ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
[ திங்கட்கிழமை, 07 நவம்பர் 2011, 00:52 GMT ] [ வவுனியா செய்தியாளர் ] தமிழ்நாட்டில் தங்கியுள்ள 49 ஈழத்தமிழ் அகதிகள் கப்பல் மூலம் நாளை தாயகம் திரும்பவுள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா முகவரகம் அறிவிதள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு முகாம்களிலும் தங்கியிருந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 49 அகதிகள் நாளை தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அகதிகளுக்கான ஐ.நா முகவரகம் செய்துள்ளதாக சென்னையிலுள்ள அதன் பணியகத்தின் நாடு திரும்பும் நடவடிக்கைளுக்கான இணை அதிகாரி விஜயபாரதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி- கொழும்பு கப்பல்சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக கடந்தமாதம் 37 அகதிகள் நா…
-
- 0 replies
- 626 views
-
-
சிறிலங்காவில் முன்னர் அரச சேவையில் பணியாற்றி பின்னர் ஓய்வுபெற்று வெளி நாடுகளில் வதியும் தமிழர்களின் ஓய்வூதியங்களை சிங்கள அரசாங்கம் தடைசெய்யவுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்ற அடிப்படையிலேயே இந்த ஓய்வூதியங்களை தடைசெய்ய சிங்கள அரசு முடிவெடுத்துள்ளது. . அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் வாழும் இலங்கை அரச சேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இலங்கை அரசாங்கம் வருடாந்தம் ஐந்து மில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை ஓய்வூதியமாக வழங்கி வருகிறது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை நீதித்துறையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஓர் உயரதிகாரியும் நிதியமைச்சைச் சேர்ந்த முன்னாள் ஓய்வு பெற்ற ஓர் அதிகாரியும…
-
- 38 replies
- 2.3k views
-
-
தமிழ்க் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் ஒரு தேசத்துரோகம். பிறந்த நாட்டுக்கு இழைக்கும் துரோகம். வேறு நாடுகளில் இவ்வாறான நடைமுறையில்லை. இந்தியாவில் எவரும் வெளிநாடுகளுக்குச் சென்று உள்நாட்டுப் பிரச்சினைகளை எடுத்துச் செல்ல முடியாது. என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ. எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். புலம்பெயர் சக்திகளுடன் இணைந்து போராட்டம் என்ற போர்வையில் நமது நாடே சிதைந்தது. மக்களின் நிம்மதி தொலைந்தது. தமிழ் இளைஞர்கள் அழிந்தனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிந்தன. சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் உள்நாட்டிலேயே தீர்க்கப்பட வேண்டும். தமிழ் கூட்டமைப்பு கிழக்கு மாகாண கூட்டமைப்பு எம்.பிக்களைப் புறக்கணித்தே அமெரிக்கா சென்றுள்ளமை அந்த …
-
- 1 reply
- 838 views
-
-
ஜேர்மன் தலைநகர் பேர்லினில் அமைந்துள்ள சிறீலங்கா துதரகத்தில் கடந்த தீபாவளி நாள் அன்று தமிழ்துரோக கும்பலை ஒன்றுகூட்டி களியாட்ட நிகழ்வொன்று நடத்தப்பட்டுள்ளது. தமிழர் தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பு இன்று சர்வதேச கவனம் பெற்றுள்ளதுடன் அதனை தழுவியே இன்றைய சர்வதேச செயற்பாடுகள் தவிர்க்கமுடியாது நகர்ந்து வருகையில் சிங்களத்தின் மீதான சர்வதேச அழுத்தங்கள் முன்னிலும் பலமாகப் பிரயோகிக்கப் பட்டு வருகின்ற வேளையில் யேர்மன் தலைநகர் பெர்லினில் அமைந்திருக்கும் சிறீலங்கா தூதரகம் சென்ற தீபாவளி தினமன்று போர்க்குற்றத்தை மற்றும் தமிழர் மீதான இனவழிப்பை மூடிமறைக்கவும் யேர்மன் மக்கள் மத்தியில் தமக்கு சார்பான கருத்தை உருவாக்கவும் இதரசலுகைகளுக்காக சிங்களவரின் எண்ணத்தை செயல்வடிவமாக்க துணைநி…
