ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143266 topics in this forum
-
‘கிழக்கில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்’ வேலை வாய்ப்புகள், காணி விடயங்கள், வியாபாரங்கள் உள்ளிட்ட பல விடயங்களில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதனால் பாரியளவில் காணிகள் பறிபோய்கொண்டிருப்பதுடன், வியாபாரத்திலும் தமிழர்கள் பின்தங்கியுள்ளார்கள் எனவும், தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூரத்தி முரளிதரன் தெரிவித்தார். திருகோணமலை விசேட தேவையுடையோர் மண்டபத்தில் இன்று (12) காலை இடம்பெற்ற கட்சியின் திருமலைக்கான முதலாவது கூட்டத்திலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, “வட, கிழக்கில்…
-
- 0 replies
- 236 views
-
-
இ.சுதாகரன் “பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விஹாரை அமைக்கப்படவுள்ளது. அப்படியென்றால், பெரும்பான்மையினக் குடியேற்றம் நடைபெற வாய்ப்புள்ளது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பாக கருத்துரைக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பொலன்னறுவை மாவட்டத்தின் எல்லையிலுள்ள வடமுனையில் இருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள நெளுக்கல் மலையில் விஹாரை ஒன்றை அமைப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் துரித நடவடிக்கை எடுத்துள்ளார். “பொலன்னறுவை மாவட்ட சொறுவில், கறுப்பளை, முத்துக்கல், மன்னம்பிட்டி மற…
-
- 0 replies
- 351 views
-
-
‘கிழக்கு மீட்பின்’ சீத்துவம்! [26 நவம்பர் 2008, புதன்கிழமை 9:05 மு.ப இலங்கை] ஈழத் தமிழர் தாயகத்தின் மையப்பூமியான வன்னிப் பெரு நிலப்பரப்பின் மீது கொடூர யுத்தம் ஒன்றை ஏவிவிட்டிருக்கும் இலங்கை அரசு, அதனைப் ‘பயங்கரவாதிகளான’ விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்பதற்கான ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்று ‘முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல’ கதை விடுகின்றது. இலங்கை அரசுப் படைகள் தொடுத்திருக்கும் கொடூர யுத்தத்தால் இலங்கையின் சரித்திரத்தில் முன்னெப்போதும் இல்லாதவாறு பெரும் மனிதப் பேரவலம் வன்னியில் நேர்ந்திருக்கின்றது. ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற பெயரில் ராஜபக்ஷ அரசு முன்னெடுக்கும் இந்த யுத்தத்தினால் சுமார் மூன்று லட்சம் அப்பாவித் தமிழ்ப்…
-
- 0 replies
- 776 views
-
-
தமிழ்த் தலைமைகளால், கிழக்குத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுவதை இனியும் அனுமதிக்கமுடியாதென, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் த.கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார். கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கூட்டு சனநாயகப் பணிக்குழுவின் அங்குரார்ப்பண நிகழ்வு, அதன் தலைவர் தலைமையில், மட்டக்களப்பில் இன்று (06) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழர் மகா சபையின் தலைவர் கலாநிதி விக்னேஸ்வரன், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது தற்போதைய அரசியல் நிலைமைகள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அரசியல் செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டன. அத்துடன், எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற, மாகாண சபை …
-
- 0 replies
- 410 views
-
-
‘கிழக்கை மு.கா கைப்பற்றும்’ எம்.எம்.அஹமட் அனாம் “ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்பதில் யாரும், எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. கடந்த முறை நாங்கள் தனித்துக் கேட்டோம். தைரியமாகத் தனித்துக் கேட்க எடுத்த முடிவு தான் அதை முறியடிக்க ஏறாவூரிலே தலைமையைக் கேட்காமல் பதவி துறந்தார்” என்று, நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார். “ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுவதுடன் மட்டுமன்றி, ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையை உள்ளுராட்சி தேர்தலில் கைப்பற்றும…
-
- 2 replies
- 416 views
-
-
‘கிவுல் ஓயா’ நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் உறுதிமொழிகளுக்கு முரண் – வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு Published By: Vishnu 02 Feb, 2026 | 04:41 AM கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் அமைகிறது. நாட்டின் அபிவிருத்தி' என்ற பெயரில் வட மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் உறுதிமொழி களுக்கு முரணானதாக அமைந்துள்ளது என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (01) முல்ல…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
