Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் ஆயுத மோதலின்போது இடம்பெற்ற பாலியல் வல்லுறவுகள் குறித்து தகவல்கள் சேகரிக்கிறது -ஐ.நா! இலங்கையில் கடந்த கால ஆயுத மோதல்களின்போது இடம்பெற்ற பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தகவல்களை சேகரித்து வருகின்றது. ஐ.நா செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு ஆயுத மோதல்களின் போதான பாலியல் வன்செயல்கள் குறித்து ஆராய்ந்து வரும் சர்வதேச நிபுணரான மார்கொட் வோல்ஸ்ரொம் தலைமையிலான அணியினரால் இத்தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இலங்கை,மியன்மார், கொலம்பியா ஆகிய நாடுகளில் ஆயுத மோதல்களின்போது இடம்பெற்ற பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் குறித்து அவருடைய அணியினரால் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார். இவரது அணியால…

    • 0 replies
    • 594 views
  2. கிளிநொச்சி மாவட்டத்தில் ஊற்றுப்புலம் என்ற கிராமத்தின் பாடசாலையும் யுத்தத்தின் காயங்களும் அந்தப்பாடசாலையில் மீளவும் கற்கச் சென்றுள்ள மாணவர்களின் நிலமையும் புலம்பெயர் உறவுகளிடம் எதிர்பார்ப்பது என்ன.....? இந்த மாணவர்களுக்கு வெள்ளைச்சட்டைகள் தாருங்கள் கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் மாணவர்கள் புலம்பெயர் உறவுகளிடம் உதவி வேண்டி நிற்கிறார்கள்.யுத்தமும் வறுமையும் இந்தக் கிராமத்தையும் குழந்தைகளையும் தின்று முடிக்கிறது. உறவுகளே உங்களிடம் உதவியை எதிர்பார்க்கும் உறவுகளின் நிலைபற்றி ஊற்றுப்புலம் பாடசாலை அதிபரின் கருத்திலிருந்து…. இப்படியும் ஒரு பாடசாலை இருக்கிறதா ? கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் மாணவர்கள்…

    • 2 replies
    • 1.1k views
  3. தொடர மறுத்த வைரமுத்து வரிகள் ..... வைரமுத்து தலைமையில் தமிழகக் கலைஞர்கள் சிலர் அண்மையில் அவுஸ்த்திரேலியாவுக்கு கலைப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இங்குள்ள தமிழர்களில் 50% இற்கும் அதிகமானவர்கள் ஈழத்தமிழர்கள் என்பதும் அவர்களை நோக்கியே இவ்வாறான கலைப்பயணங்கள் நடைபெற்று வருகின்றன என்பதும் யாவரும் அறிந்ததே. இந்தக் கலைப்பயணத்தில் தலமையேற்று வந்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை அவுஸ்த்திரேலிய சமூக வானிலியான எஸ்.பி.எஸ் தமிழ் ஒலிபரப்புச் சேவை சார்பாக பிரபாகரன் எனும் அறிவிப்பாளர் பேட்டி கண்டிருந்தார். அப்பேட்டியை மூன்று பாகங்களாக எஸ்.பி.எஸ் வானொலி கடந்த மூன்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் ஒலிபரப்பி வந்தது.முதலிருவாரங்களிலும் அவர் தமிழ் பாடல்த்துறைக்குச் செய்த பணிகள், தேசி…

  4. Aug 9, 2010 / பகுதி: செய்தி / செம்பிறை அமெரிக்க முப்படையினர் ஸ்ரீலங்கா விஜயம் - அச்ச நிலையில் ஸ்ரீலங்கா அரசு அமெரிக்காவின் முப்படைகளையும் சேர்ந்த 40 நபர்கள் எதிர்வரும் 14 ஆம் நாள் சிறிலங்காவுக்கு செல்லவுள்ளனர். இவர்கள் அனைவரும் - சிறிலங்காவில் போர் இடம்பெற்ற பகுதிகளில் நடைபெறும் அபிவிருத்தி பணிகளில் - ஒரு வாரகாலம் ஈடுபடுவர் என்று கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றிலிருந்து இந்த நாற்பது நபர்களும் வருகை தரவுள்ளனர் என்றும் 22 ஆம் நாள் இவர்கள் அமெரிகா திரும்புவார்கள் என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. சீனாவை சேர்ந்த இரண்டு உயர்மட்ட அதிகாரிகள் அண்மையில் வன்னிக்கு இரகசிய விஜயம் மேற்கொண்ட…

