Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியாவில் ஐந்து இளைஞர்கள் சுட்டுக்கொலை [ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2008, 04:27 மு.ப ஈழம்] [க.நித்தியா] வவுனியா மாவட்டத்தில் உள்ள தாலிக்குளம் பகுதியில் நேற்று முன்நாள் சிறிலங்கா படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர

    • 0 replies
    • 969 views
  2. நல்லூர்க் கந்தனின் அடியார்களின் குறை தீர்க்கும் திருப்பணியில் சிறிலங்காவின் புதல்வர்கள். பல கோடி பெறுமதியான ஆடை அணிகலங்களுடன் எழுந்தருளி இருக்கும் நல்லூர்க் கந்தனின் திருக்காட்சி வெகு விமரிசையாக நடைபெற்ற திருவிழாவில் பக்தர்களின் தூக்குக் காவடி. அடியார்களின் தொண்டர்களாக சிறிலங்காவின் மைந்தர்கள் களப் பணியாற்றும் காட்சி.

  3. இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 2505 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவை மேற்கோள்காட்டி ராவய செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட 305 பேருக்கு அண்மையில் இராணுவ நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இராணுவத்திலிருந்து தப்பியோடி மறைந்து வாழ்வோர் உடனடியாக தங்களது படைப்பிரிவுகளுக்குச் சென்று சரணடைவதன் மூலம் தண்டனையிலிருந்து மீள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவப் பொலிஸாரும், சாதாரண பெலிஸாரும் இணைந்து கடந்த 2ம், 3ம் திகதிகளில் நாடு தழுவிய ரீதியில் மேற்கொண்ட தேடுதலில் 80 பேர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. http…

  4. இராணுவத்தால் முழுவதுமாக மீட்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட வவுனியா - மன்னார் வீதியில் இன்று மோதல்கள் இடம்பெற்றுள்ளன. மன்னார் வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பல கள முனைகளில் மோதல் நடந்துள்ளதாக இராணுவத்தை மேற்கோள் காட்டி பிபிசி/தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. இம்மோதல்களில் இராணுவத்துக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.

  5. வடக்குக் கிழக்கில் உள்ள பிரதான வைத்தியசாலைகளுக்கு சயனைட் விஷத்தை முறிக்கும் மருந்துகளை அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஹோனானிகல இராணுவ முகாமிற்கு வழங்கப்பட்ட உணவில் சயனைட் கலந்திருந்தது என அறியப்பட்ட தகவலை அடுத்து சுகாதார திணைக்களம் இந்த நடவடிககையை எடுத்துள்ளது. படையினருக்கு வழங்கப்படும் உணவை இனிவரும் காலங்களில் நன்கு பரீட்சித்த பின்னர் வழங்க பாதுகாப்பு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். உணவுபொருட்களை கொள்வனவு செய்யும் போது அவற்றை பெற்றுக்கொள்ளும் நபர்கள் குறித்து ஆவதானத்துடன் செயற்படுவது, உணவு பொருள் கொள்வனவு செய்வது முதல் அதனை முகாமுக்கு வழங்கும் வரையான முழுப் பொறுப்பையும் உணவு விநியோகஸ்தருக்கு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. …

  6. வேலைத்தளங்கள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் முதல் ஏனைய பொது இடங்களில் உள்ள கணினிகளில் உள்ள screen saver அய் பயன்படுத்தி வன்னியின் மனிதாபிமான அவலக் காட்சிகளை ஏனைய சமூகத்தவர்களோடு பகிருவதற்கு ஒரு யோசனை. முதலில் இலவசமாக கிடைக்கும் Google Photos Screensaver போன்ற ஒன்றைப் பெற்றுக் கொள்ளவும் http://pack.google.com/screensaver.html Google Photo Screesaver அய் install பண்ணி முடிந்த பின்னர் control panel இற்கு சென்று display அய் தெரிவு செய்யவும் முதலில் Screen Saver என்ற tab அய் தெரிவு செய்யவும் பின்னர் Google Photo Screen Saver அய் தெரிவு செய்யவும். 3 ஆவதாக settings அய் தெரிவு செய்யவும். 1- இணையத்தோடு தொடர்ச்சியாக இணைந்திருக்கும் கணனி ஒன்ற…

    • 8 replies
    • 1.7k views
  7. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு இராணுவத்தைவிட்டுச் சென்ற அனைத்து படைவீரர்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கில் இராணுவ நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாகவும், அனைத்துப் படைவீரர்களும் யுத்த நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இராணுவத் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு காரணங்களினால் இராணுவத்தைவிட்டுச் சென்ற அனைத்து படைவீரர்களும் உடனடியாக தங்களது படையணிகளில் இணைந்து கொள்ள முடியும் என இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50

