Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப்புலிகளின் ஒரு நீர்மூழ்கிக் கப்பலையும் சில தற்கொலைப்படைப் படகுகளையும் சிறீலங்கா சிங்கள பேரினவாத பயங்கரவாத இராணுவம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. srilanka army. இப்படங்களைப் பார்க்கின்ற போது நகர்த்திச் செல்லக் கூடிய நிலையில் இருந்தும்.. ஏன் விடுதலைப்புலிகள் இவற்றை விட்டுச் சென்றனர் என்பது.. கேள்விக்குரியதாகவே இருக்கிறது..! இது.. உண்மையில்.. கைப்பற்றப்பட்டதா அல்லது பிரச்சார நோக்கில்.. திசை திருப்பச் செய்யப்பட்டதா..??! (டம்மியா)

  2. ஈழத் தமிழரின் தியாக வரலாற்றில், முத்துகுமாரின் தியாகமும், புகழும் நிலைத்து நிற்கும். தாய்த் தமிழகத்தின் இளந்தமிழ் மனங்கள், எரிமலையாகச் சீறத் தொடங்கிவிட்டதை இப்போதாவது தமிழருக்குத் துரோகம் செய்யும் மத்திய அரசு உணரட்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 438 views
  3. ஈழத் தமிழரின் தியாக வரலாற்றில், முத்துக்குமாரின் தியாகமும், புகழும் நிலைத்து நிற்கும். தாய்த் தமிழகத்தின் இளந்தமிழ் மனங்கள், எரிமலையாகச் சீறத் தொடங்கிவிட்டதை இப்போதாவது தமிழருக்குத் துரோகம் செய்யும் மத்திய அரசு உணரட்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 327 views
  4. சிங்கள அரசிற்கு உதவும் தஞ்சை விமானப்படை தளம் மூடக்கோரி தமிழர்கள் ஒருங்கிணைப்பு நடத்தும் முற்றுகைப் போராட்டம் திகதி: 29.01.2009 // தமிழீழம் // [சோழன்] ஈழத்தில் சிங்கள அரசு மேற்கொண்டு வரும் தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் இந்திய அரசு கலந்து கொண்டுள்ளது. தஞ்சையில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்தின் மூலம் சிங்கள அரசிற்கு இராணுவ தளவாடங்களை இந்திய அரசு அனுப்பியுள்ளதைக் கண்டித்தும் அத்தளத்தை உடனடியாக இழுத்து மூடக் கோரியும் அவ்விமானப்படைத் தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 31-01-2009 அன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு, தஞ்சை மேலவத்தாச்சாவடி சந்திப்பு அருகே பேரணியாக புறப்பட்டுச் சென்று விமானப்படைத் தளத்தை மூட வலியுறுத்தி முற்றுகையிட்டு ஆர…

  5. இலங்கையில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவதனைக் கண்டித்து தமிழ்நாடு சென்னையில் ஊடகவியலாளர்கள் நேற்று புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 521 views
  6. ' ஓன்றாய் எழுவோம் ' .. முதலில் யார் எழுவது நீயா ? நானா ? வன்னியில் மனிதப் பேரவலம் ஏற்பட்டுள்ளது, ஏறத்தாள நான்கு இலட்சம் மனித உயிர்கள் தமது அடுத்து நிமிட இருப்பிற்கான உத்தரவாதம் இன்றி வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் உணவு வாகனத் தொடரணி வன்னி செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் அங்கு வாழும் அப்பாவி மக்கள் உணவின்றியும் இறக்கும் நிலை ஏற்படும். எப்படியாவது தமிழர்களின் தொகை குறைந்தால் சரி என்ற தென்னிலங்கையின் எதிர்பார்ப்பிற்கு பல வழிகளில் ஆதரவு பெருகுகின்றது. பருவம் தப்பி பெய்யும் மழையும் வன்னியில் நாளாந்த இடம்பெயர்வை சந்திக்கும் மக்களை தனது பங்கிற்கு வதைத்து அழிக்கின்றது. மஹிந்தவின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்சவை அழைத்து ஐநாவி…

  7. சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற தமிழ் மக்கள் மீதான படுகொலைக்கு பாகிஸ்தான் அரசாங்கம் துணை நிற்க வேண்டாம் எனவும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆயுத உதவி வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறும் பிரான்ஸ் பாரிசில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 420 views
  8. இலங்கை தமிழர்களுக்காக செங்கல்பட்டு அரசினர் சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த ஏழு நாட்களாக நடத்திய உண்ணாநிலை போராட்டம் நேற்று புதன்கிழமை முடிவுக்கு வந்தது. இவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பழச்சாறினை கொடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தினை முடித்து வைத்தார். தொடர்ந்து வாசிக்க

