ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143232 topics in this forum
-
அடம்பிடிக்காமல் விசாரணைகளைக்கு அனுசரணை வழங்குமாறு சிறிலங்காவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்! போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர்குழுவின் செயற்பாடுகளுக்கு அனுசரணை வழங்குமாறு சிறிலங்காவினை அமெரிக்கா கோரியுள்ளது. ஐ.நா. வழங்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் பிரதிநிதி சுஸானா ரைஸ் தெரிவித்துள்ளார் என்று பி.ரி.ஐ. செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது. சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் அமைத்துள்ள நிபுணர்குழு தொடர்பாக சிறிலங்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அந்த நிபுணர்குழு விசாரணைகளை மேற்கொள்வதற்கு நாட்டிற…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐக்கிய நாடுகள் சபை இன்று மாலை குழு அமைத்துவிட்டதாக அறிவித்த பின்னர் மஹிந்த கடும் கோபமுற்றுள்ளார். கூடவே ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் வழங்குவதற்கு முன்னர் ஓம் என்று கூறியபின்னர் தற்போது எழுத்து மூல நிபந்தனைகளை வித்தித்துள்ளமையும் இந்த கோபத்திற்கும் குழப்பத்திற்கும் காரணமாம். இதனால் இரவோடு இரவாகவே தனது மாளிகைக்கு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்களை அழைத்த மஹிந்த தனது கோபத்தை தெரியப்படுத்தியுள்ளதுடன் இரவிரவாக மந்திராலோசனையும் நடாத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன? நீங்கள் ஐரோப்பிய ஒன்றியம் சலுகையினை நீடிக்கப்போவதென்று சொல்கின்றீர்கள் ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனைகளை விதிக்கின்றது. இந்த மாற்றம் ஏன்? என பீரிஸ் அவர்களை மஹ…
-
- 12 replies
- 1.9k views
-
-
ஐ.நா. நிபுணர் குழு தேவையற்ற தலையீடு அரசாங்கம் கடும் கண்டனம் இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க விசேட நிபுணர்குழுவை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருப்பதை கடுமையாக எதிர்த்திருக்கும் அரசாங்கம், இந்த நடவடிக்கையானது இறைமையுள்ள நாடொன்றின் மீதான தேவையற்ற தலையீடு என்று சாடியுள்ளது. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு நேற்று புதன்கிழமை அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;இலங்கை சார்பாக நிபுணர் குழுவொன்று ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதாக அவரது பேச்சாளர் 2010 ஜூன் 22 செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். இந்நியமனத்தை இலங்கை அரசாங்கம் வன்மையாக எதிர்க்கின்றது.…
-
- 5 replies
- 1k views
-
-
கொழும்பு, புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில் இன்று அதிகாலை இடம்பெற்ற கிரனைட் தாக்குதலில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Eelanatham
-
- 6 replies
- 1.5k views
-
-
அகாஷியின் கோணல் பார்வை வன்னியில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர் என்று இங்கு வந்த ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி கருத்து வெளியிட்டுச் சென்றிருக்கிறார். அதனைக் கேட்ட தும், வன்னி அகதிகள் விடயத்தில் அரசாங்கத்தின் பக்கம் நின்று அதற்குச் சார்பாகக் கருத்துக் கூற வேண்டும் என்பதனை நோக்காகக் கொண்டு தான் அவரது இலங்கை விஜயம் விடேசமாக அமைந் ததோ என்று எவருக்கும் எண்ணத் தோன்றும். யசூசி அகாஷி ஜப்பானின் பிரபல மூத்த ராஜதந்திரி. அந்த நாட்டின் விசேட தூதுவராகப் பல நாடுகளுக்கு விஜயம் செய்யும் அளவுக்கு அந்த நாட்டின் உயர் பதவியில் உள்ளவர். இந்த வகையில், எந்தத் தேசத்து அரசாங்கமும் தம்மைக் கொண்டு ஒரு நற்சான்றிதழ் பெறவே விரும்பும் என்பது அவருக்கு நன்றாகத் தெ…
