ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
மீள் வாழ்க்கையை ஆரம்பிக்கும் வன்னி மக்கள் யுத்தகாலத்தில் விடுதலைப் புலிகளால் சேதமாக்கப்பட்ட தண்ணீர் தாங்கிக்கு அருகில் வன்னி மக்கள் தற்காலிக சந்தை அமைத்துள்ளனர். தமது நாளாந்த வாழ்க்கையை கொண்டுசெல்லும் வன்னி மக்கள் விற்பனையில் ஈடுபடுவதை படத்தில் காணலாம். tamil mirror
-
- 7 replies
- 953 views
-
-
இலங்கை தொடர்பான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமாறு அரசாங்கம், அமெரிக்காவிடம் கோரியுள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் கூடுதல் ஆதரவு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடாது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார். மாறாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற மாற்று பொறிமுறைமை ஒன்றின் மூலம் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்களை திரட்டி பழையவற்றை தோண்டி எடுப்பதனால் பிரிவினையே அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனங்களுக்கு இடையில் முரண்பாடு அதிகரிக்குமே தவிர, …
-
- 6 replies
- 727 views
-
-
"எமக்கு கிடைத்திருக்கும் இறுதி" ரணில் ஜனநாயகத்தை பாதுகாத்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இது எமக்கு கிடைத்திருக்கும் இறுதி சந்தர்ப்பமாகும். இதனை பயன்படுத்திக்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும். அத்துடன் அனைவரும் இலங்கையர் என்ற சிந்தனையை ஏற்படுத்தவே ஸாஹிரா கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், எமக்கு சுதந்திரம் கிடைத்த காலத…
-
- 2 replies
- 408 views
-
-
புகையிரத கட்டணமும் அதிகரிப்பு – போக்குவரத்து அமைச்சர் எதிர்வரும் காலங்களில் புகையிரத கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். பேருந்து கட்டண அதிகரிப்புக்கு நிகராக புகையிரத கட்டணத்தை அதிகரிக்குமாறு புகையிரத திணைக்களம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது. இதேவேளை இன்று முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 17 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1271944
-
- 0 replies
- 500 views
-
-
தமிழ்க் கூட்டமைப்பில் இருந்திருந்தால் போராளிகளைக் காப்பாற்றியிருப்பேன் - தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் நேற்றுத் தெரிவிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நான் இருந்திருந்தால் விடுதலைப்புலிகளைக் காப் பாற்றியிருப்பேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பல கஷ்டங்கள், துன்பங்க ளிலிருந்து மீண்டு இன்றுதான் எட்டிப்பார்த்து மூச்சு விடக் கூடிய நிலையில் நிம்மதியைத் தேடி நிற்கும்போது; பல கட்சிகள்,சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இவ்வாறுகளத்தில் உள்ள சில கட்சிகள், சுயேட்சைகள் தவிர்ந்த ஏனையவற்றுக்கு ஏதோ ஒரு சக்தி தூண்டுதல் அளிப்பதாக அவர் கூறியுள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ். அலுவல…
-
- 8 replies
- 2.2k views
-
-
மின் கட்டணம்... 500 வீதத்தால், அதிகரிக்கும் அறிகுறி? மின்கட்டணம் பல மடங்களாக அதிகரிக்கக்கூடும் என தகவல் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “2 ஆயிரத்து 180 ரூபாவாக இருந்த சமையல் எரிவாயுவின் விலை, 4 ஆயிரம் ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை பார்க்கும்போது தலை சுற்றுகின்றது. இந்நிலையில் இன்னும் ஒரிரு நாட்களில் மின்சார கட்டணமும் அதிகரிக்கப்படலாம். எமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, 30 அலகுகளுக்கான மின் கட்டணத்தை தற்போதுள்ள விலையைவிடவும் 500 மடங்களால் அதிகரிக்குமாறு மின்சார சபை யோசனை முன்வைத்துள்ளது. எனவே, மின்குமிழ்களை வெறுமனே பார்த்துகொண்டிருக்க வேண்…
-
- 0 replies
- 147 views
-
-
சரத் பொன்சேகாவும் அவரது முறைகேடான இராணுவ நடவைக்கைகளும்..... சரத் பொன்சேகா எடுத்த முடிவுகளால் படைகளுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக மேலும் புதிய குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளன. அவர் இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடான நடவடிக்கைகள் தொடர்பாக இப்போது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது. இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த போது இராணுவச் சட்டங்களுக்கு முரணாக அவர் நடந்து கொண்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளே தற்போது ஆரம்பமாகியுள்ளன. அவற்றில் பிரிகேடியர் திலகரட்ணவுக்கு 62 வயது வரை சேவைநீடிப்பு வழங்கப்பட்டு வந்த விவக…
-
- 0 replies
- 624 views
-
-