  9. எங்கள் அரசியல் வாழ்வு அடியோடு நாசமாகி போனாலும் பரவாயில்லை, ஈழத் தமிழர்களை காப்பதற்கு நாங்கள் போராடுவோம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  10. இலங்கை தமிழர் பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக சென்னையில் நாளை மௌன விரத கறுப்புக்கொடி போராட்டம் நடத்த "இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்" முடிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 591 views
  11. கடந்த 26ம் திகதி உடையார் கட்டு பகுதியில் நடந்த கடுமையான எறிகணை வீச்சில் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் கா. வே பாலகுமாரன் அண்ணா படுகாயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக 28/01/2009 அண்றைய புலிகளின் குரல் செய்தி சேவை தெரிவித்தது.. இந்த காயம் அடைந்த விபரத்தை புலிகளின் குரல் முக்கியத்துவம் கொடுத்து இணைத்தமையால் இதை எல்லோரும் அறியும் வண்ணம் இங்கு இணைத்து விட்டு இருக்கிறேன்... புலிகளின் குரலை கேட்பதுக்கு...( 2. 40 நிமிடத்தில் சொல்ல படுகிறது.) http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...09/News7_00.m3u http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...09/News7_00.mp3

  12. சென்னையில் உள்ள இந்திய இராணுவத் தலைமையகத்திற்கு எதிராக ஆர்பாட்டம் செய்யச் சென்ற தமிழக மாணவர்கள் காவல்துறையினரால் கைது Students 'gherao' Indian Army headquarters at Chennai [TamilNet, Wednesday, 28 January 2009, 17:44 GMT] Members of the Confederation of All Students were arrested by the Tamil Nadu State Police when they attempted to surround the South Zone Regiment Headquarters ATNKNK of the Indian Army at Chennai Wednesday morning to mark their protest against "Indian terrorism that supplies weaponry for the genocide of Tamils." Wearing black shirts to mark their anger and mourn their dying Tamil brethren, the students raised slogans condemning the Indian Govern…

  13. பிரான்சில் நேற்று நடந்த கவனயீர்ப்பு நிகழ்வு பற்றி பிரான்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளியும் செய்தியும்: Get Flash to see this player. http://www.france24.com/en/20090127-troops...an-tamil-tigers

  14. சிறீலங்கா இனவெறி அரசின் இனஅழிப்பு நடவடிக்கையால் தாயகத்தில் நாளாந்தம் நமது உறவுகள் இரத்தமும் சதையுமாய் சிதறிக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் புலம் பெயர்ந்து வாழும் நாம் எமது உறவுகளுக்காக பல வழிகளில் குரல் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். எனவே இன்றைய அவசர நிலையை இந்நாட்டு மக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டியவர்களாக நாங்களே இருக்கின்றோம். இவ் உடனடி செயற்பாட்டில் இணைந்து செயற்பட கீழ் குறிப்பிடும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு ஒன்றிணைவோம். 044 273 34 07 076 291 49 75 மின்னஞ்சல் tamilssos@gmail.com நாமெல்லாம் ஒருங்கிணைந்து உறவுகளின் உயிர் காத்திடுவோம். உலகத்தமிழர் ஒருங்…

    • 0 replies
    • 1.4k views
  15. வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து பாதுகாப்பாக இருக்கும் எனக் கருதி வவுனியாவுக்கு வந்துள்ள தமிழர்களை சரமாரியாக கொன்று குவித்து வருகிறதாம் இலங்கை ராணுவம். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோரை இதுபோல கொன்று பிணங்களை எரித்தும், புதைத்தும் வெறியாட்டம் நடப்பதாக கூறப்படுகிறது. ஏராளமான தமிழ்ப் பெண்கள் ராணுவ முகாம்களில் வைத்து பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட கொடுமையும் தங்கு தடையின்றி நடந்து வருகிறதாம். விடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம் என்ற போர்வையில், தற்போது அப்பாவித் தமிழர்களை தாறுமாறாக வேட்டையாடத் தொடங்கியிருக்கிறது இலங்கை படைகள். பாதுகாப்பான பிரதேசம், விடுதலைப் புலிகள் பகுதியில் உள்ள தமிழர்கள் இங்கு வர வேண்டும் என அரசு விடுத்த அழைப்பை ஏற்று அப்பாவித் தமிழர்கள் பெரும் திரளா…

