ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143259 topics in this forum
-
Aug 10, 2010 / பகுதி: செய்தி / சேரா இத்தாலியிலிருந்து இலங்கை சென்ற யுவதி வெள்ளை வான் கும்பலினால் கடத்தல் அண்மையில் இத்தாலியிலிருந்து இலங்கைக்குச் சென்ற யுவதி ஒருவர் வெள்ளை வான் கும்பலினால் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வென்னப்புவ வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான அனுஷீகா மிலானி பீரிஸ் என்ற யுவதியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த யுவதி ஆறு நாட்களுக்கு முன்னர் இத்தாலியிலிருந்து இலங்கை சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் தேவாலயமொன்றிற்கு அருகாமையில் இருந்த போது வெள்ளை வான் கும்பலினால் குறித்த பெண் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வான் கொழும்புப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு …
-
- 3 replies
- 609 views
-
-
யாழ்.மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரச மற்றும் அரச சார்பாற்ற நிறுவனங்கள் உதவி, ஒத்தாசை வழங்க வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் கோரி உள்ளார். கோப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இவரது தலைமையில் பிரதேச செயலக த்தின் கூட்ட மண்டபத்தில் காலையில் இடம்பெற்றது. அங்கு தலைமையுரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு கோரினார். அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:- கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை சார்ந்த மூன்று உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதனால் நாம் யாழ் மாவட்ட அபிவிருத்தியில் கணிசமான அளவு பங்காற்றக் கூடிய நிலைமை உருவாகி உள்ளது. எமது வெற்றிக்காக உழைத்த அனைவரு…
-
- 1 reply
- 622 views
-
-
இந்த காணொளியை பாருங்கள் ஏற்கனவே நலிந்து போயிருக்கும் இவர்களிடம் கேட்கப்படும் கேள்விகள் 1 உங்களின் கலாச்சாரத்தை எப்பிடி வளர்க்க போகிறீர்கள் 2 உங்களின் சமுதாய மெசேஜ் என்ன இவ்வாறு கேட்கப்படும் கேள்விகள் தாங்கள் வேறு நாட்டவர்கள் போலும் தாங்கள் இதில் பங்கு இல்லாதவர்கள் போலும் இருக்குறது . இவர்களுக்கு வேண்டும் விடுதலை ஒரு நல்ல வாழ்க்கை அதை செய்வதைவிட்டு ஏற்கனவே நலிந்து போயிருக்கும் இவர்களிடம் இந்த சமுதாயத்துக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்பது முட்டள்த்தனமாக எண்ணத்தோன்றுகிறது.
-
- 2 replies
- 2k views
-
-
இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா? சுற்றி நிற்கும் பொடிகாட்டுகளுக்கு மத்தியில் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஸ்ரீதர் தியட்டரில் ஒரு சந்திப்பு. எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபனை இடிபட்டு உதைபட்டு லைனில் நின்று பார்த்த அதே தியட்டர் இன்று ஈ.பி.டி.பியின் அலுவலகம். அன்றும் மக்கள் படம் பார்க்க லைனில் நின்றார்கள். இன்றும் அமைச்சரைப்பார்க்க லைனில் நிற்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம் நிருபர்: வணக்கம் டக்ளஸ் அவர்களே! டக்ளஸ்: வணக்கம் நிருபர்: புலிகள் இப்போது இல்லை. நிம்மதியாக இருப்பதை உணருகிறீர்களா?. டக்ளஸ்: ஆமாம் ஆனால் விறுவிறுப்பு குறைந்து போய்விட்டது. புலிகள் இருந்தபோது ஸ்டண்ட இருந்தது. இப்போ சண்டைக்காட்சிகள் இல்லாத சினிமாப்படம் போல் இருக்கிறது. நிருபர…
-
- 9 replies
- 1.4k views
-
-
சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்லும் வழியில் விபத்தில் சிக்கி மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 75 இலங்கையர்களையும் பதிவு செய்யும் நடவடிக்கைகளை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகம் மேற்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் நோக்கில் 75 இலங்கையர்கள் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி படகொன்றில் பயணத்தை ஆரம்பித்தனர். இருந்தும் படகு விபத்தில் சிக்கியதையடுத்து மலேசிய கடற்படையினர் இவர்களைக் காப்பாற்றினர். இப்போது இவர்கள் கோலாலம்பூர் விமான நிலையத்துக்கருகில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அகதிகளுக்கான ஐ.நா.தூதரகம் இவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=8062:-75-&catid=54:20…
-
- 0 replies
- 665 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய பதவிகளை முன்பு வகித்திருந்தவர்களும்,ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தற்போது அடைத்து வைக்கப்பட்டிக்கின்றவர்களுமான ஈழ தம்பதிகளின் குடும்பம் ஒன்றுக்கு அந்நாட்டு அரச அதிகாரிகள் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய முன்வந்துள்ளார்கள். ஓசியானிக் வைக்கிங் கப்பலில் கடந்த ஒக்டோபர் மாதம் இரு பிள்ளைகளுடன் ஆறு மாத கர்ப்பிணியாக வன்னியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஆஸ்திரேலியாவுக்கு வந்து சேர்ந்தார். இவரும் இரண்டு பிள்ளைகளும் விமானம் மூலம் கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இவரது கணவர் இவருக்கு முன்பாகவே ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டு வந்து கிறிஸ்மஸ் தீவில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். இக்குடும…
-
- 0 replies
- 972 views
-
-
தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று 18வது நாளாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றார். இன்று காலையில் Villaines-en-Duemois என்ற இடத்தில் இருந்து ஆரம்பித்த நடை பயணத்தில் சிவந்தனுடன் 10 பேர் வரையில் இணைந்து நடப்பதுடன், இதுவரை 6 கிலோமீற்றர்கள் அவர்கள் நடந்துள்ளனர். Dijonநோக்கி இவர்கள் நடந்து செல்லுகின்றனர். நேற்று 43 கிலோமீற்றர்கள் நடந்த சிவந்தனுடன் 60 பேர் வரையில் இணைந்து நடந்திருந்தனர். இவர்களில் இளையோர்கள் பலர் காணப்பட்டதுடன், அவர்கள் அனைவரும் 43 கிலோமீற்றர்களும் முழுமையாக நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பரிஸ் நகரில் இருந்து 260 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிவந்தன், ஜெனீவாவை சென்…
-
- 0 replies
- 573 views
-
-
வரலாறு எம்மைச் சுற்றி தன்னை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது. அலையலையாய்ப் படிவுண்ட அதன் பக்கங்களுக்குள் ஒரு மீள முடியாத் துயரத்தின் சாட்சியாய் நாம் விசனித்திருக்கிறோம். ஒரு தேசம் தூர்ந்துகொண்டிருக்கிறது, எமதனைவரின் கனவுகளினூடு..... . தொடர்ந்தும் வரலாறு இந்தத் தருணத்தை எழுதிக்கொண்டிருக்கிறது. நாமனைவரும் எழுதிக்கொண்டிருக்கிறோம். இணையத்தின் மின்னதிர்வுகளின் வழி, பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானலைகள், தொலைக்காட்சிகளினூடு: சரி, பிழைகள் அலசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏமாற்றம், தோல்வி, கோபம், சந்தோஷம், கெக்கலிப்பு எல்லாவிதமான உணர்வுகளும் அரசியல் ஆய்வுகளினூடு வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்வதற்கு ஏதேனும் மீதமிருக்கிறதா என்ன? அரசியற் கட்டுரைகள் ஒ…
-
- 0 replies
- 690 views
-
-
