Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இஸ்ரேலின் பாணியில் இலங்கை தாக்குதல்! [13 - August - 2006] [Font Size - A - A - A] * `சென்னை' புலனாய்வு இதழ் நக்கீரனின் பார்வை இது "ஸ்ரீலங்கா அரசு இனி ஒருமுறை எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையாக அதனை நாங்கள் கருதாமல், பரந்த அளவிலான ஒரு யுத்தத்தை எங்கள் மீது திணிப்பதாகவே கருதுவோம்" என்று எச்சரிக்கை கொடுத்திருந்தார் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் எஸ்.பி. தமிழ்ச்செல்வன். இவர் இப்படி கூறிய சிலமணி நேரங்களிலேயே பிரச்சினைக்குரிய, மாவிலாறு மதகை திறப்பதற்காகச் சென்ற யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவினர் மீதும், புலிகள் தரப்பினர் மீதும் வெடிகுண்டுகளை வீசியது இராணுவம். அதிர்ஷ்டவசமாக இவர்கள் உயிர்தப்ப, மேலும் பதற்றமாகியி…

  2. மூதூரில் படுகொலை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட பிரெஞ் தொண்டர் அமைப்பைச் சேர்ந்த 17 ஊழியர்களின் உடல்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம், பாதுகாப்பு அமைச்சு, அவுஸ்திரேலிய தூதுவராலயம், மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் நலன் குறித்து செயல்படுபவர்களுக்கும் இடையேயான பேச்சு வார்த்தைகளை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களின் பிரேத பரிசோதனை முன்னர் அனுராதபுர சட்ட வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி வைத்தியரட்னவினால், மேற்கொள்ளப்பட்டது. பிரேதங்கள் பழுதடைந்த நிலையிலேயே பிரேத பரிசோதனைக்கு உட்பட்டுத்தப்பட்டதாக தெரிவித்த சட்ட வைத்திய அதிகாரி, அதன் காரணமாக கொலைக…

  3. யாழ் குடாநாட்டுக்குள் உள்நுழைந்த விடுதலைப் புலிகள் மீது சிறீலங்காப் படையினர் பல முனைகளில் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் பலத்த மோதல்கள் நடந்துள்ளன. இன்று மாலை 5 மணியளவில் பகுதியில் நடைபெற்ற முன்னேற்ற நடவடிக்கை ஒன்றில் சிறீலங்கா இராணுவத்தினரின் இரு டாங்கிகள் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டதா விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். இதுவரை நடைபெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகள் தரப்பில் 22 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ளார்.

  4. கண்காணிப்புக் குழு மறுப்பு அமைதிப் பேச்சை ஆரம்பிக்கத் தயார் என்று புலிகள் தெரிவித்தனர் என்று கூறப்படும் கோரிக்கை எதனையும் பெற்று அதனை அரசுத் தரப்பிடம் தெரிவிக்கவில்லை என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்திருக்கிறது. அத்தகைய கோரிக்கை எதனையும் தாங்கள் இலங்கை அரசிடம் தெரியப்படுத்த வில்லை என்று போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தேர்பினோ ஒமர்ஸன் கூறியிருக்கிறார் http://www.uthayan.com/pages/news/today/04.htm

  5. யாழ். இராணுவத் தாக்குதலில் 40 தமிழர்கள் படுகொலை- 100 பேர் படுகாயம் [ஞாயிற்றுக்கிழமை, 13 ஓகஸ்ட் 2006, 22:50 ஈழம்] [ம.சேரமான்] யாழில் சிறிலங்கா இராணுவத் தாக்குதலில் 40 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 100 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலாலி விமான தளத்திலிருந்து அல்லைப்பிட்டி புனித பிலிப் மேரி தேவாலயத்தை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் பல்குழல் உந்துகணைத் தாக்குதலை நடத்தினர். இதில் அல்லைப்பிட்டி தீவகப் பகுதியில் 40க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதல்நிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண மருத்துவமனைக்கு காயமடைந்தோரை எடுத்து வரும் நோயாளர் காவு வாகனங்களை இலக்கு வைத்தும் சிறிலங்கா இரா…