வெளிநாட்டுப் புலிகளுக்கு எதிராக ஜெனிவாவில் நாளை ஆர்ப்பாட்டம் Share இலங்கைக்கு வெளியில் வாழ்கின்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை ஒழிப்போம் என்று வலியுறுத்தி ஜெனிவாவில் நாளை 24ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளத ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அலுவலகத்துக்கு முன்னாலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது என்றும், சிங்களத் தேசியவாத அமைப்புகளின் கோரிக்கையின் பிரகாரமே புலம்பெயர் வாழ் சிங்களவர்களால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒரு…
-
- 0 replies
- 348 views
-
-
எரிபொருளுக்கு தட்டுப்பாடு? அதிகரிக்கப் படுகின்றது மின் வெட்டு நேரம்? அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தற்போதைய மின்வெட்டை மேலும் அதிகரிக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெற்றோலியம் மற்றும் துறைமுக நல்லிணக்க தொழிற்சங்க கூட்டமைப்பின் பேச்சாளர் ஆனந்த பாலித இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் எரிபொருளின் அளவு இழக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போதைய எரிபொருள் விநியோகம் இன்றுடன்(செவ்வாய்கிழமை) நிறைவடையவுள்ளதாகவும் மின்வெட்டை அதிகரிப்பதன் மூலம் ஓரளவு எரிபொருளை சேமிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 148 views
-
-
பிரதமர் பதவியிலிருந்து.. விலக தயாராகின்றார், மஹிந்த? பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அரசியல் நெருக்கடியை தவிர்ப்பதற்காக இடைக்கால அரசொன்றை அமைக்கும் நோக்கில் மஹிந்த பிரதமர் பதவியை துறக்கத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் அவசர சந்திப்பு இடம் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது நாட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வு…
-
- 7 replies
- 653 views
- 1 follower
-
-
இலங்கை அரசுக்கான ஆதரவினை விலக்கிக்கொள்ள இந்தியா திட்டம்? - மேற்குலகுடன் இணைகின்றது இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு இலங் கைக்கு ஆதரவான நாடுகள் உட்பட பன்னாட்டு சமூகம் ஒரு வரைய றைக்கு அப்பால் இலங்கைக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என வும் இந்தியா, சீனா உட்பட இலங்கைக்கு நெருக்கமான நாடுகளும் மேற்குலகைப் பகைக்காமல் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் சாத்தியக் கூறுகளே காணப்படுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிபுணர்கள் குழு ஒன்றை நியமிப்பதற்கு முடிப…
-
- 3 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவின் உயர் பாதுகாப்பு வலயம் , பிரான்சு நாடாளுமன்றத்தில்! [Tuesday, 2014-02-11 13:27:50] சிறிலங்கா அரசபடைகளால் ஈழத்தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்ககைகள் மற்றும் போர்க்குற்றங்களை மறுக்கமுடியாத ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி, உலகளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய NO FIRE ZONE(சிறிலங்காவின் உயர் பாதுகாப்பு வலயம்) ஆவணப்படம், 07-02-2014 ஆம் திகதி பிரான்சு நாடாளுமன்றத்தில் காட்சிப் படுத்தப்பட்டது. பிரித்ததானியாவின் சானல் 4 தொலைக்காட்சிக்காக இந்தப் படத்தை இயக்கிய திரு.CALLUM MACRAE அவர்களும் இந்நிகழ்வின்போது நேரடியாகக் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். …
-
- 0 replies
- 384 views
-
-
புதிய அரசமைப்பு கூட்டாட்சித் தீர்வையே வலியுறுத்துகிறது ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமரபுர பௌத்த பீடம் அறிவிப்பு Share புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையைத் தற்போதுள்ள வடிவத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பௌத்த மக்களின் நம்பிக்கைக்குரிய பௌத்த பீடங்களுள் ஒன்றான அமரபுர பௌத்த பீடம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமரபுர மகாபீடத்தின் தலைவர் கொடுகொட தம்மவன்ன தேரர் உள்ளிட்டவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்ட…
-
- 0 replies
- 181 views
-
-
நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற... நிதி அமைச்சராக, இருந்து தேவையானதைச் செய்வேன் – அலி சப்ரி எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும், நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற, நிதி அமைச்சராக இருந்து, தேவையானதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என அலி சப்ரி தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் தற்போது இடம்பெற்று வருகிறது. இதன்போது புதிய அமைச்சர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் நிதியமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பினார். அதனை தெளிவுபடுத்திய அலி சப்ரி, தான் நிதியமைச்சராகவே தற்போது உ…
