ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
வலைப்பாட்டில் கடற்புலிகளுக்கும் கடற்படைக்கும் இடையில் பெரும்சமர் நடந்ததாக தீபம் செய்தயில் கூறுகின்றார்கள். வேறு ஒரு இடத்தில் காணவில்லை. யாராவது ஏதாவது அறிந்தீர்களா?
-
- 6 replies
- 3.9k views
-
-
கிளிநொச்சி மாவட்ட உணவு வாகனத் தொடரணிக்கு ஓமந்தையில் அனுமதி மறுப்பு. நிவாரண உணவு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என அச்சம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத கிளிநொச்சி பிரதேசத்திற்கான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வவுனியாவில் இருந்து ஏற்றிச் சென்ற லொறிகளுக்கு ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் இரண்டு தினங்களாக அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வன்னிப்பிரதேசத்தின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஜிஏ கொன்வோய் எனப்படும் அரச அதிபர் பெயரிலான வாகனத் தொடரணி மூலம் வவுனியாவில் இருந்து எடுத்துச் செல்லப்படுவது வழமை. இதற்கமைய இந்த வாகனத் தொடரணிகள் ஒருநாள் விட்டு ஒருநாள் கிளிநொச்சி மற்ற…
-
- 2 replies
- 817 views
-
-
சில வெளிநாட்டு சக்திகள் வடக்கில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதனை விரும்பவில்லை என கண்டி மல்வத்துபீட மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த தேரர் தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தம் முடிவுறுத்தப்பட்டால் அதன் பின்னர் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளுக்கு தலையீடு செய்ய முடியாமையினால் சில நாடுகள் யுத்தம் தொடர வேண்டும் என விரும்புவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். விவசாய அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, விவசாய அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார மற்றும் மத்திய மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ ஆகியோர் மாநாயக்கரைச் சந்தித்த போது இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. சில வெளிநாட்டுச் சக்திகள் இலங்கை உள்விவகாரங்களில் தலையீடு செய்து பெரும் குழப்பங்களை …
-
- 0 replies
- 1.2k views
-
-
வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஏ9 நெடுஞ்சாலையில் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கிளைமோர் தாக்குதலில் பேரூந்து ஒன்று சிக்கியதில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்துள்ளர். புதூர் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 3 killed, DPU Claymore targets bus on A9 [TamilNet, Thursday, 18 September 2008, 06:33 GMT] Sri Lanka Army (SLA) Deep Penetration Unit (DPU) infiltrators Thursday morning triggered a Claymore mine targeting a civilian bus on A9 Road, killing at least three civilians, including the driver of the bus, according to initial reports from the Tamileelam Police. Meanwhile, medical sources reported that five civilians …
-
- 2 replies
- 1.3k views
-
-
-
புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவும் வாய்ப்புள்ளது என இந்திய இராணுவம் கருதுகிறது. இதையடுத்து தமிழகத்தின் மண்டபம் பகுதியில் விமானத்தளம் மற்றும் மேலதிக ராடர்தளம் என்பவற்றை அமைப்பதற்கு இந்திய விமானப்படை அதிகாரிகள் ஆய்வு செய்துவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை இராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையிலான மோதலில் புலிகள் விமானத் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் இராமேஸ்வரம் மண்டபம் அருகே விமானத்தளம் அமைப்பதற்கான இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேற்படி நடவடிக்கைகளுக்காக இந்திய விமானப்படைத் தளபதி உபேதா கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்திலிருந்து மண்டபம் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு இதற்கான ஆய்வுகளை நடத்தியுள்ளார். தற்போது மண்டபம் அருகே சுந்தரமுடையான் பகுதியில…
