Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெள்ளிக்கிழமை, 17, டிசம்பர் 2010 (8:41 IST) விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கவில்லை ; 2ஜி விவகாரத்தில் தொடர்பில்லை:ஜெகத்கஸ்பார் `2ஜி முறைகேடுக்கும் தமிழ் மையத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, சந்தேகத்தின் பேரிலேயே சி.பி.ஐ. சோதனை நடந்துள்ளது' என்று பாதிரியார் கூறினார். தமிழ் மையத்தின் நிர்வாக அறங்காவலர் பாதிரியார் ஜெகத் கஸ்பார், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’சி.பி.ஐ. தமிழ் மையம் அலுவலகத்தில் நேற்று முன்தினம் காலை 9.30 மணி முதல் தேடுதல் நடத்தியது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்ததாக பேசப்படும் ஊழல் பணம் தமிழ் மையத்திற்கும் வந்ததா என்பதை அறியவே இத்தேடுதல் என என்னிடம் கூறப்பட்டது. 2ஜி அலைக்கற்றை சர்ச்சைகளுக்கு…

  2. தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல் கைதிகளில் கரிசனை காட்டும் தமிழ் அரசியல் ஜாம்பவான்கள் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்- அனுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் உண்ணாவிரதம் தொடர்கிறது. மிகவும் பலவீனமான முறையில் அவர்கள் இருப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளை தொடர்புகொண்ட மனித நேயம் மிக்க சிங்கள அரசியல் கைதி ஒருவர் தெரிவித்தார். நடக்க முடியாத நிலையில் இருக்கும் இந்த அரசியல் கைதிகளின் நிலை பற்றி ஏற்கனவே குளோபல் தமிழ்ச் செய்திகள் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த செய்தியின் கீழ் உள்ள பகுதியில் முழு விபரங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. தொடரும் உண்ணாவிரதம் குறித்து வெளியில் எவருக்கும் தெரியக் கூடாது என்றும், சிறைச்சாலை மேலதிகாரிகளுக்கு தெரியக் கூடாது என்பதிலும் சிறைக் கா…

  3. "10 வரு­டங்­க­ளாக எனது மகனை தேடி அலை­கின்றேன்" (ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ். ஸ்ரீகஜன்) எனது மகனை 10 வரு­டங்­க­ளாக தேடி அலை­கின்றேன் என்று 2008 ஆம் ஆண்டில் காணாமல்போன மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழக மாண­வனின் தந்­தையார் நேற்று ஜெனி­வாவில் தெரி­வித்தார். மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழக மாணவன் கடந்த 2008 ஆம் ஆண்டு காணாமல் போன நிலையில் அவ­ரது தந்­தையார் தர்­ம­கு­ல­சிங்கம் தற்­போது ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் நீதி கேட்டு ஜெனிவா வந்­துள்ளார். அவர் கேச­ரிக்கு தொடர்ந்தும் கருத்துக் கூறு­கையில், எனது மகன் கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி லங்கா பெல் நிறு­வ­னத்­திற்கு பயிற்ச்­சி­களை பெற்­றுக்­கொள்ள சென்­றி­ரு…

  4. முன்னாள் போராளிகளின் விபரம் திடீரென சேகரிப்பு செ.கீதாஞ்சன் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னாள் போராளிகளின் முழுமையான விபரங்களை திரட்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் தொடர்பிலான அடிப்படை தகவல்களை சேகரித்தல் என்ற தகவலுக்கு அமைய நீதி அமைச்சின் கீழ் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள முன்னாள் போராளிகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினால் இந்த விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. https…

  5. புலத்தில் இருந்து ஈழத்துக்கு வந்த TTN,IBC அதிகாரிகள் பற்றிய கட்டுரை வாசித்து பாருங்கள் படங்கள் சில இவர்கள் ஆயுதங்களுடன் இருப்பது போல இக்கட்டுரையில் இணக்கப்பட்டுள்ளது அப்படங்களை பார்க்க கீளுள்ள இணைப்பை பாருங்க http://defence.lk/new.asp?fname=20060903_06

