ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
வன்னியின் முல்லைத்தீவு மாவட்ட பகுதியில் உருவாகியுள்ள வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் அனைத்துலக சமூகமும் தமது கவனத்தைச் செலுத்த வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகள் அவசர கோரிக்கையினை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "கடந்த 48 மணி நேரத்தில் சிறிலங்காவின் ஆயுதப்படைகள் தமிழ் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தி புதுமாத்தளன், வலைஞர்மடம் ஆகிய இரு முன்னணி நிலைகள் ஊடாகவும் உள்ளே புகுந்துள்ளனர். தமிழ் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துவதன் மூலமாக விடுதலைப் புலிகளின் எதிர்ப்பைப் பலவீனப்படுத்துவதற்கு சிறிலங்கா…
-
- 0 replies
- 896 views
-
-
அமெரிக்க செனட்டர்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளையும் சந்தித்து ஈழப் பிரச்சனை தொடர்பாக எடுத்துரைக்கும் முக்கிய பணியில் தமிழ்ப் புத்திஜீவிகள் இறங்கி இருக்கின்றனர். பத்தாயிரம் கையொப்பங்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், இதுவரை மூவாயிரத்திற்கும் சற்று அதிகமான கையொப்பங்களே பெறப்பட்டிருக்கின்றன. பெயர் மட்டும் போதுமானது. அதனைக்கூட விரும்பினால் நீங்கள் தவிர்க்கலாம். ஆனால் உங்கள் ஆதரவை வழங்கும் வகையில் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வது அவசியமானதும் அவசரமானதும் கூட.தமிழ் மக்களின் கையொப்பம் அவசர தேவையாக உள்ளது. உலகத் தமிழர்களின் ஆதரவு ஈழப் பிரச்சனை தொடர்பாக எந்தளவுக்கு இருக்கிறது என்பதனை எடுத்துக்காட்ட இந்த விண்ணப்பபங்கள் இலக்க ரீதியான ஆதாரத்தை வழங்குகின்றன.இதனால், தமிழ…
-
- 0 replies
- 1.7k views
-
-
13 Mar, 2025 | 05:31 PM (எம்.மனோசித்ரா) அரசாங்கத்தின் அவசர கோரிக்கையை ஏற்று மருத்துவமனைகளில் நிலவும் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக, இந்திய அரசாங்கம் 50,000 புரோஸ்மைட் ஊசி மருந்துகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வியாழக்கிழமை (13) சுகாதார அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் அவற்றை ஒப்படைத்தார். சுகாதாரத்துறை உட்பட பல்வேறு துறைகளில் நெருக்கடிகள் ஏற்பட்ட காலங்களில் இந்தியா இலங்கைக்கு நம்பகமான நண்பராகவும் முதலில் பதிலளிப்பவராகவும் இருந்து வருகிறது. கொவிட்-19 தொற்றுநோய் காலத்தில், 2020 மே மாதத்தில் சிறப்பு விமானம் மூலம் இந்தியா 25 தொன்களுக்கும் அதிகமான மருந்துகளை இலங்கைக்கு வழங்கியது. 20…
-
- 1 reply
- 157 views
-
-
அவசர சர்வதேச கண்காணிப்பு தேவை; ஐநா மனித உரிமை நிபுணர்கள். ஐநாவின் மனித உரிமை ஆணையாளரிடம் இவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மோசமான நிலைமை இருப்பதால் உடனடியாக ஆராயவேண்டும் என்று சுயாதீன மனித உரிமை நிபுணர்கள் கேட்டுள்ளனர். source Link: "Urgent international scrutiny needed in SL," UN rights experts
-
- 0 replies
- 757 views
-
-
அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை கொழும்பிற்கு ஏ9 வீதியூடாகக் கொண்டு செல்வதற்கு அனுமதிக்குமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரூடாக இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் யாழ். போதனா வைத்தியசாலைக்குத் தேவையான மருந்துகள் ஏ9 வீதியூடாக சுகாதார அமைச்சின் லொறிகள் மூலம் கொண்டுவரப்படுவதால் வைத்தியசாலைக்கு தட்டுப்பாடின்றி மருந்துகள் கிடைப்பதாகவும் வைத்தியசாலையின் பாவனையில் உள்ள இரண்டு லொறிகளில் ஏ9 வீதியூடாக பொருட்களைக் கொண்டு வருவதற்கும் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெவித்துள்ளது.