-
- 0 replies
- 767 views
-
-
அண்மையில் வவுனியா படைத்தலைமையகம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் இந்தியர் எவருமே காயமடையவில்லை என்று இராணுவப் பேச்சாளர் உதயநாணயக்கார தெரிவித்திருக்கிறார். பி.பி.ஸி. செய்திச் சேவையில் நேற்று முன்தினம் கேட்டகேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே இராணுவப் பேச்சாளர் இப்படிக் கூறியிருந்தார். உதயநாணக்கார அந்தப் பேட்டியில் மேலும் குறிப்பிட்டவை வருமாறு: இந்தத் தாக்குதலில் இந்தியர் எவரும் காயமடையவில்லை என உறுதியாகக் கூறுகின்றேன். அந்த இடத்தில் இந்தியர் யாரும் இல்லை. இந்தியர்கள் காயமடைந்தனர் என்று உங்களுக்கு இந்தியத் தூதரகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டால் நீங்கள் அவர்களிடமே மேலதிக விவரங்க ளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்றார். uthayan.com
-
- 0 replies
- 1.7k views
-
-
வன்னியில் இடம்பெயரும் மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு யுத்த சூனிய வலயங்களை பிரகடனப்படுத்த வேண்டும். ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கண்ட கோரிக்கையை இலங்கை அரசிடம் விடுத்துள்ளது. ஹொங்ஹொங்கை தளமாகக் கெண்டு இயங்கும் இவ்வமைப்பு, நேற்று இந்தக் கோரிக்கையை இலங்கை அரசிடம் விடுத்துள்ளதாக அதன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வன்னியில் இடம்பெயரும் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். கிளிநொச்சியில் தங்கியிருக்கும் மக்க ளின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் உறுதி செய்தாக வேண்டும். ஐ.நா. மற்றும் தொண்டர் அமைப்புகள் அரசின் கோரிக்கையின்பேரில் அங்கிருந்து வெளியேறிவிட்டன. ஆகவே மக்களுக்கான பாதுகாப்பு, உணவு, கு…
-
- 0 replies
- 769 views
-
-
வன்னியில் நடைபெற்றுவரும் போரில், விடுதலைப் புலிகள் விஷவாயு ஆயுதங்களை பயன்படுத்தியதாக இராணுவத் தரப்புக் குற்றஞ்சாட்டியுள்ளது. கிளிநொச்சியில், அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது விடுதலைப் புலிகள் மூச்சுத் திணறல் உண்டாக்கக் கூடிய C.S.GAS எனப்படும் விஷ வாயுவைக்கக்கும் கிரனேட் குண்டுகளைக் கொண்டு படையினர் மீது தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார நேற்றுத் தெரிவித்தார். அக்கராயன் மோதலின் போது மூச்சுத் திணறல் காரணமாக 6 இராணுவத்தினர் அனுராதபுரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் புலிகளின் விஷவாயு கக்கும் கிரனேட் குண்டுகளாலேயே பாதிக்கப்பட்டனர் என்று கருதப்படுவதாகவும…
-
- 1 reply
- 1.2k views
-
-
யுத்த வெற்றிகளே அரசாங்கத்தின் குறிக்கோள் என்பதால் நாடு அழிவுப்பாதையை நோக்கி நகர்கிறது [ புதன்கிழமை, 17 செப்ரெம்பர் 2008, 02:01.38 PM GMT +05:30 ] [ தினக்குரல் ] சட்டத்தின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிக்கு ஒருவர் தொடர்பில் அரசாங்கம் காட்டிய கவலையும் கரிசனையும் ஒரு இனத்தின் பிரச்சினை மீது காட்டப்படாத நிலையினையே காண்கிறோம். இதனை விட சாபக் கேடானதும் வேதனையானதுமானதொரு நிலை இருக்க முடியாது. முன்னைய எல்லா அரசாங்கங்கள் போலவே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு வக்கற்ற நிலையிலேயே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் உள்ளது. ஆனால், பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழிப்பதற்கு யுத்தம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்படுகிறதே தவிர அரசியல் தீர்வு காண்பதில் தாம் …
-
- 0 replies
