Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எமக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களால் நாம் தனித்துவிடப்பட்டுள்ளோம் என அர்த்தப்படாது – பிரதமர் நட்பு நாடுகள் ஜெனீவாவில் எமக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களால் நாம் தனித்துவிடப்பட்டுள்ளோம் என அர்த்தப்படாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று ஜெனீவா கூட்டத்தொடர் குறித்த கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவா தீர்மானத்தில் அவர்களின் முடிவுகள் எதுவாக இருந்தாலும், இந்த நாடுகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையுடன் முன்னெடுக்கும் வர்த்தக மற்றும் உதவித்திட்டங்களை நிறுத்திக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைக…

    • 1 reply
    • 242 views
  2. ஐ.நா.வின் தீர்மானம்: இலங்கை மீதான சர்வதேச விசாரணையின் அவசியத்தை பிரதிபலிக்கிறது – சர்வதேச மன்னிப்புச்சபை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் இலங்கை மீதான சர்வதேச விசாரணையின் அவசியத்தை பிரதிபலிக்கிறது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. அத்தோடு, இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் தீர்மானம் வலியுறுத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான பிரதிப் பிராந்தியப் பணிப்பாளர் தினுஷிகா திஸாநாயக்க இன்று தெரிவித்துள்ளார். இது சரியான திசையில் வரவேற்கத்தக்கபடியாகும் என்றும் ஆனால் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், நாடு எதிர்கொள்ளும் கடுமையான பொ…

  3. மோதவிட்டு குளிர் காய வேண்டாம் என சீன அரசாங்கத்தை வேண்டுகிறோம் – யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம். வடபகுதி மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வையில் பிரிவுகளை ஏற்படுத்தி மோதவிடும் செயற்பாட்டை சீனா மேற்கொள்வதாக அறியக் கிடைக்கும் நிலையில் அதனை நிறுத்த வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வடபகுதியில் சீனா ஆதிக்கத்தை பலப்படுத்துவதற்காக சீனா பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் நிலையில் அதில் ஒரு வடிவமாக யாழ் மற்றும் கிளிநொச்சி பகுதிக் கடல்களில் சீனா முதலீட்டுடன் அட்டைப்…

    • 9 replies
    • 665 views
  4. 13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் கோப்பாய் பொலிஸாரினால் கைது! 13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவில் இருபாலையைச் சேர்ந்த 73 வயது முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 13 வயதுச் சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாகியுள்ளார் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவித்திருந்தது. இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய்…

    • 7 replies
    • 672 views
  5. ஹரின், கெஹெலிய, அத்தாவுல்லா உள்ளிட்டவர்கள் வசிக்கும் வீடுகளின் பல இலட்சம் ரூபாய் மின்சாரக்கட்டணங்கள் செலுத்தப்படவில்லை – தயாசிறி! நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார். தான் வசிக்கும் வீட்டின் மின்சாரக் கட்டணம் சுமார் 11 இலட்சம் ரூபாய் நிலுவைகளாக இருப்பதாக கூறி நேற்று அமைச்சர் காஞ்சன விஜயசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தமையானது, தமது சிறப்புரிமையை மீறும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் மாத்திரமே மின்சாரக்கட்டணத்தை செலுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் தாம் வசிக்கும் வீட்டின் மின்சாரக்கட்டணம், தாம் ப…

  6. சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – எரிசக்தி அமைச்சர் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. மூன்றாவது கச்சா எண்ணெய் கப்பலும் கடந்த பத்து நாட்களில் இலங்கை கடற்பரப்பிற்கு வந்துள்ளது. ஆனால் அந்நிய செலாவணி பிரச்சினையால், இருப்புக்களை இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த முட…

  7. அமைச்சரவை அமைச்சர்களின் பதவிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்டர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர். புதிய அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் இந்த சந்திப்பில் மிக முக்கியமாக கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக்கலந்துரையாடலுக்கு இதுவரை அமைச்சர் பதவிகளை வகிக்காத பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களான எஸ்.பி. திஸாநாயக்க, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கலந்துகொண்டதாக …

  8. காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான, இந்திய மருந்துகள் குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு! காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான கூறப்படும் இந்திய மருந்துகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவில்லை என்பதில் உறுதியாக உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். காம்பியாவில் கடந்த ஜூலை மாதம் முதல் சிறுநீரக கோளாறு காரணமாக 66 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மற்றும் சளிக்கான திரவ மருந்திற்கும் அந்த மரணத்திற்கும் தொடர்பு இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,…

  9. இலங்கைக்கு எதிரான ஐ.நா.இன் புதிய தீர்மானம் IMFஇன் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா? – மத்திய வங்கியின் ஆளுநர் விளக்கம்! இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானம் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க விளக்கமளித்துள்ளார். மத்திய வங்கியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஆரம்பத் தீர்மானத்தில் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகள் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதி…