-
- 1 reply
- 853 views
-
-
யாழ்.நகரில் பொசன் அலங்காரப் பந்தல் குடாநாட்டில் 30 வருடங்களின் பின் னர் மாபெரும் பொசன் அலங்காரப் பந்தல் நாளைமுதல் யாழ். நாகவிகாரையில் காட் சிப்படுத்தப்படுகிறது. யாழ்ப்பாணம், ஜூன் 24 குடாநாட்டில் 30 வருடங்களின் பின் னர் மாபெரும் பொசன் அலங்காரப் பந்தல் நாளைமுதல் யாழ். நாகவிகாரையில் காட் சிப்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக படைத்தரப்பு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளவை வருமாறு : மூன்று தசாப்தகால கொடூர யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இயல்பு வாழ்வை உறுதி செய்யும் முகமாக முப்பது வருடங்களுக்குப் பின்னர் முதல் முறை யாக யாழ். பிரதேசத்தில் சகோதர தமிழ் மக்கள் கண்டுகளிப்பதற்காக யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரையின் விகாராதிபதி…
-
- 7 replies
- 1.1k views
-
-
இலவச இன அழிப்புத் திருமணங்கள்: ராஜபக்ஷவின் அதிர்ச்சித் திட்டம்! சமீபகாலமாக ராணுவத்திலும், பாதுகாப்புப் பிரிவிலும் உள்ள சிங்கள இளைஞர்களைத் தமிழ்ப் பெண்களுக்கு மணம் முடித்து எங்குமே நிகழாத வக்கிரக் கொடூரத்தை ராஜபக்ஷே அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார். அவர்கள் கொஞ்சமும் உடன்படாத நிலையில் இலவச உதவிகளைக் காட்டியும், மிரட்டியும் கட்டாயத் திருமணத்தை சிங்கள ராணுவம் நிறைவேற்றி வருகிறது. இலங்கை ராணுவ முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் விடுதலைப் புலிகளில் 53 ஜோடிகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்துவைத்த அதிபர் ராஜபக்ஷேயின் மகன் நமால். ''தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளில் நாங்கள் காட்டும் அக்கறையைப் பாரீர்!'' என புது தம்பட்டம் அடிக்கத் துவங்கியிருக்கிறார். அந்தத் திரு…
-
- 4 replies
- 1.4k views
-
-
தீராத தேசியப் பிரச்சினைக்குத் தொடரும் “பயங்கரவாத ஒழிப்பு”, அணுகுமுறை ஈழுத்தமிழரின் போராட்டத்தை மழுங்கடிப்பதற்கு சூழ்நிலைக் கைதியான செல்வராசா பத்மநாதனைக் கொழும்பு பாவிப்பதிலிருந்து இலங்கையின் தீராத தேசியப் பிரச்சனையைப் பயங்கரவாதத்திற்கு எதிரான அணுகுமுறையையே சில சக்திகள் தொடர்ந்து பாவிக்க முயல்கின்றன எனத் தமிழ்வட்டார அவதானிகள் கூறுகின்றனர். வாஷிங்டனுக்கு பு.டு.பீலிஸ் சென்ற பின், ஒரு அரசியல் அஸ்திவாரமும் இல்லாது புலம்பெயர்ந்த மக்களை ஈர்க்கும் எண்ணத்துடன் கூடியதும், ராபர்ட் பிளேக் இன்னும் “சில பிரிவினைகள்” இருக்கின்றன எனக் கூறுவதுமாக எடுக்கப்பட்ட முயற்சிகள் ஆகும். கடந்த சிலவாரங்களுக்குள் பல வெளிநாட்டுப் பிரமுகர்கள் இலங்கைக்குச் சென்றதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இதி…
-
- 0 replies
- 806 views
-
-
தமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்: இலங்கை போர்க்குற்ற ஆதாரங்களை அனுப்பி வைப்போம் தமிழ் மக்களுக்கும், நாளிதழ்களுக்கும் ஒரு வேண்டுகோள்! இலங்கையில் போரின் போது நடைபெற்ற குற்ற செயல்களின் உண்மை நிலையை ஆராயும் நிபுணர் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நிறுவியுள்ளது. இக்குழுவுக்கு மின்னஞ்சல் வாயிலாக போர்க்குற்ற புகைப்படங்களையும், காணொளிகளையும், ஆவணங்களையும் அனுப்பி வையுங்கள். இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ரட்ணர், தென்னாபிக்காவின் உண்மை நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவில் பணியாற்றியவரும் அந்த நாட்டை சேர்ந்தவருமான யஸ்மின் சூகா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். http://www.…
