ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143342 topics in this forum
-
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் இடையில் நிலவும் நல்லுறவை சீர்குலைப்பதற்கு முன்னெடுக்கப்படும் சதிமுயற்சிகள் தொடர்பில் உள்நாட்டிலும், புலத்திலும் வாழ்கின்ற தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பு தொடர்பிலே மனோ கணேசன் கருத்து தெரிவித்ததாக சிங்கள தினசரி ஒன்றிலும், இணையத்தளம் ஒன்றிலும் நேற்று செய்தி வெளியாகியிருந்தது. மேற்குலக நாடுகளுக்குச் சென்று கூட்டமைப்பினர் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் பணம் சேர்க்கின்றார்கள் என்று பொருள்படும் கருத்தை நான் தெரிவித்ததாக லங்காதீப சிங்கள தினசரி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியை ஆளும் அரசாங்க அமைச்சர் ஒருவருக்க…
-
- 0 replies
- 683 views
-
-
வடக்கில் காணிப் பதிவு என்பது மிகவும் அருமையான, அபூர்மான திட்டம் என யாழ். மாநகர சபை மேயர் பற்குணராசா யோகேஸ்வரி தெரிவித்துள்ளார். தெற்கில் 2007 இல் மேற்கொள்ளப்பட்ட காணிப் பதிவு போன்றே வடக்கிலும் தற்போது இடம்பெறுகிறது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ சிங்களவர்களைக் குடியமர்த்தவே வடக்கில் காணிப் பதிவு என்று கூறுகிறது. அது முற்றும் முழுதான பொய். அவர்கள் கூறுவது போல் அரசாங்கம் வடக்கில் காணிப் பதிவின் மூலம் சிங்களவர்களைக் குடியேற்றப் போவதில்லை என்று அவர் கூறினார். http://www.seithy.com/breifNews.php?newsID=52054&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 787 views
-
-
மஹிந்தவினால் சர்வதேசத்தின் அழுத்தத்தினை தவிர்க்க அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து அவ்வாணைக்குழு நேற்று செவ்வாய்க்கிழமை கலைக்கப்பட்டுள்ளது. . இந்த ஆணைக்குழுவின் அறிக்கை நவம்பர் 20 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என தற்போது இயங்காதுள்ள மேற்படி ஆணைக்குழுவின் பேச்சாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க கூறினார். ஆணைக்குழு தனது பணியை நிறைவுசெய்துள்ள போதிலும் அறிக்கை தயாரிப்பதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் சிறிய ஊழியர் குழுவொன்று ஈடுபட்டள்ளதாகவும் அவர் தெரிவித்தார். . .தேசிய சுவடிக்கூடத்திற்கு இந்த அறிக்கையை கையளிப்பதற்காக இன்னும் இரு மாதங்களுக்கு இந்த ஊழியர்குழு செயற்படும் எனவும் அவர் கூறினார்.இவ்வறிக்கை …
-
- 4 replies
- 1.6k views
-
-
சிறீலங்கா அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான அடுத்த சுற்று பேச்சு இன்று (16-11-2011) நடைபெறுமென அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நேற்று தெரிவித்தார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவர் இரா.சம்பந்தனுடன் நேற்றிரவு தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர் பேச்சுக்கு அழைப்பு விடுத்ததாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார். அரசியல் தீர்வு தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதுதான் கூட்டமைப்பின் பிரதான நோக்கம் என்று கூறிய சுரேஸ் பிரேமச்சந்திரன், இன்றைய சந்திப்பில் அரசாங்கம் அரசியல் தீர்வு குறித்து விளக்கமளிக்குமென எதிர்பார்ப்பதாக கூறினார். கடந்த சுற்று பேச்சுக…
-
- 1 reply
- 871 views
-
-
