ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
[saturday, 2011-10-22 11:58:20] "பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசம் என்று சங்கே முழங்கு." இது பாரதிதாசன் வரிகள். கனடியத் தமிழருக்காகவே அன்று எழுதி வைத்தார் போலும். கனடியத் தமிழர் துணிச்சலுடனும் ஒற்றுமையுடனும் உற்சாகத்துடனும் செயற்பட வேண்டிய தருணமிது. "பொங்கு தமிழ்" ரொறன்ரோவில் நிகழவுள்ளதாக அறியப்பட்டவுடனேயே அதற்கெதிராக செயற்படத் தொடங்கி விட்டனர் இங்குள்ள உள்ள மகிந்த அரசின் கைக்கூலிகள். இதனை நிகழவிடாமல் செய்வதற்கு அனைத்து வழிகளையும் - சாம பேத தான தண்டம் அனைத்தையும் பயன்படுத்துகின்றனர். புலம்பெயர் தமிழரின் அரசியல் அழுத்தம் காரணமாக மகிந்தவின் இனவெறி அரசு மேற்குலகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படுவதுடன் சர்வதேச போர்க்குற்ற விசாரண…
-
- 4 replies
- 1.1k views
-
-
இலங்கையில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் அமெரிக்கா கவலை இலங்கையில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும், சிறிலங்கா அரசாங்கத்துடன் சீனா கொண்டுள்ள படைத்துறை ரீதியான உறவுகள் குறித்தும் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இலங்ழைகக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜக் கிங்ஸ்ரன் தனது விஜயத்தின் முடிவில் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையுடன் முன்னர் அமெரிக்கா மிக நெருக்கமான உறவுகளைப் பேணி வந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் சீனாவுக்கும் அடையிலான படைத்துறை மற்றும் வர்த்தக உறவுகள் நெருக்கமடைந்ததால் இந்த உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 652 views
-
-
புலம்பெயர் மக்களால் தமிழர் தாயகத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியும் . அதன் மூலம் பல்கலைக்க்ழகம் கிடைக்காத மாணவர்களுக்கு நல்ல கல்வியினை வழங்கமுடியும். . எடுத்துக்காட்டாக உலகெங்கும் சிதறி வாழும் தமிழ்க் கல்வியலாளர்களின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் தனியார் பல்கலைக்கழகமொன்றை அமைக்க முடியும் என்று கலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார். . யுத்தத்தின்போதும், யுத்தத்தின் பின்னைய சூழலிலும் பல கல்வியலாளர்கள், மருத்துவர்கள் தமது பிரதேசத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து சென்றுவிட்டனர் என்று குறிப்பிட்ட யாழ் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி கலாநிதி யமுனானந்தா, இவர்களில் பலர் உலகில் மிகச்சிறந்த பேராசிரியர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் பல முன்னணி…
-
- 3 replies
- 869 views
-
-
கிளிநொச்சியில் அனைத்து வசதிகளையும் கொண்ட புதிய நிரந்தரப் படைத் தலைமையகத்தை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச திறந்து வைத்துள்ளார். கிளிநொச்சிப் படைகளின் தலைமையகத்தின் இந்த நிர்வாக தலைமையக வளாகம்- குளிர்சாதன வசதி கொண்ட கருத்தரங்கு மண்டபம், தனியான மண்டபம், நிர்வாக பணியகங்கள், கணினி, சமிக்ஞை கட்டுப்பாட்டறைகள், உணவக மண்டபம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத் தளபதியின் அழைப்பின் பேரில் நேற்றுக்காலை கிளிநொச்சிக்குச் சென்ற சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, இந்தப் புதிய படைத் தலைமையகத்தைத் திறந்து வைத்தார். இரணைமடுக் குளத்தின் கரையில் அம…
-
- 1 reply
- 738 views
-
-
வடக்கு, கிழக்கில் காணி சுவீகரிப்பு, பெரும்பான்மையினக் குடியேற்றங்கள், தமிழ் கலாசாரங்களை சீரழிக்கும் நடவடிக்கைகள், தமிழின விகிதாசாரத்தை பாதிக்கும் நிகழ்வுகள் மற்றும் இன சுத்திகரிப்புகள் இடம்பெறுமாயின் மீள் இணக்கமோ, இனங்கள் இணைந்து வாழவோ, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவோ முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். சபையில் இருக்கின்றவர்களில் பலர் நியாயமானவர்கள். அரசினால் முன்னெடுக்கப் படும் பல விடயங்களை அவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள். மேற்படி விவகாரம் தொடர்பில் பல தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நான் குற்றஞ்சாட்டவில்லை. அதற்காக அவரை குற்றஞ்சாட்டவும் முடியாது என்றும் கூறவில…
