ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
சென்னை: இதற்கிடையே சென்னையிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களுக்கான உதிரிப் பாகங்களை அனுப்பியதாக 8 இலங்கைத் தமிழர்கள் உள்பட 12 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையிலிருந்து புலிகளுக்கு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான உதி>ப் பாகங்களை சிலர் அனுப்புவதாக கியூ பி>வு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் போரூர், மேடவாக்கம் ஆகிய இடங்களில் புலிகளுக்கு ஆயுத உதிரி பாகங்களை சப்ளை செய்வோர் நடமாடுவதாக உறுதியான தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்தனர். போரூரில் போலீஸ் பிடியில் சிலரும், மடிப்பாக்கத்தில் சிலரும் சிக்கினர். அவர்களில் எட்டு பேர் இலங்கைத் தமிழர்கள், மற்றவர்கள்…
-
- 3 replies
- 2.4k views
-
-
இந்தியாவால் சிறீலங்காவிற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி சிறீலங்காவின் தெற்குபிராந்திய தொடரூந்து இணைப்பை அபிவிருத்தி செய்வதற்கு 100 மில்லியன் அமெரிக்கடொலர் கடனுதவி அளிப்பதாக இன்று இந்தி அலுவலகர்கள் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை கடந்த நான்கு வருடங்களில் 281 மில்லியன் அமெரிக்க டொலர்; கடனுதவியாக வழங்கியுள்ளதாகவும் இவை கோதுமைஇ பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்தியதாகவும் இந்தியதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இந்தியாவால் சிறீலங்காவிற்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பம்இ மற்றும் எண்ணை அகழ்வு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாகவும் சிறீலங்காவின் உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 850 views
-
-
வியாழக்கிழமை, ஏப்ரல் 14, 2011 திருக்கோவில் காஞ்சனாங்குடா சாகம வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தொன்றில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர் . அம்பாறையிலிருந்து உல்லை கடற்கரைப் பகுதிக்கு சென்ற உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் கனரக வாகனம் மீண்டும் அம்பாறைக்கு திரும்பிக் கொண்டிருக்கையிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகமாக பயணித்துக் கொண்டிருந்த குறித்த வாகனம் திடீரென நிறுத்த முனைகையில் கட்டுப்பாட்டினை இழந்து தடம்புரண்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமுற்ற அனைவரும் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். My link
-
- 0 replies
- 947 views
-
-
"அமைச்சரவை பிரச்சினையை முன்வைத்து சபையை கலைக்க முயற்சி" (ரி.விரூஷன்) வடக்கு மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைச்சரவை தொடர்பான பிரச்சினையாது சபையை கலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளனர். இன்று இடம்பெற்ற வட மகாண சபையின் அமர்வின் இறுதியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபை சார்ந்து அமைச்சரவை செயற்பாட்டில் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. அவ்வாறு அமைச்சரவை செயற்பட்டால் அதனை கூட்ட வேண்டிய பொறுப்பு பிரதம செயலாளருக்கு உண்டு. இவ்வாறான நிலையில் அவ்வாறு கூட்டுகின்ற நில…
-
- 0 replies
- 309 views
-
-
கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம் பெற்றது ? - கடற்படையினர் கச்சதீவையும் விட்டுவைக்கவில்லை என்கிறார் சார்ள்ஸ் நிர்மலநாதன் Published By: VISHNU 23 MAR, 2023 | 03:52 PM (எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் படையினர் கச்சத்தீவையும் வீட்டுவைக்காது அங்கே பெரிய புத்தர் சிலையொன்றை பிரதிஸ்டை செய்துள்ளார்கள். அந்த சிலையை அங்கிருந்து அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது. பொருளாதார மீட்சியில் இருந்து …
-
- 17 replies
- 712 views
- 2 followers
-
-