    • 2 replies
    • 1.6k views
  5. ஈழத் தமிழர்களின் பேரவலங்களைப் புரிந்து கொள்வதற்கு ஆஸ்திரேலிய அரசு போதுமான முயற்சிகளை எடுக்கவில்லை என்று எதிர்வரும் ஆஸ்திரேலிய செனற் சபை தேர்தலில் கிறீன் கட்சியின் சார்பாகப் போட்டியிடுகின்ற யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண் பிராமி ஜெகன் குற்றஞ்சாட்டி உள்ளார். அவர் அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அதில் முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:- லேபர் கட்சியின் சில எம்.பி மார் ஈழத் தமிழர்கள் மீது அனுதாபம் கொண்டுள்ளார்கள் தான். ஆனால் ஈழத் தமிழர்களின் பேரவலங்களை விளங்கிக் கொள்வதற்கு லேபர் கட்சி போதுமான முயற்சிகளை எடுக்கவே இல்லை. ஆகவேதான் இலங்கை அரசு தமிழருக்கு எதிராக கட்ட…

  6. உலகின் முன்னணிப் பொப்பிசைப் பாடகர்களில் ஒருவரான புலம்பெயர் ஈழத் தமிழர் மாயா இலங்கை அரசு அவருக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கின்றது என்று குற்றஞ்சாட்டி உள்ளார். அவரின் வீடியோக்களை YouTube இல் இருந்து அகற்றி விட வேண்டும் என்று YouTube பாவனையாளர்களுக்கு இலங்கை அரசு கடுமையாக எச்சரித்து வருகின்றது என்றும் அவரின் வீடியோக்களை YouTube இல் இணைப்பவர்கள் பயங்கரவாதத்துக்கு உதவி, ஒத்தாசை வழங்கினர் என்கிற குற்றச்சாட்டில் சிறை வைக்கப்படுவர் என்று மிரட்டி வருகின்றது என்றும் அருட்பிரகாசம் மாதங்கி என்னும் சொந்தப் பெயர் உடைய மாயா பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். கடந்த 11 மாதங்களுக்கு மேலாக இலங்கை அரசினால் இந்நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு வருகின்றன என்றும் அவர் சுட்ட…

    • 1 reply
    • 1.4k views
  7. இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குறித்த விடயங்களைக் கையாள்வதற்காக சர்வதேச குழுவொன்றை அமைக்கும் நடவடிக்கையை, மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வரும், ஜனநாயக செயற்பாட்டுக்கட்சியின் பொதுச் செயலாளருமான பேராசிரியர் பி.ராமசாமி துரிதப்படுத்தியுள்ளார். சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரை உள்ளடக்கி இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த குழு, வரும் சில மாதங்களுள் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலைகள் தொடர்பான ஆதாரங்களை திரட்டி, ஐ.நா. சபையில் சமர்ப்பிக்கும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ராமசாமி தெரிவித்ததாக மலேசியாவிலிர…

    • 0 replies
    • 609 views
  8. நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நேற்று முன் தினம் இரவு அம்மறூட் ஆலய தேர்த் திருவிழாவின்போது இடம்பெற்ற சிறிய அசம்பாவிதத்தை நோர்வே அரசும், இலங்கை அரசின் கைக்கூலிகளும், மேற்குலக ஊடகங்களும் ஊதிப் பெருப்பித்து விட்டன என்று என்று நோர்வே மக்கள் அவையினர் விளக்கம் தந்துள்ளார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான இரு ஆயுதக் குழுக்களிடையே இடம்பெற்றதுதான் இந்த மோதல் என்கிற தொனியில் நோர்வே ஊடகங்களும்,இலங்கை அரசின் ஊடகங்களும், மேற்குலக ஊடகங்களும் திரித்து வேண்டுமென்று செய்தி வெளி யிட்டுள்ளன என்று நோர்வே மக்கள் பேரவையின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான வைத்தியக் கலாநிதி பஞ்சகுலசிங்கம் கந்தையா தமிழ்- சி.என்.என் இற்குத் தெரிவித்தார். அவர் தெரிவித்தவை வருமாற…

