Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 20க்கு ஆதரவாக வாக்களித்தவர்களை நீக்கினால் மட்டுமே முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து பயணிப்போம் – சுமந்திரன் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களை கட்சியில் இருந்து நீக்குவதற்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், “20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரை தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து இடை…

    • 7 replies
    • 962 views
  2. யாழ். மாணவர்கள் மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ், சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 08 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவினை யாழ். நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்வரன் நேற்று பிறப்பித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 16ம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பீட புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வின் போது மாணவர்களுக்கு இடையிலான மோதல் ஏற்பட்டதுடன், சிங்கள மாணவர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/13425

  3. இலங்கையில் தற்போது கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் வகையைச் சேர்ந்தது என சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் டொக்டர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்தார். இந்த நுண்ணுயிர் முன்னர் பரவியதைவிட வித்தியாசமான வைரசாக உள்ளது. இது ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக செயலாளர் கூறினார். இந்த வைரஸ் கந்தக்காட்டில் பரவிய வைரஸ் வகை அல்ல என்பதை பல்கலைக்கழக ஆய்வு அறிக்கையின் மூலம் அறிந்துகொள்ள முடிந்ததாக செயலாளர் நேற்று தெரிவித்தார். இந்த வைரஸ் வீரியத்தைக் கொண்டது. இது தீவிரமாக மற்றவர்களுக்கு பரவக்கூடிய ஆற்றலைக் கொண்டது. இதனால்தான் குறுகிய கால்திற்குள் பெரும் எண்ணிக்கையிலானோர் வைரஸ் தொற்றுக்குள்ளாகினர் என்றும் அவர் தெரிவித்தார். …

  4. எந்த சக்திகள் அழுத்தங்களைக் கொடுத்தாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் யுத்த நிறுத்தம் சாத்தியமற்றது - ரட்ணசிறி பகலில் விழுந்த குழியில், இரவிலும் விழுவதற்கு அரசாங்கம் தயாரில்லை அதனால் எந்த சக்திகள் அழுத்தங்களைக் கொடுத்தாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் யுத்த நிறுத்தம் சாத்தியமற்றது என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார் நேற்று புதன்கிழமை பாராளுமன்ற சபையில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையைச் சமர்ப்பித்துப் பேசுகையில் பயங்கரவாதத்தை ஒழித்து மக்களுக்கும் நாட்டுக்கும் ஜனநாயகத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இதற்காக நாட்டின் ஒட்டு மொத்த மக்களும் அரசாங்கத்தை பலப்படுத்தி அதன் செயற்பாடுகளுக்கு ஆதரவு…

    • 1 reply
    • 831 views
  5. மட்டு. முன்னாள் மேயர் சிவகீதா உட்பட ஐவரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு (மட்டு.சோபா) மட்­டக்­க­ளப்பில் உள்ள தனது இல்­லத்தின் ஒரு பகு­தியில் பாலியல் தொழில் நடாத்­தி­யமை மற்றும் பாலியல் தொழிலில் ஈடு­பட்­டமை தொடர்­பி­லான குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட முன்னாள் மட்­டக்­க­ளப்பு மாந­கர முதல்வர் சிவ­கீதா பிர­பா­கரன் உட்­பட நால்­வரின் விளக்­க­ம­றியல் நீடிக்­கப்­பட்­டுள்­ளது. இன்று மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்றில் குறித்த நான்கு பேரும் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­ போது எதிர்­வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரையில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி எம்.கணே­ச­ராஜா உத்­த­ர­விட்டார். …

  6. மாவீரர் நாள் நினைவேந்தலுக்கும் தடையா..? வெறும் அரசியல் இலாபத்திற்காக மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் நுழைந்த தமிழ் தேசியவாதிகள் - குதுகலிக்க போகும் தென்னிலங்கை.! தமிழீழ மாவீரர் நாள் நவம்பர் 27ம் திகதி நினைவு கூரப்படவுள ்ள நிலையில் மாவீரர் நாள் நினைவு கூரலுக்காக துயிலும் இல்லங்களை துப்புரவு செய்ய சென்றிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், அவர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கும் முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. குறிப்பாக யாழ்.கோப்பாய் மற்றும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இதே வேளை துப்பரவு பணிகள…

