Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சாய்ந்தமருது சபை உருவாக்கத்திற்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி எந்த தடையும் இல்லை By T. Saranya 24 Jan, 2023 | 09:19 AM சாய்ந்தமருது சபை உருவாக்கத்திற்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி எந்த தடையும் இல்லை. இந்த விடயத்தில் கல்முனை மாநகர சபை மக்கள் ஒரு சிலரை விட எல்லோரும் தெளிவாக இருக்கின்றார்கள் என கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான ஏ.எல். அன்ஸார் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட சமகால அரசியல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் 2023 தொடர்பில் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …

  2. தற்கொலை குண்டுதாரியின் சகாவிற்கான தண்டனை மரணதண்டனையாக மாற்றம் By RAJEEBAN 24 JAN, 2023 | 10:14 AM 2004 இல் கொள்ளுப்பிட்டி பொலிஸ்நிலையத்தில் தற்கொலை குண்டுதாக்குதலில் ஈடுபட்ட பெண் தற்கொலை குண்டுதாரியின் சகாவிற்கான ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை நீதிமன்றம் மரண தண்டனையாக மாற்றியுள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சத்தியா என அழைக்கப்படும் செல்வக்குமார் சத்தியசீலா என்ற பெண் தற்கொலைகுண்டுதாரியின் சகாவை உடனடியாக கைதுசெய்யுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. தண்டனைகளை உரிய விதத்தில் நடைமுறைப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

  3. தர்மலிங்கத்தின் சிலை கல்வெட்டில் தமிழரசு கட்சியின் பெயர் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு தர்மத்தையே கற்றுத் தந்த தர்மரின் சிலையில் அவரது பெயருக்கும் புகழுக்கும் காரணமாக இருந்த தமிழரசுக் கட்சியின் பெயர் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது என வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். தர்மலிங்கத்தின் நினைவுத் தூபிக்கு நேற்று (திங்கட்கிழமை) மாலை சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, ”இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகாலத் தலைவர்களில் அமரர் தர்மலிங்கமும் ஒருவர். அவர் போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் தோல்வியுற்றமை கிட…

  4. மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக 9 ஆம் திகதி போராட்டத்திற்கு அழைப்பு! அரசாங்கத்தின் பிழைப்புக்காக மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து எதிர்வரும் 9 ஆம் திகதி போராட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த நாட்டில் செலவழிக்கப்படும் வரிப்பணத்தில் கிடைக்கும் நன்மைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ள…

  5. யாழில் காணி விடுவிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்! யாழ் மாவட்டத்தில் வனவள திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காணிவிடுவிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ்மாவட்ட செயலக அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி செயலக, வனவள திணைக்கள அதிகாரிகளுக்குமிடையில் யாழ்மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. நேற்று பிற்பகல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன், வடக்குமான பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, மேலதிக அரசாங்க அதிபர்(காணி) முரளி, மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், வனவள திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மறும் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் இணையவழியூடாக கொழு…

  6. இலங்கையில்“13-வது சட்டத் திருத்தம் அமல்படுத்தப்படும்; பாஜக நம்புகிறது தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, இலங்கையில் 13-வது சட்டத் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு, இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உரிமை நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை தமிழக பா.ஜ.க-வுக்கு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அண்ணாமலை, “1987-ல் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் ஏற்பட்ட 13-வது சட்டத் திருத்தமானது, இலங்கையில் உள்ள மாகாணங்கள், சுயாட்சி மேற்கொள்ளும் வகையில், கல்வி, ஆரோக்கியம், விவசாயம், வீட்டுவசதி, நிலம், காவல்துறை போன்ற பிரிவுகளில் மாகாண நிர்வாகங்களுக்கு அதிகாரம் வழங்கியது. இலங்கைத் தமிழர்கள் உரிமை குறித்துப் பேசும் ஒரே அரசியலமைப்புச் சட்டப் பிரிவாக 13-வது சட்டத் த…

  7. இரண்டு வருடகாலத்திற்கு கடன்களை ஒத்திவைக்க சீனா சம்மதம் - கடன் மறுசீரமைப்பிற்கும் ஆதரவு By RAJEEBAN 22 JAN, 2023 | 07:54 AM இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ள சீனா இரண்டு வருடகாலத்திற்கு கடனை மீளப்பெறுவதை ஒத்திவைப்பதற்கு இணங்கியுள்ளது. சர்வதேச நாணயநிதியத்தின் நிதிஉதவியை பெறுவதற்கான முன்னோடி நடவடிக்கையான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு உதவுமாறு இலங்கை விடுத்த வேண்டுகோள்களிற்கு சீனா சாதகமாக பதிலளித்துள்ளது. இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கிய சீனாவின் எக்சிம் வங்கி நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளது. இரண்டுவருட…

  8. https://tamilwin.com/article/tamilarasu-party-in-kilinochchi-1674208494 கிளிநொச்சியில் இரண்டாக பிளந்தது தமிழரசு! சூடுபிடிக்கும் தேர்தல் களம் சிறீதரன் தலைமையில் வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக இலங்கை தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன் தினம் (18.01.2023) வேட்புமனு கையளிக்கப்பட்டுள்ளது. கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேசசபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தலைமையில் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழரசு கட்சி சார்பில் சுயேட்சையாக களமிறங்கிய குழு கிளிநொச்சி மாவட்டத்திற்கு உபட்ட கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேசச…