    • 1 reply
    • 1.3k views
  9. புலம்பெயர் தமிழ்த் தேசியப் செயற்பாட்டாளர்களை மிரட்டுகிறார் கே.பி! தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் இலங்கையின் புலனாய்வுத்துறையினர் தம்வசம் வைத்திருப்பதாக கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் முக்கிய தரப்பினர் கூட தமது உடைமைகளை விட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணனி தரவுகள் என்பவற்றை இலங்கையின் புலனாய்வுத்துறையினர் மீட்டுள்ளதாகவும், இந்த தரவுகளின் அடிப்படையில் விடுதலைப்புலிகள் தொடர்பிலான வெளிநாட்டு செயற்பாட்டாளர்கள், நிதி வழங்கியவர்கள் மற்றும…

    • 3 replies
    • 1.3k views
  10. தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி 17 நாளாக மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ள சிவந்தன், இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு உண்ணாநிலையுடன் தனது நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார். முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களில் சிவந்தனின் தந்தையும் அடங்குவதால், தனது தந்தையையும் கொல்லப்பட்ட அத்தனை தந்தைமாரையும் நினைத்து இன்று தான் உண்ணாநிலையை மேற்கொள்வதாக சிவந்தன் கூறினார். நேற்று 70 இற்கும் மேற்பட்ட மக்கள் இணைந்து நடக்க 11 மணித்தியாலங்களில் 40 கிலோமீற்றர் நடந்திருந்த சிவந்தன், இன்று 8 பேர் இணைந்து நடக்க தனது நடை பயணத்தைத் தொடருகின்றார். மேலும் சில பொதுமக்கள் இன்றும் இந்த மனிதநேய நடை பயணத்தில் இணைந்துகொள்ள இருக்கின்றனர். …

    • 0 replies
    • 538 views
  11. வெளிநாடு ஒன்றில் அரசியல் தஞ்சம் பெறுகின்றமைக்காக எம்.சி.சன்.சி கப்பலில் பயணித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களை யுத்தக் குற்றவாளிகளைப் போல் நடத்தக் கூடாது என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரி உள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் அமெரிக்கக் கிளையைச் சேர்ந்த உயரதிகாரியும்,இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்களில் மிகவும் கை தேர்ந்த நிபுணருமான ஜேம்ஸ் மக்டொனால்ட் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் உயரதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி த வொஷிங்டன் போஸ்ட் கடந்த 04 ஆம் திகதி செய்தி ஒன்றை பிரசுரித்திருந்தது. இந்த கப்பல் வட அமெரிக்கா நோக்கி வருகின்றது என்றும் அவ்வாறு வந்தால் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த அதிக…

  12. புலிகளுக்கு இராணுவத் தீர்வையும் மக்களுக்கு அரசியல் தீர்வையும் கொடுக்கப் போவதாக முன்னெடுக்கப்பட்ட சிங்கள மேலாதிக்க இலங்கை அரசின் போர் முடிவடைந்து ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது. போருக்குப் பிந்தைய உளவியல் துன்பங்களையும், உடல் துன்பங்களையும், சிவில் உரிமைகள் பறிக்கப்பட்ட துன்பங்களையும், சுய மரியாதை பறிக்கப்பட்ட துன்பங்களையும் நேரடியாக ஈழ மக்கள் இலங்கைத் தீவிற்குள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கைக்கு வெளியே புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களும், தமிழகத்தில் வாழும் மக்களும் ஏனைய நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் இலங்கை அரசு நடாத்தும் உளவியல் போரை எப்படி எதிர்கொள்வதென்று தெரியாமல் பல் வேறு குழுக்களாக சிதறி விட்டனர். சிலர் இந்தியாவின் தயவில் ஈழம் பெறலாம் என்றும்…

