ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
கொக்குளாய்ப் பகுதியிருந்து சுமார் 246 குடும்பங்களைச் சேர்ந்த 954 சிங்களவர்கள் இடம் பெயர்ந்து தமது சொந்தப் பகுதியான நீர்கொழும்புக்குச் சென்றுள்ளதாக நீர்கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 30ஆம் திகதி விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையே புல்மோட்டைக் கடற்பரப்பில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இக்குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. இவர்கள் இடம்பெயர்ந்து முதலில் புல்மோட்டைக்குச் சென்று அங்கிருந்து நீர்கொழும்பும்பைச் சென்றடைந்ததாக தெரியவருகிறது. தமது பாரம்பரிய பிரதேசமான கொக்குளாய் பகுதியிலிருந்து ஒரே இரவில் சிறிலங்கா படைகளால் 46 000 தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டு இந்தச் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்:ம…
-
- 4 replies
- 1.7k views
-
-
மைத்திரியின் மகள் சத்துரிகா பொதுத்தேர்தலில் போட்டி? [Wednesday 2015-04-15 10:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேன, எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் பூட்டான் பிரதமர் இலங்கை வந்திருந்தபோது அவரது மனைவியின் உதவிப் பெண்ணாக மைத்திரியின் மகள் செயற்பட்டார். இதனையடுத்தே இந்தச் செய்தி கசிந்துள்ளது. சத்துரிக்கா சிறிசேன, கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தனது தந்தையின் தேர்தல் பிரசார பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தார். தமது தந்தை பொதுவேட்பாளராக களமிறங்கியமை தொடர்பில், அப்போது அடிக்கடி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தும் வந்தார். தேர்தல் வெற்றியையடுத்து அவரது கணவரான திலின சுரஞ்ஜ…
-
- 2 replies
- 1.7k views
-
-
இலங்கைக்கு உதவுவது என்றால் என்ன பொருள் பிரதமரே? அழகாக வார்த்தைகளைக் கோர்த்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, உண்மையையும் குழி தோண்டிப் புதைத்து, மக்களையும் ஏமாற்றி, பிரச்சனையையும் திசைதிருப்பும் வல்லமை பெற்றவர் நமது பாரத நாட்டின் பிரமதராக வாய்த்துள்ள மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் ஆனாலும், காமன்வெல்த் போட்டிகளில் நடந்த மெகா ஊழல் ஆனாலும், அதில் தான் நேரடியாக சம்மந்தப்படவில்லை என்பதையும், அதற்கு அந்தத் துறை அமைச்சர் மட்டுமே பொறுப்பானவர் என்பதையும் நிரூபித்ததில் அவருடைய இந்த வார்த்தை சாமர்த்தியம் அகில இந்திய அளவில் ஊடகவியலாளர்கள் அனைவரையும் அபாரமாக குழப்பியது. அதிலிருந்து தெளிந்து அவர்கள் அடுத்த கேள்வி கேட்பதற்குள் அவ…
-
- 0 replies
- 1.7k views
-
-
திருமலையில் சீன முதலீட்டுடன் இரும்பு உருக்கு தொழிற்சாலை? திருகோணமலை கப்பற்றுறை பகுதியில் இரும்பு உருக்கு தொழிற்சாலை ஒன்றினை சீன முதலீட்டுடன் அமைப்பதற்கு 600 ஏக்கர் காணியினை வழங்க வேண்டும் என்று சர்வதேச முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மலிக் சமரவிக்கிரம விடுத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது திருகோணமலை கப்பற்றுறைப் பகுதியில் இரும்பு உருக்கு தொழிற்சாலையை சீன முதலீட்டுடன் அமைப்பதற்கு 600 ஏக்கர் காணி வழங்கப்பட வேண்டும் என்ற அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் மலிக் சமர…
-
- 17 replies
- 1.7k views
-
-
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய இராணுவத்தினரின் நடவடிக்கைகளால் சாதாரண மக்கள் பாதிகப்படுவது குறித்து சுவிற்சர்லாந்தின் வெளிநாட்டு அமைச்சர் மிஸ்ஸெலின் கால்மி ரே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளை ஸ்தாபனத்திடம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதேவேளை பர்மா இலங்கைத்தீவு ஆகியவற்றின் நிலைமைகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளை நிறுவனத்திடம் கண்டனம் செய்துள்ளார். இஸ்ரேலிய இராணுவத்தினரின் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தபடவேண்டும் என்று சுவிற்சர்லாந்து கோரியுள்ளது. இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளால் குழந்தைகள் உட்பட சாதாரண மக்கள் பாதிக்கபடுவதாக சுவிஸ் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் பலஸ்தீனிய ஏவுகணைத்தாக்குதலையும் திருமதி கால்மி ரே கண்டித்துள்ளார். மனித உரிமைகளை மீறும் இஸ்…
-
- 0 replies
- 1.7k views
-
-
-