    • 3 replies
    • 2.4k views
  8. வடக்கே தொடர்ந்து நடைபெற்று வரும் கடும் மோதல்களில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஐந்து படையினர் கொல்லப்பட்டும் 12 படையினர் காயமடைதுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து படையினர் கூறுகையில்; கிளிநொச்சியில் அக்கராயன்குளம், மாணிக்கன் நடு, பகுதியில் வியாழக்கிழமை காலையும் பிற்பகலும் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. இந்தப் பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் மூன்று படையினர் கொல்லப்பட்டதுடன் ஆறு படையினர் காயமடைந்துள்ளனர். மணலாறில் ஆண்டாங்குளம், குருந்தன் குளம், உலாத்துவெளி பகுதிகளில் காலை, நண்பகல்,பிற்பகலில் மோதல்கள் நடைபெற்றுள்ளன. இதில் இராணுவச் சிப்பாயொருவர் கொல்லப்பட்டதுடன் இரு படையினர் காயமடைந்துள்ளனர். வவுனியாவில் வேட்டை மான்குளம், பாலமோட்டை…

  9. இலங்கையில் மீண்டும் எலிக்காய்ச்சல் பரவிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம், 117 பேர் இந்தக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இந்த நோயினால் 34 பேரே இந்த நோயினால் மரணமாகினர். தற்போது இந்த நோயினால் 3700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயினால் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் 2600 பேர் மாத்திரமே பாதிக்கப்பட்டிருந்தனர். கம்பஹா, களுத்துறை, மேல்மாகாணம், சப்ரகமுவ, கண்டி, தென்மாகாணம்,கேகாலை, ஆகிய இடங்களிலேயே தற்போது அதிகளவானோர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் காய்ச்சல் நீர், கால்நடைகள், நாய்கள், மற்றும் பூனைகளின் மூலம் பரவுகின்றன WWW.TA…

  10. இலங்கையில் எந்தச் சூழ்நிலையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகிறது என்பதை சர்வதேச சமூகம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும் என சர்வதேச முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். குண்டுவெடிப்புக்கள் போன்ற வன்முறைச் சம்பவங்களிலிருந்து நாட்டு மக்களைக் காப்பாற்றவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருப்பதாக அவர்; கூறினார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் இராணுவ நடவடிக்கைகளால் மனித உரிமை மீறல்கள் அதிகரித்திருப்பதாக சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கம் மீது குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக பி.பி.சி. செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மனித உரிமை மீறல்களைத் …

  11. ஆட்கடத்தல்களை ஆட்சேபித்து நீதிமன்றக் கதவைத் தட்டுங்கள்! 06.09.2008 பெரும்பான்மையினமான பௌத்த சிங்கள சமூகத்தின் பேரினவாதச் சிந்தனைக்குச் செயலுருக் கொடுப்பனவாக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் அமைந்து இருப்பினும், வெளிப்படையாகப் பெயருக்கேனும் சமத்துவத்தைக் காட்டும் சட்ட ஏற்பாடுகளும், சட்டமாக எழுதப்படாத இயற்கை நீதியும் இந்த நாட்டில் இருக்கவே செய்கின்றன. இலங்கைத் தீவில் அடக்கி ஒடுக்கப்படுகின்ற சிறுபான்மை இனங்கள் இந்த வசதிகள், வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்தி நியாயம் தேடவும், நீதி பெறவும் தம்மால் இயன்ற அளவுக்கு முயற்சிக்க வேண்டும். அத்தகைய முயற்சிகளில் வெற்றிகிட்டாமல் போகலாம். நீதியை நிலைநாட்ட இயலாமல் போகலாம். ஆனால், ஆகக் குறைந்தது நியாயம் தேடும் …

  12. பேரினவாத ஒடுக்கு முறையாளர்களின் போர் மாத்திரையால் மயங்கி நிற்கும் சிங்கள மக்கள் விரைவில் உண்மைகளை உணரும் நிலை வரும் [06 - September - 2008] காலகண்டன் "பயங்கரவாதத்தை முறியடிப்பேன். பிரபாகரனை எனது காலடிக்கு கொண்டு வருவேன். வடக்கு மக்களைப் புலிகளின் பிடியில் இருந்து மீட்பேன். கிழக்குப் போன்று வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தி அங்கு சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவேன்' மேற்கூறிய வசனங்கள் அண்மைய மாதங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் சூளுரைகளாக முன்வைக்கப்பட்ட கருத்துகளாகும். இவை வெறும் உரைகளாக அன்றி வடக்கு நோக்கி முடுக்கி விடப்பட்ட போரின் நடுவே கூறப்பட்டு வந்த பேரினவாத உணர்ச்சி மிக்க வரிகளுமாகும். இவற்றின் மொத்த வெளிப்பாட்டை இன்றைய வன்னிப் போர்க்களம் வெளிப் படுத்…