    • 0 replies
    • 848 views
  13. ”வளப் பற்றாக்குறைகளுக்கு மத்தியிலேயே அரசினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் முடிவில் வெற்றி கிடைத்து விட்டது.” இப்படி கூறி உள்ளார் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ. நகர அபிவிருத்தி அதிகார சபைத் தலைவராகவும் இவரே உள்ளார். இந்நிலையில் கொழும்பு நகரை தூய்மைப்படுத்தும் வேலைகளைப் பொறுப்பேற்று இருக்கும் ஒப்பந்த நிறுவனங்களை இவர் இன்று நேரில் அழைத்து உரையாடினார். டெங்கு அபாயம் கொழும்பில் புரையோடிக் காணப்படுகின்ற நிலையில் நகரத்தைத் தூய்மைப்படுத்தும் பணியை ஒழுங்காக இனி மேலாவது ஒழுங்காகச் செய்யத் தவறுகின்ற பட்சத்தில் கடும்நடவடிக்கை எடுப்பார் என்று இவர் எச்சரித்தும் உள்ளார். வளப் பற்றாக்குறை கார…

  14. மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவம் ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.காயம் அடைந்தவர்களில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இறந்து விட்டார்கள். இறந்தவர்கள் தாயும், மகளும் ஆவர். நோனா தல்ஹா(வயது 44),காத்திமா ரிமா( வயது 07) ஆகியோரே இறந்தவர்கள் ஆவர். ஏனையோர் ரம்புக்கணைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். ரம்புக்கணையில் இருந்து மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியூடாக புதுக் குடியிருப்புப் பிரதேசத்தை நோக்கி இந்த ஏழு பேரும் ஒரே ஓட்டோவில் புறப்பட்டு வந்திருக்கின்றனர். அப்போது கல் ஏற்றி வந்த டிப்பர் ஒன்றும் ,இந்த ஓட்டோவும் மோதுப்பட்டன. விபத்தில் முச்சக்கர வண்டி முற்றாக ச…

  15. செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி ஒருவர் தமது தற்போதைய நிலையினை எண்ணியதால் ஏற்பட்ட உளவியல் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். செஞ்சோலை மாணவி இரவீந்திரன் புஸ்மலர் ஜெயந்தி (சாளினி) என்பவரே உயிரிழந்தவராவார். மூன்று வயதாக இருக்கும் போது 1994ஆம் ஆண்டு செஞ்சோலையில் இணைந்து கொண்ட சாளினி தனது இறுதிக்காலம் வரையில் செஞ்சோலையிலேயே வாழ்ந்துவந்தார். செஞ்சோலை மாணவிகளிடையே கல்வி கலை மற்றும் விளையாட்டில் சாளினி முன்னணியில் விளங்கி வந்தார். செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த குறித்த மாணவி போர் மற்றும் அதன் பின்னான நெருக்கடிகள் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா ரம்பைக்குளத்தில் உள்ள டொன்பொஸ்கோ பெண்கள் சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு …

    • 6 replies
    • 1.1k views
  16. இலங்கையர் என்று சொல்லிக் கொள்வதில் அதிகம் பெருமை அடைவதாக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார். இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனத்தினால் நடத்தப்பட்ட விசேட கௌரவிப்பு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது முரளீதரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் ஓய்வு பெற்றதன் பின்னர் முத்தையா முரளீதரன் முதல் தடவையாக தொலைக்காட்சி ஊடகமொன்றில் தோன்றி ரசிகர்களுடன் நேரடியாக உரையாடினார். 30 ஆண்டு காலமாக நாட்டில் நீடித்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த ஜனாதிபதிக்கு தமது விசேட நன்றியை தெரிவிப்பதாக முரளீதரன் தெரிவித்துள்ளார். தமிழர், முஸ்லிம் மற்றும் சிங்களவர் என பிரிவினை பாராட்ட வேண்டிய அவசியம் கிடையாது என அவர் வலியுறுத…