-
- 1 reply
- 1.5k views
-
-
2ஆம் இணைப்பு‐கே.பி உட்பட 21 பேரை விசேட விமானத்தில் அரசாங்கம் வடக்கிற்கு அழைத்துச் சென்றுள்ளது ‐ விஜிதஹேரத் குற்றச்சாட்டு‐ 22 June 10 11:31 am (BST) கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தரும் அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான கேபி மற்றும் 20 வெளிநாட்டு தமிழ் பிரதிநிதிகள் அடங்களாக 21 பேர் வடக்கிற்கு விஜயம் செய்துள்ளதாக ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. இவர்களை அரசாங்கமே கொழும்பிலிருந்து அழைத்துச் சென்று பத்திரமாக கொழும்பிற்கு திருப்பி அழைத்து வந்துள்ளதாகவும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குற்றம் சாட்டுகின்றார். அரச விமானம் ஊடாக அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள் பலாலி முகாமிற்குச் சென்ற…
-
- 18 replies
- 2.4k views
-
-
4ஆம் இணைப்பு‐குமரன் பத்மநாதன் அரசாங்கத்திற்கு எதிரான போர் குற்றங்கள் தொடர்பில் பதிலளிக்கும் அரசாங்கத்தின் சாட்சியாளர் ‐ கெஹெலிய‐கே.பி தொடர்பாக சர்வதேசத்தில் காணப்படும் பிரச்சினைகளையே தீர்த்து கொள்ள வேண்டியுள்ளது‐ 24 June 10 09:08 am (BST) ‐விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதே வலையமைப்பின் முன்னாள் பொறுப்பாளர் கே.பி என்ற குமரன் பத்மநாதன் தொடர்பில் எதிர்காலத்தில் நாட்டின் சாதாரண சட்டத்தின் அடிப்படையில் செயற்படவுள்ளதுடன் தேவையேற்படின் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளினால் இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் சாட்சியாளராக கே.பி பயன்படுத்தப்படுவார் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெ…
-
- 0 replies
- 1.3k views
-
-
நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்..... விடுதலைப்புலிகளின் அறிக்கையை வெளியிட துணிவும் விடுதலை உணர்வும் ஏற்புடைத்தன்மையும் இல்லாலா வன்மம் கொண்ட தமிழ் தேசியத்தின் அழிவுக்கு காரணமான காஸ்...வின் ஊடகங்கள், சிறீலங்கா அரசின் பரப்புரை ஊடகங்களான தே. அ..வு போன்றவற்றின் சகோதர ஊடகமான சண்டே ஒப்சோவரில், மகிந்தாவின் ஆலோசனைக்குழுவினதும் பசில் இராஜபட்டாவின் அந்தரங்க செயலருமான ஆனந் பாலகிட்னர் தயாரித்து வெளியிட்ட செய்தியை முக்கியத்துவம் கொடுத்து விமர்சித்திருப்பது வேதனையானது தான். இதை பிரசுரித்த ஊடகங்களிடம் சில கேள்விகள் கே.பி துரோகிஇ .......? அது ஒருபுறம் இருக்கட்டும். சண்டே ஒப்சேவர் செய்தியை போட்டு மக்களை விடுதலைப்புலிகளின் மீது வெறுப்படைய, சந்தேகம் கொள்ள வைப்தன…
-
- 30 replies
- 4.6k views
-
-
சிறிலங்காவின் அமைச்சரவை கூட்டம் அடுத்த மாதம் கிளிநொச்சியில்! சிறிலங்கா அரசின் அமைச்சரவை கூட்டம் எதிர்வரும் ஜுலை மாதம் 14 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மாதாந்தம் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டங்களை இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்துவதற்கு அரச தலைவர் மகிந்த தீர்மானித்துள்ளதாகவும் - இதன்பிரகாரம், எதிர்வரும் ஜுலை 14 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் அமைமச்சரவை கூட்டத்தை நடத்துவதற்கு அரசு தீர்மானித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி ஈழமுரசு ____________________________________________________________________ இதனால் தமிழர்களுக்கு ஏதும் நன்மை உண்டா?