சிறிலங்காவின் துணைப்படை ஆயுததாரி கொல்லப்பட்டார் சிறிலங்காவின் துணைப்படை ஆயுததாரி கொல்லப்பட்டார் பிள்ளையான் அணியைச் சார்ந்த துணைப்படை ஆயுததாரி அடையாளம் தெரியாத நபரால் இன்று பகல் சுட்டுக்கொhல்லப்பட்டார். உந்துருளியில் வந்த இரு ஆயுதம் ஏந்திய நபர்களால் அம்பாறை மாவட்டத்தின், திருக்கோயில் நகரத்தில் வைத்து துணைப்படை ஆயுதாரி கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் 23 வயது நிரம்பிய கனகரட்னம் யோகி என அடையாளம் காணப்பட்டுள்ளார். http://www.pathivu.com/
-
- 0 replies
- 1.7k views
-
-
புலிகளுக்கு தாலாட்டு பாடும் கருணாநிதி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜெயலலிதா கண்டனம் 1/4/2008 7:22:45 PM வீரகேசரி இணையம் - தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு தாலாட்டுப் பாடும் முதல்வர் கருணாநிதி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காது மௌனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது என அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இன்று முன்தினம் நடைபெற்ற அ.தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த உரையின்போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நக்சலைட் தீவிரவாதிகள் , தேனி மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் புகுந்து வருகிறார்கள். தீவிரவாதிகளும் தமிழகத்தை தான் தலைமையிடமாக மாற்ற முயற்சிக்கிறார்க…
-
- 4 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ திடீர் சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சைக்காக அவசரமாக வெளிநாடு ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இது குறித்த தகவல்களை வழங்க அரசாங்கத் தரப்பினர் மறுத்து வருகின்றனர். நேற்றையதினம் ஜனாதிபதி மாளிகையில் இருந்து உலங்கு வானூர்தி ஒன்றில் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து விசேட விமானம் ஒன்றின் மூலம் வெளிநாடு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாத நோய் ஏற்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் அவர் அமெரிக்காவுக்கே அழத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந…
-
- 34 replies
- 1.7k views
-
-
அனைத்து கட்சி குழுக் ஒன்றுகூடலில் இருந்து கருணா குழுவினர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சிறிலங்கா துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான ரி.எம்.வி.பி பிரதிநிதிகள் யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகின்றது. அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தபோது பிரசன்னமாயிருந்த கருணா குழுவின் இரு பிரதிநிதிகளால் குழப்பமடைந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு, அக்கட்சியின் உண்மையான தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் யாரென்பதை அறியத்தருமாறு தேர்தல்கள் செயலகத்திடம் கோரியது.ரி.எம்.வி.பி கட்சியின் தலைவர் நந்தகோபால் எனவும், பொதுச் செயலாளர் கைலேஸ்வராஜா எனவும் தேர்தல்கள் செயலகம் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த கருணா…
-
- 2 replies
- 1.7k views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவளை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 அம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்றிரவு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இளைய சகோதரரான ரியாஜ் பதியூதீன் புத்தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் சகோதரருக்கு மேலதிகமாக உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/80010
-
- 18 replies
- 1.7k views
-
-
எண்பது வயது நிரம்பிய மூதாட்டி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாத ஒரு தாய்க் கிழவி, மன நிலையும் கூட அத்தனை கட்டோடு இல்லாத ஒரு முதிர் வயதுப் பெண்மணி, இவரால் ஒரு தேசத்திற்கு என்ன சீர்குலைவு ஏற்படப் போகிறது, மன்மோகனும் அமெரிக்க நிறுவனமும் போட்டுக் கொண்டிருக்கிற அணு உலைச் சீர்கேடுகளை விடவும் இந்த வயதான தாய்க் கிழவியால் சீர்குலைவு ஏற்படுமா? கருணாநிதியும் அவரது குடும்பமும் செய்த ஸ்பெக்ட்ரம் ஊழலை விடவும் இந்தத் தாய்க் கிழவியால் சீர்குலைவு ஏற்படுமா? I P L கிரிக்கெட் விளையாட்டு என்கிற பெயரில் நடைபெறும் திரை மறைவு ஊழல்களை விடவும் இந்தத் தாய்க் கிழவியால் இந்திய தேசியத்தின் இறையாண்மைக்கு இழுக்கு வந்து விடுமா? உலகக் குடி உரிமைச் சட்டங்கள் யாவற்றிலும் மருத்துவ உதவி கேட்டு வர…
-
- 4 replies
- 1.7k views
-
-