-
- 2 replies
- 796 views
-
-
“பலஸ்தீனத்தின் கண்ணீருக்கும் ஈழத்தின் கண்ணீருக்கும் ஒரே மதிப்புத்தான். சுற்றியிருக்கும் அரபுலகத்தினால் பலஸ்தீனர்களின் விடுதலைக்கு உதவ முடியவில்லை. அல்லது அவர்களால் பலஸ்தீனியர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.அதைப்போல இந்தியாவில் இருக்கும் தமிழர்களாலோ அல்லது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களாலோ அல்லது இந்தியாவினாலோ ஈழத்தமிழர்களுடைய விடுதலைக்கு உதவவும் முடியவில்லை. அவர்களுடைய விடுதலையைப் பெற்றுக்கொடுக்க முடியவும் இல்லை' எனக் குறிப்பிட்டுத் தமிழகத்தில் இருந்து ஒரு நண்பர் கடிதம் எழுதியிருக்கிறார். நண்பரைப் பற்றிப் பின்னர் பார்க்கலாம். இப்போது அவர் கூறியிருக்கும் விசயத்தைப் பார்ப்போம். ஈழப்போராட்டம் பலஸ்தீனப்போராட்டம் அதிக ஒற்றுமைகளைக் கொண்டவை. முக்கியமாகக…
-
- 0 replies
- 1.2k views
-
-
[saturday, 2011-10-22 11:23:46] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்கா சென்று அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிங்ரனைச் சந்தித்துப் பேசுவதைத் தடுக்க அரசு, இராஜதந்திர ரீதியிலான காய் நகர்த்தல்களை அவசர அவசரமாக மேற்கொண்டுள்ளது என கொழும்பிலுள்ள ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் அடுத்த வாரம் அமெரிக்காவிற்குச் செல்லவுள்ளனர். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிங்ரனையும் வெளியுறவுத்துறை அமைச்சின் உயரதிகாரிகளையும் கூட்டமைப்பினர் சந்திக்கவுள்ளனர் எனச் செய்திகள் வெளிவந்திருந்தன. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர், தமிழ்த் தேசியக் கூட்டமைப…
-
- 2 replies
- 1.1k views
-
-
உலகம் பயங்கரவாதம் என்ற மாயைக்கூடாக பெரும் பாதாள பயங்கரவாதத்திற்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அன்று கம்ய+னிசத்திற்கு எதிராக மேற்குலகங்களால் உருவாக்கி வலுவளிக்கபட் அமைப்புகளைத்தான் இன்று மேற்குலகம் பயங்கரவாதம் என்னும் போர்வை போர்த்தி கொடூரக்கொலை செய்து கொண்டிருக்கின்றார்கள.; கடாபி அமெரிக்காவால் ஆடசிக்குக் டிகாண்டு வரப்பட்டவர் அமெரிக்காவிற்கு எதிரானதால் கிளர்ச்சி மூலம் கொல்லப்பட்டார். முன்னாள் அமெரிக்காவின் ஒரு கரம் சதாம் குசேன் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டு ஈராக்கிற்கு nதிபதியாக்கப்பட்டவர். முன்னான் அமெரிக்காவின் நெருங்கிய நண்பன் அமெரிக்காவை மீறியதாலும் சொல்லுக்கு அடிபணி மறுத்ததாலும் தூக்கிலிடப்பட்டார் முபாரக் அமெரிக்காவின் நண்பர் கிளர்ச்சி மூல…
-
- 4 replies
- 1k views
-
-
போக்குவரவு குறைகளை நிவர்த்தி செய்ய இந்தியாவில் இருந்து 400 பஸ்வண்டிகள் இறக்குமதி! [Friday, 2011-10-21 11:18:10] நாட்டில் போக்குவரத்து சேவைகளை விரிவுபடுத்துவதற்காக 400 பஸ்வண்டிகளை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் எம்.டி.பந்துசேன தெரிவித்துள்ளார். அதாவது, இந்த 400 பஸ் வண்டிகளையும் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பயணிகளின் போக்குவரத்து நன்மை கருதி இந்த பஸ் வண்டிகளை எதிர்வரும் மாதமளவில் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் பல திட்டங்களை முன்னெடுப்பதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை தயாராகவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் ஊடாக பயணிகளுக்க…
-
- 2 replies
- 1k views
-
-
இந்திய இராணுவத்திரால் 1987ம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், நோயாளர்கள் என 68ற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 24வருடங்கள். இப் படுகொலையில் வைத்திய நிபுணர் அ.சிவபாதசுந்தரம், வைத்திய கலாநிதி கே. பரிமேலழகர், வைத்திய கலாநிதி கணேசரத்தினம் , திருமதி பா.வடிவேல், செல்வி இ. மங்கயற்கரசி, செல்வி மு. லீலாவதி, திரு கே.செல்வராசா, திரு கே. கிருஸ்ணராஜா, திரு மு. துரைராசா, திரு எம். சண்முகலிங்கம், திரு வி. வரதராசன், திரு கே. வேதாரணியம், திரு யோன்பீற்றர், திரு இசுகுமார், திரு க. சிவயோகநாதன், திரு கே. சிவராசா, திரு கோ. உரித்திரன், திரு க. மார்க்கண்டு, திரு இ. இரத்தினராசா. திரு க. நவரத்தினம் ஆகியோர் 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம், 22ம் திகதிக…
