Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து வடக்காக 10 கிலோமீட்டர் தொலைவில் மிகப்பெரியதான திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார். ஆசியாவிலேயே மிகப் பெரிய மீன்பிடித்துறைமுகம் என்று இலங்கை அரச ஊடகங்கள் விபரித்துள்ள திக்கோவிட்ட துறைமுகம் நெதர்லாந்து அரசின் நிதியுதவியில் கிட்டத்தட்ட 53 யூரோ மில்லியன் செலவில்(இலங்கை ரூபாயில் கிட்டத்தட்ட 9500 மில்லியன் ரூபாய் செலவில்) நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மொத்த செலவில் 45 யூரோ மில்லியன் நிதியை ( 65 வீதமளவு கடனாகவும் 35 வீதமளவு மானியமாகவும்) நெதர்லாந்து வழங்கியுள்ளது. மிகுதி 8 யூரோ மில்லியன் பணத்தை இலங்கை அரசாங்கம் செலவிட்டுள்ளதாக திக்கோவிட்ட துறைமுக நிர்வாக முகாமையாளர் நுவன் ஜயசிங்க ப…

  2. -எஸ்.றொசேரியன் லெம்பேட் 1990 இல் மன்னார் மாவட்டத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அனாதரவற்ற முஸ்லிம்களுக்கு பொது பலசேனாவால் இன்று நெருக்கு வாரங்கள் ஏற்பட்டுள்ளன. மிருகங்களிற்கு கொடுக்கப்படும் சலுகைகள் கூட முஸ்லிம்களுக்கு கிடையாதா? இப்படியான ஒரு சோதனை நிலைமையே அகதி முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது.அந்த வகையில் முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமான நாடு இது. இந்த நாட்டை அழகான முறையில் கொண்டு செல்லும் ஜனாதிபதியின் பெயரை நாசப்படுத்தும் செயல்களையும், துரோக செயல்களையும் செய்கின்ற பேரினவாதிகளின் முற்போக்கு செயல்களையும் அடாவடி தனத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவி…

    • 2 replies
    • 565 views
  3. மிஹின் லங்கா எனும் விமானப் போக்குவரத்து நிறுவனம் தமிழகத்திற்கான சேவைகளை ஜூன் முதலாம் திகதியிலிருந்து நிறுத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது. கொழும்பிற்கும் திருச்சிக்குமிடையே வாரம் நான்கு முறை மிஹின் லங்கா விமானங்கள் வந்து போகின்றன. தமிழகத்தில் பிக்குமார் தாக்கப்பட்டதை அடுத்து இலங்கையில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை குறைகிறது பயணிகள் போக்குவரத்து வீழ்ச்சியடைந்த நிலையிலேயே சேவைகளை நிறுத்த முடிவெடுக்கப்பட்டதாக மிஹின் லங்கா பயணச்சீட்டுகளை விற்பனை செய்யும் ட்ரான்ஸ்லங்கா கூறுகிறது. கடந்த செப்டம்பரில் வேளாங்கண்ணி வந்த இலங்கையர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து பயணிகள் வருகை வீழ்ந்திருக்கிறது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கெதிரான தீர்மானம் தொடர்பாக தம…

  4. 'மிஹின் லங்கா' நிறுவனத்துக்கு 8.5 மில்லியன் நட்டம் செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2012 09:57 0 COMMENTS 'மிஹின் லங்கா' நிறுவனம் நடப்பு கணக்கு ஆண்டில் 2 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளதுடன் 2007 ஆம் ஆண்டு முதல் கடந்த 5 வருடங்களில் 8.5 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளதாக கணக்காய்வாளர் தெரிவித்துள்ளார். பொது கணக்குகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவிலே மிஹின் லங்கா நிறுவனத்தினத்தின் கணக்காய்வாளர் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது- http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/53568----85--.html

    • 2 replies
    • 393 views
  5. வவுனியா தடுப்பு வதைபுரி முகாம்களில் உள்ள தமிழ் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் - மிகுந்த அச்சுறுத்தல் நிறைந்த சூழலில் இருந்து மீண்டும் தாம் இரகசியமாக இயங்கத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ் மாணவர் ஒன்றியம் - தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தாம் எடுக்கும் கடின முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி உலகத் தமிழர்களிடம் கோரி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ் மாணவர் ஒன்றியம் வன்னி மாவட்டம் வவுனியா வவுனியாவில் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள மக்களின் விடுதலைக்காக நடவடிக்கை எடுங்கள் கடந்த மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்கால் பகுதிய…