Aug 10, 2010 / பகுதி: செய்தி / சேரா மஹிந்த - ரணில் அவசர சந்திப்பு! அடுத்த கட்ட பேச்சும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் அவசர சந்திப்பொன்று அலரிமாளிகையில் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான பீ.திகாம்பரம்,பிரபா கணேசன் ஆகிய இருவரும் அண்மையில்அரசில் இணைக்கப்பட்டமையால் எழுந்துள்ள நிலைமை குறித்தும், அடுத்த கட்டப் பேச்சுக்கள் குறித்தும் இச்சந்திப்பின்போது பேசப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்க, அக்கட்சியின் உயர்மட்டப் பிரதிநிதிகள் ஆகியோர் எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்தவை மீண்டும் சந்தித்துப் பேசுவார்கள் என்று இச்சந்திப்பில் முடிவு எட…
-
- 0 replies
- 383 views
-
-
இந்திய அரசு வடக்கில் முதற்கட்டமாகக் கட்டிக்கொடுக்கும் 1,000 வீடுகளுக்கான மதிப்பீட்டு அறிக்கை நேற்றுக் கையளிப்பு கொழும்பு, ஓக.10 வடக்கில் மீளக் குடியமர்த்தப்படும் மக்களுக்கு இந்திய அரசின் உதவியின் முதற்கட்டமாகக் கட்டிக் கொடுக்கப்படவுள்ள ஆயிரம் மாதிரி வீட மைப்புத் திட்டத்திற்கான முழுமையான மதிப்பீட்டு அறிக்கை நேற்று இந்திய அர சிடம் கையளிக்கப்பட்டது. வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி இத்தகவலைத் தெரிவித் தார். வட மாகாண அபிவிருத்தி மற்றும் மீள் குடியேற்றத்துக்கான செயலணி இந்த அறிக்கையை இந்திய அரசிடம் கையளித் தது என்றும் அவர் கூறினார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல் லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலக பிரிவுகளில் இந்த வீடுகள் க…
-
- 0 replies
- 432 views
-
-
கனகாம்பிகை ஆலயத் தேர் ஓடும் வீதியைஇராணுவ முகாமாக்கும் முயற்சியில் படையினர் எதிர்காலத்தில் மத முரண்பாடு ஏற்படலாம் என்கிறார் சரா எம்.பி. கிளிநொச்சி, ஓக. 9 கிளிநொச்சி, கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் தேர் ஓடும் வீதியின் பெரு மளவு பகுதியில் முட்கம்பிகளை அடைத்து இராணுவ முகாமாக்கும் முயற்சியில் படை யினர் ஈடுபட்டுள்ளனர். தமிழ் மக்களின், குறிப்பாக கிளிநொச்சி வாழ் மக்களின் வாழ்வோடு ஒருமித்திருக்கும் இந்த ஆலயத்தினை இராணுவ மயமாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் அரச மரங்களுக்கும் கோயில்களுக்கும் இடையிலான முரண் படுநிலை மத ரீதியான மோதல் தோன்று வதற்கு வித்திடப்பட்டுள்ளதோ என்ற சந் தேகம் எழுகின்றது. இவ்வாறு ஆதங்கத்தோடு கருத்து வெளியிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப…
-
- 0 replies
- 401 views
-
-
பேரறிவாளன் மடல்... ''மரணத்தை வெல்வேன்!'' 'தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்' என்ற புத்தகம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் என்கிற அறிவு இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார். நீதியரசர்கள் வி.ஆர்.கிருஷ்ணய்யர், எ.சுரேஷ், பத்திரிகையாளர் குல்தீப்நய்யார், அரசியல் தலைவர்கள் வைகோ, ராமதாஸ், நெடுமாறன் ஆகியோர் அணிந்துரை எழுதி இருக்கும் இந்தப் புத்தகம் தமிழக அரசியல் தளத்தில் பலத்த அதிர்வுகளைக் கிளப்பி இருக்கிறது. பேரறிவாளன் எழுதியிருக்கும் திறந்த மடலின் சில பகுதிகள் இங்கே... ''மதிப்பிற்குரிய அம்மா/அய்யா! வணக்கம்! நான், அ.ஞா.பேரறிவாளன். ராஜீவ் கொலை வழ…
-
- 0 replies
- 521 views
-
-