-
- 21 replies
- 3.1k views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 06 நவம்பர் 2011, 01:14 GMT ] [ கார்வண்ணன் ] மனிதஉரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் சிறிலங்காவிடம் கோரியிருப்பதாக பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார். பிரித்தானியா நாடாளுமன்றத்தில், உறுப்பினர் ஒருவர் கடந்தவாரம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறிலங்காவுக்கு தாம் மேற்கொண்ட பயணத்தின் போது, இராணுவ, பாதுகாப்பு, காவல்துறைக்கான கருவிகளை ஏற்றுமதி செய்வது தொடர்பான எந்த விடயங்கள் குறித்தும் பேசப்படவில்ல…
-
- 1 reply
- 855 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிநாட்டு பயணங்கள் தென்னிலங்கையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. கூட்டமைப்பின் பயணங்கள் குறித்து தென்னிலங்கை ஏன் இவ்வளவு தூரம் அலட்டிக் கொள்வதுடன் குளறிக் கொண்டும் இருப்பதன் அர்த்தம் விளங்கவில்லை. தென்னிலங்கை சக்திகளுக்கு மாத்திரமல்ல, அரசு தரப்புக்கும் இது ஒரு பெரும் பிரச்சினையாகத் தெரிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக வெளிநாடுகளுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதால் எதுவித நன்மைகளும் அவர்களுக்கு கிட்டப் போவதில்லை. எமது அரசுடன் பேசினால், மட்டுமே பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்று அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கூறுவது உண்மைதான். இல…
-
- 0 replies
- 593 views
-
-
ஊடக உறவுகளே வணக்கம்! தமிழீழ மக்களினது மாத்திரமன்றி, உலகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவரினதும் பொதுநாளான மாவீரர் நாளை இந்த ஆண்டும் சிறப்பாகவும் உணர்வெழுச்சியுடனும் கடைப்பிடிக்க உலகத் தமிழ் இனம் தயாராகிவிட்டது. இம்முறை, மாவீரர் நாளை சிறப்புற நடத்த பொதுக்கட்டமைப்புக்களை ஏற்படுத்தி, மக்கள் பிரதிநிதிகள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் என, அனைத்துத் தரப்பினரையும் உள்வாங்கி, எல்லோருடைய பங்குபற்றுதலுடன், பொதுமையாக அதனை நடாத்துவதென இணக்கம் காணப்பட்டது. அதன் அடிப்படையில், பிரான்சில் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழு அமைக்கப்பட்டு, மாவீரர்நாளை சிறப்புற நடாத்துவதற்கான வேலைத்திட்டங்களை அது முன்னெடுத்துவருகின்றது. பிரான்சில், தாயகத்தில…
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கையில் அரசியல் ரீதியாகவும் அபிவிருத்திரீதியாகவும் முஸ்லிம் சகோதர்களின் பங்களிப்பு மிக உன்னதமானது. கிழக்கு மாகாண முதலமைச்சர்..வாழ்த்து இஸ்லாமிய சகோதரர்களின் சிறப்புமிக்க பண்டிகைகளில் ஒன்றான ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளைகொண்டாடுகின்ற அனைத்து சகோதரர்களுக்கும் எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சிஅடைகின்றேன். ஹஜ்பெருநாள் பண்டிகையானது ஏனைய பண்டிகைகளைவிடபல சிறப்புக்களும் மகத்துவமும் கொண்டதாகவிளங்குகின்றது. மனிதகுல ஈடேற்றத்திற்காணும் சீரியவாழ்விற்குமான பலஅவசியசித்தார்ந்தங்களை இப்பண்டிகையின் ஊடாகவெளிக்கொணரப்படுகின்றது. முஸ்லிம்களின் புனிதநகரான மக்காமாநகரத்தில் உலகத்தின் பலதிசைகளில் இருந்தும் கூடும் இஸ்லாமியசகோதரர்கள் தமக்குள்ளானவேறுபாடுகள்…
-
- 0 replies
- 716 views
-
-
