ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
"என் தலைவன் பிரபாகரனையே கொன்று விட்டனர். இனிமேல் காமன்வெல்த் மாநாட்டில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை பற்றி பேசி என்ன நடக்கப் போகிறது" என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று (26.10.13) விஜயகாந்த்தை ஊடகவியலாளர்கள் சந்தித்தனர். அதன்போது இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாடு தொடர்பாக கேள்வி எழுப்பினர். கேள்வி - காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதே? பதில் - நான் என்ன சொல்ல வேண்டும். கனடா கலந்து கொள்ளாது. ஆனால் அந்நாட்டு பிரதிநிதி பங்கேற்பார் என்றும், இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடுமைக்கு எதிர்ப்பை பதிவு செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தற்போது பேசி என்ன …
-
- 1 reply
- 803 views
-
-
"இரு வாரங்களில் ஊடகங்களில் வெளிப்படுவார் ஞானசார தேரர்" பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விரைவில் ஊடகவியலாளர்களை சந்திப்பார். இருவாரங்களில் அவர் ஊடக சந்திப்புகளில் வெளிப்படுவார் என அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலாந்த விதானகே தெரிவித்தார். ராஜகிரிய சத்தர்மாராஜித விஹாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இன்னும் இரு வாரங்களில் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுவார். தற்காலத்தில் நாட்டில் எழுந்…
-
- 1 reply
- 349 views
-
-
(எம்.எம்.சில்வெஸ்டர்) நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரச தலைவர்கள் பாதுகாப்புத் துறையினர் முன்நின்று செயற்பட வேண்டும். அவர்கள் தங்களையும் , தங்களது குடும்பங்களையும் மாத்திரம் பாதுகாத்துக்கொள்வதற்காக மாத்திரம் செயற்படலாகது என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு மறை மாவட்ட சமூக மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் அருட் தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு தொடர்புடையவர்கள் மற்றும் அதற்கு பின்னணியில் உள்ளவர்கள், உண்மையை மூடி மறைப்பவர்கள் ஆகியோரை தேடிப்பார்க்குமாறு நாம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அராசங்கத்திடம் கேட்டு நிற்கிறோம். இந்த விசாரணை முறையாக நடக்கவில்லை என்று தோன்றுகிறது என அவர் மேல…
-
- 1 reply
- 462 views
-
-
தன் தவறை மறைக்க அவதூறு செய்கிறார். விடுதலைப் புலிகள் மீது முற்றிலும் உண்மையல்லாத குற்றச்சாட்டுக்களைக் கருணாநிதி தெரிவித்துள்ளார் என பழ.நெடுமாறன் அவர்கள் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: pazha_nedumaran1கருணாநிதி நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் போரில் கொல்லப்பட்டதை தடுப்பதற்குத் தவறிவிட்ட தனது மாபெரும் துரோகத்தை மறைப்பதற்காக தொடர்ந்து பொய்யான தகவல்களைக் கொண்ட அறிக்கைகளைக் கருணாநிதி வெளியிட்டு வருகிறார். 1986ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற டெசோ பேரணி மாநாட்டில் பிரபாகரன் கலந்து கொள்ளாமல் தனது பிரதிநிதியாக திலகர், பேபி சுப்பிரமணியம் ஆகியோரை அனுப்பியதைக் குறைகூறியிருக்கிறார். ஆனால் அ…
-
- 0 replies
- 504 views
-
-
அவுஸ்திரேலிய தேசிய இரசாயன நிறுவனததால் கொழும்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான இரசாயன போட்டிப் பரீட்சை ஒன்று வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தில் இன்று நடத்தப்பட்டுள்ள நிலையில் . இந்த பரீட்சையை நடாத்திய தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டுள்ள போதும் வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய அதிபர் முஸ்லிம் மாணவிகளை பர்தாவுடன் பாடசாலை வளாகத்திற்குள் அனுமதிக்க மறுப்பு வெளியிட்டுள்ளதாகவும் அதனை அடுத்த அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது. இதன்போது பாடசாலைக்கு வெளியே பர்தாவை கழற்ற எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்களுக்கும் பாடசாலை அதிபருக்கும் இடையில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் பின்னர் முஸ்லிம் மாணவிகள் பர்தாவு…
-
- 11 replies
- 1.1k views
-
-
அனைத்து தரப்பினரும் கருத்துக்கள் உள்வாங்கப்படாமல் அரசியல் சாசனம் உருவாக்கப்படுவதே முரண்பாடுகளுக்கு காரணம் – ஜூலி பிஷொப்பிடம் சம்பந்தன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் இன்றையதினம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை சந்தித்துள்ளார். 45 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கையில் இதுவரையான காலமும் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனங்களில் சகல இன மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்படவில்லை எனவும் இதுவே இலங்கையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எடுத்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முரண்பாட்டு நிலையினை தீர்ப்பதற்கு அனைத…