அரசும் அரச சார்பற்ற நிறுவனங்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தற்காலிக வீடு களை அமைத்தல், மலசல கூடங்களை அமைத் தல், வாழ்வாதார உதவிகளை வழங்குதல், அவ சர நிலைமைகளின் போது உதவுதல் ஆகிய பணி களைச் செய்வதற்கு மட்டுமே அரசாங்கம் அனு மதி வழங்கி உள்ளது. எமது சமூகம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள் ளது. அதனால் எங்கள் மக்களின் சமூக, கல்வி மற்றும் உளநலத் தேவைகள் அதிகரித்துள்ளன. ஆனால் அவற்றை நிறைவேற்றுவதற்கு குடா நாட்டின் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு நிதி வசதி வழங்குவதற்கு வெளிநாட்டு நிதி நிறுவனங் களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனாதிபதி விசேட செயலணியி னால் வழங்கப்படும் அனுமதியைக் காண்பித் தால் மட்டுமே வெளிநாட்டு நிதி நிறுவன அமைப் …
-
- 0 replies
- 448 views
-
-
ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிடப்பிரதி நிதியாக இருக்கும் பாலித கேகன்ன அவர்கள் செப்டெம்பர் மாதத்துடன் ஓய்வு பெறுகின்றார்.இவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்படமாட்டாது என அரசாங்கம் கூறியுள்ளது. காரணம் இவர் ஐக்கிய நாடுகளினால் அமைக்கப்பட்ட குழுவினை கலைக்க அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என்றும் மாறாக ஐக்கிய நாடுகள் பாலஸ்தீன போற்குற்றத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவில் தன்னை நியமிக்க அரசை கேட்காமல் ஒத்துக்கொண்டார் எனவும் அரசினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஆகவே அவரை செப்டெம்பர் மாதத்துடன் திரும்ப அழைத்து தூதுவர் பதவி வழங்க ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் பீரிஸ் அவர்களுக்கும் இவருக்கும் ஏற்பட்ட முரண்பாடும் காரணம் எனவும் கூறப்படுகின்றது. Eelanatham.net
-
- 0 replies
- 408 views
-
-
பி.பி.சி சிங்கள சேவையின் அண்டப் புழுகு திகதி: 09.08.2010 ஃஃ தமிழீழம் நேற்று மாலை நோர்வே சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் இடம்பெற்ற சிறு அசம்பாவிதத்தை அரசியல் பிரச்சனையாகப் பெரிதுபடுத்தும் தமிழ் ஊடகங்கள் பற்றி மக்கள் அவதானம் கொள்ளவும். நோர்வே சிவசுப்பிரமணியர் ஆலயத்திற்கும் தமிழீழ மக்கள் அவைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை நோர்வே தமிழீழ மக்கள் அவை ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கின்றது. தனியார் வாகனம் ஒன்றை உரிய இடத்தில் தரிப்பதற்கு மறுத்ததைத் தட்டிக்கேட்ட காவல் பணியில் ஈடுப்பட்டவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பை ஊதிப் பெரிப்பிக்கும் ஊடகங்களின் நம்பகத்தன்மை இச் செய்தியின் ஊடாக கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. காவல் பணியில் ஈடுப்பட்டவரில் முதன்மையானவர் பொறியியலாள…
-
- 9 replies
- 1.3k views
-
-
இன்று காலை எதிரணி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளாரஇந்த சந்திப்பில் இருதரப்பும் பேச்சுக்களை தொடர உடன்பட்டுள்னராம். ஆழும்கட்சிக்கு அண்மையில் மாறிய இரு எம்.பி க்கள் தொடர்பில் ரணில் தற்காலிகமாக மஹிந்தவுடனான பேச்சுவார்த்தையினை நிறுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது Eelanatham.net
-
- 1 reply
- 400 views
-
-
எப்படி தலைவன் ஆனாய்? 10/12/2009 -------------------------------------------------------------------------------- எப்படி தலைவன் ஆனாய்? எங்கள் நாட்டில் ஒருவர் தலைவனாக வேண்டுமென்றால் அவர்; ஒரு அரசியல் தலைவரின் வாரிசாக இருக்கவேண்டும், அல்லது அவரது குடும்பத்தில் ஒரு அரசியல் தலைவரின் விதவை இருக்கவேண்டும் ; குறைந்தபட்சம் ; இறந்துபோன ஒரு அரசியல் தலைவரோடு, உடன்கட்டை ஏறலாம் என்று நினைத்தேன் என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமான உறவு கொண்ட ஒருவராக இருந்திருக்க வேண்டும் ; இவையெதுவும் இல்லாவிட்டால், ஒரு சில திரைப்படங்களிலாவது கதாநாயகனாக நடித்திருக்க வேண்டும் ; மேலே சொல்லப்பட்டுள்ள எந்தவொரு தகுதியும் இல்லாத மனிதன் நீ. ஈழத்தமிழர் சுதந்திரமாக வாழ, சுயமரியாதையுடன் வாழ "தமிழ…
