ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
இராணுவம் புகைப்படம் எடுப்பதால் எமது போராட்டம் நின்றுவிடாது கேப்பாப்புலவு மக்கள் உறுதி (கே .குமணன் ) இராணுவத்தினர் புகைப்படம் எடுப்பதாலோ எம்மை மிரட்டுவதாலோ நாம் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் தொடர்ந்து எமது போராட்டம் எமது மண்ணில் கால்பதிக்கும் வரை தொடரும் என்றும் போராட்டத்திலீடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்கவேண்டுமெனக் கோரி கடந்த 17 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலை…
-
- 1 reply
- 321 views
-
-
விமல் வீரவன்சவிற்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு! அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது. ‘Dampal Daruwo’ என்ற தேசிய அமைப்பினால் இவ்வாறு முறைப்பாடு செய்யப்படவுள்ளது. புகையிலை, ஆல்கஹால் ஆணைய சட்டத்தின் விதிமுறைகளை மீறும் வகையில் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவ்வாறு முறைப்பாடு செய்யப்படவுள்ளது. அண்மையில் அமைச்சர் வீரவன்ச தலைமையில் கறுவாபட்டை சிகரெட் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தது. இதன்போது அமைச்சர் விமல் வீரவன்ச அறிமுகம் செய்யப்பட்டிருந்த குறித்த சிகரெட்டை வாயில் வைத்திருந்தமை பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்தும் கண்டனங்க…
-
- 0 replies
- 404 views
-
-
மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தார் சிவமோகன் எம். பி. கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் தமது நிலங்களை விடுவித்து தருமாறு கோரி மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பாராளுமன்றத்துக்கு செல்லாது மக்களோடு உணவுதவிர்ப்பு போராட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஈடுபட்டுள்ளார். புதுக்குடியிருப்பு புதுமாத்தளன் வீதியில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று பத்தொன்பதாவ…
-
- 0 replies
- 194 views
-
-
இலங்கை இராணுவத்திடமிருந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்தும் இந்திய மத்திய அரசாங்கம் பயங்கரவாதத்தை எவ்வாறு ஒழிப்பது தொடர்பில் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகச் செயலாளர் பியசிறி விஜயநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்லயில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புத்த பொருமான் பிறந்த பூமியான புத்தகாயவில் உள்ள மகாபோதியில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலானது உலகத்தில் உள்ள பௌத்தர்களுக்கே கவலையளிக்கும் செயலாகவுள்ளது. இது உலகெங்கிலும் வாழும் பௌத்தர்களின் பாரம்…
-
- 1 reply
- 359 views
-
-
ஐந்து மாணவர் உள்ளிட்ட பதினொரு பேர் கடத்தல் விவகாரம் இரு கடற்படை வீரர்கள் சி.ஐ.டி.யினரால் கைது (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்ட இரு கடற்படை புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைதுசெய்யப்பட்டனர். நேற்றுமுன்தினம் இரவு முதல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக்கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியும் சிறப்பு விசாரணையாளருமான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா தலைமையிலான பொலிஸ் குழு முன்னெடுத்த விசாரணையை அடுத்து இவர்கள் இருவரும…
-
- 0 replies
- 172 views
-
-
2019 இல் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் தலைமை சூத்திரதாரிகளாக கைது செய்யப்பட்டிருக்கின்ற இரண்டு மௌலவிகளின் பெயர்களை அண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அவர்கள் அறிவித்திருந்தார்.ஆனால் அந்த இருவரும் அதன் சூத்திரதாரிகள் அல்ல என்றும், உண்மையான சூத்திரதாரிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்றும், குறித்த நபர்கள் தனக்கு தெரியும் என்ற ரீதியில் கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார்.அதாவது அரசாங்கம் அறிவித்த இருவரது பெயர்களையும் நிராகரிப்பதகவே அவரது அறிக்கை அமைந்திருந்தது.அதேநேரம் நேற்று அதாவது 18.04.2021 அன்று ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நினைவுச்சின்னத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் உரை நிகழ்த்தும்போது “”தங்கள் அரசியல் சக…
