ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142408 topics in this forum
-
சோல்ஹம்முடனான சந்திப்பை அடுத்து புலிகளின் முக்கிய அறிவிப்பு வெளிவரும் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்மின் இலங்கை விஜயத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளனர் என்று விடயமறிந்த வட்டாரங்கள்கூறுகின்றன. இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வுத் திட்டத்தை ஜனாதிபதி விரைவில் வெளியிட வேண்டுமென கடந்த மாவீரர் தின உரையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வலியுறுத்தியிருந்தபோதும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இது வரை தீர்வுத்திட்டம் குறித்து புலிகளின் தலைமை விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதிலை வழங்கவில்லை. அதேநேரம், வடக்கு கிழக்கு உட்பட தமிழர்கள் செறிந்து வாழும் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் கண்ம…
-
- 0 replies
- 1.3k views
-
-
போர் மூலம் தான் சிங்களவரிடமிருந்து நீதியைப் பெற்றுக் கொள்ளமுடியும்: கா.வே.பாலகுமாரன் [ஞாயிற்றுக்கிழமை, 8 சனவரி 2006, 00:51 ஈழம்] [புதினம் நிருபர்] போர் மூலம் தான் சிங்களவரிடமிருந்து நீதியைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்று இப்போது முடிந்த முடிவாகிவிட்டது என்று விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். வீரகேசரியின் வார வெளியீட்டுக்கு கா.வே.பாலகுமாரன் அளித்துள்ள நேர்காணல்: கேள்வி: அரச படைகள் மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை ஆயுத வன்முறையால் அடக்குகின்றனர். மக்களைத் தாக்குகின்றனர். இவ்வாறான சூழலில் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் பொறுமை காத்துக் கொண்டிருக்கின்றது. மக்கள் எல்லோரின் மனங்களிலும் போர் எப்போது தொடங்குமோ என்ற அச்சத்தில் உள…
-
- 0 replies
- 1.3k views
-
-
கண் சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி கோரும் ஐந்து வயது கிளிநொச்சி சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது தடி கண்ணில் தாக்கியதால் இடது கண்பார்வை இழந்த சிறுவனுக்கு அவசர சத்திரசிகிச்சைக்கான நிதியுதவி கோரப்பட்டுள்ளது. நாலாம் வாய்க்கால் மருதநகர் கிளிநொச்சியைச் சேர்ந்த ஐந்து வயதுடைய அருளம்பலம் நிரோஜன் என்ற சிறுவனே இடதுகண் பார்வையை இழந்துள்ளார். இடது கண் பார்வையின்மையால் வலது கண்ணும் இரவில் சிறுவனுக்குத் தெரியாமலுள்ளது. இச்சிறுவனின் கண் சத்திரசிகிச்சைக்கு இரண்டு இலட்சம் ரூபா உடனடியாக தேவைப்படுகிறது. இச்சிறுவனின் கண் சத்திரசிகிச்சைக்கான நிதியைத் திரட்டும் பணியில் கிளிநொச்சி மாவட்ட மாற்றீடான வலுவுள்ளோர் சங்கம் ஈடுபட்டுள்ளது. இச்சிறுவனின் கண் சத்திரசிகிச்சைக்கு உதவி…
-
- 4 replies
- 1.8k views
-
-