    • 0 replies
    • 372 views
  6. அரசியல் அதிகாரத்தை தமிழர் தாயகப் பகுதிகளுக்கும் பகிர்ந்தளித்து, தமிழர்களுக்கான ஆட்சி உரிமைகளை வழங்குமாறு இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் சிறிலங்காவுக்கு சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் - சத்தம் சந்தடி இன்றி தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்கும் வேலைகள் பல வழிகளாலும் தொடங்கப்பட்டுவிட்டன. அதில் ஒரு வழிதான் சுகாதாரத்துறை. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 644 views
  7. 'மீண்டும் ஜனாதிபதியானால் நாட்டில் வித்தியாசமாக எதனை செய்வீர்கள் ?' : பதிலளித்தார் மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக வாய்ப்பு கிடைத்தால் நாட்டில் வித்தியாசமாக எதனை செய்வீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, நாட்டை யார் ஆட்சி செய்தாலும் தற்போதைய தலைமுறையினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஏற்ற சரியானதை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை அவரது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கேள்வி உங்களுடைய தம்பி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவ…

  8. இலங்கைக் கடற்பரப்புக்குள் தமிழக மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருவது வட-இலங்கை மக்களை கடுமையாக பாதிப்பதாக வடக்கு மாகாணசபையின் மீன்பிடித் துறை அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்ற பாலசுப்ரமணியம் டெனீஸ்வரன் கூறுகிறார். ததேகூ தலைவர் சம்பந்தன், முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் இலங்கைச் சட்டத்தால் தடைசெய்யப்பட்டபொட்டம் ட்ரோலிங் (ஆழ்கடலில் தரையை துளாவி மீன்வளங்களை அள்ளிச் செல்லும் மீன்பிடி முறை) முறையைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் வட-இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதால் எதிர்காலத்தில் மீன்வளங்களே இல்லாத பகுதியாக தங்கள் பிரதேசம் மாறிவிடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் தெரிவித்தார். …

  9. 'மீளக்குடியேற செல்லும் முஸ்லிம்களை வடக்கிலுள்ள அரச அதிபர் துரத்துகிறார்' தமிழீழ விடுதலை புலிகளினால் வட மாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியேறாமால் தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை காண முடியாது என வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் இன்று செவ்வாயக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த முஸ்லிம்கள் தற்போது கூடாரங்களில் வாழ்வதாகவும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசர கால சட்ட விவாதத்தில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டார். சில முஸ்லிம்களை வடக்கிலுள்ள அரசாங்க அதிபர் துரத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். புத்தளத்தில் வசிக்கும் இந்த மக்கள் மீளக்குடியேற்ற செல்லும் போது மேற்படி அரசாங்க அதிபர் ஏன் இங்கு வ…

  10.  'மீள்குடியமர்த்தப்பட்டால் 38 நலன்புரி முகாம்களையும் மூடலாம்' -சொர்ணகுமார் சொரூபன் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மயிலிட்டி பகுதியில் மக்கள் குடியமர்த்தப்பட்டால் யாழ்ப்பாணத்தில் உள்ள 38 நலன்புரி முகாம்களையும் மூடலாம். ஏனெனில், இம்முகாம்களில் உள்ள மக்கள் அனைவரும் இப்பகுதியை சேர்ந்தவர்கள். இவ்வாறு மக்கள் குடியமர்த்தப்பட்டால் தமது வாழ்வாதாரத்தை மீன்படி மூலம் உயர்த்திக்கொள்வார்கள் என்று அப்பகுதி மீனவ சங்கத்தினர் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்தனர். அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை (10) யாழ்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல…

  11. -எம்.எஸ்.நூர்தீன் நாடாளுமன்றத்திலும் கிழக்கு மாகாண சபையிலும்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு வழங்கியுள்ள ஆதரவினை உடனடியாக மீளப்பெற வேண்டிய நேரம் நெருங்கி விட்டதாக மட்டக்களப்பு மாநகர சபையின்; ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் என்.கே றம்ழான் தெரிவித்துள்ளார். கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 7ஆசனங்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருந்த போதிலும். முஸ்லிம் காங்கிரஸ் இன்றி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினாலோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பினாலோ கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க முடியாது நிலை காணப்பட்டது. இந்நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கொடுத்த வாய்ப்பையும் மு.கா கைநழுவவிட்டுவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கிழக்…

  12. 'முக்கிய பிரமுகரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து வீசிவிட்டுச் சென்றனர்' : கீத் நொயார் வழக்கில் தகவல் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008ம் ஆண்டு மே மாதம், தி நேசன் இதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளை நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு அழைத்திருந்தனர். மேஜர் பிரபாத் புலத்வத்த, சார்ஜன்ட் துமிந்த வீரரத்ன, சார…