கனடாவின் ஸ்காபரோ நகரில், மார்க்கம் வீதியில் 2691 அறையிலக்கம் 9B என்ற முகவரியில் அமையப் பெற்ற புதிய காரியாலயத்தில் மாவீரர் பணிமனை வெகு விமரிசையாகத் திறந்து வைக்கப்பட்டது. மாவீரரை மனங்களில் நிறுத்திய படி குழுமிய மக்கள் வெள்ளத்துடன் திறப்பு விழா ஆரம்பமானது. முறைப்படியாகக் கனடிய அரசுக்கு அறவித்து தேவையான அனுமதியைப் பெற்றபின் மக்களுக்காக மக்களால் மக்களிடமிருந்த உருவாகியுள்ள செயற்பாட்டாளர்களால் இந்தப் பணிமனை திறந்து வைக்கப்பட்டது,இப்ணிமனைத் திறபுபு நிகழ்வினை, மாவீரராகிவிட்ட மேஜர் நிதிலாவின் அன்னையார் திருமதி செல்வநாயகம் சம்பிரதாயபூர்வமாகக் குத்து விளக்கேற்ற, மார்க்கம் நகரசபை உறுப்பினர் திரு லோகன் கணபதி அவர்கள் வாயிற் கதவில் நாடாவை வெட்டி விழாவை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.…
-
- 0 replies
- 858 views
-
-
தமிழ்த் தேசியத்தில் நம்பிக்கை உள்ள எந்த தமிழனும் சிங்கள அரசை சந்தோசப்படுத்தும் எந்த வேலைத்திட்டங்களிலும் ஈடுபடமாட்டார்கள்:.. இது வரையில், அதாவது 1948ம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளரிடமிருந்து இலங்கைத்தீவு சுதந்திரமடைந்ததிலிருந்து அரசியல் ரீதியான நோக்கில், வெற்றி என்பது சிறீலங்கா அரசிற்கே உரியது. இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இவ் வெற்றியை சிறீலங்காவின் ஆட்சியாளரான சிங்களவர் எப்படியாகப் பெற்றார்கள் என்பதை ஆராயுமிடத்து, அது தமிழீழ மக்களை அடக்கி ஒடுக்கியது மட்டுமல்லாது இதற்கு துணைபோன எமது உடன்பிறவா சகோதரர்களான தமிழ்த் தலைமைகளும் தமிழ் குழுக்களும் காரணமாக இருந்துள்ளார்கள் என்பதை நாம் நடைமுறையில் காண்கின்றோம். இதேவேளை ஏன் தமிழ் தலைம…
-
- 2 replies
- 952 views
-
-
by Livin Annushyan on Saturday, 05 November 2011 at 13:08 . தூக்கில் தொங்கும் மனிதன் சரணடையவில்லை.. மக்டாரா உட்ஸ்..(இம்மாத தீராநதி யின் இந்திரன் கட்டுரையிலிருந்து) "போருக்குப் பின்னான இலங்கைச் சூழலும் தமிழ் ஊடகங்களும்" என்னும் தலைப்பில் ஈழத்தில் இருந்து வெளிவரும் தினக்குரல் பத்திர்க்கையின் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் அவர்களுடனான உரையாடல் சென்னை இக்சா ஹாலில் அ.மார்க்ஸால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறிய மாற்றங்களுடன் தீராநதியில் இம்மாதம் அவருடைய நேர்காணலும் வந்திருக்கிறது. இங்கு தரவுகளும் நேரடி கலந்துரையாடல்களையும் பதிவு செய்யப் போவதில்லை. ஈழம் பற்றி கணக்கத் தெரிந்தாக சொல்லிக் கொள்ளும் தமிழ் அறிவுஜீவியின் முகமூடி மூலம் அபத்தமாக நடத்தப் பட்ட நாடகத்தை பற்றியே சொல்ல …
-
- 0 replies
- 1k views
-
-
பொது இடமொன்றில் சிலை திறப்பு விழா நிகழும் போது குறைந்தது ஆயிரம் பேராவது கூடி நிற்பதைக் காணலாம். ஆனால், மக்களால் போற்றப்படும் மனிதனின் சிலையை உடைக்கும் போது, அங்கு எவருமே பிரசன்னமாவதில்லை. இருட்டினில் நடக்கும் திருட்டு வேலை அது. திருமலை சிவன் கோவிலடியில் நிறுவப்பட்ட தந்தை செல்வாவின் உருவச்சிலை உடைப்பு, கூட்டமைப்பினர் அமெரிக்காவுக்கு மேற் கொண்ட பயணத்திற்கான எதிர்வினையாகப் பார்க்க வேண்டும். தமிழ்த் தேசியத்தின் அடையாளங்களை அழிப்பது மே 2009 இற்குப் பின்னர், அதிகரித்துச் செல்வதைக் காணலாம். பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, ஏகப்பிரதிநிதியல்ல என்று வெளிநாட்டமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நிராகரிப்பது, தனித்துவமான இனமல்ல தமிழ்த்தேசிய இனம்…
-
- 2 replies
- 785 views
-
-
