ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143264 topics in this forum
-
யாழ்ப்பாண சாரணிய பெண்கள், மலேசியா பயணம் மலேசியாவில் அடுத்தக் கிழமை நடைபெறவுள்ள உலக சாரணிய நூற்றாண்டு நிகழ்வில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து 36 பெண்கள் செல்கின்றனர் .இந்தப்பெண்கள் நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்றுள்ளனர். http://meenakam.com/?p=6188
-
- 0 replies
- 641 views
-
-
விமல் வீரவன்ச யாழ்ப்பாணம் செல்கிறார் முன்னாள் ஜே வி பியின் பிரசார செயலாளரும் தற்போதைய அமைச்சருமான விமல் வீரவன்ச எதிர் வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்யவுள்ளார் செய்கிறார் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற வீடமைப்பு நடவடிக்கைகளை அவதானிக்கவே அவர் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார் விமல் வீரவன்சவின் பயணத்தின் போது வபோது அவர் யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கு வீட்டுக்கடன் திட்டங்களை வழங்க உள்ளார் என எதிர் பார்க்கப்படுகிறது. http://meenakam.com/?p=6185
-
- 0 replies
- 478 views
-
-
சனிக்கிழமை , ஆகஸ்ட் 28, 2010 அரசமைப்புத் திருத்த யோசனைகள் அடுத்த மாதம் 9ஆம் திகதி வியாழக்கிழமை நாடாளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.ஜனாதிபதியின் ஆட்சிக்கால எல்லையை நீடித்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்குதல், அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளுக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்கி அவற்றை வலுப்படுத்துதல் ஆகிய சில விடயங்கள் அரசமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன என அரச வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றன. அரசமைப்பு யோசனைகள் எதிர்வரும் 30ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. அப்பொழுது அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப் படும். அரசமைப்புத் திருத்த யோசனைகளை அமைச்சரவை அங்கீகரித்தவுடன், உச்ச நீதிமன்றத்தின் அங்கீகாரத்துக்காக அது சம…
-
- 0 replies
- 289 views
-
-
சனிக்கிழமை , ஆகஸ்ட் 28, 2010 விடுதலைப்புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றிருந்தார் என்று கூறி, பார்வையற்ற ஒருவரைக் கைது செய்தமை அடிப்படை மனித உரிமை மீறலாகும் என உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றார் என சிறீசெல்வன் ஜூட் என்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒழுங்குமுறையான விசாரணைகள் இன்றி பார்வையற்ற ஒருவரை விடுதலைப்புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றார் எனப் பொலிஸார் எவ்வாறு கைது செய்யமுடியும் என பிரதம நீதிபதி அசோக டீ சில்வா கேள்வி எழுப்பியுள்ளார். கைது செய்யப்பட்ட ஜூட் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவிக்கையில், "புனர்வாழ்வு நிலையத்தில் ஜூலை மாதம் 27 ஆம் திகதி பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்"எனத் தெரிவ…
-
- 0 replies
- 371 views
-
-
இலங்கையில் இப்போதுதான் அனைவரும் ஏற்றுகொள்ளக்கூடிய தீர்வுமுயற்சி ஒன்றை கொண்டுவர சாதகமான நிலை காணப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். தாம் இலங்கைக்கு போதியளவு உதவிகளை செய்துவருவதாகவும் கூறியுள்ள கிருஸ்ணா இலங்கைக்கு அனைத்துக்கட்சி குழுவினை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையினை நிராகரித்தார். மாறாக தாமே ஒருவரை அனுப்ப போவதாகவும் கூறினார். விடுதலைப்புலிகள் ஒழிக்கப்பட்டதனால்தான் அனைவரும் ஏற்றுகொள்ளக்கூடியதீர்வினை கொண்டுவர இலகுவாக உள்ளதாக கூறினார். ஈழ நாதம்
-
- 12 replies
- 1.3k views
-
-
பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித் வியட்னாமியப் போராட்டம் குறித்துப் பேசும் போது, கோச்சிமினை நிராகரித்துப் பேசமுடியாது. வியட்னாமியப் போராட்ட வரலாற்றையே அவரின் வரலாற்றிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றால் அது மிகையற்றது. ஈழப் போராட்ட வரலாறு என்பது பிரபாகரனை நிராகரித்து எழுதப்பட முடியாது. முள்ளிவாய்க்காலில் புலிகளின் தலைமை அழித்துச் சிதைக்கப்படும் வரையான போராட்டப் பின்புலம் பிரபாகரன் என்ற தனிமனிதனினின் ஆளுமை, அதிகாரம், துரோகம், வீரம் என்ற அனைத்துக் கற்பிதங்களையும் சூழவே தனது ஒவ்வொரு அசைவையும் கொண்டிருந்தது. தேசியத் தலைவர், சூரியத்தேவன், கடவுளின் மறு அவதாரம், போன்று நூற்றுக்கணக்கான அடை மொழிகளுக்குள் பிரபாகரனை முக்கியப்படுத்திய ஒரு பகுதி, அதி…
-
- 55 replies
- 6.5k views
-
-
மத்திய வங்கி 5000 ரூபா தாள் அறிமுகப்படுத்த உள்ளது வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் 5000 ரூபா நோட்டு ஒன்றை அறிமுகப்படுத்த இலங்கை மத்திய வங்கி உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மத்திய வங்கியின் அறுபதாண்டு பூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்படவுள்ள புதிய நோட்டுக்களில் ஐயாயிரம் ரூபா நோட்டுக்களும் எதிர்வரும் 2011ம் ஆண்டு முதல் பகுதியில் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய ஐயாயிரம் ரூபா நோட்டின் மூலம் இலங்கையின் அபிவிருத்தி வெளிப்படுத்தப்படும் என குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, நாட்டின் பணவீக்க வீதம் உயர்வாகக் காணப்பட்டாலே பெறுமதியான பண நோட்டுக்களை அச்சிட நேரிடும் என சில பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுளள்னர் எனபது குறி…
-
- 1 reply
- 537 views
-
-
கே.பியின் பொய்ப் பரப்புரை உண்மையும் பின்னணியும் என்ன? - பழ. நெடுமாறன் ஆக 27, 2010 விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனராகவும், நிதிதிரட்டுபவராகவும் இருந்த குமரன் பத்மநாபன் என்ற கே.பி. தற்போது சிங்கள அரசின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவர் சிங்கள அரசிடம் சிக்கினாரா? அல்லது அவரே தன்னை ஒப்புக் கொடுத்தாரா? - என்ற கேள்விகள் உலகத் தமிழர்களின் மத்தியில் இன்றும் உலவிவருகின்றன. அவர் டி.பி.எஸ். செயராஜ் என்பவருக்கு அளித்த நேர்காணலில் பரபரப்பான சில செய்திகளைக் கூறியிருக்கிறார். இச்செய்தி களின் நம்பகத்தன்மையை ஆராய்வதற்கு முன்பாக புலிகள் இயக்கத்திலிருந்து இவர் விலக்கப்பட்ட சூழ்நிலையைத் தெரிந்து கொள்வது நல்லது. 2003 ஆம் ஆண்டு சனவரியிலிருந்து இவர் புலிகள் இயக்…
-
- 0 replies
- 813 views
-
-
இராணுவ விவகாரங்கள் சம்பந்தப்பட்ட உறவுகளைப் புதுப்பிக்கும் நோக்கில் இலங்கை-இந்திய உயர்மட்டக் குழுக்கள் இடையே நேற்று புது டில்லியில் புதிய சுற்றுப் பேச்சுக்கள் ஆரம்பம் ஆகி உள்ளன. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில்கூட இவ்வுறவுகளை மீண்டும் பலப்படுத்துவதில் இரு நாடுகளும் பேரார்வம் காட்டுகின்றன. இலங்கைத் தரப்பில் பாதுகாப்பமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க , ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஸ ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியத் தரப்பில் தேசிய பாதுகாப்புக்கான ஆலோசகர் சிவசங்கர் மேனன், வெளிவிவகார அமைச்சுச் செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்பமைச்சுச் செயலாளர் பிரதீப்…
-
- 3 replies
- 689 views
-
-
எனக்கு மட்டுமல்ல... உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒப்பற்ற தலைவர் பிரபாகரன்தான் ‐பேராசிரியர் இராமசாமி நேர்காணல் ‐ டி.அருள்செழியன்‐ 26 August 10 05:05 am (BST) பேராசிரியர் இராமசாமி, "பினாங்கு ராமசாமி" என்றே அறியப்படுகிறார் ‐ மலேசியாவின்:‐ பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர். இலங்கை இன அழிப்புப் போருக்குப் பின்னர் ஈழ மக்களுக்காக சர்வதேச அளவில் ஓங்கி ஒலிக்கும் கோபக் குரல்!செம்மொழி மாநாட்டுக்கு எதிராக இவர் கொளுத்திப்போட்ட பட்டாசுகள் வெடித்து அடங்குவதற்குள், "மகிந்தா ராஜபக்ஷே, கோத்தபய வரிசையில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், கருணாநிதி ஆகிய மூன்று பேரும் போர்க் குற்றவாளிகளே. இவர்களிடமும் ஐ.நா. விசாரணைக் குழு விசாரணை நடத்த வேண்டும்" என்று அதிரடி அறிக்கைவிட்ட…