ஒரு யுத்தம் தான் தீர்வா..? -நிலாந்தன்- ஒலி வடிவில்: http://www.tamilnaatham.com/audio/2006/jan...n/20060108.smil எல்லாச் சமாதான முயற்சிகளும் ஏதோ ஒரு வலுச்சமநிலையின் மீதே கட்டியெழுப் பப்படுகின்றன. பரஸ்பரம் இருதரப்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு வலுச்சம நிலையானது சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெறும்போது குறிப்பிட்ட சமாதான முயற்சிகள் வெற்றிபெறுகின்றன. மாறாக சமாதானத்தில் ஈடுபடும் தரப்புக்கள் நிலவும் வலுச்சமநிலையை தமக்குச் சாதகமாக மாற்றமுடியும் என்று நம்புமாக இருந்தால் அல்லது வலுச்சமநிலை தனக்குப் பாதகமாய் மாறிவருகிறது என்று ஏதாவது ஒரு தரப்பு அஞ்சுமாக இருந்தாலும் அந்த வலுச்சமநிலை தளம்பத்தொடங்கிவிடும். அதாவது சமாதான முயற்சிகள் ஈடாடத் தொடங்கிவிடும். பொதுவாக வலுச்சமநி…
-
- 3 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவுக்கு 4 விமானப் பாதுகாப்புக் கருவிகளை வழங்கியது இந்தியா!! சிறிலங்காவுக்கு 4 விமானப் பாதுகாப்புக் கருவிகளை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்திய சிறப்பு விமானத்தின் மூலம் இந்த 4 விமானப் பாதுகாப்பு கருவிகள் நேற்று வெள்ளிக்கிழமை சிறிலங்காவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. தங்களிடம் இருக்கும் ஸ்லிஸ் ரக விமானங்கள் இரண்டைக் கொண்டு விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தக் கூடும் என்று சிறிலங்கா அஞ்சியிருந்தது. இந்த நிலையில் இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள இந்த விமானப் பாதுகாப்புக் கருவிகள் மூலம் முழு இலங்கையையும் கண்காணிக்க முடியும் என்றும் விடுதலைப் புலிகளின் விமானங்கள் குறித்து உடனடியாக அறிந்து கொள்வதற்கும் அவற்றை உடனடியாக அழிப்பதற்கும் உதவும் என்…
-
- 34 replies
- 5.4k views
-
-
கள உறவுகளே அவதானமாக இருங்கள் ஈழத்திலிருக்கும் உங்கள் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள் தேவையில்லாத தொலைபேசி உரையடல்களை தவிர்ப்பது தற்போதய நிலமையில் அங்கு இருப்பவர்களுக்கு நல்லது............ தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்டது றோ. - உறுதிப்படுத்தியது இலங்கை அரச பாதுகாப்பு அமைச்சு. இந்தியாவிற்கு உத்தியோக புூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த மகிந்த தலைமையிலான குழுவினரின் அனைத்து தொலைபேசி அழைப்புகளையும் இந்தியா ஒட்டுக்கேட்டுள்ளதாக இந்திய புலனாய்வு நிறுவனங்களின் தகவல் கசிவுகள் தெரிவிக்கின்றது. மகிந்த குழுவினரின் தொலைபேசி அழைப்புகளை இந்திய புலனாய்வு நிறுவனம் ஒட்டுக் கேட்டதாகவும், இந்த குழுவில் பங்கு பற்றியிருந்த ஒரு தனியார் ஊடக நிறுவனத்தின் பிரதிநிதியாக சென்றவரின் தொலைபேசி…
-
- 11 replies
- 2.4k views
-
-
திருமலையில் சிறீலங்கா இராணுவத்தினர் கிளைமோர் தாக்குதல்: இரு போராளிகள் வீரச்சாவு Written by Paandiyan Saturday, 07 January 2006 இன்று அதிகாலை 2.00 மணியளவில் விடுதலைப் புலிகளின் ஆளுகையில் உள்ள தம்பலகாமம் பகுதிக்குள் ஊடுருவிய சிறீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் பிரிவு மேற்கொண்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் இரு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்டன் சுமன் (வென்சுமின் அன்புராசா - திருமலை), லெப்டினன்ட் உமைநேசன் (பேரின்பராசா சசிதரன் - மூது}ர்) ஆகிய போராளிகளே சிறீலங்கா இராணுவத்தினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளனர்.