கொழும்பில் 5 நட்சத்திர ஹோட்டல் நிர்மாணிக்க இராணுவம் திட்டம் கொழும்பில் 5 நட்சத்திர ஹோட்டலொன்றை நிர்மாணிப்பதற்கு இலங்கை இராணுவம் திட்டமிட்டுள்ளது. இதற்குப் பொருத்தமான காணியை தேடிவருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆரச்சி கூறியுள்ளார். அபிவிருத்தி மற்றும் நிர்மாணப் பணிகளுக்காக இராணுவத்திற்குள் தனியான கம்பனியொன்றை வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்து இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய அண்மையில் வலியுறுத்தியிருந்தார். எனினும் இந்த யோசனை குறித்து தற்போது கலந்துரையாடப்படுவதாகவும் பொரும்பாலும் இதற்காக இராணுவத்திற்குள் தனியாக நிர்வாக சபையொன்று அமைக்கப்படலாம் எனவும் பிரிகேடியர் ஹப்புஆரச்சி கூறினார். வீடுகள் நிர்மாணம் மற்றும் வீதி நிர்மாண…
-
- 2 replies
- 1.3k views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 06 நவம்பர் 2011, 00:36 GMT ] [ தா.அருணாசலம் ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் அமெரிக்க அதிகாரிகளின் சந்திப்பில் “ஒன்றுமேயில்லை“ என்றும், வெளிநாட்டு விருந்தினர்களுடன் மேற்கொள்ளப்படும் “வழக்கமான சந்திப்புகளில் ஒன்று தான்“ என்றும் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது. “அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இதுபோன்ற சந்திப்புக்களை அரசியல்கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உலகின் பல்வேறு வகையான தரப்பினருடனும் நடத்துகிறது.“ என்று தமது செய்தியாளர் ஒருவருக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஒருவர் கூறியதாகவும் அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசிய…
-
- 1 reply
- 1.3k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழையினால் வீடற்ற நிலையில் கொட்டில்களில் வசிக்கும் சுமார் 24 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து நேற்று மாலை கிடைத்த செய்திகள் தெரிவித்தன. கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மழை ஓய்ந்திருந்தது. ஓய்ந்திருந்த மழை நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு மீண்டும் ஆரம்பமானது. ஒரு மணி முதல் மாலை 6 மணிவரை தொடர்ச்சியாக சுமார் 5 மணித்தியாலங்கள் மழை கொட்டித் தீர்த்தது. இரவு சுமார் 7 மணியளவில் மழை ஓரளவு ஓய்ந்திருந்தது. கடந்த இரு தினங்கள் மழை ஓய்ந்திருந்தமையால் சில விவசாயிகள் வயல்களில் நெல் விதைப்பையும் மேற்கொண்டனர். விவசாயிகளால் இவ்வாறு விதைப்புச் செய்யப்பட்ட நெல் நேற்றுப் ப…
-
- 1 reply
- 673 views
-
-
முறிகண்டி பிரதேசத்தில் இருந்து மக்களை வேறு இடத்திற்கு குடியேற்றும் முயற்சியில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. இப்பகுதி மக்களை மக்கள் நடமாட்டம் குறைந்த பனிக்கன்குளம் பகுதியில் குடியேற்ற இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் தனிச்சிங்கள மொழியிலான கடிதங்களை அப்பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு இராணுவம் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். யுத்தத்தின் பின்னர் அப்பிரதேசத்தில் குடியேற இராணுவம் அனுமதி மறுத்தே வருகிறது. இதனால் அம்மக்கள் உறவினர், நண்பர்கள் வீடுகளிலேயே தங்கி வருகின்றனர். இந்த நிலையிலேயே அம் மக்களுக்கு மாற்று காணிகளை வழங்கிவிட்டு முறிகண்டி பிள்ளையார் ஆலயச்…
-
- 1 reply
- 969 views
-
-