-
- 7 replies
- 1.5k views
-
-
ஜகத் டயஸின் நியமனத்திற்கு சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் எதிர்ப்பு மேஜர் ஜெனரல் ஜகத் டயஸை ஜெர்மனியின் பிரதி உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டமைக்கு சுவிட்சர்லாந்து புலிகள் அமைப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக கொழும்பு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஜகத் டயஸை உயர்ஸ்தானிகர் பதவிக்கு நியமிப்பதற்கு ஜெர்மனிய அரசாங்கம் அனுமதி வழங்கியதனால், அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக புலி ஆதரவாளர்கள் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக அவை செய்தி வெளியிட்டுள்ளன. மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு எதிராக சுவிஸ் புலிகள் அமைப்பு பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. புலிகளுக்கு ஆதரவான இணைய தளங்களில் வெளியான செய்திகள் மற்றும் அரச சார்பற்ற ந…
-
- 3 replies
- 410 views
-
-
பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்பாண்ட் உட்பட அந்நாட்டின் தொழிற்கட்சிப் பிரமுகர்கள் அடுத்த வாரம் நேரில் சந்தித்து உரையாட உள்ளார்கள். இச்சந்திப்புக்கான ஏற்பாடுகளை தொழிற்கட்சிக்கான தமிழர்கள் என்கிற அந்நாட்டு புலம்பெயர் தமிழர் அரசியல் அமைப்பு ஒன்று மேற்கொண்டுள்ளது. இச்சந்திப்பு செப்டெம்பர் நான்காம் திகதி இடம்பெற உள்ளது. பிரித்தானியாவின் வருங்காலப் பிரதமராகவும், தொழிற்கட்சியின் வருங்கால தலைவராகவும் வரும் பிரகாசமான வாய்ப்பை உடைய மில்பாண்டை சந்திக்கும் சந்தர்ப்பத்தை சரியாக தமிழர்கள் பயன்படுத்த வேண்டும் என்று இவ்வமைப்புக் கோரி உள்ளது. http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9160:…
-
- 3 replies
- 695 views
-
-
மேஜர் ஜெனெரல் சவேந்திர சில்வா நியமனம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மெளனம் வியாழக்கிழமை, ஆகஸ்ட் 26, 2010 இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான துணை நிரந்தர தூதராக மேஜர் ஜெனெரல் சவேந்திர சில்வாவை நியமிக்கும் திட்டம் பற்றி ஐக்கிய நாடுகள் மெளனம் சாதித்து வருகின்றது. சவேந்திர சில்வா அவர்களே வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப்புலிகளின் போராளிகளை சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டவர். பல்வேறு மனித உரிமை அமைப்புக்களாலும் இவர் பெயர் மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் புரிந்ததற்கான பட்டியலில் உள்ளது. இந்த நிலையில் இவரின் நியமனம் தொடர்பில் இன்று பத்திரிகையாளர் கேட்டபோது ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் மெளனம் சாதித்தார் என்று கூறப்படுகின்றது. . ஈழ நாதம்
-
- 3 replies
- 861 views
-
-
கென்ய நாட்டு பெண் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளார் இலங்கையின் முன்னணி அரச சார்பற்ற நிறுவனமொன்றில் பணியாற்றி வந்த கென்ய நாட்டு பெண் ஒருவர் நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முரண்பாடுகளற்ற சமாதான அமைப்பு என்ற அரச சார்பற்ற நிறுவனத்தில் கடமையாற்றி வந்த பெண் ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளார். குறித்த கென்ய நாட்டு அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர் எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னதாக நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேறுமாறு குறித்த அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்களுக்கு குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய அறிக்கையின் அடிப்படை…
-
- 1 reply
- 660 views
-
-
