ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143647 topics in this forum
-
1/9/2009 8:30:42 - விடுதலைப் புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையானது சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இடையூறாக அமையாது. புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது, பிரசாரம் செய்வது, புலிகளுடன் தகவல் தொழில்நுட்பத்தைப் பரிமாற்றம் செய்வது அனைத்துமே தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். புலிகள் மீது தடை விதிக்கப்பட்டிருந்தும் சமாதான பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க வெளிநாடொன்றுக்கு அழைப்பு விடுப்பதற்கும் அதற்கான பிரதிநிதியை தெரிவு செய்வதற்கும் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு அதிகாரம் உண்டு என்றும் அவர் மேலும் தெரிவித்தார். கிருலப்பனையிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மான…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் தனியாருக்குச் சொந்தமான மிகப் பெரியதும், மக்கள் செல்வாக்கு மிக்கதுமான - இலத்திரனியல் ஊடக நிறுவனமான - மகாராஜா குழுமத்தின் எம்.ரி.வி., எம்.பி.சி. கட்டமைப்புகளின் பிரதான கலையகம் மீது செவ்வாய் அதிகாலை ஆயுதம் தாங்கிய அராஜகக் கும்பல் ஒன்று நடத்திய அட்டகாசத்தில் அந்தக் கலையகம் எரிந்து நாசமானது. அதனால் எழுந்த கரும் புகை மண்டலம் அடங்குவதற்குள், நேற்று கொழும்பு, இரத்மலானையில் ‘த சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்க, பட்டப்பகல் வேளையில் நட்டநடு வீதியில் வைத்து ஆயுததாரிகளால் சுடப்பட்டிருக்கின்றார். குண்டு மழையை எதிர்கொண்ட அவர், வைத்தியசாலையில் நீண்ட பலமணி நேர உயிர்ப் போராட்டத்தின் பின்னர் மரணமாகியிருக்கின்றார். யுத்தச் செயற்பாடுகளில் இருந்து அபிவிருத்த…
-
- 0 replies
- 680 views
-
-
சிறிலங்காவின் மகிந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்டித்து அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 434 views
-
-
யாழ். குடாநாட்டில் இருந்து பின்வாங்கிச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி நேற்று வியாழக்கிழமை லெப். கேணல் நலிந்த குமாரசிங்க கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 388 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய தொடர் எறிகணைத் தாக்குதலில் அப்பாவி பொதுமகன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 400 views
-
-
இனி பிழைக்குமா ஈழத் தமிழினம்? - ரவிக்குமார் எம்.எல்.ஏ. 'இலங்கைப் போர் முனையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது?' என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியிருக்கிறது! புலிகளின் நிர்வாகத் தலைமையிடமாகச் செயல்பட்டு வந்த கிளிநொச்சி, இவ்வளவு சீக்கிரம் வீழ்ந்துவிடுமென இலங்கை அரசே கூட எதிர்பார்க்கவில்லை. இலங்கை ராணுவத்தின் பிடிக்கு கிளிநொச்சி வருவதற்கு முன்பு வரை அங்கே கடுமையான யுத்தம் நடந்துகொண்டிருந்தது. சிங்களப் படையினர் பலர் கொல்லப்பட்டு ஏராளமானோர் காயமடைந்திருந்தார்கள். இலங்கை ராணுவம் மரணக் கண்ணிக்குள் சிக்கிக் கொண்டுவிட்டதாக ராணுவ நோக்கர்கள் கருத்து தெரிவித்துவந்தார்கள். ஆனால், எவரும் எதிர்பார்க்காத விதமாக கிளிநொச்சியை புலிகள் காலி செய்துவிட்டு பின்வாங்கிச் சென்றிருக்கிறார்கள…
-
- 12 replies
- 3k views
-
-
போருக்குக் காரணமான தென்னிலங்கை அம்பலத்துக்கு வருகின்ற உண்மைகள் ? நிலவரத்தின் ஆய்வாளர் கபிலன் இலங்கைத் தீவில் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற போருக்கு காரணம் யார் என்ற உண்மை இப்போது அவர்களின் வாயாலேயே வெளிவரத் தொடங்கியிருக்கிறது. அண்மையில் கிளிநொச்சி அரச படைகளால் வெற்றிகொள்ளப்பட்ட பின்னர்- தென்னிலங்கையில் இருந்து வருகின்ற கருத்துக்கள் முற்றிலும் இனவாத விஷம் கலந்ததாகவும்- போருக்கான தமது பங்களிப்புக்கு உரிமை கோருவதாகவும் இருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது. கிளிநொச்சியின் வெற்றியில் உரிமைகோரி பிரதான கட்சிகள் தமக்கிடையே மோதிக் கொண்டிருக்கின்றன. இந்த மோதலின் காரணமாக ஒரு உண்மை அவர்களின் வாயாலேயே வெளிவந்தும் இருக்கிறது. ‘நுணலும் தன் வாயால் கெடும்…