- 530 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினரின் நடவடிக்கைக்கு எதிராக புலிகள் தாக்குதல்: 13 படையினர் பலி [வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2008, 09:30 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிவிளாங்குளம்-புதூர்-மன்னகுளம் பகுதிகளை நோக்கிய சிறிலங்கா படையினரின் நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 13 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். வன்னிவிளாங்குளம் பகுதியில் நேற்று முன்னாள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:30 மணி தொடக்கம் படையினரின் தாக்குதல் நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை நடத்தியுள்ளனர். நேற்று காலை 6:00 மணிவரை இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளின் பதுங்கிச்சூடு, மிதிவெடி மற்றும் பொறிவெடி ஆகியனவற்றில் சிக்கி 13 படையினர் கொல்லப்…
-
- 0 replies
- 841 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து இடம்பெயர்கின்ற மக்கள் வவுனியாவில் வாழ்வதற்கான சூழ்நிலை இல்லை: யாழ். ஆயர் [வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2008, 08:08 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] போர் நடவடிக்கைகள் காரணமாக வன்னிப்பெரு நிலபரப்பிலிருந்து இடம்பெயர்கின்ற மக்கள் வவுனியாவுக்கு வந்து தங்குவதற்கான சூழ்நிலை தற்போதைக்கு இல்லை என்று யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார். வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை என்றும் ஆயர் தெரிவித்தார். கத்தோலிக்க திருச்சபையின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு வருகை தந்த ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை, வவுனியா மற்றும் மடு தேவாலயம் ஆகியவற்றுக்கு கடந…
-
- 0 replies
- 441 views
-
-
அவுட்றீச் இணையத்தள உரிமையாளர் ஜசிதரனின் சகோதரி ஜெயகௌரி இன்று காலை மருதானைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயகௌரி தங்கியிருந்த கொழும்பிலுள்ள Nonviolent Peaceforce அலுவலகத்திற்குச் சென்ற பொலிஸார் அங்கு வைத்து ஜெயகௌரியைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளதாகத் தெரிய வருகிறது. தொடர்ச்சியான அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பாகத் தங்குவதற்கு இடமற்றிருந்த ஜெயகௌரி Nonviolent Peaceforceஅலுவலகத்தில் தங்கி இருந்ததாகத் தெரிய வருகிறது. ஜெயகௌரியுடன் அங்கிருந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவுட்றீச் இணையத்தள உரிமையாளர் ஜசிதரனும் அவருடைய துணைவி வளர்மதியும், அவுட்றீச் இணையத்தளத்தின்…
-
- 0 replies
- 1.3k views
-
-
'இந்தி்' யத் தேசிய காங்கிரசின் தோற்றம்: அகில இந்தியம் பேசுவதில் முதன் வரிசையில் நிற்கும் காங்கிரஸ் கட்சி தன்மானமற்ற தமிழர்களின் புகலிடமாக மாறிப்போய்யுள்ளது வருந்தத்தக்கது. வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற பல்வேறு தேசிய இனங்கள் குழுக்குழுக்களாக போராடிய போது அதனை ஒருங்கிணைத்து அதன் மூலம் இந்திய தேசியத்தை எழுப்பி அரசியல் லாபம் பெற்று ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் கட்சி. வெள்ளையனை வெளியேற்றி விட்டோம் என்ற வெற்று முழுக்கத்தை எழுப்பிக் கொண்டு பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் தலைமையில் கட்சியைக் கட்டியெழுப்பி வெள்ளையரிடமிருந்த நிர்வாகத்தை கொள்ளையரிடம் கையளித்து 'சாதனை' படைத்ததும் இதே காங்கிரசு கட்சி தான். வடநாட்டு பனியாக்கள் மற்றும் பெருமுதலாளிகளின் …
-
- 3 replies
- 1.6k views
-
-
நேற்றைய தினம்(16/09/2008) அக்கரைப்பற்று நீதிமன்றில், அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேருவை 17/06/2007இல் சுட்டுப் படுகொலை செய்ய முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கின் அடையாள அணிவகுப்பில், T.M.V.P(கருணா பிரிவு) ஆயுதக்குழுவின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும், சிறிலங்கா ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமாகிய இனியபாரதி அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, நேற்றும், இன்றும் T.M.V.P(கருணா பிரிவு) துணை இராணுவ குழுவினரால் அம்பாறை மாவட்டம் எங்கும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதனால், அப்பிரதேசம் எங்கும் இயல்புநிலை முற்றாக பாதிப்படைந்திருந்தது. நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேருவுக்காக அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜராக இருந்த சட்…