தீர்வு முயற்சியில் அரசுடன் கைகோக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சுதந்திரதின உரை மூலம் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான கலந்துரையாடல்களில் அரசுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. வடக்கில் பயங்கரவாத அச்சுறுத்தல்களில் இருந்தும், வன்முறைகளின் கீழ்த்தரமான விளைவுகளில் இருந்தும் அப்பாவித் தமிழ் மக்களை மீட்பதற்காக அரசுடன் கைகோத்துச் செயற்பட ஒன்றிணையுமாறு ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அழைத்திருக்கிறார். நாட்டின் 59 ஆவது சுதந்திரதினமான நேற்று கொழும்பு காலிமுகத்திடலில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய சுதந்…
-
- 6 replies
- 1.5k views
-
-
மைத்திரிபாலவின் அரசியல் சாசனத்தை உருவாக்கும் பணிகளில் சரத் என் சில்வா ஈடுபட்டுள்ளார் 02 டிசம்பர் 2014 மைத்திரிபாலவின் அரசியல் சாசனத்தை உருவாக்கும் பணிகளில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மைத்திரிபால சிறிசேனவின் சார்பில், நேரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை என சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள பலர் இருக்கின்றார்கள் எனவும் அதனால் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சட்டம் மற்றும் அரசியல் சாசன வரைவுத் திட்டங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக வெற்றியீட்டுவார் எ…
-
- 0 replies
- 451 views
-
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச கால நிலை ஆலோசகர் எரிக்சோல்ஹேம் வியாழக்கிழமை (30) மன்னார் மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். மன்னார் தலைமன்னார் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட எரிக்சோல்ஹேம் தலைமன்னார் விஜயத்தின் பின் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களுடன் மன்னார் ஆயர் இல்லத்தில் சிநோக பூர்வ கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதனை தொடர்ந்து மதியம் 3 மணியளவில் மன்னார் செபஸ்ரியார் பேராலயத்தில் அமைந்துள்ள மறைந்த முன்னால் மன்னார் மறைமாவட்ட ஆஜர் இராஜப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் நினைவிடத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து மன்னார் மறை மாவட்ட ஆயர் இல்லத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மறைந்த மன்…
-
- 0 replies
- 666 views
-
-
[11 - February - 2007] [Font Size - A - A - A] -ரட்ணம் கழகத் தலைவர் கேளி சில்வேரா "எமது" ரட்ணம் கழகம் 1950 ஆம் ஆண்டு தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், 1967 ஆம் ஆண்டு, அகில இலங்கை ரீதியில் கழகங்களிடையே யாழ். நகரில் நடாத்தப்பட்ட சினேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டியில் தான் எமது கழகம் முதலாவது சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது. இதன் பின்பு தான் 1968 ஆம் ஆண்டு இலங்கை உதைப்பந்தாட்ட கட்டுப்பாட்டுச் சபை அகில இலங்கை ரீதியில் இளைஞர் அணியிகளிடையே நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியில் "மீரா" சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினோம்". இவ்வாறு இன்று அகில இலங்கை ரீதியில் முன்னிலை கழகமாகத் திகழும் ரட்ணம் கழகத்தின் தலைவர் கேளி சில்வேரா தெரிவித்தார். இவர் தினக்குரலுக்கு அளித்த விசேட பேட்டியில்…
-
- 0 replies
- 817 views
-
-
ரொபேட் பிளேக்கை மஹிந்த சந்திப்பதில்லையென முடிவு இணைய-பதிப்பு வவுனியா நிருபர் திங்கட்கிழமை, ஏப்ரல் 25, 2011 கொழும்பு வரவுள்ள ஆசிய விவகாரத்திற்கான அமெரிக்க இராஜாங்க செயலர் ரொபேட் பிளேக் அவர்களை மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பதில்லையென முடிவெடுத்துள்ளார். அமைச்சர் பீரிஸ் மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் ஆகியோரையே சந்திக்க விடுவது எனவும் மஹிந்த முடிவெடுத்துள்ளாராம். அண்மையில் ரொபேட் பிளேக் இலங்கை தொடர்பாக விடுத்த அறிக்கைகள் அத்துடன் மஹிந்த இராஜபக்ஷவை குடும்ப ஆட்சி நடத்துவதாக அண்மையில் கூறியவையே இந்த கோபத்திற்கு காரணம் என தென் இலங்கை செய்திகள் கூறுகின்றன. இதே வேளை மஹிந்த இராஜபக்ஷவை குடும்ப ஆட்சி என விமர்சனம் செய்த பிளேக்கிடம் அது தொடர்பாக விளக்கம் கேட்குமாறும் மீன்பிடி அம…