-
- 5 replies
- 1.9k views
-
-
The Eelam tamilians & Indian tamilians whoever wants India to support eelam cause can mail to Honourable Indian president Bharath Ratna Dr. A.P.J Abdul Kalam, in the site given below http://presidentofindia.nic.in/scripts/wri...topresident.jsp Since he is a Tamilian, he can understand eelam tamilians' sorrows.. he can project that to Central govt.. note: President checks most of the mails, he even used to reply to few thanks to the_Mirror from thatstamil.com தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன் - மதன்
-
- 0 replies
- 1.3k views
-
-
15 கடற்படையினருடன் திருகோணமலைக் கடலில் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாம். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16775
-
- 35 replies
- 6.3k views
-
-
யாழ் பகுதி வன்முறையினைத் தொடர்ந்து மக்கள் இடம் பெயர்வு இலங்கையின் வடக்கே யாழ் மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ள இராணுவ பாதுகாப்பு மற்றும் பதட்ட நிலைமை காரணமாகக் கடந்த ஒரு வார காலத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய வன்னிப்பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளன. இடம் பெயர்ந்த குடும்பங்கள் இக்குடும்பங்கள், கிளிநொச்சி, முல்லைத்தீவு, பூனகரி, புதுக்குடியிடிருப்பு ஆகிய இடங்களில் பொது இடங்களிலும், உறவினர் நண்பர்களது வீடுகளிலும் தங்கியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உருத்திரபுரம், விநாயகபுரம், பாரதிபுரம், தொண்டமான்நகர் போன்ற இடங்கள…
-
- 0 replies
- 1.3k views
-
-
வெள்ளி 06-01-2006 21:55 மணி தமிழீழம் [நிருபர் நல்லகண்ணு] இந்திய அரசாங்கத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவுள்ளேன் - மு.கருணாநிதி கொழும்பிலும் மலையக பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க உள்ளதாக இந்திய மத்திய ஆளும் கூட்டணி கட்சிகளின் ஒன்றான திராவிட முன்னோற்ற கழகத்தின் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரன் திராவிட முன்னேற்றகழக தலைவரை சென்னையில் இன்று சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்பொழுது ஏற்பட்டு வரும் நிலைமை தமக்கு கவலையளிப்பதாக தெரிவித்துள்ள கலைஞர் இலங்கையில் வா…
-
- 0 replies
- 1.4k views
-
-
Appeal to EU for action against Sri Lanka I have signed an online petition, Appeal to EU for action against Sri Lanka. You may wish to support this cause by clicking on the link below and following the instructions. http://www.gopetition.com/online/7817.html Thanks
-
- 2 replies
- 1.5k views
-
-
ஈவிரக்கமற்ற புலிகள் இயக்கம் மீது கடும் நிலைப்பாடு எடுக்கவேண்டும் அமெரிக்காவிடம் மங்கள வேண்டுகோள் விடுதலைப்புலிகளை அல்- ஹைடாவை விட மிகவும் அபாயகரமான, ஈன இரக்கமற்ற கொலைகார இயந்திரம் என்று விபரித்திருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, புலிகள் தொடர்பில் அமெரிக்கா கடும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு நிதியளிக்கும் புலம் பெயர்ந்த குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அவர் வாஷிங்டன் ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் மேலும் தெரிவித்திருப்பதாவது; புலிகள் விடுதலை இயக்கமொன்றுடன் தொடர்பு கொள்ளவில்லை. அல்- ஹைடாவை விட மிகவும் அபாயகரமான ஈவு …
-
- 8 replies
- 2.2k views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயம் எம்.கே. ஈழவேந்தன் எம்.பி. மகிந்த ராஜபக்ஷவின் இந்தியப் பயணம் படுதோல்வியில் முடிவுற்றுள்ளதென்று அனைத்துத் தமிழ் செய்தி இதழ்களும் வெளியிட்டுள்ள செய்தி எமக்குத் தெம்பு தருகின்றது. ஆனால், இது கொண்டு அனைத்தும் இனிது முடிவுற்றுள்ளதென்று நாம் ஏமாறக் கூடாது. தமிழகத் தலைவர்களும் டில்லியில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்ற 40 தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் "இடிப்பார் இலாதார் கெடும்" என்ற வள்ளுவன் கூற்றில் முழு நம்பிக்கை வைத்து இடிக்கு மேல் இடி இடித்ததன் விளைவு டெல்லி அரசு ஓரளவு இறங்கி வந்து ஈழத்தமிழர் சிக்கலில் அக்கறை காட்டுகின்ற ஒரு நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தின் தலைமைப்பீடம் ஒன்றுபட்டுக் குரலெழுப்பியிராவிடின் டில்லியில் இந்…