-
- 1 reply
- 533 views
-
-
புதுக்குடியிருப்பு 2 ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகக்கொண்ட விஜயரத்திநம் மோகனதாஸ் வயது27 என்ற இவர் தற்சமயம் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றார். blood cancer நோயினால் பீடிக்கப்பட்டு சாவுக்காக தேதிகுறிக்கப்பட்ட நிலையில் இந்நிலைமையை தவிர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிசோதித்து இவருக்காக மருத்துவச்செலவாக 15 லட்சம் இந்திய ரூபாய்கள்(371/2 லட்சம் இலங்கைரூபாய்) தேவை எனக்கூறியதால் சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவரால் இவ்வளவு பணம் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் புலம்பெயர் உறவுகள் முன் தனக்கான உயிர்ப்பிச்சை கேட்டு உதவிக்கரம் நீட்டுமாறு இவர் இறைஞ்சிக்கேட்டுக்கொள்கின்றார். முழுமையாக விபரங்களிற்கு
-
- 1 reply
- 2.1k views
-
-
அவசர சிகிச்சைப் பிரிவில் சிவசக்தி ஆனந்தன் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நெஞ்சு வலி காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோதே அவர் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/வன்னி/அவசர-சிகிச்சைப்-பிரிவில்-சிவசக்தி-ஆனந்தன்/72-208177
-
- 0 replies
- 242 views
-
-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (02) ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவருக்கு எதிரான வழக்கொன்றிற்காக நேற்று முன்தினம் கொழும்புக்கு வருகை தந்த நிலையில் வழக்கு முடிவடைந்தும் அவர் நேற்று காலை சென்னைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://thinakkural.lk/article/294096
-
- 0 replies
- 335 views
- 1 follower
-
-
அவசர செய்தி இன்ற 10.30 மணியளவில் பிபிச BBC HARD TALK சேவையில் எரிக்சொல்கைம் ஊடான பேட்டி. கட்டாயம் பார்க்கவும்
-
- 1 reply
- 2.9k views
-
-
Published By: VISHNU 08 JUN, 2024 | 07:51 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாக்டீரியா தொற்றுகளுக்குப் பயன்படுத்தப்படும் மெராெபெனம் தடுப்பூசி போதுமானளவு கையிருப்பில் இருக்கும் நிலையில் அவரச கொள்முதல் முறையின் மூலம் 4 இலட்சித்தி 50ஆயிரம் தடுப்பூசி கொள்வனவு செய்யப்பட்டது. இதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நட்டம் தொடர்பில் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், பாக்டீரியா தொற்றுகளுக்குப் பயன்படுத்தப்…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
அவசர தாக்குதல் படையணி தற்போது அம்பிலிபிட்டிய நகரில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது விடுதலைப் புலிகளை ஒடுக்கவதற்காக பயன்படுத்தப்பட்ட இலங்கை இராணுவத்தின் அவசர தாக்குதல் படையணி தற்போது அம்பிலிப்பிட்டிய நகரிலுள்ள கடதாசி தொழிற்சாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிசக்திவாய்ந்த குண்டுகளை வீசுதல், இலக்கை நோக்கிச் சென்று தாக்குதல் நடத்தும் படையணியொன்று திடீரென இந்தப் பிரதேசத்தில் எந்தக் காரணத்திற்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதை இராணுவ அதிகாரிகளும் அறியவில்லை. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியொருவரின் உத்தரவிற்கமையே இந்தப் பாதுகாப்புப் படையினர் அம்பிலிபிட்டிய பிரதேசத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இந்தப் படையணி எதிர்வரும் ஜனாதிபதித்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வடக்கு மாநாகர ஆளுநர், வடக்கு மாகாண செயலாளர் மற்றும் யாழ் மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கு பெயரிட்டு எழுதிய கடிதம் ஒன்றை வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இன்று (08) வெளியிட்டுள்ளார். அதில் இருப்பது வருமாறு, கடந்த மாத ஆரம்பத்திலிருந்து கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அமுல் செய்யப்படும் ஊரடங்குச் சட்டம் மற்றும் சுய தனிமைக் கட்டுப்பாடுகள் என்பனவற்றை எதிர்கொள்வதில் வடமாகாண மக்கள், பொதுவாகவும் யாழ். மாவட்ட மக்கள் குறிப்பாகவும் முகங்கொடுக்கின்ற சில பிரச்சினைகள் தொடர்பாக இந்தக் கடிதம் தங்களுக்கு எழுதப்படுகிறது. மாவட்ட ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் மக்கள் பிரதிநிதிகளாகப் பேசக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையில் மாவட்ட ரீதியாகவும், மாகாண ரீதிய…
-
- 0 replies
- 373 views
-
-
'வடக்கில் சிவில் நிர்வாகமே இடம்பெற்று வருகின்றது. தெற்கில் இராணுவ முகாம்கள் இருப்பதைப் போன்றே வடக்கிலும் அவசர தேவைகளுக்காக இராணுவ முகாம்களை அமைத்து இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்' என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, 'இலங்கை இராணுவம் இலங்கையில் நிலைகொள்ளாமல் வெளிநாடுகளில் சென்று முகாம்களை அமைத்து நிலைகொள்ள முடியாது. தெற்கில் போன்றே வடக்கிலும் அவர்கள் தங்கியுள்ளனர். வடக்கில் பொலிஸாரே சட்டத்தையும் ஒழுங்கையும் பேணி வருகின்றனர். அங்கு எவ்வாறான பிரச்சினைகள் ஏற்படினும் பொலிஸாரே முன்னின…