  7. மரணவீட்டுக்கு வந்தவர்கள், ஒவ்வொருவராக வந்து துக்கம் விசாரிப்பார்கள். என்றுமில்லா அக்கறையோடு அளவாவுவார்கள். அப்புறம் ஒவ்வொருவராகச் சொல்லிக்கொள்ளாது போய்விடுவார்கள்.ஏறக்குறைய இதே நிலையில் தான் தமிழகத்தில் அரசியற் கட்சிகளின் ஈழத்து எழுச்சி ஆர்ப்பாட்டங்கள் இன்றிருக்கின்றன. கடந்த மாதங்களில் ' இன்று தமிழமெங்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக...' என்று ஏதாவது ஒரு போராட்டத்தைத் தினமும் ஒரு கட்சி நடத்திக்கொண்டிருந்தது. தினமும் மற்றக்கட்சிகளிடமிருந்து மாறுபட்டுத் தெரிய வேண்டுமென்பதற்காகவே புதிய புதிய வடிவங்களில் போராட்டங்களை நடத்தினார்கள். போராட்டம் நடத்துவதற்குரிய வடிவத்தை உட்கார்ந்து யோசிப்பாங்களோ என எண்ணும் வகையில், புதுப் புது வடிவங்களில் போராட்டங்கள் நடந்தன. …

    • 0 replies
    • 883 views
  8. பாஜக தலைவர் எல்.கே. அத்வானியைச் சந்தித்துப் பேசினார் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க. புதுதில்லிக்கு வந்துள்ள ரணில் விக்ரமசிங்க, இன்று காலை 11 மணி அளவில் அத்வானியின் இல்லத்துக்கு வந்திருந்தார். இந்தச் சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்தது. http://dinamani.com/latest_news/article1527373.ece

    • 3 replies
    • 526 views
  9. தமிழர் அரசியல் நகர்வுகளில் அரசு மௌனம் காப்பது நல்லதல்ல கடுமையாக சாடுகிறது ஹெல உறுமய : வடக்கில் சிங்கள குடியேற்றத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? (ஆர்.யசி) வடக்கு, கிழக்கில் விடு­விக்­கப்­பட்­டுள்ள காணி­களில் எத்­தனை ஏக்கர் நிலப்­ப­ரப்பு சிங்­கள குடி­யேற்­றத்­துக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்­ளது என்றும் வடக்­குக்­கான நிதி ஒதுக்­கீட்டில் சிங்­கள மற்றும் முஸ்லிம் மக்­க­ளுக்­கான பங்கு எவ்­வ­ளவு என்றும் அர­சாங்கம் உட­ன­டி­யாக தெரி­விக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி கேள்வி எழுப்­பி­யது. தமிழ் அர­சியல் தலை­மை­களின் நகர்­வு­க­ளுக்கு அர­சாங்கம் மௌனம் காப்­பது நல்­ல­தல்ல எனவும் அக்­கட்சி சுட்­டிக்­காட்­டி­யது. ஜாதிக ஹெல உறு­மய கட்­சி­யினால் நேற்று க…

  10. இலங்கையின் நீதித்துறையில் தமிழருக்கு நம்பிக்கையில்லை::சர்வதேச விசாரணை கோர அதுவே காரணம்.! "இலங்கையின் நீதிப் பொறிமுறையில் நம்பிக்கையிழந்த காரணத்தாலேயே, சர்வதேச விசாரணையைக் கேட்கின்றோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- "இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் நீண்டகால இழுத்தடிப்புகள் காணப்படுகின்றன. இதனாலேயே மோசமான குற்றங்களுக்கு நீதியைப் பெற்றுக்கொள்ள சர்வதேச நீதிமன்ற தலையீட்டைக் கொண்ட விசாரணைகளைக் கேட்கின்றோம். இலங்கையின்…