-
- 7 replies
- 2.3k views
-
-
இலங்கையில் ஆயுத மோதலின்போது இடம்பெற்ற பாலியல் வல்லுறவுகள் குறித்து தகவல்கள் சேகரிக்கிறது -ஐ.நா! இலங்கையில் கடந்த கால ஆயுத மோதல்களின்போது இடம்பெற்ற பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தகவல்களை சேகரித்து வருகின்றது. ஐ.நா செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு ஆயுத மோதல்களின் போதான பாலியல் வன்செயல்கள் குறித்து ஆராய்ந்து வரும் சர்வதேச நிபுணரான மார்கொட் வோல்ஸ்ரொம் தலைமையிலான அணியினரால் இத்தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இலங்கை,மியன்மார், கொலம்பியா ஆகிய நாடுகளில் ஆயுத மோதல்களின்போது இடம்பெற்ற பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் குறித்து அவருடைய அணியினரால் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார். இவரது அணியால…
-
- 0 replies
- 595 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் ஊற்றுப்புலம் என்ற கிராமத்தின் பாடசாலையும் யுத்தத்தின் காயங்களும் அந்தப்பாடசாலையில் மீளவும் கற்கச் சென்றுள்ள மாணவர்களின் நிலமையும் புலம்பெயர் உறவுகளிடம் எதிர்பார்ப்பது என்ன.....? இந்த மாணவர்களுக்கு வெள்ளைச்சட்டைகள் தாருங்கள் கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் மாணவர்கள் புலம்பெயர் உறவுகளிடம் உதவி வேண்டி நிற்கிறார்கள்.யுத்தமும் வறுமையும் இந்தக் கிராமத்தையும் குழந்தைகளையும் தின்று முடிக்கிறது. உறவுகளே உங்களிடம் உதவியை எதிர்பார்க்கும் உறவுகளின் நிலைபற்றி ஊற்றுப்புலம் பாடசாலை அதிபரின் கருத்திலிருந்து…. இப்படியும் ஒரு பாடசாலை இருக்கிறதா ? கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் மாணவர்கள்…
-
- 2 replies
- 1.1k views
-
-
தொடர மறுத்த வைரமுத்து வரிகள் ..... வைரமுத்து தலைமையில் தமிழகக் கலைஞர்கள் சிலர் அண்மையில் அவுஸ்த்திரேலியாவுக்கு கலைப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இங்குள்ள தமிழர்களில் 50% இற்கும் அதிகமானவர்கள் ஈழத்தமிழர்கள் என்பதும் அவர்களை நோக்கியே இவ்வாறான கலைப்பயணங்கள் நடைபெற்று வருகின்றன என்பதும் யாவரும் அறிந்ததே. இந்தக் கலைப்பயணத்தில் தலமையேற்று வந்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை அவுஸ்த்திரேலிய சமூக வானிலியான எஸ்.பி.எஸ் தமிழ் ஒலிபரப்புச் சேவை சார்பாக பிரபாகரன் எனும் அறிவிப்பாளர் பேட்டி கண்டிருந்தார். அப்பேட்டியை மூன்று பாகங்களாக எஸ்.பி.எஸ் வானொலி கடந்த மூன்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் ஒலிபரப்பி வந்தது.முதலிருவாரங்களிலும் அவர் தமிழ் பாடல்த்துறைக்குச் செய்த பணிகள், தேசி…
-
- 10 replies
- 3k views
-
-
Aug 9, 2010 / பகுதி: செய்தி / செம்பிறை அமெரிக்க முப்படையினர் ஸ்ரீலங்கா விஜயம் - அச்ச நிலையில் ஸ்ரீலங்கா அரசு அமெரிக்காவின் முப்படைகளையும் சேர்ந்த 40 நபர்கள் எதிர்வரும் 14 ஆம் நாள் சிறிலங்காவுக்கு செல்லவுள்ளனர். இவர்கள் அனைவரும் - சிறிலங்காவில் போர் இடம்பெற்ற பகுதிகளில் நடைபெறும் அபிவிருத்தி பணிகளில் - ஒரு வாரகாலம் ஈடுபடுவர் என்று கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றிலிருந்து இந்த நாற்பது நபர்களும் வருகை தரவுள்ளனர் என்றும் 22 ஆம் நாள் இவர்கள் அமெரிகா திரும்புவார்கள் என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. சீனாவை சேர்ந்த இரண்டு உயர்மட்ட அதிகாரிகள் அண்மையில் வன்னிக்கு இரகசிய விஜயம் மேற்கொண்ட…