-
- 9 replies
- 1.6k views
-
-
தருஸ்மன் அறிக்கை “சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் அறிக்கையே” – மர்சுகி தருஸ்மன் Friday, October 21, 2011, 9:55 சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நிபுணர்குழு அளித்த அறிக்கை, “சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் அறிக்கையே” என்று அதன் தலைவரான மர்சுகி தருஸ்மன் தெரிவித்துள்ளார். ஐ.நா தலைமையகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் ஐ.நா நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் ‘தருஸ்மன் அறிக்கை‘ என்றே கூறி வருகிறது. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் மர்சுகி தருஸ்மனிடம் இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளர் மத்யூ ரசல் லீ கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த மர்சுகி …
-
- 3 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தவறுகளுக்காக, .. வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் கைச்சாத்திடப்பட்ட பண்டா செல்வா ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் தமிழர்களுக்கு இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தவறுகளுக்காக, இலங்கைத் தமிழ் மக்களை அரசாங்கம் தண்டித்துவிடக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றில் தற்போது நடத்தப்பட்ட விவாதத்தில் கலந்து கொண்ட போது சம்பந்தன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமி…
-
- 4 replies
- 1k views
-
-
சிறிலங்கா அரசாங்கம் மீது போர்க்குற்ற விசாரணை! - பகிரங்கமாக அறிவிப்பது குறித்து அவுஸ்திரேலியா ஆராய்வு! இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பகிரங்கமாக அறிவிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என அவுஸ்திரேலியப் பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய ABC வானொலி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரவுள்ள நிலையில், கனடா மற்றும் பிரித்தானியா போ…
-
- 1 reply
- 1.7k views
-
-
[ வெள்ளிக்கிழமை, 21 ஒக்ரோபர் 2011, 00:53 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நிபுணர்குழு அளித்த அறிக்கை, “சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் அறிக்கையே” என்று அதன் தலைவரான மர்சுகி தருஸ்மன் தெரிவித்துள்ளார். ஐ.நா தலைமையகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் ஐ.நா நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் ‘தருஸ்மன் அறிக்கை‘ என்றே கூறி வருகிறது. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் மர்சுகி தருஸ்மனிடம் இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளர் மத்யூ ரசல் லீ கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த மர்சுகி தருஸ்மன்,…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஹேக்கில் தற்போது நடந்துவரும் ஐந்து தமிழர்க்கு எதிரான வழக்கு: விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல ஆனால் அவர்கள் கிரிமினல் வேலைகளை செய்துள்ளார்கள் என்ற அடிப்படையில் குறித்த ஐந்து பேரும் கிரிமினல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளிகள் என நீதிபதிகள் கூறியுள்ளார்கள். முந்திய செய்தி நெதர்லாந்தில் ஐந்து தமிழர்க்கு எதிரான வழக்கு நடந்துகொண்டிருக்கின்றது. இன்னும் ஒருமணித்தியாலத்தில் தீர்ப்புக்கள் வழங்கப்படும். இந்த வழக்கில் நீதிபதிகள் விடுதலைப்புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல என கூறியுள்ளார்கள் மற்றும் அவர்களின் செயல்கள் சில பயங்கரவாத தன்மை கொண்டதால் அந்த அமைப்பினையே பயங்கரவாத அமைப்பு என கூற முடியாது என கூறியுள்ளார்கள் http://www.tamilthai.com/?p=28823