-
- 1 reply
- 391 views
-
-
ரிஷாத், ரியாஜ்ஜின் மனைவிமார் மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்ட விரோதமானது என குறிப்பிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறையிடப்பட்டுள்ளது. ரிஷாத் பதியுதீனின் மனைவி, சிஹாப்தீன் ஆய்ஷா, ரியாஜ் பதியுதீனின் மனைவி பாத்திமா இஷ்ரத் ஆகியோர் சட்டத்தரணி ஆர்ணல்ட் பிரியந்தன் ஊடாக இந்த முறைப்பாட்டை நேற்று செவ்வாய்க்கிழமை முன்வைத்துள்ளனர். கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 3.20 மணிக்கு கொழும்பு 7, பெளத்தாலோக்க மாவத்தையில் உள்ள வீட்டில் வைத்து தனது கணவரான ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி …
-
- 0 replies
- 231 views
-
-
சிறீலங்காவின் இனப்படுகொலையில் இருந்து உயிர்தப்பிய தமிழ் மக்களில் 50 ஆயிரம் பேருக்கு இந்தியா வீடு கட்டிக்கொடுக்கப்போவதாகக் கூறப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை ஒரு சில வீடுகளே கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. கட்டிக்கொடுக்கப்பட்ட ஒரு சில வீடுகளும் இடிந்து விழுந்து, அதன் கட்டுமானத் திறனை வெளிப்படுத்தி தமிழர்களை அச்சப்படுத்தியுள்ள நிலையில், இந்த வீட்டுத் திட்டத்தில் தமிழர்களைவிட போரில் பாதிக்கப்படாத முஸ்லீம்களும் சிங்களவர்களும் அதிகளவில் அடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது முல்லைத்தீவு, கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலர் பிரிவில் காணிகளே இல்லாத 450 முஸ்லிம் குடும்பங்களுக்கு இந்திய வீட்டுத்திட்டமும் கூடவே காணியும் வழங்கப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது. …
-
- 4 replies
- 745 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவிடம் தற்போது விசாரணை முன்னளா் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் அங்கு ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில், மஹிந்த ராஜபக்ஷவின் விளம்பரங்களை காட்சிப்படுத்தியமையால், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட நஸ்டம் குறித்த விசாரணைகளுக்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=89569
-
- 0 replies
- 191 views
-
-
புலிகளுக்கு எதிரான போரின் போது வேவு பார்த்தது இந்திய விமானம் – ஒப்புக்கொள்கிறது இந்தியா விடுதலைப் புலிகளுடன் போர் நடந்து கொண்டிருந்த போது, சிறிலங்காவைச் சுற்றிய வான்பரப்பில் ரியூ 142 எம் என்ற இந்திய கடற்படையின் நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு விமானம் விரிவான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததாக இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா தெரிவித்துள்ளார். அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படையின் ராஜாளி தளத்தில் இருந்தே இந்த விமானம் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. ஐஎன்எஸ் ராஜாளி தளத்தின் வெள்ளி விழா மற்றும் இந்திய கடற்படையினால் 29 ஆண்டுகளாக கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்ட ரியூ 142 எம் விமானத்தை, சேவையில் இருந்து விலக்கும் நிகழ்வு நேற்று அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜா…
-
- 1 reply
- 372 views
-
-