பொதுநலவாய விளையாட்டுப்போட்டி இலங்கைக்கு கிடைக்காமை மகிழ்ச்சியளிக்கின்றது. இது நாட்டு மக்களுக்கு கிடைத்த பாக்கியமாகும் என்று தேசப்பற்றுள்ள இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாஸ அமரசேகர தெரிவித்தார். ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் மூன்றாம் உலகப்போர் உருவாகும். இதனால் இலங்கையில் “பஞ்சம்' ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாஸ அமரசேகர மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டு மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்கின்றனர். இவ்வாறானதோர் சூழ்நிலையில் அரசாங்கம் களியாட்டங்களையும் விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி கோடிக் கணக்கான பணத்தை வீண் விரயம் செய்வதை ஏற…
-
- 3 replies
- 1.2k views
-
-
உள்ளூர் மக்களை கவலை கொள்ளச் செய்துள்ள சிறிலங்காவின் ‘போர்ச் சுற்றுலா‘ – பிரித்தானிய நாளேடு [ புதன்கிழமை, 16 நவம்பர் 2011, 05:09 GMT ] [ நித்தியபாரதி ] puthinappalakai சிறிலங்காத் தீவில் பார்வையிட முடியாதிருந்த – போர் நடைபெற்ற பெரிய பிரதேசம் ஒன்றை பெருமளவிலான மக்கள் தற்போது பார்வையிடச் செல்வதால் , நாட்டின் வடபகுதியிலுள்ள மக்களின் பொருளாதாரம் வளம்பெற இந்த 'போர் சுற்றுலாத்துறை' உதவுகிறது. உள்ளுர் மக்கள் பணத்தை வரவேற்கின்ற போதிலும், பாரம்பரியமாக தமிழர் கலாசாரப் பிரதேசங்கள் மீது இந்தச் சுற்றுலாத்துறை பாதிப்பை ஏற்படுத்துவது தொடர்பாக கவலை கொள்கின்றனர். தமது இன மக்களுக்கான தனித் தாய்நாட்டிற்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளால் பல …
-
- 0 replies
- 842 views
-
-
ஜனாதிபதி மகிந்தவின் காலத்திலேயே இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவுகள் முன்னெப்போதைக்காட்டிலும் மிகவும் அதிகரித்து இருக்கின்றன - முன்னால் இந்திய வெளியுறவுச் செயலர் யாழ்ப்பாணத்தில் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள ராணுவத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த முன்னால் இந்திய வெளியுறவுச் செயலர் சியாம் சரண் அவர்களின் சொற்பொழிவின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தியா தற்போது காங்கேசந்துறைத் துறைமுக அபிவிருத்தி, பலாலி விமானப்படைத்தள அபிவிருத்தி போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாகவும், அதன் பிறகு தலைமன்னார் - இராமேஸ்வரம் பாலத்தை அமைப்பதன் மூலம் வட இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான தொடர்பை ஏற்படுத்தி இரு நா…
-
- 2 replies
- 870 views
-
-
புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த பிரேமதாச நோர்வேயை நாடினார் விடுதலைப் புலிகளுடன் தெடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச நோர்வேயின் உதவியை நாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் தோற்றுப் போன நோர்வேயின் சமாதான முயற்சிகள் தொடர்பான மீளாய்வு அறிக்கையிலேயே இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 1990 ஜூனில் விடுதலைப்புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்த நோர்வேயின் உதவியை பிரேமதாச நாடியுள்ளார். விடுதலைப் புலிகளுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு உதவுமாறு இலங்கையில் நீண்டகாலம் வசித்த நோர்வேயின் அரசியல்வாதியான ஆர்னே பியோரொவ்வை, அப்போதைய இலங்கை வெளிவிவ கார அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீத் சந்தித்து…
-
- 0 replies
- 612 views
-
-
சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான இரண்டு நிறுவனங்கள் தனியாரிடம் கையளிக்கப்படவுள்ளன. எம்பிலிபிட்டிய கடதாசி தொழிற்சாலை, கந்தளாய் சீனித் தொழிற்சாலை ஆகியனவற்றையே முப்பது வருட குத்தகை அடிப்படையில் இரு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளது.இந்த நிறுவனங்கள் அவுஸ்ரேலிய நாட்டைச்சேர்ந்தவை ஆகும். அண்மையில் பொது நலவாய நாட்டில் மஹிந்தரைக் காப்பாற்றுவதில் அவுஸ்ரேலியாவும் பெரும் உதவி புரிந்தது இதற்கு பிரதி உபகாரமாக மஹிந்த அரசு பல சலுகைகளை அவுஸ்ரேலியாவிற்கு வழங்க தீர்மானித்துள்ளது. . இதன் முதல் கட்டமாக எம்பிலிப்பிட்டிய சீனித் தொழிற்சாலை அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைகக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது.இந்தத் தொழிற்சா…
-
- 1 reply
- 770 views
-
-
வடக்கு கிழக்கில் இருந்து புலம் பெயாந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தமது பெயர்களை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்ய நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற யாழ் மாவட்ட உறுப்பினர் சிறிதரன் போரிக்கை விடுத்துள்ளார். வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமது பெர்களை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்வதற்க்கு உரிய அதிகாரம் உள்ளது. வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்வதினால் தமது பெயர்களை பதிவு செய்ய முடியாது என்ற அர்த்தமில்லை. வெளிநாட்டில் இருக்கும் நாம் வாக்களிக் முடியாது என கவலையீனமாக இருந்து விடாது தமது பெயர்களை வாககாளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். ஆகையினால் வெளிநாடுகளில் புலம் பெய…
-
- 0 replies
- 945 views
-
-
'இம்முறை வந்திருப்பது விருந்தாளிகளாக அல்ல’ - இராணுவமும் யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமையும்! கெரபொத்தா தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப் - “காலச்சுவடு” வரலாற்றில் அதிலகமாகத் தண்டனைகள் வழங்கப்பட்ட பூமியை அணைத்தபடி ஏ9 வீதி சாய்ந்திருக்கிறது. பாரிய கலவரமொன்றில் யுத்த டாங்கிகளாலும் கனரக வாகனங்களாலும் துளைக்கப்பட்ட காயங்கள் எக்கணத்திலும் மீண்டும் கிளரப்பட இடமிருக்கிறதெனத் துப்பாக்கிகளும் பங்கர்களும் இராணுவ முகாம்களும் எதிர்வு கூறுகின்றன. முட்புதர்களிடையே ஒளிந்திருக்கும் நிலக்கண்ணி வெடிகள் குறைந்தபட்சம் ஒரு பனங்காயாவது தனது உடலின் மீது விழும்வரை காத்திருக்கின்றன. நாற்புறத்திலும் கேட்கும் சிங்களக் குரல்கள் ‘இம்முறை வந்திருப்பது விருந்தாளிகளாகவல்ல, நிரந்தரமாகத் தங்குவதற்கே’ …
-
- 2 replies
- 943 views
-
-
[ புதன்கிழமை, 16 நவம்பர் 2011, 00:25 GMT ] [ கார்வண்ணன் ] புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து செயற்பட சிறிலங்கா அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், அதேவேளை விடுதலைப் புலிகளின் ‘ஈழம்‘ திட்டத்துக்காக செயற்படுவோர் மீது அனைத்துலக சமூகம் வெளிப்படையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். காலி கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற 19 நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “புலம்பெயர் தமிழர்களை ஒதுக்க வேண்டிய தேவை சிறிலங்கா அரசாங்கத்துக்கு இல்லை. போருக்குப் பிந்திய சூழலில் அவர்களுடன் இணைந்து செயற்படத் தயாராவே உள்ளது. ஐரோப்பிய ஒன…
-
- 2 replies
- 1.3k views
-
-
மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்து மனோ இராஜினமாச் செய்யவுள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினமாச் செய்யவுள்ளார். குழு எடுத்த தீர்மானத்திற்கமையவே கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்து அவர் இராஜினமாச் செய்யும் முடிவை எடுத்தார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/30951-2011-11-16-05-01-22.html