  6. பாணந்துறையில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி By T. SARANYA 02 NOV, 2022 | 12:11 PM பாணந்துறையில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். குறித்த மாணவர்கள் நச்சு புகையினை சுவாசித்து சுகவீனமடைந்த நிலையிலேயே இன்று (02) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். https://www.virakesari.lk/article/138927

  7. கொழும்பு நாளேடு [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 09:10 ஈழம்] [தெ.சந்திரநாதன்] வன்முறைகளைப் பூரணமாகக் கைவிடுவதாக தமிழீழத் தேசியத் தலைவர் உத்தரவாதக் கடிதம் தந்தாலே தவிர பேச்சுவார்த்தைகளில் சிறிலங்கா அரசு கலந்து கொள்ள மாட்டாது என முன்நிபந்தனை விதித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடொன்று தெரிவித்துள்ளது. இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கருடன் சிறிலங்காவின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் நிமால் சிறிபாலா மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலர் எச்.எம்.ஜி.எஸ்.பலிகக்கார ஆகியோர் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகத் மேற்படி நாளேடு தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டதன் பின்பு, விடுதலைப் புலிகளால் ஒ…

  8. ஆட்கள் காணாமல் போகும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடம் டிச 29, 2010 ஆட்கள் காணாமல் போகும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடத்தில் உள்ளது. ஐ.நா. மற்றும் மனிதவுரிமை அமைப்புகளின் கணிப்பின் பிரகாரம் இலங்கையானது ஆட்கள் காணாமல் போகும் விடயத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கூட இலங்கையில் ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போதல் தொடர்பான நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்குக் கிடைத்துள்ளன. அவ்வாறான நிலையில் எதிர்வரும் மாதம் வெளியிடப்படவுள்ள ஐ.நா. மனித உரிமை அமைப்பின் கடத்தப்பட்டோர் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான அறிக்கையானது இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியிருக்கும் என்ற…

  9. காணாமற்போனோர் தினமான இன்று பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று வவுனியாவில் நடத்தப்பட்டது. பொதுக் கூட்ட நிறைவில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்காக மனு ஒன்றை கையளிக்க வவுனியா மாவட்டச் செயலகம் நோக்கிச் சென்றவர்களை கலகம் அடக்கும் பொலிஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூட்டமாக செல்லக்கூடாது என்று பொலிஸார் பணித்ததால் தாம் தனித் தனியே சென்று அரச செயலகத்தில் மனுவைக் கையளிக்கின்றோம் என்று கூறிய போதும் பொலிஸார் அதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் சுமார் 30 நிமிடங்கள் வரை ஏ - 9 வீதியில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கிடையில் முறுகல் ஏற்பட்டது. பின்னர் மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் வவுனியா பஸ் நிலையம் வரை வ…

  10. யாழ்ப்­பா­ணம் வரு­கி­றார் சந்­தி­ரிகா!! யாழ்ப்­பா­ணம் வரு­கி­றார் சந்­தி­ரிகா!! யாழ்ப்­பா­ணத்­தில் அமைக்­கப்­பட்ட அம்­மாச்சி உண­வ­கக் கிளை­யைத் திறப்­ப­தற்கு நல்­லி­ணக்க செய­ல­ணி­யின் தலை­வி­யும் முன்­னாள் அரச தலை­வ­ரு­மான சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க இன்று யாழ்ப்­பாண வரு­கி­றார் என்று தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. வட­மா­கா­ண­ச­பை­யின் விவ­சாய அமைச்­சி­னால் காங்­கே­சன்­து­றை­யில் கட்­டி­மு­டிக்­கப…

  11. யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில்  கேள்வி எழுப்புமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. பாதுகாப்புத் தரப்பினர் யாரையும் கடத்த வேண்டிய நிலையில் இல்லை என ஜனாதிபதி கூறியுள்ளார். அதனால் மேற்படி விடயம் குறித்து சம்பந்தப்பட்ட துறைக்குப் பொறுப்பான அமைச்சரிடம் பதிலை கோருமாறும் ஜனாதிபதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் நேற்று கூறியுள்ளார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் யாழ் வன்முறைச் சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/…