-
- 0 replies
- 2.6k views
-
-
வன்னி மக்கள் மீதான படுகொலையை தடுத்து நிறுத்துமாறு அவசர வேண்டுகோள்- பா.உ.கஜேந்திரன் வன்னியில் உள்ள மக்கள் மீது சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டுவரும் இனப் படுகொலைகளை தடுத்துநிறுத்த அவசர நடவடிக்கை எடுக்கும்படி கொழும்பிலுள்ள தூதரகங்களிடம் அவசர கோரிக்கை ஒன்றினை தமிழ் தேசிய கூட்டமைப்ப யாழ் மாவட்ட பா.உ செல்வராஜா கஜேந்திரன் விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள நோர்வே, அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம்க னடா ஆகிய நாட்டு துதரகங்களுக்கு அவர்மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ள அவசரகடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் வருமாறு. வன்னிமக்கள் மீதுஇடம் பெறும்மனித வன்னி மக்கள் மீது இடம் பெறும் மனித வதைகளை தடத்து நிறுத்தஅவசர நடவடிக்கை எடுக்கும் படிகோருகின்றேன் கடந்த ஒருவாரகாலமாக …
-
- 1 reply
- 851 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பன்குளம் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலும் 12 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 358 views
-
-
வன்னியில் மக்கள் நாளும் பொழுதும் நேரில் காணும் வன்னி பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்குள்ள சட்ட ரீதியான உரிமைகளின் அடிப்படையில் இந்த கொடூரமான எறிகணை வீச்சையும், வான் தாக்குலையும் உடன் நிறுத்துமாறு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 519 views
-
-
Dear Friends, Here is a letter which we plan to send or hand (if we can) to President Obama and Secretary of State Clinton after January 20, 2009. We hope to have 100,000 (electronic) signatures world-wide to add to the letter. If you would like your signature to be appended to the letter, please go to the link below, click, and sign the petition. The link is: http://www.tamilsforobama.com/sign/letter.html Also ask your Tamil and non-Tamil friends to help our effort by adding their signatures to the letter. FYI: Here is our latest press release, “Tamils for Obama Urging Obama and Clinton to Send Strong Signal to Sri Lanka to Stop Genocidal Civil War …
-
- 8 replies
- 2.6k views
-
-
தருமபுரம் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புகள் மீது சிறிலங்கா படையினர் ஆட்லறி தாக்குதல்: 4 பேர் பலி; பலர் காயம் [ வியாழக்கிழமை, 08 சனவரி 2009, 11:13.33 AM GMT +05:30 ] தருமபுரம் சந்திப் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று வியாழக்கிழமை பி.பகல் 1.00 மணியளவில் சிறிலங்கா படையினர் மிலேச்சத் தனமான முறையில் மேற்கொண்ட ஆட்லறித் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடைபெற்ற தருமபுரம் சந்திப் பகுதியிலிருந்து வைத்தியசாலை 75 மீற்றர் தூத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இடம்பெயர்ந்த மக்கள் செறிந்து வாழும் மருத்துவமனைப் பகுதியை இலக்கு வைத்தே அடிக்கடி சிறிலங்கா படையினர் விமான மற்றும் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். இதனால் மருத்துவ…
-
- 1 reply
- 665 views
-
-
தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களை தடை செய்யுமாறு கண்டியில் சுவரொட்டிகள் [ வியாழக்கிழமை, 08 சனவரி 2009, 06:42.57 PM GMT +05:30 ] தென்னிந்திய தமிழ் திரைப்படங்களுக்கு சிறிலங்காவில் தடைவிதிக்க வேண்டும் என கோரிய சுவரொட்டிகள் சில கண்டி நகரப்பதியில் ஒட்டப்பட்டிருந்தன. கண்டி நகரின் முக்கிய பிரதேசங்களான மத்திய பேருந்து நிலையம் சந்தை தொகுதி கட்டிடங்கள் மற்றும் புகையிரத நிலையங்கள் உள்ளிட்ட பிரதேசங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த இந்த சுவரொட்டிகளில் தென்னிந்திய தமிழ் திரைப்படங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களை வெளிப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. thanks tamilwin
