ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143354 topics in this forum
-
இலங்கை வந்த இந்தியத் தூதுக்குழு: தொடர்ந்து இந்தியா, தமிழ்நாடு வழங்கும் உதவிகள் என்ன? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMD SRI LANKA இலங்கை எதிர் நோக்கியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு, நெருங்கிய நண்பனாக இந்தியா முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார். பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தொடர்ந்து நிதியுதவிகளை வழங்குவது குறித்து ஆராய்வதற்காக இந்திய தூதுக்குழு ஜூன் 23 காலை கொழும்புவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தது. இந்…
-
- 5 replies
- 501 views
- 1 follower
-
-
புதிதாக, தேர்தலை நடத்த... தற்போது வாய்ப்பு இல்லை – பிரதமர் உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிதாக தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த விடயம் குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், சில பிரச்சினைகளுக்கு தீர்வை கண்ட பின்னர் மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறினார். 225 பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பும் உரிமையும் பொதுமக்களுக்கு உள்ளது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். இதேவேளை நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் நாம…
-
- 0 replies
- 204 views
-
-
பாடசாலைக்குச் செல்ல முடியாது என... இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு! தமக்கு முறையான அறிப்பு இல்லையென்றால் திங்கள் முதல் பாடசாலைக்குச் செல்ல முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆசிரியர்களின் போக்குவரத்திற்கு ஏதாவது பொறிமுறையை உருவாக்குமாறு பல தடவைகள் அரசிடம், அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்தோம். அதற்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை. நாளுக்குநாள் நெருக்கடிகள் அதிகரித்தே செல்கின்றன. பொதுமக்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முரண்பாடுகள் உருவாக …
-
- 0 replies
- 323 views
-
-
3 பில்லியன் பெறுமதியான பொருட்களுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்! இந்திய மக்களால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித்தொகையுடன் கூடிய கப்பல் இன்று (24) இலங்கையை வந்தடைந்துள்ளது. அவற்றில் 14,712 மெட்ரிக் தொன் அரிசி, 250 மெட்ரிக் தொன் பால் மா மற்றும் 38 மெட்ரிக் தொன் மருந்துகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மனிதாபிமான உதவியின் மொத்த பெறுமதி 3 பில்லியன் இலங்கை ரூபா என தெரிவிக்கப்படுகிறது.. இந்திய மக்களால் வழங்கப்பட்ட முதல் மனிதாபிமான உதவித்தொகை கடந்த மாதம் 22 ஆம் திகதி நாட்டை வந்தடைந்ததுடன் அதில் 9,000 மெட்ரிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன் மருந்துகள் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http:/…
-
- 4 replies
- 480 views
-
-
நாடு, பாரிய போஷாக்கின்மைக்கு.. முகங்கொடுத்துள்ளதாக... எச்சரிக்கை. பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு பாரிய போஷாக்கின்மைக்கு முகங்கொடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(24) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் கலாநிதி பிரசாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டுக்கான அத்தியாவசிய மருந்துகளை இந்தியச் சந்தையில் இருந்து கொள்வனவு செய்யுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் ஆறு வாரங்களுக்குள் அவற்றைக் கொள்வனவு செய்யுமாறு வைத்தியர்கள் அமைச்சருக…
-
- 1 reply
- 272 views
-
-
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு... அவர்களது வீட்டிலேயே, பிரசவம் செய்ய தயாராக இருக்குமாறு... அறிவிப்பு. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அவர்களது வீட்டிலேயே பிரசவம் செய்ய தயாராக இருக்குமாறு அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது. தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக கர்ப்பிணித் தாய்மார்களை வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாத நிலையில் வீட்டிலேயே பிரசவம் மேற்கொள்ளலாம் என அதன் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் சூழ்நிலையில் போக்குவரத்து சிரமங்கள் உள்ளதால் எந்த நேரத்திலும் பிரசவத்தை எதிர்கொள்ளும் தாய்க்கு வசதிகளை செய்து கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரசவத்தில் …
