Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டது உண்மையே - டப்ளின் நீதிமன்று இத்தாலி மிலானைத் தளமாகக் கொண்டியங்கும் மக்களுக்கான நிரந்தர நீதிமன்றம் எனப்படும் அமைப்பு கடந்த வியாழன் மற்றும் வெள்ளி தினங்களில் அயர்லாந்து டப்ளின் நகரில் மேற்கொண்ட சிங்கள அரசின் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சிறிலங்கா அரசு குற்றவாளிதான் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. கண்ணால் கண்ட சாட்சிகள் மற்றும் புகைப்படங்கள் ஆவணங்கள் என்பவற்றைத் தனது விசாரனைகளுக்கு ஆதரவாக பயன்படுத்தியிருக்கும் இந்த நீதிமன்றம் சிங்களம் மேற்கொண்ட இனவழிப்புத் தொடர்பாக மேலும் விசாரணைகள் நடைபெற வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது. யுத்தத்தின் இறுதி வாரத்தின்போது முல்ல…

    • 7 replies
    • 1.3k views
  2. ஜகத் ஜய­சூ­ரிய விவ­காரம் சபையில் கடும் சர்ச்சை (எம்.எம்.மின்ஹாஜ்) ஜகத் ஜய­சூ­ரி­ய­விற்கு எதி­ராக யுத்த குற்றம் தொடர்பில் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கு குறித்து கூட்டு எதிர்­க்கட்­சி­யினர் எழுப்­பிய கேள்­விக்கு அர­சாங்க தரப்பில் இருந்து பதி­ல­ளிப்­ப­தற்கு இரு வார கால அவ­காசம் கோரப்­பட்­டதை அடுத்து நேற்று சபையில் கடு­மை­யான சர்ச்சை ஏற்­பட்­டது. இதன்­போது கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் சபையில் எழுந்து நின்று கோஷ­மிட்டு உடன் பதி­ல­ளிக்­கு­மாறு கோரினர். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை நிலை­யியற் கட்­டளை 23 இன் 2 கீழ் கூட்டு எதிர்­கட்சி பாரா­ளு­மன்ற குழு தலைவர் தினேஷ் குண­வர்­தன எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளித்த போதே…

  3. இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அன்றி எமது நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்பட்டு வருகிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தமது தாயக பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் போதிய சுயாட்சி பெற்று வாழ வேண்டும் என்பதே தமது கொள்கை எனத் தெரிவித்த சம்பந்தன் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தியே தாம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்தியாவை தமது நட்பு நாடாகக் கருதுவதாகவும் எனினும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் படி நடக்க வேண்டிய தேவை தமக்கு இல்லையென்றும் குறிப்பிட்ட சம்பந்தன் தமது கட்சியின் கொள்கைக்கு மாறாக ஜனாதிபதித் தேர்தலில் செயற்பட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்ப…

    • 2 replies
    • 396 views
  4. (மாத்தறை நிருபர்) எய்ட்ஸ் நோயை ஒழிக்கும் வேலை திட்டங்களை இப்பொழுதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். அல்லாது போனால் 2020ம் ஆண்டில் இலங்கையில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என எய்ட்ஸ் நோய் ஒழிப்பு தேசிய வேலைத்திட்ட நிபுணர் டாக்டர் சிசிர லியனகே காலியில் வைத்து இத்திடுக்கிடும் தகவலைத் தெரிவித்தார். செய்தியாளர்கள் சுகாதார அதிகாரிகள் சுகாதார பரிசோதகர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த கூட்டம் காலி வைத்தியசாலையில் இடம்பெற்றது. தொடர்ந்து அவர் உரையாற்றும் போதுஎச்.ஐ.வி தொற்றியவர்களுள் கடந்த 25 வருட காலங்களில் 1808 பேர் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளனர். தன்னின சேர்க்கை கொள்வது தற்போது எமது நாட்டில் மிக வே…

  5. (எம்.மனோசித்ரா) இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு , இங்கிலாந்து சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இலங்கைக்கான பயண ஆலோசனையில் அந்நாடு சில திருத்தங்களை செய்துள்ளது. அதற்கமைய இறக்குமதிக்கு செலுத்துவதற்கு கடும் டொலர் தட்டுப்பாடு காரணமாக, மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறையுடன் இலங்கையில் எச்சரிக்கை அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தியாவசிய பொருள் விற்பனை நிலையங்கள் , சமையல் எரிவாயு மற்றும் மருந்தக வளாகங்களில் பொருட் கொள்வனவிற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அது மாத்திரமின்றி உள்ளுராட்சி அதிகாரிகளின் தீர்மானங்களுக்கமைய அடிக்கடி மின் துண்டிப்பும் ஏ…