இந்த பிஞ்சு குழந்தையை பாருங்கள்.இப்படியொரு வியாதியால் மரணிக்கும் 49 வது குழந்தை.வன்னியில் இருந்து மாண்டவர் போக தப்பிவந்தவர்கள்.வவுனியாவை வந்தடைந்து 15 நாட்களில் எஞ்சியிருந்தவர்களை பார்க்கவோ என்னவோ பூமியில் ஜனனித்தது.தற்போது கிட்டதட்ட இரண்டரைவயசு.காய்சல் வந்தது இரத்த பரிசோதனையின் பின் இரத்த புற்று நோயாக இருக்குமோ என தீர்மானித்த டாக்டர் வவுனியாவிலிருந்து கொழும்புக்கு அனுப்பிவைத்தனர்.அங்கு டாக்டர்கள் குழந்தையின் உன்மை நிலையை பரிசோதனைகளின் முன்பே தெரிந்துகொண்டுள்ளார்கள்.காரணம் வன்னியில் இருந்து வந்தவர்கள்.இருந்தாலும் பிள்ளைக்கு உடனடியாக இரத்தம் மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டது.அதற்கிடையில் காலன் அணைத்துவிட்டான். பின்பு கிடைத்த தகவல்:- பெயர் குறிப்பிடாத வைத்திய அதிகாரி ஒருவர…
-
- 2 replies
- 1.7k views
-
-
மானுடத்திற்கு பணியாற்ற நமக்கும் ஒரு வாய்ப்பு!! கையெழுத்து இடுங்கள், தலையெழுத்தை மாற்றுங்கள்!! 0:07 / 3:09கோடிக்கணக்கான கையெழுத்தாக இதை மாற்றுவோம் | SEEMANISM | Support Australia MP Hugh McDermott https://www.change.org/p/mp-hugh-mcdermott-we-demand-that-hugh-mcdermott-sustain-his-support-for-the-australian-tamil-community
-
- 22 replies
- 1.7k views
-
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இலங்கை விமானப் படை நேற்று முன்தினம் (21) முதல் பலத்த பாதுகாப்பு வழங்கி வருவதாக பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மூலம் இதுவரையில் இலங்கை அரசியலின் பிரபுக்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக “தினமிண” சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் (21) பிற்பகல் 2.25 க்கு முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இந்திய விமான சேவையில் ஏ.ஐ-272 விமான சேவையில் இந்தியாவின் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளார். இதேவேளை, நேற்று முன்தினம் (21) இரவு 11.15க்கு முன…
-
-
- 25 replies
- 1.7k views
-
-
தாயக விடுதலைக்காகப் போராடி மடிந்த மாவீரர்களின் நினைவு வாரம் இன்று முதல் அனுஷ்டிக்கப்படுகிறது. மாவீரர் நாளை நினைவுகூருவதற்கு புலம்பெயர் தேசங்களில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளினால், தாயக விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப் போன மாவீரரகளுக்காக ஆண்டுதோறும் காரத்திகை மாதம் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையில் மாவீரர வாரம் நினைவுகூரப்பட்டு வருகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப் பகுதி வரையில் ஈழத்திலும், புலத்திலும் மாவீரர வாரம் நினைவுகூரப்பட்டது. ஆனால் ஈழத்தில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர புலம் பெயர தேசங்களில் மாத்திரமே மாவீரர் வாரம் நினைவுகூரப்பட்டு வருகின்றது. அந்த வகையில் புலம் பெயர்த் தமிழரகள் …
-
- 18 replies
- 1.7k views
-
-
சுவீகரிப்பு சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணக்கமானது: உயர் நீதிமன்றம் குறைந்த செயற்பாடுடைய நிறுவனங்கள் பயன்பாடு குறைந்த சொத்துக்களை சுவீகரிக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணக்கமானது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார் இதனால் சாதாரண பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றம் அங்கீகரிப்பதன் இதை சட்டமூலத்தை சட்டமாக்க முடியும். இதற்கு மூன்றில்இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவையில்லை. http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/30523-2011-11-08-08-08-47.html சுவீகரிப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு செயற்பாடு குறைந்த நிறுவனங்கள் பயன்பாடு குறைந்த சொத்துக்களுக்கு புத்துயிரளித்தல் சட்டமூலம் பிரதமர் டி.எம். ஜ…
-
- 9 replies
- 1.7k views
-
-
Obama greetings to Rajapaksa disappoint Tamils [TamilNet, Tuesday, 03 February 2009, 15:36 GMT] While Eezham Tamils all over the world observe a Black Day on the occasion of Sri Lankan Independence Day on February 4, US President Barack Obama's greetings to the Sri Lankan President that hint integrity of Sri Lanka is viewed by Tamil circles as hurting the democratic aspirations of Tamils. The full text of President Obama’s letter follows: Dear Mr. President: As the people of Sri Lanka and Sri Lankan origin around the world celebrate National Day on February 4, I send my warmest greetings and wishes to you on behalf of the people of the United States. …
