ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
தமிழ் அரசியலில் ஒற்றுமை இல்லாது போய் விட்டது எஸ்.றொசேரியன் லெம்பேட் “தமிழ் மக்களாகிய நமக்கு இன்று இருக்கக்கூடிய ஒரேயொரு ஆயுதம் நமது வாக்குச் சீட்டுத்தான். எனவே அதை நாம் முறையாகப் பயன்படுத்தி தகுதியான பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். இது விடயத்தில் நாம் அலட்சியமாக இருக்கக்கூடாது என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார் மறைமாவட்ட ஆயரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாம் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலைச் சந்திக்கின்றோம். 'கொரோனா' வைரஸ் நோயின் தாக்கமும், அச்சமும் நிறைந்த இக்கால கட்டத்தில் இந்தத் தேர…
-
- 0 replies
- 438 views
-
-
பேச்சுவார்த்தை மூலம் புலிகளை பலவீனப்படுத்திய எங்களுக்கே கிளிநொச்சி வெற்றி சொந்தம்: ஐ.தே.க. [திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 06:21 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பலவீனப்படுத்திய எங்களுக்கே கிளிநொச்சி வெற்றி சொந்தம் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திசநாயக்க பேசியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சியை கைப்பற்றிய படையினர் மற்றும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றோம். படையினர் பெற்ற…
-
- 1 reply
- 792 views
-
-
தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல் முறைமைச்சீர்திருத்தத்தின் கீழ் தமிழ் மக்கள் தாம் பாரம்பரியமாக வாழுகின்ற பிரதேசங்களில் தங்களின் இருப்புக்களை தக்கவைத்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினருமான சி.தண்டாயுதபாணி தெரிவித்தார். திருகோணமலை நகரசபையின் தலைவர் திரு. க.செல்வராசா [சுப்றா] தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றுகையில் தண்டாயுதபாணி இக்கருத்தை வெளியிட்டார். 2012ம் ஆண்டு 22ம் இலக்க உள்ளூராட்சி தேர்தல் சீர்திருத்தச்சட்டத்தின் கீழ் எல்லை மீள்நிர்ணயம் நடைபெறவிருக்கின்றது. இது குறித…
-
- 0 replies
- 387 views
-
-
குழப்பம் விளைவிப்பவர்களுக்கு எதிராக துப்பாக்கி பிரயோகம் நடத்த பொலிஸாருக்கு அனுமதி நடைபெறுகின்ற பொதுத்தேர்தல் வாக்குச் சாவடியில் வாக்குப் பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் அல்லது குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஆயுத மேந்திய தலா இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெறுகின்ற நிலையில் வன்முற…
-
- 0 replies
- 312 views
-
-
தலைமை செயலகம் பேர்ண் 10.ஜனவரி .2008 "உலகெங்கும் தமிழன் பரந்து வாழ்ந்தாலும்.. தமிழீழத்திலேதான் தனியரசு உருவாகும் வரலாற்றுப் புறநிலை தோன்றியுள்ளது..." மேதகு வே . பிரபாகரன் அவர்கள் தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என பிரகடனப்படுத்துவோம் தைப் புத்தாண்டில் தமிழீழ விடியலுக்கான பூபாளம் கேட்கட்டும்! ஒரு இனம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த இனம் தனது மொழி, தனது பண்பாடு, தனது நாகரீகம் போன்றவற்றை பேணிக்கொள்ளுதல் அவசியமாகின்றது. இந்த காப்பாற்றும் தன்மையே அந்த இனத்தின் தொடக்கத்தையும் வாழ்வாதாரத்தின் முதன்மையையும் அறிமுகம் செய்து வைக்கும் காரணியாகின்றது அந்தவகையில் உலகின் முதன்மையாக தோன்றிய இனங்களுள் முதல்நிலைபெற…
-
- 0 replies
- 1.3k views
-
-
48 மணிநேர தடுத்துவைப்பும்: 15 தவறுகளும் செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2013 11:35 -அழகன் கனகராஜ் பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கும் அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்கும் சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமல் 24 மணித்தியாலங்கள் மட்டுமே தடுத்து வைத்து விசாரிக்கலாம் என்றிருந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுடனேயே குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. இந்த சட்டமூலத்தின் 8 ஆம் வாசகமானது அரசியலமைப்புக்கு அமைவாக இல்லையெனவும் இதனால் இந்த …
-
- 9 replies
- 723 views
-
-
142 ஏக்கர் காணிகள் கிளிநொச்சியில் விடுவிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் சுமார் 142 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்படி கரைச்சி பிரதேசத்தில் கனகாம்பிகைகுளம், திருவையாறு, ஆனந்தபுரம், செல்வாநகர், ஸ்கந்தபுரம் ஆகிய பகுதியில் 108 ஏக்கரும், கண்டாவளை பிரதேசத்தில் கல்மடுநகர், புளியம்பொக்கனை ஆகிய கிராமங்களைில் 24 ஏக்கர்களும் பூநகரி பிரதேசத்தில் முழங்காவில் பொன்னாவெளி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த சுமார் 6 ஏக்கர் காணியும் கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபரிடம் கையளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடுவிக்கப்பட்ட காணியில் ச…