‘குடியேற்றங்கள் தொடர்ந்தால் தமிழீழம் மலரும்’ “சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும்” என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விசேட அமர்வு இன்று (05) வடமாகாண சபையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக நாங்கள் வடமாகாண சபையில் ஒரு நாள் அமர்வு நடாத்தி, கத்துவதன் மூலம் தடுத்து விட முடியாது. அது தொடர்பில் நாடாளுமன்ற…
-
- 7 replies
- 745 views
-
-
‘குடு’ காரர்களே... தற்போது, காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர் – பிரசன்ன ரணதுங்க! ‘குடு’ காரர்களே தற்போது காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர் எனவே இவர்களை கட்டுப்படுத்துவதற்கு அவசரகால சட்டம் அவசியம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், காலி முகத்திடல் என்பது பொருளாதார கேந்திர நிலையம். சுற்றுலாத்துறையுடன் சம்பந்தப்பட்ட பகுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார். அங்கிருந்து போராட்டக்காரர்கள் அகற்றப்பட வேண்டும் எனவும், அவர்களுக்கு மாற்று இடங்களை வழங்கலாம் எனவும் அமை…
-
- 5 replies
- 896 views
-
-
கொழும்பில் தமிழ் இளைஞர்களைக் கடத்திச் சென்று கப்பம் அறவிடுவது உள்ளிட்ட செயல்களில் மேர்வின் சில்வாவின் வலது கரமாகச் செயற்பட்ட குடு லால் எனப்படும் பாதாள உலகக் கும்பலின் தலைவன் தற்போது இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களுக்குள் தன்னைப் போல் பல பாதாள உலகத் தலைவர்கள் அரசியல் வாதிகளின் உத்தரவுக்கிணங்க சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதால் தன்னுடைய உயிருக்குப் பாதுகாப்பில்லை என்றும் தான் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் உடனடியாகவே தன்னைக் கொன்று விடும்படி அமைச்சர் மேர்வின் சில்வா உத்தரவிட்டுள்ளதாகவும் தனது விண்ணப்பத்தில் ‘குடு’ லால் குறிப்பிட்டிருக்கிறார். அமைச்சர் மேர்வின் சில்வாவின் திரை மறைவு வன்முறைகளுக்கு தான் துணை நின்…
-
- 1 reply
- 888 views
-
-
‘குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படைக்கு ஒத்துழையுங்கள்’ யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படையினர் துண்டுப்பிரசுரங்கள் [ பிரசுரித்த திகதி : 2011-02-15 05:04:01 AM GMT ] குடாநாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பாதுகாப்புப் படையினர் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் போது மக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை பொருட்படுத்தாது பாதுகாப்புப் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும்’ இவ்வாறு மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள பனர்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. உங்கள் பாதுகாப்பிற்காக இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பை வழங்குங்கள் என்ற த…
-
- 1 reply
- 637 views
-
-
‘குற்றம் சாட்டுகிறேன்’ - இந்திய துரோகத்தை அம்பலப்படுத்தும் வைகோவின் ஆவணம் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எழுதிய கடிதங்களும், அதற்கு பிரதமரின் பதில் கடிதங்களும் – வைகோநேரில் பிரதமரை சந்தித்த போது நிகழ்ந்த உரையாடல்களும், தொகுக்கப்பட்டு ‘குற்றம் சாட்டுகிறேன்’ எனும் தலைப்பில் ம.தி.மு.க. சார்பில் நூலாக வெளியிடப் பட்டுள்ளது. நூலில் அடங்கியுள்ள இந்திய துரோகத்தை அம்பலப்படுத்தும் செய்திகளின் சுருக்கமான தொகுப்பு இது. • ஜன் 4, 2005 அன்று பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்த வைகோ, இந்தியாவுக்கும், இலங்கைக்குமிடையே இராணுவ ஒப்பந்தம் ஒன்று உருவாக நடக்கும் முயற்சிகளைக் கூறி, அப்படி ஒரு ஒப்பந்தம் வருமானால் அது பெரும் கேடு என்று கூறினார். …
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி சம்பவமான மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு ஊடாக அதன் குற்றவாளிகள் யாரென நாட்டுக்குத் தெரியப்படுத்தியுள்ள நிலையில், அவர்களது அரசாங்கம் இருக்கும் வரை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க முடியாதென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பல உயிர்களைக் காவு கொண்டுள்ள கொலன்னாவ குப்பை மேட்டை விட அதிகமான குப்பையை மத்திய வங்கி பிணைமுறி ஊடாக அரசாங்கம் தம்மீது போட்டுக் கொண்டுள்ளதென ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். தேசிய கணக்காளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 339 views
-
-