-
- 2 replies
- 291 views
-
-
திறந்து வைக்கப்பட்டது “கல்யாணி தங்க நுழைவு” இலங்கையின் முதலாவது அதி நவீன தொழிநுட்பத்தின் கூடி கேபிள்களின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய களனி பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் நேற்று(புதன்கிழமை) குறித்த பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு “கல்யாணி தங்க நுழைவு” (Golden Gate Kalyani) என பெயர் சூட்டப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1252081
-
- 22 replies
- 1.9k views
- 1 follower
-
-
இன்று காலை அவுஸ்திரேலியாவுக்கு படகில் செல்ல முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் தமிழ் மக்கள் மீது சிங்கள படையினரால் துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு கல்குடா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருதமிழ் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தப்பிக்க முயன்ற ஒருவர் முதலை கடிக்கு இலக்காகி காயமுற்றார்.குறித்த கடலோரம் சந்தேகத்திற்கிடமான முறையில் வள்ளமொன்றுக்கு அருகில் சிலர் காணப்பட்டதாகவும் இராணுவத்தினரைக் கண்டு தப்பியோட முற்பட்ட வேளை துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம் கல்லடி திருசெந்தூரைச் சேர்ந்த 22 வயதான கிறிஸ்டியன் ரொபின்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கே.கணேசன் (32 வயது) என்பவர் த…
-
- 0 replies
- 660 views
-
-
அண்மையில் காத்தான்குடி படுகொலைகள் குறித்து வடக்கு மாகாணசபை உறுப்பினர் அவர்கள் சமூகவலைத்தளமொன்றில் வெளியிட்ட கருத்துக்கள் மிகுந்த விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தன, இது குறித்து வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ. அய்யூப் அஸ்மின் அவர்களிடம் விளக்கம் கோரியபோது அவர் முன்வைத்த கருத்துக்களின் சுருக்கம் வருமாறு 1990ம் ஆண்டு காத்தான்குடியிலே மேற்கொள்ளப்பட்டிருந்த பள்ளிவாயல் படுகொலைகள் குறித்து “1990 ஆகஸ்ட் 3ம் நாள் காத்தான்குடியிலே பள்ளிவாயலில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட நாள்” என நான் ஒரு பதிவினையிட்டிருந்தேன். குறித்த பதிவிற்கு முகநூலிலும், ஏனைய இணைய ஊடகங்களிலும் பதில் பதிவுகள், விமர்சனங்கள் எழுந்திருந்தன. எனது கருத்…
-
- 2 replies
- 527 views
-
-
(ஆர்.யசி) நாட்டின் நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு அமைச்சரவையில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ள போதிலும், அரசாங்கத்திற்குள் ஒரு சில மாற்றுக்கருத்துகள் நிலவுகின்றன. இதனால் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கூடும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை மட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 3 ஆம் திகதி கூடும் அமைச்சரவை கூட்டத்திற்கு மத்திய வங்கி ஆளுநர் மற்றும் திறைசேரி செயலாளர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நிதி நெருக்கடி நிலைமைகள் மற்றும் டொலர் பற்றாக்குறை காரணமாக நாடு எதிர்கொண்டுவரும் சிக்கல்களை கையாள சர்வதேச நாணய நிதியத்தை ந…
-
- 0 replies
- 255 views
-
-
சரணடைந்த விடுதலைப் புலிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் கோத்தாபாய மற்றும் தளபதி சவீந்திர சில்வா ஆகியோர் வெளிநாட்டில் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் ஆபத்து உண்டு என்று அமைச்சர் பீரிஸ் குறிப்பிடுகின்றார். http://www.puthinappalakai.com/view.php?22bdTnnBdccc3QoOA344dadZZcAd002eXJOO4c4dd2mYllx20aeK44B5cee20mKMW043aa4Z5BBf0e
-
- 1 reply
- 1k views
-
-
வவுனியாவில் படைப்புலனாய்வாளர்கள் குவிப்பு!! கண்காணிப்புப் பிரதேசமாக வவுனியா மாறியுள்ளது!! யாழ்ப்பாணத்துக்கான தரை வழிப்பாதை திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் வவுனியா மிக முக்கிய பிரதேசமாக மாறியுள்ளது. அதாவது தென்னிலங்கையையும் தமிழர் தாயகத்தையும் இணைக்கும் பகுதியாக இது இருந்து வருகின்றது. இதை தொடர்ந்து சிறீலங்கா படைப்புலனாய்வாளர்களின் மிக முக்கிய கண்காணிப்பு பிரதேசமாகவும் அவர்கள் அதிகம் பேர் பணியில் ஈடபடுத்தப்பட்டுள்ள பிரதேசமாகவும் இது காணப்படுகின்றது. குறிப்பாக வன்ன்pயில் போர் முடிவடைந்த பின்னர் சிறீலங்கா படையின் தமிழ் மக்கள் மீது தொடுத்துள்ள மறைமுகப்போருடன் புலனாய்வு துறையினர் பெரும் தொடர்பு கொண்டுள்ளனா.; இவ் அடிப்படையில் தப்பியுள்ளதாக சிறீல…
-
- 0 replies
- 520 views
-
-