-
- 2 replies
- 1.5k views
-
-
கொழும்பிலுள்ள இந்திய உதவிக்தூதுவரின் கருத்து Terrorism should be defeated minimizing damage to civilians, says new Deputy High Commissioner of India (, September 17, 2008, 3.00 AM) There is no answer to terrorism except defeating it but in a way the damage to the civilians will be minimized, said the new Indian Deputy High Commissioner Sri Wikram Misri at a meeting with the media Monday (15) evening held in the Indian High Commission. The function was held to welcome the new Deputy High Commissioner. The Deputy High Commissioner stated that India sees Tamil people and LTTE as two phenomena. Although the military action taken by the government to defeat te…
-
- 16 replies
- 4.9k views
-
-
எப்படி இவர்களுக்கு முகங்களில்லையோ, முகவரிகளில்லையோ, அதே போலத்தான் எத்தகைய அறிவாலும், எத்தகைய ஞானத்தாலும் கணிப்பீடு செய்யக்கூடிய வகையில் இவர்களது உள்ளகமும் இல்லை. இங்கே எழுதப்பட்டுள்ளவை எல்லாம் இவர்களோடிணைந்த சில சம்பவங்கள் மட்டுமே. அந்தச் சம்பவங்களினூடு, உங்களால் முடிந்தால் அவர்களது மனவுணர்வுகளை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்; அவர்களின் சிந்தனைப் போக்கின் தன்மைகளை உய்த்தறிந்து கொள்ளுங்கள். தனிமனித அபிலாசைகளுக்கு அப்பால் - சுயத்தின் சிறைகளை உடைத்துக் கொண்டு அவர்களது சிந்தனையோட்டம் விரிந்தபொழுது - ஈடினையற்ற தேசபக்தியுடன், தமதுடலோடு தமதுயிரோடு 'தம்மையே' தியாகம் செய்யத் துணிந்தவர்கள் அவர்கள். ஓயாத எரிமலையாக சதா குமுறிக்கொண்டிருந்த நெஞ்சுக்குள் ஆற்ற முடியாத தாகமாக எழுந்து க…
-
- 1 reply
- 1.4k views
-
-
155 ஆம் இலக்க பேருந்து குண்டுவெடிப்பு தொடர்பில் தமிழ் மக்கள் சந்தேகம் [புதன்கிழமை, 17 செப்ரெம்பர் 2008, 08:30 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு நகரில் உள்ள கோட்டன் பிளேஸ் சுற்று வட்டத்திற்கு அருகில் சிறிலங்காவின் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 155 ஆம் இலக்க பேருந்தில் குண்டுவெடித்தமை தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. குறித்த பேருந்தில் தமிழர்களே கூடுதலாக பயணம் செய்வது வழமையாகும். ஆகவே, கொழும்பில் உள்ள தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் திட்டமிடப்பட்ட முறையில் இக்குண்டு வெடிக்க வைக்கப்பட்டிருக்கலாம் என தமிழ் மக்கள் சந்தேகம் தெரி…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை விமானப் படைத் தளபதி எயார் மாஷல் ரொஷான் குணதிலக நேற்று முன்தினம் வவுனியா விமானப் படைத் தளத்துக்கு விஜயம் செய்ததாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.விமானப் படைத் தளத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக அவர் ஆராய்ந்ததுடன் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை வழங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் கடந்த 9ஆம் திகதி மேற்கொண்ட தாக்குதலில் சேதமடைந்த பகுதிகளையும் பார்வையிட்ட அவர் படை அதிகாரிகளையும் சந்தித்து பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தார். http://www.tamilseythi.com/srilanka/Airfor...2008-09-17.html
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆசியாவின் வல்லரசு நாடுகள் என வர்ணிக்கப்படும் சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் போருக்குப் பின்னால் ஒன்றுதிரண்டிருப்பதாக கொழும்பு அரசியல் ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டுகிறார். வடபகுதியில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கும் மோதல்களில் இந்த நாடுகள் இராணுவ ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளமை மூலம் இந்த விடயம் தெளிவாகப் புலனாகிறது என கொழும்பு ஆங்கில ஊடகமொன்றின் பத்தியெழுத்தாளரான உப்புள் ஜோசப் பெர்னாண்டோ குறிப்பிடுகிறார். தமக்குள் முரண்பட்டுவரும் இந்த ஆசிய வல்லரசுகள், இலங்கையில் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்துவரும் மோதல்களில் கூட்டாக ஆதரவு வழங்கிவருவது பற்றி அவர் தன…