  11. கடுமையாக போராடும் விடுதலைப்புலிகள்: விரக்தியில் விளிம்பில் சிறிலங்கா இராணுவம் [ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2009, 04:32.11 PM GMT +05:30 ] இராணுவத்தின் முன்னேற்றத்ததை தடுத்து விடாப்பிடியுடன் விடுதலைப் புலிகள் கடுமையாக போராடி வருவதால், நகர முடியாமல் சிறிலங்கா இராணுவத்தினர் விரக்தியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் விடுதலைப் புலிகளின் கதை முடிந்து விடும். இலங்கை முழுவதும் சுதந்திர பூமியாகி விடும். பிரபாகரன் அழிக்கப்பட்டு விடுவார். உயிர் தப்ப அவர் சரணடைவதுதான் புத்திசாலித்தனம் என அதிபர் ராஜபக்ச முழக்கமிட்டு 2 மாதங்களாகி விட்டது. ஆனால் 2 மாதங்களுக்கு முன்பு எந்த இடத்தில் இருந்ததோ கிட்டத்தட்ட அதே இடத்தில்தான் இருக்கிறது இராணுவம். கார…

    • 0 replies
    • 948 views
  12. வடக்கு கிழக்கு மாகாணங்களை கடந்த வாரம் அச்சுறுத்திய 'புரவி' புயல் காரணமாக மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் பெரும்போக பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றது. இதனால், விவசாயிகள் பெரும் அழிவை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். குறிப்பாக பிரதான வாய்க்கால்களில் தொடர்ச்சியாக நீர் வழிந்து செல்வதாலும் இடையிடையே மழை பெய்து கொண்டிருப்பதாலும் வயல்களில் தேங்கியிருக்கும் நீர் வெளியேற முடியாது தேங்கியுள்ள நிலையில் காணப்படுகின்றது. மேலும், வாய்க்கால்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. வயல் நிலங்களில் காணப்படும் நீரை வெளியேற்றும் வகையில் வாய்க்கால் துப்பரவு செய்யப்பட்டு, இயந்திரங்கள் மூலம் நீரை இரைத்து வெளி…

  13. எதிரியைக் கண்டு அச்சமுறுபவர்கள், அடிமையாக வாழப்பழகிக் கொள்ள வேண்டுமென்பதுதான் வரலாற்றுப்பட்டறிவு கூறும் செய்தி. புதை குழியின் மீது நின்று சமாதானம் பேசமுடியாது. ஆனால் அதனை விளை நிலமாக மாற்றும் வல்லமை உடையோரே வரலாற்றினை உருவாக்குகிறார்கள். வன்னியில் நிகழும் மனிதப் பேரவலத்தையிட்டுக் கரிசனை கொள்ளாமல் எக்காரணத்தையிட்டும் நடைபெறும் போரை நிறுத்த முடியாதென அழுத்தம் திருத்தமாகக் கூறும் ஆட்சியாளர்களின் போக்கில் மாற்றம் ஏற்படுவதாகத் தெரியவில்லை. அதனை மாற்றக் கூடிய வல்லமை இந்த சர்வதேச வல்லரசாளர்களிடம் இருப்பினும் எதுவித அழுத்தங்களையும் அரசின் மீது சுமத்த இவர்கள் விரும்பவில்லை. பெப்ரவ? 4 ஆம் திகதி ஜனாதிபதியால் அறுதியிட்டுச் சொல்லப்பட்ட ஓரிரு தினங்களில் போர் முடிவ…

  14. பண்டிகைக் காலச் சந்தைக்கு வந்த புதிய தினுசுப் பொருட்களைப் போல, ஸ்வர்ண ஹன்ஸ, சிங்கள ராவய, ராவணபலய, பொது பல சேனா, லக்பல சேனா போன்ற பதங்கள் 2009 இற்குப் பின்னர் தற்போது அதிகமாகவே இலங்கைத்தீவில் கோலோச்சுவதற்கு சிறப்பான காரணங்கள் ஏதாவது இருக்க முடியுமா? இலங்கைத்தீவின் சிங்கள கடும்போக்குவாதத்துக்கும் அதன் குத்தகைக்காரர்களுக்கும் இடையிலான தொடர்பு நீண்டது. அதன் சில வடிவங்களாக சில பெயர்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் முள்ளிவாய்க்காலுக்கு முன்னான சிஹல உறுமய, தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி, ஜாதிக ஹெல உறுமய போன்ற பெயர்களை எல்லாம் பின்தள்ளி, தற்போது பொது பல சேனா, லக்பல சேனா, ஸ்வர்ண ஹன்ஸ, அந்த சேனா... இந்த சேனா... என புதிய புதிய வடிவடித்தில் பௌத்த மதவாதக் காளான்களின் பெயர்கள…