  6. தடுப்பு அணைகள் திறக்கப்படும் காலம் நெருங்கி வருகிறது -இதயச்சந்திரன்- மூதூரில் நடந்து முடிந்த தாக்குதல், பின்னகர்வு போன்ற நிகழ்வுகள் மிகப் பாரியதொரு இராஜதந்திர நகர்வாகக் கருத இடமுண்டு. வெறும் இராணுவ வெற்றி வாய்ப்புக் கண்ணோட்டத்தோடு அணுகினால் ஆழமான அர்த்தங்கள் மலினப்படலாம். அண்மையிலேயே போர் நிறுத்த அனுசரணையாளர்கள் இரண்டாவது தடவையாக பாரிய பொறிக்குள் சிக்குண்டுள்ளார்கள். தாமே விரித்த ஐரோப்பிய ஒன்றியத் தடை வலைக்குள் விழுந்து நிமிர முடியாமல் இன்னமும் தள்ளாடும் நிலையில் மூதூரில் இன்னுமொரு பெரிய பொறி வலைக்குள் மாட்டிக் கொண்டுள்ளார்கள். அத்துடன் ஆசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருமலைத் துறைமுகத்தையும், அதனைச் சூழவுள்ள பிரதேசத்தை எந்நேரத்திலும்…

  7. கடும் சமரின் கடைசி நிலைவரம் -தெய்வீகன்- நான்காம் கட்ட ஈழப்போர் இன்னமும் களத்தில் ஆரம்பிக்கவி;ல்லையாயினும் தென்னிலங்கை ஊடகங்கள் தற்போதைக்கு தமது ஆத்ம திருப்திக்கு தமது ஊடகங்களில் உத்தியோகப்பற்ற முறையில் ஆரம்பித்து அதற்கு ஆராத்தி எடுத்து வருகின்றன. உண்மையில் களத்தில் நடந்து கொண்டிருப்பது விடுதலைப் புலிகளை பொறுத்தவரை அடையாளம் காணப்பட்ட இலக்குகளை அழித்தொழிக்கும் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவநடவடிக்கையாகும். தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து அங்கு அராஜகங்களையும் அட்டுழியங்களையும் அநீதிகளையும் அரங்கேற்றிவரும் அரச படைகளின் இலக்குகளை இனம்கண்டு அவற்றால் ஏற்படக்கூடிய பாரிய சேதங்களை முற்கூட்டியே தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள்தான் இதுவாகும். அதனை அர…

  8. கண்காணிப்புக் குழு விலக நேரிடும்: உல்ப் ஹென்றிக்சன் இலங்கையிலிருந்து போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் விலக நேரிடும் என்று அதன் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலில் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளதாவது: இலங்கையிலிருந்து போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவை விலக்கிக் கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு நோர்வேக்கு பரிந்துரைத்துள்ளோம். இருதரப்பும் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் ஒட்டுமொத்தமாக கண்காணிப்புக் குழு விலக்கிக் கொள்ளப்படும். அரசியல் ரீதியாக எம்மை பயன்படுத்த நினைக்கின்றனர். ஆகையால் அவர்கள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துவிடாமல் உ…