  13. 'முதலமைச்சருக்கோ, எனக்கோ கூடிய விருப்புவாக்குகள் அளிக்கப்பட்டமை தனிப்பட்ட நட்புபாராட்டவல்ல' - அனந்தி சசிதரன் - எழிலன் 25 அக்டோபர் 2013 'தனிப்பட்ட ரீதியில் போடப்பட்ட வாக்குகளுற்கு உரிமை கோர முடியாது' எம்முன் பாகுபாடுகளோ, வேறுபாடுகளோ வேண்டாமென மீண்டும்மொரு முறை கேட்கின்றேன் - அனந்தி சசிதரன் - எழிலன் எம்முன் பாகுபாடுகளோ, வேறுபாடுகளோ வேண்டாமென மீண்டும்மொரு முறை உங்கள் அனைவரதும் சகோதரியாக, மூன்று குழந்தைகளது தாயாக, காணாமல் போன தலைவனை தேடுகின்ற குடும்பத்தலைவியாக கேட்கின்றேன் எனத்தெரிவித்துள்ளார் திருமதி .அனந்தி சசிதரன் - எழிலன் வடக்கு மாகாணசபையினது முதலாவது அமர்வில் தனது முதல் உரையில் அனைவரையும் மக்களிற்காக ஒன்றிணைய அழைப்பு விடுத்து அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கைய…

    • 5 replies
    • 898 views
  14. 'முதலமைச்சர் மாத்திரம் வடமாகாண சபை இல்லை நிகழ்வொன்றுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்தால் அது வடமாகாண சபைக்கான அழைப்பு என்று யாரும் கருதக்கூடாது. முதலமைச்சர் மாத்திரம் வடமாகாண சபை அல்ல. உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்று தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் நேற்று நடைபெற்ற அரச நத்தார் கொண்டாட்ட ஆரம்ப விழாவுக்கு வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், மேற்படி நிகழ்வி…

  15. -ஜோசப் அன்டன் ஜோர்ஜ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது பதவிகாலத்தில் நாட்டில் நிலவிய பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதுடன் இரண்டாவது பதவி காலத்தில் நாட்டில் பாரிய அபிவிருத்தித திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை(28) நடைபெற்ற, கடந்த 2013ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரத்தில் 5 ஏ சித்திகளுக்கு மேல் பெற்ற, கொழும்பு பிரதேசத்திற்குட்பட்ட, வறிய குடும்பங்களை சேர்ந்த 42 மாணவர்களுக்கான புலமை பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவ…

  16.  'முதலில் நீங்கள் சொல்லுங்கள், பிறகு நான் சொல்கின்றேன்' -ஜே.ஏ.ஜோர்ஜ் அத்துடன், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டது யார் என்பதை மஹிந்த தரப்பு அறிவித்தால், விடுதலைப் புலிகளுக்கு கீழ்படியுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்ட அரசியல் தலைவர் யார் என்பதை அறிவிக்கின்றேன' என, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார். அத்துடன், 1999ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் விடுதலைப் புலிகளால் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பொலிஸ் நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு கருணா அம்மானே கட்டளை வழங்கினார்' என்றார். வாய்மூல விடைக்கான …

  17. 'முதல் குண்டுத்தாக்குதலை சஹ்ரானே மேற்கொண்டார்' (எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களில் அதிக வெளி­நாட்­ட­வர்­களை பலி­யெடுத்த, சங்­கிரில்லா நட்­சத்­திர ஹோட்டலில் இரு தற்­கொலைக் குண்­டுகள் வெடித்­துள்­ள­துடன் அதில் முதல் குண்டை தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் பயங்­க­ர­வாத குழு­வுக்கு தலைமை வகித்த மொஹம்மட் காசிம் மொஹம்மட் சஹ்ரான் அல்­லது சஹ்ரான் ஹாசிம் அல்­லது அஷ்ஷெய்க் சஹ்ரான் ஹாஷிம் என்­ப­வரே நடத்­தி­யுள்­ள­மையை சி.ஐ.டி. விசா­ர­ணை­களில் கண்­ட­றிந்­துள்­ளது. உயிர்த்த ஞாயிறு தின­மான கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி காலை 8.54 மணிக்கு இந்த குண்டை அவர் வெடிக்கச் செய்­துள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் குறித…