தலைமன்னாரில் அண்மையில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குத் தொடர்பு உள்ளதாக லக்மின பத்திரிகை ஆதாரமற்றவகையில் விசமத்தனமான முறையில் செய்தி வெளியிட்டுள்ளது. தலைமன்னாரில் கடந்த வாரம் கைப்பற்றப்பட்ட இரண்டு கிலோ போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலமே இது தெரிய வந்துள்ளது என்றும் அது போலீசார் பாணியில் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் தலைமன்னார் - இந்தியா கடல் மார்க்கமாக நீண்ட காலமாகவே போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தமையும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக தனது வழமையான வக்கிரபாணியில் செய்தி வெளியிட்டுள்ளது லக்ப…
-
- 0 replies
- 713 views
-
-
அமெரிக்க மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தின மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 05.11.2011 நேற்றையதினம் காலை 10:40 மணிக்கு கீத்துறூ விமான நிலையத்தில் வந்தடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மலர்மாலை அணிவித்து வரவேற்றனர். மூன்று நாட்கள் லண்டனில் தங்கியிருக்கவுள்ள இவர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 முதல் மாலை 4:00 மணிவரை "Clay Oven" Banquting Suite, 197 Ealing Road, Alperton, Middx HA0 4LW எனும் இடத்தில் மக்கள் ஒன்றுகூடல் ஒன்றிலும் பங்கேற்பதோடு, மறு நாளான திங்கட்கிழமை காலை 11:00 மணிக்கு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசிய…
-
- 0 replies
- 940 views
-
-
கார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேசியநாள். அந்நாளில், ஒவ்வொரு வருடமும் மாவீரர்துயிலும் இல்லங்களுக்குச் சென்று, மடிந்த வீரர்களின் கல்லறைகளில் கண்ணீருடன் நிற்கும் பெற்றோர்களின் கரங்களைப் பற்றி, மாவீரர்களின் கனவு நனைவாகும் என்ற ஆறுதல் வார்த்தைகளைக்கூறி, கனத்த மனங்களுடன் திரும்பும் வேளை, இன்னும் உங்களின் கனவை நனவாக்கவில்லையே என்ற உறுத்தல் மனதைக் குடையும். இன்றைக்கு முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களை, உங்களின் கனவை நனவாக்குவோம் என்றே விதைகுழிகளுக்குள் விதைத்துவிட்டோம். ஈழத்தமிழ்மக்களின் சுபீட்சமான எதிர்காலம் என்ற உன்னத இலட்சியத்திற்காக, கொள்கைக்காகப் போராடி மடிந்த இந்த மாவ…
-
- 8 replies
- 2.3k views
-
-
இலங்கையில் 600 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன 06 நவம்பர் 2011 இலங்கையில் சுமார் 600 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. 2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இதுவரையில் நாட்டில் இயங்கி வந்த 600 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அநேகமான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போதியளவு நிதியில்லாத காரணத்தினால் தொடர்ந்தும் இயங்க முடியாது மூடப்பட்டுள்ளன. வெளிநாட்டு நன்கொடையாளர்கள் திட்டங்களை நிராகரித்தமை, அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்மை போன்ற காரணிகளினாலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. யுத்தம் நிறைவடைந்த காலத்தில் இலங்கையில் மொத்தமாக 1300 உள்நாட்டு வெளிநா…
-
- 0 replies
- 594 views
-
-
2013இல் இலங்கையின் கல்விமுறைமையில் பாரியமாற்றம்! Published on November 5, 2011-4:21 pm கல்விப்பொதுத் தராதரப் பத்திர உயர் தரத்தில் மாணவர்கள் தெரிவு செய்யவுள்ள பாட நெறியை க.பொ.த. சா.த பரீட்சை முடிவுவரை காத்திராது முன்கூட்டியே 9 ஆம் தரத்தில் தமது துறையை தெரிவுசெய்யும் முறையை அறிமுகப்படுத்துவதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள இத்திட்டத்தின் படி இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த மாற்றம் 2013 ஆண்டளவில் கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தெரிவுசெய்யப்பட்ட துறைக்கான 3 பாடங்களையே உயர்தரத்தில் கற்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.saritham.com/?p=…