-
- 0 replies
- 1.7k views
-
-
இலங்கை தொடர்ந்தும் இன மற்றும் மத ரீதியில் பிளவுபட்டே கிடக்கிறது. போருக்குப் பின்னரான இந்தக் காலம் மிக முக்கியமானது. இந்தக் காலத்தில், போரால் ஏற்பட்ட காயங்களை ஆற்ற உதவுவதற்கான வாய்ப்புகளை அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தார் முன்னாள் அமைச்சரும் அரசு புலிகள் பேச்சில் அரச சார்பு உறுப்பினராக இருந்தவரும் கொழும்பு மாநகர சபையின் தற்போதைய எதிர்க்கட்சி உறுப்பினருமான மிலிந்த மொறகொட.இலங்கையின் அமைதி முயற்சிகள் தோல்வியடைந்ததற்கான காரணங்களை விளக்கி நோர்வே வெளியிட்ட, "அமைதிக்கான அடமானங்கள்'' என்ற அறிக்கை வெளியீட்டுக்காக ஒஸ்லோ வந்திருந்தார் மிலிந்த. அங்கு இந்திய ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், "முக்கியமான புள்ளி ஒன்றில் நாம் நின்றுக…
-
- 1 reply
- 855 views
-
-
வடக்கில் மீள்குடியேறிவரும் முஸ்லிம் மக்களின் காணிகளை அதிகார வர்க்கத்தினர் சிலர் கபளீகரம் செய்கின்றனர். என்று வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் குற்றம்சாட்டி உள்ளார். இந்த அநீதியை அதிகார வர்க்கத்தினர் திட்டமிட்டுச் செய்கின்றனரா அல்லது தெரியாமல் செய்கின்றனரா? என்று தெரியவில்லை. இந்த அநியாயத்தைத் தட்டிக்கேட்க அமைச்சர் பதவி தடையாக இருந்தால் தூக்கி வீசவும் தயங்கமாட்டேன். மக்களுடன் வீதியில் இறங்கிப் போராடுவேன் என்றார் அமைச்சர்.திருகோணமலை மாவட்ட புல்மோட்டை அல்அறபா பாடசாலையில் குச்சவெளி பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் இஸ்மாயில் பதுர்தீன் தலைமையில் இடம்பெற்ற புலமைப்பரிசில் ப…
-
- 0 replies
- 616 views
-
-
மாவீரம் மக்களுக்கே சொந்தம் பகைவனே என்னை எம்மண்ணில் புதைத்தாய் எம் மண்ணை எங்கே புதைத்தாய்? போராட்டக் கவிஞன் காசிஆனந்தனின் ஆழமான இக் கவிவரிகள், விதையாகிப்போன ஆயிரமாயிரம் மாவீரர்கள், கல்லறைகளிலிருந்து பாடுவதுபோலுள்ளது. எம் மைந்தர்கள் விதைக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட வேண்டும். ஏனெனில் ஒடுக்கு முறைகளிலிருந்து விடுதலை பெறவே மக்கள் போராடுகின்றார்கள். அடிமையாக வாழத் தெரிந்தவர்களுக்கும், அவ்வாறு வாழ்வதே சரியென அடம்பிடிப்பவர்களுக்கும் கவிபாடத் தேவையில்லை. பொற்கிழி பெற்று, கவியாற்றும் தரகுக்கவிகளே அவர்களுக்குப் போதும். இப் போராட்டக் கவிஞர்களுக்கு மாவீரர் எதைக் கொடுத்தார்கள்? அவர்கள் கையளித்தது போராடும் உணர்வை மட்டுமே. அந்த விடுதலை என்கிற இலட்சிய தீப…
-
- 0 replies
- 664 views
-
-
[ புதன்கிழமை, 16 நவம்பர் 2011, 02:55 GMT ] 2018ம் ஆண்டு கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்தும் வாய்ப்பு சிறிலங்காவுக்குக் கிடைக்காமல் போனதற்கு இந்தியாவே காரணம் என்ற குற்றச்சாட்டை சிறிலங்கா எழுப்பியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் இடம்பெற்ற கொமன்வெல்த் போட்டிகளில் இருந்த குறைபாடுகளும், பிரச்சினைகளும் சிறிலங்காவுக்கான வாய்ப்பு பறிபோனதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. “புதுடெல்லியில் கடந்த ஆண்டு இடம்பெற்ற கொமன்வெல்த் போட்டியானது, இந்தியாவில் இடம்பெற்ற மிக வெற்றிகரமான போட்டி என்று எமக்குத் தெரிந்திருந்தாலும், அந்தப் போட்டி தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் எமது வாய்ப்புகளை பாதித்திருக்கக் கூடும்“ என்று சிறிலங்கா…