வயதான தமிழர்கள் குடும்பத்தினருடன் இணைய இலங்கை அரசு அனுமதி புதன்கிழமை, ஜூலை 1, 2009, 12:13 [iST] கொழும்பு: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள வயதான தமிழர்கள், முகாம்களிலிருந்து வெளியேறி தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. இடம் பெயர்ந்தோர் முகாம்களில் கிட்டத்தட்ட 3 லட்சம் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை வெளியே நடமாட விடாமல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முகாம்களில் தங்கியுள்ள முதியவர்கள் முகாம்களிலிருந்து வெளியேறி தங்களது குடும்பத்தினர், உறவினர்களுடன் சேர்ந்து கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தற்போது 9000 முதியவர்கள் முகாம்களை விட்டு வெளியேறவுள்ளன…
-
- 0 replies
- 414 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய 5 பிரதேச செயலர் பிரிவுகளிலும் மக்களை மீள்குடியேற்றி சுமார் 3 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இப் பிரதேசங்களிலுள்ள கிராமங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மந்தகதியில் இடம்பெற்று வருவதால் தம் அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படாத நிலையில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக இம்மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது இப் பிரதேசங்கள் முழுமையாக அழிவடைந்துள்ள நிலையில் காணப்படுகின்ற போதும், அபிவிருத்தி என்பது தாமதமாகவே இடம்பெற்று வருவதாகவும் இம்…
-
- 0 replies
- 456 views
-
-
சிறிலங்காப் பாராளுமன்றத்தில் மீண்டும் அவசரகாலச் சட்டம் நீடிப்பு இலங்கையில் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் 92 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இவ்வாக்கெடுப்பில் பங்குபற்றிய தமிழர் தேசிய கூட்டணியினர் அவசரகால சட்டத்துக்கு எதிராகவும், ஜே.வி.பி யினர் சார்பாகவும் வாக்களித்தனர். ஆனால் ஐக்கிய தேசிய கட்சியினர் இவ்வாக்கெடுப்பைப் புறக்கணித்துள்ளனர். இச்சட்டம் பற்றிய வாதத்தை எழுப்பிய சபாநாயகர் நிமால் சிறிபால டி சில்வா, இலங்கை அரசானது உள்ளூராட்சி சபை தேர்தல்களை நடாத்தி பொதுமக்கள் நிர்வாகத்தை விரைவில் சீர்படுத்தும் என்றும் தாம் வடக்கில் ராணுவ செயல்பாடுகளை விரும்பவில்லை…
-
- 0 replies
- 511 views
-
-
வருடம் முழுவதும் முட்டாள்கள் தினமா? - கே.சஞ்சயன் ஏப்ரல் முதலாம் நாள் முட்டாள்கள் தினம். கடந்த சனிக்கிழமை முட்டாள்கள் தினத்தன்று வெளியாகிய சில ஊடகங்களில், அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்த கருத்து ஒன்று பிரசுரமாகியிருந்தது. ஆனால், அது முட்டாள்கள் தினச் செய்தி அல்ல. ஏனென்றால், முட்டாள்கள் தினத்துக்கு முதல் நாளான, மார்ச் 31 ஆம் திகதி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில்தான், அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதனால்தான், அது முட்டாள்கள் தினச் செய்தியல்ல. ஆனால், முட்டாள்கள் தினச் செய்தியை விட, மக்களை முட்டாள்களாக்கும் செய்தியே அத…
-
- 0 replies
- 321 views
-
-
துன்பம் தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடு'' பேசுகிறார் பிரபாகரன் - அருட் தந்தை ஜெகத் கஸ்பர் ராஜ் நாளாந்த வாழ்வின் கடமைகளும், கவலைகளும், சம்பந்தமில்லா மனிதர்களும் நீதிக்கான வேட்கையிலிருந்து நம்மை தணிக்கின்றன. இச்சூழல்வினைக்கு நானும் விதி விலக்கல்ல. அதிகாலை எழுந்து நடக்கும்போது இருக்கிற உணர்வெழுச்சியும் வேகமும் அந்தியாகும் போது இருப்பதில்லை. ஆயினும் ஒருசில நிகழ்வுகள் மட்டும் நம்மை நிம்மதியாக இருக்க முடியாமற் செய்யும், எண்ணும்போதெல்லாம் கண்ணியச் சீற்றம் கிளர்த்தும். கடந்த சுமார் ஐம்பது நாட்களாய் என்னை கனன்றுகொண்டே இருத்தி வைக்கும் நிகழ்வு மே, 14, 15, 16 நாட்களில் முல்லைத்தீவு பகுதியில் பாதுகாப்புத்தேடி ராணுவக் கட்டுப் பாட்டு பகுதிகளுக்குள் வந்த பல்லாயிரக் கணக்கான தமிழ்ப்…
-
- 0 replies
- 787 views
-
-