  10. முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்களால் ஜனாதிபதிக்கு பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு முதலாவது பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. இலங்கை முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்கள் சங்கத்தின் பொப்பி மலர் குழுத்தலைவர் மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய, ஜனாதிபதிக்கு முதலாவது பொப்பி மலரை அணிவித்தார். போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக இலங்கை முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்கள் சங்கம், வருடாந்தம் பொப்பி மலர் தினத்தை ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடதக்கது. https://athavannews.com/2022/1303267

    • 3 replies
    • 246 views
  11. முக்கிய வழக்கிலிருந்து ரிசாட் பதியுதீன் விடுதலை! பொதுமக்களின் பணத்தை மோசடி செய்தமை மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறி மக்களை அழைத்துச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு அவர் விடுதலை செய்யப்பட்டார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மூலம் இடம்பெயர்ந்த பகுதிகளுக்கு வாக்களிப்பதற்கு மக்களை அழைத்துச் சென்றமை மற்றும் 95 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான மக்களின் பணத்தை மோசடி ச…

    • 5 replies
    • 463 views
  12. அம்மான் படையணி உதயம் October 6, 2022 தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் உருவாக்கப்பட்ட அம்மான் படையணி என்ற இளைஞர் படையானது எமது சமூகத்தை சீர்படுத்துவதற்கான படையணியாகும். எங்களுக்கு வன்முறைகள் தேவையில்லை. இளைஞர்களை வழி மாறி போக விடாமல் எமது கட்டுப்பாட்டுக்குள் நேர்கோட்டில் பயணிக்க வைக்க வேண்டும் என்பது எமது விருப்பம் என அக் கட்சியின் உப தலைவரும் அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தெரிவித்தார் . யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியில் அம்மான் பட…

    • 31 replies
    • 2k views
  13. முறையான விலைமனுகோரல் இல்லாமல் எரிபொருள் இறக்குமதி செய்வதால் நாளொன்றுக்கு 37 கோடி நட்டம் - தயாசிறி ஜயசேகர By T. SARANYA 06 OCT, 2022 | 04:47 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.வசீம்) முறையான விலைமனுகோரல் இல்லாமல் எரிபொருள் இறக்குமதி செய்வதால் நாளொன்றுக்கு 37 கோடி ரூபா நட்டத்தை அரசாங்கம் எதிர்கொள்கிறது. எரிபொருள் வரிசையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம் என்று குறிப்பிட்டுக் கொண்டு உண்மையை மூடி மறைக்க வேண்டாம்.எரிபொருள் இறக்குமதியில் இடம்பெறும் மோசடிக்கு எதிரான சட்ட நடவடிக்கையை முன்னெடுப்பேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். நாட்டில் மீண்டும் எரிபொருள் வரிசையை உருவாக்கவே பொய்ய…

  14. இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன. பொலிவியா சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசூலா ஆகிய 7 நாடுகளும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தன. அத்துடன், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, கொரியா, உக்ரைன், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இந்த வாக்களிப்பில், இந்தியா, ஜப்பான், பிரேசில், கட்டார் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளவில்லை. …

  15. சுமந்திரனுக்கும் சாணக்கியனுக்கும் உயிர் அச்சுறுத்தல்! தனக்கும், சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘நானும், சாணக்கியனும் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக நேற்று நண்பகல் நாடாளுமன்றத்தில் இருந்து தனித்து வாகனத்தில் வெளியேறியிருந்தோம். இதன்போது எம் இதுவரையும் மோட்டார் சைக்கிள் ஒன்று பின்தொடர்ந்து வருவதனை எங்களது பாதுகாப்பு அதிகாரிகள் அவதானித்துள்ளனர். கிழக்கு மாகா…

    • 5 replies
    • 631 views
  16. ஃபேஸ்புக் ஊடாக சம்பந்தனின் சிறப்புரிமையை மீறியதாக ஒப்புக்கொண்ட நபர் மன்னிப்புக் கோரினார்! சமூக ஊடகமான ஃபேஸ்புக் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறியதாக ஏற்றுக்கொண்ட நபர் அது தொடர்பில் தனது கவலையை வெளியிட்டு ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் மன்னிப்புக் கோரியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தொடர்பில் அவதூறான வகையில் வெளியிட்ட காணொளியின் ஊடாக அவருடைய சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாகப் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த முகப்புத்தகக் கணக்கின் உரிமையாளர் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு அண்மையில் அழைக்கப்பட்டிருந்தார். நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அ…

  17. ஞானம் அறக்கட்டளை நிதி மோசடி – ராஜ்சங்கருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு! ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தின், மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் இருபத்தி இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அபகரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாலசிங்கம் ராஜ்சங்கருக்கு எதிரான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபரின் மனைவி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். ஞானம் அறக்கட்டளையினால் பாதிக்கப்…