-
- 9 replies
- 503 views
-
-
வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழர் தேசிய கூட்டமைப்பு (TNA) க்கான ஆதரவை சக்தி வாய்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் விலக்கிக்கொண்டது. தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களில் பாதிப்பேரை ஒருதலைப்பட்சமாக கூட்டமைப்பின் தலைமை விலக்கிக் கொண்டதை தொடர்ந்து, கூட்டமைப்பின் தலைமை இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு, தமிழ் காங்கிரசுக்கும் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றிய நிலையில், யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் தமிழர் தேசிய கூட்டமைப்பு (TNA) க்கான ஆதரவை விலக்கிக்கொண்டது. மேலும் தாம் நடுநிலை வகிக்கப் போவதாகவும், இம்முறை மக்கள் பொருத்தமான வேட்பாளர்களை, கட்சியை தாமே தெரிவு செய்யட்டும் எனவும், தாம் மக்களிடம் வைக்கு…
-
- 28 replies
- 2.5k views
-
-
ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை பலவீனப்படுத்தும் நோக்கில், எதிர்தீர்மானம் ஒன்றைச் சமர்ப்பிக்க, சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகள் தயாராகி வருவதாக,சிறிலங்கா அரசாங்க வானொலி தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்கத் தீர்மானத்துக்கு எதிரான, மற்றொரு தீர்மானத்தைக் கொண்டு வருவது குறித்து, சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகள் கலந்தாலோசித்து வருகின்றன. சிறிலங்காவில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்து, இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்துலக விசாரணை நடத்த வலியுறுத்தி, அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யும் நோக்கிலேயே, இந்த எதிர்த் தீரமானத்தைக் கொண்டுவருவது குறித்து, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கவனம் செலுத்தி வருவதாகவும், அந்தச் செய்தியில் க…
-
- 0 replies
- 356 views
-
-
சந்திரிக்காவுடன் பல அரசியல் தரப்புக்கள் சந்தித்து பேச்சு ( எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் ஜனாதிபதி சந்ரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன், பல்வேறு அரசியல் தரப்புக்களும் அவசர சந்திப்பொன்றினை நடாத்தி கலந்துரையாடியுள்ளன. இந்த சந்திப்பு கொழும்பு - பண்டாரநாயக்க சர்வதேச மா நாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான் குமார வெல்கம, சம்பிக்க ரணவக்க, ரஞ்சித் மத்தும பண்டார, ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், எம்.ஏ. சுமந்திரன், அனுர யாப்பா அபேவர்தன, சுசில் பிரேம ஜயந்த, கபீர் ஹாஷிம், எரான் விக்ரமரத்ன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன் இவ…
-
- 0 replies
- 316 views
-
-
பேஸ்புக்கைத் தடை செய்ய இலங்கை அரசாங்கம் முடிவு! – அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தகவல். [sunday, 2014-02-23 09:26:33] இலங்கையில் பேஸ்புக்கை தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார். பேஸ் புக் சமூக வலையமைப்பு மற்றும் இணையத்தை பிழையாக பயன்படுத்துவதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, நாட்டின் இளைய தலைமுறையினரை பாதுகாக்கும் நோக்கில் பேஸ்புக்கை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஆபாச இணைய தளங்களை முடக்குவதற்கு ஏற்கனவே தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பேஸ்புக் பயன்படுத்திய மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். http://seithy.com/breifNews…
-
- 4 replies
- 580 views
-
-
கடல், நிலம் மற்றும் ஆகாயம் எனும் மூன்றையும் ராஜபக்சர்களே விற்றுள்ளார்கள்! Report us Sinan 4 hours ago நல்லாட்சி அரசாங்கம் நாட்டை விற்பதாக கூறினாலும், உண்மையில் கடல், நிலம் மற்றும் ஆகாயம் எனும் மூன்றையும் ராஜபக்சர்களே விற்றுள்ளார்கள் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தேசிய சுகவாழ்வு கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய அடையாள அட்டை வழங்கும் நடமாடும் சேவை இன்று கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இடம்பெற்றுள்ளது. மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும் மக்கள் நலன் கருதி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இந்த வேலைத்திட்டத்தின் இன்றைய நிகழ்வில் அமைச்சர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மற்றும் நாடாளுமன…
-
- 0 replies
- 257 views
-
-
