ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
பிரித்தானியாவில் இருந்து மேலும் பல இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 44 பேரும் நேற்று முன்தினம் 50 பேரும் இவ்வாறு நாடு கடத்தப்பட்டனர். இந்த நிலையில் பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் ருக்கோன், லிவர்பூல் வீதி போன்ற இடங்களில் எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் நடத்திய தேடுதலின் போது இலங்கையர்கள் பலர் சட்ட விரோதமாக விசா முடிவடைந்த நிலையில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிரித்தானிய குடியுரிமை சட்டத்தை மீறினர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களும் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவர் என்று எதிர்பார்க்கப்…
-
- 0 replies
- 596 views
-
-
புதிய அரசு தருமென காத்திருப்பது மடமை: வட மாகாண முதலமைச்சர்:- யுத்தக் குற்றமிழைத்த இராணுவத்தை தமிழர் பகுதியில் தொடர்ந்தும் அனுமதிப்பதை ஏற்றுக்கொள்ளக்கொள்ள முடியாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இதேவேளை புதிய அரசில் உள்ள சந்திரிக்கா, ரணில், மைத்திரி தருவார்கள் என காத்திருப்பது மடமை என்றும் அவர் கூறினார். யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: எமது தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு முக்கியமான கட்டம் இப்பொழுது உருவாகியுள்ளது. உள்ளூர் மக்களும் வெளியூர் உறவுகளும் ஒன்றுசேர்ந்து எமது வடகிழக்கு மாகாணங்களைக் கட்டி எழுப்பு…
-
- 18 replies
- 1.1k views
-
-
இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட இரண்டு கடலோர ரோந்து படகுகளை சீஷெல்ஸ் நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று (01) முற்பகல் கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் நிறுவனத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும் சீஷெல்ஸ் நாட்டுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சீஷெல்ஸுக்கு மேற்கொண்ட அரசமுறை பயணத்தின்போது வழங்கிய உறுதிமொழிக்கிணங்க இலங்கையின் அன்பளிப்பாக இந்த கடற்படை படகுகள் சீஷெல்ஸ் நாட்டுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த கடற்படை ரோந்து படகுகள் வெலிசரை கடற்…
-
- 16 replies
- 1.3k views
-
-
மகிந்த அரசாங்கம் ஒரு கழுதை- ஐ.தே.க. ஒரு நரி: விமல் வீரவன்ச [சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2007, 15:55 ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்கா அரசாங்கமானது ஒரு கழுதையைப் போலவும் ஐக்கிய தேசியக் கட்சியானது ஒரு நரியைப் போலவும் செயற்பட்டு வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளரும் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச சாடியுள்ளார். இது தொடர்பில் விமல் வீரவன்ச கூறியுள்ளதாவது: இலங்கைக்கு அண்மையில் வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிச் செயலாளர் ஜோன் ஹோல்ம்சின் அறிக்கையை நாம் எதிர்க்கிறோம். அன்னிய சதிகளை முன்னெடுப்பதில் "நரி"யின் பாத்திரத்தை ஐக்கிய தேசியக் கட்சி வகித்து வருகிறது. அலன் றொக் இலங்கைக்கு வருகை தந்தார். அரசாங்கத்தைத் தா…
-
- 5 replies
- 1.5k views
-
-
கொலன்னாவையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர மற்றும் அவரது உதவியாளர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்ததாக எமது செய்தியாளர் கூறினார். http://www.vanakkamnet.com/died/ துமிந்த சில்வா மீது துப்பாக்கிச் சூடு: வைத்தியசாலையில் அனுமதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் 10 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்…
-
- 14 replies
- 1.8k views
-
-
11 FEB, 2024 | 09:28 PM (எம்.மனோசித்ரா) முறையான காணி உரிமையின்றி நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருந்த இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் வகையில் காணி உறுதி வழங்கு 'உரித்து' (உருமய) வேலைத்திட்டத்தில் பெருந்தோட்ட மக்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் வினவிய போதே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டார். 'விவசாய நடவடிக்கைகளுக்காக நிபந்தனைகளுடன் வழங்கப்பட்ட காணிகளுக்கான உரிமம் வழங்கும் வேலைத்திட்டமே தற்போது முன்னெடுக்கப்படுகிறது. பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் காணி வழங்கும் திட்டம் இந்த வேலைத்திட்டத்தோடு தொடர்புடையதல்ல. இந்திய…