-
- 1 reply
- 360 views
-
-
ஈழத் தமிழர் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும், சிறிலங்கா அரசாங்கத்துடன் இந்திய மத்திய அரசாங்கம் பேச்சு நடத்தி போர் நிறுத்தம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தினை இன்று தொடங்கியுள்ளார். முன்னதாக சேப்பாக்கம் சென்னை விருந்தினர் மாளிகைக்கு முன்பாக உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறவிருந்தது. அப்பகுதியில் மாலை 5:00 மணிவரையே காவல்துறை அனுமதி வழங்கியது. இதனையடுத்து சென்னையில் இருந்து 60 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மறைமலை நகரில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 4:00 மணிக்கு திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கினார். உண்ணாநிலைப் போராட்டத்தினை கவிஞர் காசி …
-
- 56 replies
- 4.7k views
-
-
இராணுவ முகாம் அமைப்பதற்காக முள்ளிக்குளம் மக்களை காட்டுக்குள் துரத்திய படையினர்! [Friday, 2013-01-25 19:40:18] முள்ளிக்குளத்தில் புதிதாக இராணுவ முகாம் அமைக்கும் பொருட்டு , அப்பகுதி தமிழர்களை வேறு இடத்தில் குடியமருமாறு இலங்கை கடற்படை அதிகாரிகள் எச்சரித்து அத் தமிழர்களை முறையற்ற விதத்தில் காடுகளுக்குள் துரத்தியுள்ளனர் இது தமிழர்கள் மீதான உளவியல் போரின் உச்சகட்டமாகும் , தமிழர்களின் நிலங்களில் இன்று இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தமிழர்களின் வாழ்வாதாரத்தை முற்றாக அழிக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதாக சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.http://seithy.com/breifNews.php?newsID=74605&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 493 views
-
-
உண்மை நிலை தெரியாமல் பேசுகிறார் ஜெயலலிதா : தா. பாண்டியன் இலங்கையில் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தவில்லை என்றும், ஜெயலலிதா உண்மை நிலை தெரியாமல் பேசுகிறார் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் குற்றம்சாற்றியுள்ளார
-
- 0 replies
- 790 views
-
-
கிளிநொச்சியில் திலீபனின் நினைவு தாங்கிய சுவரொட்டிகள் : அச்சத்தில் மக்கள் தியாகதீபம் திலீபனின் 29ஆவது நினைவுதினம் எனும் தலைப்பினைத் தாங்கிய சுவரொட்டிகள் கிளிநொச்சியின் சில இடங்களில் நேற்றிரவு ஒட்டப்பட்டுள்ளது. ஜனநாயகப் போராளிகள் கட்சி என குறித்த சுவரொட்டியில் பெயர் குறிப்பிடப்பட்டு ஓட்டப்பட்டுள்ளது குறித்த சுவரொட்டிகள் கிளிநொச்சிக் கடைகளுக்கு அருகாமையிலும் கடைக் கதவுகளிலும் ஓட்டப்பட்டமையால் அச்சத்தில் கடை உரிமையாளர்கள் குறித்த சுவரொட்டிகளை அகற்றி உள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார் குறித்த சுவரொட்டியில் 'திலீபன் அண்ணாவே நீ மூட்டிய தியாக தீபம் அணையவில்லையடா. மக்கள் புரட்சி வெடிக்குதடா. …
-
- 0 replies
- 329 views
-
-
தொண்டமானாறு பலத்தினுடான போக்குவரத்திற்கு சந்நிதி பக்தர்களுக்கு அனுமதி August 29, 2020 வலிகாமம் கிழக்கு ஊடாக சந்நிதி உற்சவத்தினை அடையும் பக்தர்களின் வசதி கருதி தொண்டமானாறு பாலம் ஊடான போக்குவரத்திற்கு நேற்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா விழப்புணர்வுக்கு மக்கள் ஒத்துழைத்து செயற்படவேண்டும் என பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். பாலத்தினூடாக மக்களை போக்குவரத்திற்கு அனுமதிக்கும் வழிபாடுகளுடன் கூடிய சம்பிரதாய நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பால நுழைவாயிலில் தவிசாளர் தலைமையில் இடம்பெற்றது. அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆட்சி எல்லைப்பகுதியில் உள்ள நீரியல் வளத்திணைக்களத்திற்…
-
- 0 replies
- 306 views
-
-
சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாளில் புரட்சிகர இளைஞர் முன்னணி ,புரட்சிகர தொழிலாளர் முன்னணி , ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ,புரட்சிகர மாணவர் முன்னணி, ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் தழுவியஅளவில் இந்தி கொடூரன் எரிப்பு போராட்டம் நடத்தினர். தமிழ் தேசத்தின் மொழியும் , அரசுரிமையையும் , மண்ணையும் ,வளத்தையும் , பண்பாட்டையும் நசுக்கி இந்திய தரகுமுதலாளிய – பார்ப்பனியஏகாதிபத்தியம் நம்மை அடிமைப்படுத்தி உள்ளது. தமிழக மக்கள் அடிமைதனத்தில்உள்ளதால் நமது தொப்புள்கொடி உறவான ஈழத் தமிழினத்திற்கு குரல்கொடுக்கமுடியாத அவலநிலை உள்ளது. நமது மொழியும் , அரசுரிமையையும் ,மண்ணையும் , வளத்தையும் , பண்பாட்டையும் , தேசத்தையும் விடுதலை செய்வதேதமிழ்மீட்சி ஈகியர்களுக்கு செலுத்தும் வீரவணக்கம் ஆகு…