    • 3 replies
    • 1.5k views
  9. முகமாலைஎழுதுமட்டுவாள் பகுதிகளில் புலிகளை விரட்ட படையினர் கடுஞ்சமர் முறியடித்துவிட்டதாக புலிகள் அறிவிப்பு முகமாலை நாகர்கோவில் கிளாலி முன்னரங்கப் பாதுகாப்பு அரண்களை ஊடறுத்துக் கொண்டு எழுதுமட்டுவாள் பகுதிக்குள் முன்னேறியுள்ள விடுதலைப் புலிகளை அங்கிருந்து விரட்டுவதற்காக அரசுத் துருப்புகள் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றன என்று களமுனைத் தகவல்கள் தெரி விக்கின்றன. முகமாலை மற்றும் எழுதுமட்டுவாள் பகுதிகளில் இருந்து புலிகளைப் பின்வாங்கச் செய்வதற்கான படை நடவடிக்கை ஒன்றை நேற்று அதிகாலை முதல் அரசுப் படைகள் ஆரம்பித்தன என்று பாதுகாப்புத் தரப்பில் இருந்து அறிய முடிகின்றது. படையினரின் இந்தத் தாக்குதலை தாங்கள் வெற்றி கரமாக முறியடித்துவிட்டனர் என்று விடுதலைப் புலிகள் அறிவித்…

    • 0 replies
    • 1.2k views
  10. யாழ் குடா நிலவரம்!!! தொடர்ந்து மூன்று நாட்களாக போர்களமாக மாறியிருக்கும் யாழ் குடாநாட்டின் உண்மையான நிலவரம் ஒரு மர்மமாகவே தொடர்ந்தும் இருக்கிறது. உண்மையான செய்திகளை அறிய முடியாத நிலையில் வெறும் ஊகங்களும் வதந்திகளும் பரவி மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன. போர்முனைச் செய்திகளை விடுதலைப்புலிகளும் அடக்கியே வாசிக்கின்றனர். பலாலியில் வான்புலிகளின் தாக்குதல் பற்றியும் விடுதலைப்புலிகள் பட்டும் படாமலுமே கருத்து தெரிவித்திருந்தனர். முகமாலை, மண்டைதீவு சண்டைகள் குறித்தும் பெருமளவிலான தகவல்கள் விடுதலைப்புலிகளிடம் இருந்து வரவில்லை. சில ராஜதந்திரக் காரணங்களாலேயே விடுதலைப்புலிகள் இவ்வாறு நடந்து கொள்வதாக நம்பப்படுகிறது. சிறிலங்கா அரசு உத்தியோகபூர்வமாக யுத்தப்…

  11. எமது பலமே எமக்கு ஆதாரம் -ஞாலவன்- 1990 இல் ஈராக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து குவெய்த்தை 'விடுவிப்பதற்காக" முழு அளவிலான யுத்தமொன்றை அமெரிக்கப்படைகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக, அமெரிக்காவின் பிரபல்யமான தொலைக்காட்சிச்சேவைகளில் எல்லாம் அடிக்கடி ஒரு அரேபியச்சிறுமியின் முகம் காட்டப்பட்டது. அமெரிக்கக்காங்கிரசின் முன்பாகத்தோன்றி குவெய்த்திலுள்ள அல் அடாம் வைத்தியசாலையின் மகப்பேற்றுப்பிரிவில் தாதியாகப் பணிபுரிந்துவந்த நயிரா என்பவளாக சோகத்தில்தோய்ந்த நிலையில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அவள், தன்னுடைய பராமரிப்பிலிருந்த குழந்தைகளை கண்முன்னேயே ஈராக்கியப்படைகள் கட்டில்களிலிருந்து இழுத்து வெறுந்தரையில் வீசிக்கொன்ற கோரத்தை சித்திரித்தாள். ஐக்கிய அமெரிக்கத் தொலைக்காட்ச…

  12. மண்டைதீவு கடற்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் ஊடறுத்துத் தாக்குதல். மண்டைதீவு கடற்படைத் தளத்தையும் விடுதலைப் புலிகளின் படையணிகள் ஊடறுத்து தாக்குதலை நடத்துகின்றனர் என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக முகமாலை, மண்டைதீவு, கிளாலி, நாகர்கோவில் என அனைத்து பகுதிகளிலும் விடுதலைப் புலிகளின் படையணிகள் ஊடுருவித் பரவலாக தாக்குதலை நடத்துகின்றனர். விடுதலைப் புலிகள் அணிகள் தென்மராட்சி வரை ஊடுருத் தாக்குதலை தொடுத்துவண்ணம் உள்ளதாக அறிய முடிகின்றது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