    • 1 reply
    • 258 views
  6. வரலாறுகளின் துணை கொண்டு தொடர்ந்து போராடினால் தமிழர்களுக்கு விடுதலை நிச்சயம்- ஜெஸி ஜாக்சன்செவ்வாய்க்கிழமை, மார்ச் 2, 2010, 14:15[iST] SAVE EMAIL FACEBOOKORKUT PRINTVote this article (129) (2) லண்டன்: கடந்த கால வரலாறுகளின் துணை கொண்டு தொடர்ந்து போராடினால் தமிழர்களுக்கு நிச்சயம் விடுதலை கிடைக்கும் என்று கூறியுள்ளார் அமெரிக்க மனித உரிமை ஆர்வலரும், அதிபர் ஒபாமாவுக்கு நெருக்கமானவருமான பாதிரியார் ஜெஸி ஜாக்சன். லண்டனில் நடந்த உலகத் தமிழர் பேரவை மாநாட்டின் இறுதி நாளில், ஜெஸி ஜாக்சன் கலந்து கொண்டு தமிழர்களைப் பெருமைப்படுத்தியுள்ளார். லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்து வந்த இந்த மாநாடு உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. மாநாட்டில் இங்கிலாந்து வெளிய…

  7. சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன் பிடித்த 8 இந்திய மீனவர்களை இன்று காலை சர்வதேச கடல் எல்லையில் ரோந்துப்பணிகளில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு மீன் பிடி படகுகளும் வலைகளும் மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்களை கடற்படையினர் காரைநகர் எலாரா நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்திய மினவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர். http://www.virakesari.lk/article/24644

  8. "ஐக்கிய தேசியக் கட்சியினால் அறிகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி மற்றும் அது சார்ந்த துறை இன்றைய அரசாங்கத்தினால் சீரழிக்கப்பட்டு விட்டது. அது மட்டுமல்லாது கல்வித் துறையை அரசியல் மயப்படுத்தி 40 இலட்சம் மாணவர்களினதும் இந் நாட்டினதும் எதிர்கா லத்தை பாழாக்கிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைப்பதன் மூலமே விமோசனம் கிடைக்கும் என்று ஐ.தே. முன்னணியின் வேட்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். அரசாங்கத்தின் நிர்வாகச் சீர்கேடு காரண மாக 306 அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திக்கின்ற பெற்றோர் கடனாளிகளாகி தமது பிள்ளைகளை தனியார் பாட சாலைகளில் சேர்க்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். …

    • 2 replies
    • 664 views
  9. மதில்மேல் பூனையாக கட்சிகள் காத்திருப்பு Share புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பான இடைக்­கால அறிக்கை வெளி­யா­கி­விட்­டது. 2015 தை மாதத்­தி­லும் பங்­குனி மாதத்­தி­லும் அரச தலை­வர் மற்­றும் நாடா­ளு­மன்­றத்­தின் அதி­கா­ரங்­கள், ஆட்சி மாற்­றத்­துக்கு உட்­பட்­ட­தைத் தொடர்ந்து, மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­த­படி நாடா­ளு­மன்­றம் அர­ச­மைப்­புச் சபை­யாக மாற்­றப்­பட்­டது. அந்­தச் சபை­யால் நிய­மிக்­கப்­ பட்ட வழி­காட்­டல் குழு­வில் நாடா­ளு­மன்­றத்­தில் பிர­தி­நித்து­வம் வகிக்­கும் அனைத்து அர­சி­யல் தரப்­பு­க­ளுக்­கும் இட­ம­ளிக்­கப்­பட்­டது. அந்­தக் குழு 2016ஆம் ஆண்­டு­பங்­குனி மாதம் …

  10. இலங்கையில் அவசர நிலை, சமூக ஊடகங்களுக்குத் தடை: ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்குமா? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ISHARA S. KODIKARA/GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையில் அவசரச் சட்டம் - காவலில் ராணுவத்தினர். இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியால், ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் தீவிரமாக உருவெடுத்த நிலையில், சனிக்கிழமை (ஏப்ரல் 2ம் தேதி) அவசரகாலச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இது தவிர, 36 மணி நேர ஊரடங்கு சட்டமும் அமலில் உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு முதல் இலங்கையில் ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட…