-
- 2 replies
- 280 views
- 1 follower
-
-
நல்லாட்சியை வலுப்படுத்த இலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கையில் நல்லாட்சியை வலுப்படுத்த அதிகளவு உதவிகளை வழங்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதித் துணைச்செயலாளர் ரிச்சர்ட் ஈ. ஹோக்லாண்ட் இதனைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக நீதி மற்றும் நிதி நிறுவனங்களுக்கான உதவிகளை வழங்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக ரீதியான தேர்தலின் பின்னர் இலங்கையுடனான உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சியையும் மனித உரிமைகளையும் மேம்படுத்த இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகத் தெரி…
-
- 3 replies
- 471 views
-
-
யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தினரின் வார்த்தையை நம்பி புதிய வீடு கட்டுவதற்காக 7 ஆண்டுகளாக வாழ்ந்த கொட்டிலை அகற்றிய குடும்பத் தலைவர், அந்தக் கொட்டில் சரிந்து வீழ்ந்ததில் கால் முறிவடைந்து படுக்கையில் உள்ளார். இந்த நிலையில், வீட்டுத் திட்டம் உங்களுக்கு (அந்தக் குடும்பம்) கிடைத்துள்ளது என்று தவறுதலாகக் கூறியுள்ளோம் எனப் பிரதேச செயலகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் இருப்பதற்கு இருப்பிடம் இல்லாமல், வாழ்வாதாரத்துக்கு வழிதெரியாமல் குடும்பத்தினர் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 30, கார…
-
- 0 replies
- 446 views
-
-
வீதியில் பயணித்த இளைஞரை தாக்கி மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்துச் சென்ற கும்பல் - யாழில் சம்பவம் 22 FEB, 2024 | 11:58 AM வீதியில் பயணித்த இளைஞரை தாக்கி, அவரது மோட்டார் சைக்கிளை கும்பலொன்று கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இருந்து நாவற்குழி நோக்கி யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை வழியே மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞரை, அரியாலை பகுதியில் ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளது. அவ்வேளை, மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்திவிட்டு இளைஞர் கும்பலிடமிருந்து தப்பியோடியுள்ளார். அதன் பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட கூட்டத்தினர் அங்…
-
- 0 replies
- 350 views
- 1 follower
-
-
குளவிகொட்டி 35 விமானப்படையினர் காயம் சிகிரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 86 பேர் காயமடைந்து சிகிரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளவி கொட்டியவர்களில் 35 விமானப் படையினரும் அடங்குவர். - சங்கதி
-
- 14 replies
- 3.2k views
-
-
கொலையாளியைக் கண்டுபிடியுங்கள்; மட்டுநகரில் பாரிய பேராட்டம் மட்டக்களப்பு மண்டூரில் சமூக சேவை உத்தியோகத்தர் சச்சிதானந்தம் மதிதயன் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரியும் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இன்று காலை கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லாட்சிக்கு அவமானம் எனும் தொனிப் பொருளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் ஆகியோரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், ஞா.கிருஸ்ணபிள்ளை மற்றும் இலங்கைத் தம…
-
- 8 replies
- 529 views
-
-
புலிகள் இராசாயன ஆயுதங்களை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்-பிரதமர் வீரகேசரி இணையம் சர்வதேச நாடுகளின் சட்டத்திட்டங்களை மீறி புலிகள் இராசாயன ஆயுதங்களை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர் என பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் விஷேட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். படையினரால் கிழக்கு மீட்கப்பட்டதன் பின்னர், அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது கண்டெடுக்கப்பட்ட இராசாயான பொருட்கள், புலிகள் இராசாயன ஆயுதங்களை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
-
- 0 replies
- 1.5k views
-
-
