ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142926 topics in this forum
-
-
- 0 replies
- 731 views
-
-
சேதுசமுத்திர திட்டம் நிறைவேறிட வேண்டும் என தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தொலைக்காட்சியில் ஆற்றிய உரை ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 4 replies
- 1.3k views
-
-
வீரகேசரி இணையம் - தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டு தீவிர ஆயுத போராட்டத்தில் பங்கேற்காத தயா மாஸ்டருக்கோ அல்லது ஜோர்ஜ் மாஸ்டருக்கோ நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படக் கூடாது என அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். குறித்த இருவருமே அரசியலில் பங்கு கொள்ளத் தகுதியற்றவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முக்கிய போராளிகள் அல்லாத தயா மாஸ்டருக்கோ அல்லது ஜோர்ஜ் மாஸ்டருக்கோ அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களுடன் நெருக்கமுடைய நபர்களை அரசியல் தலைவர்களாக நியமிப்பதன் மூலம் தேர்தல்களில் வெற்றி பெற முடியும் என அரசாங்கம் கருதுவதாகவும், இதன் காரணமாக தயா மாஸ்டரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கத் …
-
- 5 replies
- 2k views
-
-
06-05-2009 அன்று திட்டமிட்டபடி சோனியா காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தேர்தல் பொய்ப் பிரச்சாரம் செய்ய தமிழகம் வந்து கருணாநிதியுடன் சந்திப்பொன்றை நடத்தியதாக தி மு க வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கருணாநிதி அவர்களின் உண்ணா நோன்புக்குப் பிறகு ஈழத்தில் சிங்கள ராஜபக்ச அரசு செய்த யுத்த நிறுத்தம் அமுலில் இருப்பதாலும் அங்கு தமிழ் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்பதாலும் சோனியா - கருணாநிதி அவர்களின் இன்றைய சந்திப்பு மிகவும் நெருக்கமாக இருந்ததாக சன் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பு தெரியப்படுத்தியது. அதுமட்டுமன்றி சோனியா அன்னை தீவுத்திடலில் பிரச்சார மேடையில் தீவிர பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அவரை மேலும் குசிப்படுத்த குஸ்பு அவர்களை நடுவராகக் கொண்ட மா…
-
- 5 replies
- 3.7k views
-
-
கொழும்பு: இதுவரை இல்லாத அளவிலான மிகப் பெரிய சிக்கலுக்கு மத்தியில் விடுதலைப் புலிகள் இயக்கம் 34வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. உலகில் தோன்றிய போராளி இயக்கங்களுக்கு மத்தியில் தனித்துவத்துடன் இருப்பது விடுதலைப் புலிகள் இயக்கம். வேறு எந்த போராளி இயக்கத்திடமும் இல்லாத அளவுக்கு சகல படை பலத்துடன் திகழ்ந்தவர்கள் புலிகள். கடற்படை, விமானப்படை, தற்கொலைப் படை, மகளிர் படை என பலவிதமான படைப் பிரிவுகளுடன் ஒரு ராணுவத்தைப் போன்று செயல்பட்டு வந்தவர்கள் விடுதலைப் புலிகள். உலகில் வேறு எந்த அமைப்பிடமும் இப்படிப்பட்ட படை பலம் இருந்ததில்லை. 1972ம் ஆண்டு தமிழ் புதிய புலிகள் என்ற அமைப்பை உருவாக்கினார் பிரபாகரன். பெரும்பான்மைச் சிங்களர்களின் ஆதிக்க போக்கை எதிர்த்து தொடங்கப்பட்…
-
- 0 replies
- 2.6k views
-
-
-
- 1 reply
- 1.8k views
-
-