ஜேர்மனியிலும் ஆவா - எஸ்.நிதர்ஷன் ஆவா குழுவினருடன் தொடர்புடைய ஒருவர் ஜேர்மனியில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஆவா குழு தொடர்பாக பொலிஸாரிடம் கேட்டபோது, அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆவா குழுவினருடன் தொடர்புடைய ஒருவர் ஜேர்மனியில் இருப்பதாகவும் அவர்கள் தொடர்பாக இன்டபோலுக்கு தகவல் தெரிவிக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குற்றவாளிகளுக்கு நிதிகள் கிடைத்தமை தொடர்பாகவும் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர் என முதலமைச்சர் தெரிவித்தார். http://…
-
- 2 replies
- 803 views
-
-
தமிழர்களின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அவர்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களது சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வே தமது கொள்கையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று நடைபெற்ற தமிழரசு கட்சியின் மாநாட்டில் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழரசு கட்சியின் 60 ஆண்டு நிகழ்வில் தமிழரசு கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தமிழர்கள் ஏமாற்றப்பட்ட வரலாற்றையும் தமிழர்களது நிலைப்பாடு பற்றியும் விளக்கமளித்தார். அவ்வுரையின் முக்கிய பகுதிகள் பகுதி வருமாறு: தமிழ்பேசும் மக்கள் அதாவது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சரித்திர ரீதியாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வந்திருக்கிறார்கள். அந்…
-
- 15 replies
- 1.4k views
-
-
எதுவும் மாறிவிடாது! இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்பும் நல்லிணக்க முயற்சிகளும் அறுந்து நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில், கடற்படைத் தளபதியாகத் தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் என்கிற செய்தி வந்திருக்கிறது. ரியர் அட்மிரல் ராவிஸ் சின்னையாவுக்கு அந்தப் பதவியை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வழங்கியிருக்கிறார். 47 வருடங்களின் பின்னர், அதாவது போர் தொடங்கி முடிவதற்கு 17 வருடங்களுக்கு முன்பிருந்து, தமிழர் ஒருவர் இலங்கையின் கடற்படைக்குத் தளபதியாகியிருக்கிறார் என்கிற தகவல்கள் ஊடகங்களில் பெரிதுபடுத்தப்பட்டிருக்கி…
-
- 0 replies
- 493 views
-
-
லண்டனில் ஈழத்தமிழ் இளைஞர் கொலை லண்டனில் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 34வயதுடைய யுவராஜன் சுவாமிநாதன் என்ற ஈழத்தமிழன் கடந்த புதன் கிழமை லண்டன் வைத்தியசாலையில் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பில் ஐஸ்ரின் சந்திரகாந்தன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட மற்றுமொரு நபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காவற்துறையில் வாராந்தம் சமூகமளிக்குமாறும் அறுவுறுத்தப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தங்கியிருந்தபோதே தாக்குதல்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்தார். http://meenakam.com/?p=3430
-
- 2 replies
- 1.5k views
-
-
யாழில் மகாத்மா காந்தியின் 74ஆவது நினைவு தினம் மகாத்மா காந்தியின் 74ஆவது நினைவு தினம் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது. அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். போதனா வைத்தியசாலை முன்றலில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை அமைந்துள்ள இடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது காந்தியின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் அதிகாரபூர்வ வெளியீடான காந்தீயம் பத்திரிகை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனால் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் இந்திய துணைத்தூதரக பதில் தூதர் ராம் மகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்களா…
-
- 8 replies
- 405 views
-
-
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டின் போது, இலங்கைக்கு எதிராக தாம் முன்வைக்கவுள்ள பிரேரணையை தயாரிக்கும் பணிகளை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் தற்போது இலங்கையின் கள நிலவரங்களை ஆராய்வதற்காக, அமெரிக்காவின் உயர் பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன்அடிப்படையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான துணை ராஜாங்க செயலாளர் டேசாய் பீஸ்வால், அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கையில் இலங்கையின் வடக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்து, இலங்கையின் கள நிலவரங்கள் தொடர்பில் ஆராய்வதுடன், அரசாங்க மற்றும் எதிர்கட்சி…
-
- 0 replies
- 470 views
-
-