-
- 0 replies
- 1.2k views
-
-
நாளை கொழும்பில் மாபெரும் கண்டனப் பேரணி தலை நகர் கொழும்பிலும் தென்னிலங்கையிலும் தமிழ்மக்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினரால் அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்கு முறைகள், கைதுகளை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி மாபெரும் கண்டனப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலையக மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்டனப் பேரணி நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை ஐந்துலாம்புச் சந்தியில் இடம்பெறும். மேலக மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்டனப் பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சி, மலையக மக்கள் முன்னணி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, புதிய இடதுசாரி முன்னணி, புதிய ஜனநாயகக் கட்சி என்பன முழுமையான ஆதரவு…
-
- 1 reply
- 1.5k views
-
-
புலிகளுடனான அமைதிப் பேச்சுகளை நோர்வே தவிர்ந்த வேறு ஒரு ஐரோப்பிய நாட்டில் நடத்துவதற்கு இலங்கை அரசு தயா ராக இருக்கிறது. அதற்கான பிரதிபலிப்பை புலிகளிடம் இருந்து தாம் எதிர்பார்த்திருக் கின்றார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்துத் தமது அமைச்சரவைச் சகாக்களுக்கு தெரிவித் திருக்கின்றார். வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்னிரவு சுமார் நான்கு மணிநேரம் நடைபெற்றது. அப்போதே மேற்படி தகவலை ஜனாதி பதிஇ ஏனைய அமைச்சர்களுக்குத் தெரிவித்தார். ஆசிய நாடு ஒன்றில்தான் பேச்சு என்ற நிலைப்பாட்டை அரசுத் தலைமை தளர்த்திக் கொண்டுள்ளது. ஆனாலும் புலிகளின் கோரிக் கையான நோர்வேயில்தான் பேச்சு என்ற நிலைப்பாட்டுக்கு அரசுத் …
-
- 5 replies
- 1.8k views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலை நாம் ஏற்க முடியாது - நோர்வே தெரிவிப்பு Written by Ellalan Thursday, 05 January 2006 ஐரோப்பிய ஒன்றியததின் பயங்கரவாதப் பட்டியலை நோர்வேயால் ஏற்றுக் கொள்ள முடியாதென அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜொனார்ஸ் கார்ஸ்ரோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதப்பட்டியல் ஒன்று இல்லை என்ற போதும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் மையத்தின் கீழ் சிறுவர்களை படைக்கு சேர்த்தல் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 54 அமைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் எந்தவொரு அமைப்பும் ஐ.நாவினால் தடைசெய்யப்படவில்லை. இந்த நிலையில் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதன் காரண…
-
- 0 replies
- 1.4k views
-
-
வட கிழக்கு தமிழர்களின் தாயகப் பிரதேசம் என்று நிரூபிக்க பகிரங்க விவாதத்திற்கு வருமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன், அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் ஆகியோருக்கு எல்லாவல மேதானந்த தேரர் அழைப்பு விடுத்துள்ளார். இவ்வாறான தாயகப் பிரதேசம் தமிழர்களுக்கு அவசியம் இல்லை. இந்த நாட்டின் தாயகப் பிரதேசங்கள் சிங்கள மக்களுக்கு மட்டுமே உரித்தானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் தலைவரான எல்லாவல மேதானந்த தேரர் இப்பகிரங்க விவாதம் தொடர்பாக நேற்று கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது, இலங்கையில் இனப்பிரச்சினை நிலவுவதாக சர்வதேசதிற்கும் மக்களுக்கும் ஊடகங்கள் மூலம் மாயை நிலையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. …
-
- 14 replies
- 3k views
-
-
04.01.2006 சிப்பாய்க்கு புதுவருட வாழ்த்து சொன்ன நபருக்கு நேர்ந்த கதி படையினர் ஒருவருக்கு புத்தாண்டு வாழ்த்துக் கூறியவர் வீதியோரம் முழந்தாளில் நிற்க நேர்ந்தது. இந்தச் சம்பவம் புத்தாண்டு தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலிப் பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்த படையினருக்கு புதுவருட வாழ்த்துக் கூற அந்த வீதியில் நின்றுகொண்டிருந்த ஒருவர் விரும்பினார். நடந்துவந்துகொண்டிருந்த படையினரில் ஒருவரை அணுகிய அவர் மேற்கத்தைய பாணியில் கைலõகு கொடுத்து ஆங்கிலத்தில் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்தார். பதிலுக்கு கைலாகு கொடுத்த சிப்பாய் அடுத்த வினாடியே இந்தக் கைதானே எங்கள் மீது குண்டு எறிகின்றது என்று கூறி வாழ்த்துத் தெரிவித்த நபரை வீதியோரம் முழந்தாளில்…
