Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அவுஸ்ரேலியாவுக்கு சென்ற படகு க்டலில் முழ்கியது ஐவர் பலி மலேசிய நிருபர் திங்கட்கிழமை, மே 10, 2010 அநாதைகளாக கடல் கடக்கும் தமிழர்கள் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புக செல்கின்ற வேளை அங்கு கடலில் என்ன நடக்கின்றது என்பதே தெரிவதில்லை. இவ்வாறு கடந்த வாரம் புறப்பட்ட படகு ஒன்று 64 தமிழர்களுடன் கடலில் மூழ்கியுள்ளது. படகு பழுதடைந்ததால், கடலில் மூழ்கி 5 பேர் பலியாகி வி்ட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நடுக்கடலில் சிக்கித் தவித்த இவர்களை நேற்று முன்தினம் அந்த வழியே சென்ற ரஷ்ய கப்பல் ஒன்று மீட்டது. அதில் 59 பேர் மட்டுமே இருக்கக் காணப்பட்டனர். 5 பேரைக் காணவில்லை. அவர்கள் அணிந்திருந்த உயிர்காப்பு கவசங்கள் அந்தப் பகுதியில் மிதந்தன. மீட்கப்பட்ட பயணிகளுடன், அவர்கள் வந்த படகையும்…

    • 0 replies
    • 616 views
  2. உலகக் கடலில் அவுஸ்ரேலியாவுக்குச் செல்லும் பல படகுகள் தத்தளிக்கும் செய்திகள் ஈழத்தில் உள்ள பல வீடுகளை நிலைகுலையச் செய்திருக்கின்றன. புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இடமில்லை என்று அவுஸ்ரேலியா சொல்லுகின்றது. ஈழத்திலிருந்து மாத்திரமல்ல ஈரான், ஆப்தானிஸ்தான்,ஈராக் போன்ற பல நாடுகளிலிருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்ரேலியாவுக்குள் செல்ல முற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவுஸ்Nலிய அரசு தனது நாட்டின் கதவுகளை இறுக மூடிய பொழுதும் உலகக் கடலில் நின்று அகதிகளின் கைகள் தட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆபத்திற்குள்ளும் துயரத்திற்குள்ளும் நின்று கதவை தட்டிக்கொண்டுஅடைக்கலம் கோருவது எவ்வளவு துயரமானது? அவர்கள் சொந்த நாட்டில் வாழ முடியாத நிலமையிலேயே வருகிறார்கள் என்கிற செய்திதான் இந்த உலகத்திற…

    • 0 replies
    • 442 views
  3. மறைச்செல்வன், ஐரோப்பா 02/11/2009, 14:54 அவுஸ்ரேலியாவுக்கு புகலிடம் தேடிச்சென்ற 42 பேரில் 23 பேர் கடலில் காணாமல் போயுள்ளனர் அவுஸ்ரேலியா நாட்டுக்குச் கடல்வழியாக இழுவைப் படகு மூலம் பயணம் செய்த 42 பேரில 23 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் அஞ்சப்படுகின்றது. அவுஸ்ரேலியாவின் வடமேற்கே 330 கடல் மைல் தொலைவில் உள்ள உள்ள கொக்கோஸ் தீவிற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவுஸ்ரேலியா நேரப்படி இன்று திங்கட்கிழமை காலை 7 மணியளில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. படகில் பயணித்த 17 பேரை LNG tanker (எண்ணெய்கொள்கலன் கப்பல்) இருந்தோர் காப்பாற்றியுள்ளனர். மேலும் இருவரை தாய்வான் மீன்பிடிப் படகில் பயணி…

