Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் அண்மையில் லண்டன் வந்திருந்தார். அப்போது அவர் பிபிசி உலக சேவையின் அலுவலகத்துக்கும் விஜயம் செய்திருந்தார். அம்பாறை மாவட்டத்துக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேருவும் அவருடன் கூட வந்திருந்தார். இலங்கையின் போருக்கு பின்னரான நிலைமைகள், தமிழர் அபிலாஷைகளுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள், மற்றும் அங்கிருக்கும் ஏனைய பல விடயங்கள் குறித்து இங்கு சம்பந்தன் தமிழோசைக்கு ஒரு செவ்வியை வழங்கியிருந்தார். தமிழோசையின் ஆசிரியர் மணிவண்ணனுக்கு இரா. சம்பந்தன் அவர்கள் வழங்கிய அந்தச் செவ்வியின் முழுமையான வடிவத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம். http://www.bbc…

    • 0 replies
    • 527 views
  2. இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாத நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவத்திருப்பதாவது.. கடந்த வருடம் ஜெனீவாவில் அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதிலும், அதன் அடிப்படையில் உரிய கடமைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. காணாமல் போனோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகள் விடயம், பல வந்தமாக கடத்தப்பட்டோர் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இராணுவமயமா…

  3. ஜனாதிபதியின் இணையத்தளத்தினை முடக்கிய மாணவனை ஜனாதிபதி சந்தித்தார் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினுள் ஊடுறுவி அதனை முடக்கிய மாணவனை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனே சந்தித்துள்ளார். அம்மாணவனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனே ஜனாதிபதி அலுவலகத்திற்கு வரவழைத்து இன்று பிற்பகல் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பின் பின் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் திறமையுடைய இளைஞர்களை ஊக்குவிப்பது எங்கள் கடமையென பதிவிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/13603

  4. யாழ் குடாவில் கலாசார சீரழிவு உச்சக்கட்டத்தில் - பெற்றோர் கவலை யாழ் குடாநாட்டில் கலாசார சீரழிவு என்றுமில்லாதவாறு உச்சக்கட்டத்தில் உள்ளதாகவும், இதனால் தாம் தமது பிள்ளைகளை யாழ் குடாநாட்டில் தொடர்ந்தும் வைத்திருக்க அஞ்சுவதாகவும், குறிப்பாக பெண் பிள்ளைகளை வைத்திருக்கவும் அவர்களை வீதியில் நடமாட அனுமதிப்பதற்கும் தாம் அஞ்சுவதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ஒருபுறம் சிறீலங்கா படையினரின் அச்சுறுத்தல்கள், மறுபுறம் தமிழ் ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல் என்பனவற்றுடன் அண்மையில் ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்கள் என தம்மை அடையாளப்படுத்தும் சில சமூக விரோதிகளின் தொல்லை என தமக்கான நெருக்கடிகள் அதிகரித்து செல்லவதாக பெற்றோர் கூறினர். இதனால் பிள்ளைகள் கல்வி கற்றலுக்குரிய…

    • 2 replies
    • 2.1k views
  5. மட்டக்களப்பு செங்கலடியில் இன்று காலை (22) அமைதி பேரணியொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் இனவாத செயற்பாடகளைக் கண்டித்தே குறித்த பேரணி நடைபெற்றுள்ளது. ஆலயகுருக்கள், பூசகர்கள், தர்ம கர்த்தாக்கள் இந்து அமைப்புக்களின் பிரதிநிஜதிகள் பொதுமக்கள் இணைந்து அமைதிப் பேரணியை நடத்தியுள்ளனர். குறித்த பேரணியில் தமிழ்த் தேசியகச் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/community/01/125469?ref=home

  6. மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டதாலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்த நிலைப்பாட்டை மேற்கொண்டாலும் ஆதரிப்பது என திரிணமூல் காங்கிரஸ் முன்வந்திருப்பதாலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பெரும்பான்மையை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதில்லை. இந்த நிலையிலும், திமுக கோரிய அதே இரண்டு கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் தீர்மானமாகக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ள மத்திய அரசு, அனைத்துக் கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறது. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்போகும் தீர்மானம் எப்படி அமைய வேண்டும் என்பது, மார்ச் 19-ஆம் தேதி இரவு காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசிய வார…