  11. ஐ.நா நிபுணர்கள் குழுவில் அங்கம் வகிக்குமாறு விடுத்த கோரிக்கையை ஜப்பான் பிரதிநிதி நிராகரித்துள்ளார் 25 March 10 12:55 pm (BST) இலங்கை விவகாரம் தொடர்பில் நியமிக்கப்படவுள்ள நிபுணர்கள் குழுவில் அங்கம் வகிக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு விடுத்த கோரிக்கையை ஜப்பானிய பிரதிநிதி நிராகரித்துள்ளார். இலங்கை மனித உரிமை நிலவரம் தொடர்பில் ஆராய்ந்து தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் விசேட நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த விசேட நிபுணர்கள் குழுவில் அங்கம் வகிக்குமாறு ஜப்பானிய இராஜதந்திரி ஒருவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த விசேட பிரதிநிதியின் பெயர் குறிப்பி…

    • 0 replies
    • 583 views
  12. சிறிலங்காவின் போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் சிறுவர்கள் தமது கல்வியை இடைநிறுத்துவது அதிகரித்து வருவதாக சிறிலங்கா அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். வடக்கின் எதிர்கால அபிவிருத்தியில் பொருளாதார அழுத்தம் மற்றும் வறுமை போன்றன தாக்கத்தைச் செலுத்தும் நிலையில் தற்போது மாணவர்கள் இடைவிலகுகின்ற எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வடக்கில் வாழும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இடைவிலகுவதே தற்போது அதிகரித்துள்ளது. சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த மக்களுக்கான மனிதாபிமானத் தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை. இதனால் இங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. போரால் முற்றாகப் பாதிக்கப்பட்ட வடக்கில் தொழில் வாய்ப்புக்கள் மிகக் குறைவாக உள்ள…

  13. இனவாதிகளின் பின்னணி யார்? மியன்­மாரில் இருந்து உயிர் தப்பி வெளி­யே­றிய முஸ்­லிம் அக­தி­களை, – ரொஹிங்­யர்­களை – அண்­மை­யில் பிக்­கு­க­ளு­டன் சேர்ந்து சிலர் தாக்க முற்­பட்ட சம்­ப­வத்தை உத­யன் கடு­மை­யா­கக் கண்­டிக்­கி­றது. முன்­னாள் அரச அதி­பர் மகிந்த ராஜ­பக்ச உட்­ப­டப் பல அர­சி­யல் தலை­வர்­க­ளும் கண்­ட­னங்­க­ளைத் தெரி­வித்­துள்­ள­னர். இலங்­கை­யில் இது­போன்ற சம்­ப­வங்­க­ளைக் கடந்த காலங்­க­ளில் அதி­க­ள­வில் எதி­ர்கொண்­ட­வர்­க­ளான தமி­ழர்­க­ளின் தலை­வர்­கள், சம்­ப­வத்தை உட­ன­டி­யா­கக் கண்­டித்­தி­ருக்­க­வேண்­டும். ஆனால் அது நடக்­க­வில்லை. ஒரே ஆறு­த­லாக வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் சபை அமர்­வில் இந்த விட­யத்தை எ…

  14. இலங்கை பொருளாதார நெருக்கடி: மத்திய வங்கி முன்னாள் ஆளுநருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது ஏன்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அஜித் நிவார்ட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலிற்கு வெளிநாடு செல்ல, கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் (07) இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றவியல் நம்பிக்கை மீறல், வங்கியாளரினால் முன்னெடுக்கப்பட்ட குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் குற்றவியல் சட்டம் மற்றும் பத்திரங்கள், பரிவர்த்தனைகள் கட்டளை சட்டத்தின் கீழ் நிதி மோசடி மற்றும் முறைகேடு இடம்பெற்றுள்ளமை உள்ளிட்ட 6 குற்…

  15. தமிழீழ தாயகத்தில் தமக்கு எட்டிய வழிகளில் எதையாவது பெறுவோம் அல்லது தம்மால் இயன்ற வழிகளில் எதையாவது செய்வோம் என்ற தொனியில் கூட்டமைப்பு மற்றும் அரசுடன் சேர்ந்து இயங்கும் குழுக்கள் மக்களிற்கு போதிக்கின்றன. இதற்கு மூலதனமாக கடந்த கால போரின் போதான இழப்புக்களை கூறி, இனி தமிழினம் இப்படியான அழிவினை எதிர்கொள்ள முடியாது, தாங்காது என பயமுறுத்தப்படுகின்றார்கள். அல்லது ஒருபடி மேலே சென்று இவ்வளவு காலமும் புலிகள் என்ன பிடுங்கினார்கள் என்றும் கேட்கப்படுகின்றது. இப்படியான கறாரான வசனங்கள் ஊடகங்களுக்கு வராமல் பார்த்து கொள்வதிலும் ஜாக்கிரதையாக இருக்கின்றனர். ஊர்களில் சின்ன சின்ன கூட்டங்களில் கூட்டமைப்பு மற்றும் அரசுடன் சேர்ந்து இயங்கும் குழுக்கள் என்னென்ன சொல்கின்றார்கள் என்பதன…