-
- 1 reply
- 956 views
-
-
சீருடை அணிந்தாலும் நாமும் மனிதர்கள் தான் உங்கள் பிரச்சினைகளை எங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். எனது பதவிக்காலத்தில் முடிந்தவரை தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பேன் என யாழ்.மாவட்டத்தின் புதிய கட்டளைத் தளபதி கண்ணகி நலன்புரி மக்களிடம் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகத் அல்விஸ் நேற்று கண்ணகி நலன்புரி நிலையத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார். அதன்போது மக்களுடன் கலந்துரையாடிய கட்டளைத்தளபதி மேற்கண்டவாறு அவர்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களுடைய நிலைமைகளை நான் நன்கு அறிவேன். முன்னாள் கட்டளைத் தளபதி உங்களுக்கு எவ்வாறான செய…
-
- 1 reply
- 567 views
-
-
Published By: T. SARANYA 10 APR, 2023 | 04:13 PM தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உட்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உளவளத் துணைச் சிகிச்சைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிராஜன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – கந்தர்மடம், பழம் றோட்டுப் பகுதியில் உள்ள தனியார் மாணவர் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சமயம், பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உட்கொண்டமை மற்றும், போதை மாத்திரை வெற்று உறைகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரி…
-
- 0 replies
- 416 views
- 1 follower
-
-
அண்ணன் மகிந்தவின் அரசியலுக்கு, தம்பி கோத்தபாயா போட்ட வாய்க்கரிசி – வி.கிருபாகரன்! Posted by uknews On April 29th, 2011 at 9:35 pm ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய புள்ளிகளிடம் விசேடமாக மனித உரிமை சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் எதற்காக ஐ. நா. சபை உலகில் உள்ள வேறுபட்ட விடயங்களில் மௌனம் காக்கிறது என்ற கேள்விகளை நாம் தொடுக்கும் ஒவ்வொரு வேளையும், அவர்கள் கூறும் பதில், அதாவது ஐ. நா. சபை நடவடிக்கையை தாமதித்தாலும்; நிட்சயமாக நடவடிக்கை எடுத்தே தீரும் என்பார்கள். பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களாகிய நாம், பல தடவை ஐ. நா. விடயங்களில் ஏமாற்றங்களை சந்தித்துள்ளோம். ஐ. நாவை பொறுத்தவரையில் அதாவது 192 அங்கத்துவ நாடுகளுக்கும் முன்னுரிமை வழங்குவது வழமையானதும் அவர்களது புரிந்துணர்வும். மு…
-
- 1 reply
- 1.6k views
-
-
எதிரணியினருக்கு பதவியை கோர முடியாது - சம்பந்தன் உத்தியோகப்பூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை கோருவதற்கான உரித்து பொது எதிரணிக்கு இல்லை. அரசாங்கத்தில் அமைச்சர்களாக அங்கம் வகித்துக்கொண்டு அதே கட்சியை சேர்ந்தவர்கள் உத்தியோகப்பூர்வ எதிர்க்கட்சியாக இருக்க முடியாது. இதற்கேற்றவகையிலேயே பொது எதிரணியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்கவேண்டுமென்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பொது எதிரணியினர் கோரி வருகின்றனர். இதற்கான கடிதத்தையும் சபாநாயகரிடம் அவர்கள் கைய…
-
- 0 replies
- 384 views
-
-
'போரானது ஒருபோதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திவிடாது': விடுதலைப் புலிகள் [வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2007, 03:31 ஈழம்] [புதினம் நிருபர்] "பயங்கரவாதத்திற்கு எதிரான போரெனக் கூறிக்கொண்டு, தற்போது சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துவரும் போரானது ஒருபோதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திவிடாது. இத்துடன், இந்த முனைப்புக்கள் இலங்கைத் தீவினது இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்வையும் ஒருபோதும் ஏற்படுத்திவிடாது." இவ்வாறு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கையின் முழு விபரம்: றோயல் நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் பெப்ரவ…
-