கொட்டகலையில்... வீதி மறியல், போராட்டம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் கொட்டகலை நகரில் இன்று (புதன்கிழமை) மதியம் மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன. ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியை வழிமறித்த போராட்டக்காரர்கள் வீதிகளில் படுத்தும், ஒப்பாரி வைத்தும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கொட்டகலை நகர வாசிகள், சூழவுள்ள பகுதிகளில் உள்ள மக்கள், இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். மக்களை வதைக்கும் இந்த அரசு வீடு செல்ல வேண்டும், ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என போராட்டக…
-
- 0 replies
- 190 views
-
-
போருக்குப் பின்னர் நாளுக்கு நாள் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் எமது கைகளில் இருந்து பலாத்காரமாக பறிக்கப்படுகின்றன. வெறுமனே அபிவிருத்தி என்ற போர்வையில் வீதிகளைத் திருத்துவதாலோ, புனரமைப்பு செய்வதாலோ, மக்களுக்கான உண்மையான அபிவிருத்தியைக் காண முடியாது. மாறாக அவர்களது அவசியம் தேவைகளை அறிந்து செயற்பட்டு அவர்களை வாழ் வாதாரத்துக்கு ஏற்றாற் போல் மாற்றுவதே உண்மையான அபிவிருத்தியாகும். இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார். தங்கவேலாயுதபுரம் விநாயகர் ஆலய அடிக்கல் நடும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக் கான தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழ…
-
- 0 replies
- 197 views
-
-
ஐ.நாவை திட்டிய நாமல் தற்போது அதன் உதவியை நாடுகின்றார் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையை திட்டிவிட்டு தற்போது நாமல்ராஜபக்ச அதன் உதவியை நாடுவதாக இலங்கையின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின கருத்து தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டையில் இந்திய துணைதூதரகத்தின் முன்னாள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட பி;ன்னர் அவர் தனது நிலை குறித்து ஐக்கியநாடுகள்மனித உரிமை பேரவையிடம் முறையிட்டுள்ளார். நாமல் ராஜபக்சவின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ராஜித சேனாரட்ன இலங்கையின் உள்விவகாரங்களில் ஐக்கியநாடுகள் மனித …
-
- 0 replies
- 310 views
-
-
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு... 2.5 பில்லியன் டொலர், கலந்துரையாடலை பாதித்துள்ளது – சீனா குறிப்பிட்ட கட்சி அல்லது அரசாங்கத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு சீனா ஆதரவளிக்கவில்லை என சீன தூதுவர் தெரிவித்துள்ளார். எவர் ஆட்சியில் இருந்தாலும் இலங்கை மக்களுக்கே சீனாவின் ஆதரவு இருக்கும் என்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் தற்போதைய பேச்சு, சீனாவுடனான 2.5 பில்லியன் டொலர் பெறுவதற்கான கலந்துரையாடல்களை பாதித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். சீனா கடந்த ஆண்டு ஜூலை முதல் 2022 ஜனவரி வரை 500 மில்லியன் டொலர் மதிப்பில் 730,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கைக்கு வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார். …
-
- 6 replies
- 496 views
-
-
யாழ் மாவட்டத்தில் தமிழ்க்கூட்டமைப்பின் தேர்தல் பின்னடைவுக்குக்காரணம் என்ன Courtesy: உதயன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சி.வி.கே. சிவஞானம், கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட் டக் கிளையின் பொதுச்சபைக் கூட்டத்தில் தேர்தல் பின்னடைவு களுக்கான காரணத்தை விளக்கி உரையாற்றினார். யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தவரை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு பெற்றிருந்த பொன்சேகாவுக்குக் கிடைத்த வாக்குகளை விட, பொதுத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்புக்குக் கிடைத்த வாக்குகள் சுமார் நாற்பதாயிரம் குறைவாகும். மக்களின் அக்கறையின்மை, அதிருப்தி, உட்கட்சிக் குழப்பங்கள் போன்றவை இதற்குக் கா…
-
- 0 replies
- 519 views
-
-
ஜெனிவா பிரச்சினையை ஜனாதிபதி வெற்றிகரமாக தீர்ப்பாராம்! – அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகிறார். [Thursday, 2014-03-06 07:37:59] ஏனைய பிரச்சினைகளை வெற்றிகரமாக முகம் கொடுத்தது போன்று ஜெனீவா பிரச்சினையையும் ஜனாதிபதி சர்வதேச அணுகுமுறை மூலம் தீர்வு காண்பார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஜெனீவா மாநாடு குறித்து வினவப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இலங்கை குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அது குறித்து கண்காணிக்க வேண்டும் எனவும் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப் பட்டாலும், அரசாங்கத்தினால் அதனை நிராகரிக்க முடியும். பொருளாதாரப் பிரச்சினையையோ யுத்தத…
-
- 0 replies
- 206 views
-