சிறிலங்கா அமைச்சர் ஒருவரின் மகளுக்கு பிறந்தநாள் செலவு 44000 அமெரிக்க டொலர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, தனது மகளின் பிறந்ததினத்திற்காக 44 ஆயிரம் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாகவும் இந்தப் பணத்தைச் செலுத்துவதற்கு அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதுவரும் சம்பந்தப்பட்ட அமைச்சும் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிதி செலவு தொடர்பான முறைப்பாடொன்று ஜனாதிபதிக்கு கிடைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. சம்பந்தப்பட்ட அமைச்சர் அமெரிக்காவிற்கு சென்றபோது, அமைச்சரின் மகளின் பிறந்ததினம் அமெரிக்காவில் கொண்டாடப்பட்டதாகவும், இதன்போது கேக் உள்ளிட்ட சிற்றூண்டிகளுக்காக 19 ஆயிரம் அமெரிக்க டொலர் செலவிடப்பட…
-
- 0 replies
- 689 views
-
-
கிளிநொச்சி காணிகளை விரைவில் விடுவிப்பதாக இராணுவம் உறுதி! - சுமந்திரன் [Thursday 2017-04-20 17:00] தமது கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே இராணுவம் தற்போது செயற்பட்டு வருவதாக, இன்றைய சந்திப்பின் போது தமக்கு தெரிவிக்கப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். காணி விடுவிப்பு தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த கலந்துரையாடலின் பிரகாரம் படிபடியேனும் காணிகள் விடுவிக்கப்படும். தனியார் காணிகளை விடுவிப்பதே தமது முதலாவது நோக்க…
-
- 0 replies
- 355 views
-
-
விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் என அறிவிக்கப்பட்டுள்ள செல்வராஜா பத்மநாதன் (கே.பி) பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி ஊடாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அச்சுறுத்தியுள்ளதாகவும் இது குறித்து இலங்கை அரசாங்கம் பிரித்தானிய அதிகாரிகளிடம் தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாகவும் திவயின செய்தி வெளியிட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீளக்குடியேற்றுமாறும் இல்லா விட்டால் தாக்குதல் நடத்தப்படும் என ஜனாதிபதிக்கு கூறிக்கொள்வதாக கே.பி. குறித்த தொலைக்காட்சியில் கூறியுள்ளார். விடுதலைப்புலிகள் பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவருக்கு அந்த நாட்டின் தொலைக்காட்சியில் தோன்ற எப்படி வாய்ப்பளிக்கப்பட்டது என இலங்கை அரசாங்கம், பிரித்…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஈழத்தமிழர்கள் தமது உரிமைகளை போராடியே பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், சிறிலங்கா ஜனாதிபதி பௌத்த சிங்கள தீவிரவாதி அவரை திருத்தவே முடியாது என்று எரிக்சொல்ஹெய்ம் மற்றும் லீகுவான்யூ போன்றவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டு வரவேற்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியில் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகவும், சிறிலங்கா அரசாங்கத்தின் போக்குத் தொடர்பாகவும் அண்மையில் எரிக்சொல்ஹெய்ம் மற்றும் லீகுவான்யூ ஆகியோர் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துத் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவ…
-
- 2 replies
- 531 views
-
-
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பல கொலைகளுக்கான குற்றவாளிகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் லசந்த விக்ரமதுங்கவின் கொலை உட்பட பல கொலைகளுக்கு காரணமானவர்களும், கடத்தல்களுக்கு காரணமானவர்களும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதே போன்று கீத் நொயார் தாக்கப்பட்டமை உட்பட ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மேற்கொண்ட நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். பல ஆதாரங்கள் த…
-
- 0 replies
- 540 views
-
-
