Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் மக்கள் பேரவையின் புதிய கட்சிக்கு மாடி வீடு சின்னம் பரிந்துரை! தமிழ் மக்கள் பேரவையினால் ஆரம்பிக்கப்படவுள்ள முண்ணனியினால் தேர்வு செய்யப்பட்ட மகரயாழ் சின்னம் தொடர்பில் அதிருப்தி அதிகரித்தமையினால் மாடிவீட்டுச் சின்னம் பரிந்துரைக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக களமிறங்கத் திட்டமிட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சுரேஸ் அணிகளிற்கு பேரவையின் ஆதரவோடு புதிய முண்ணனி உருவாக்கம் தொடர்பான செயல்பாடு மும்முரமாக இடம்பெறும் நிலையில் குறித்த முண்ணனிக்காக ஆரம்பத்தில் மகரயாழ் தேர்வு செய்யப்பட்டது. குறித்த யாழ் ஆனது யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இருமாவட்டங்களை மட்டுமே அடையாளப்படுத்துவதனால் ஏனைய மாவட்டத்தி…

  2. இரகசியம் பரகசியமானது ‐ இதுவரை வெளியிடப்படாது ஜனாதிபதியினால் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதித் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கை கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது. 19 July 10 08:41 am (BST) இதுவரை வெளியிடப்படாது இரகசியமாக ஜனாதிபதியினால் வைக்கப்பட்டிருந்த இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதித் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோர் இன்று கொழும்பில் வெளியிட்டனர். ஜனாதிபதி மகிநித ராஜபக்சவினால் பேராசிரிய…

    • 0 replies
    • 2.2k views
  3. பொதுநலவாய நாடுகளின் நிதிக்கு கனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி இடைநிறுத்தப்படுவதான தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் கனேடிய பிரதமர் ஸ்டீபன் காப்பருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேன்மைதங்கிய ஸ்ரீபன் காப்பர், கனடிய பிரதம அமைச்சர், ஒற்றாவா, கனடா. மேதகு பிரதம அமைச்சர் அவர்களே! பொதுநலவாய நிதிக்கு வழங்கப்படும் நன்கொடை இடைநிறுத்தம் பொதுநலவாய நாடுகளில் ஒன்றாகிய இலங்கையின் ஓர் மூத்த தமிழ்பிரஜை என்ற வகையில் பொதுநலவாய நாடுகளின் நிதிக்கு உங்கள் அரசால் வழங்கும் பணத்தை இடைநிறுத்துவதாக தங்கள் அரசு எடுத்த முடிவை மீள்பரிசீலிக்க…

    • 13 replies
    • 1.1k views
  4. கிந்தோட்டை சம்பவம் போன்று பல பகுதிகளிலும் ஏற்படும் ஆபத்து : இரு மணி நேரத்தில் நாடு இரத்த பூமியாகுமென்கிறார் ஞானசார தமிழர் ஒருவர் நாட்டை ஆட்­சி­செய்திருந் தால் இந்­த­ள­வுக்கு முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்தின் ஆபத்­துக்­களை மக்கள் எதிர்­கொண்­டி­ருக்க மாட்­டார்கள் . இரண்டு மணித்­தி­யா­லத் தில் நாட்டை இரத்த பூமி­யாக மாற்றும் அள­விற்கு முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் தொடர்­பான தக­வல்கள் எம்­மிடம் உள்­ளன என்று பொது­ப­ல­சேனா அறி­வித்­துள்­ளது. முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்தின் ஆக்­கி­ர­மிப்­புகள் நாட்டில் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. கிந்­தோட்டை போன்ற சம்­ப­வங்கள் எதிர்­கா­லத்தில் இலங்­கையில் பல்­வேறு பகு­தி­க­ளிலும் ஏற்­படும் ஆபத்து உள்­ளது. எனவே உட­ன­டி­யாக ச…

  5. தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில், இலங்கை அரசாங்கம் வியட்நாம் புலனாய்வுத் துறையிடம் ஒத்துழைப்பு கோரியுள்ளது. பிரதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன தலைமையிலான குழு ஒன்றுக்கும், வியட்நாம் வெளியுறவு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின் போது, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வியட்நாம் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன், இலங்கையின் வடக்கு பகுதியில், கண்ணி வெடிகயை அகற்றும் பணிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்கப்பட்டமைக்கும் வியட்நாம் ஒத்துழைப்பு வழங்க இணங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை வியட்நாமின் இலங்கைக்கான தூதரகம் மீண்டும் எதிர்வரும் 2011ம் ஆண்டின் ஆரம்பத்தில் கொழு…