உண்ணாவிரதம் என்ற கடினமான போராட்டத்தில் நாம் இன்று ஈடுபடுகிறோம். துப்பாக்கி தூக்குவது மிகவும் எளிது. உண்ணாநிலைப் போரில் கொஞ்சம்கொஞ்சமாக நாம் நம்மை அழித்துக்கொண்டு, அங்குலம் அங்குலமாக மரணத்தை நோக்கி நகர் வதைவிட, காவல் துறையின் குண்டுகளுக்கு பலியாவதும், தூக்குக் கயிற்றில் தொங் குவதும் சிரமமற்றசெயல். உண்ணாநிலைப் போரில் ஈடுபட்டுவிட்டுப் பின்வாங் குவது புரட்சியாளனுக்குப் பெருமை சேர்க்காது. அதைவிட முதலிலேயே உண்ணாநிலையில் இறங்காமல் இருந்துவிடலாம்...' - என்று பகத்சிங்கின் தோழர்களை எச்சரித்தவன் யதீந்திரநாத் தாஸ். அறுபத்துமூன்று நாட்கள் மருந்து உட்பட எதையும் ஏற்காமல் மறுதலித்து உயிர் துறந்த மாவீரன் அவன். 'தமிழர் வாழும் பகுதிகளில் சிங்களர் தடுக்கப்பட வேண்டும்; தமிழீழப்…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையினால் எடுக்கப்பட்ட செய்மதிப் படங்கள் சிறீலங்கா அரசாங்கத்தின் அனுமதியுடனே எடுக்கப்பட்டுள்ளது என சிறீலங்காவுக்கான ஐக்கிய நாடுகள் சபைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூணே தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மக்கள் பாதுகாப்பு வலயத்தில் சிறீலங்கா அரசாங்கம் கனரக ஆயுதங்களை பயன்படுத்துகிறது என செய்திமதிப் படத்தினை வெளியிட்டிருந்தது. இந்த நடவடிக்கையைச் சாடிய சிறீலங்கா அரசாங்கம் ஐ.நா அதன் உறுப்பு நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபடுவதாக சிறீலங்கா அரசாங்கம் குற்றும் சுமத்தியிருந்தது. இதற்கு பதிலளிக்கும் போதே நீல் பூணே இக்கருத்தினைத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: செய்திமதிப் படங்கள் இரகசி…
-
- 1 reply
- 886 views
-
-
சோனியாகாந்தியின் தமிழக வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் இந்திய நாடளுமன்ற தேர்தல் - 2009 க்கான பிரச்சாரத்திற்கு தமிழகம் வரும் சோனியாவை எதிர்த்து தமிழீழ விடுதலை ஆதரவு இயக்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (06.05.2009) காலை த.வி.ஆ.இ 11.00 மணிக்கு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொத்துக்குண்டுகள் , பாஸ்பரஸ் குண்டுகள் , இரசாயண குண்டுகள் என பேரவலம் அன்றாடம் தமிழீழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்திய அரசு இவ்வினப்படுகொலையை இந்தியாவின் சந்தை நலனுக்காகவும், தேசியஇன ஒடுக்குமுறையை கட்டி பாதுகாக்கவும், இலங்கையில் வேறெந்த நாடும் கால்பதித்து விடக்கூடாது என்று போரை நடத்திவருகிறது. இந்திய அரசின் அமைச்சர் பதவிக்காக தேர்தல் நடைபெ…
-
- 0 replies
- 972 views
-
-
தமிழ்நாட்டில் சொனியாவின் பிரச்சாரம் ஒத்தி வைப்பு தமிழகத்திற்கு சோனியா காந்தி வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்த நிலையில் சொனியாவின் பிரச்சாரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல்நிலை காரணமாகவே ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும், தமிழக மக்களின் கடும் எதிர்ப்பே இந்த ஒத்திவைப்புக்கு காரணம் என தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ் நாட்டில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு இன்னும் ஐந்து நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் இந்த ஒத்திவைப்பு தி.மு.க., கொங்கிரஸ் கூட்டணியிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மேற்கொள்வதாக இருந்த பிரசாரம் ஒத்திவைக்கப்பட்…
-
- 4 replies
- 1.2k views
-
-
மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியப் பொறுப்பதிகாரி சிறீலங்காவுக்கு வரத் தடை. 06/05/2009, 13:47 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்திற்கான பொறுப்பதிகாரி ஹெனா நெஸ்டட் சிறீலங்காவுக்கு எதிர்காலத்தில் வருவது தடை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்திற்கான பொறுப்பதிகாரி ஹெனா நெஸ்டட் சிறீலங்காவுக்கான சுற்றுலா உள்நுழையும் அனுமதியைப் பெற்று, அனைத்துலக தன்னார்வ நிறுவனங்களின் உதவியுடன் சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை விடயங்கள் தொடர்பில் வவுனியாவரை சென்று பிழையான தகவல்களை சேகரித்து அனைத்துலக சமூகத்திற்கு வழங்கியதாக இவர் மீது சிறீலங்கா அரசாங்கம் குற்றம் ச…
-
- 0 replies