-
- 0 replies
- 1.3k views
-
-
யுத்த காலத்தில் புலிகள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு என்ன? இப்போது இலங்கை தொடர்பாக அதிக ஆர்வம் ஏன்?; காரணத்தை விளக்குகிறார் ஆர்மிரேஜ் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பென்ற எண்ணப்பாட்டை சர்வதேச சமூகம் கொண்டிருந்தமை நியாயமற்றதும் ஆழ்ந்த சிந்தனையற்ற எண்ணப்பாடுமாகும் என்று அமெரிக்காவின் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சட் ஆர்மிரேஜ் தெரிவித்திருக்கிறார். இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பான தகவல்களை ஆர்மிரேஜ் வெளியிட்டுள்ளார். இலங்கையின் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்புத் தொடர்பான மீளாய்வு அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆர்மிரேஜ் இ…
-
- 3 replies
- 1.2k views
-
-
'வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை! கொழும்பு, அம்பாந்தோட்டை துறைமுக பங்குகளை சீனாவிற்கு விற்க முடிவு!!' கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களின் உரிமை மற்றம் நுரைச்சோலை அனல் மின் நிலையம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இக்கட்டுமானப் பணிகளுக்கான கடனாக சீனாவிடமிருந்து பெறப்பட்ட 3 பில்லியன் டொலர் தொகையினை மீளளிக்க முடியாத நிலையிலேயே சில அரச நிறுவனங்களின் பங்கு சீனாவிற்கு வழங்கப்படவுள்ளது. இத்தீர்மானத்தினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச எடுத்துள்ளதாக அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்குரிய அமைச்சரவை ஆவணத்தினை நிதியமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகச் செயலருமான …
-
- 7 replies
- 1.6k views
-
-
சீனாவுடன் ஏட்டிக்குப் போட்டியாக சிறிலங்காவில் முதலீடு செய்யமாட்டோம் – யாழ்ப்பாணத்தில் இந்திய இராஜதந்திரி [ செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011, 05:47 GMT ] PUTHINAPPALAKAI சிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு உள்நாட்டுக்குள் தான் தீர்வு காணப்பட வேண்டும், அதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவலாமே தவிர, தீர்வை வழங்க முடியாது என்று இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலர் சியாம் சரண் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று பிற்பகல் ‘அயல் நாடுகளுடனான இந்தியாவின் உறவும், இந்திய – சிறிலங்கா நட்புறவுக் கொள்கையும்‘ என்ற தலைப்பில் உரையாற்றும் பாதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்கா இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இரு பக…
-
- 3 replies
- 864 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011, 04:51 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ] puthinappalakai யாழ்.பல்கலைக்கழகத்தில் முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலர் சியாம் சரண் நிகழ்த்திய உரையை மாணவர்கள் புறக்கணித்துள்ளனர். கைலாசபதி கலையரங்கில் நேற்று பிற்பகல் “இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கையும், இந்திய - சிறிலங்கா நட்புறவும்“ என்ற தலைப்பில் முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலாளரும், நாடுகளின் அபிவிருத்திக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்தின் தலைவருமான சியாம் சரண் உரையாற்றியிருந்தார். யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ஜ.ஏ.சந்திரசிறி, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகா…