-
- 0 replies
- 444 views
-
-
ஒவ்வொரு நாட்டு தமிழர் அமைப்புக்களும் தனித்தனியாகவும்இ கூட்டாகவும் பின்வரும் இடங்களுக்கு அவசர மனுவினை அனுப்பவும். மனுக்களை பக்ஸ் மூலம் அனுப்பிவிட்டு நாளை மாலை இதுபற்றி குறித்த பணியகங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவும். - ஐநா செயலாளர்நாயகம் பணிமனை -ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணிமனை -சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் -கொழும்பில் உள்ள உங்கள் நாட்டு தூதரகம் -உங்கள் நாட்டு வெளிவிவகார அமைச்சு மனுவில் தெரிவிக்கப்பட வேண்டிய விடயங்கள் 1. 50000 மேற்பட்ட சிறீலங்காப் படைகள் வன்னியில் 400 000 பொதுமக்கள் வாழும் பகுதிகளை சுற்றி வளைத்து தொடர்ச்சியான கடும் போரினை நடாத்துகின்றது. இந்தப் போர் புலிகளுக்கு எதிரானதாகக் சொல்லப்பட்டாலும், இது மக்களுக்கு எதிரானத…
-
- 8 replies
- 2.5k views
-
-
படுவான்கரையை சேர்ந்த பாலசுந்தரம் தவமணியை குத்தி கொடூரமாக கொலை செய்தமைக்காக ஆசிய மனித உரிமைகள் அமைப்பினர் எடுக்கும் Urgent appeal இல் நீங்களும் பங்கு பற்றுங்கள். ஆசிய மனித உரிமை அமைப்பினரால் தயாரிக்கப்பட்ட நீங்கள் அனுப்ப வேண்டிய மாதிரிக்கடிதம் SRI LANKA: Young woman brutally stabbed to death by members of Armed Forces Sample letter: Dear _________, SRI LANKA: Young woman brutally stabbed to death by members of Armed Forces Name of victim/deceased: Balasuntharam Thavamani (27) of Paduwankarai in the Batticaloa District, Eastern province, Sri Lanka Alleged perpetrators: Members of the Sri Lanka Army or Special Task Force (STF-Police) D…
-
- 9 replies
- 1.4k views
-
-
அவசர நிதி உதவிக்காக... IMF இடம் உத்தியோகபூர்வமாக, கோரிக்கை விடுக்கப்பட்டது! அவசர நிதி உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலான இலங்கைக்குழு வாஷிங்டனுக்கு விஜயம் செய்திருந்த போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை குறித்து இங்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறுகிய மற்றும் நடுத்தர கால, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எரிபொருள், எரிவாயு மற்றும் மருந்துப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் விநியோகத்தை வழமை…
-
- 0 replies
- 186 views
-
-
தேசிய நிகழ்வுகள் இடம்பெறும் பொழுதும் அவசர நிலைமைகள் ஏற்படும்போதும் மக்களிடையே தேவையற்ற பீதி உருவாக்கப்படுவதை தடுப்பதற்காக குறிப்பிட்ட காலப்பகுதியில் குறுஞ்செய்தி சேவையை (SMS) இடைநிறுத்துமாறு தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தொலைபேசிச் சேவை வாடிக்கையாளர்களை கேட்டுள்ளது. முக்கிய நேர அனாவசியமான மற்றும் தவறான எஸ்.எம்.எஸ்.களின் மூலம் மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றமும் பீதியும் உருவாக்கப்படுவதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. தமது இந்த அறிவிப்பு குறித்து தொலைபேசி சேவை வழங்குனர்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளதாகவும் இதற்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதாக அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த நான்காம் திகதி…
-
- 0 replies
- 1.2k views
-
-
அவசர நிலையை கையாள்வதற்கு தேவையான வைத்தியர்கள் அடங்கிய சுகாதார குழுவொன்று பயிற்சியை நிறைவு செய்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தொற்றா நோய் பிரிவும் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவும் இணைந்து பணிகளை முன்னெடுத்துள்ளதாக அந்த பிரிவின் வைத்தியர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்தார். “தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவாக, நாடளாவிய ரீதியில் உள்ள 73 வைத்தியசாலைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அல்லது டெங்கு நோயாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் பதிவாகி வருகின்றது. ஐ.டி.எச் வைத்தியசாலை அல்லது தொற்று நோய்த் திணைக்களம், தேசிய வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, நீர்கொழும்பு பொது வைத்தியசாலை மற்றும் கம்பஹா வைத்தியசாலைகள…
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