-
- 2 replies
- 1.7k views
-
-
பாலச்சந்திரன் படுகொலை மனதை பாதித்துவிட்டது: ராகுல் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் கொலை உலகத்தை உலுக்கியது போலவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மனதையும் பாதித்துவிட்டது என்று இந்திய ஊடகங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக தலைவர்களை டெல்லியில் சந்தித்த அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி, பாலச்சந்திரன் படுகொலை உலகத்தை உலுக்கியது போலவே எனது மனதையும் பாதித்து விட்டது என உருகிப் போய் சொன்னாராம். அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் இலட்சக்கணக்கான மக்கள் அந்த நாட்டு ராணுவத்தால் ஈவு இரக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். சுதந்…
-
- 8 replies
- 1.7k views
-
-
நாம் எப்போதும் இந்திய அரசையும் அரசியல்வாதிகளையும் நம்பக்கூடாது. இது அடுத்த உதாரணம் http://thatstamil.oneindia.in/news/2006/12/19/lanka.html
-
- 2 replies
- 1.7k views
-
-
1) ரட்ணசிறி விக்ரமநாயக்க உள்நாட்டு நிர்வாகம் 2) அநுர பண்டாரநாயக்க தேசிய மரபுரிமைகள் 3) டி.எம்.ஜயரட்ண பெருந்தோட்டக் கைத்தொழில் 4) நிமால் சிறிபால டி சில்வாசுகாதாரம் மற்றும் போஷாக்கு 5) மங்கள சமரவீரதுறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து 6) ஏ.எச்.எம்.பௌசிபெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளத் துறை 7) ஜெயராஜ் பெர்னாண்டோப்புள்ளே நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி 8) மைத்திரிபால சிறிசேன விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் 9) சுசில் பிரேமஜயந்த கல்வி 10) கரு ஜயசூரிய பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் 11) ஆறுமுகம் தொண்டமான் இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி 12) ரவூப் ஹக்கீம்தபால் தொலைத் தொடர்பு 13) தினேஷ் குணவர்த்த…
-
- 5 replies
- 1.7k views
-
-
ஹம்பாந்தோட்டையில்... சீனாவின் பெயரைக் காட்டும், கட்டடம் ‘சீனா’ என்ற வார்த்தையின் வடிவத்தில் ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள ஒரு கட்டடத்தைக் காட்டும் செயற்கைக்கோள் படம் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவல – சூரியவெவ வீதியில் அமைந்துள்ள சீனாவின் இலங்கை துறைமுக சேவையால் நிர்வகிக்கப்படும் கட்டடமொன்றே இவ்வாறு ‘சீனா’ என்ற வார்த்தையின் வடிவத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வரைபடங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இலங்கையில் பல இடங்களில் உள்ள வீதியைக் குறிக்கும் பெயர்ப்பலகையில் சீனா மொழியில் எழுதப்பட்டமை குறித்து சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில், தற்போது இந்த விடயம் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது…
-
- 12 replies
- 1.7k views
-
-
30.04.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு தற்காலிக முகவரி: http://www.yarl.net/video/video_005.html
-
- 0 replies
- 1.7k views
-
-
வெளிமாவட்டங்களைச் சோந்த தமிழர்கள் கண்டியிலிருந்து வெளியேறவேண்டும். 09.07.2008 / நிருபர் எல்லாளன் எதிர்வரும் 17ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ள எசல பெரகர பௌத்த வழிபாட்டுக்கு முன்னேற்பாடாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வெளிமாவட்டங்களிலிருந்து சென்று கணடியில் தங்கியுள்ள தமிழ் மக்களை தமது சொந்த இடங்களுக்கு செல்லுமாறு சிறிலங்கா பொலிசார் அறிவித்தல் விடுத்துவருகின்றனர். http://www.sankathi.com/
-
- 4 replies
- 1.7k views
-
-
பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் 24 மணிநேரம் படையினர் பாரிய ஒத்திகை. யாழ். குடாநாட்டில் வலிகாமம் வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு முதல் நேற்று இரவு வரை இராணுவத்தினர் போர் ஒத்திகையொன்றில் ஈடுபட்டிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வலிவடக்கில் பலாலியை அண்டிய தொண்டமனாறு கடல்நீரேரிப்பகுதி மற்றும் வளலாய் கட்டுவன் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று இரவு வரை சரமாரியமான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் குண்டுச் சத்தங்கள் கேட்ட வண்ணமிருந்ததாக இப்பிரதேசங்களையண்டிய பகுதிகளிலுள்ள மக்கள் தெரிவித்தனர். இராணுவத்தினர் மேற்கொண்ட போர் ஒத்திகையின் போது ஏற்பட்ட பாரிய சத்தங்களே இவையெனத் தெரியவந்த…
-
- 2 replies
- 1.7k views
-