  7. போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது 25 மார்ச் 2013 - ரொபர்ட் ஒ பிளேக் நிரந்தர சமாதானம், சௌபாக்கியத்தை ஏற்படுத்தி, இனங்களுக்கு இடையில், நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, போர் குற்றங்களை செய்தவர்களை தண்டனை வழங்க இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அத்தியவசியமானது என ஜெனிவா மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த யோசனை வலியுறுத்தியுள்ளதாக அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஒ பிளேக் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா முன்வைத்த இலங்கை தொடர்பான யோசனை நீர்த்து போக செய்யப்பட்டுள்ளதாக சில தரப்பினர் சுமத்தும் குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், அந்த குற்றச்சாட்டை நிராக…

  8. புலம்பெயர் தமிழரின் எழுச்சிமிகு போராட்டங்களுக்கு முன்னால் துவண்டுபோன இந்திய, சிங்களத்தின் கூட்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் - தமிழ்நெட் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் நடைபெறும் ஈழத் தமிழரின் போராட்டத்தை நசுக்குவதில் எற்பட்டு வரும் தோல்வியினால் அடைந்த விரக்தியும், அடக்கப்படும் இனத்துக்குச் சார்பாக சர்வதேச அரங்கில் ஏற்பட்டு வரும் அநுதாப அலையும், வீறுகொண்டெழுந்து நிற்கும் புலம் பெயர் தமிழரின் போராட்ட உணர்வும், நெருங்கிவரும் இந்தியத் தேர்தலும் இன அழிப்புப் போரின் நண்பர்களான இந்தியாவையும் சிறிலங்காவையும் வேறு மாற்றுவழிகள் மூலம் தமது இலக்கினை அடைய வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன. புலம்பெயர் தமிழரையும், இந்தியப் பொதுஜனத்தையும் ஏமாற்றும் நோக்கில் சிங்கப்பூரிலும், க…

    • 2 replies
    • 1.6k views
  9. கொழும்பு: தென் இந்தியாவிலிருந்து வரும் சரக்குகளை புறக்கணிக்கப்போவதாக கொழும்பு துறைமுக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக துறைமுக தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த மகேஷ் சமரவிக்ரமே கூறுகையில், இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சுகளும், சுற்றுலா பயணிகளும் தமிழகத்தில் தாக்கப்படுவதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது. எனவே தென் இந்தியாவிலிருந்து வரும் சரக்குளை புறக்கணிக்க துறைமுக தொழிலாளர்கள் விரும்புகின்றனர் என்று தெரிவித்துள்ளனர். மேலும், முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு எதிராக கொழும்பு துறைமுகத்தில் பதாகைகளையும் துறைமுக தொழிலாளர்கள் வைத்துள்ளனர். Dinamalar

    • 2 replies
    • 991 views
  10. ரணிலுக்கும் மஹிந்தவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் பாராளுமன்றில் காணப்படும் பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தை உருவாக்கும் முறை மற்றும் பாராளுமன்றம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பன தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பங்கேற்றிருந்தார். இதற்கு மேலதிகமாக தினேஸ் குணவர்தன, பந்துல குணவர்தன, விதுர விக்ரமநாயக்க, லொஹான் ரத்வத்தே, செஹான் சேமசிங்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். http://g…

  11. மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையில் சிறிலங்கா படையினர் மீது நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 347 views
  12. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிந்தியடைந்து தேசியமட்டத்தில் முன்னணி வகிக்கும் மாணவர்களின் தரநிலையைவெளியிடுவதில் சிறுபான்மையினருக்கு இலங்கை அரசுதுரோகமிழைத்துள்ளது. இது தமிழ் மொழி மாணவர்களுக்குப்பெரும் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகள் அண்மையில்வெளியிடப்பட்டிருந்தன. இந்தப் பெறுபேறுகள் வெளியாகியசில மணி நேரங்களுள் சிங்கள மொழி மூல பரீட்சார்த்திகளின்தேசிய மட்ட நிலைகளும் வெளியிடப்பட்டு, அவர்களுக்குஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினாலும் அலரிமாளிகையில்வைத்து கௌரவமும் அளிக்கப்பட்டது. ஆனால், தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகளின் தேசியமட்டத்திலான தர நிலைகள் இன்னமும்வெளியிடப்படவில்லை. இந்தப் பாரபட்சம் எதற்காக என தமிழ்கல்வி மான்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.…