-
- 2 replies
- 1.6k views
-
-
ஈழத் தமிழர்களின் பேரவலங்களைப் புரிந்து கொள்வதற்கு ஆஸ்திரேலிய அரசு போதுமான முயற்சிகளை எடுக்கவில்லை என்று எதிர்வரும் ஆஸ்திரேலிய செனற் சபை தேர்தலில் கிறீன் கட்சியின் சார்பாகப் போட்டியிடுகின்ற யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண் பிராமி ஜெகன் குற்றஞ்சாட்டி உள்ளார். அவர் அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அதில் முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:- லேபர் கட்சியின் சில எம்.பி மார் ஈழத் தமிழர்கள் மீது அனுதாபம் கொண்டுள்ளார்கள் தான். ஆனால் ஈழத் தமிழர்களின் பேரவலங்களை விளங்கிக் கொள்வதற்கு லேபர் கட்சி போதுமான முயற்சிகளை எடுக்கவே இல்லை. ஆகவேதான் இலங்கை அரசு தமிழருக்கு எதிராக கட்ட…
-
- 0 replies
- 784 views
-
-
உலகின் முன்னணிப் பொப்பிசைப் பாடகர்களில் ஒருவரான புலம்பெயர் ஈழத் தமிழர் மாயா இலங்கை அரசு அவருக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கின்றது என்று குற்றஞ்சாட்டி உள்ளார். அவரின் வீடியோக்களை YouTube இல் இருந்து அகற்றி விட வேண்டும் என்று YouTube பாவனையாளர்களுக்கு இலங்கை அரசு கடுமையாக எச்சரித்து வருகின்றது என்றும் அவரின் வீடியோக்களை YouTube இல் இணைப்பவர்கள் பயங்கரவாதத்துக்கு உதவி, ஒத்தாசை வழங்கினர் என்கிற குற்றச்சாட்டில் சிறை வைக்கப்படுவர் என்று மிரட்டி வருகின்றது என்றும் அருட்பிரகாசம் மாதங்கி என்னும் சொந்தப் பெயர் உடைய மாயா பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். கடந்த 11 மாதங்களுக்கு மேலாக இலங்கை அரசினால் இந்நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு வருகின்றன என்றும் அவர் சுட்ட…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குறித்த விடயங்களைக் கையாள்வதற்காக சர்வதேச குழுவொன்றை அமைக்கும் நடவடிக்கையை, மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வரும், ஜனநாயக செயற்பாட்டுக்கட்சியின் பொதுச் செயலாளருமான பேராசிரியர் பி.ராமசாமி துரிதப்படுத்தியுள்ளார். சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரை உள்ளடக்கி இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த குழு, வரும் சில மாதங்களுள் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலைகள் தொடர்பான ஆதாரங்களை திரட்டி, ஐ.நா. சபையில் சமர்ப்பிக்கும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ராமசாமி தெரிவித்ததாக மலேசியாவிலிர…
-
- 0 replies
- 610 views
-
-
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நேற்று முன் தினம் இரவு அம்மறூட் ஆலய தேர்த் திருவிழாவின்போது இடம்பெற்ற சிறிய அசம்பாவிதத்தை நோர்வே அரசும், இலங்கை அரசின் கைக்கூலிகளும், மேற்குலக ஊடகங்களும் ஊதிப் பெருப்பித்து விட்டன என்று என்று நோர்வே மக்கள் அவையினர் விளக்கம் தந்துள்ளார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான இரு ஆயுதக் குழுக்களிடையே இடம்பெற்றதுதான் இந்த மோதல் என்கிற தொனியில் நோர்வே ஊடகங்களும்,இலங்கை அரசின் ஊடகங்களும், மேற்குலக ஊடகங்களும் திரித்து வேண்டுமென்று செய்தி வெளி யிட்டுள்ளன என்று நோர்வே மக்கள் பேரவையின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான வைத்தியக் கலாநிதி பஞ்சகுலசிங்கம் கந்தையா தமிழ்- சி.என்.என் இற்குத் தெரிவித்தார். அவர் தெரிவித்தவை வருமாற…
-
- 1 reply
- 1.3k views
-