-
- 0 replies
- 885 views
-
-
தென்பகுதியில் ஜனநாயகம் இல்லை வன்னி மக்கள் எவ்வாறு வருவார்கள்?-ரவூவ் ஹக்கீம் வெள்ளி, 09 ஜனவரி 2009, 00:09 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] தென்பகுதியில் முதலில் ஜனநாயகத்தை ஏற்படுத்தாமல் கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருந்து மக்களை அரசாங்கத்தால் அழைக்க முடியாது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூவ் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தெற்கிலேயே ஜனநாயகம் இல்லாத நிலையில் எவ்வாறு வன்னி மக்கள் தென்பகுதிக்கு வருவார்கள் என அரசாங்கம் எதிர்பார்க்க முடியும் என அவர் கேள்வியெழுப்பினார். ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த ரவூவ் ஹக்கீம், 17வது திருத்தச்சட்டமூலம் முழுமையாக அமுல்படுத்தப்படாமையே இதற்கான காரணம் எனவும் கூறினார் http://www.pathivu.com/n…
-
- 2 replies
- 889 views
-
-
கிளிநொச்சியின் பின் விடுதலைப் புலிகள் கிளிநொச்சி வீழ்ச்சி கண்டபின் விடுதலைப் புலிகளால் மீண்டும் மேலெழுந்துவர முடியுமா? இலங்கைத் தமிழரின் நோக்கம் நம்பிக்கையற்றதாகி விட்டதா? புலிகளை தோற்கடிப்பதால் சமாதானம் ஏற்படுமா? பயங்கரவாதம் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பாக இரட்டைத் தனமான நிலைப்பாட்டை இந்தியா கடைப்பிடிக்கின்றதா? இக்கேள்விகளுக்கு இந்தியா அமைச்சரவை செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளர் பி.ராமன் பதிலளித்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராக இருந்த கிளிநொச்சியை 2 ஜனவரி 2009 இல் இலங்கை இராணுவம் கைப்பற்றியதையடுத்து அது தொடர்பாக நான் எழுதிய கட்டுரை குறித்து பல கேள்விகள் எனக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றுக்குப் பதிலளிக்க நான் முயற…
-
- 10 replies
- 4.5k views
-
-
விடுதலைப் புலிகளுடன் பேச வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா யோசனை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தத் தேவையில்லை என்று இலங்கைக்கு அமெரிக்கா யோசனை கூறியுள்ளது. தனி நாடு கோரி விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. தற்போது இலங்கை ராணுவத்தின் கை மேலோங்கியுள்ளது. அத்துடன் விடுதலைப் புலிகளின் கோட்டை என கருதப்படும் கிளிநொச்சி பகுதியையும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்துவது தேவையற்றது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை மூலம் இலங்கை அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டம் இதுவாகத்தான் இருக்கும். விடுதலைப் புலிகளி…
-
- 5 replies
- 2.9k views
-
-
இராணுவச் சடலங்கள் ஒப்படைப்பு விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட சிறிலங்கா இராணுவச் சடலங்கள் ஏழு நேற்றுக்காலை புதுக்குடியிருப்பில் வைத்து பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கக் குழுவிடம் கையளிக்கப்பட்டன. அம்பகாமம் பகுதியில் நேற்று முன்தினம் முன்னேற முயன்ற சிறிலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட உக்கிரத் தாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட ஏழு படைச்சடலங்களே பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கக் குழுவிடம் கையளிக்கப்பட்டன. http://www.sankathi.com/
-
- 0 replies
- 1.6k views
-
-
இன்னொரு கடிதம்: கிளிநொச்சி வரைக்கும்... அதற்கு அப்பாலும்... அன்பிற்குரியவர்களே! அண்மையில் நான் ~ஒரு கடிதம்| எழுதினேன். அதற்கு வந்திருந்த கருத்துக்களில் பல கேள்விகளாகவும், சந்தேகங்களாகவும் இருந்தன. அவற்றை மனதில் கொண்டு இப்போது ~இன்னொரு கடிதம்| எழுதுகின்றேன். கிளிநொச்சியும் இப்போது வீழ்ந்து விட்டது. விரைவில், முல்லைத்தீவும் வீழலாம். ஆனையிறவைக் கடந்து சென்று சிறிலங்காப் படையினர் முகமாலையையும், அல்லது, முகமாiயில் இருப்போர் ஆனையிறவையும் அடையலாம். எதுவும் நடக்கலாம். வெளிநாட்டுத் தமிழர்களில் ஒரு பகுதியினர் தம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பது பற்றிய எந்த அக்கறையுமற்று உள்ளனர். இன்னொரு பகுதியினர் - ~பிரபாகரனதும், புலிகளதும் கதை இத்தோடு மு…