  6. நெடியவனுக்கு எதிரான சிகப்பு எச்சரிக்கை இணையத்தில் 26 ஏப்ரல் 2014 நெடியவனுக்கு எதிரான சிகப்பு எச்சரிக்கை இணையத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவராக அரசாங்கத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நெடியவனுக்கு எதிராக சர்வதேச காவல்துறையின் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெடியவன் தொடர்பிலான இணைய சிகப்பு எச்சரிக்கை இதுவரையில் வெளியிடப்படவில்லை என அண்மையில் நோர்வே தெரிவித்திருந்தது. எனினும், தற்போது சிகப்பு எச்சரிக்கை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளின் வரிசையில் நெடியவனின் பெயரை சர்வதேச காவல்துறை இணைத்துள்ளது. அண்மையில் அரசாங்கத்தினால் நெடியவன் மற்றும் அவரது தன்னார்வ தொண்டு நிறு…

  7. ஒலுவில் மற்றும் இறக்காமம் போன்ற பிரதேசங்களில் பாதுகாப்பு படையினர் புதிய முகாம்களை அமைப்பதன் காரணமாக அரசாங்கம் மீது மக்கள் மத்தியில் சந்தேகம் தோன்றியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.டி.ஹசனலி கூறியுள்ளார். மேலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள கரையோரங்களில் உல்லாச அபிவிருத்தி எனும் போர்வையில் அங்குள்ள மக்களை சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் வழிகாட்டலின் கீழ் வெளியேற்றி அவர்களின் காணிகளை சுவீகரித்து வருவதை முஸ்லிம் காங்கிரஸ் கண்டிப்பதாக அவர் தெரிவித்தார். இதேவேளை பொத்துவில் பகுதியில் உள்ள வேகம்பற்று மற்றும் தாரம்பல்லை பகுதிகளில் நீண்ட காலமாக விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த தமிழ் பேசும் மக்களை தற்போது அங்கு செல்லாமால்…

    • 0 replies
    • 477 views
  8. தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியாக தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே திகழ்கி;ன்றனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கி வருகின்றமையை அமெரிக்கா உறுதி செய்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் தொடர்ந்தும் அச்சுறுத்தலாக திகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அண்மைய அறிக்கையில் புலிகளின் செயற்பாடுகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் பிரகடனத்தின் அடிப்படையில் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும்;, 424 தனிப்பட்ட …

  9. முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து மீனவர்கள் வெளியேறினர்!- மயான அமைதியில் கடற்கரை!! முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து மீனவர்கள் வெளியேறினர்!- மயான அமைதியில் கடற்கரை!! முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து மீனவர்கள் வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். இலங்கையில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை அடுத்தே அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என்று தெரியவருகின்றது. கடல்மட்டம் உயர்ந்துள்ளது என்றும், மீனவர்கள் அச்சத்தால் தமது மீன்பிடிப் படகுகளை கடற்கரையில் இருந்து சுமார் 100 மீற்றர்களுக்கு அ…

  10. நிஷாந்தன் மீது வாள்வெட்டு July 1, 2022 தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தனின் மீது இனந்தெரியாத மர்மநபர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது. யாழ்ப்பாணம் கச்சேரி எரிபொருள் நிலையத்திற்கருகில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காத்திருந்தபோது பின்னால் வந்திருந்த இரு நபர்களால் வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் முல்லைத்தீவில் இடம்பெற்ற பாலியல் குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்ட வேண்டும் என்பது தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் செயற்படாமை தொடர்பிலும் நான் அண்மையில் கருத்து தெரிவ…

  11. விசா நடைமுறையில் அடுத்த மாதம் முதல் மாற்றம்! சனி, 28 ஆகஸ்ட் 2010 04:32 இலங்கையில் விசா வழங்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இலங்கைக்கு வந்து இறங்கிய பிற்பாடு விசாக்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி பொதுவாக இருக்காது. ஆயினும் சிங்கப்பூர், மலேசிய பிரஜைகளுக்கு மாத்திரம் விதி விலக்கு. இதன்படி இம்மாதம் 30 ஆம் திகதியுடன் ஒன் எரைவல் விசாக்கள் ரத்து செய்யப்படடுகின்றன. இப்புதியத் திட்டத்தின் அடிப்படையில் 70 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வர அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு சென்று விசா விண்ணப்பிக்க கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுமென குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டு அ…

    • 1 reply
    • 405 views
  12. பௌர்ணமி காலங்களில் அமைச்சர் விமல் வீரவன்சவின் புத்தி பேதலித்து விடும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தமக்கு எதிராக சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவை, எஸ்.பி; போன்றவர்கள் தேவையற்ற வகையில் போற்றி வருவதாகவும், பீ.பி. ஜயசுந்தர சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டியவர் எனவும் விமல் வீரவன்ச அண்மையில் குறிப்பிட்டிருந்தார். ஒரு சில நபர்களுக்கு பௌர்ணமி காலங்களில் புத்தி பேதலிப்பது வழமையானதே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிலருக்கு இவ்வாறு குறித்த காலங்களில் சிந்தனை ஆற்றல் இருக்காது எனவும் அவ்வாறான தருணங்களில் வெளியிடப்படும் கருத்துக்களை பெரிதுபடுத்தக்…