    • 8 replies
    • 808 views
  4. உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தொழில்சார் திறன் விசாவைப் பெற்று அவுஸ்ரேலியாவுக்குச் செல்பவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிகையலங்காரம் மற்றும் சமையல் கலை போன்றவற்றைப் பயின்று அதனைக்கொண்டு அவுஸ்ரேலியாவுக்கு தொழில்சார் திறன் விசாவைப் பெறுபவர்கள் பாதிக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளது. இதில் இலங்கையிலிருந்து செல்பவர்களும்; உள்ளடங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழில்சார் திறன் விசாவை வழங்குவது குறித்த தமது கொள்கையை மீள்பரிசீலனை செய்து அதனை மாற்றியமைப்பதற்கு அவுஸ்ரேலிய குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்தமையே இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலமைக…

  5. [size=4]அவுஸ்றேலியாவினைப் பெரும் பரப்புக்கு உள்ளாக்கியுள்ள படகு விபத்தில் 109 பேர் தற்போது உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் 80 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் ஜேசன் க்ளயார் குறிப்பிட்டுள்ளார். விபத்துக்குள்ளான படகில் இலங்கையர்கள் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அநேகமானோர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]காப்பாற்றபட்டவர்களில் 4 பேர் பின்னர் உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை காப்பாற்றபட்டவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை என இந்தோனேசியாவிற்கான சிறிலங்காத் தூதுவர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி தெரிவித்துள்ளார்.[/size] [size=4]சிறிலங்காவில் இருந்து இந்த…

  6. அவென் கார்ட் கப்பலுக்கு சீல் காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள அவென் கார்ட் கப்பல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசா ரணை நேற்று மாலை முடிவுக்கு வந்துள்ளதாக, கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. கப்பலிலுள்ள ஆயுதங்களைப் பரிசோதனை செய்வதற்காக குற்றப்புல னாய்வுத் துறை அதிகாரிகள் நேற்று கப்பலுக்குள்பிரவேசித்திருந்தனர்.காலி துறைமுகப் பொலிஸார் மற்றும் காலி நீதவான் நீதிமன்றம் என்பவற்றின் அனுமதியுடன் இந்த பரிசோதனையை மேற் கொண்டுள்ளது. குறித்த விசாரணையின் பின்னர் ஆயுதகளஞ்சியத்துக்கு சீல் வைக்கப்பட்டது. கப்பலிலுள்ள ஆயுதங்களை கணக்கிடுவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியும் பெறப்பட்டிருந்தது. கடற்படையினரால் மீட்கப்பட்ட இந்த கப்பல் தொடர்…

  7. அவைக்குள் ஆண் விபசாரி தான் எங்க உக்காந்து இருக்கிறேனு, ஒரே டவுட்டாதான் நேத்து இருந்தது உங்க மணியாட்டிக்கு. என்னா, உயரிய சபையில் என்னா என்னா நடக்கனும், என்னா என்ன பேசனுமுனே பலருக்கு தெரியபோங்க, விசயத்துக்கும் பேசுறதுக்கும் எந்தவிதமான சம்பந்தமே இருக்காது. இன்னும் சிலரோ சொல்லவேண்டியத சுருக்கமா, நச்சுனு, வலிக்காம, மத்தவுங்க மனசு நெகிழுமாறு சொல்லிப்புடுவாங்க, சிறிதரன் எம்.பியும் அவ்வாறு மனத நெகிழ வைத்துவிட்டாரு. சிங்கள பொதுமகனுக்கும், தலைவர்களுக்கும் சிந்தனையில் மாற்றம் வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து தடுத்துவைத்துள்ள தமிழ் இளைஞர், யுவதிகளை விடுவியுங்கள், இறக்கச்சிந்தனையை காண்பியுங்கள், உங்கள் இதயங்களில் இருக்கும் ஈரமானப்பகுதிகளை தட…