    • 33 replies
    • 3.2k views
  17. தமிழகத்தில் 80 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அகதிகளாக வந்ததற்கு காரணம் இலங்கையில் தமிழர்கள் மீது நடைபெற்ற போராட்டத்திற்கு இந்திய அரசு ராணுவத்தை தார்மீக ரீதியாக வழங்கி உள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சேவும் இதை ஒப்பு கொண்டுள்ளார். இந்திய அரசு என்பது காங்கிரஸ் கட்சி மட்டும் அல்ல. தி.மு.க.வும் கூட்டணியில் உள்ளது. இலங்கை தமிழர்களை மத்திய அரசு கைவிட்டு விட்டது என்றும், இதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டிக்கிறது என்றும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் ராஜா கூறியுள்ளார். இதுகுறித்து தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை ராணுவத்தினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, கைது செய்யும் நடவட…

    • 0 replies
    • 529 views
  18. சிறிலங்கா அரசின் உயர்மட்டகுழு அடுத்த வாரம் இந்தியா பயணம் திகதி: 08.08.2010, அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையிலான மூன்று பேர் கொண்ட சிறிலங்கா அரசின் உயர்மட்டக்குழு அடுத்த வாரம் இந்தியாவுக்கு செல்லவுள்ளது. அமைச்சர் பசில் ராஜபக்ச, சிறிலங்கா அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரே இந்தக்குழுவில் இடம்பெறவுள்ளனர். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புதுடடெல்லி செல்லும் இந்தக்குழு இந்திய அரசின் உயர்மட்டப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது. இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு தொடர்பாக இந்திய அரசுக்கு விளக்கமளிப்பதுடன் வடக்கில், இந்தியா மேற்கொள்ளவுள்ள பல பில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டம் தொடர்பாகவும் இந்…

  19. முத்தையா முரளிதரனின் சாதனையின் போர்வையில் மறக்கடிப்பட்ட ஆதித் தீ கடந்த ஜூலை 22 இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுக்களை வீழ்த்தி மிகப் பெரும் சாதனையை நிலை நாட்டினார். பேரானந்தத்தில் வெறிபிடித்தவர்கள் போல மைதானத்துக்குள் குதித்த ரசிகர்கள், சிங்கக் கொடியை அசைத்தபடி முரளியின் பின்னால் ஓடினர். சிங்கக் கொடியின் பிண்ணனியில் சக விளையாட்டு வீரர்களின் தோள்களில் பயணிக்கும் முரளியின் புகைப்படங்கள் தேசத்தின் எல்லாப் பத்திரிகைகளையும் பூரணப்படுத்தின. தனது திறமைக்குக் களம் தந்த விளையாட்டினை, வெற்றிகரமான ஒரு சாதனையோடு முடித்துக்கொண்ட முரளி, முழு இலங்கைக்குமே பெருமையைத் தேடித் தந்த ஒருவரென பத்திரிகைகள் எழுதி எழுதி மகிழ்ந்தன. …

  20. Please find the email sent to Congressperson regarding the speech at Bhudhisht temple in Nevada. It is very useful email in finding justice for Tamils. Every part of the world , where politicians get involved with Sinhala /Bhudhist cermonies should be noted and we should ansure we have reached them out with a apropriate email. Mostly if we ignore these events , their they will be canvased once again with false news of Sri Lanka. It was clearly seen recently in London recently on a event "Festival of Cricket". The local polticians and Nihal Jayasinge (Fomer highcommisioner who did his best job by hiding Sri Lankan genocide in 2009) were invited to the event. …

  21. இலங்கை அரசின் தமிழினப் படுகொலை நடவடிக்கைகளுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் சபையில் வழக்குத் தாக்கல் செய்கின்றமைக்குத் தேவையான நடவடிக்கைகளை மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி முன்னெடுத்து வருகின்றார். அவர் இந்நோக்கத்துக்காக சர்வதேச குழு ஒன்றை அமைக்க உள்ளார். இச்சர்வதேச குழுவில் மனிதாபிமான அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், மனித உரிமைகள் ஆர்வலர்கள் போன்றோர் உள்வாங்கப்பட உள்ளனர். இக்குழு இன்னும் சில மாதங்களில் செயற்படத் தொடங்க உள்ளது. இலங்கை அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களை திரட்டும் பணியில் இது முதலில் ஈடுபட உள்ளது. திரட்டப்படும் ஆதாரங்களை வைத்து ஐ.நா.மனித உரிமைகள் சபையி…