-
- 0 replies
- 710 views
-
-
Colombo வில் நடைபெரும் திரைபட விழாவில் பங்குபெரும் ஹிந்தி நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு எந்தவகையான தொழில் நுட்ப ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என்றும், அவர்கள் நடித்த திரைபடங்களை தமிழ் நாட்டில் திரையிட முடியாது என்றும் தென்னிந்திய திரை பட சம்மேலனம் அறிக்கை வெளியிட்டிருந்தது. தென்னிந்திய திரை பட சம்மேலனம் இதை நடைமுறை படுத்தவிடாமால் தடுக்க அணைத்துவகையான் அரசியல் அழுத்தங்களும் கொடுக்கப்படும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கலந்து கொண்ட நடிகர்களின் படங்கள் இங்கு வராதிருக்க நாம் கண்கானிப்பது அவசியம். மேரி படங்கள் வெளிவந்தள் ஆர்பாட்டங்கள் நடத்தப்படும். இதற்க்காக IIFA Colombo வில் கலந்து கொள்ளும் நடிகர்களின் முழுமையான பெயர் பட்டியல் ஒன்று தேவைபடுகிறது. ஊங்களுக்கு …
-
- 14 replies
- 3.1k views
-
-
கிளிநொச்சியில் அடுத்த அமைச்சரவைக் கூட்டம் 6/24/2010 10:41:22 AM அடுத்த அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறும் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில், அமைச்சரவைக் கூட்டங்கள் எதிர்வரும் காலங்களில் நடைபெறுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். _ நன்றி - வீரகேசரி
-
- 1 reply
- 772 views
-
-
150 மில்லியன் அமெரிக்க டொலருக்காக இலங்கையின் இறைமை அடகுவைக்க முடியாது – ஜனாதிபதி 24 June 10 01:40 am (BST) 150 மில்லியன் அமெரிக்க டொலருக்காக இலங்கையின் இறைமையை அடகுவைக்க முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜப்கஷ தெரிவித்துள்ளார். ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தை நீட்டிப்பது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆறு மாத காலத்திற்கு சலுகைத் திட்டத்தை நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் 15 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது. எனினும், இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக் கூட்டத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சலுகைத் திட்டம் தொடர்பி…
-
- 1 reply
- 1k views
-
-
வட மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி? சதி மெத லங்கா பத்திரிகை – தமிழாக்கம் GTN‐ 22 June 10 02:07 pm (BST) வடக்கு மாகாணத்தில் நடத்தப்படவுள்ள மாகாண சபைத் தேர்தலில் கே.பி என்ற குமரன் பத்மநாதன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிப்பதாக சதி மெத லங்கா பத்திரிகை தெரிவித்துள்ளது. கே.பிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்காக ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகின்றன. கே.பிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அண்மையில் தெரிவித்திருந்தார். 2009 ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு 07 ஆம் திகதி …
-
- 3 replies
- 1.8k views
-
-
http://votradio.com/teradio/help.htm
-
- 0 replies
- 1.6k views
-
-
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம் – தமிழீழ விடுதலைப் புலிகள் இவ் விடயம் 19. 06. 2010, (சனி), தமிழீழ நேரம் 18:26க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள், விசேட செய்தி தமிழக அரசு நடாத்தும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எதிர்வரும் யூன் 23 ஆம் நாள்முதல் 27 ஆம் நாள்வரை கோவையில் கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது. முன்னர் நடைபெற்று வந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்த ஆண்டு தமிழக அரசு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடாத்த முன்வந்துள்ளது. உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முதன்முதலில் கோலாலம்பூரில் 1966 ஏப்ரல் 16 – 23 நாட்களில் நடாத்தப்பட்டது. அதன் இரண்டாவது மாநாடு 1968 ஆம் ஆண்டு சனவ…