  13. இலங்கையில் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் சிறப்பாக பணிபுரிந்து வருகின்ற போதிலும், அவற்றின் மீது நீதியற்ற தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். வேர்ல்ட் விசன் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாயிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட, வேர்ல்ட் விசன் நிறுவனம் இலங்கையில் மேற்கொண்ட பணிகள் தொடர்பான வீடியோ தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், இந்த வீடியோ காட்சிகள் இலங்கையின் தொலைக்காட்சி சேவைகளில் ஒளிபரப்பப்பட வேண்டும் எனவும், அப்போதுதான் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையில் எவ்வாறான பணிகளை மேற்கொண்டிருக்கின…

  14. வடக்கில் இருந்து யாழ்ப்பாணம் அரியாலை அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் 30 வருடங்களின் பின்னர் விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபடவுள்ளனர். 103 ஏக்கர் வயல் காணியில் இந்த நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 73 விவசாயிகளுக்கு இந்த கமத்தொழில் நடவடிக்கையை மேற்கொள்ளும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் விவசாயம் செய்வதற்கான அனுமதியை யாழ் பிராந்திய கட்டளைத் தளபதி ஜீ.ஏ.சந்திரசிறி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடபகுதியில் இருந்து தெற்குக்கு அரிசி, வாழை, மிளகாய் மற்றும் வெங்காயம் ஏற்றுமதி செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை என யாழ் கட்டளைத் தளபதி கூறியுள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50

  15. அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது எனத் தீர்மானித்த த நேஸன் பத்திரிகையின் ஆசிரியர் குழு மேற்கொண்ட முடிவினை நிராகரித்தமையினால், அந்த பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மற்றும் உப ஆசிரியர் ஆகியோர் பதவிகளில் இருந்து விலகுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதாக குற்றம்சுமத்தியுள்ள எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு இந்த நடவடிக்கையைக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. த நேஸன் பத்திரிகையின் ஆசிரியர் முன்சா முஸ்தாக், உப ஆசிரியர் எம். டேவிட் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி தமது பதவி விலகல் கடிதங்களை கையளித்துள்ளனர். ரிவிர மீடியா கோப்பரேசன் நிறுவனம் அந்தப் பதவி விலகல் கடிதங்களை உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளதாக எல்லைகள் அற்ற ஊடவியலாளர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. பத்திரிகையின் உரிமையாளர்கள் ஜனாதிபத…

  16. வன்னேரிக்குளம் மோதலில் 50 படையினர் பலி: 120 பேர் காயம்: படைத்துறை ஆய்வு ஊடகம் [சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2008, 09:34 மு.ப ஈழம்] [க.நித்தியா] அக்கராயன் வன்னேரிக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் படை நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் கொல்லப்பட்ட படையினரின் எண்ணிக்கை 50 என்று சிறிலங்கா படைத்துறையை மேற்கோள் காட்டும் படைத்துறை ஆய்வு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுவரை 13 படையினரே கொல்லப்பட்டனர் என்று படைத்தரப்பு தெரிவித்து வரும் நிலையில் இத்தகவல் வெளியாகியிருக்கின்றது. விடுதலைப் புலிகள் அக்கராயன் வன்னேரிக்குளம் முறியடிப்பில் படையினரின் 22 உடலங்களையும் நாச்சிக்குடா முறியடிப்பில் படையினரின் 7 உடலங்களையும் கைப்பற்றியிருந்தனர். …

    • 0 replies
    • 953 views
  17. இலங்கையில் ஈழப்போர் தீர்மானக் கட்டத்தை அடைந்திருப்பதாகவும் அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இந்தப் போரில் விரைவில் வடக்கையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்போவதாக அரசாங்கம் தெரிவித்திருப்பதாகவும் இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் இனப்பிரச்சினைக்காக முன்வைக்கப்போகும் அதிகாரப் பேரளிப்பு தீர்வானது, 20 வருட யுத்தத்துக்குக் கூலியாக அமைய வேண்டும் என்பதே இந்த இணையத்தளத்தின் கருத்தாகவுள்ளது. மறுபுறத்தில் இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் அக்கறை மற்றும் அந்தப் பிரச்சினையால் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள அகதிகளின் நிலைப்பாடு குறித்து அந்த இணையத்தளம் விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இலங்கை அகதிக…

  18. மல்லாவியில் ஒருபகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை புலிகள் சுற்றிவளைத்துள்ளதாக இராணுவ உயரதிகாரி ஒருவரை ஆதாரம்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. எனினும் இந்த தகவலை இராணுவபேச்சாளர் உதய நானயக்கார மறுத்துள்ளார். இதன் மேலதிக செய்திகள் விரைவில்...... http://www.tamilskynews.com/