  12. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு வழங்கக்கூடிய உதவிகள்தொடர்பாக நாம் நேற்று அமெரிக்க துணைத் தூதுவர் உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாடியுள்ளோம். அவர்களும் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஆங்கிலப் பயிற்சிப் பட்டறையை நடத்துவதற்கான உதவிகள் உள்ளிட்ட வேறு பல உதவிகளை எமக்குச் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதுவர் அன்டறூ மான் உள்ளிட்ட குழுவினர் நண்பகல் யாழ்.டில்கோ விருந்தினர் விடுதியில் வடமாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்…

  13. ஜனாதிபதி மீண்டும் துரோகமிழைத்துவிட்டார் : நாமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் துரோகமிழைத்துவிட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது சிறிசேனவின் துரோகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது என நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி சிறிசேன ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு உற்சாகப்படுத்தினார் எனினும் இறுதிநேரத்தில் அவர் பின்வாங்கினார். இதன் மூலம் சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஐக்கியதேசிய கட்சிக்கும் த…

  14. படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தற்கொலை விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வில் மக்கள் பலவந்தமாக அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 10மணியளவில் படையினரால் தற்கொலை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர் உதயன் இணையத்துக்கு கருத்து தெரிவிக்கையில், எங்களை பலவந்தமாக தற்கொலை விழிப்புணர்வுக்கு படையினர் அழைத்து வந்துள்ளனர் .இது தற்கொலை விழிப்புணர்வு என்று தமக்கு தெரியாது.மண்டை விறைக்கிறது நாம் எதையும் சிந்திக்காமல் இங்கு வந்து விட்டோம்.நாம் உழைத்து சாப்பிடுகின்றோம் தற்கொலை செய்ய வேண்டிய அவசியம் நமக்கில்லை. அளவுக்கு அதிகமாக பணம் வைத்திருப்பவன் தன்னிடம் பணம் இல்லை என்று அவன் தற்கொலை செய்வதில்நியாயம் இ…

  15. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மீது அதிருப்தி கொண்டுள்ள ஜனாதிபதி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தி அடைந்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி மக்கள் அளித்த ஆணை தொடர்பில் சந்திரிக்கா வெளியிட்டு வரும் கருத்துக்கள், ஜனாதிபதியை அதிருப்தி அடையச் செய்துள்ளது. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது சந்திரிக்கா, கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார். அரசாங்கத்தில் தொடர்ந்தும் சுதந்திரக் கட்சி அங்கம் வகிக்க வேண்டுமென தெரிவித்திருந்தார். …

  16. யாழ். குடாநாட்டின் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாமா? யாழ். குடாநாட்டின் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாமா என்பது பற்றி பல்கலைக்கழக துறை சார்ந்த அதிகாரிகள் அரசியல் பிரதிநிதிகள் ஆய்வுரீதியாக பரிசோதனைகள் மற்றும் கலந்துரையாடல்களை நடாத்தி மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என கலாநிதி ஆறுதிருமுருகன் ஊடகங்கள் ஊடாக கேரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ் குடாநாடு மட்டுமன்றி வடபகுதி எங்கும் போத்தல் தண்ணீரின் ஆதிக்கம் வலுப்பெற்று மக்களின் பணம் வீண்விரயமாகிறது. அது மட்டுமன்றி போத்தல் தண்ணீருக்கான மக்களின் பணம் தென்னிலங்கை செல்கிறது. ஏழை வீட்டின் மரண சடங்கு முதல் தண்ணீர் போத்தலால் பணம் மேலதிக செலவாகிறது. …