-
- 2 replies
- 2k views
-
-
த.தே.கூட்டமைப்புக்கான அமெரிக்க அழைப்பின் பின்னணி ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் தீவிரம் பெற்று வருகின்ற நிலையில், அவர்களை நோக்கி சர்வதேச சமூகத்தின் கதவுகள் திறக்கத் தொடங்கியுள்ளன. அடுத்த வாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நால்வர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளப் போவது முக்கியமானதொரு திருப்புமுனையாகவே கருதப்படுகிறது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரிலேயே இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை. சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரே அமெரிக்கா செல்லவுள்ளனர். இவர்களு…
-
- 16 replies
- 1.8k views
-
-
அமெரிக்கப் பயணத்தின் முன்பு அது குறித்து கலந்துரையாடுவதற்கு தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் விடுத்த வேண்டுகோளை இரா சம்பந்தன் நிராகரித்தார் போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து இலங்கை அரசாங்கத்தை விடுவிக்கும் நோக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு செல்கிறதாவென கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜாவிடம் கேள்வி எழுப்பி, சர்ச்சசைப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க பயணம் குறித்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவுடன் கலந்துரையாட சம்பந்தன் விரும்பில்லையெனவும், தொலைபேசியில் கூட உரையாட மறுப்பதாகவும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகிறார்கள். இதேவேளை அமெரிக்க பயணத்துக்கு முன்பாக கலந்துரையாட வேண்டுமென யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் உ…
-
- 1 reply
- 1.1k views
-
-
[ வெள்ளிக்கிழமை, 21 ஒக்ரோபர் 2011, 03:24.31 PM GMT ] சர்வதேச ஊடகங்களுக்கு எதிராக இலங்கை செயற்பட்டு வருவதாக பிரித்தானியாவின் ஊடகமான சனல் 4 குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட தரப்பினர் திட்டமிட்ட வகையில் இந்த பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக சனல்4 ஊடகத்தின் நடப்பு விவகாரம் மற்றும் செய்திப் பிரிவுப் பொறுப்பாளர் தோர்த்தீ பெய்ரான் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகங்களின் புலனாய்வு சார் செய்தி அறிக்கையிடலுக்கு சில தரப்பினர் திட்டமிட்ட வகையில் இடையூறு ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் சில வெளிநாட்டு நிறுவனங்களை அமர்த்தி இவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஊடகங்கள் மட…
-
- 0 replies
- 563 views
-
-
புலிகளின் செயற்பாடுகளை முடக்க மேலும் 5 புலனாய்வு பிரிவுகள் உருவாக்கம்: கோட்டாபய விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் நாட்டுக்குள்ளேயும் வெளிநாடுகளிலும் புலிகள் இயக்கத்துக்குச் சார்ப்பானவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டே வருகின்றன. இவர்களின் செயற்பாடுகளை முடக்கி, நாட்டுக்குள் மீண்டும் பயங்கரவாதம் தோற்றுவிக்கப்படாமல் தடுப்பதற்காக இராணுவத்துக்குள் புதிதாக ஐந்து புலனாய்வுப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். யுத்தத்தின் போது வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற புலி உறுப்பினர்கள், புலம்பெயர் தமிழர்களினூடாக அவ்வியக்கத்தை மேலும் கட்டியெழுப்பும் முயற்சிகளில்…
-
- 1 reply
- 935 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் பொழுது கருணா குழுவினர் வெறும் மனிதாபிமான நடவடிக்கைகளில் மாத்திரம் தான் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்று கருணா என்று அழைக்கப்படும் பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைகளில் கருணா குழவினர் நேரடியாக இராணுவ ரீதியில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பதை ஆதாரங்களுடன் நிரூபிப்பதற்காக இந்த காணொளியை இங்கு இணைத்திருக்கிறோம்.