  8. அவைக்குள் நுழைந்த இரண்டு விருந்தாளிகள் விளக்குகளை அணைத்து விரட்டியடிப்பு 19 வேட்டுகள் தீர்த்து அரச மரியாதை நந்தி யானைக்கான பத்திரம் கையளிப்பு 2 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன அழகன் கனகராஜ் இலங்கைக்கு விஜயம்செய்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ, தலைமையிலான குழுவினருக்கு, காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செலயகத்துக்கு முன்பாக வைத்து நேற்று புதன்கிழமை செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டதுடன் 19 வேட்டுகள் தீர்க்கப்பட்டு அரச மரியாதையளிக்கப்பட்டது. இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு, நியூசிலாந்துப் பிரதமர் ஜோன் கீ தலைமையிலான குழுவினர், எஸ்கியூ468 என்ற விசேட விமானத்தின் மூலம், செவ்வாய்க்கிழமை இரவு 11.55க்கு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்…

  9. அவைத் தலைவராக லக்ஸ்மன் கிரியல்ல நியமனம் எட்டாவது நாடாளுமன்றின் அவைத் தலைவராக, முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல நியமிக்கப்பட்டுள்ளார். ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஆளும் கட்சியின் இந்தப் பதவிகள் குறித்து முன்னதாகவே எதிர்வு கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான லக்ஸ்மன் கிரியல்ல, இம்முறை கண்டி மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு அமோப வெற்றியீட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றி வரும் கயந்த கருணாதிலக்க, காலி மாவட்டத்தில் போட்டியிட்டு அமோக வெற்றியீட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.…

  10. அவைத் தலை­வர் விட­யத்தை சர்ச்­சைக்­குள்­ளாக்க முடி­யாது ரெலோ, புளொட் கூட்­டாக அறி­விப்பு நடந்து முடிந்­த­தில் இனிப் பிழை கண்­டு­பி­டிப்­பதை ஏற்­றுக் கொள்ள முடி­யாது. அவைத் தலை­வர் விட­யத்­தைச் சர்ச்­சைக்­குள்­ளாக்க முடி­யாது. அவைத் தலை­வ­ருக்கு எதி­ராக எடுக்­கப்­ப­டும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்க முடி­யாது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளான புளொட் மற்­றும் ரெலோ என்­ப­ன­வற்­றின் பிர­தி­நி­தி­கள் தெரி­வித்­துள்­ள­னர். வடக்கு மாகாண சபை­யின் அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கைய­ளித்­த­தன் ஊடா­கப் பக்­கம் சார்ந்து செயற்­பட்­டுள…

    • 5 replies
    • 525 views
  11. அவைத் தலைவர் விவகாரத்தில் சர்ச்சை உருவாகக்கூடுமென அச்சம்! கடந்த ஒரு வாரகாலமாக வடமாகாணத்தில் நிலவிவந்த அரசியல் குழப்பம் நேற்றைய தினம் முடிவுக்கு வந்தாலும் அவைத் தலைவர் விவகாரம் மீண்டும் சர்ச்சையைத் தோற்றுவிக்கக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. வடமாகாணசபையில் இடம்பெற்ற ஊழல், மோசடி விவகாரம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சரால் இரண்டு அமைச்சர்களுக்கெதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையினால் வடமாகாண சபையில் குழப்பம் ஏற்பட்டு தமிழரசுக் கட்சி சார்ந்த சில உறுப்பினர்கள் முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தனர். இந்நிலையில், குறித்த அமைச்சர்களை கட்டாய விடுப்பில் அனுப்புவதை முதலமைச்சர் விலக்கிக்கொள்ளவதாக அறிவித்த பின்னர் அவர் மீதான நம்பிக்கையில்…

  12. அவைத்தலைவரின் நிலை என்ன? - எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக எழுந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட நிலையில், தற்போது வடமாகாண அவைத்தலைவர் தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ளது. கடந்த 14ஆம் திகதி, வடமாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கையை வடமாகாண முதலமைச்சர் சபையில் சமர்ப்பித்தார். இதன்போது, கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் விசாரணைக்குழுவின் அறிக்கையின்படி குற்றவாளிகள் எனவும் எனவே, அவர்கள் இருவரும் தாமாக முன்வந்து தமது பதவிகளை தியாகம் செய்ய வேண்டும் …

