட மாதத்திற்கு முன்னர் கொல்லப்பட்டு விடுவார்களெனவும் இவ்வருட இறுதியில் தனது பதவிக் காலம் முடிவடைவதற்குள் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு விடுமெனவும் இவர் முன்னர் தெரிவித்திருந்தார். இந்நிலையில…
-
- 5 replies
- 1.7k views
-
-
எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்திற்குப் பின்னர் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆரம்பமாகும் முதலாவது நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கு சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 939 views
-
-
அடுத்த ஆண்டிலேயே நாடாளுமன்றத் தேர்தல்? – மைத்திரியின் வாக்குறுதியால் சந்தேகம் APR 20, 2015 | 2:22by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தேர்தல் முறை மாற்றம் தொடர்பான, அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னரே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உறுதியளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றுக்காலை அதிபர் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், நேற்றுமாலை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்த சந்திப்பிலும், அதிபர் மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல்முறை மாற்றப்பட்ட பின்னரே தாம் நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதாகவும், அவர் கூறியிருக்கிறார். சிறிலங்கா சுதந்திரக்…
-
- 0 replies
- 266 views
-
-
அடுத்த ஆண்டில் 8500 அகதிகளுக்கே கதவைத் திறக்கிறது கனடா! [Friday, 2012-11-09 18:43:23] அடுத்த ஆண்டு கனடாவிற்குள் அனுமதிக்கப்படவுள்ள 260,000 பேரில் தொழில்சார்ந்த பயிற்சியுடைய, கல்வித்தகுதி மற்றும் வியாபார முதலீட்டாளர்கள் 158,000 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர். இது முழுத்தொகையின் 62 விழுக்காடாகும். இவ்வாறு வருகை தருபவர்கள் உடணடியாகவே தொழில் வாய்ப்பைப் பெறும் தன்மை இருப்பதோடு, கனடாவின் தேசிய மொழிகளான ஆங்கிலம் அல்லது பிரெஞ்சுத் திறமை உள்ளவர்களாகவே இருக்கப் போகிற படியால் மொழிக் கற்கை, மற்றும் குடியமர்வுச் சேவைகள் போன்றவற்றிக்குச் செலவளிக்கப்படும் பணம் மீதப்படுத்தப்படும். இதற்கு அடுத்த கட்டமாக குடும்ப வகுப்பில் தெரிவு செய்யப்படும், வாழ்க்கைத் துணைகள், பெற்றோர்கள…
-
- 0 replies
- 485 views
-
-
எதிர்க்கட்சிகள் முறைப்படி வேண்டுகோள் விடுத்தால் அடுத்த ஆண்டில் திடீர் நாடாளுமன்றத் தேர்தலையோ, அதிபர் தேர்தலையோ நடத்த தாம் தயார் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று காலை ஊடக ஆசிரியர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “எனது பதவிக்காலம் 2016ம் ஆண்டிலேயே முடியவுள்ள நிலையில், அடுத்த ஆண்டில் திடீர் அதிபர் தேர்தலை நடத்த நான் திட்டமிடவில்லை. எதிர்க்கட்சிகள் முன்கூட்டியே தேர்தலை நடத்தக் கோரினால், அதுகுறித்து ஆலோசிக்கத் தயாராக இருக்கிறேன். முதலில் எந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என்று நான் எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்க வேண்டியுள்ளது. சட்டத்துக்கு மேலானவர்கள் எவருமில்லை. சட்டத்தை மீறினால், எந்த அரசியல்வாதியானாலும், அ…
-
- 2 replies
- 393 views
-
-
இந்த ஆண்டு முடிவதற்குள் கணனிமயப்படுத்தப்பட்ட புதிய தேசிய அடையாள அட்டைகளை வழங்க சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது. புதிய அடையாள அட்டைகள் அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படவுள்ளது. அதனால் போலி அடையாள அட்டைகளைத் தயாரிப்பது மிகக் கடினமானதாகும். தற்போது அடையாள அட்டையை வைத்திருப்பவர் அனைவரும் புதிய அடையாள அட்டைகளைப் பெறுவர். புதிய அட்டையில், உரியவரின் கைரேகையும் பதிவு செய்யப்பட்டிருக்கும். மேலும் விவரங்கள் மாற்றக்கூடியதாகவும் இருக்கும். உதாரணமாக கணனிமயப்படுத்தப்பட்ட இந்தப் புதிய அட்டையில் முகவரி மாற்றத்தை எளிதாகச் செய்யலாம். அதே நேரத்தில் போலி அட்டைகளைத் தயாரிக்க முடியாது. அடையாள அட்டை பெறுபவர்களின் முழு விவரங்களும் கணனியில் சேகரிக்கப்ப…
-
- 0 replies
- 726 views
-
-
அடுத்த ஆண்டு 31 பில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 3 தேர்தல்கள். அடுத்த வருடத்துக்காக (2024) சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் மூன்று தேர்தல்கள் தொடர்பாக 31 பில்லியன் ரூபா மதிப்பீட்டை தேர்தல்கள் ஆணைக்குழு சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இந்த மதிப்பீடு முன்வைக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்காக 10 பில்லியன் ரூபா மதிப்பீட்டை சமர்ப்பித்திருந்தது. ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கும் ஒரு மாதத…
-
- 0 replies
- 241 views
-
-
அடுத்த ஆண்டு உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மட்டுமன்றி சில மாகாண சபைகளின் தேர்தல்களும் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஆண்டு ஆரம்பத்தில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு, சபரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 251 views
-
-
அடுத்த ஆண்டு கொழும்பு வருகிறார் ரஸ்ய ஜனாதிபதி புடின்! [Tuesday 2014-09-23 07:00] ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அடுத்த ஆண்டு இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்பினை ரஸ்ய ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி புடின் விரைவில் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளதாக இலங்கைக்கான அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது. மிக நீண்ட இடைவெளியின் பின்னர் ரஸ்ய தலைவர் ஒருவர் இலங்கைக்குப் பயணம் செய்யவுள்ளார். புடினின் இலங்கைப் பயணத்தின் போது பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. seithy.com
-
- 1 reply
- 540 views
-
-
சிறிலங்கா அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 30ம் நாள் நடத்தப்படலாம் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று ஊகம் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அதிபரின் சோதிட ஆலோசகர், தேசபந்து சுமணதாச அபேகுணவர்த்தனவை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபரின் கிரகநிலைப்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் நாளுக்குப் பின்னரே, அவருக்கு நற்பலனையும், பலத்தையும் கொடுக்கும் என்று அவர் கூறியுள்ளார். அதேவேளை, வரும் செப்ரெம்பர் மாதம் ஊவா மாகாணசபைத் தேர்தலை நடத்தப்படவுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது. எனினும், 2016ம் ஆண்டு வரை அதிபர் தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அண்மையில் சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார். எனினும், ஐ.நா விசாரணைகளை முன்வைத்து அரசியல் நல…
-
- 0 replies
- 315 views
-
-
அடுத்த ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் -ஏப்ரலில் பொதுத்தேர்தல்! [sunday, 2014-05-04 18:33:30] அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தமிழ்- சிங்கள சித்திரை புத்தாண்டிற்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடக் செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை அறிவித்துவிட்டு அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலையும் அதன் பின்னர் பொதுத் தேர்தலையும் நடத்துவதற்கே அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்தி பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தை கலைத்ததுடன் ஏப்ரல் இரண்டாம் திகதி ந…
-
- 0 replies
- 388 views
-