கீரிமலை பிரதேசத்தில் J/ 226 கிராமசேவையாளர் பிரிவில் கிருஷ்ணன் கோவிலடியில் உள்ள மக்கள் காணியிலேயே குறித்த தங்குமிடம் கட்டப்பட்டு வருகின்றது. வடக்குக்கு ஜனாதிபதி செல்லும் போது தங்கி செல்வதற்காகவே குறித்த இந்த தங்குமிடம் கட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நவீன வசதிகளுடன் கட்டப்படும் தங்குமிடத்தில் நடுவினில் அதிநவீன வசதிகளுடனான பெரிய வீடு ஒன்றும் அதனை சுற்றி நவீன வசதிகளுடனான 7 சிறிய வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன. இந்த தங்குமிடத்தை சுற்றி அதிவேக நெடுஞ்சாலைக்கு பயன்படுத்தப்படும் தரம் உயர்ந்த காப்பற் மூலம் வீதிகள் போடப்பட்டுள்ளன. இந்த தங்குமிடத்தை சுற்றி உள்ள காணிகளில் இருந்து கல் அகழ்ந்ததினால் பாரிய குழிகள் காணப்படுகின்றன. அக் குழிகளுக்குள் கடல் நீரை உட்புகு…
-
- 0 replies
- 661 views
-
-
சு.க.வின் 66 ஆவது மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது மாநாடு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் தலைமையில் இன்று கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் பின்னர் கட்சி முக்கிய தீர்மானங்கள் பலவற்றை எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாநாட்டிற்கு கட்சியின் போசகராக செயற்பட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளி ட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சகல உறுப்பினர்களுக்கும் கட்சி மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அழைப்பினை உதாசீனம் செய்து கலந்து கொள்ளாதவர்களுக்கு இனிவரும் இதுபோன்ற முக்கிய …
-
- 1 reply
- 141 views
-
-
மாகாணசபை எங்களுக்கு இறுதித் தீர்வல்ல-கோவிந்தன் கருணாகரம் February 17, 2022 மாகாணசபை எங்களுக்கு இறுதித் தீர்வல்ல. எங்களது இறுதித் தீர்வு எங்கோ இருக்கின்றது. அதை அடைவதற்கு நாங்கள் ஒற்றுமையாக, ஐக்கியமாக, ஓரணியாக போரட வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் தேசிய பிராந்திய சர்வதேச நிலவரங்களும் என்ற தலைப்பில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆறு தமிழ்க்கட்சிகள் இணைந்து நடத்திய கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெ…
-
- 0 replies
- 202 views
-
-
செவ்வாய்க்கிழமை, 9, பிப்ரவரி 2010 (11:25 IST) பொன்சேகாவை தூக்கிலிட திட்டம்? இலங்கை முன்னாள் தலைமை ராணுவ தளபதி பொன்சேகாவுக்கு தூக்கு தண்டனை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்களை ரகசியமாகவும், விரைவாகவும் விசாரணை நடத்தி அதிகபட்ச தண்டனை வழங்க அதிபர் ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போரின்போது, அந்நாட்டு ராணுவ தலைமை தளபதியாக இருந்தவர் சரத் பொன்சேகா. போர் முடிவடைந்ததை தொடர்ந்து, அதிபர் ராஜபக்சேவுக்கும், பொன்சேகாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பொன்சேகா, முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, பொன்…
-
- 28 replies
- 3.5k views
-
-
20 ஆவது சட்ட வரைவை நிராகரித்தது வட மாகாண சபை கொழும்பு அரசால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது சட்ட வரைபை வடக்கு மாகாண சபை இன்று நிராகரித்தது. வடக்கு மாகாண சபை அமர்வு கைதடியில் உள்ள சபை மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. அதில் 20 ஆவது சட்ட வரைவு தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டது. சட்ட வரைவில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் முன்வைக்கப்பட்டால் அது தொடர்பாக மீள் பரிசீலனை செய்யப்படும் என்று சபையில் தெரிவிக்கப்பட்டது தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைவை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் அதனை நிராகரிப்பதாக சபையில் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/26378.html
-
- 0 replies
- 320 views
-
-
கோல்டன் வைஸ் இன் கூற்று ஐ.நா வின் கூற்றல்ல. வதிவிடப் பிரதிநிதி. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பேச்சாளர் கோல்டன் வைஸ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது 40000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்திருந்தார். இக்கருத்துத் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி நீல் பூஹனே, கோல்டன் வைஸ் இன் கருத்து ஐக்கிய நாடுகள் சபையினை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஐ.நா வின் பொதுச் செயலாளர் அல்லது சிரேஸ்ட அதிகாரிகளினாலேயே அறிக்கைகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ள அவர், இலங்கையில் யுத்தத்தின் இ…
-
- 2 replies
- 761 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 23.02.2010 அன்று ஒலிபரப்பாகிய நிகழ்ச்சியில் M.K.சிவாஜிலிங்கம் http://www.yarl.com/articles/node/1012
-
- 0 replies
- 521 views
-