  15. யாழில் துவிச்சக்கர வண்டி திருடர்கள் பிடிபட்டனர்-21 துவிச்சக்கர வண்டிகளும் மீட்பு யாழ்.மாவட்டத்தி்ன் பல்வேறு பகுதிகளிலும் துவிச்சக்கர வண்டிகளை திருடிய குற்றச்சாட்டின் கீழ் நேற்றையதினம் (16) 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்களிடம் இருந்து யாழ்.பொலிஸார் 21 துவிச்சக்கர வண்டிகளை மீட்டுள்ளதாக தெரிவிக்க ப்படுகின்றது. அண்மைக்காலமாக யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும்துவிச்சக்கர வண்டிகள் திருடப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில்…

  16. ‘என் சாம்பல்கூட கிடைக்கக் கூடாது பிரபாகரன் சபதம்? ?? சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே இடைவெளி இல்லாமல் நடந்து கொண்டிருக்கும் போர், இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. ராணுவத் தரப்பிலும் புலிகளின் தரப்பிலும் எண்ண முடியாத அளவுக்கு மரணங்கள். கடந்த வாரத் தில் சிங்கள ராணுவத்தின் மூர்க்கமான தாக்குதலில், புலிகளின் முக்கியத் தளபதிகளே உயிரை விட்டிருப்பதாக செய்திகள் பரவிக்கொண்டு இருக்கின்றன. தற்போதைய இலங்கை நிலவரம் குறித்து வன்னியில் இருக்கும் நடுநிலையாளர்களிடம் பேசினோம். ”ராணுவத்தைத் தாக்குவதைவிட உலகத்தின் கவனத் தைத் திருப்புவதற்காகத்தான் ுலிகள் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தார்கள். அமெரிக்கா, இங்கி லாந்து, நார்வே உள்ளிட்ட நாடு…

  17. அல்லாஹ்வின் உருவ பொம்மையொன்றை தெருக்களில் கட்டி இழுத்து வந்து கேவலப்படுத்திய மிகக் கொடூரமான இறை நிந்தனை உலக வரலாற்றில் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்திலேயே இடம்பெற்றுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அண்மைக்காலமாக இலங்கையில் பொது பல சேனா, சிங்கள ஜாதிக ராவய, ராவண பல காய, வீர விதான முதலான பெயர்களில் தோற்றம் பெற்றுள்ள பௌத்த மதத் தீவிரவாதக் குழுக்களினால் இலங்கை முஸ்லிம்களின் இருப்பிலும், அவர்களது வணக்க வழிபாடுகளை மேற்கொள்வதிலும், கலாச்சார விழுமியங்களைப் பேணுவதிலும், வர்த்தக நடவடிக்கைகளைத் தொடர்வதிலும் இடம்பெற்று வருகின்ற பல்வேறு வகையான அருவருக்கத்தக்க, ஆத்திரமூட்டக்…

    • 17 replies
    • 1.3k views
  18. முஸ்லிம்களைச் சீண்டுவது மீண்டும் ஓர் இனவாத மோதலுக்கே வழிசெய்யும் - ஹஸன் அலி எச்சரிக்கை!! உலமா சபையின் ஊடாக அல்-ஹைடா பயங்கரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவி வருகின்றனர் என கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் இயங்கும் பொதுபலசேனா தெரிவித்துள்ள கருத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் முஸ்லிம்களையும், உலமா சபையையும் சீண்டி முஸ்லிம்களைத் தனிமைப்படுத்த முயற்சிப்பதானது, மீண்டும் ஓர் இனவாத மோதலுக்கே வழிசெய்யும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி கூறியவை வருமாறு: உலமா சபையின் ஊடாக அல்-ஹைடா பயங்கரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவுகின்றனர் என்று பொதுபலசேனா…