டிபிஎஸ் ஜெயராஜ் என்ற தமிழ்த்தேசிய விரோதியும் தமிழரது விடுதலைப் போரை கொச்சைப்படுத்துவதையே தனது எழுத்துலகக் கடமையாக மேற்கொண்டுவருபவரது ஆக்கம் வேறொருதிரியில் ஆங்கில மொழியில் இணைக்கப்பட்டிருந்தாலும் உதயன் இணைவலையத்தினது தமிழ் மொழிபெயர்ப்பைத் தனியானதொரு திரியில் இணைத்துள்ளேன். உண்மையிலேயே நாம் எமக்கிடையே தெளிவு பெற வேண்டியது அவசியமாக உள்ளது. பல ஊடகர்கள், ஊடகர்களாகவன்றி ஊடக விபச்சாரகர்களாகவே உள்ளனர். எடுத்துக்காட்டுக்காக நாம் குடிப்பதற்காகத் தண்ணியை அடுப்படியில் உள்ள குழாயில் எடுப்போம். ஆனால் மலசலகூடத்திலிருந்து குடிப்பதற்கு எடுப்தில்லை. ஆனால் இரண்டுக்குமான தண்ணீர் ஒரே குழாய் இணைப்பூடாகவே செல்கிறது. எந்தத் தண்ணியைப் பருக வேண்டுமென்பதை நாமே தீர்மானிக்கிறோம். கே.ப…
-
- 31 replies
- 5.9k views
-
-
காணாமல்போனோர் தொடர்பில் ஐ.நாவின் விசாரணையை வலியுறுத்தி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழில் கவனவீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. காணாமல்போனோரைக் கண்டறியும் குழு, காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு ஆகியன உட்பட மேலும் சில சிவில் அமைப்புகள் இணைந்தே இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையையாட்டி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்துக்கு முன்பாக காலை 10 மணிக்கு இப்போராட்டம் நடைபெறும். இதன் பின்னர் காணாமல் போனோர் தொடர்பிலான 13 கோரிக்கைகள் அடங்கிய மனு நவநீதம்பிள்ளையிடம் கையளிக்கப்படும் என்று மனித உரிமைகள் செயற்பாட்டாளர் எஸ்.மகேந்திரன் தெரிவித்தார். இதில் எழிலனின் மன…
-
- 0 replies
- 315 views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டமும், பேரணியும் கினிகத்தேனையில்! இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டமும், பேரணியும் கினிகத்தேனை நகர பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்றது. கினிகத்தேனை விநாயகர் ஆலயத்தின் முன்றலில் ஆரம்பமான இ.தொ.காவின் மேதின பேரணியைத் தொடர்ந்து மேதினக்கூட்டம் நடைபெற்றது. இ.தொ.கா.தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், ஊவா மாகாண அமைச்சா் செந்தில் தொண்டமான், கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த மே தின கூட்டத…
-
- 0 replies
- 224 views
-
-
இன மத அடிப்படையில் அரசியல் செய்வது தடை செய்யப்படுகிறது.. Racial, religious parties to be banned New bill to be introduced this month more representation for women in politics By Chandani Kirinde Legislation to outlaw political parties bearing the identity of a religion or a race will be introduced in Parliament later this month, a senior minister said yesterday. Minister and Government Chief Whip Dinesh Gunawardena, who chaired a parliamentary select Committee on Electrical Reforms, told the Sunday Times the new draft laws would also for the first time give powers to the Elections Commissioner to de-recognise political parties if they fail to conf…
-
- 0 replies
- 532 views
-
-
காவல்துறையின் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்பான சர்ச்சைகள் சிறிலங்காவில் அதிகரித்துவரும் நிலையில், காவல்துறையைச் சேர்ந்த குறைந்தபட்சம் 170 அதிகாரிகள் தவறாக நடந்துகொண்டமை தொடர்பாக விசாரணைகளை எதிர்கொண்டிருப்பதாக காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்கிரமட்ன தெரிவித்திருக்கின்றார். தவறாக நடந்துகொண்ட காவல்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், இவ்வாறு காவல்துறையினர் அத்துமீறும் சம்பவங்கள் தொடர்பாக தமக்கு தொலை நகல் (Fax) மூலமாக அறிவிக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். நாட்டில் இடம்பெறும் குற்றச்சம்பவங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என சிறிலங்கா அரச தலைவர் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்த காவல்துறை மா அதிபர், சட்டவிரோதமான போதைப்…
-
- 0 replies
- 314 views
-