  16. எம்மை நாம்தான் காப்பாற்ற வேண்டும் என பன்னாட்டு சமூகம் சொல்கிறதா? நேற்று முன்தினம் 300 பேர். நேற்று 46 பேர். (தமிழ்வின்). இன்று உலக நாடுகளிடம் இருந்து அறிக்கை வரும் என எதிர்பார்த்தோம். எதுவுமில்லை. போதாக்குறைக்கு இலங்கை வந்து போன பிரணாப் முகர்ஜி "உப்பிடி ஒரேயடியா பொசுக்காதேங்கோ, கொஞ்சம் கொஞ்சமாக செய்யுங்கோ அப்பிடி எண்டால்தான் கொஞ்சம் கதை அமரும்" எனபது போல வந்து சொல்லிவிட்டு போகிறார். வந்த மனுஷன் ஒரு கண்டன அறிக்கை கூட விடேல்ல பாருங்கோ. என்னதான் இருந்தாலும் தமிழ் எம்.பி க்களை சும்மா சந்திச்சு, வேணாம் பார்த்திட்டு கூட போயிருக்கலாம். அதை கூட செய்யல மனுஷன். இதுக்கிடைல அவர் விடுதலைப் புலிகளை அழிச்சுப்போட்டு ஒரு அரசியல் தீர்வை முன் வையுங்கோ எண்டு கூட சொல்லிப்போட்டு போயிருக்க…

  17. Wednesday, 28 January 2009, 18:45 கொழும்பு நிருபர் மயூரன் எங்கள் பிரச்சினையில் தலையிடுவதற்கு ஜப்பானுக்கும், இந்தியாவுக்கும் உரிமை இல்லை - சோமவன்ச இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி, ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாசி ஆகியோர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அதிகாரங்களைப் பரவலாக்க வேண்டுமெனவே அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து விடுதலைப் புலிகளைப் பலப்படுத்தவே. இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் போரை நிறுத்தி விடுதலைப் புலிகளைப் பலப்படுத்தும் செயற்பாட்டிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் செயற்பட்டு வருகிறார் எனக் குற்றஞ்சாட்டியன சோமவன்ச அமரசிங்க, சர்வதேச சமூகத்தின் சதிவலையில் இலங்கை சிக்கிவிடக் கூடாது எனவும் எச்சரித்தார். …

    • 0 replies
    • 885 views
  18. திரு. கருணா நிதி அவர்களே நலமா, சிங்களத்தின் கால் வருடிகளுடன் கூட்டமைததால், சங்கம் வளர்த்த வழி வந்த கோபாலபுரத்தானும் கொள்கை விலகினனோ! கொத்து, கொத்தாய் ஈழத்தில் தமிழர், சிங்களத்தின் கொத்து எறிகணைகளால் செத்து மடிகையில், உமக்கு முதுகில் அல்லவா வலிக்கிறது. இருக்கட்டும், தமிழ் தலைவர் முதுகு சுகம் பெறட்டும். எத்தனை முறை சொன்னோம், எத்தனை பேர் சொன்னோம்? சொன்னதெல்லாம், உம் சாணக்கியம் ஆக்கினீர்! சாக்கு போக்கு சொல்லியே தமிழக காங்கிரசின் காலடியில் ஈழத் தமிழன் தலையை வைத்தீர்! இலவு காத்த கிளி நீர்! உம்மால் இழவு காக்கும் தமிழர் நாம்! உமக்கு முதுகு வலி கண்ட நாள் ஏன் ஈழத்தில் ஐநூறு உயிருக்கு முடிவு நாள் ஆனதோ! உமக்கு முதுகு வலி தீரும் போதும், நாயை விட கே…

  19. ஈழப்பிரச்சனை:3-ந் தேதி தி.மு.க. செயற்குழு கூட்டம் கடந்த வாரம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இலங்கை பிரச்சனை தொடர்பாக இறுதி தீர்மானம் நிறைவேறியது. அப்போது, இலங்கை பிரச்சினை குறித்து தி.மு.க. செயற்குழுவை கூட்டி முடிவை எடுப்போம் என்று சட்டபேரவையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருந்தார். அதன்படி தி.மு.க. செயற்குழு கூட்டம் பிப்ரவரி 3-ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். thanks nakheeran

  20. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் உதயம்! ஈழத்தமிழர் பிரச்சனையில் ஒத்தக் கருத்துள்ள தலைவர்களின் கூட்டம் இன்று மாலை சென்னையில் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் அறிவித்தார். அதன்படி இன்று(28.01.09) மாலை நடந்த கூட்டத்தில், இலங்கை பிரச்சனைகள் குறித்து போராடுவதற்காக ’இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பை ஒரு மனதாக கொண்டுவந்தார்கள். இந்த அமைப்புக்கு பழ.நெடுமாறன் முன்னின்று நடத்துவார் என்றும் முடிவெடுத்துள்ளனர். thanks nakkheeran