- 7 replies
- 1.8k views
-
-
வெள்ளிக்கிழமை, மே 6, 2011 சிறிலங்கா அரசின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை சிறிலங்கா அரசு ‘தருஸ்மன் அறிக்கை’ என்றே அழைக்க வேண்டுமென்ற ஆலோசனையை வழங்கியவர் யார் என்ற தகவல் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. குறிப்பிட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என சிறிலங்கா அரசுக்கு ஆலோசனை கூறி அதற்கு ‘தருஸ்மன் அறிக்கை’ எனப் பெயரிட்டவர் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவே என்பது வெளிச்சமாகியுள்ளது. ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் பஸில் ராஜபக்ஸவுக்கு இவ்வாறு வழங்கிய ஆலோசனையின் பேரிலேயே ‘தருஸ்மன் அறிக்கை’ என இ…
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
சுனாமி எச்சரிக்கைக்காக கட்டப்பட்ட சுனாமி கோபுரங்களில் 40% செயல்படவில்லை என தெரியவந்துள்ளது. சுனாமி பற்றி எச்சரிப்பதற்காக 77 சுனாமி கோபுரங்கள் நாடு முழுவதும் அரசு பேரிடர் மேலாண்மை துறைகளால் நிறுவப்பட்டுள்ளன. இந்த சுனாமி கோபுரங்கள் தற்போது 15 வருடங்கள் பழமையானவை என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். . இந்த கோபுரங்கள் பல இயங்கவில்லை என்றும், சுனாமி கோபுரங்களுடன் இணைக்கப்பட்ட செயற்கைக்கோள் அமைப்பும் செயல்படவில்லை என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். வேலை செய்யாத சுனாமி கோபுரங்களை கையால் இயக்கக்கூடிய வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார். …
-
- 1 reply
- 306 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 08 MAY, 2023 | 03:23 PM மன்னாரில் அண்மை காலங்களாக சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சுற்றி திரிவதாகவும் சிறுவர்களை இலக்கு வைத்து அவர்களை கடத்தும் நோக்கில் சிலர் மன்னார் மாவட்டத்திற்குள் ஊடுருவி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை (8) துரித விசாரணை முன்னெடுக்கப்பட்டதோடு பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவரை வாகனம் ஒன்றில் வந்தவர்கள் இனிப்பு பண்டங்களை வழங்கி குறித்த மாணவரை பலவந்தமாக ஏற்றிச் …
-
- 6 replies
- 471 views
- 1 follower
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைத் தனது ஆளுங்கட்சிக்குப் பெறுவதற்காகப் பயன்படுத்திய கிளை தாவல் உபாயங்கள் பற்றியும் அதற்குத் தூண்டுதலாக அமைச்சர் பதவிகளை மிட்டாய்கள் போல விநியோகித்தது பற்றியும் வேறு சிலர் விடயத்தில் அரசியற் பிரம்புகளைப் பயன்படுத்தியது பற்றியும் பலர் கவலை தெரிவித்துள்ளனர். எனினும் குறுகிய காலத்தில் கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளின் தளங்களை அகற்றுவதிலும் பாராளுமன்றத்தில் ஆட்சிக்கு மிரட்டல் இல்லாமற் செய்வதிலும் நாட்டின் பாதுகாப்பைக் காரணங் காட்டித் தனியார் ஊடகங்களை ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்தி வைத்திருந்த போதிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார்.மலிவான வெற்றிகள் நிலையானவையாக இருப்பது அருமை. எனினும், ஆட்சி அதிகாரம் கைக்கு வந…
-
- 0 replies
- 786 views
-
-
சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களை வெளிநாட்டவர்கள் சொல்லும் போது அவர்களை வெள்ளைப் புலிகள் என்று முன்பு சிங்கள அரசு பிரதிநிதிகள் சொல்லுவது வழக்கம். தற்பொழுது சிறிலங்காவின் போர்க்குற்றம் பற்றிய அறிக்கையினை பான்கிமூன் வெளியிட்டதினால் அவரை புலிகளின் புதிய தலைவராக சிங்கள நாட்டின் ஆங்கில ஊடகமான இலங்காநியூஸ்பேப்பர் தெரிவித்திருக்கின்றது. http://www.lankanewspapers.com/news/2011/5/66973_image_headline.html
-
- 2 replies
- 2.5k views
- 1 follower
-
-