  13. அவைத்தலைவருக்கும் முதல்வருக்கும் இடையிலான பனிப்போர் தொடர்கிறது . Written by Chief Editor | June 22, 2017 | Comments Off on அவைத்தலைவருக்கும் முதல்வருக்கும் இடையிலான பனிப்போர் தொடர்கிறது . வடக்கு மாகாணசபையின் 97 வது அமர்வு இன்று நடைபெற்றது. முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஆளுனரிடம் வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்ட நிலையிலும் இரண்டு அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளநிலையிலும் இரண்டு அமைச்சர்கள் விடுப்பில் செல்ல மறுத்தும் உள்ள நிலையில் இன்றைய அமர்வு சர்ச்சைகள் நிறைந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும் எந்தவித ஆரவாரமும் இன்றி அமைதியாக இது வரையில் எதுவும் நடைபெறாததது போல நடைபெற்று முடிந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். அவைத்தலைவ…

  14. அவையில் 'ஹோ' கோஷம்; பிரதமருக்கு இருமல் அழகன் கனகராஜ் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ள விவகாரம் அவையில் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன் அவ்வணியின் உறுப்பினர்கள் எழுந்து நின்று 'ஹோ, ஹோ' என்று கோஷம் எழுப்பினர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைடைந்ததன் பின்னர், பிரச்சினையொன்றை முன்வைப்பதற்கு மட்டும், தினேஷ் குணவர்தன எம்.பி.க்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்த பிரச்சினையை எழுப்ப முடியுமே தவிர, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதனால் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்துக்கு இடமளிக்க முடியாது என்று செல்வம் அடைக்கலநாதன் திட்டவட்டமாக அறிவித்த…

  15. அவையில் கேள்விக் கொக்கிகளைப் பூட்டிய சிறீதரன் வடக்கில் உள்ள பொருளாதார வளங்களை முடக்கும் வகையிலான திட்டமிடல்கள் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்துமா என கேள்விஎழுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வரவு செலவுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள பல விடயங்களையும் பட்டியலிட்டார். பாராளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்டத்தின் மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். “யுத்தம் நிறைவடைந்த பின்னர் யுத்தவெற்றி மமதையுடன் இருந்தவர்கள் தற்போது அதிலிருந்து சற்று இறங்கியிருக்கின்றமையை இந்த வரவுசெலவுத்திட்டம் ஒட்டுமொத்தமாக பாhக்கின்றபோதும் இனக்கு…

  16. அஷாத் மவுலானாவை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்ட சனல்- 4 காணொளியில் பல சாட்சியங்களை வெளிப்படுத்தியிருந்த அஷாத் மவுலானாவை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சர்ச்சைக்குரிய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கும் முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் என அழைக்கப்படும் பிள்ளையான் மற்றும் முன்னாள் அரச புலனாய்வு பணிப்பாளர் சுரேஷ் சலே ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக அஷாத் மவுலானா சனல்- 4 காணொளியில் நேரடியாகத் தோன்றி வெளிப்படுத்தியிருந்தார். இது தொடர்பில், தற்போது சுவிட்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள அஷாத் மவுலானாவிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள அவரை நாடு கடத்துமாறு இலங்கை …

  17. , அம்பாறை நூருல் ஹுதா உமர்- முஸ்லிம்களின் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் எனும் சிங்கத்தின் ஆளுமைகளை கண்டு அவரின் பாசறையில் வளர்ந்த நாங்கள் இப்போது நடக்கின்ற சில்லறை அரசியலை பார்த்து, முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்களுக்கு பயந்து ஒடுங்குபவர்களாக இருக்க முடியாது. இருக்கவும் மாட்டோம். அப்படியான ஒரு வீர தலைவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கியது தலைவரின் குடும்பத்திற்கு சொத்து சேர்க்க வேண்டும் அல்லது தலைவரின் மகனை அமைச்சராக்க வேண்டும் என்று அல்ல. அப்படியான கொள்கையில் அவர் வாழவும் இல்லை. இந்த மண்ணில் நாங்கள் அடிமைகளாக எங்களுடைய உயிர்களையும் சொத்துக்களையும் இழந்து, நிம்மதியாக வாழ்வதற்கான பயத்தில் இருந்த போது தான் ஒரு பாதுகாப்பு கேடயமாக முஸ்லிம் காங்கி…