-
- 0 replies
- 633 views
-
-
உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சீமானுக்கு அனுமதி மறுப்பு அமெரிக்காவில் நடைபெறும் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அவரை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்து அனுப்பிவிட்டனர். இது குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்ட அறிக்கை: உலகத் தமிழர் பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகள் அமெரிக்காவில் தங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு சீமானுக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதற்கான முறையான பயண அனுமதியும் அந்நாட்டு அரசிடமிருந்து பெற்று சீமானின் பயண ஏற்பாடுகளை உறுதி செய்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு சீமான் புறப்பட்டுச் சென்றார். இன்று அதிகாலை சீ…
-
- 8 replies
- 1.2k views
-
-
[ சனிக்கிழமை, 05 நவம்பர் 2011, 00:10 GMT ] [ கார்வண்ணன் ] அமெரிக்கப் படைகளின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் அடுத்த பிரதிப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கொனன்ற் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கோண்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று அவர் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். தற்போதைய மற்றும் எதிர்கால இராணுவத் திட்டங்கள் குறித்தும் அதற்கு பசுபிக் கட்டளைப்பீடம் எவ்வாறு உதவிகளை வழங்கலாம் என்பது குறித்தும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. இந்தச் சந்திப்பில் பசுபிக் கட்டளைப் பீடத்தில் சிறிலங்கா விவகாரங்களை கையாளும் அதிகாரி லெப்.கேணல் ஜ…
-
- 2 replies
- 872 views
-
-
அமெரிக்கா சென்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை கைதுசெய்ய வேண்டும் என கெலஉறுமய போன்ற சிங்கள இனவாதக் கட்சிகள் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இலங்கை அரசாங்கத்திற்கு முடியுமென்றால் கூட்டமைப்பு தலைவர்களை கைதுசெய்து பார்கட்டும் அப்படி கைது செய்வார்கள் என்றால் அது தமிழ் மக்களுக்குத்தான் வெற்றியாக இருக்கும் என்கிறார் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன். அமெரிக்காவில் பேச்சுவார்த்தைகளை நிறைவுசெய்து மீண்டும் இலங்கை வரும் கூட்டமைப்பு தலைவர்களை கைதுசெய்யுமாறு விடுக்கப்படும் கோரிக்கைகள் குறித்து ஊடகங்களுக்க கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் தெரிவ…
-
- 3 replies
- 1.3k views
-
-
மாறன் ஒரு விடுதலைப் போராளி வரண்ட நிலத்தில் சுவர்கள் இல்லாத ஒரு கொட்டிலில் இருந்து வந்தவன். தாயும் இரண்டு தங்கைமாரும்.மாறன் இப்பொழுது விடுதலைப்புலிகள் அமைப்பில் இன்னொரு கட்டத்தை எய்தி இருந்தான். நெஞ்சுரமும் வீரமும் ஓர்மமும் மிக்கவர்கள் கரும்புலிகள் ஆவது இயல்பு. தாயகத்திற்கும் தலைவனுக்குமாக அவன் தன்னைக் கொடையாகக் கொடுக்கத் தயாரானான். மாறன் ஒரு கரும்புலி அவன் களத்துக்குப் போகப் போகிறான் போவதற்கும் முன்னர் கரும்புலிகளின் நடைமுறையின் படி வீடுசென்று பெற்றோர் சகோதரங்களைப் பார்த்துவிட்டு வரவேண்டும் ஆனால் மாறன் அதை விரும்பவில்லை. வீட்டின் ஏழ்மை, தாயின் கண்ணீர், தங்கைமாரின் அன்பு அவனைக் குத்திக் குடையும். தான் போகும் காரியத்துக்கு முன் அதுவே படம்போல் விரியும். வேண்டாமே என்றான…
-
- 4 replies
- 1.6k views
-