யுத்தம் முடிந்தும் பல கேள்விகளுக்குப் பதிலில்லை : ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் _ திகதி:27.08.2010 இலங்கையில் யுத்தம் முடிவுற்ற போதிலும் பல கேள்விகளுக்கு இன்னமும் பதில் காணப்படவில்லை என பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நாயகமும் அவசரகால நிவாரண இணைப்பாளருமான ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் நேற்று நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தனது பதவிக் காலத்தின் போது இலங்கையில் மிகக் கடுமையான விவகாரங்களுக்கு ஐ.நா. முகங்கொடுக்க நேரிட்டதாக ஜோன் ஹோம்ஸ் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், "யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் அழுத்தங்களுக்…
-
- 1 reply
- 499 views
-
-
ரீ 56 ரக துப்பாகிகள் 20 அதற்குரிய தோட்டக்கள் 50 இற்கு மேற்பட்ட கைக்குண்டுகள் வைத்திருந்த பிக்கு கைது செய்யபட்டு நீதிமன்றத்தினால் குற்றவாளியா நிரூபிக்கப்பட்டுள்ளார். வணக்கத்திற்குரிய உவதென்ன சுமன தேரோ என்பவரே இவ்வாறு குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளார். இந்த பிக்குவுடன் மேலும் நான்கு சிங்களவர்கள் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளனர். அவசரகால சட்டம் மற்றும் ஆயுதங்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஈழ நாதம்
-
- 1 reply
- 790 views
-
-
காலத்திற்கேற்ற பெறுமதியான கட்டுரை வழக்கம் போல கோப்பி தேத்தண்ணி எண்டு சண்டை பிடிக்காமல் விசயத்தை பாருங்கண்நோய்.............. பல தளங்களிலும் நாம் பயணம் செய்தாகவேண்டும் : நிராஜ் டேவிட் [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 11:43.14 AM GMT +05:30 ] விடுதலை வேண்டிப் போராடிவரும் ஈழத்தமிழ் இனம் ஒரே நேரத்தில் பல தளங்களிலும் பயணம் செய்யவேண்டும் என்று நீண்டகாலமாக சில புத்தி ஜீவிகள் வலியுறுத்தி வருகின்றார்கள். உலக அரங்கில் ஒரு பக்கத்திற்குச் சார்பாக நிலைப்பாடு எடுப்பதென்பது எமது போராட்டத்தை பின்தள்ளிவிடவே வழி கோலும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டி வருகிறார்கள் ஒரு தரப்பை அல்லது ஒரு நாட்டை மாத்திரம் நம்பி தமது இருப்பு, நகர்வுகள், எதிர்காலம் போன்றனவற்றை ஒப்படைப்ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
இந்தியாவின் நெருங்கிய நண்பனாகிவிட்ட கே.பி: அனலை நிதிஸ் ச. குமாரன் திகதி:27.08.2010 இந்தியா எதைச்சொல்லவேண்டுமென்று நினைக்கின்றதோ அதை கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் மூலமாக செயலில் செய்துகொண்டிருக்கின்றது இந்தியாவின் நடுவன் அரசு. இந்தியாவின் றோவின் கைப்பொம்மையாகிவிட்ட கே.பி பரபரப்பான தகவல்களை குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களைப் பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளதானது அடுத்த வருடம் இடம்பெற இருக்கும் தமிழ்நாட்டின் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றிவாகைசூட உதவுமுகமாகவே தான் இப்படியான தகவலை கே.பி மூலமாக விடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாட்டின் அரசியல் விமசகர்கள் கூறுகின்றார்கள். சமீபத்தில் கே.பியினால் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல் குறிப்ப…
-
- 1 reply
- 1k views
-
-
யாழ்ப்பாணத்தில் தலைவிரித்தாடும் வன்முறைகள்: யாழ். பல்கலை மாணவனுக்கு கத்திக்குத்து திகதி:27.08.2010 யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்து வரை சென்றதில் மாணவன் ஒருவன் படுகாயமடைந்தார். இந்தச் ஷம்பவம் நேற்று மாலை கலட்டிச் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இரண்டாம் ஆண்டு கலைப்பீட மாணவர் ஒருவரே மூன்றாம் ஆண்டு கலைப்பீட மாணவனான மன்னாரைச் சேர்ந்த லக்ஷ்மன் (வயது 25) என்பவரைக் கத்தியால் குத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த மாணவன் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அவஷர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். சங்கதி
-
- 2 replies
- 973 views
-
-