  13. புது­வி­த­மான காய்ச்­ச­லால் முல்­லை­த்தீவில் 9பேர் சாவு புது­வி­த­மான காய்ச்­ச­லால் முல்­லை­த்தீவில் 9பேர் சாவு முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் கடந்த 20 நாள்­க­ளுக்­குள் அடை­யா­ளம் காணப்­ப­டாத காய்ச்­சல் கார­ண­மாக 9பேர் உயி­ரி­ழந்­தனர். திடீர் உயி­ரி­ழப்­புத் தொடர்­பில் கொழும்பு அர­சின் மருத்­து­வக் குழு முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் ஆய்­வில் ஈடு­பட்­டுள்­ளது. முல்­லைத்­தீவு நக­ரப் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­களே இந்­தக் காய்ச்­சல் கார­ண­மாக உயி­ரி­ழந்­தனர். தொடர்ச்­சி­யான காய்ச்­ச­லின் பின்­னர் மருத்­து­வ­ம­னை­யில்…

  14. ஆளும் தரப்பின்... நாடாளுமன்ற குழு, மூன்றாக பிளவு பட்டுள்ளதாக தகவல்? பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற குழு மூன்றாக பிளவுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் பெரும்பாலான குழுவில் 40 இற்கும் மேற்பட்டவர்கள் டலஸ் அழகப்பெரும தலைமையில் முன்னணிக் குழுவாக இணைந்துள்ளனர். மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவுடன் இன்னுமொரு குழு செயற்படுவதுடன் இதில் சுமார் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் இதில் சாகர காரியவசம், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்தன உட்பட்டோர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த இரு குழுக்களைத் தவிர ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட மற்றுமொரு குழு தனியான குழுவாக செயற்படுவதாகவும் …

  15. 100 கிலோ போதைப்பாக்குடன் பருத்தித்துறை கடலில் மூவர் கைது! தடை செய்யப்பட்ட போதைப்பாக்கினை இலங்கைக்கு கொண்டுவர முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தில் உள்ளுர் மீனவர்கள் மூவரை காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனா். அவர்களிடம் இருந்து 100 கிலோ போதைப்பாக்கினை கைபற்றியுள்ளதாக கடற்படையின் வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. இன்று(23) விசேட ரோந்து சுற்று கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த படகு ஒன்றினை மறித்து சோதனை மேற்கொண்டனர். இதன் போது தடைசெய்யப்பட்ட போதை உணர்வை தூண்டும் பாக்கு பைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் நிறை 100…

  16. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு... அச்சுறுத்தல்: பொலிஸார் நடவடிக்கை. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சமீப நாட்களாக சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் பரப்பப்பட்டு வருவதை அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சில பயனர்கள் நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் முறைகள் தொடர்பாக உறுப்பினர்களை நேரடியாக அச்சுறுத்தியுள்ளனர். எனவே அவர்களை அச்சுறுத்தும் வகையில் இடுகைகளை செய்வது, அதனை பரப்புவது மற்றும் வெளியிடுபவர்களை அடையாளம் காண பொலிஸார் விசாரணை நடத்தவுள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பத…

  17. புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் இளைய தலைமுறையினர்க்கு இடையிலான சந்திப்பு ஒன்று ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை ஜேர்மனியின் டுசல்டோர்ஃப் [Düsseldorf] மாநகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. புலம்பெயர்ந்த நாடுகளில் செயற்திறனோடு இயங்கும் தமிழ் இளைய தலைமுறையினர் தமக்குள் அறிமுகமாகிக் கொள்ளும் நோக்கோடும் அவர்களுக்கிடையிலான ஆக்கபூர்வமான வலையமைப்பை உருவாக்கும் நோக்கோடும் 'தமிழ் இளைஞர் சந்திப்பு 2010' என்ற தலைப்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் சமூகத்தின் இளைய தலைமுறையினரில், கல்வி பயிலும் மாணவர்கள், பல்துறைசார் இளைஞர்கள், தனித்தும், அமைப்பு ரீதியாகவும் இயங்கும் இளைஞர்கள், கலந்து கொண்டனர். …