  17. வகுப்பறைகளில் மயங்கி விழுதல்... இராணுவத்தினரின் எஞ்சிய உணவுக்கு கையேந்துதல்: பெரும் அவலத்தில் யாழ். சிறார்கள் [ஞாயிற்றுக்கிழமை, 15 ஒக்ரொபர் 2006, 19:07 ஈழம்] [கொழும்பு நிருபர்] யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் பாரிய பட்டினிச்சாவு அவலத்தை எதிர்கொண்டிருப்பதாக "வீரகேசரி" நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. "வீரகேசரி" நாளேட்டில் வெளியான செய்தி விவரம்: வடமராட்சி, தீவகம், தென்மராட்சி மற்றும் வலிகாமம் பகுதிகளில் உலக உணவுத்திட்டத்தால் முன்னெடுக்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் தற்போது தடைபட்டுள்ளது. பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கான போசாக்கு உணவு எனும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சமைத்த உணவும் வழங்கப்படுவதில்லை. சிறுவர் பாதுகாப்பு நிதியம் மற்றும் யுனிசெஃப் போன்ற சி…

  18. சிங்களவர்கள் பொங்கினால் மட்டும் அதனை வாங்கிச் சாப்பிடுங்கள் சனி, 15 ஜனவரி 2011 16:26 சிங்களக் கைதிகள் பால் பொங்கினால் மட்டும் அதனை வாங்கிச் சாப்பிடுங்கள். இது தவிர நீங்கள் பொங்கல் தயாரிக்கவோ அல்லது பொங்கல் தின விசேட நிகழ்வுகளை நடத்தவோ அனுமதிக்க முடியாது என அநுராதபுரம் சிறைச்சாலையில் கடமை புரியும் சில சிறை அதிகாரிகளும் சிங்களக் கைதிகளும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளிடம் தெரிவித்தனர் எனத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அநுராதபுரம், சிறைச்சாலையிலுள்ள சுமார் 65 தமிழ்க் கைதிகள் தைப்பொங்கல் தினமான இன்று அங்கு விசேட வழிபாடுகளை நடத்த முயன்ற போது, அதற்கு அனுமதி வழங்க மறுக்கப்பட்டமை தொடர்பில் தமிழ்க் கைதிகளின் உறவினர்கள் தம்மிடம் முறையிட்;டுள்ளனர் என த…

  19. வடமாகாண காணி அபிவிருத்தி அமைச்சினால் வடமாகாணத்தில் புதிதாக இணைக்கப்பட்ட 13 காணி அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான நிரந்தர நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண பிரதம செயலாளர் விஐயலட்சுமி ரமேஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வடமாகாண ஆளுநர் மேஐர் nஐன்ரல் ஐP.ஏ.சந்திரசிறி பிரதம விருந்தினராக கலந்துகொண்டு 13 காணி அபிவிருத்தி வெளிகள உத்தியோகத்தர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கிவைத்தார். வடமாகாணத்தில் போட்டிப் பரீட்சைகள் நடத்தப்பட்டு சித்தி பெற்ற 13 பேர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் செ.திருவாகரன் மற்றும் ஆ…

  20. கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய 14415 குடும்பங்களுக்கு வீடுகள் தேவை : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய பொது மக்களில் இன்றும 14415 குடும்பங்களுக்கு வீடுகள் தேவைப்படுகிறது என கிளி நொச்சி மாவட்டச் செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மீள்குடியேறிய போது புதிய வீடுகள் மற்றும் திருத்தம் செய்யப்பட வேண்டிய வீடுகள் 41846 வீடுகள் தேவையாக காணப்பட்டன. இதில் 35667 புதிய வீடுகளும், திருத்தம் செய்யப்பட வேண்டிய வீடுகள் 6179 வீடுகளும் காணப்பட்டன. இதில் இன்று வரையா காலத்தில் 26564 வீடுகள் அரசு மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களால் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு 867 வீடுகள் அம…

  21. 'போரிட்டுக் கொண்டே விடுதலைப் புலிகளுடன் பேசுவோம்" என்பதே சிறிலங்கா அரசின் தற்போதைய நிலைப்பாடாகும். அதாவது அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் தொடர்ச்சியாகப் போரிடப் போகின்றது என்பதே இதன் அர்த்தமாகும். கடந்த 11 ஆம் திகதி முகமாலையில் இராணுவம் பேரிழப்பினைச் சந்தித்தது தொடர்பாக அபிப்பிராயம் வெளியிட்டிருந்த சிறிலங்கா சமாதானச் செயலகப் பணிப்பாளர் பாலித கோகன்ன 'விடுதலைப் புலிகளை மீண்டும் முகமாலையில் சந்திப்போம்" எனக்கூறியதில் இருந்து அரசாங்கத்தின் கொள்கை உறுதிப்படுத்தப்படுவதாகிறது. முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 1995 இல் யுத்ததத்தை ஆரம்பித்த போது அதனைச் 'சமாதானத்திற்கான யுத்தம்" என அதற்குத்தத்துவ விளக்கம் அளிக்க முற்பட்டார். இதையொத்ததாகவே தற்பொழுது மகிந்த ராஜபக்ச 'போரிட்ட…