-
- 134 replies
- 8.3k views
-
-
[ வெள்ளிக்கிழமை, 21 ஒக்ரோபர் 2011, 04:04.57 PM GMT ] நெதர்லாந்தில் டென்ஹாக் நகரத்தில் விடுதலைப்புலிச் சந்தேகநபர்களாக கூறப்பட்ட ஐந்து மனிதநேயப் பணியாளர்களுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கபட்டது அத் தீர்ப்பின்போது ஐவருக்கும் கீழ் குறிப்பிடவாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி செல்லையா என்பவருக்கு ஆறு வருடங்கள், அதாவது இன்னும் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களும், இராமலிங்கம் என்பவருக்கு ஐந்து வருடங்கள் அதாவது இன்னும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களும், இளவரசன் என்பவருக்கு மூன்று வருடங்கள் அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களும், லிங்கம் என்பவருக்கு இரண்டு வருடங்கள் அதாவது இன்னும் கிட்டத்தட்ட ஒரு வருடங்களும், மனோ என்பவருக்கு இரண்டரை…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஈழ விடுதலைப் போரின் ஆரம்பக் கல்லாக 1983 ஆம் ஆண்டை மேற்கோள் காட்டி வரைவது பொதுவான விடயமாக இருந்தாலும் அந்த ஆண்டு இடம்பெற்ற இனக் கலவரத்தின் பின் சகல ஆயுதப் போராட்டக் குழுக்களும் இந்தியாவின் தமிழ்நாட்டை தமது தளமாகக் கொண்டன.தமிழ் ஈழவிடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, மாணவர் ஈழப் புரட்சிகர இயக்கம், தமிழ் ஈழமக்கள் விடுதலைக் கழகம், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், ஈ. என். டி. எல். எவ். போன்ற குழுக்கள், அமைப்பாக உருவாக்கப்பட்டு ஈழப்போர் என்ற பொது இலட்சியத்துடன் போராட முற்பட்ட வேளை மக்கள் இந்த அமைப்புக்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தார்கள். இவற்றுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடுகளும் குழுவாதம் இருந்த போதிலும் 1985 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் திகதி போர் நிறுத்தம் …
-
- 3 replies
- 1.2k views
-
-
தற்போது இலங்கைக்கு எதிராக காணப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை அரசு நடுநிலைத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் பேணவேண்டும் என்று இலங்கை வந்துள்ள அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே தாங்கள் இலங்கை வந்ததாகவும், தாம் கூறும் கருத்துக்கள் அமெரிக்க அரசை பிரதிநிதித்துவப்படுத்தாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர்கள் இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியாளர் மாநாட்டின் போது இலங்கை வந்தடைந்த அமெரிக்கா காங்கிரஸ் சபை குழுவிற்கு தலைமைத் தாங்கிய எல்பர்ட் பெஞ்சமின் சான்லர் கருத்து தெரிவிக்கையில், இலங்கை அரச…
-
- 0 replies
- 832 views
-
-
களத்தில் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். இறுதிப் போரின்போது அல்லது போர் முடியும் தறுவாயில் சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல போராளிகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாத ஒரு நிலை இன்னும் தொடர்கிறது. சரணடைந்தவர்கள் அனைவரைப் பற்றிய விவரங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு மேல் தமக்கு எதைப்பற்றியும், யாரைப்பற்றியும் தெரியாது என்கின்றது இலங்கை அரசும் அதன் பாதுகாப்பு அமைச்சும். ஆனால், இதை மறுத்துரைக்கின்றனர் சரணடைந்த அந்தப் போராளிகளின் உறவினர்களும் குடும்பத்தினரும். இதைப் பற்றி அவர்கள், இலங்கை அரசினால் - ஜனாதிபதியினால் - அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடமும் தெரிவித்திருக்கின்றனர். பி.பி.ஸி போன…
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் நிதிப் பிரிவின் முன்னாள் தலைவர் கே.பி. என்ற குமரன் பத்மநாதனின் நிதி பொறுப்பாளராக இருந்த அய்யா என்ற பொன்னையா ஆனந்தராஜா என்பவரை உடனடியாக கைதுசெய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ நேற்று உத்தரவிட்டதுடன் அதற்கான சிகப்பு அறிக்கையும் வெளியிட்டார். அமெரிக்க பிரஜையான இந்த நபர் ஒரு கணக்காய்வாளர் எனவும் இவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ரியாஸ் பாரி தெரிவித்தார். விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்ததாக ஆனந்தராஜாவுடன் சேர்த்து குற்றம்சுமத்தப்பட்டுள்ள யாழ்ப்பாணம் நீராவியடி பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 42 வயதான சுப்ரமணியம் சிவக்குமார் என்பவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நீத…
-
- 0 replies
- 1.5k views
-