    • 6 replies
    • 909 views
  16. மக்கள் மீது சி.வி.க்கு அளவுகடந்த பாசம் இதனால்தான் தெற்கில் விமர்சனம் என்கிறார் பஷில் (ரி.விரூஷன்) நாட்டில் போர்க்­குற்­றங்கள் எவையும் இடம்­பெ­ற­வில்லை, ஆனாலும் சில குற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ளன. அது தொடர்­பாக தற்­போது அர­சாங்கம் சில நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. வடக்கு மக்கள் மீது விக்­கி­னேஸ்­வரன் கொண்­டுள்ள அளவு கடந்த பாசமே அவரை தெற்கில் உள்­ள­வர்கள் விமர்­ சிக்க கார­ண­மாகும் என்று முன்னாள் அமைச்­ச­ரான பஷில் ­ரா­ஜ­பக் ஷ தெரி­வித்தார். இரண்டு நாட்கள் விஜயம் மேற்­கொண்டு வடக்­குக்கு வந்­துள்ள முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ இங்கு தமது புதிய கட்­சி­யான ஸ்ரீலங்கா பொது­ஜன பெரமுன கட்சியின் செயற்­பா­டு­களை ஆர…

    • 8 replies
    • 580 views
  17. இலங்கையில்... தற்போது நிலவும், பொருளாதார நெருக்கடி குறித்து உலக வங்கி கவலை! இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது. உலக வங்கியின் பணிப்பாளர் Faris Hadad-Zervos இனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கவலை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார மந்தநிலையினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், மக்கள் பாதிக்கப்படுவதற்கு நாட்டில் நிலவும் நிச்சயமற்ற பொருளாதார நோக்கமே முக்கிய காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வறுமை கோட்டுக்கு உட்பட்டோர் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் உலக வங்கி உறுதி பூண்டுள்ளதாக உலக வங்கியின் பணிப்பாளர் மேல…

  18. திரு உருத்திரகுமாரன் அண்ணா அவர்களுக்கு பரமேஸ்வரன் எழுதிக்கொள்வது. விடயங்களை நீட்டாமல் நேரிடையாக சுருக்கமாகவே கேட்க விருப்புகிறேன். முக்கியமான ஒன்று இது உங்களுக்காகன விமர்சனமே அல்லது வீன்பழியே அல்ல. தமிழீழம் என்ற சொல்லுக்காக மட்டுமே உயிரையும் இழக்க புலம்பெயர்ந்த எமது உறவுகள் இன்னமும் தயாரகவே உள்ளார்கள் இதை முதலில் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இந்த கடிதத்திற்கான முக்கியமான விடயங்களை இங்கே பார்ப்போம். அதற்குமுன் எனது பங்கிற்கும் மக்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியல்ல இது என்பதையும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தடங்கள் ஏற்படுத்தும் சிந்தனைக்குறைபாடன வேலையும் இது அல்ல என்பதையும் குறிப்பிட விரும்பும் அதே வேளையில் பல நாடுகளில் வாழும் மக்கள் மற்றும் என் ப…

    • 37 replies
    • 3.3k views
  19. எதிர்மனுக்கள் காரணமாக தேர்தல்கள் பின்போடப்படலாம் எஸ்.கே. உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல்­க­ளையும் ஒரே தினத்தில் நடத்­த­வேண்டும் என்ற அரசின் ஆலோ­ச­னைக்கு எதி ராக மனுத்­தாக்கல் செய்­துள்­ளதால் தேர்­தல்­களை நடத்­த­மேலும் கால­தா­மதம் ஏற்­ப­ட­லா­மென தேர்­தல்­களைக் கண்­கா­ணிக்கும் அமைப்­பு கள் தெரி­விக்­கின்­றன. மனு­மீ­தான விசா­ர­ணைகள் எப் ­போது ஆரம்­பிக்­கப்­ப­டு­மென கூற­ மு­டி­யா­துள்­ள­தாக 'பெப்ரல்’ அமைப் பின் பணிப்­பாளர் ரோஹண ஹெட்­டி­யா­ராச்சி தெரி­வித்­துள்ளார். மேலும் மனுக்கள் மூலம் கோரப்­பட்­டுள்ள திருத்­தங்­களை மேற்­கொள்ள மேலும் கால­அ­வ­காசம் தேவை­யென்­பதால் தேர்­தல்­களை நடத்த மேலும் கால­தா­மதம் ஏற்­ப­ட­ல…