-
- 4 replies
- 426 views
- 1 follower
-
-
4 இலட்சம் கடவுச்சீட்டுகள்.... வழங்கப்பட்டுள்ள போதிலும், 70 ஆயிரம் பேர் மாத்திரமே நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஜனவரி மாதம் முதல் 400,000 பேருக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும் அவர்களில் 70,000 பேர் மாத்திரமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது பெறப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையில் 20% க்கும் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையும் தற்போது 2400ஆக அதிகரித்துள்ளது. ஒரு நாள் சேவையின் கீழ் ஆயிரம் கடவுச்சீட்டுகளும் சாதாரண சேவையின் கீழ் 800 கடவுச்சீட்டுகளும் வழங்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள…
-
- 5 replies
- 517 views
-
-
பல கொலைகள், மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்த தகவல்களை... ஐ.நா.விடம் வெளிப்படுத்திய "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின்" (TMVP) உறுப்பினர் வெளிநாட்டில் தஞ்சம்! தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பல கொலைகள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார் என்று ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல்கள், பல கொலைகள் மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முக்கிய தகவல்களை அவர் வெளிப்படுத்தியதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பிலும் வெளிநாட்டிலும் உள்ள சில முக்கிய இராஜதந்திர தூதரகங்களுக்கு த…
-
- 3 replies
- 443 views
-
-
இலங்கையின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா பதவிப் பிரமாணம்! June 24, 2022 இலங்கையின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் அவர் இன்று மாலை பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. தம்மிக்க பெரேரா நேற்றைய தினம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2022/177784
-
- 1 reply
- 363 views
-
-
இந்து, பௌத்த... கலாசார பேரவையின் பொதுச் செயலாளர், எம்.டி.எஸ்.இராமச்சந்திரனின் அழைப்பையேற்று... நீதி அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்! நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை மதியம் 12 மணியளவில் வந்தடைந்த அமைச்சருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இந்து பௌத்த கலாசார பேரவையின் பொதுச் செயலாளர் எம்.டி.எஸ்.இராமச்சந்திரனின் அழைப்பையேற்று இந்து பௌத்த கலாசார பேரவையில் இரண்டாம் மொழி கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்திற்கு பிரதம அதிதியாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார். மேலும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவ…
-
- 0 replies
- 304 views
-
-
விவசாய அமைச்சின் அதிரடி தீர்மானம்! எதிர்வரும் ஜூலை மாதம் 06 ஆம் திகதி முதல் விவசாய அமைச்சின் கீழ் உள்ள அனைத்து ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிடம் இருந்து கிடைக்கப்பெறவுள்ள யூரியா உரத்தை வினைத்திறனான முறையில் விநியோகிப்பதற்காக இவ்வாறு விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=162694
-
- 1 reply
- 244 views
-
-
இதுவரை... சுமார் 4 பில்லியன் டொலர்கள், இந்திய கடன் மூலம் இலங்கை பெற்றுள்ளது – பிரதமர் இந்திய கடன் மூலம் இதுவரை சுமார் 4 பில்லியன் டொலர்கள் பெறப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை விசேட உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், ”நாங்கள் இந்தியாவிடமிருந்து அதிக கடன்களைக் கேட்டுள்ளோம். ஆனால் இந்தியா எங்களுக்கு தொடர்ந்து கடன் கொடுக்க முடியாது. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அமைப்பை நாங்கள் வகுக்க வேண்டும். ஆனால், கொடுப்பது பற்றி விவாதிக்க யாரும் எங்களுக்கு பணம் தருவதில்லை” என தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1288160
-
- 6 replies
- 277 views
-
-
இலங்கை வரலாற்றில்... மிக நீண்ட, எரிபொருள் வரிசை! வரலாற்றில் மிக நீண்ட எரிபொருள் வரிசையை இலங்கை இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்கொண்டுள்ளது. SUTUஇன் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித, நாட்டில் உள்ள 85 சதவீத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தீர்ந்துவிட்டதாக ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார். ஜூன் 24 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் இருப்பதால் லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருளை விநியோகிக்கவில்லை என்று அவர் கூறினார். இன்று 50 மெட்ரிக் டன் பெட்ரோல் மட்டுமே வழங்கப்பட்டதென்றும் பாலித கூறினார். https://athavannews.com/2022/1287439