-
- 27 replies
- 4.2k views
-
-
சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு சார்பான இணையத் தளங்கள் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றன என சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று முல்லைத்தீவில் சிறிலங்கா இராணுவத் தலைமையகமொன்றைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பிரித்தானியாவில் இயங்கும் குளோபல் தமிழ் போரம், அமெரிக்காவில் நாடு கடந்த அரசாங்கக் குழு, என்பனவற்றுடன் நோர்வேயிலும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமிருப்பதாகவும், இவர்களது அநேகமான செயற்பாடுகள் இணையவழியில் ஒருங்கமைக்கப்படுவதாகவும். அவர் அங்கு மேலும் தெரிவித்தார். வெளியிலிருந்து ப…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஜி எஸ் பியை மேலும் நீடிக்க நிபந்தனை இலங்கை அரசாங்கம் தெளிவாக வரையறுக்கப்பட்ட மனித உரிமை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்று எழுத்து மூலம் உத்தரவாதம் தரும் பட்சத்தில் அந்த நாட்டுக்கான ஜி எஸ் பி ஏற்றுமதி வரிச்சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் அண்மைக் காலங்களில் வெளியான தகவல்கள் குறித்து தெளிவுபடுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை குறித்து பிபிசியிடம் பேசிய ஐரோப்பிய ஒன்றிய வணிக ஆணையத்தின் சார்பிலான பேச்சாளர் ஜோண் கிளன்ஸி அவர்கள், ''ஜி எஸ் பி பிளஸ் ஏற்றுமதி வரிச்சலுகையை ரத்துச் செய்யாமல் மேலும் ஒரு மட்டுப்படுத்…
-
- 6 replies
- 855 views
-
-
குடாநாட்டில் "பச்சை' மா கிலோ ரூ.63.50 பேக்கறி மாவின் விலை 73 ரூபா 50 சதம் குடாநாட்டில் விற்பனையாகும் பச்சை கோதுமை மாவின் விலையும் 10 ரூபா 50 சதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரி விக்கப்பட்டது. யாழ்ப்பாணம்,ஜூன்24 குடாநாட்டில் விற்பனையாகும் பச்சை கோதுமை மாவின் விலையும் 10 ரூபா 50 சதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரி விக்கப்பட்டது. கொழும்பில் பாவனையில் உள்ள "மில் பிறான்ட்' (பேக்கறி) கோதுமை மாவின் விலை 63 ரூபாவில் இருந்து 73 ரூபா 50 சதமாக நேற்றுமுன்தினம் நள்ளிரவில் இருந்து உயர்த்தப்பட்டிருந்தது. அந்த விலை உயர்வுக்கு ஏற்ப பாணின் விலை யும் 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருக் கிறது. யாழ்ப்பாணத்தில் தற்சமயம் பாவனை யில் உள்ள ""பச்சை'' கோதுமை மா 53 ரூபாவாக…
-
- 0 replies
- 728 views
-
-
-
- 0 replies
- 682 views
-
-
ஒருபுறத்தே, தமிழர் தாயகம் பவுத்த பூமியாக மாற்றப்பட்டு வருகிறது ... Colombo intensifies spread of Buddhism in North [TamilNet, Tuesday, 22 June 2010, 17:51 GMT] Buses carrying around two thousand Buddhist priests under heavy escort carrying a sacred statue of Buddha on a pilgrimage to Jaffna had passed Vavuniyaa Monday and entered Vanni main land through A9 road, sources in Vavuniyaa said. The buses, however, have not reached Jaffna until Tuesday evening and it is assumed that the Buddhist priests, on an urgent mission to spread Buddhism in the North, are engaged in some unannounced opening ceremonies of newly erected Buddhist Viharas in Vanni by the occupying Sri…
-
- 4 replies
- 1.8k views
-
-
http://www.yarl.com/articles/files/100622_jaffna_reporter.mp3 நன்றி: ATBC வானொலி - அவுஸ்திரேலியா
-
- 7 replies
- 1.4k views
-