    • 3 replies
    • 1.8k views
  22. இரணைமடு குடிநீர்த்திட்டத்தை TNA தடுக்கின்றது. மக்கள் கண்டிக்க வேண்டும் - EPDP வேண்டுகோள்:- இரணைமடு - யாழ்ப்பாணம் குடிநீர்த்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தடையாக இருக்கின்றது. கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்ட மக்களின் வாழ்வாதார திட்டமாகவே இரணைமடு குடிநீர்த் திட்டம் அமைந்துள்ளது. இதை அரசியல் சுய இலாபங்களுக்காக எதிர்க்கும் கூட்டமைப்பை மக்கள் கண்டிக்கவேண்டும். மேற்படி குடிநீர்த் திட்டத்தை ஈ.பி.டி.பியாகி நாம் வரவேற்கின்றோம். இரணைமடு குடிநீர்த் திட்டமானது, பலவீனமாக உள்ள தற்போதைய இரணைமடுக் குளத்தின் கட்டினை புனரமைப்புச் செய்து மேலும் தேவைக்கேற்ப உயர்த்துவதோடு, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் நீர்த்தேவையை பூர்த்தி செய…

  23. புத்தித் தலைகளுடன் வெற்றுத் தலைகளும் போட்டிக்குத் தயாராகின்றன! -அங்கம்: 01 கடந்த கால ஒளியில் நின்று எதிர்கால வழியை நாம் தெரிவு செய்வோமா? நாடடிலுள்ள பல்வேறு உள்ளுராட்சி சபைகளுடன் நமது காத்தான்குடி நகர சபையும் கலைக்கப்பட்டுள்ளதுடன், அச்சபைக்கான புதிய மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நமது பிரதேசத்தின் பிரபலங்கள் பலவும் தற்போது முனைப்புக் காட்டி வருகின்றனர். மக்களும் ‘வரட்டும் அந்தத் தீர்ப்பெழுதும் நாள்’ என்று கறுவிக் கொண்டும், உறுமிக் கொண்டும் நாட்களைக் கடத்தி வருகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் நமது நகரசபையில் கழிந்த ஆட்சியைக் கைப்பற்றி இருந்தவர்கள் இந்த ஊருக்கும், எமது மக்கள…

  24. ஆவா குழுவினர் அட்டகாசம்! நீர்வேலியில் இருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் யாழ். நீர்வேலிப் பகுதியில் 8 பேர் கொண்ட ஆவாக்குழுவினர் இருவர் மீது வாளால் வெட்டியுள்ளனர். வாள் வெட்டுக்கு இலக்காகிய இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து இன்று (07) மாலை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதே இடத்தினைச் சேர்ந்த இருவர் மீதே இந்த வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆவா குழுவின் தலைவர் என்ற அழைக்கப்படும் வினோத் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் 4 மோட்டார் சைக்களில் சென்று இருவர் மீதும் சரமாரியாக வாளால் வெட்டியுள்ளனர். அண்மையில், வாள் வெட்டுக்கு இலக…

    • 4 replies
    • 692 views
  25. மதவாச்சி சோதனைச் சாவடி மீது தாக்குதல் மூவர் பலி, ஐவர் படுகாயம். மதவாச்சி சோதனைச் சாவடியில் கடமையலிருந்த படைச்;சிப்பாய்கள் மீது இனம் தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 3ஊர்காற் படைவீரர்கள் கொல்லப்பட்டதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்று அதிகாலை 2.00மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதே வேளை ஐவர்வரும் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். www.sankathi.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.