  9. இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால் எங்கள் நாட்டிற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்திவந்த பயங்கரவாத அமைப்பை தோற்கடித்திருக்க முடியாது- அலி சப்ரி By RAJEEBAN 23 JAN, 2023 | 04:46 PM இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால் 26 வருடங்களாக எங்கள் நாட்டிற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த பயங்கரவாத அமைப்பை நாங்கள் தோற்கடித்திருக்க மாட்டோம்,அதற்காக நாங்கள் நன்றியுடையவர்களாக உள்ளோம் என இலங்கை வெளிவிவகார அமைச்சர்அலிசப்ரி இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் தெரிவித்துள்ளது இந்தியாவுடனான உறவுகள் வரலாற்று ரீதியிலானவை,நாங்கள் ஒரு நாகரீகத்தை பகிர்ந்துகொள்கின்றோம், எங்கள் மத கலாச்சார பொருளாதா…

  10. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்க முஸ்தீபு By NANTHINI 23 JAN, 2023 | 03:34 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் ஆளுந்தரப்பின் உறுப்பினர்கள் அவதானம் செலுத்தியுள்ளார்கள். ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கும் யோசனையை எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்க ஆளுந்தரப்பினர் அவதானம் செலுத்தியுள்ளதாக அறிய முடிகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த வாரம் இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர் குழு கூட்டத்தில் மின்கட்டணம் அதிகரிப்பு குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. …

  11. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் - விசாரணை நடத்துமாறு கோரிக்கை By DIGITAL DESK 5 23 JAN, 2023 | 04:34 PM (எம்.மனோசித்ரா) சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட நபர்கள் சிலர் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அமைந்துள்ள கட்டடத்திற்குள் எவ்வாறு நுழைந்தார்கள் என்பது பற்றியும் , அந்த சந்தர்ப்பத்தில் தாம் அங்கு இருப்பதை எவ்வாறு அறிந்து கொண்டார்கள் என்பது பற்றியும் ஆராயுமாறு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பிரதி தலைவர் உதேனி விக்கிரமசிங்க மற்றும் அதன் உறுப்பினரான பேராசிரிய…

  12. மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி (09/03/2023) உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடக்கும் என தேர்தல்கள் திணைக்களம் சற்று முன் அறிவித்துள்ளது. https://www.newswire.lk/2023/01/21/sri-lanka-local-council-elections-on-march-9th/

  13. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் தமிழ் தேசிய பொங்கல் விழா ! kugenJanuary 23, 2023 வட்டாரக்கிளைத் தலைவர் எஸ்.சன்முகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்.இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம்,பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் மா.நடராஜா,மாநகர முதல்வர் தி;.சரவணபவன்,வாலிபர் முன்னனி தலைவர் கி.சேயோன் என முக்கிய அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதன்போது மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டது.கணபதி பூஜா துரந்தரர் சிவஸ்ரீ மு.சண்முகம் ஆசியுரை நிகழ்த்தினார்.கிரானைச் சேர்ந்த 1977 ஆம் ஆண்…

  14. கூட்டமைப்பின் பிளவு மக்கள் மத்தியில் பாரியதொரு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது – செல்வம் எம்.பி. தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவது ஆரோக்கியமான விடயமல்ல என்றும் கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிளவு மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தனித்து போட்டியிடுவதனால் கூட்டமைப்பிற்குள் கருத்து முரண்பாடுகள் உருவாகலாம் என்றும் தேர்தலின் பின் ஏற்படக்கூடிய சிக்கல்களுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என எவரும் சிந்திக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்றும் அதன் மூலமாகவே மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் என…

  15. முன்னாள் ஜனாதிபதி கோட்டாவிற்கு 19 வாகனங்கள் : 950 000 ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதா ? - பிரத்தியேக செயலாளர் விளக்கம் By DIGITAL DESK 5 21 JAN, 2023 | 01:03 PM (எம்.மனோசித்ரா) அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட தேவைகளுக்காக 19 வாகனங்களும் , 950 000 ரூபா பணமும் வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஷ்வர பண்டார அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். அவரால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : 'முன்ன…

  16. தமிழர் அபிலாஷைகளை பூர்த்திசெய்யக்கூடிய நேரடிப் பேச்சுவார்த்தை அவசியம் – தமிழர் தரப்பிடம் கோரிக்கை January 22, 2023 தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், 13ஆவது திருத்தம், 13 ‘பிளஸ்’, மேலவை என ஒற்றையாட்சி அரசியலமைப்பினுள் பேச்சுவார்த்தையை முடக்கி காலத்தை கடத்தாமல், நேரடியாகவே தமிழர்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வுகளை நோக்கி பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று 27 தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும் 551 தனிநபர்களும் தமிழர் தரப்பிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். அதுமாத்திரமன்றி, தமிழ் அரசியல் தலைவர்கள் மாத்திரம் தமிழர் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைகள…