-
- 1 reply
- 2.2k views
-
-
செஞ்சோலையில் வளர்ந்த 5பெண்பிள்ளைகள் வெலிக்கடைச் சிறையிலிருந்து எழுதிய கடிதம் வெலிக்கடைச் சிறைச்சாலைப் பெண்கள் பிரிவில் இறுதியுத்தத்தில் சரணடைந்த பல பெண் கைதிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இச்சிறைச்சாலையில் 40வரையான தமிழ்ப்பெண் அரசியல் கைதிகள் துன்பங்களைச் சுமந்து வாழ்கிறார்கள். இவர்களில் கணிசமானவர்கள் முன்னாள் பெண்போராளிகள். பெண்களுக்குரிய மாதவிடாய் காலங்களில் பாவித்தலுக்கான பொருட்கள் மற்றும் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளான சவர்க்காரம் , பற்பசை , பற்தூரிகை முதல் எல்லாவற்றிற்கும் மிகுந்த சிரமப்படுகிறார்கள். குறைந்தது ஒருவருக்கு ஒரு மாதம் ஆயிரம் ரூபா அவர்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்குத் தேவைப்படுகிறது. ஆயினும் 5ரூபாய்கூட இல்லாது அவலப்படுகிறார்கள் இவர்கள…
-
- 1 reply
- 1.8k views
-
-
விடுதலைப்புலிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளில் உளச்சுத்தியுடன் ஈடுபட்டனர். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கும்போதே, விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கவரவாதம் என்ற கண்ணாடியினூடாகவே பார்த்து அவர்கள் இலங்கை அரசிடம் கொண்டிருந்த சமநிலையைக் குலைத்த, சர்வதேச சமூகம்தான் இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததற்குக் காரணம் என்று உருத்திரகுமாரன் கூறினார். இலங்கையின் இனப்பிரச்சனையில் நோர்வேயின் மத்தியஸ்த முயற்சிகள் குறித்து நோர்வேயினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து இன்று திங்கட்கிழமை (14-11-2011) பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கருத்தினை தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளின…
-
- 0 replies
- 529 views
-
-
வேலிகள் சரிந்து இடம்கொடுக்க ஆடுகள் பயிர் மேய்கின்றன போருக்குப் பின்பான வட புலத்து நிலைமை எப்படியாகவுள்ளது என்ற ஆய்வு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிதொன்றாகும். அத்தகையதோர் ஆய்வு மேற் கொள்ளப்பட்டால் வட புலத்தில் கலாசார சீரழிவுகள் கட்டு விழ்த்து விடப்பட்டுள்ளன என்ற முடிபு தெரிய வரும். யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் கலாசார சீரழிவுகள் பற்றி யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அவர்கள் அடிக்கடி எச்சரிக்கை செய்திருந்தார். எனினும் அவர் விடுத்த எச்சரிக்கை தொடர்பில் பெற்றோர்களும் பாடசாலை நிர்வாகங்களும் அதீத கவனம் எடுக்கவில்லை என்பதை உணர முடிகின்றது. இது ஒருபுறமிருக்க, யாழ்.அரச அதிபர் விடுத்த எச்சரிக்கை தொடர்பில் பொலிஸாரும் கவனம் எடுக்கவில்லை என்றே கூறவேண்டும். பொல…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் 2002ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி காலத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு முன் இந்திய அரசாங்கத்தின் முக்கிய தரப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹேம் தெரிவித்துள்ளார். 2002ம் ஆண்டு காலத்தில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கை ஏற்பட நோர்வே மத்தியஸ்த்தம் வகித்ததோடு இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தது. 1992ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதை அடுத்து சுமார் 9 வருடங்களின் பின் இந்திய அரச …
-
- 32 replies
- 4.3k views
-