    • 18 replies
    • 11.3k views
  13. யாழில் தொடர்ந்து முன்னேறும் விடுதலைப் புலிகள் [சனிக்கிழமை, 12 ஓகஸ்ட் 2006, 00:38 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதலை முறியடித்த விடுதலைப் புலிகள், யாழ். குடாநாட்டில் படையினரின் ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில் பல்வேறு பகுதிகளில் ஊடுருவி முன்னேறியுள்ளனர். சிறிலங்காப் படையினருடைய தடைவேலிகளைத் தகர்த்தவாறு விடுதலைப் புலிகள் முன்னேறிக் கொண்டு வருகின்றனர். முகமாலை கிழக்கு கண்டல்காடு முதல் மேற்கில் கிளாலி வரையான படை முன்னரணை தகர்த்த விடுதலைப் புலிகள், படையினரின் முன்னரண் வேலிகளையும் அரண்களையும் தகர்த்து அந்த வழியில் நகர்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் யாழ். குடாநாட்டில் பல பகுதிகளில் படையினரின் பிரதேசங்களில் விடுத…

  14. பலாலி படைத்தளம் மீது புலிகள் கடுமையான எறிகணைத் தாக்குதல். விடுதலைப்புலிகளின் பீரங்கிபடையணியிரால் பலாலி இராணுவ முகாம் மற்றும் காங்கேசன்துறை கடற்படைத் தளம் என்பவற்றின் மீது கடுமையான எறிகணைத்தாக்குதல்கள் நடத்தப்பட்ட வண்ணம் இருக்கின்றன. புலிகளின் அச்செட்டான எறிகணைவீச்சில் படையினர் தரப்பில் பாரிய உயிர்சேதம் ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இத் தாக்குதலை அடுத்து பலாலி கொழும்பிற்கு இடையிலான விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது நன்றி பதிவு

  15. உலகத்தமிழர்களே சிங்கள அரச படைகளின் தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக கிளர்ந்தெளுங்கள். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 13 ஆகஸ்ட் 2006 ஸ ஜ மௌலானா ஸ உலகம் எங்கும் வாழும் ஈழத்தமிழர்களே கிளர்ந்தெளுங்கள் எங்கள் ஈழத்தமிழர்களின் உறவுகள் யாழ் குடாநாட்டில் ஊரடங்கு சட்டம் என்று கூறிக்கொண்டு இலங்கை இராணுவம் இனப்படுகொலைகளை தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்;துவிடுவதற்கு பாரிய முயற்சியை செய்து கொண்டு இருக்கிறது. இதன் முதல் கட்டமாக யாழ் குடாநாட்டில் கைத் தொலைபேசிகளை செயலிழக்க செய்துள்ளது. மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது. மக்களை வீடுகளுக்கு வெளியே வரவிடாமல் தடுக்கின்றது. தமது படையினரின் பாதுகாப்பு அரணாக யாழ் குடாநாட்டு மக்களை இலங்கை அரசு பயன்படுத்துகின்றது. தற்போது முகமாலையில் இருந்த படையினர் தப்பி ஓடி…

    • 10 replies
    • 2.6k views
  16. மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் படையினர். அப்பாவிப் பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்திவரும் சிறிலங்காப் படையினர் யாழ் குடாநாட்டில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். இதனால் இன்று யாழ் குடாநாட்டில் மக்களின் அன்றாட செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது குடாநாட்டில் மக்களினுடைய ஆள் அடையாள அட்டையினை பறித்து மக்களை வேறு இடங்களிற்கு செல்லவிடாமல் படையினர் தடுத்துள்ளனர் படையினரின் தாக்குதலில் காயமடைந்த மக்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்குக்கூட படையினர் தடைவிதித்துள்ளனர் யாழ் வைத்தியசாலையிலிருந்து நோயாளர்களையும் வைத்தியர்களையும் வெளியில் செல்லவிடாமல் படையினர் தடுத்துள்ளன…