  18. கொழும்பு: இலங்கை தமிழர்களுக்கான அதிகார பகிர்வு குறித்து இந்தியா கட்டளையிட முடியாது என அந்நாட்டு அமைச்சர் நிமல் ஸ்ரீபாலா டிசில்வா தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''இலங்கையில் வாழும் மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது குறித்து இந்தியாவோ அல்லது வேறு நாடுகளோ கட்டளையிட முடியாது. இலங்கை நாடாளுமன்றத் தேர்வுக்குழுதான், அதிகாரப் பகிர்வு குறித்து விவாதித்து இறுதி முடிவை எடுக்கும். இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து இலங்கை அறிவுரை கூறுவதில்லையோ, அதேபோல், இலங்கையிலுள்ள மாநிலங்களுக்கான அதிகார பகிர்விலும் இந்தியா தலையிடக் கூடாது. 1987ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் 13வது சட்டத்திருத்தம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்க…

    • 7 replies
    • 1.1k views
  19. 1,406 ஏக்கர் சுவீகரிக்கப்படும்; நாடாளுமன்றில் அரசு அறிவிப்பு news கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 406 ஏக்கர் (1,406.94) காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு எடுத்துக் கொள்ளப்படும் காணிகளுக்காக காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளது அரசு. நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, காணி அபிவிருத்தி அமைச்சரிடம் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு சபாபீடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதில்களிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள காணிகள் அரசியல் …

  20. தெற்கு கடலில் பாரிய கப்பலுடன் மீன் பிடிப்படகு மோதி விபத்து : இருவர் பலி தெய்வேந்திரமுனைக் கடற்பரப்பில் வாகனங்களை ஏற்றிச் சென்ற பாரிய கப்பலொன்றுடன் மீனவப்படகொன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமற்போயுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காணாமற்போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர். குறித்த மீனவப் படகில் 6 பேர் பயணித்துள் நிலையில் ஏனைய மூவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். காணாமற்போன மீனவரை தேடும் நடவடிக்கையில் கடற்படையின் இர…

  21. அர்ஜுன மகேந்திரன் விரைவில் சிறைக்கு செல்வார்;சந்திரிகா ஆருடம் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான அர்ஜுன மகேந்திரனுக்கு விரைவில் சிறைக்குச் செல்லநேரிடும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆருடம் வெளியிட்டுள்ளார். கம்பஹா மாவட்டம் – மீரிகம பல்லேவல பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலத்தில் ஸ்ரீலங்காவின் கல்வித்துறையையும் ராஜபக்ச குடும்பம் வியாபாரமாகவே பயன்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை இலங்கை மத்திய வங்கிக்கு 11,145 மில்லியன் ரூபா …

    • 1 reply
    • 429 views
  22. By T YUWARAJ 08 AUG, 2022 | 08:11 PM ( எம்.எப்.எம்.பஸீர்) அரசியல் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புக்கள் நாளை (9) ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தடை விதிக்குமாறு, கறுவாத்தோட்டம் பொலிஸார் முன் வைத்த கோரிக்கையை, கொழும்பு பிரதான நீதிவான் நத்தன அமரசிங்க இன்று ( 😎 நிராகரித்தார். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் ஏதேனும் வன்முறைகளில் ஈடுபட்டால், பொலிஸ் அதிகாரத்தை பயன்படுத்தி மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்தே நீதிவான் கறுவாத்தோட்டம் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்தார். நாளை 9 ஆம் திகதி , அரசாங்கத்துக்கு எதிராக அரசியல் கட்சி, பல்வேறு அமைப்புக்கள் இணைந்து கொழும்பு - விஹார மஹா தேவ…

  23. http://nitharsanam.com/?art=17105 ஐயோ என்ன நடக்குது நாட்டில... குண்டுவெடிப்பு அரசின் தீவிர பிரச்சாரத்துக்கு வழிசெய்ததை விரிவாக ஆராய்ந்திருக்கிறார் ஜெயராஜ் ஆனால் இது அவர் தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்டதாக அர்த்தமாகிவிடாதே?

    • 0 replies
    • 1.4k views
  24. ஐ.நா நிபுணர் குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டது? ஆங்கில நாளிதழ் செய்தி ! [Thursday, 2014-06-26 11:07:17] சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா நிபுணர் குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் படி, இந்த விசாரணைகள் தொடர்பாக, வரும் செப்ரெம்பர் மாதம் நடக்கவுள்ள பேரவையின் 27வது அமர்வில் வாய்மூல அறிக்கையையும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள பேரவையின் 28வது அமர்வில் விரிவான அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும். சிறிலங்கா அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும், இதுபோன்ற ஏனைய சந்தர்ப்பங்கள…

  25. அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் பரப்புரை சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது! தேர்தல் விதிமுறைகளை மீறி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பரப்புரை சுவரொட்டிகளை ஒட்டினார்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு பேர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பகுதியில் நேற்றிரவு தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெயர் பொறிக்கப்பட்ட 25 நோட்டீஸ்கள் கைப்பற்றப்பட்டதாகவும் விசாரணைகளின் பின்னர் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் இன்று முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.