    • 0 replies
    • 207 views
  18. அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எஃப்.ரகுமானின் நடத்தை கோலங்கள் மற்றும் அவரின் அதிகார துஷ்பிரயோகங்கள் அண்மைக்காலங்களாக சட்டரீதியாக அல்லாமல் பசுதோல் போர்த்திய புலியாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையில் கடமையாற்றும் விசேட தர தாதிய உத்தியோகத்தர் ஆர்.தேவாமிர்ததேவி குறிப்பிட்டுள்ளார். கல்முனை பெண்களின் உரிமை செயற்பாட்டாளரும், கல்முனை மாநகர உறுப்பினருமான பஸீரா றியாஸ் தலைமையில் இன்று கல்முனை பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வைத்திய அத்தியட்சகரின் நடத்தை கோலங்களும், அதிகார துஷ்பிரயோகங்களும் அண்மைக்காலங்களாக தன்னை தாக்குகின்றது. சட்டரீதியாக அல்லாமல் …

  19. கிழக்கு மாகாணம் அஷ்ரப் நகரில் சிங்கள இராணுவத்தினரின் அத்துமீறிய படைமுகாம் அமைப்பினை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துவருகின்றனர்.அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகரிலுள்ள தமது குடியிருப்பு மற்றும் மேட்டுநில பயிர்ச்செய்கை நிலங்களில் சிங்கள இராணுவத்தினர் அத்துமீறி இராணுவ முகாம்களை அமைத்து வருவதைக் கண்டித்து இன்று (2011.11.08) அக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். . தங்களுக்கு சொந்தமான காணிகளில் தாம் நுளைவதைத் தடுத்துவரும் இராணுவத்தினரை அங்கிருந்து உடனடியாக வெளியேறும் படியும் கோரிக்கை விடுத்தனர். . ஒலுவில் அஷ்ரப் நகர்ப் பகுதியிலுள்ள இரண்டு இடங்களில் தற்போது சிறிய மினி முகாம்களை அமைத்துள்ளதுடன், குறித்த பகுதியில் இராணுவத்தினர் ரோந்த…

  20. அஷ்ரப் பலியான விவகாரம் : காணாமல்போன அறிக்கையை தேடுமாறு உத்தரவு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.ஏ. அஷ்ரப் உள்ளிட்ட 14 பேர் பலியான சம்பவம் தொடர்பில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, காணாமல் போயுள்ள, முக்கிய ஆவணத்தைத் தேடுமாறு, தகவல் அறியும் உரிமை ஆணையகம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் அதன் ஆரம்பத் தலைவருமான எம்.எச்.எம். அஷ்ரப், விமான விபத்தொன்றில் மரணமடைந்த சம்பவம் தொடர்பில், கண்டறியவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மாயமாகியுள்ளதாகத் தகவல் அறியும் ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்தே, அந்த ஆணைக்குழு மேற்கண்டவாறு உத்தர…

  21. தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என்ற பாகுபாடு இல்லாமல் மக்களுக்கு மகத்தான சேவை செய்தவர் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப். அவரை போன்று சேவை செய்வதற்கு நாங்கள் ஆசைப்படுகின்றோம். சிங்கள பகுதியின் எந்த மூலைக்கு சென்றாலும் அங்கு முதலில் பேசுவது மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களை பற்றிதான் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, நாவிதன்வெளி மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகங்கள் இணைந்து வியாழக்கிழமை (10) ஏற்பாடு செய்த திவிநெகும புத்தாண்டு சந்தையை, மத்தியமுகாம் பாமடியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுக…