    • 17 replies
    • 3.3k views
  17. இலங்கைக்கு ஆயுத உதவி வழங்குவது ஈழத் தமிழருக்கு சமாதி கட்டும் வேலை ` விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்காக அவசர போரா யுத உதவிகளை இந்தியாவிடம் கோரியிருக்கின்றதாம் இலங்கை. இந்தியா வழங்கும் போராயுதங்கள் புலிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்படும்; தமிழ்ப் பொதுமக்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்படமாட்டா என்ற உறுதிமொழியுடன் தான் தனக்குத் தேவையான போராயுதங்களின் பட்டியல் ஒன்றைப் புதுடில்லிக்குச் சமர்ப்பித்திருக்கின்றது இலங்கை. இப்போது புதுடில்லியின் பதிலுக்குக் கொழும்பு காத்தி ருக்கின்றது என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. விடுதலைப் புலிகள் விவகாரத்தில் புலிகள் இயக்கத்தைத் தடை செய்த மேற்குலகம், அதற்கு மேல் புலிகளுக்கு எதிராக எதனையும் செய்யப் போவதில்லை என்ற விசன…

  18. ஈழப் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்குள்ள 2 தெரிவுகள்! - (வசிஸ்டர்) [13 - August - 2006] [Font Size - A - A - A] * இந்தியாவும் நமது பிரச்சினையும் சமீபத்தில் இந்தியா 1962இல் இடம்பெற்ற சீன - இந்திய எல்லைப்புற யுத்தத்தை தொடர்ந்து மூடப்பட்ட பட்டுப் பாதையின் கேந்திரமான நாதுலாய் கணவாயை திறந்து வைத்திருக்கின்றது. கடந்த 44 ஆண்டுகளாக திறக்கப்படாதிருந்த நாதுலாய் கணவாயை இந்தியா தற்போது திறந்துவைக்க முன்வந்ததானது, சீன - இந்திய நட்புறவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கிவைக்கும் நோக்கிலானதென்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 1962இல், இடம்பெற்ற சீன - இந்திய எல்லைப்புற யுத்தத்தில் இந்தியா சீனாவிடம் தோல்வியடைந்தது. இந்தியாவின் நவீன அரசியல் வரலாற்றில் மேற்படி தோல்வியானது, …

  19. குடாநாட்டு யுத்தம் தொடர்கின்றது. கரையோரப்பிரதேசங்கள் புலிகள் வசம். தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. யாழ் குடாநாட்டின் பல முக்கிய பிரதேசங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கரையேரப் பிரதேசங்களான மாதகல், கிளாலி, ஊர்காவற்துறை ஆகிய பிரதேசங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை முகமாலையில் இருந்து முன்னேறிய படையினருக்கும் தாக்குதல் கட்டளை நிலையத்துக்கும் இடையில் இருந்த தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு முன்னேற்ற முயற்சியை மேற் கொண்ட படையினர் புலிகளின் முற்றுகைக்குள் சிக்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. யாழ் குடாநாட்…

    • 25 replies
    • 8k views
  20. SLMM கண்காணிப்புப் பணியில் இருந்து விலகுகிறது???? Sri Lanka Monitoring Mission withdraws from ceasefire monitoring Sunday, August 13, 2006, 13:25 GMT, ColomboPage News Desk, Sri Lanka. Aug 13, Colombo: The Sri Lanka Peace Secretariat says the Sri Lanka Monitoring Mission (SLMM) has officially stated that it is withdrawing from monitoring the ceasefire between the Sri Lankan government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE). The SLMM has informed both the Sri Lankan government and the LTTE of its decision. The withdrawal will be made in three steps, with withdrawal from the country as the final stage. Low