-
- 1 reply
- 1.6k views
-
-
-
படையினர் ஒருவருக்கு புத்தாண்டு வாழ்த்துக் கூறியவர் வீதியோரம் முழந்தாளில் நிற்க நேர்ந்தது. இந்தச் சம்பவம் புத்தாண்டு தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலிப் பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்த படையினருக்கு புதுவருட வாழ்த்துக் கூற அந்த வீதியில் நின்றுகொண்டிருந்த ஒருவர் விரும்பினார். நடந்துவந்துகொண்டிருந்த படையினரில் ஒருவரை அணுகிய அவர் மேற்கத்தைய பாணியில் கைலõகு கொடுத்து ஆங்கிலத்தில் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்தார். பதிலுக்கு கைலாகு கொடுத்த சிப்பாய் அடுத்த வினாடியே இந்தக் கைதானே எங்கள் மீது குண்டு எறிகின்றது என்று கூறி வாழ்த்துத் தெரிவித்த நபரை வீதியோரம் முழந்தாளில் நிற்குமாறு பணித்தார். தாம் ரோந்து சென்று திரும்பும்வரை அந்த இடத்தைவிட்டு வி…
-
- 3 replies
- 1.9k views
-
-
மகிந்த ராஜபக்சவை சந்திக்க மறுத்த ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். முன்னேற்றக் கழகம் நன்றி இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளை மதித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்திக்க மறுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிளிநொச்சி எம்.ஜி.ஆர். முன்னேற்றக் கழகம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் விடுத்துள்ள அறிக்கை: தங்கள் சுகத்திற்காகவும் தங்களின் நல்லாட்சி சிறந்தோங்கவும் ஈழ தேசத்தவரின் இதயபூர்வமான நல்லாசிகள் என்றும் உரித்தாகுக. தாய்த் தமிழகத்தின் இனக்குழுமம் ஆகிய ஈழத் தமிழ் பேசும் மக்களாகிய எங்களின் இன உரிமைகளும் வாழ்வியல் அடிப்படைகளும் கடந்த பல தசாப்தங்களாக சிங்கள அரசால் மறுக்கப்பட்டு வருவதை தாங்கள் நன்கு அறிவீ…
-
- 5 replies
- 1.4k views
-
-
கொழும்பு மாநகரின் பாதுகாப்பு அதிஉயர் பட்சமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். எனவே கொழும்பு மாநகரின் பாதுகாப்பு குறித்து மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அவர் கூறினார். கொழும்பு மாநகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் நோக்கம் எனவும் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். கொழும்பு மாநகரின் பாதுகாப்பை முன்னிட்டு எந்நேரமும் விழிப்புடன் உள்ளதாகவும் பெருமளவிலான இராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இராணுவ புலனாய்வுத் துறையினரும் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையங்கள் பலவற்றில் விசேட பிரிவுக…
-
- 1 reply
- 1.6k views
-
-
மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: ஒரு போராளி உட்பட இருவர் உயிரிழந்தனர்! மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரால் நடத்தப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை போராளி ஜெயானந்தன் மற்றும் வினோத் என்ற பொதுமகன் உயிரிழந்துள்ளனர் என்று தமிழ்நெட் செய்தி தெரிவிக்கிறது. மன்னாரில் விடுதலைப் புலிகளின் முள்ளிக்குளம் பகுதி வழையங்காட்டுப் பகுதியில் இன்று மாலை 4 மணிக்கு இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் நுழைந்து சிறிலங்கா இராணுவத்தினர் ஊடுருவி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். உயிரிழந்த போராளி ஜெயானந்தன்இ ஏற்கனவே தனது ஒரு காலை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலி…
-
- 1 reply
- 1.7k views
-
-
கொதிக்கிறது திருமலை திருகோணமலையில் நேற்று ஐந்து அப்பாவி மாணவர்கள் படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதால், இன்று திருமலையில் அனைத்து வணிக நிலையங்களும், மூடப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளிற்கு மாணவர்கள் வராமையாலும், அலுவலகங்களிற்கு ஊழியர்கள் செல்லாiமாயலும் அவை வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இன்று வழமை மறுப்புப் போராட்டத்திற்கு எந்த அமைப்பும் அழைப்பு விடுக்காத போதும், மக்களால் இந்த வழமை மறுப்புப் போராட்டம் நடாத்தப்படுகிறது. அரச அலுவலகங்களிலும் வரவு குறைவாக இருந்ததை முன்னிட்டு ஏனையவர்களும் வீடுதிரும்பியுள்ளனர் எனத்தெரியவருகின்றது. அத்தோடு இன்று காலையிலேயே மக்கள் ஒரு வித பதட்டத்துடனேயே காலையில் அவசர அவசரமாக வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதே வேளை பெரும் எண்ணிக்கையான சிறீ …
-
- 107 replies
- 10.6k views
-