  22. அஷ்ரப் மரணத்துக்கான காரணம் தெரிந்தது – 18 ஆண்டு கால இரகசியம் அம்பலம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிறுவக தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப் உலங்குவானூர்தி விபத்தில் மரணமானதற்கு குண்டுவெடிப்பு ஏதும் காரணமில்லை என்று தெரியவந்துள்ளது. 2000ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 16ஆம் நாள், அமைச்சராக இருந்த எம்.எச்.எம்.அஷ்ரப் உள்ளிட்டவர்கள் பயணம் செய்த எம்.ஐ.17 உலங்குவானூர்தி ஊரகந்த பகுதியில் மலையில் விபத்துள்ளானது. இந்தப் சம்பவத்தில் அஷ்ரப் உள்ளிட்ட 14 பேர் மரணமடைந்தனர். இந்தச் சம்பவம் திட்டமிட்ட ஒரு சதிச்செயலாக இருக்கலாம் என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் இருந்து வந்தது. அஷ்ரப் மரணமான, உலங்குவானூர்தி விபத்து தொடர்பாக ஆராய, மேல்முறையீட்டு நீ…

  23. அஷ்ரவ் நகர் மக்களை வெளியேற உத்தரவு அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அஷ்ரவ் நகர் பிரதேசத்தில் 31 குடும்பங்களை அவர்களின் 66 ஏக்கர் விஸ்தீரணமுள்ள காணியிலிருந்து வெளியேறுமாறு அம்பாறை மாவட்ட அரச அதிபாரினால் அட்டாளைச்சேனைப் பிரதேச யெயலாளர் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் இதுசம்பந்தமாக உரியவர்களுக்கு அறிவித்துள்ளார் . இவர்கள் தமது காணிகளுக்கான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கவில்லை, இவர்களின் காணி அனுமதிப்பத்திரம் வலுவிழந்துபோயுள்ளதாக பிரதேச செயலாளாரின் கடிதத்தில் சுட்டிக்கபட்டப்பட்டுள்ளது. மேற்படி காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் கடந்த 1980ம் இறுதியாக புதுப்பிக்கப்பட்டதாக தொரிவிக்கப்படுகின்றது. யுத்தம் காரணமாக த…

  24. அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்­மின் வடக்கு முஸ்­லிம்­கள் வெளியேற்­றப்­பட்டு 23 வருடங்கள் கடந்­துள்ள இன்­றைய நிலையில் தனக்குக் கிடைத்­து­ள்ள வட மாகாண சபை உறுப்­பினர் பத­வியை பயன்­ப­டுத்தி அம் மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை சாத்­தி­ய­மாக்­கு­வதே தமது முதல் பணி­யாக இருக்கும் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் போனஸ் உறுப்­பி­ன­ராக நிய­மனம் பெற்று அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்­மின் தெரி­வித்­தார். வட மாகாண சபை உறுப்­­பி­ன­ராகப் பத­வி­யேற்ற பின்னர் விடிவெள்ளிக்கு அளித்த பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்­டார். நேர்­கா­ணலின் முழு விபரம் வரு­மா­று: நேர்­கா­ணல்: எம்.பி.எம்.பை­றூஸ் விடி­வெள்ளி: ஜாமிஆ நளீ­மியா பட்­ட­தா­ரி­யா­கவும் சிவில் சமூக செயற்­பாட்­…

    • 0 replies
    • 529 views
  25. அஸாத் சாலி மற்றும் அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னால் ஆளுநருமான அஸாத் சாலி மற்றும் அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (27) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, தான் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டமை மற்றும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் பல புத்திஜீவிகள் கைது செய்யப்பட்டு இன்னும் சிறையில் உள்ளமை குறித்து அஸாத் சாலி அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 800 வருடங்களாக முஸ்லிம் மக்களால் பாதுகாக்கப்பட்டு வந்த கூரஹல ஜெய்லானி கட்டிடங்கள் தகர்…

    • 0 replies
    • 282 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.