- 722 views
-
-
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை குறுகிய வட்டத்திற்குள் வைத்து சுற்றி வளைத்துள்ளது ராணுவம். அவரால் தப்ப முடியாது. விரைவில் அவர் பிடிபடுவார் என கூறியுள்ளார் இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரநாயகே. இதுகுறித்து இன்று அவர் நாடாளுமன்றத்தில் பேசுகையில், 54 வயதாகும் பிரபாகரன் தன்னிடம் உள்ள வீரர்களை வைத்துக் கொண்டு தொடர்ந்து சண்டையிட்டு வருகிறார். நான்கு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள்தான் மிச்சமுள்ள விடுதலைப் புலிகளும் இருக்கிறார்கள். அங்குதான் பிரபாகரனும் இருப்பதாக உறுதியான உளவுத் தகவல் கிடைத்துள்ளது. விடுதலைப் புலிகளிடம் இன்னும் பெரிய அளவில் ஆயுதங்கள் உள்ளன. அதை வைத்துக் கொண்டு அவர்கள் ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். பிரபா…
-
- 5 replies
- 2.8k views
-
-
சோனியாவிற்கெதிரான கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு தடை பலர் முன்கூட்டியே கைது தமிழகம் வருகை தரும் சோனியாவிற்கு நாளை (06.05.2009) கறுப்புக்கொடி காட்டப்படும் என்று பழ.நெடுமாறன் அறிவித்திருந்தார். இதற்கு காவல்துறை தடைவிதித்துள்ளது. முன்கூட்டியே பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இராசேந்திரன் மற்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நாளை மாலை 4 மணி அளவில் சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை தடை விதித்துள்ளது. மேலும் நேற்று சிறையிலிருந்து விடுதலை ஆன பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி சோனியாவிற்கு தமிழகத்தில் எதிர்ப்பு காட்டப்படும் என்று கூறியிருந்தார். இதனால் முன்னெச்சரிக்கை …
-
- 3 replies
- 1.7k views
-
-
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்து அங்குள்ள முகாம்களில் வைக்கப்பட்டுள்ளவர்களில் வயோதிபர்களின் மரணங்கள் பெருமளவுக்கு அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கும் வவுனியா மருத்துவமனை வட்டாரங்கள் கடந்த திங்கட்கிழமை மட்டும் 10 வயோதிபர்கள் மரணமடைந்திருப்பதாச் சுட்டிக்காட்டியுள்ளன. நேற்று திங்கட்கிழமை இரவு வவுனியா முகாம்களில் இறந்த 10 வயோதிபர்களின் உடலங்கள் வவுனியா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சவச்சாலையில் வைக்கப்பட்டிருக்கின்றது. கடந்த 1 ஆம் நாள் முதல் திங்கட்கிழமை வரையிலான நான்கு நாட்களில் மட்டும் 30 வயோதிபர்கள் வவுனியா முகாம்களில் இறந்துள்ளார்கள். இவ்வாறு மரணமடைந்த வயோதிபர்களுடைய உடலங்கள் அனைத்தும் வவுனியாவுக்குக் கொண்டுவரப்பட்டு மருத்துவமனைச் சவச்சாலையில் வைக்க…
-
- 2 replies
- 611 views
-
-
தமிழர்களின் போராட்ட உணர்வினால் சோனியா தமிழகம் வரவில்லை: பழ.நெடுமாறன் தமிழர்களின் போராட்ட உணர்வினால் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தமிழ்நாட்டுக்கு வரவில்லை என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: சோனியா காந்தியின் தமிழக வருகை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டது தமிழக மக்களின் போராட்ட உணர்வுக்குக் கிடைத்த வெற்றியாகும். ஈழத் தமிழர் பிரச்னையில் சோனியா காந்தியும் மத்திய காங்கிரசு அரசும் செய்து கொண்டிருக்கும் துரோகத்திற்கும் அதற்குத் துணைப் போகும் தமிழக தி.மு.க அரசுக்கும் எதிராக தமிழக மக்கள் கொந்த…
-
- 0 replies
- 997 views
-
-