தமிழர் தாயகப் பிரதேசங்களில் கடந்த பல வாரங்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தமிழ்த் தேசத்தின் வன்னி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் 14 பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள 80410 குடும்பங்களைச் சேர்ந்த 306998 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24300பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பபு மாவட்டத்தில் 14 பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள 127980 குடும்பங்களைச் சேர்ந்த 482830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14549 குடும்பங்களைச் சோந்த 55345பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு;ளனர். திருமலையில் 22026 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு …
-
- 1 reply
- 476 views
-
-
அவசர மனிதாபிமான உதவி வழங்க அவசர அழைப்பு – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழர் தாயகப் பிரதேசங்களில் கடந்த பல வாரங்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தமிழ்த் தேசத்தின் வன்னி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டத்தில் 14 பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள 80410 குடும்பங்களைச் சேர்ந்த 306998 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24300பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பபு மாவட்டத்தில் 14 பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள 127980 குடும்பங்களைச் சேர்ந்த 482830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14549 குடும்பங்களைச் சோந்த 55345பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு;ளனர். திருமலையில் 220…
-
- 2 replies
- 525 views
-
-
அவசர மற்றும் அசாதாரண நிலையின் போது... சிறுவர்களுக்கு, வழங்குவதற்கான மருந்துகள் வைத்தியசாலைகளில் உள்ளன! அவசர மற்றும் அசாதாரண நிலையின்போது சிறுவர்களுக்கு வழங்குவதற்கான மருந்துகள் அரச வைத்தியசாலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சங்கத்தின் உப தலைவர் சிறுவர் நோய் விசேட வைத்தியர் கோசல கருணாரத்ன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எனவே, அவ்வாறான சந்தர்ப்பங்களில் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிறுவர்களைக் கொண்டு செல்லுமாறும் அவர் கோரியுள்ளார். மருந்து தட்டுப்பாடு காரணமாக சிறுவர்களை அரச வைத்தியசாலைகளுக்கு கொண்டுசெல்ல பெற்றோர்கள் பின்வாங்குவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். தற…
-
- 0 replies
- 109 views
-
-
அவசர மானியமாக... சீனாவிடமிருந்து, மேலும் 300 மில்லியன் யுவான்! அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு மேலும் 300 மில்லியன் யுவான் நிதியை அவசர மானியமாக சீனா வழங்கவுள்ளது. அவசரமாக மருந்து, உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவே இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இதற்கமைய, நெருக்கடி நிலைமையை நிர்வகிப்பதற்கு சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் அவசர மானிய தொகை சுமார் 500 மில்லியன் யுவானாக அதிகரிக்கும் என இலங்கைக்கான சீனத் தூதரகம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1279887
-
- 0 replies
- 148 views
-
-
வன்னியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, மக்களை மீள்குடியேற்ற என வெளிநாடுகளிடம் இருந்து பெருமளவு நிதியை சிறிலங்கா அரசு பெறுகின்ற போதும் - வேலைத் திட்டங்கள் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன. http://www.puthinappalakai.com/view.php?223BTnBnaccaceoOA4d4deZPZc403022lJOoOd4dedOYldlc0a04m4BZe2e24KKMM6c3a0an5BZB4e
-
- 0 replies
- 511 views
-
-
அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹொங்( Qi Zhenhong) இந்த உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்தார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதற்கும் வெள்ளத்தடுப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக எடுக்க வேண்டிய நீண்டகால உத்திகள் குறித்தும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டது. மேலும், எதிர்கால வெள்ள நிலைமைகளைத் தடுப்பதற்கும், அவ்வாற…
-
-
- 19 replies
- 1.1k views
- 1 follower
-
-
Please Send all your pictures and videos of war crimes. ( warcrime pictures - warning graphic images are here) http://colombotelegr...e-and-killings/ Please urge them to support US resolution. for your convienience I have included the emails below. Foreign Ministry 2330 Roxas Boulevard Pasay City Philippines Albert F. Del Rosario Secretary : osec@dfa.gov.ph Erlinda F. Basilio Undersecretary, Policy: oup@dfa.gov.ph Charge d’ Affaires, a.i., UN-Switzerland, WTO Geneva Jose Victor Chan-Gonzaga Tel: mission@philippineswto.org Also those who are willing to take another s…
-
- 1 reply
- 1.5k views
-