  18.  'முன்னாள் போராளிகளின் மரணம் தொடர்பில் ஆராய வேண்டும்' புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் பலர் மர்மமான முறையில் மரணமடைந்து வருகின்றனர் என ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்ற நிலையில், அதன் பின்னணி தொடர்பில் முழுமையானதும், பகிரங்கமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் இவர்கள் உரிய உடல் மற்றும் உள ரீதியிலான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, உரிய சிகிச்சைகளுக்கு இவர்கள் உட்படுத்தப்பட வேண்டுமென்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில்அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, …

  19. 'முல்லைத்தீவுக்கு கப்பல் மூலம் உணவுப்பொருட்கள்'- இலங்கை அரசு அறிவிப்பு மோதல்கள் நடைபெறும் முல்லைத்தீவுக்கு நாளை திருகோணமலையில் இருந்து கப்பல் மூலம் உணவுப்பொருட்களை அனுப்பவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் அமைச்சரான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொடியுடன் செல்லும் கப்பலில், இலங்கை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் ஏற்பாட்டின் பேரில் இந்த உணவுப் பொருட்களின் முதல் தொகுதி அனுப்பப்படுவதாகவும், நாளை காலை 8 மணிக்கு அந்தக் கப்பல் முல்லைத்தீவைச் சென்றடையும் என்றும் அவர் கூறினார். அங்கு அவற்றை முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் பொறுப்பேற்று விநியோகிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை தரை மார்க்கமாக அங்கு உணவுப்பொரு…

  20. 'முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்':அமைச்சர் விஜயகலா விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிகட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இறுதிகட்ட போரில் ஏராளமானோர் உயிரிழந்ததாக மனித உரிமைகள் அமைப்புகள் கூறுகின்றன. அப்படி கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஒரு ஸ்தூபி எழுப்பப்படுவதை யாரும் எதிர்க்க முடியாது எனவும் அவர் கூறுகிறார். அடுத்த ஐந்து வருடங்களுக்குள் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஒரு ஸ்தூபி அமைக்கப்படும் எனவும் அவர் உறுதியாத் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் நினைவிடம் ஒன்றை…

  21. 'முள்ளிவாய்க்கால் நினைவு: புலிகளுக்கானது அல்ல' பாநூ கார்த்திகேசு முள்ளிவாய்க்காலில், மே 18ஆம் திகதி, முதன்முறையாக நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. அந்த நினைவுதின அனுஷ்டிப்பு, விடுதலைப் புலி அமைப்பின் உயிரிழந்த உறுப்பினர்களுக்கானது அல்ல என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பியான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அது, யுத்தத்தினால் உயிரிழந்த உறவுகளுக்கான துக்க அனுஷ்டிப்பாகும் என்றும் அவர் கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (24), நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர…

  22. 'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது Oct 31, 2025 - 03:20 PM - 'முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய செயற்திட்டத்தின் கீழ், பொலிஸார் நாடு முழுவதும் மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ், நேற்றைய தினம் 987 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சுற்றிவளைப்புகளின்போது, போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 371 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம், மொத்தமாக 971 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 பேருக்கு எதிராகத் தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. அத்துடன், கைது செய்யப்பட்ட நப…

  23. 30 Oct, 2025 | 06:01 PM (எம்.மனோசித்ரா) 'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' என்ற கருப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியிலான தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. கொழும்பு - சுகததாச உள்ளக அரங்கில் வியாழக்கிழமை (30) காலை இந்நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உள்ளிட்ட ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் பொது மக்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அரச நிறுவனங்களின் பங்களிப்புக்கு அப்பால், பரந்த பொதுமக்களின் பங்கேற்புடன…

  24. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை அக்கட்சி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். புல்மோட்டை, ஜின்னாபுரம் எனுமிடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார். கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக போட்டியிட்ட சின்ன மரைக்கார் பளீல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சம்பந்தன் மேலும் தெரிவிக்கையில், "கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக நியமிக்க தயார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பகிரங்கமா…

    • 0 replies
    • 444 views
  25. 'இலங்கையில் யுத்தக் காலத்தில் முஸ்லிம் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்கள் குறித்த கணக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும்' என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. 'அப்படியான கணக்கெடுப்பை அரசு விரைவாக முன்னெடுக்க வேண்டும். அதன் மூலமே முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளின் பாதிப்புகள் முழுமையாகத் தெரியவரும்' என்றும் அக்கட்சியின் பொதுச் செயலர் ஹஸன் அலி பிபிசிக்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'பல அமைப்புகள் இந்தக் கணக்கெடுப்பு மற்றும் குறிப்புகளை சேகரித்திருந்தாலும், அவற்றுக்கு சட்டரீதியான ஒரு அந்தஸ்து இல்லை. அதன் காரணமாகவே அரசே இப்படியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கூறுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.