  13. சிறிலங்கா பயங்கரவாத அரசின் இன அழிப்பு வன்போர் முற்றுகைக்குள் பாரிய மனித அவலங்களுக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கான உலர் உணவு சேகரிக்கும் செயற்பாடு நோர்வேயில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 344 views
  14. போரில் நடந்த பொதுமக்கள் உயிரிழப்புக்கு விடுதலைப்புலிகளே பொறுப்பு--இலங்கை ராணுவ நீதிமன்றம் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 ஏப்ரல், 2013 - 16:50 ஜிஎம்டி போரில் பொதுமக்களின் அவலம்-- " ராணுவம் பொறுப்பல்ல, விடுதலைப்புலிகளே பொறுப்பு" - ராணுவம் இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் பொதுமக்கள் படுகொலைகள் குறித்து, இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளின் படி, ராணுவம் நியமித்த ராணுவ நீதிமன்றம், இக்குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, ராணுவத்துக்கு இந்தக் கொலைகளில் எந்தப் பொறுப்பும் இல்லை என்று கூறும் ஒரு அறிக்கையை பாதுகாப்புச் செயலரிடம் சமர்ப்பித்திருக்கிறது. ராணுவ நீதிமன்றம் இந்த அறிக்கையில் விடுதலைப்புலிகள் மீதே இந்த பொதுமக்கள் உயிரிழப்புக்க…

    • 1 reply
    • 498 views
  15. அரசுக்கு மீண்டும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே கூட்டமைப்பு செயற்படுகின்றது – கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு “ அரசாங்கத்துக்கு மீண்டும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படுகின்றது. அந்தக் கட்சியால் மனித உரிமைகள் கவுன்ஸிலின் உறுப்பு நாடுகளுக்கு வழங்கத் தயாரிக்கப்பட்ட நாம் ஒருபோதுமே கையொப்பமிடோம்” என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைப் பணிமனையில் அவர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே…

    • 2 replies
    • 444 views
  16. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளதுடன் விடுதலைப் புலிகளை எவரும் அழிக்க முடியாது என்றும் சூளுரைத்துள்ளார். இலங்கைத் தமிழர் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து சென்னையில் இன்று புதன்கிழமை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் வங்கதேசம் போல தமிழீழமும் மலர்ந்திருக்கும். இந்திரா காந்தியை ஒரு சீக்கியன் சுட்டுக்கொன்றான். அது கண்டிக்கத்தக்கது என்றாலும், அதன் பிறகு நடந்த கலவரத்தில் கிட்டத்தட்ட…

    • 2 replies
    • 1.1k views
  17. இந்தியாவில் இருந்து மன்னாரிற்கு கடத்தி வரப்பட்ட 532 கிலோ மஞ்சள் கட்டிகள் தீயிட்டு அழிப்பு இந்தியாவில் இருந்து மன்னார் பகுதிக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு, மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 532 கிலோ மஞ்சள் கட்டிகள் இன்று (திங்கட்கிழமை) தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராய்சி முன்னிலையில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.பி.ஜெயதிலக தலைமையில், பொலிஸ் தடவியல் நிபுணத்துவ பொலிஸார் இணைந்து மன்னார் நகர சபைக்கு சொந்தமான மலக்கழிவகற்றல் நிலையத்தில் வைத்து தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட சுற்று நிருபத்தின் அடிப்படையில் கொரோனா தொற்று அபாயம் உடைய கடத்தல் பொருட்கள…