Gillard to meet Sri Lankan president Prime Minister Julia Gillard will meet Sri Lanka's president on Wednesday night to discuss claims of human rights abuses in the country. Ms Gillard and Sri Lankan President Mahinda Rajapaksa are in Perth for the Commonwealth Heads Of Government meeting (CHOGM), but Mr Rajapaksa has been surrounded by controversy since his arrival in Australia. On Tuesday, a court action was filed by a Sri Lankan-born Australian man in Melbourne, accusing Mr Rajapaksa of war crimes, but federal Attorney-General Robert McClelland did not allow it to proceed. Ms Gillard has previously said the Australian government is concerned about war …
-
- 0 replies
- 570 views
-
-
20வது திருத்தச்சட்டத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்! - ஹக்கீம் எச்சரிக்கை [saturday 2015-06-13 20:00] ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பையும் மீறி தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைய 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தால், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய போவதாக அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 20வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம். இதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்ற வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை தடுக்க எமக்கிருக்கும் அதிக் கூடிய பலத்தை நாங்கள் பயன்படுத்தி அதற்கு எதிராக செயற்படுவோம். எமது எதிர்ப்பையும் மீறி சட்டமூ…
-
- 0 replies
- 453 views
-
-
யாழ்ப்பாணத்தில் சிறப்பு அடையாள அட்டைக்கான பதிவுகளை சிறிலங்கா இராணுவத்தினர் மீண்டும் தொடங்கியுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
Nov 2, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / புலம்பெயர் தளங்களிலும், சிங்கள தேசத்தின் ஆள ஊடுருவும் படையணிகள்! உலகம் முழுவதும் ஆவிகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் தினமான அக்ரோபர் 31 அன்று அதிகாலை பாரிஸ் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளரும், தமிழ்த் தேசிய விடுதலைத் தளத்தின் முக்கிய செயற்பாட்டாளருமான திரு. பருதி அவர்கள் படு மோசமான தாக்குதல்களுக்குள்ளாகி, ஆபத்தான் நிலையில் வைதிதயசாலை அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிதிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். ஆவிகள் தினத்தன்று முகமூடிகள் அணிந்து வீதிகளில் செல்வது சாதாரணமான விடயமாகவே மக்கள் கருதும் சூழலைப் பயன்படுத்தி மூன்று ஆயுததாரிகள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலைத் தடுக்க முயற…
-
- 5 replies
- 1.3k views
-
-
March 4, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கில் இரானுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த காணிகளில் பொது மக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணிகள் இன்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளன. படையினர் வசமிரந்த காணிகளை…
-
- 0 replies
- 269 views
-
-
கூட்டமைப்பிற்கும் ஜே.வி.பி.க்கும் இடையில் சந்திப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. இதற்கு முன்னர் இந்த விடயம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணிக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்து செய்ய ஒப்புக்கொள்ள மாட்டேன் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். அத்தோடு நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டுமானால் 13 ஆவது அரசியலமை…
-
- 0 replies
- 208 views
-
-
யாழ்ப்பாணம் புத்தூர் புத்தர் வாழ்ந்த ஊர் என கூறிய தொலைக்காட்சி ஒளிபரப்பால் யாழ் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று நாகவிகாரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட பௌத்த வீதி உலா மற்றும் களியாட்ட ஆராதனைக்கான நேரஞ்சல் நடைபெற்றுக் கொண்டுள்ளவேளை அதற்கான வர்ணனையாளராக இருந்த ஒரு தமிழர் இவ் கருத்தை தெரிவித்து பெருமிதப் பட்டுக் கொண்டதாக அவ்காட்சியை கண்ட பலர் ஈழம்டெய்லிக்கு தெரிவித்துள்ளனர். நேற்று 10.11.2011 அன்று யாழ் நகர் முழுவது பௌத்த கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு பௌத்த பிரதேசமாக்கப்பட்டு நடாத்தப்பட்ட இவ் பெரும் புத்தபெருமானின் பேரணிசிறீலங்காவின் மத ஆக்கிரமிப்பு ஒரு வடிமாக மனம் வெதும்பியிருந்த மக்கள் ஆககிரமிப்பு விழாவை நேரடி ஒளிபரப்பு செய்த ஒரு யாழ்ப்பாணத…