-
- 0 replies
- 1.7k views
-
-
நடுத்தர வருமானம் பெறுவோருக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு! நாடளாவிய ரீதியில் அரச, தனியார் துறைகளில் பணியாற்றும் நடுத்தர வருமானம் பெறுவோர் சொந்த வீடொன்றை வாங்குவதற்கு வாய்ப்பேற்படுத்திக்கொடுக்கும் வகையிலான புதிய செயற்திட்டமொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுகின்ற நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு, அவர்களுடைய வருமானத்திற்கு ஏற்றவாறாக வீடொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான செயற்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு கடந்த மே மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான ஆரம்ப மூலதனத்தைத் திரட்டிக்கொள்வதற்கான 5 வருடகாலத்திற்கு செல்லுபடியாகக…
-
- 0 replies
- 332 views
-
-
போரை நிறுத்துங்கள் என்று அறிவுறுத்துவதற்காக கொழும்பு செல்கிறேன் என்று பிரணாப் முகர்ஜி அறிவிக்காததது ஏமாற்றம் அளிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 489 views
-
-
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மற்றும் மக்கள் அமைப்புகள், எந்தவித அச்சமுமின்றிஎம்முடன் இணைந்துப் பணியாற்ற வாருங்கள்” என புலம்பெயர்ந்துள்ள சில முதலீட்டாளர்களைச் சந்தித்தபோது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அங்கு, இலங்கையின் முதலீடுகளை ஊக்குவித்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர், “கடந்த ஆட்சிக் காலத்தில், இலங்கையில் பல முதலீடுகளை மேற்கொள்ள வருகைதந்த புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களாகிய நீங்கள் அனுபவித்த சிரமங்களை நாம் நன்கறிவோம். குறிப்பாக, இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு, உள்ளுர் முகவர்கள் தரகுப் பணம் பெற முற்பட்டதால், நீங்கள் பலர், நாட்டில் முதலீடு செய்வதைத் தவிர்த்து வெளியேறியுள்ளமை, எமக்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.“எமது அரச…
-
- 7 replies
- 1.4k views
-
-
முத்துகுமாரின் வீரமரணம் தமிழகத்தில் பெரிய அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது குறிப்பாக மாணவ சமூகத்திடம். மாணவ,மாணவிகள் வீதிக்கு திரண்டு வந்து போராட தொடங்கி உள்ளனர். சேலத்தில் அரசு கலை கல்லூரி,சட்ட கல்லூரி, ஸவ்டெஸ்வரி கலைக்கல்லூரி என பல்வேறு கல்லூரி மாணவ,மாணவிகள் இன்று வகுப்பு புறகணிப்பு செய்தனர். ஸவ்டெஸ்வரி கலைக்கல்லூரி மாணவர்கள் சென்னையில் இலங்கை தூதரகத்தை அடித்து உடைத்த சட்ட கல்லூரி மாணவர்களை கைது செய்த காவல் துறையை கண்டித்தும் தோழர் முத்துகுமாரின் கனவை நிறைவேற்றுவோம் "எனவும் காலையில் கல்லூரி இருக்கும் கொண்டலாம்பட்டி நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர். .காவல் துறையினர் மாணவர்களை கலைத்துவிட பின் ஆர்பாட்டம் செய்து வகுப்பை புறக்கணித்தனர்.கிட்டத்தட்ட 500 மாணவ,மாணவிக…
-
- 2 replies
- 735 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் காப்பு வலய" பகுதிகளான மூங்கிலாறு மற்றும் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நேற்று இரவு நடத்திய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 18 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 71 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 653 views
-
-
இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனான இராவணனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார். மன்னன் இராவணன் ஒரு தீவிரவாதி என்ற வகையில் இந்திய பிரதமர் கருத்து வெளியிட்டுள்ளமை சர்ச்சைக்குரிய விடயமாக பல்வேறு ஊடகங்களில் ஊடக பேசப்பட்டு வருகிறது. இந்தியா, லக்னோவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிடும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் இடம்பெறும் துஷேரா நிகழ்வு என்பது, இராவணனுக்கு எதிராக போர் செய்த ராமரின் வெற்றியை குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் நிகழ்வாகும். அதனை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போது “தீவிரவாதி எனப்படும் இராவணனின் புதிய யுகம்” என நரேந்திர மோடி கருத்து வெளியிட்டுள்ளார். …
-
- 0 replies
- 476 views
-
-