இலங்கையில் நடைபெறும் போரால் தமிழக தேர்தல் களம் சூடாகியுள்ளது. மத்திய அரசும், தமிழக அரசும் தத்தமது சாதனைகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, இலங்கை விவகாரத்தில் தமக்கு எதிராகக் கிளப்பப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலைத் தேடுவதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகின்றன. மத்திய அரசும், தமிழக அரசும் செய்த தவறுகளையும் இடையில் கைவிட்ட திட்டங்களையும் பட்டியலிட வேண்டிய ஜெயலலிதா, இலங்கை விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பிரசாரக் களத்தைத் திசை திருப்பியுள்ளார். கடந்த 17 வருடங்களுக்கு முன்பு ராஜீவ் காந்தியின் கொலையின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு படுதோல்வியையும், காங்கிரஸ் கட்சிக்கு அமோக வெற்றியையும் பெற்றுக் கொடுத்த இலங்கை விவகாரம், இப்போது திராவிட முன்னேற்றக…
-
- 2 replies
- 2k views
-
-
“கவிதாசரண்” என்கிற இலக்கியப் பத்திரிகையில் தன் விலை மதிப்பற்ற உயிரைத் தந்து உலகை விழிக்க வைத்த தம்பி முத்துக்குமாரின் கவிதைகள் இடம்பெற்றிருந்தது. கவிதைகள் ஒவ்வொன்றும் பொட்டில் அடித்த மாதிரி கனல் கக்கும் வரிகளாய்…… இதயத்தை தொட்டது……இல்லையில்லை சுட்டது. எனக்கு மின்னஞசலில் வந்தது. அதிலிருந்து ஒரு கவிதையை இங்கே பதிந்திருக்கிறேன். ஒரு வீடு இரு திருடர்கள் அது அவர்களுடைய தொழில். கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும். நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல அவர்களுக்கு தொழில் தர்மம். ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால் குறுக்கிடும் தொழில் தர்மம். ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும், கூரை வழியே ஒருவனும் தொழி…
-
- 0 replies
- 1.3k views
-
-
மனிதாபிமானம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் உண்டு என்றால் தற்போதாவதுஇ தாமதிக்காது வன்னி மக்களுக்கு நேரத்தை வீணாக்காமல்இ உணவுப்பொதிகளை போடவேண்டும் என வன்னியில் உள்ள சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடயத்தில் அமெரிக்கா முன்னின்று செயற்படவேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். வன்னியில் உள்ள மனிதபிமான பிரச்சினைகளை உணர்ந்து அமெரிக்காவும் உலக நாடுகளும் இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அந்த கோரிக்கையில் கேட்கப்பட்டுள்ளது. இலங்கை படை விமானங்கள்இ நேற்று பாதுகாப்பு வலயத்தில் பல தடவைகளாக குண்டுகளை போட்டு பலரை கொன்றுள்ளன. முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்குழல் பீரங்கி தாக்குதல்களினால்இ பலர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் காயமடைந்த பொதுமக்களை ஏற்…
-
- 1 reply
- 636 views
-
-
இலங்கைப் பிரச்சினையில் சீனா முழுமையாக ஈடுபட்டுள்ளதால்தான் அங்கு நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை என இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கேரளாவில் இருந்து வெளிவரும் அந்த ஆங்கில ஊடகத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறீலங்காவிற்கு இராணுவ இராஜதந்திர மற்றும் பொருளாதார ரீதியாக சீனா முழுமையான பங்களிப்பை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது. இதனாலேயே இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கையை சர்வதேச நாடுகளால் நிறுத்த முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் பிரித்தானிய பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களின் பயணம் தோல்வியில் முடிவடைந்த நிலையில் இத்தகவலை அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் தனது ஆதிக்கத…
-
- 5 replies
- 1.7k views
-
-