டச்சு நாட்டு ஆவணப் படம் ஒன்றில், 1980ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை ‘குழந்தைகள் பண்ணை‘யாக விளங்கியமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குழந்தையில்லாத தம்பதியினர் இலங்கைத் தாய்மாரிடம் இருந்து குழந்தைகளை ‘வாங்கி’ச் சென்றுள்ளதாக அந்த ஆவணப் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ரூபாவுக்கு, புதிதாய்ப் பிறந்த தனது குழந்தையை விற்ற இலங்கைத் தாயொருவர், அந்தக் குழந்தையை ஒரேயொரு முறை தன் கண்ணாரக் காண வேண்டும் என்றும், அதைத் தவிர வேறெதுவும் வேண்டாம் என்றும் அந்தப் படத்தில் கண்ணீருடன் கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. குறித்த காலப் பகுதியில் மட்டும் சுமார் பதினோராயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஐரோப்…
-
- 0 replies
- 290 views
-
-
‘கூட்டமைப்பினை யாராலும் பிளவுபடுத்தவோ தடை செய்யவோ முடியாது” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை யாராலும் பிளவுபடுத்தவோ தடை செய்யவோ முடியாது என அக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தடைசெய்ய வேண்டும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அவரது குறித்த கருத்து தொடர்பாக தமிழ் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் பதிலளிக்கும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். கூட்டமைப்பு ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியாக செயற்பட்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் ஆதரித்தார்கள் என்பதற்காக அதை விடுதலைப…
-
- 4 replies
- 1.1k views
-
-
‘கூட்டமைப்பின் உயர்மட்டங்கள் என்னுடன் பேசியது உண்மைதான்’ “தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டங்கள் என்னுடன் பேசியது உண்மைதான்” என சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். “தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருக்கும் நிலையில், என்னைமீறி கட்சித் தலைமை சந்திரகுமாருடன் பேசியதா, அவ்வாறு ஒருபோதும் இல்லை. தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்துப் பிழைத்தவர்களை பங்காளிகளாக இணைக்கும் எண்ணம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு இல்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சந்திரகுமாருடன் தொடர்புகொண்டு வினவியப…
-
- 0 replies
- 500 views
-
-
-க. அகரன் 2019 ஓகஸ்ட் 20 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:57 ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்குத் தொடர்ச்சியாக ஒட்சிசன் வழங்கிக்கொண்டிருந்ததால் தான், தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியுமென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நம்பிக்கை வீணாகிவிட்டதெனத் தெரிவித்த, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, ஒரு புதிய நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்காக, தங்கள் அணியுடன் ஒன்றிணையுமாறும் கோரிநின்றார். வவுனியா, இரட்டைப்பெரியகுளத்தில் உள்ள விருந்தினர் விடுதியில், தனது ஆதரவாளர்களை இன்று (20) சந்தித்த பின்னர், ஊடகவியலாளர் ஒருவர், “ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆதரவளிப்பதற்கான சந்தர்ப்ப…
-
- 0 replies
- 377 views
-
-
‘கூட்டமைப்பில் இணைபவர்களுக்கு மரபணுப் பரிசோதனை அவசியம்’ - ஞா.சிறிநேசன் Editorial / 2019 பெப்ரவரி 03 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:35 Comments - 0 க.விஜயரெத்தினம், வா.கிருஸ்ணா எதிர்வரும் காலங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைபவர்களுக்கு, மரபணுப் பரிசோதனை அவசியமாகுமென, அக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழூர்முனையில் பொங்கல் விழா, நேற்று (92) நடைபெற்றது. மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், புதிய …
-
- 2 replies
- 426 views
-
-
‘எத்தகைய நெருக்குவாரங்கள் வந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க நினைக்கும் தீயசக்திகளின் செயற்பாடு வெற்றியளிக்காது’ என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பனிப்போரால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றமை தொடர்பில், தமிழ்மிரருக்குத் தெரிவிக்கையிலேயே சுமந்திரன், மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில், அவர் தொடர்ந்து கூறியதாவது, “தவறு செய்தவர்களுடன் சேர்த்துத் தவறு செய்யாதவர்களையும் தண்டிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), …
-
- 0 replies
- 317 views
-
-