  18. இன்றைய கேலிச்சித்திரம்

  19. புதிய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதனை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சிறந்த தமிழ் தலைவரான இரா.சம்பந்தன் மற்றும் தானும் கலந்துரையாடினோம். புதிய அரசியல் அமைப்பில் சமஷ்டி அப்படையிலான அரசியல் தீர்வுக்கு யோசனை எதனையும் முன்வைக்க போவதில்லை என இரா.சம்பந்தன் தன்னிடம் உறுதியளித்துள்ளார். மக்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்தாலும், தான் அதனை முன்வைக்க போவதில்லை என இர.சம்பந்தன் திட்டவட்…

  20. மசாஜ் நிலைய போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை (படங்கள்) திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இங்கிய விபசார விடுதி ஒன்று பிரதேச மக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதில் அந்நிலையத்தின் முகாமையாளர் அங்கு வந்திருந்த வாடிக்கையார் ஒருவர் மக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பொலிசாரால் அங்கிருந்த இரண்டு யுவதிகள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதன் போது அங்கு மயங்கிய நிலையில் இருந்த மற்றொரு யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். உப்புவெளி பொலிசார் இவை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகளைக் கவர்வதற்காக இப்பிரதேசத்தில் புதிதாக பல வீடுகள் விடுதிகளாக மாற்றப…

    • 0 replies
    • 725 views
  21. முப்படையினருக்கு ஜனாதிபதி விசேட உரையொன்றை ஆற்ற உள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் முப்படையினருக்கும் விசேட உரையொன்றை ஆற்ற உள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் 4ம் திகதி இந்த விசேட உரை ஆற்றப்பட உள்ளது. பலாலி இராணுவ முகாமில் இருந்து இந்த விசேட உரை ஆற்றப்பட உள்ளது. இந்த உரையாற்றும் போது முப்படைகளின் தளபதிகளும் பலாலி இராணுவ முகாமில் பிரசன்னமாகியிருப்பர் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://globaltamilnews.net/archives/12116

  22. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்திபவன் நோக்கி ஊர்வலமாக செல்ல முயற்சித்த பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேவேளையில் போர் நிறுத்தம் கோரி தொடர்ந்து 6 ஆவது நாளாக உண்ணாநிலைப் போராட்டம் நடத்திவரும் பெண்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதால் தமிழ் உணர்வாளர்களிடையே ஒருவித அச்சம், பதற்றம் ஏற்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 343 views
  23. அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. எதிர்வரும் 07ஆம் திகதி நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெறும் கட்சியின் உயர்ப்பீடக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்டீன் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து உரிய தீர்வு கிடைக்காமையை ஆட்சேபித்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ரஜாப்டீன் குறிப்பிட்டார். முஸ்லிகளுக்கெதிராக அண்மைக்காலகமாக பேரினவாத சக்திகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நெருக்கடிகளுக்கெதிராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்ற பாரிய குற்றச்சாட்டு அந்தக் கட்சியி…

  24. போர் சார்ந்த விடயங்களில் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே இருக்கும் உறவுகள் கடந்த சில வருட காலங்களில் மிகவும் ஆழமான முறையில் வேரோடிச் சென்றுள்ளதாகவும், இந்தியா நேரடியாகவே பல இராணுவம் சார் உதவிகளை சிறிலங்காவிற்குச் செய்து வருவதாகவும் இந்திய இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 363 views
  25. இலங்கையில் அல்-கைடா, தலிபான் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இருப்பதாக காட்டி அமெரிக்கா உட்பட மேற்குலகை வவளைத்து போடவே தேசிய ஐக்கிய முன்னணி பொதுசெயலாளரும், அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் இணை தலைவருமான நண்பர் அசாத் சாலி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என இன்று கொழும்பில் நடைபெற்ற அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் உரையாற்றுகையில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த ஊடக மாநாட்டில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, ஜூனியர் விகடன் சஞ்சிகையில் அசாத் சாலியின் நேர்முகம் 24ம் திகதி வெளிவந்தது. அதில் இடம்பெற்றதாக சொல்லப்படும் கருத்து பிழையை திருத்தி அவர் ஜூனியர் விகடனுக்கு அனுப்பி வைத்து…

    • 2 replies
    • 349 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.