    • 12 replies
    • 5.7k views
  19. திருகோணமலை துறைமுகத்தில் உள்ள சிறிலங்காவின் பிரதான கடற்படை தளத்தின் மீது தமிழீழ விடுதலை புலிகள் வானூர்தி தாக்குதல் நடத்திய பின்னர் இன்று வரை 35 தமிழ் இளைஞர்கள் சிறிலங்காவின் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 670 views
  20. வவுனியா வடக்கில் கிளைமோர் தாக்குதல்: அப்பாவிப் பொதுமகன் படுகொலை [வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2008, 10:42 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா வடக்கு பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் அப்பாவி பொதுமகன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியா வடக்கில் உள்ள குறிசுட்டகுளம் பகுதியில் உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:45 மணிக்கு இக்கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் விஞ்ஞானகுளம் கனகராயன்குளத்தைச் சேர்ந்த யோகநாதன் சிறீ என்பவர் கொல்லப்பட்டர். அனந்தர்புளியங்குளத்தைச் சேர்ந்த இராசு மனோகரராசா (வயது 36) என்பவர் படுகாயமட…

    • 0 replies
    • 551 views
  21. தமிழீழத்தினை உலக நாடுகளே ஏற்றுக்கொண்ட பிறகு இந்திய அரசியல்வாதிகள் மௌனம் சாதிப்பது ஏன்? தமிழகத்தில் இருந்து வெளிவரும் வார இதழ் குமுதத்தில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா வாசகர்கள் கேள்விகளுக்கு பதில் எழுதி வருகிறார். அங்கு ஒரு வாசகர் இலங்கையில் தமிழர்கள் படும் அல்லல் தீருமா? என்று கேட்டுள்ள கேள்விக்கு பாரதிராஜா தமிழீழம் ஒன்றுதான் இதற்குத் தீர்வாகும் என்பதை உலக நாடுகளே ஏற்றுக்கொண்ட பிறகு இந்திய அரசியல்வாதிகள் மௌனம் சாதிப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை. அந்த மௌனம் கலைந்தால் அல்லல் தீரும்! என்று கூறியுள்ளார். http://www.tamilseythi.com/tamilnaadu/Bara...2008-09-05.html

  22. வவுனியா பம்பைமடுப் பிரதேசத்தில் 45 வயதான ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்டவர் 45 வயதான ரி.மகேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வயலில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. கொல்லப்பட்டவரது சடலத்தை இன்று முற்பகல் 11.30 அளவில் கைப்பற்றிய காவற்துறையினர் அதனை வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். மரணத்திற்குப் பின்னரான விசாரணைகளை வவுனியா நீதவான் மேற்கொண்டதாக வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50

  23. புலிகளின் தாக்குதல்கள் உதிரிகளானவையல்ல - ஜெயராஜ் - கிழக்கைப்போல் வடக்கும் மீட்கப்படும்; கிளிநொச்சி நகரம் விரைவில் கைப்பற்றப்படும்; விடுதலைப் புலிகள் விரைவில் தோற்கடிக்கப்படுவர் என மகிந்த ராஜபக்ச அரசாங்கமும், அதன் படைத்தரப்பும் அறிவிப்புக்கள் செய்து வரும் நிலையில், வடக்கு-கிழக்கில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களும் மாற்றங்களும் தீவிரம் பெற்றுள்ளன. கடந்த பத்து நாட்களுக்குள் வடக்கு-கிழக்கில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் பல இடம்பெற்றுள்ளன. இத்தாக்குதல்கள் தற்காப்புத் தாக்குதல்கள், அதிரடித்தாக்குதல்கள், முறியடிப்புத் தாக்குதல்கள், வலிந்து தாக்குதல்கள் எனப் பல வகைப்பட்டிருந்தன. இந்த வகையில், மூன்று வகை நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள…

  24. ஆயுத வர்த்தகம் தொடர்பில் 5 வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்தின் மெரையின் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்ட சுஜி குணபால என்பவரே விடுதலைப்புலிகளுக்கு சிலின் 143 ரக இலகு ரக விமானங்கள் மூன்றை பெற்றுக்கொடுத்துள்ளதாக புலனாய்வுதுறையினருக்கு தற்போது தகவல்கள் கிடைத்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டு 18 மாதங்களில் பின்னர் கப்பல் ஒன்றின் மூலம் இந்த மூன்று விமானங்களையும் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு கொண்டு சென்றததாக குணபால தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுஜி குணபாலவின் தந்தை சிங்களவர் என்பதுடன் அவர் காவற்துறை சிப்பாயாக பணியாற்றினார். அவரது தாய் தமிழ் பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.