    • 1 reply
    • 954 views
  22. மரம், செடி, கொடிகளுக்கும் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் நீண்ட அரசியல் உறவுண்டு. பேரினம் என்கிற பெரு விருட்சத்தில் பற்றிப் படரும் கொடிகளென்று, தமிழ்ப் பேசும் மக்களைக் குறிப்பிட்டிருந்தார் முன்னாள் பிரதமர் ஒருவர். அரச மரங்களை தமிழர் தாயகச் சந்து பொந்துகளில் நட்டு, தமது பூர்வீக நிலங்களென்ற இன்னமும் இறைமைச் சொந்தம் கொண்டாடுகின்றனர் பேரினவாதிகள். ஆனாலும், ஏதுமறியா மரங்களும், மனிதர்கள் உயிர்வாழ பகலில் பிராணவாயுவை வழங்கும் வள்ளல்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.இதேவேளை, சமுர்த்திப் பணியாளர் ஒருவரை பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா, மரத்தில் கட்டி வைத்த விவகாரம், மரங்களுக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்குமிடையே நீண்டு செல்லும் உறவினை வெளிப்படுத்தியுள்ளது.சமுர்த்திப் பணியாளர் மட்டுமல்ல, …

  23. இலங்கையில் நாடு முழுவதும் சுமார் 30,000 - 40,000 பேர் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றார்கள் என்று சுகாதாரக் கல்விப் பணியகம் அறிவித்துள்ளது. பணியகத்தின் ஊடக இணைப்பாளர் வைத்தியக் கலாநிதி சாந்த ஹெட்டி ஆராய்ச்சி இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- பாலியல் தொழிலில் தனிநபர்களும் ஈடுபட்டு வருகின்றனர். நிலையங்களும் இரகசியமாக இயங்குகின்றன.இதனால் துல்லியமான கணக்கெடுப்புகளை மேற்கொள்ள முடியவில்லை. எனினும் தேசிய பாலியல் தொற்றுநோய் மற்றும் எயிட்ஸ்கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளின்படி பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 30000 முதல் 40000 வரை இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. தற்போது மசாஜ் நிலையங்கள் என்பன போன்ற பெய…

  24. பொலனறுவை மாவட்டத்தில் உள்ள மூன்று புனர்வாழ்வு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் 3500 பேர் வரையானோர் மன அழுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்ப்ட்டுள்ளார்கள் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஐவர் அண்மைய நாட்களில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய முயற்சித்திருக்கின்றார்கள்.இருந்தாலும் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் காப்பாற்றப்பட்டு இருக்கின்றார்கள். அத்துடன் இவர்கள் இட நெருக்கடி, மலசல கூடப் பிரச்சினை, குடிதண்ணீர்ப் பிரச்சினை ஆகியவற்றையும் எதிர்நோக்குகின்றார்கள். இந்த முகாம்களை நேரில் சென்று பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று பாதுகாப்பமைச்சுச் செயலாளரிடம் தமிழ…

  25. இலங்கையில் கடந்த கால ஆயுத மோதல்களின்போது இடம்பெற்ற பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தகவல்களை சேகரித்து வருகின்றது. ஐ.நா செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு ஆயுத மோதல்களின் போதான பாலியல் வன்செயல்கள் குறித்து ஆராய்ந்து வரும் சர்வதேச நிபுணரான மார்கொட் வோல்ஸ்ரொம் தலைமையிலான அணியினரால் இத்தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இலங்கை,மியன்மார், கொலம்பியா ஆகிய நாடுகளில் ஆயுத மோதல்களின்போது இடம்பெற்ற பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் குறித்து அவருடைய அணியினரால் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார். இவரது அணியால் சேகரிக்கப்படும் தகவல்கள் ஐ.நா செயலாளர் நாயகத்துக்கும், பாதுகாப்புச் சபைக்கும் சமர்ப்பிக்கப்பட உள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.