-
- 2 replies
- 2.7k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள களுவாஞ்சிக்குடியில் அடையாளம் தெரியாத நபர்களினால் இளம் பெண் பொறியியலாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 864 views
-
-
சிறிலங்காவின் திறைசேரி செயலாளர் திடீர் பதவி விலகல் [புதன்கிழமை, 17 செப்ரெம்பர் 2008, 08:15 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா மத்திய வங்கியின் திறைசேரி செயலாளர் பி.வி.ஜயசுந்தர இன்று புதன்கிழமை மாலை திடீரென பதவியிலிருந்து விலகியுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் அவர் நேரில் சென்று கையளித்துள்ளார். இவரது பதவி விலகல் கடிதத்தை மகிந்த ஏற்றுக்கொண்டுள்ளதாக அரச தலைவர் செயலகம் தெரிவித்துள்ளது. பி.வி.ஜயசுந்தர பதவி விலகியமைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை புதினம்
-
- 1 reply
- 850 views
-
-
சட்டத்தின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிக்கு ஒருவர் தொடர்பில் அரசாங்கம் காட்டிய கவலையும் கரிசனையும் ஒரு இனத்தின் பிரச்சினை மீது காட்டப்படாத நிலையினையே காண்கிறோம். இதனை விட சாபக் கேடானதும் வேதனையானதுமானதொரு நிலை இருக்க முடியாது. முன்னைய எல்லா அரசாங்கங்கள் போலவே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு வக்கற்ற நிலையிலேயே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் உள்ளது. ஆனால்இ பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழிப்பதற்கு யுத்தம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்படுகிறதே தவிர அரசியல் தீர்வு காண்பதில் தாம் உறுதியாயிருப்பதாகவே அரசு தரப்பினர் குறிப்பாக சர்வதேச மட்டத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர். அண்மையில் கூட ""இந்து' நாளிதழுக்கு வெளிநாட்டமைச்சர் ரோகித்த போகொல்லாகம வழங்கிய ச…
-
- 0 replies
- 810 views
-
-
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற நிலையில் கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் தற்காலிக விடுதியில் தங்கியுள்ளவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு காவற்துறையினர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை 24 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு காவற்துறையினர் பணித்துள்ளனர். இவர்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக இந்த விடுதியில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் பிரதியமைச்சர் பெ. ராதாகிருஸ்ணனை சந்தித்;து இது குறித்து தெரியப்படுத்தியுள்ளனர். பிரதியமைச்சர் ராதாகிருஸ்ணன் இதனை காவற்துறை மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவரின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளாhர். வடபகுதியில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக பலர் இடம்பெயர்ந்து கொழு…
-
- 3 replies
- 1.3k views
-
-
இந்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக இலங்கையில் சமாதானம் சீர்குலைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒருபுறம் அரசியல் தீர்வின் மூலம் சமாதானம் எட்டப்பட வேண்டும் என்று கூறும் இந்தியா மறுபுறத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு இராணுவ ரீதியான உதவிகளை வழங்கி வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அண்iயில் வவுனியா விமானப்படைத்தளம் மீதான தாக்குதல்களின் மூலம் இந்த விடயம் முழு சர்வதேசத்திற்கும் அம்பலமாகியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தின் மூலம் இலங்கைப் படையினரின் பலவீனமும், இந்திய அரசாங்கத்தின் இரட்டை வேடமும் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் வெளிநாட்டவர்கள் பயன்படுத்தப்பட்ட…
-
- 2 replies
- 1.5k views
-