-
- 5 replies
- 1.3k views
-
-
நாகை: நாகை மாவட்டம் விழுந்தமாவடி என்ற இடத்தில் வழி தவறி இறங்கிய கடற்படையினர் மூவரால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதால் இலங்கையிலிருந்து விடுதலைப் புலிகள் தப்பி வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய கடலோரப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, நாகை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் அன்னியர்கள் நடமாட்டம் உள்ளதா என்று கடலோர காவல்படையின் ஒரு பிரிவான கடலோர போலீஸ், கியூ பிரிவு மற்றும் உளவுத்துறை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் விழுந்தமாவடி அருகே மணமேடு கிராமத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் 3 பேர் நடமாடுவதாக அப…
-
- 0 replies
- 3.1k views
-
-
கானொளி இனைக்க பட்டுள்ளது http://www.eurotvlive.com/script/viewVideo...571639710431117
-
- 0 replies
- 3.5k views
-
-
கானொளி இனைக்க பட்டுள்ளது http://www.eurotvlive.com/script/viewVideo...471942786575168
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை: சம உரிமை இலங்கைத் தமிழரது பிறப்புரிமை என்பதை சுட்டிக் காட்டவும், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் இம்மாதம் 12-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் இல.கணேசன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசும், தமிழக அரசும் இரட்டை வேடம் போடுகின்றன. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத்தை கோரும் தீர்மானத்தை அமல்படுத்த தமிழக முதலமைச்சர் நேரில் சென்று வலியுறுத்தியும் பிரதமர் மவுனம் சாதிக்கிறார். பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்வார் என அறிவித்து விட்டு இதுவரை செல்லாமல் இருப்பதும், அதை நியாயப்படுத்தி அமைச்சர் டி.ஆர…
-
- 1 reply
- 956 views
-
-
கிளிநொச்சி வரைக்கும்... அதற்கு அப்பாலும்... அன்பிற்குரியவர்களே! அண்மையில் நான் ~ஒரு கடிதம்| எழுதினேன். அதற்கு வந்திருந்த கருத்துக்களில் பல கேள்விகளாகவும், சந்தேகங்களாகவும் இருந்தன. அவற்றை மனதில் கொண்டு இப்போது ~இன்னொரு கடிதம்| எழுதுகின்றேன். கிளிநொச்சியும் இப்போது வீழ்ந்து விட்டது. விரைவில், முல்லைத்தீவும் வீழலாம். ஆனையிறவைக் கடந்து சென்று சிறிலங்காப் படையினர் முகமாலையையும், அல்லது, முகமாiயில் இருப்போர் ஆனையிறவையும் அடையலாம். எதுவும் நடக்கலாம். வெளிநாட்டுத் தமிழர்களில் ஒரு பகுதியினர் தம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பது பற்றிய எந்த அக்கறையுமற்று உள்ளனர். இன்னொரு பகுதியினர் - ~பிரபாகரனதும், புலிகளதும் கதை இத்தோடு முடிந்துவிட்டது. …
-
- 10 replies
- 3.8k views
-
-
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் திரு.லசந்த விக்கிரமதுங்க அவர்களின் படுகொலையை நானும் எனது அரசாங்கமும் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம் என இலங்கை ஜனாதிபதி மகிந்த கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு துணிச்சல் மிக்க பத்திரிகையாளரும் பலவருடங்களுக்கும் மேலாக எனக்கு மிகவும் அறிமுகமான எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான திரு.விக்கரமதுங்கவின் அகால மரணம் எனக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியது. இக்காட்டு மிராண்டித் தனமான நடவடிக்கைக்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விசாரித்து உடனடியாக சட்டத்தின்முன் நிறுத்துமாறு நான் பொலிஸாரை பணித்துள்ளேன். கவலையான இச்சந்தர்ப்பத்தில் திரு.விக்கிரமதுங்க அவர்களின் குடும்பத்தாருக்கும் சண்டே லீடர் பத்திரிகை அல…
-
- 13 replies
- 1.7k views
-
-