  19. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணை, பல்குழல் வெடிகணை, வான், பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 219 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 408 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 346 views
  20. ‘மனநிலையை இழந்துள்ள கோட்டா’ நாட்டில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது மனநிலையை இழந்திருக்கவேண்டும் என்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் சீனி விலை அதிகரிக்கும் போதோ, அல்லது நிர்யணிக்கப்பட்ட விலையை விட, வர்த்தகர்கள் அதிக விலையில் விற்பனை செய்தாலோ, ஏன் ஜனாதிபதி அப்போது மனநிலையை இழக்கவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். ஜனாதிபதி இவ்வாறான சந்தர்ப்பங்களில் விரைவான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என்று கூறியுள்ள அவர், அப்படியாயின், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள…

    • 0 replies
    • 433 views
  21. ஐ.நா.செயலாளரை சந்திக்க அனுமதி கோருகிறார் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் திகதி: 19.04.2009 // தமிழீழம் // [வன்னியன்] வன்னியில் அநியாயமாகப் படுகொலை செய்யப்படும் அப்பாவி ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீமூன் அவர்களை சந்திக்கவும் அங்கு ஐக்கிய நாடுகள் சபை எடுக்க வேண் டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் உரையாடவும் தனக்கு ஒரு சந்தர்ப்பம் தரும்படி கனடாவின் ஸ்காபுறோ அஜின்கோர்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழத்தமிழ் மக்களின் நெருங்கிய நண்பரும் பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்தவருமான ஜிம் கரிஜியானிஸ், பான் கீமூன் அவர்களின் பிரதிநிதி விஜய் நம்பியாருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் கேட்டுள்ளார். ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாக…

  22. பாராளுமன்ற உறுப்பினரின் புகைப்படப்பிடிப்பாளருடன் சென்ற பிரதேச சபை செயலாளரை எச்சரித்த நீதிமன்றம் கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் மாவீரா்களின் உறவினா்கள், முன்னாள் போராளிகளால் பொது நினைவுச் சமாதி அமைக்கு பணிகள் நேற்று வியாழக்கிழைமை முன்னெடுக்கப்பட்டது. இதன் போது கரைச்சி பிரதேச சபையின் அனுமதியின்றி பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அதனை தடுக்க மாவீரா் துயிலுமில்லத்திற்கு பிரதேச சபையின் வாகனத்தில் கடமை நேரத்தில் சென்ற கரைச்சி பிரதேச சபையின் செயலாளா் க.கம்சநாதன் தன்னுடன் பாராளுமன்ற உறுப்பினா் ஒருவரின் புகைப்படப்பிடிப்பாளரையும் அழைத்துச் சென்றுள்ளார். இது இன்று நீதிமன்றின் கவனத்திற்கு பொது நினைவுச் சமாதி அமைக்கும்…

  23. புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள திரைப்பட இயக்குநர் சீமானுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. திங்கள்கிழமை அவர் விடுதலை செய்யப்படுகிறார். புதுச்சேரி அண்ணா சிலை அருகில் கடந்த பிப்ரவரி மாதம் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை இந்திய அரசு தடுத்து நிறுத்தக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் திரைப்பட இயக்குநர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அதில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீஸôர் வழக்குப் பதிவு செய்து கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தமிழகத்தில் இவர் மீது தேசிய பாதுகா…

  24. வவுனியா கோவில் குஞ்சுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி அப் பாடசாலையின் மாணவர்கள், பெற்றோருடன் கிராமத்தவர்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டனர். நிர்வாகத்திறன் அற்ற பாடசாலை அதிபரை மாற்ற வேண்டும், போதியளவு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், பௌதீக வளங்கள் பாடசாலைக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பாடசாலை வாயிலை மறித்து இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பாடசாலையில் 56 மாணவர்கள் கற்று வந்த நிலையில் அம் மாணவர்களுக்கு முறையான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறாமையினால் பெற்றோர் வேறு பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை மாற்றி வருவதாகவும்., இதன் காரணமாக பாடசாலை மூடப்படும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.