ரவிக்குமார் எம்.எல்.ஏ. 'இனப்படுகொலை - இந்தியாவும் குற்றவாளியா?'' அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற் றிருக்கும் பாரக் ஒபாமா முன்னு ரிமை கொடுக்கவேண்டியது எதற்கு? பொருளாதாரச் சரிவிலிருந்து அமெரிக்காவைக் காப்பாற் றுவதற்கா... ஈராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவதற்கா... ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கா... ''இவையெல்லாவற்றையும்விட முக்கியமான பிரச்னை ஒன்று இருக்கிறது. அதற்குத்தான் அமெரிக்க அதிபர் முன்னுரிமை தரவேண்டும்; இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்துவதுதான் அந்தப் பிரச்னை!'' என்று கூறியிருக்கிறார்கள், அமெரிக்காவின் முன்னாள் உள்துறைச் செயலாளர் மேடலின் ஆல்ப்ரைட்டும், பாதுகாப்புத் துறைச் செயலாளர் வில்லியம் எஸ்.கோஹனும். இதுபற்றிக் கூட்டாக அறிக்கையன்றை …
-
- 1 reply
- 1.1k views
-
-
வன்னியில் இருந்து இன்று ஒரு தொகுதி நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களுடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமும் வன்னியை விட்டு வெளியேறியுள்ளது. முல்லைத்தீவு மாத்தளன் கடற்பரப்பில் இன்று பிற்பகல் 1:00 மணியில் இருந்து 1:30 நிமிடம் வரையே கப்பல் தரித்து நிற்க முடியும் எனும் சிறிலங்கா அரசாங்கத்தின் நிபந்தனையை ஏற்று குறித்த நேரத்துக்கு குறைந்தளவு நோயாளர்களை கப்பல் ஏற்றிச் சென்றுள்ளது. நோயாளர்கள் படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு கப்பலில் ஏற்றப்பட்டுள்ளனர். 300-க்கும் அதிகமானவர்களை ஏற்றக்கூடிய கப்பலில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான நோயாளர்களே கப்பலில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டனர். “ஓசின்” எனும் கப்பலே மாத்தளன் கடற்பரப்புக்கு வந…
-
- 4 replies
- 1k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொண்டு பொறுப்புக் கூறவேண்டும் என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமருன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் போரின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கும், நிலையான சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு பொறுப்புக் கூறும் நடவடிக்கை அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், சமாதானத்தை நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் அடிப்படையிலேயே தோற்றுவிக்க முடியும் எனவும் அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார். உலகத் தமிழர் பேரவையின் மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 27ஆம் திகதி …
-
- 2 replies
- 676 views
-
-
வடக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் வடக்கில் நாளை மறுதினம் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து, நாளை மறுதினம் செவ்வாய் கிழமை வடக்கு மாகாணம் முழுவதும், ஹர்த்தாலுக்கு அனைத்து தமிழ்க் கட்சிகளாலும் கூட்டாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை யாழ். நகரில் நடந்த கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/4208
-
- 0 replies
- 272 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவொன்று இலங்கை வரவுள்ளது இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.வரிச்சலுகையை வழங்குவது ரொடர்பில் ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவொன்று இலங்கை வரவுள்ளது. இந்த குழு எதிர்வரும் 31 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதுடன், நவம்பர் 3 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருந்து ஜீ.எஸ்.பி.வரிச்சலுகையை வழங்குவத தொடர்பில் ஆராய்ச்சியை மேற்கொள்ளவுள்ளது. இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரத்துறை என்பவற்றை ஆராய்வதுடன், இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.வரிச்சலுகையை வழங்குவதற்கான சூழ்நிலை நாட்டில் காணப்படுகின்றதா என்பதையும் இக்குழு ஆராயவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/12852
-
- 0 replies
- 185 views
-
-
கொல்லப்பட்ட யாழ் பல்கலைக மாணவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு கொல்லப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அண்மையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் சர்ச்சைக்குரிய முறையில் கொல்லப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாணவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதேவேளை, மரணம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி சட்ட மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. http://globalta…
-
- 1 reply
- 297 views
-