  20. அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து. விலகுவதற்கு... 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம்! அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகுவதற்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார். அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ். தௌஃபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோரே அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் மிகவும் இக்கட்டான நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்றும் இதற்கு உரிய தீர்வுகாணுமாறு தாம் முன்வைத்த கோரிக்கைக்கு அரசாங்கம் தீர்வினை வழங்கவில்லை என்றும் பைசல…

  21. நம்பிக்கையில்லா பிரேரணைக்கு... ஆதரவளிக்க, 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் – கம்மன்பில ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக முன்னாள் அமைச்சரும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அரசாங்கம் பதவி விலகாவிட்டால் இந்த வாரத்தில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நகர்த்த திட்டமிட்டபோது, அவர்களுக்கு குறைந்தபட்சம் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதர…

  22. மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறை இலங்கையில் மூன்று பிரதான மொழிகள் மக்களால் பேசப்பட்டு வருகின்றன. சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக விளங்கும் அதேவேளையில், ஆங்கிலம் இணைப்பு மொழியாக உபயோகிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களால் பிரதானமாகப் பேசப்பட்டு வரும் மொழியாக தமிழ் இருந்து வருகின்றது. இலங்கை குடியேற்ற நாடாக இருந்த காலகட்டங்களில் ஆங்கிலம…

  23. சிறிலங்கா அரசினால் கைது செய்யப்பட்ட , சரணடைந்த தமிழர்களில் சிலர் நேற்று விடுதலை செய்யப்பட்டதாக வன்னியில் இருந்து தகவல் கிடைத்திருக்கிறது. இவர்கள் விடுதலைப்புலிகள் வன்னியை நிழல் ஆட்சி புரிந்தபோது ஒரு நாள் அல்லது சில நாட்கள் விடுதலைப்புலிகளினால் நாடத்தப்பட்ட துறைகளில்( உ+ம் காவல்துறை, வங்கி...) வேலை செய்தவர்கள் என்றும் இவர்களின் குடும்பத்தில் ஒருவர் விடுதலைப்புலிகளில் இணைந்து செயல்பட வேண்டும் என்ற நிபந்தனைக்காகவே சேர்ந்தார்கள் என்று அரசு தரப்பு கூறி விடுதலை செய்திருக்கிறார்கள். இவர்கள் விடுதலைப்புலிகளிடம் ஆயூதப்பயிற்சி பெறாதவர்கள் என்றும் தவிர்க்க முடியாத காரணங்களினால் தான் இணைந்தார்கள் என்று கூறி அரசு தரப்பு இவர்களை விடுதலை செய்திருக்கிறது. சில மேற்கத்தைய நாடுகளின் அழுத்…

  24. வடமாகாணசபை முறையாக செயற்படுவதற்கு ஆரம்பத்திலிருந்தே அரசாங்கம் ஒத்துழைத்துச் செயற்பட்டிருந்தால் வடமாகாணத் தமிழ்ப்பேசும் மக்களுக்கு உருப்படியான ஒரு அரசியல் சமிஞ்ஞையை வெளிக்காட்டியிருக்க முடியும் என நீதியரசரும் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வீரகேசரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகனின் ஆசிரியர் தலையங்கத்தின் தரிசனம் நூல்வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற போதே பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் - அரசாங்கம் தென்னிலங்கைச் சிங்களக் கடும்போக்காளர்களைத் திருப்திப்படுத்தினால் அடுத்த தேர்தலில் சிங்கள வாக்குகளைப்…

  25. ‘எனது தந்தைக்கோ, எனக்கோ... நாட்டைவிட்டு வெளியேறும் எண்ணம் இல்லை’ – நாமல் அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக நாம் சந்திக்க தயார் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ருவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள அவர், “கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன். எனது தந்தை மஹிந்த ராஜபக்ஷலுக்கோ எனக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் அறவே இல்லை. அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக நாம் சந்திக்க தயார்” என தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1281629

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.