    • 0 replies
    • 1.4k views
  21. தண்ணீருக்காக யுத்தம் தொடங்கி...இக்கட்டான நிலைக்குள் தனது இராணுவத்தை தள்ளிவிட்ட சிறீலங்கா சிங்கள பேரினவாத பயங்கரவாத அரசு..தற்போது தனது இராணுவத்தைக் இக்கட்டான நிலைமையில் இருந்து விடுவிக்க..நோர்வே எனும் அமெரிக்க வால்பிடியின் ஆதரவோடு..புதிய பேச்சுவார்த்தைக்கான அழைப்பைப் புலிகள் வெளியிட்டுள்ளதாக சிங்கள மக்களை நம்பச் செய்து..புலிகளையும் தமிழ் மக்களையும் மீண்டும் ஒருமுறை ஏமாற்ற முனைகிறது. அதற்கு சில சர்வதேச நாடுகளும் உதவிபுரிகின்றன..! சிங்கள இராணுவத்துக்கு வழங்கும் கால அவகாசங்கள்..தமிழ் மக்களுக்கும்..அவர்களின் பிரதிநிதிகளான புலிகளுக்குமே பாதகமாக அமைந்தன கடந்த காலங்களில் என்பது நினைவு கூறத்தக்கது..! பேரம் பேசும் வலுவை எனியும் புலிகள் இழக்கக் கூடாது என்பதே தமிழ் மக்களின் பேரவா..! …

  22. http://www.newstamilnet.com/vnews/vn12806.wmv நன்றி:லங்காசிறி

  23. மண்டைதீவில் இராணுவத் தாக்குதல் தளத்தை "ஈருடகப் படையணிகள்" அழித்தன: இ.இளந்திரையன் [ஞாயிற்றுக்கிழமை, 13 ஓகஸ்ட் 2006, 19:04 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். மண்டைதீவில் சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதல் தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் "ஈருடகப் படையணிகள்" (கடலில் சென்று தாக்கித் திரும்பும் அணி) தாக்கியழித்தன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா இராணுவத்தினரின் நடவடிக்கைக்கான ஏவுதளமாக மண்டைதீவு தயார்படுத்தப்பட்டது. இதையடுத்து விடுதலைப் புலிகளின் "ஈருடகப் படையணிகள்" அதனை சென்று தாக்கி-கைப்பற்றி-அழித்து தளத்துக்கு திரும்பியுள்ளன. …

  24. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் எண்ணம் இப்போதைக்கு இல்லை! புலிகளின் இராணுவப் பேச்சாளர் தகவல் http://www.uthayan.com/

  25. வணக்கம்! இன்று நான்காம் ஈழப்போரின் விளிம்பில் தமிழீழம் மிளிர்ந்து நிற்க்கின்றது. போர் நிறுத்தம் போர் தொடக்கமாகி, இன்று தமிழர் தாயகம் எங்கும், போர் மேகம் வியாபித்துள்ளது. பல்லாயிரம் மக்கள் தங்கள் சொந்த மண்னை விட்டு சொந்த மண்ணில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களது துயரங்களுக்கு அப்பால், சிங்கள ஆக்கிரமிப்பு படைகளால், திட்டமிட்டு நடாத்தப்படும், விமானக்குண்டு தாக்குதல்கள், எறிகணை வீச்சு என்பவற்றால் பலர் உயிர் களை இழந்துள்ளனர். சாவுக்கும் வாழ்வுக்கு நடுவே எமது மக்கள் அன்றாட அடிப்படை தேவைகளின்றி அவலப்படுகின்றனர். தேசத்தின் துயரினை உலகத்தமிழ் உறவுகளுக்கு சிறந்த முறையில் சொல்ல வேண்டிய ஊடகங்கள், போட்டியில் ஜெயிப்பதற்காய், புனைவு கதைகாளால் நிரம்பி வழிகின்றது. ஊடகம் என்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.