  18. அமைச்சர் பதவியை விட்டு விலகிய பின்னரும் நாமல் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருக்கிறார் – தயாசிறி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அமைச்சர் பதவியை விட்டு விலகிய பின்னரும் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) தயாசிறி ஜயசேகர மின்சாரக் கட்டணம் செலுத்தாதமை தொடர்பாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியதையடுத்தே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதம் தயாசிறி ஜயசேகரவும் அமைச்சுப் பதவியில் இருந்து விலகிய போதிலும் அவர் இன்னமும் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருப்பதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரி…

    • 2 replies
    • 332 views
  19. தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு: இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை! தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி உயிரிழந்த இளைஞருக்குரிய இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தவருக்கு அரசினால் வழங்கப்படும் அனர்த்த இழப்பீட்டு நிதியினை பெற்று கொடுப்பதற்குரிய அனைத்து விபரங்களும் தெல்லிப்பழை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் இறப்பு சான்றிதழ் கிடைக்கப்பெற்றதுடன் அரசினால் வழங்கப்படும் இரண்டரை லட்சம் ரூபாய் இழப்பீட்டு நிதியினை உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு விரைவி…

  20. இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கமளிக்கவுள்ள ஜனாதிபதி இலங்கையின் நிலைப்பாடு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கமளிக்க புதுடெல்லிக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அவர் எப்போது இந்தியாவுக்கு செல்வார் என்பதை பாராளுமன்றத்தில் தனது விசேட அறிக்கையில் குறிப்பிடவில்லை. இலங்கை மெதுவாக ஸ்திரத்தன்மையை அடைந்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையில் பெரும்பான்மையானவர்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும், அதற்கு எதிராக சிலர் இருப்பதாகவும் தெரிவித்தார். “நல…

    • 0 replies
    • 272 views
  21. IMF ஒப்பந்தம் சபை ஒப்புதல் அளித்த பின்னரே வெளியிடப்படும் -ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அதனை உறுதிப்படுத்தும் வரை மற்றும் அதன் பிரதான கடனாளிகளுடன் இலங்கை உடன்பாடுகளை எட்டும் வரை சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை வெளியிட முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளை உள்ளடக்கிய புதிய ஊழல் சட்டத்தை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையில் நீதி அமைச்சர் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஊழலை ஒழிப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் எ…

  22. பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு தற்போதைய பல்கலைக்;கழக அவல நிலைமைகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான பங்களிப்புக்களை வழங்குவது அரசாங்கத்தின் கடமை என உயர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த நேற்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். "பல்கலைக்கழகத்துக்குள் அடிப்படைவாதம் பாசிசவாதம் உள்ளிட்ட பல முறையற்ற செயற்பாடுகளும் தற்போது இடம்பெறுகின்றன. பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவன் கைக்கடிகாரம் அணிந்துகொண்டு பல்கலைக்கழகத்துக்கு வரக் கூடாது. முதலாம் ஆண்டு மாணவி சீத்தை துணியிலான ஆடை அணிய வேண்டும். காதணி, மாலை ஆகியவற்றை அணியக் கூடாதென சில மாணவர்கள் பகிடிவதைகள் ஈடுபடுவதாக" பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். …

    • 0 replies
    • 549 views
  23. பிரதமர் சந்திப்பில் நடந்தது என்ன? நேற்றைய தினம் (05) பிரதமருக்கு இடையிலான சந்திப்பில் இருபத்தி இரண்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் நோக்கங்கள் நிறைவேற்றப்படுமா என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை இல்லாதொழிப்பதே இருபத்தி இரண்டாவது திருத்தத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார். இந்நாட்டின் வக்குரோத்து நிலைக்கு அடிப்படையான தனிப்பட்ட முடிவுகளை எடுக்கும் தனி நபர் வாத முறையை ஒழித்தல் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, குறித்த சந்திப்பில் இது தொடர்பான இறுதி முடிவுக்கு வர முடியாது போனதாகவும் தெரிவித்தார்.…

    • 0 replies
    • 166 views
  24. 07 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளன – சுகாதார பிரிவு இலங்கையில் கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, 07 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இவ்வாறு மாத இறுதியில் காலாவதியாகவுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால், மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில்லை எனவும் சுகாதாரப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1303142

  25. இலங்கை குறித்த பிரேரணை – ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இன்று வாக்கெடுப்பு! ஐக்கிய நாடுகள் சபையின் 51ஆவது மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொடர்பான பொருத்தமான பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா உள்ளிட்ட பல நாடுகளின் முன்முயற்சியில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டதுடன், குறித்த பிரேரணை இதுவரை சுமார் 30 நாடுகளின் ஆதரவைப் பெற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.