கிளிநொச்சி ஜெயபுரத்தில் ‘மகிந்த ராஜபக்ச மாவத்தை’ Monday, May 23, 2011, 18:59சிறீலங்கா, தமிழீழம்54 views1 comment தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைநகர் என வெளிநாடுகளால் வர்ணிக்கப்பட்டுவந்த கிளிநொச்சி ஜெயபுரத்தில் சிறீலங்காவின் பிறிதொரு ஆக்கிரமிப்பு வடிவம் நிறுவப்பட்டுள்ளதாக தெரியவருகிறது . ஜெயபுரத்தில் இருந்து பல்லவராயன்கட்டு நேக்கி பிரயாணிக்கையில் ஜெயபுரம் சந்தைக்கு அருகாமையில் இரண்டு குறுக்கு வீதிகள் ‘மகிந்த ராஜபக்ச மாவத்தை’ மற்றும் ‘அழுத் மாவத்தை’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில வீதிகளுக்கு வேறுபல சிங்களப்பெயர்கள் இடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.சிறீலங்கா படைகள் தமிழர் தாயகப் பகுதகளை ஆக்கிரமிக்க மேற்கொண்ட போரின் பின்னர் தற்போது இவ்வா…
-
- 0 replies
- 632 views
-
-
Published By: NANTHINI 27 MAY, 2023 | 05:32 PM மலையக மக்களது இலங்கை வருகையின் 200ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிராமிய உழைப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வானது இன்று (27) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் காலை 10 மணியளவில் இடம்பெற்றது. கிராமிய உழைப்பாளர் சங்க தலைவர் இன்பநாயகம் தலைமையேற்று நடத்திய இந்த நிகழ்வில் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலர் பங்கேற்று மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக உரையாற்றினர். இதன்போது தொழிற்சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட மலையக மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர். htt…
-
- 1 reply
- 323 views
- 1 follower
-
-
இனவெறியர் இராஜபக்சே இந்தியா வர அனுமதிக்கக்கூடாது மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெற்காசியக் கூட்டமைப்பின் 14ஆவது உச்சி மாநாடு இந்த ஆண்டு ஏப்பிரல் 3, 4 நாள்களில், புதுதில்லியில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெற்காசியாவின் ஒவ்வொரு நாட்டுத் தலைவரையும் நேரடியாகச் சென்று அழைப்பைக் கொடுத்து வருகிறார். புதிதாக இணைந்துள்ள ஆப்கானிஸ்தானுடன், இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், பூடான், மாலேத்தீவு ஆகியன இந்தக் கூட்டமைப்பில் உள்ள ஏழு நாடுகள். ஆண்டுக்கு ஒருமுறை உச்சி மாநாடு நடக்கவேண்டுமென்பது மரபு. ஆனாலும் இதுவரை 13 மாநாடுகளே நடந்துள்ளன. 1985இல் முதலாவது உச்சி மாநாடு வங்காள தேசத் தலைநகர் தாக்காவில் நடைபெற்றது. அடுத்த 10 ஆண்டுகளில் 8 உச்சி மாநா…
-
- 2 replies
- 891 views
-
-
Posted by சங்கீதா on 27/05/2011 in செய்தி | 0 Comment சிறீலங்காவில் தரையிறங்கிய பின்னர் நுளைவு அனுமதியை பெற்றுக்கொள்வது என்ற சட்டத்தை இந்திய பயணிகளுக்கும் நிறுத்துவதாக சிறீலங்கா அரசு நேற்று (26) அறிவித்துள்ளது. இந்த நடைமுறைகள் நேற்றில் இருந்து 80 நாட்களில் நடைமுறைக்கு வருவதால் அதன் பின்னர் சிறீலங்கா வரும் இந்திய மக்கள் முன்கூட்டியே நுளைவு அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூர் மற்றும் மாலைதீவுகள் தவிர்ந்த ஏனைய 78 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கும் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாக சிறீலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறை ஆணையாளர் குலனந்தா பெரேரா தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து சிறீலங்கா செல்வோர் இணையத்தளம…
-
- 1 reply
- 900 views
-
-
Wednesday, June 1, 2011, 12:13இந்தியா, உலகம் 1ம் திகதி புதன்கிழமை ஐரோப்பிய ஒன்றிய நடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வந்திருக்கின்ற மதிமுக பொதுச்செயலாளர் மதிப்புக்குரிய வை. கோபாலசாமி அவர்கள் இன்று காலை பெல்ஐயத்திற்கு வருகை தந்து 1ம் நாள் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுடைய சந்திப்பில் கலந்து கொண்டு விட்டு மாலை பாரிசுக்கு வருகை மேற்கொண்டிருந்தார். தமிழின விடுதலைச் செயற்பாட்டாளர்கள், உணர்வாளர்கள், இளையவர்கள் மற்றும் இன்னும் பல முக்கியஸ்தர்களையும் சந்தித்திருந்தார். இச்சந்திப்பில் பல்வேறு தரப்பினரின் பலதரப்பட்ட கேள்விகளுக்கு தனது பயணக்களைப்பையும் பொருட்படுத்தாது பதிலளித்திருந்தார். ஈற்றில் அவர் கூறியதானது தமிழீழ விடுதலையும், அதன் பிதாமகன் தமிழின தேசியத்த…
-
- 0 replies
- 506 views
-