இன்று கூடிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த அவர்களின் மஹிந்தா சிந்தனவிற்கு தாம் ஆதரவு தெரிவிப்பது என முடிவெடுத்துள்ளனர். எனினும் யாப்பு சீர்திருத்தத்திற்கே தாம் ஆதரவு தெரிவிப்பதாகவும் ஹக்கீம் மூடி மறைத்து வருகின்றார். ஐக்கிய தேசியக்கட்சி மஹிந்தவுடன் பேசியதை தொடர்ந்து ஹக்கீம் அவர்களும் மஹிந்தவுடன் பேசி சில நன்மைகளை பெற முயன்றுள்ளார் என தெரியவருகின்றது. முஸ்லிம்களின் உரிமைகளினை பாதுகாக்கவே தாம் இவ்வாறு இணைந்துள்ளதாக கூறும் ஹக்கீம் முன்னர் கூட்டமைப்புடன் சேர்ந்து தாம் வடக்கு கிழக்கில் சிறுபான்மை இனங்களின் உரிமைக்காக பாடுபடப்போவதாக கூறியது நினைவிருக்கலாம். இவர்களை போன்ற ஆட்களை நம்பி எதுவும் செய்ய முடியாது என்பது தமிழர்களுக்கு தெரிந்த விடயமே சண்டையின் போதும் சரி …
-
- 0 replies
- 570 views
-
-
ராஜபக்சே வரலாம்! நான் வரக் கூடாதா? : பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி கேள்வி..! தமிழர்களைக் கொல்லும் ராஜபக்ஷவும் அவர் பரிவாரங்களும் இந்தியாவுக்குள் வரலாம்! விருந்துண்டு மகிழலாம். ஆனால், அழிக்கப்படும் என் தமிழ் இனத்துக்காகப் பேசும் என்னைப் போன்றவர்கள் இந்தியாவுக்குள் வர முடியாது. இவ்வாறு மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, கூறியுள்ளார். பேராசிரியர் இராமசாமி, `பினாங்கு ராமசாமி` என்றே அறியப்படுகிறார். மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர். இலங்கை இன அழிப்புப் போருக்குப் பின்னர் ஈழ மக்களுக்காக சர்வதேச அளவில் ஓங்கி ஒலிக்கும் கோபக் குரல்! செம்மொழி மாநாட்டுக்கு எதிராக இவர் கொளுத்திப்போட்ட பட்டாசுகள் வெடித்து அடங்குவ…
-
- 1 reply
- 566 views
-
-
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடம் இன்று கூடுகிறது. சிறீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு குறித்து கட்சியின் அதி உயர் பீடம் கட்சித் தலைமையகம் அமைந்துள்ள தாருசலாமில் இன்றைய தினம் கூடி ஆராயவுள்ளது. சிறீலங்கா ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து கட்சியின் உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையில் ரவூப் ஹக்கீமிற்கும், ஜனாதிபதிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், சந்திப்பின் போது ஜனாதிபதியும் ரவூப் ஹக்கீம் தனியாக ஓரு மணித்தியாலம் கதைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும்…
-
- 1 reply
- 378 views
-
-
நம்மிடமிருந்து எடுக்கப்பட்ட காணிகளைப் பற்றி நாம் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை ‐ பிரதியமைச்சர் விநாயகர்த்தி முரளிதரன்‐ 27 August 10 01:52 am (BST) நம்மிடமிருந்து எடுக்கப்பட்ட காணிகளைப் பற்றி நாம் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமைப்பின் மூலம் உங்களுக்கான எல்லா விதமான வசதிகளையும் ஏற்பாடு செய்து மழைக்காலத்திற்கு முன்னர் குடியமர்த்த வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். அதற்கு ஏற்ற வகையில் உங்களுக்கு ஏற்ற பிரதேசங்களை நீங்களே பதிவு செய்து கொள்ளுங்கள் என மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகர்த்தி முரளிதரன் தெரிவித்தார். சம்பூர் கிழக்கு மற்றும் மேற்கு, நவரெட்ணபுரம், கடற்கரைச்சேனை, கூனித்தீவு உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து …
-
- 2 replies
- 1k views
-
-
புலிகள் இயக்கத்தில் வேலை பார்த்தவர்களும் புகலிடம் கோரி நியூசிலாந்தில் விண்ணப்பிக்க சந்தர்ப்பம்! வெள்ளி, 27 ஆகஸ்ட் 2010 08:38 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு சொந்தமான சரக்குக் கப்பலில் பிரதம பொறியியலாளராக வேலை பார்த்த இலங்கைத் தமிழர் ஒருவருக்கு நியூசிலாந்தில் அகதி அந்தஸ்து கிடைக்கும் வாய்ப்புக் கிட்டி உள்ளது. புலிகளால் ஆயுதக் கடத்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட கப்பலில் வேலை பார்த்திருந்த இவர் 2001 ஆம் ஆண்டு நியூசிலாந்தை வந்தடைந்தார். அங்கு அகதி அந்தஸ்துக் கோரினார். நியூசிலாந்தின் அகதி அந்தஸ்துக்கான பரிசீலனைகள் சபை இவர் தொடர்பாக விசாரணை நடத்தியது. கப்பலின் ஆயுதக் கடத்தல் நடவடிக்கைகள் குறித்தும், புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு இரு நீரூந்து விசைப்படகுகளை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) மற்றும் கப்டன் மதன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
-
- 6 replies
- 720 views
-