‘கூட்டமைப்பு நடிக்கின்றது’ யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடித்து வருவதாக, யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் கே.எம்.நிலாம் தெரிவித்தார். இவ்விடயம் குறித்து தொடர்ந்து கருத்துரைத்த அவர், “வீட்டுத் திட்டம் வடக்கு மாகாண செயலணி ஊடாக செயற்படுத்தப்படவுள்ள நிலையில், அத்திட்டம் மத்திய அரசாங்கத்தால் வழங்க முடியாது எனவும் ஆனால், குறித்த வீட்டுத் திட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மாத்திரமே வழங்க முடியும் எனவும், வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் தெரிவித்துள்ளார். “இவர், யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், வீட்டுத்திட்டம் உள்ளிட்…
-
- 1 reply
- 243 views
-
-
‘கூட்டமைப்புக்கு பாடம் புகட்டப்படும்’ “யாழ். முஸ்லிம்களின் வாழ்வுரிமை பறிப்பதற்காக, அரசியல் வியாபாரங்களை தற்போது செய்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், மக்கள் நல்ல பாடத்தை கற்பிப்பார்கள்” என சமூக சேவகர் கே.எம் நிலாம் தெரிவித்தார். இது தொடர்பில், அவர் ஊடகங்களுக்கு இன்று (14) கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது, “எமது மக்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுகின்றேன். ஆனால், எமது வட்டார மக்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்தவர்கள் பசப்பு வார்த்தைகளை கூறி பணம் கொடுத்து திசை திருப்பப் பார்க்கின…
-
- 3 replies
- 691 views
-
-
‘கூட்டமைப்புக்கும் த.தே.ம.முக்கும் தலை வலி’ -என்.ராஜ், செந்தூரன் பிரதீபன் மாற்றுத் தலைமை உருவாக்கத்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தலைவலியைச் சந்தித்துள்ளதாக, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - கட்டப்பிராயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் வழங்கிய ஆணைகளில் இருந்து விலகி, வேறு வழியில் தடம்மாறி சென்றதன் காரணமாகவே, புதிய கூட்டணி உருவாகியதாகவும் கூறினார். அத்துடன், புதிய கூட்டணி …
-
- 2 replies
- 670 views
-
-
‘கூட்டமைப்பை ஏமாற்றுவது போல மக்களை ஏமாற்ற முடியாது’ ஏ.எச்.ஏ. ஹுஸைன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஏமாற்றுவதைப்போல் நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. நாட்டில் இனிமேல்தான் நல்லாட்சி ஏற்படப்போகின்றது என மீள் குடியேற்றத்துக்கான முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் பட்டதாரிகள் உட்பட பல்வேறு தரப்பினர் மேற்கொண்டு வரும் பல்வேறு போராட்டங்கள் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டார். இது தொடர்பாக நேற்றுக் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, …
-
- 0 replies
- 181 views
-
-
‘கூட்டமைப்போடு இணைய வேண்டுமென்ற அவசியமில்லை’ - வியாழேந்திரன் Editorial / 2018 நவம்பர் 17 சனிக்கிழமை, பி.ப. 01:22 Comments - 0 வடிவேல் சக்திவேல், க.விஜயரெத்தினம் மக்களாலேயே தான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் கேட்டுக்கொண்டதாலேயே தான் இன்று பிரதிaமைச்சு பதவியை பெற்றுக்கொண்டதாகவும் கிழக்கு அபிவிருத்திப் பிரதியமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வியாழேந்திரன் மீண்டும் இணைய முற்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து, இன்று (17) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருந்த போது என்ன செய்தேன் என்பது, என…
-
- 2 replies
- 713 views
-
-
‘கூட்டாட்சியை நீடிப்பதற்கு பரஸ்பர முயற்சி’ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் கூட்டாட்சியைத் தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு பல்முனைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கத்திலிருந்து விலகி, தனியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்றுவதற்கு, அரசாங்கத்திலிருக்கின்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையிலேயே, இந்தப் பரஸ்பர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கத்திலிருந்து வெளியேறு…
-
- 0 replies
- 240 views
-
-
‘கைதிகளுக்காக போராட்ட வடிவம் மாறும்’ -எஸ்.நிதர்ஷன் யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்ட பல்கலைகழக செயற்பாடுகளை முடக்கிய போராட்டத்தை நிறுத்தி, அப்போராட்டத்தை வேறு வடிவங்களில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக, யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம் நீதிமன்றில் உள்ள வழக்குகளை மீளவும் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரி, அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவாக அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், ஜனாதிபதியுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்த …
-
- 0 replies
- 412 views
-