-
- 0 replies
- 941 views
-
-
இன்று பிரதான கட்சிகள் வேட்புமனுத் தாக்கல்! - யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு.[Friday 2015-07-10 07:00] பிரதான கட்சிகள் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் யாழ். மாவட்ட செயலகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சட்டவிரோத கூட்டம் கூடுதல், வேட்புமனு தாக்கல் செய்வதை தடைசெய்தல், இடையூறு செய்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு யாழ்ப்பாண பொலிஸார் தடை விதித்துள்ளதுடன் அதனை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக பாரபட்சமற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று பிரதான கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் நாம் தடை விதிக்கின்றோ…
-
- 0 replies
- 289 views
-
-
ரிசாட் மாத்திரமா பிரச்சினை? சம்பிக்க காணி பிடிப்பது பிரச்சினையில்லையா? – லஹிரு கேள்வி அமைச்சர் ரிசாட் பத்தியுத்தீன் வில்பத்துவில் காணி பிடிப்பது மாத்திரம் ஏன் பிரச்சினையாக தெரிவதாகவும், ஹேமாகமவில் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க காணி பிடிப்பது மாத்திரம் பிரச்சினையாக தெரிவதில்லையெனவும் மாற்றத்துக்கான இளைஞர்கள் அமைப்பின் தலைவர் லஹிரு சிறிமான்ன கேள்வி எழுப்பினார். வில்பத்து வனப் பிரச்சினை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். தம்மைப் பொருத்த வரை இரண்டும் தவறாகும். இனவாதக் கண் கொண்டு பார்ப்பதனால், வில்பத்து மாத்திரம் சிலருக்குப் பிரச்சினையாக தெரிகின்றது. இது தவறானது. 2030 ஆம் ஆண்டில் நிறைவு செய்வதற்…
-
- 0 replies
- 321 views
-
-
ஜோர்ஜ் புஷ், டொனி பிளேயர் ஆகியோரை யுத்தக் குற்றவாளிகளாக அறிவித்தது மலேசிய நீதிமன்றம்! அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் மற்றும் பிரித்தானிய முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் ஆகியோர் சமாதானத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஈராக் யுத்த விடயத்திலேயே இவர்கள் குற்றவாளிகள் என மலேசியாவின் நீதிபதிகள் குழு தீர்ப்பளித்துள்ளது. கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் யுத்தக் குற்ற விசாரணை நீதிமன்றில் ஆரம்பமான விசாரணைகளில் ஜோர்ஜ் புஷ் மற்றும் டொனி பிளேயர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளை மலேசிய ஓய்வுபெற்ற பிராந்திய நீதிமன்ற நீதிபதி அப்துல் காதிர் சுலைமான் அடங்கிய 7 நீதிபதிகள் முன்னெடு…
-
- 4 replies
- 1.2k views
-
-
சுதந்திரக் கட்சியின் செயற்குழுவைக் கூட்ட நீதிமன்றம் தடை – மகிந்தவின் திட்டத்துக்கு ஆப்புJUL 15, 2015 | 13:07by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தை, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி கூட்டுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மாலை தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இன்றிரவு 8 மணியளவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டவுள்ளதாக, கட்சியின் பொதுச்செயலர் அனுர பிரியதர்சன யாப்பா அறிவித்திருந்தார். இதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தடைவிதித்திருந்தார். அதையும் மீறி கூட்டம் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பிரசன்ன சோ…
-
- 0 replies
- 366 views
-
-
இலங்கையில் சிறிசேன முன்னிலையில் அழிக்கப்பட்ட 10,935 மில்லியன் ரூபாய் மதிப்பிலான கொகைன் 13 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் கடந்த மூன்று வருட காலங்களில் கைப்பற்றப்பட்ட சுமார் 765 கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய கொகைன் போதைப்பொருள் அழிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இந்த கொகைன்…
-
- 0 replies
- 369 views
- 1 follower
-
-
கிளிநொச்சி மாவட்டத்திற்கு சிறிலங்கா அரசின் நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காமையால் பல பணிகள் முடங்கியுள்ளன என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 563 views
-