-
- 39 replies
- 2.4k views
- 1 follower
-
-
இலங்கையில் டீசல் நிரப்புவதற்காக 5 நாள்களாக வரிசையில் காத்திருந்த லாரி டிரைவர் பலி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LAKRUWAN WANNIARACHCHI/GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையில் எரிபொருள் நிரப்ப காத்திருக்கும் வண்டிகள். கோப்புப் படம். இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (24/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். இலங்கையில் டீசல் நிரப்புவதற்காக 5 நாள்களாக வரிசையில் காத்திருந்த லாரி டிரைவர் அங்கேயே இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி. பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நி…
-
- 2 replies
- 270 views
- 1 follower
-
-
தீர்க்கப்படாத தமிழ் தேசிய பிரச்சினையே பொருளாதார பின்னடைவிற்கு முக்கிய காரணம்! June 24, 2022 தீர்க்கப்படாத தமிழ் தேசிய பிரச்சினையே, சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் பொருளாதார பின்னடைவிற்கு முக்கிய காரணம் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்து நாளிதலுக்கு வழங்கிய விசேட செவ்வியில், பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கு தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது மிகவும் அவசியமானது எனவும் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். ஊழல், தவறான நிர்வாகம், பிழையான முன்னுரிமைகளால் தற்போதைய பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ள போதிலும் தீர்க்கப்படாத தமிழ் மக்களின் அபிலாசைகள் நாட்டின் பொருளாதா…
-
- 2 replies
- 380 views
- 1 follower
-
-
சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 35 பேர் கைது (எம்.மனோசித்ரா) சட்ட விரோதமாக கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 35 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை பாணந்துறை கடற்பிரதேசத்திற்கு அப்பால் கடற்படையினரால் விசேட கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்துக் கொண்டிருந்த மீன்பிடிப்படகொன்று கடற்படையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. இதன் போதே குறித்த படகிலிருந்த ஆட்கடத்தல்காரர்கள் ஐவர் , 25 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 6 சிறுவர்கள் உள்ளடங்களாக 35 பேர் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன் போது மேற்கொள்ளப்பட்ட …
-
- 0 replies
- 195 views
-
-
ஹிருணிகா: "என் மார்பகங்கள் குறித்து பெருமை அடைகிறேன்" - இலங்கை முன்னாள் எம்.பி ஏன் இப்படி பேசினார்? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 23 ஜூன் 2022, 07:34 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK/HIRUNIKA PREMACHANDRA படக்குறிப்பு, ஹிருணிகா பிரேமசந்திர தனது மார்பகங்கள் குறித்து தான் பெருமை அடைவதாக முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கொழும்…
-
- 1 reply
- 442 views
- 1 follower
-
-
யாழில்... இளைஞன், திடீர் மரணம் – எரிபொருள் நிரப்பு நிலையத்தில்... தாக்குதலுக்கு இலக்கானமையே, காரணம் என குற்றச்சாட்டு! யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற கைக்கலப்பில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடுவில் செப்பாலை கோவிலடியைச் சேர்ந்த செல்வரத்தினம் பிரசாந் (வயது-23) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்த இளைஞனும், அவரது நண்பரும் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்று இருந்தனர். அதன் போது, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து இருவர…
-
- 0 replies
- 132 views
-
-
எரிபொருளுக்காக காத்திருப்பவர்களுக்கு நீராகாரம் வழங்குங்கள் - வடமாகாண ஆளுநர் எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இயன்றவரை நீராகாரத்தை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார். அது தொடர்பில் தெரிவிக்கையில், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் வடமாகாணத்திலும் மக்கள் மணிக்கணக்கில் வெயிலில் நீண்ட வரிசையில் காத்தி இருக்கிறார்கள். மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருவதால் அதனைப் பெறுவதற்காக நோய் நிலமை உள்ளவர்களும் எரிபொருளுக்காக மணிக்கணக்காக காத்திருக்கின்ற நிலைமையை நான் உணர்கிறேன். ஆகவே இயன்றவரை எரிபொருளு…