  17. மஹிந்த , கோட்டா உள்ளிட்ட நால்வர் மீதான தொடர்ச்சியான தடைக்கு ஜி7 நாடுகளையும் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் கனடா 21 JAN, 2023 | 07:05 PM (எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியான தடையை விதிப்பதற்கு ஜி7 நாடுகளையும் இணைத்துக்கொள்ளும் முயற்சிகளில் கனடா ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவுகள் அமைச்சர் மெலின் ஜோலி தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட சிவில் யுத்தத்தின் போது மனித உரிமைகளை மீறில்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி அண்மையில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் …

  18. யாழில் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு யாழ்.மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சிலவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். யாழ்.மாவட்டத்தில் 157 வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டபோது 150 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 7 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பு மனு வல்வெட்டித்துறை நகர சபை மற்றும் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்பு மனு வேலணை பிரதேச சபையில் முழும…

  19. யாழ்.மாநகர சபை முதல்வர் வேட்பாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குத்து விளக்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளார். தமிழ் தேசியக் கட்சி இத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் தமிழ் அரசியல் கட்சிகள் பலவும் தமது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வீடு சின்னம் சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கவில்லை. அது தொடர்பாக எம்.ஏ.சுமந்திரனிடம் வினவிய போது தேர்தலின் பின் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். முதல்வர் வேட்பாளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்காளி கட்சியான ரெலோ சார்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் போட்டியிடுகின்றார். …

  20. இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு இணங்கியது சீனா – நிதியமைச்சருக்கு கடிதம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிணையெடுப்புக்கு முன்னதாக, இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற இலங்கையின் நீண்ட கால கோரிக்கைக்கு சீனா நேற்று பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி) நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வழங்கப்பட்ட பெரும்பாலான கடன்களுக்கு பொறுப்பான சீனாவின் எக்சிம் வங்கி, சீனாவிற்கு செலுத்த வேண்டிய கடன்களை இரண்டு வருட காலஙத்துக்கு குறுகிய காலம் இடைநிறுத்தம் செய்யும் என்று…

    • 3 replies
    • 503 views
  21. நானே வேட்பாளர் என்கிறார் ரோஸி – தீர்மானம் இல்லை என்கிறது ஐ.தே.க! கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தானே மேயர் வேட்பாளராக போட்டியிடுவதாக கொழும்பு மாநகரசபையின் தற்போதைய மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். வேட்புமனு தாக்கலின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எனினும், கொழும்பு மாநகரசபைக்கான மேயர் வேட்பாளர் குறித்து கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை என ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1321205

  22. திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள், வடக்கின் தீவுகள் தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடல் January 22, 2023 திருகோணமலை மாவட்டத்தை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் இந்திய வௌிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப் பட்டதாக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கர் இலங்கைக்கு வந்திருந்த போது, இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல், பொருளாதார, சமூக விடயங்கள் மற்றும் முதலீடு தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தை எரிசக்தி மையமாக எவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என்பது தொடர்பில் …

  23. நெருக்கடியால் வீடுகளை விற்பனை செய்ய முடியாமல் திணறும் நபர்கள் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பிற கட்டிடங்களை விற்கவும், வாடகைக்கு எடுக்கவும் முடியாமல் கிட்டத்தட்ட 10,000 பேர் அவல நிலையில் உள்ளனர். அந்த வீடுகளை கட்ட செலவழித்த கோடிக்கணக்கான பணம் வீணாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த வர்த்தகர்கள், நிதி நெருக்கடி காரணமாக இந்த நாட்டு மக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை கொள்வனவு செய்வதை சுமார் 80 வீதத்தால் குறைத்துள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர். வெளிநாட்டில் வசிக்கும் குறைந்த எண்ணிக்கையிலான இலங்கையர்களே அடுக்குமாடி குடியிருப்புகளை கொள்வனவு செய்து வருவதாகவும், இந்த நிலையில் வீடுகளை …

  24. ஒற்றுமையுடன் செயற்பட்டால் அதிக வட்டாரங்களை கைப்பற்ற முடியும் – சாணக்கியன் நம்பிக்கை! kugenJanuary 22, 2023 ஒற்றுமையுடன் செயற்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வட்டாரங்களை கைப்பற்ற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘மழையுடன் ஆரம்பித்துள்ள பல நிகழ்வுகளை வெற்றிகரமாகவே முடித்துள்ளோம். இதற்கு சிறந்த உதாரணமாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியினை குறிப்பிடலாம். தமிழரசு கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட எந்தவொரு வேட்பு மனுக்களும்…

    • 1 reply
    • 604 views
  25. 13ஐ நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் - அரசாங்கம் அறிவிப்பு 21 JAN, 2023 | 06:51 PM ஆர்.ராம் அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதோடு, எதிர்காலத்தில் காணி அபகரிப்புக்களை நிறுத்துவதற்குமுரிய பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், தமிழ்த் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றகரமாக இடம்பெறுவதாகவும் பிரச்சினைகளுக்கு தீர்வினை அளிக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி,…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.