பிரித்தானியாவின் 'சனல் - 4' காணொலிச் செய்தி நிறுவனம் அதிர்ச்சித் தகவல்களை வெளியிடுகின்றது. வன்னியில் இருந்து வெளியேறிய மக்கள் அடைக்கப்பட்டுள்ள 'வதைத் தடுப்பு முகாம்'களில் உணவு இல்லை; இறப்போர்களது உடலங்கள் அந்த இடங்களிலேயே கிடக்கின்றன; குடும்பங்களிடம் இருந்து பெண்கள் பிரிக்கப்படுகின்றார்கள்; பாலியல் கொடுமைகளுக்கு பெண்கள் உள்ளாக்கப்படுகின்றார்கள். பக்கச்சார்பற்ற முறையில் - சுதந்திரமாகப் - படமாக்கப்பட்ட காட்சிகளும் தடுப்பு முகாம்களுக்கு உள்ளே இருக்கும் தொண்டு நிறுவன பணியாளர்களுடனான உரையாடல்களும் கொடுமைக் கதைகளைச் சொல்லுகின்றன. 'சனல் - 4' நிறுவன காணொலிச் செய்திக்கு இந்த இணைப்பினை அழுத்துக புதினம்
-
- 0 replies
- 412 views
-
-
அமெரிக்காவின் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (Human Rights Watch) ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் கலாநிதி அனா நெய்ஸ்டற் (Anna Neistat ) சிறிலங்கா செல்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்திருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் பிரபல சிங்கள நாளேடான 'திவயின' இன்று புதன்கிழமை செய்தி வெளியிட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 295 views
-
-
தமிழ்நாட்டு மக்கள் எதிர்வரும் புதன்கிழமை (13.05.09) நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தெளிவான செய்தியை தெரிவிப்பார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வலுவான நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 365 views
-
-
இலங்கைக்கு சீனா 1 மில்லியன் டாலர் நிதியுதவி செவ்வாய்க்கிழமை, மே 5, 2009, 18:08 [iST] பெய்ஜிங்: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பெருமளவில் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கி வரும் சீனா, தற்போது 1 மில்லியன் டாலர் நிதியுதவியயை அளிக்கிறது. மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக இந்த நிதியுதவியை அளிக்கிறதாம் சீனா. இடம் பெயர்ந்து வந்த தமிழர்களுக்கு உதவ இந்த நிதியை இலங்கை பயன்படுத்திக் கொள்ளுமாம். இதுகுறித்து சீன உள்நாட்டுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஷாஸூ செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் நாங்கள் மிகுந்த அக்கறை செலுத்துகிறோம். இலங்கையில் சமூக ஸ்திரத்தன்மை, தேசிய மறு சீரமைப்பு ஆகியவற்றை பராமரிக்க இலங்கை மக்களுக்கு அடிப்படை …
-
- 4 replies
- 822 views
-
-
வணக்கம், பலருக்கும் தெரிந்திராத இந்த புதிருக்கான விடை எமது ஊடகங்களில் இருந்து இதுவரை கிடைக்கவில்லை. கூகிழில் சிறிய ஓர் ஆராய்ச்சி செய்தபோது cp24 கனேடிய ஆங்கில ஊடகத்தில் கீழ்வரும் செய்தியை காண முடிந்தது. நன்றி! Tuesday's downtown Tamil protest postponed: organizer Tuesday's Tamil protest where "tens of thousands" of supporters were going to form a human chain throughout the downtown core has been postponed, organizers say. The protest spokesperson Siva Vimal told CP24 that the protest has been postponed due to International Cooperation Minister Bev Oda's presence in Sri Lanka. "I think the community is waiting to evaluate our government's action wi…
-
- 1 reply
- 1.3k views
-
-
மட்டுவில் படையினரால் பாடசாலை ஆசிரியர் கொலை மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பகுதியில் இன்று(06-05-2009) காலை 07.45 மணியளவில் சிறிலங்கா புலனாய்வுத் துறையினரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஈச்சந்தீவை சொந்த இடமாகக்கொண்ட 35 அகவையான பாலசிங்கம் ரவீந்திரன் என்ற ஆசிரியரே உயிரிழந்தவராவார். பாவற்கொடிசேனை பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இவர் தமிழ் மற்றும் சமய பாட ஆசிரியராவார். மூலம்: மீனகம்.கொம்
-
- 0 replies
- 884 views
-