  21. பிரபாகரன் தப்பி ஓட்டம், மதிவதனி சுற்றிவளைப்பு, பொட்டு அம்மான் கருணாவுடன் சேர்ந்துவிட்டார்... என்றெல்லாம் தொடர்ச்சியாக செய்தி களை பரப்பிக்கொண்டிருந்த இலங்கை ராணுவ தளபதிகளுக்கு, கல்மடுகுளம் அணைக்கட்டினை உடைத்தெறிந்து அதனூடாக புலிகள் நடத்திய தாக்குதலில் 2000-த்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்று கிடைத்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. ""முல்லைத்தீவை கைப்பற்ற 8 இடங் களிலிருந்து முன்னேறி வருகிற ராணு வத்தை எதிர்கொள்வது குறித்து முக்கிய தளபதிகளுடன் பிரபாகரன் ஆலோசித்த போது, கல்மடுகுளம் அணைக்கட்டினை தகர்ப்பதன் மூலம் ராணுவத்தினருக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தமுடியும் என்று புலிகளின் கடற்படை தளபதி சூசை யோசனை தெரிவித்துள்ளார். அணையை உடைப்பது மட்டுமல்லாமல் பாய்…

  22. ‘எங்கட அம்மாவோட ஆசை, எங்கட அப்பாவோட ஆசை, எங்கட தலைமுறையின்ட ஆசை, எங்கட இனத் தின்ட ஆசை, விடியப்போகின்ற விடியலின்ட வெளிச்சத்தில எங்கட ஆசை நிறைவேறும், தமிழீழம் நிச்சயம் உதயமாகும்!’ - கிளைடர் குண்டுத் தாக்குதலின் கோரத்தில் உடம்பெங்கும் ரத்த சகதியாக ரணகளப்பட்டிருந்த நிலையிலும், வலி மறந்து முணுமுணுக்கிறான் அந்தச் சிறுவன். பிப்ரவரி 4-க்குள் முல்லைத் தீவு முழுவதையும் பிடித்தே தீருவோம் என்கிற வெறியில் வேகமெடுக்கும் இலங்கை ராணுவத்தின் குண்டுகளுக்கு இரையாவதென்னவோ அப்பாவித் தமிழ் மக்கள்தான்! பிளேடால் பிரசவம்… கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்கள்தான் வட பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவை. வட பகுதியின் நாலரை லட்சம் தமிழர்களு…

  23. கடந்த வாரம் சென்னைக்கு வந்திருந்த மனித உரிமைப் போராளியும் அமெரிக்காவின் முன்னாள் உதவி அட்டர்னி ஜெனரலுமான புரூஸ் ஃபெயின், ``இலங்கையில் தமிழின அழிப்பு (நிமீஸீஷீநீவீபீமீ) நடக்கிறது. இதைச் செய்யும் அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரரும், இலங்கை அரசின் பாதுகாப்புத் துறை செயலாளருமான கோத்தபைய ராஜபக்ஷே, ராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருக்கிறேன்'' என்று பலரின் புருவங்களை உயரச் செய்துள்ளார். அவரைச் சந்தித்தோம். இலங்கையில் நடப்பது தமிழினப் படுகொலை என்று எதனடிப்படையில் குற்றம் சாட்டுகிறீர்கள்? ``தமிழருக்கு எதிரான இனவெறியை பல ஆண்டுகளுக்கு முன்பே மகாவம்சா, தர்மபாலா ஆகியோர் சிங்களவர் மனதில் பதிந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். கிறிஸ்து…

    • 0 replies
    • 649 views
  24. நான் வாழும் பகுதியில் இடம் பெற்ற ஒரு சம்பவம் புலம்பெயர்ந்து ஐரோப்பாவுக்குள் நுழைந்த இன்னமும் தங்கள் சுயவருமானத்தை ஈட்ட முடியாமல் முகாமில் வேலையற்றிருக்கும் ஒரு சில இளைஞர்கள் அவர்களுக்கு வாரம் வழங்கப்படும் தொகை உணவு மற்றும் செலவுகளுக்கும் சேர்த்து அந்த நாட்டு பணத்தில் 70.. வன்னி அவலத்தை பார்த்ததும் அவர்களுக்கு தாங்க முடியாத வேதனை. யோசித்தார்கள். தங்கள் கைப்பணத்தில் செலவு செய்து கொத்து ரொட்டி தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள். கொத்து ரொட்டி தயாரித்தார்கள். அதை தாங்கள் வாழும் பகுதியில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.