-
- 10 replies
- 554 views
- 1 follower
-
-
இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் - இந்திய வெளியுறவுச் செயலர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு (எம்.மனோசித்ரா) இலங்கைக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை முறியடிப்பதற்கு நெருங்கிய நண்பன் என்ற ரீதியில் இந்திய அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் என்று அந்நாட்டு வெளியுறவுச் செயலாளர் வினய் க்வாத்ரா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார். நாடு கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமைய இந்திய அரசாங்கம் கடன் திட்டத்தின் அடிப்படையில் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளது. அதற்கமைய இதுவரையில் சுமார் 3.5 பில்லியன் டொலர் உதவிகளை இந்தியா , இலங்கைக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு…
-
- 0 replies
- 204 views
-
-
நோயாளர்கள், வைத்தியசாலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது (எம்.எம்.சில்வெஸ்டர்) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு கடந்த 4 மாதங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இரண்டு வகையான மரக்கறிகளுடன் மாத்திரமே உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் அகில இலங்கை சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிச் செயலாளர் ரேணுகா லியனகே தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இது செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரியான செயலாகவே அமைவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இது குறித்து அவர் தொடர்ந்து கூறுகையில், "த…
-
- 0 replies
- 222 views
-
-
யாழில்... 8 ஆவது சர்வதேச, யோகா தின நிகழ்வுகள்! 8 ஆவது சர்வதேச யோகா தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 65 ஆவது சுதந்திர தின ஆசாதிகா அம்ரித் மகோத்சவ் கொண்டாட்டங்களுடன் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. மங்கள விளக்கேற்றலோடு ஆரம்பமாகிய 8 ஆவது சர்வதேச யோகா தின நிகழ்வின் ஆரம்பத்தில் யாழ் இந்திய துணைத்தூதுவரின் வரவேற்புரை இடம்பெற்றது. இதனையடுத்து யோகா பயிற்சியும், நிகழ்வின் இறுதியில் யோகா பயிற்சியில் கலந்து கொண்டோருக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.…
-
- 12 replies
- 594 views
-
-
இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்க வேண்டும் – சாணக்கியன் Posted on June 20, 2022 by நிலையவள் 5 0 இலங்கையில் எதிர்வரும் எட்டாம் மாதமளவில் உணவு பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். சுவிஸில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாங்கள் ஜனாதிபதியினை சந்தித்த போது, வடக்கு- கிழக்கில் பொருளாதார அபிவிருத்தியினை செய்வதற்காக…
-
- 15 replies
- 1.1k views
-
-
33 இலட்சம் குடும்பங்களுக்கு... இம்மாதம் முதல், 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு. பொருளாதார நெருக்கடியில் வாழும் தெரிவு செய்யப்பட்ட 33 இலட்சம் குடும்பங்களுக்கு இம்மாதம் முதல் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. இதற்கான நிதியை உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் வழங்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்ன தெரிவித்துள்ளார். இந்த கொடுப்பனவு 6 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2022/1288208
-
- 1 reply
- 156 views
-
-
யாழ்ப்பாணத்தில் சீரற்ற எரிபொருள் வழங்கல் காரணமாக வைத்திய சேவை முடங்கும் ஆபத்து எரிபொருள் கிடைப்பதற்கு ஒத்துழைக்காவிடில் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகிய சுகாதார சேவை ஸ்தம்பிக்கப்படுவதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலைமை ஏற்படுமென யாழ் போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.இதை அனைவரும் உணரத் தலைப்பட்டுள்ளனர். ஆனாலும் சில குறுகிய நோக்கம் உள்ள, மனிதநேயம் அற்ற சிலர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பங்களை உருவாக்கி வைத்தியசாலை ஊழியர்கள் எரி பொருள் பெறுவதை தடுப்பதன் மூலம் இன்பம் காண்கின்றனர். இருப்பினும் சுகாதார அமைச்சு வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யும் முகமாக ஒவ்வொரு …
-
- 0 replies
- 294 views
-